Thursday, April 14, 2011

ரஜினிகாந்த் ஏன் குழம்புகிறார்?

ஏப்ரல் பதிமூன்றில் வாக்களித்த திரையுலகினர் அனைவருமே வெளியே வந்து ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக மறைமுக வார்த்தைகளில் சொன்னார்கள். அதில் நடிகர் சூரியாவும், விஜய்யும் அடக்கம்.ஆனால் ரஜினி மட்டும் மாட்டிக்கொண்டார். ஏற்கனவே ரஜினியை மு.க.ஸ்டாலின் சென்று பார்த்தார். பிறகு அவரை எதிர்த்து நிற்கும் சைதை.துரைசாமியும் போபி பார்த்தார். அதனால் ரஜினி யாருக்கு ஆதரவு என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ரஜினிக்கு தமிழ்நாட்டில் அதிகமாக வாக்குகள் இருப்பதாக ஒரு மாயை நிலவி வருகிறது. ரஜினி குரல் கொடுக்கப்போகிறார் என்று இரு தரப்பும் கூறி வந்தனர்.

கலைஞருக்கு ஏற்பாடு செய்யப்ப்பட்ட ஒரு திரை உலக விழாவில் நடிகர் அஜித் திமுகவின் அடாவடி தனத்தை எதிர்த்து பேசிவிட்டார். கலைஞர் முன்னிலையில் அந்த பேச்சை ரஜினி எழுந்து நின்று கைதட்டி வரவேற்று விட்டார். அதன் பிறகுதான் திரை உலகினர் கலாநிதி-தயாநிதி குடும்பத்திடம் படும் பாடு வெளியே தெரிய தொடங்கியது. பிறகு விஜய் அவர்களிடம் பட்ட பாடு எஸ்.எ.சந்திரசேகர் மூலம் வெளியே வந்தது.இத்தகைய நிலையில் திரை கலைஞர்கள் எல்லோருமே எதிர்ப்பு உணர்வில் இருக்கிறார்கள் என்ற கருத்து மிகை அல்ல. நேரடியாக காங்கிரசை எத்ரிகிறேன் என்று கூறிவிட்டு, திமுகவையும் எத்ரித்து சீமான் ஊர், ஊராக பேச எவண்டி வந்தது. அப்போது நான் மட்டுமல்ல, திரை உக்லகமே இந்த ஆளும் குடும்பத்திற்கு எதிராகத்தான் உள்ளது என்றும், அவர்கள் அனைவரும் பின்னாலிருந்து தன்னை உற்ச்சாகப்படுத்தி வருவதாகவும் அவர் கூறிவிட்டார்.

இப்போது ரஜினி வாகளித்டு விட்டு வெளியே வந்தார். ஊடகத்தாரிடம் பேசினார். விலைவாசி உயர்வு மக்களை வாக்களிக்கவைத்துவிட்டது என்றார். யார்க்கு என்று கூறவில்லை. அது தேவையுமில்லை. ஊழலை எத்ரிக்கும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு என்றார். அதில் பொய் கலந்து கொள்ள விரும்பினேன் என்றார்.உடல் சரியில்லாததால் செல்லவில்லை என்றார். எதையோ அதன்மூலம் சொல்லவந்தார்.தமிழ்நாட்டில் உள்ள ஊழல் என்ற கேள்விக்கு அது வேண்டாம் என்று கூறிவிட்டார். கருத்தை வெளிப்படையாக சொல்ல தயக்கம் என்பதை வெளிப்படுத்தினார். விவாசாயிகள் நலனுக்கான அரசு வரவேண்டும் என்றார். அதன்பிறகு அவரது வாக்கு போட்ட படம் ஊடகங்களில் வெளிவந்தது. அதில் இரட்டை இலைக்கு போட்டதுபோல படம் இருந்தது.மதியமே காட்சி ஊடகங்கள் ரஜினியின் நேர்காணலை வெளியிட்டன. அதுவே இரண்டு விழுக்காடு வாக்குகளை திமுகவிற்கு எதிராக திருப்பி விட்டதாக கூறுவோரும் உண்டு.

அதற்கு விளக்கம் சொல்ல நிர்பந்தம் வந்தது. மாலையில் ,கலிஞர் எழுதிய,"பொன்னர் சங்கர்" படம் முன் திரையிடல் நடந்தது. ரஜினி அழைக்கப்பட்டார். முதல்வரின் அழைப்பு என்பது புரிந்த்து. அங்கு சென்ற ரஜினி முதல்வரின் உதவியாளர்களிடம் பேசினார். ஊடகங்கள் திரும்ப திரும்ப வாக்களிப்பதை படம் பிடிக்க வேண்டி கையை மின்னணு இயந்திரத்தில் வைக்க சொன்னார்கள் என்றும், அது தவறாக இரட்டை இலையில் உள்ள வளர்மதி பெயர் முன் சென்ற போது படம் எடுத்து விட்டனர் என்றும் ஊடகங்கள் மீது பழியை போட்டு தப்பித்தார். இந்த அளவு பொய் சொல்லித்தான் தம்ழ்நாட்டு ஆள்வோரிடம் ரஜினியே தப்பிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.?.

No comments:

Post a Comment