Tuesday, August 9, 2011

ஈழத்திற்குள் புகுந்து, படம் எடுத்து, விவரம் பதித்த "தமிழ் நங்கை"

ஈழத்திற்குள் புகுந்து, படம் எடுத்து, விவரம் பதித்த "தமிழ் நங்கை"
இன்று { 09 -08 -11 } இரவு 07 .30 மணிக்கும், 09 .30 மணிக்கும் " ஹெட்லைன்ஸ் டுடே" காட்சி ஊடகத்தில் , "போருக்கு பிறகு" தமிழீழப் பகுதிகளில் "நேரடியாக" ஒரு ஊடகவியலாளர் சென்று, " இலங்கை அரசாங்க அனுமதியோ" அல்லது அவர்கள் நிபந்தனை விதிப்பதைப் போல " பாதுகாப்பு அமைச்சக அனுமதியோ" பெறாமல், அதனாலேயே "சுதந்திரமாக" யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களுக்கும், அங்குள்ள " இடம் பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களுக்கும்" சென்று அவர்களது நேர்காணல்களையும், காநோளிகளையும் "கைகேமரா" மூலம் பதிவு செய்து வந்துள்ளவற்றை காணலாம். சென்னையில் உள்ள அந்த காட்சி ஊடகத்தின் பெண் ஊடகவியலாளரான" பிரியம்வதா" அந்த சாதனையை செய்துள்ளார். எந்த நேரத்திலும் "பிடிபட்டு" துன்புறுத்தப்படலாம் என்று தெரிந்தும், எந்த சமயத்திலும் " கொள்ளப்படலாம்" என்று புரிந்தும், அந்த இளம் ஊடகவியலாளர் அத்தகைய செயலை செய்து, "தமிழர்களின்" நிலைமையை உலகறியச் செய்துள்ளார். "ரசாயன குண்டுகள்" எறியப்பட்ட ஆதாரங்கள் அதில் கிடைத்துள்ளன. இனியும் "போர்குற்றங்கள்" நடைபெறவில்லை என்கிறார்களா?

1 comment:

Unknown said...

தோழரே தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி...
தங்கள் பதிவு மற்ற ஊடகத்தை விட மிகவும் வேகமாக உள்ளது....வாழ்க....

Post a Comment