Friday, April 29, 2011

ராஜபக்சேவை மே தினத்திற்கு முந்திய நாளே சென்னை எதிர்க்கிறது.

தமிழின படுகொலையை, தமிழின அழிப்பை கொடூரமாக நடத்தி, இன்னமும் அதே வெறியுடன் தமிழின சுத்திகரிப்பை தமிழீழத்தில் நடத்திவரும் கொடியவன் ராஜபக்சே, தன்னை ஐ.நா. மன்றம் "போர் குற்றவாளி" என்று முத்திரை குத்துவதற்கான முகாந்திரத்ஜ்தை வெளியிட்டு விட்டதே என்று ஆத்திரப்பட்டு, அதை மே முதல் நாள் அன்று கொழும்பு நகரில் அரங்கேற்ற ஒரு பேரணியை வைத்துள்ளது கண்டு தமிழுள்ளங்கள் வெதும்பின. அதன்விளைவு, தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு நாள் முன்பு ஏப்ரல் 30 இலேயே ஒரு பேரணியை ஏற்பாடு செய்ய "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம்" முடிவு செய்தது.

தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தனது அறிக்கையில் அதை தெரிவித்துள்ளார்.மாலை நான்கு மணிக்கு கடற்கரை உள்சாளையிளிருந்து பேரணி புற[ப்படும். அது உழைப்பாளர் சிலை வரை செல்லும். அங்கே நான்கு மீனவர்கள் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அவர்களுக்கு நினைவு அஞ்சலி நடத்தப்படும். மீனவர் குழந்தைகளும், மீனவ பெண்களும் மற்றும் ஆர்வமுள்ள தமிழின ஆதரவு அமைப்புகளும் அந்த பேரணியில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். பரவலாக கொடுக்கப்பட்டுள்ள துனடரிக்கைகள் மூலம் thaமிழர்களே அணிதிரளுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரணி ஐ.நா.வின் நிபுணர் குழு அறிககையை அமுலாக சொல்லியும், கிரிக்கெட் ஆட்டத்தின் உலகக் கோப்பையை இந்தியா வென்றதால் ஆத்திரப்பட்ட சிங்கள கடற்படை கொடூரமாக கொன்று குவித்த நான்கு தமிழ் மீனவர்களுக்காகவும் முழக்கங்களை எழுப்பிய வண்ணம் பேரணி செல்லும் என்றும் தெரிவிக்கிறார்.

1 comment:

Anonymous said...

நல்லதொரு முயற்சி - வெற்றிப் பெற வாழ்த்துக்கள். அய்யா ஒரு வேண்டுகோள் - தமிழர்கள் என்பதற்கு ஹமிழர்கள் என இருக்கு தயையுடன் மாற்றுங்கள். நெருடுகின்றது.

Post a Comment