Friday, April 29, 2011

அதென்ன ஹெட்லயன்ஸ் டுடே கண்டுபிடிப்பு?

அய்யா தளர்ந்து போனார். செய்திகள் சாதகமா இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டும் வீட்டிற்கு உள்ளேயே வந்து குவியுது. பேரன் என்று சொல்லிக்கொல்பவரை அழைத்து மனதார திட்டினார். சீ.பி.ஐக்கு தூண்டுதல் வேலை பார்கிறாயா என்று குற்றம் சாட்டினார். தேர்தல் முடிவுகள் இப்போதே கவிழ்கின்றன என்று நினைத்தார். தொண்டர்கள் சோர்வு பற்றி கேள்விப் பட்டார். வருத்தப்பட்டார். ஏதாவது செய்யவேண்டும் என்றார். யாரிடம் ஊடகம் இருக்கிறதோ அவர்தானே செய்ய முடியும் என்றனர். இது அகில இந்திய ஊடகம் மூலம் மட்டுமே முடியும் என்றார்.

முடிவு திமுகவிற்கு சாதகம் என்றால், டில்லி அதிகாரிகல்பயப்படுவர் என்றார். அடஹ்ர்கு ஏற்பாடு செய்கிறேன் என்று இளைய அமைச்சர் தயாநிதி கூறினார். ஏற்கனவே தயாளு மீது, கனிமொழி மீது குற்றச்சாட்டுகள் வரும்போது, காங்கிரஸ் தலைமை மீது செல்வாக்கு செலுத்த யாரை அனுப்ப என்ற விவாதம் கிளப்பப்பட்டது. டி.ஆர்.பாலுதான் இருக்கிறாரே என்று குடும்ப தலை கூறியது. தயாவை அனுப்பு என்று மூத்த மகள் கூற, அவன் எவ்ண்டாம் என்றது தலை. நம்பிக்கை இன்னமும் தம்பி மீது வரவில்லை என அவரது ஆதரவு கும்பல் குடும்பத்திற்குள் முனு, முணுத்தது. செய்துகாட்டுகிறேன் என்ற அந்த இளைய அமைச்சர் அதற்கான வேலைகளை எடுத்தார். அதில் ஒன்று ஏற்கனவே தனது பணம் நூறு கோடி கொடுத்து வைத்த அந்த தேசிய அலைவரிசை பயன்பட்டது.

ஏற்கனவே அவர்கள் எடுத்துவைத்த ஒரு ஆய்வில் ஆறாயிரம் பேரை சந்தித்து இருந்தனர். அதை அடிப்படையாக வைத்து இப்போது அணைக்கு ஒன்றை இறக்கிவிடலாம். அது முதலில் தொண்டர்களின் மன உணவை எழுப்பிவிடும்.யாரும் பாதியிலேயே வாக்கு எண்ணிக்கை இடத்திலிருந்து இடம் பெயர் மாட்டார்கள். அடுத்து டில்லி கொஞ்சம் அடக்கி வாசிக்கும். அதன்மூலம் ஸ்பெக்ட்ரம் கதையை தள்ளிப் போடலாம். அடுத்து பெரியவருக்கு திருப்தியை கொடுத்து, அதன்மூலம் உற்ச்சாகம் மூட்டலாம். இதற்கு பெயர் கார்பொரேட் பாணி கணக்கு, மற்றும் விதைத்தல். அது இங்கும் அமுலாகிவிட்டது.

பிறகு எதற்காக அந்த காட்சி ஊடக நேர்காணலிலேயே, நீங்கள் வெற்றி பெற்று வந்தால் முதல்வர் யார் என்ற கேள்விக்கு இதுவரை சொல்லிவன்ம்த நான்தான் என கூறவேண்டியதுதானே? அதைமட்டும் திமுக போது குழு முடிவு செடியும் என்று என் கூறுகிறார். அவருக்கு தெரியும் இது திருப்தி படுத்த வெளியிட்ட கணக்கு என்று. அது என்ன கணக்கு? திமுக.கூட்டணி 129 இடங்களை பிடிக்கும் என்ற கணக்குதான்.

6 comments:

மு.சரவணக்குமார் said...

கருத்துக் கணிப்புக்கும் ஒரு கதையா!

பாலா said...

இந்த மீடியா படுதறபாடு இருக்கே .........முடியல

Dr. Selvaganesan said...

உட்கார்ந்து யோசிப்பீர்களோ?

யுவகிருஷ்ணா said...

இவ்வளவு மொக்கையான கற்பனை கதையை இதற்கு முன் படித்ததில்லை :-)

Anonymous said...

sooper mokai :)

vivek kayamozhi said...

JAPPAN LA JACKIE JHAN KOOPTAHA..

MALESIYA LA MICHEL JACKSON KOOPTAHA...

WIKILEEKS SOLLEETAHA...

HEADLINES TODAY SOLLEETAHA...

Post a Comment