Sunday, December 25, 2011

கிரிஜா வைத்தியநாதன் எனும் அதிகார வர்க்கம்

தமிழ்நாடு அரசாங்கத்தின் சுகாதாரத்துறை பிரபலம் என்கிறார்கள். அதில் இயற்றப்பட்ட சட்டம் என்ன என்று மகாராஷ்டிரா, கர்நாடகா,குஜராத் ஆகிய மாநிலங்கள் உட்பட கேட்டு வருகிறார்களாம். ஆங்கிலேயன் காலத்து சட்டத்தையே இன்னமும் சுகாதாரத்துறை பேணி வருவதால், தமிழாட்டின் வளர்ச்சி நாடெங்கும் போற்றப்படுகிறது. "பொது சுகாதார துறை" என்ற டி.பி.எச். அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் வருகின்ற இயக்குனர்கள் எப்போதுமே அதன் அடியாழத்தை புரிந்து அடிமட்ட ஊழியர்களை ஊக்குவித்தல் என்ற பணியை செய்வதை விட, உலக வங்கி கூறுகின்ற திட்டங்களை அமுல் படுத்துவதில் கவனமாக இருப்பார்கள்.அப்போதுதான் உலக வங்கி உதவியுடன் இயங்கும்"தேசிய மருத்துவ சுகாதார இயக்கம்"என்ற பெயரில்வரும் வெளிநாட்டு கொடிகளை கையாளும் பதவி கிடைக்கும் என்ற எண்ணம்.

கடந்த இரண்டு நாட்களில் இந்த சுகாதார துறை பற்றி வெற்றி செய்திகளை மட்டுமே அதன் செயலாளர் கொடுத்து வருகிறார். இந்த கிரிஜா வைத்தியநாதன் ஒய்.ஜி.பார்த்தசாரதி குடும்பத்திலிருந்து வந்தவர். அதனால் அவருக்கு அடிப்படை மக்களின் பழக்க வழக்கங்கள் தெரியாமலிருக்கலாம். அவர் அதிகம் படித்தவர்கள் மத்தியில் வளர்ந்து வந்ததால், வேலையை செய்வதை விட, அடஹிப்பற்றி பேச அதிகமான நேரம்வேண்டும் என்று நினைக்கலாம். தான் அதிகம் விஷயம் டேஹ்ரின்தவர் என்ற கருத்து அந்த பின்னையிளிருந்து வந்ததால் இருக்கலாம். அதனாலேயே துறை அதிகாரிகளை கூட்டி, கூட்டம் போட்டு தான் அதில் பேசிவிட்டால் வெற்றி கிடைக்கும் என்று நம்பலாம். ஆனால் அவை எல்லாமே அடிப்படை ஊழியகளையும் மகளிடம் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் பொறுத்தது என்பது இந்த ஆமாவிற்கு தெரிய வாய்ப்பு இல்லை.


அதனால் அவர் கிராம சுகாதார செவிலியர்களை தாங்கள் எடுத்த புள்ளிவிவரங்களை எல்லாம் உடனுக்குடன் இணைய தளத்தில் ஏற்ற சொல்லலி கட்டளை இட்டுவிட்டார். ஆனால் அந்த கிராமப்புற செவிலியர்கள், தாங்கள் வேலை செய்யும் இடங்களில் எந்த ஒரு கணினி வசதியும் இல்லாதபோது, அருகே உள்ள பெரிய கிராமத்திற்கோ, அல்லது நகரத்திற்கோ சென்றுதான் கணினி கடை டேஹ்டி அதை இணையதளத்தில் அனுப்பமுடியும்.அதுவும் சம்பந்தப்பட்ட செவிலியருக்கு கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.அப்படி வெளியே வருவதனால், அவர்களது பகுதியில் உள்ள "தாய் சேய் நல பணியையோ, பிரவச பணியையோ,தடுப்பூசி பணியையோ, அவர்கள் கவனிக்க முடியாது. அந்த கிராம சுகாதார செவிலியர்கள்தான் ஒரு அரசாங்கத்தின் முக்கிய முதுகெலும்பான . அவர்களை வேலை செய்யவிடாமல் கணினி மயமாக்கம் என்று மேட்டுக்குடி பாணியில் கிரிஜா வைத்தியநாதன் செயலப்டுவதால் என்ன பயன்?


கிராம சுகாதார செவிலியர்களை மதித்து பணி செய்பவர்களே அரசாங்க திட்டங்களை மக்கள் மத்தியிலேடுத்ஹ்டு செல்ல முடியும். அதிகாரிகளுடன், அன்றாடம் மனிக்கனக்கில்கூட்டம் நடத்தி அறிவுரை கூறிவிட்டால், எல்லாமேனடந்துவிடும் என்று எண்ணும் கிரிஜாவிற்கு நாமெதை கூறினாலும் விளங்குமா? அது அவர் வந்த அல்லது வளர்க்கப்பட்ட முறையில்கத்தார் அனுபவங்கள். ஆகவே அது எளிதில் அவரை விட்டு நீங்காது. இப்படி அதிகாரிகளை அவித்துக் கொண்டு எப்படி ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று யாரும் தைரியமகா கேட்கவில்லை என்பதாலெல்லாம் ஓடுகிறது.

2 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

குலவுசனப்பிரியன் said...

தேவையான இடுகை. நிரைய தட்டச்சுப் பிழைகள் உள்ளன. தயவுசெய்து சரிசெய்யுங்கள்.

Post a Comment