Sunday, May 15, 2011

சாதிக் கட்சிகள் சாதித்தனவா?

இந்தமுறை சட்டமன்ற தேர்தலில், பெரும் அரசியல் கட்சிகளின் கூட்டணிகளுக்கு எதிராக," சாதிக் கட்சிகள்" சிலவும் போட்டியிட்டன. அப்படி போட்டியிட்டதில் குறிப்பிட்டு சொல்லப்போனால் " பச்சமுத்து உடையார் தலைமையிலான "இந்திய ஜனநாயக கட்சி", " தேவநாதன் தலைமையிலான " யாதவ மகா சபா" போன்றவற்றை குறிப்பிடலாம். முதலாமவர் தனது உடையார் சாதியை நம்பி, நின்றார். அவர் அமைத்த கூட்டணியில், ஜான்பாண்டியன், சிவகாமி ஆகியோரும் உண்டு. அவரது கூட்டணி 84 இடங்களில் நின்றது. தேவநாதனின் அமைப்பு, 53 யிடங்களில் நின்றது.அவர்களது எதிர்பார்ப்புக்கு ஒப்ப, ஒவ்வொரு தொகுதியிலும் 10000 என்றும், 20000 என்றும் வாங்கிவிடுவோம் என்று நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் 2000 எனவும், 4000 எனவும்,வாங்கியிருக்கிறார்கள்.

இதேபோல, தேவா கட்சியும் 2000 வாக்குகளை மட்டுமே சில தொகுதிகளில் பெற முடிந்திருக்கிறது.ஆனால் தேவநாதன் தான் நின்ற " நாங்குநேரியில்" 12000 வாக்குகள் பெற்று வென்ற கட்சிக்கும், தோற்ற கட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஒத்த வாக்குகள் பெற்றுள்ளார். ஏன் எதிர்பார்த்த அளவு " சாதி கட்சிகள்" சாதிக்க வில்லை? எல்லாம் " அலை" தான் காரணம். " இலை கட்சிக்கு இந்த முறை வீசியது அலைதானே?

No comments:

Post a Comment