Friday, August 26, 2011

கனிமொழிக்கு முரண்பட்டு , அவரது வழக்கறிஞர் பேசினார்.


டில்லி "பாட்டியாலா நீதிமன்றம்" சீ.பி.ஐ. வழக்கை "பரபரப்புடன்" நடத்தி வருகிறது. திஹார் சிறையிலிருந்து, கனிமொழியும், ஆ.ராஜாவும், சரத்குமார் ரெட்டியும் நீதிமன்றம் வருகிறார்கள். ஆ.ராஜாவிற்கும், கனிமொழிக்கும் ஒரே வழக்கறிஞரை, "சுஷில் குமாரை" திமுக தலைமை நியமித்துள்ளது. முக்கிய குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்ட வழக்கறிஞர் ராஜாவிடமே , சுஷில் குமாரும் கலந்து பேசி, "வாதங்களை" தயார் செய்து கொள்கிறார். ராஜாவும்தனக்கு " தர்காபிர்கான" விவரங்களை எடுட்டிஹ்து கொடுத்து வருகிறார். இது இயல்பாகவே நடக்கக் கூடிய ஒன்றுதான். ராஜா மீது கூறப்பட்டுள்ள "குற்றச்சாட்டில்" அவர் "முதலில் வருபவருக்கு முதலில்" கொடுப்பது என்ற கொள்கையை பின்பற்றினார் என்பது முக்கிய குற்றச்சாட்டு. அந்த "முடிவை" எடுத்ததில் பிரதமரும், சிதம்பரமும் சேர்ந்துஎடுத்த முடிவு என்பது ராஜாவின் வாதம். அதாவது கொள்கை முடிவு எடுக்கும் போது, அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரமும், அன்றைய பிரதர் மன்மோகனும் இருந்து " கூட்டத்தின் குறிப்புகள்" எழுதப்பட்டு எடுத்த முடிவு அது.


அந்த "கூட்ட குறிப்புகளை" ஆ.ராஜா வழக்கறிஞரிடம் கொடுக்கிறார். அதே வழக்கறிஞர் கனிமொழிக்கும் பேசுவதால், கனிமொழி பற்றி பேசும்போது அந்த வாதத்தையும், அந்த "கூட்ட குறிப்புகளையும்" வழக்கர்டிஞர் சுஷில் குமார் நீதிமன்றம் முன்னால் வைக்கிறார். அது "ஊடகங்களில்" வெளியாகிறது. நாடாளுமன்றத்தில் அதைவைத்தே "பா.ஜ.க." பிரதமர் மீது பிரச்சனையை கிளப்புகிறது. மறுநாள் அதே பிரச்சனையை அதாவது, "பிரதமரும், சிதம்பரமும்" சாட்சிகளாக விசாரிக்கப்பட வேண்டும் எண்பதை ராஜா சார்பாக அதே வழக்கறிஞர் நீதிமன்றம் முன் வைக்கிறார். ராஜா மீது வைக்கப்பட்டுள்ள "குற்றச்சாட்டுகளுக்கு" அந்த வாதம் பொருத்தமானது. ஆனால் "கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு " அது பொருத்தமானது அல்ல. கனிமொழி மீது "கலிஞர் டி.வி.க்கு" வந்த இருநூறு கோடி ரூபாய் பணம் சம்பந்தப்பட்ட வழாக்குதான் இருக்கிறது. அடஹ்ர்கு பிரதமரும், உள்துறையும் வரவேண்டிய அவசியம் இல்லை. இது வழக்கறிஞர் செய்த தவறு. இதிலும் தனக்கு சம்பந்தமே இல்லாமல் கனிமொழி மாட்டிக்கொண்டார். தேவை இல்லாமல் "பிரதமரையும், உள்துரையையும்" பகைத்துக்கொள்ளும் நிலைமை. அதில் அவருக்கு "நிலை தடுமாறிய நிலைமை".

No comments:

Post a Comment