Friday, August 26, 2011

முரண்டுக்கு மூக்கணாங்கயிறு கட்டணும்.


மரணதண்டனையை மூன்று தமிழருக்கு குறைப்பதோ, அல்லது நிர்வாக தடையை போடுவதோ, தமிழக அரசால் முடியும் என்ற சூழலில், புதிய தமிழகம் டாக்டர் கிரிஷ்ணசாமி, எழு கட்சி உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி கொடுத்த "கவன ஈர்ப்பு தீர்மானத்தை" தான் ஒரு வார காலமாக எடுக்கவில்லை. தமிழக முதல்வரின் கட்டளைப்படி, பேரவைத் தலைவர் செயல்படட்டும். இன்று மீண்டும் எழுந்து தனது தீர்மானம் எடுப்பது பற்றி கிரிஷ்ணசாமியை பேசவிடவில்லை. அவரும் கோபத்தில், "வெளிநடப்பு" செய்துவிட்டார். இதுற்ற்ஹான் தமிழக சட்டமன்றத்தின் நிலைமை. முன்பே வந்த " மரணதண்டனை அமுலாக்கல் உத்தரவை" தமிழக உள்துறை ஒரு வார காலமாக "கிடப்பில்" வைத்திருந்தது. மத்திய அரசின் "நிர்ப்பந்தம்" மீண்டும் வார, அதை எடுத்து " சிறை அதிகாரிக்கு" அனுப்பியுள்ளது. அதை "முருகன், சாந்தன், பேரறிவாளன்" ஆகியோரிடம் சிறை அதிகாரி கொடுத்துவிட்டார். அவரும் "செப்டம்பர் ஒன்பதாம் நாள்" உங்களுக்கு "தூக்கு" என்றும் கூறிவிட்டார்.

தமிழக அரசை "மரணதண்டனைக்கு எதிராக" செயல்படுத்த, எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்தும் "கவன ஈர்ப்பு தீர்மானம்" கொடுத்து விட்டார். அற்டஹியும் இன்று வரை எடுக்கவில்லை. அப்படி ஒரு "முரண்டா?" இந்த முரண்டை அடக்க "மூக்கணாங்கயிறு" எது? வருகிற "உள்ளாட்சி தேர்தலில்" தூக்கி எதிர்க்காதவர்கள் "ஒட்டுமொத்த தமிழகளின்" எதிரிகளாக அறிவிக்கப்படுவார்களே? வருகிற " நாடாளுமன்ற தேர்தலில்" இப்போது மூன்று தமிழர் தூக்கி எதிர்ப்பவர்கள் "ஒட்டுமொத்த தமிழர்களின்" எதிரிகளாக சித்தரிக்கப்படுவார்களே? அந்த " மூக்கணாங்கயிறு" இந்த ஆட்சியாளர்களுக்கு தெரியுமா? எத்தனை தூரம் "போற்குற்றங்களுக்கு துணை" போயிருந்தாலும், இப்போது "நாடாளுமன்றத்தில்" ஈழத்து இனப்படுகொலைகளை எதிர்த்து பேசி திமுக நற்பெயர் பெற்றுவருகிறதே? அந்த திமுக இந்த "தூக்குகளை" பயன்படுத்தி " மீண்டும் எழ" வாய்ப்பு இருக்கிறதே?

வருகிற தேர்தல் மட்டும்தான் இவர்களுக்கு "மூக்கனாங்கயிரா?" அல்லது "தமிழக இளைஞர்கள்" சிந்திப்பது போல "முத்துகுமார்களாக" அவர்களை ஆயிரக்கணக்கில் மாற்றுவது " மத்திய ஆட்சியாளர்களின்" திட்டமா?

No comments:

Post a Comment