Tuesday, January 10, 2012

நக்கீரன்ல உள்ள நல்லாதானே இருக்கு

அன்று சனிக்கிழமை. சனவரி ஏழாம் நாள். புதுக்கோட்டையில் இருந்தேன். அப்போதுதான் சென்னையிலிருந்து வாடகை காற்றில் திருச்சி வழியாக வந்து இறங்கினோம். பண்ருட்டி வழியில் தானே புயலுக்கு பின்னால் இரவில்; செல்ல முடியாது என ஓட்டுனர் கூறிவிட்டதால், திருச்சி வழிதான் எங்களுக்கு கிடைத்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ஷெரீப் ஏற்பாடு செய்து கொடுத்த விடுதியில் தங்கினோம். அம்பேத்கர்-பெரியார் மக்கள் கழகம் தலைவர் செல்வன் அழைத்தாரே என்று "கரம்பக்குடி" கூட்டத்திற்கு வந்திருந்தோம். கடைகளில் தொங்கிய நக்கீரன் தலைப்பி கொஞ்சம் கண்ணை ஈர்த்தது. " மாட்டு மாமிசம் சாப்பிடும் மாமி நான்" என்று தலைப்பிட்டு "விவரிக்கிறார் ஜெயலலிதா" என்று எழுதி இருந்தது. அவரே சொல்கிறாரா? என்பது நமது கேள்வியாக எழுந்தது.ஆர்வம் இருந்தும் பிறகு வாங்கிகொள்ளலாம் என்று இருந்து விட்டேன். விடுதியில் படுத்து எழுந்த பின்னால் அனகில எட்டிலிருந்து ஒரு நண்பர் தொலைபேசினார். நக்கீரன் அலுவலகம் தாக்கப்படுகிறது என்றார். ஊடகவியலாளராக வருத்தப்பட்டார்.நானும்தான்.

அடுத்து கலைஞர் டி.வி. பார்த்தேன். அதில் நக்கீரன் அலுவலகம் உள்ளே தாக்கப்பட்ட காட்சிகளை, வெளியே ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சிகளை காட்டினார்கள். அடஹ்ர்குள் த.ம.மு.க. போது செயலாளர் ஹைதர் அலி தொலை பேசினார். நக்கீரன் என்பதால் எனக்கு பேசினார். மாட்டு இறைச்சி ச்டப்பிட்டால் இழிவா? என்ற தோரனையில் இருந்தது அவரது குரல். கலைஞர் அறிக்கை கலிஞர் டி.வி.யில் கட்டப்பட்டது என்றேன். எண்ண சொன்னார்? என்றார். நீதிமன்றம் சென்று அவதூறு வழக்கு போடவேண்டியதுதானே? என்று கேட்டிருக்கிறார் என்றேன். இதே கருத்தை தனது மகனுக்கு ஏன் அவர் "மதுரை தினகரன்" தாக்கப்பட்ட போது கூறவில்லை? என்று கேட்டார். அதுவும் சரியாகத்தானே இருக்கிறது என எண்ணினேன்.அடுத்து உடனேயே நக்கீரன் அலுவலகம் தொடர்பு கொண்டு காமராஜிடம் பேசினேன். உள்ளே "பாசிடிவாகத்தான்" எழுதியிருக்கிறோம் என்றார். எண்ண எழுதி இருக்கிறீர்கள்? என்றேன். மாட்டு இறைச்சி சாப்பிடுவது பற்றி எம்.ஜி.ஆர். கூறியதை ஜெயலலிதாவிற்கு ஆதரவாகத்தான் போட்டிருக்கிறோம் என்றார்.


அ[ப்படியானால் ஏன் அட்டையில் "நெகடிவாக" போட்டீர்கள்? என்றேன்.மாவிற்கு, மா போடவேண்டும் என்று எண்ணியதால் "கெடுத்துக்கொண்டோம்" என்றார். அவர் நக்கீரனின் இணையாசிரியர். அவரது கூற்றை அதிகாரபூர்வமாக எடுத்துக் கொண்டேன். அப்போது அவரது தொலைபேசி மூலம் வெளியே முழக்கம் போடும் சத்தம் கேட்டது. மதுசூதன் ஆட்கள் இப்போது வந்து முழக்கமிடுகிறார்கள் என்றார். "வெளியே காவலர்கள் காட்சி ஊடகத்தில் நிற்பது தெரிந்ததே? எப்படி உள்ளே வந்து உடைத்ததை களைஞர் டி.வி. காட்டினான் "என்றேன்.. முதலில் பத்து பேர் வந்து உள்ளே நுழைந்து எங்கள் வாகனங்களை உடைத்து அலுவலகம் உள்ளே வந்து பல பொருட்களையும் உடைத்து போட்டு விட்டனர். நாங்கள் அவர்களை வெளியே தள்ளி கதவை ப[ஊட்டி விட்டோம் என்றார். அதற்கு பிறகுதான் காவல் துறை வந்தது. வாசலில் நிற்கிறது.ஆனாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறது என்றார். ஒவ்வொரு கூட்டமாக அதிமுக வினர் வந்து முழக்கமிட்டு, கள் எரிந்து விட்டு போகிறார்கள் என்றார்.

அதிமுக வினர் மாநிலமெங்கும் நக்கீரன் புத்தகத்தை கடைகளில் பிடுங்கி எரித்து வருகிறார்கள் என்றார். அதேபோல பிற இடங்களிலிருந்தும் கேள்விப்பட்டேன். மறுநாள் காலை தி ஹிந்து, தினத்தந்தி, போன்ற ஏடுகள்; உட்பட திமுக வினர் செய்த அராஜகத்தை படம் பிடித்து வெளியிட்டனர். அன்று காவல்துறை அதாவது ஞாயிற்று கிழமை சிறிது "அடக்கி" வாசித்தாங்க போலிருக்கிறது. உள்ளே போட்டதை படித்து பார்த்து வெளியே போட்டதை ஓரந்தள்ளி பார்க்க அரசியல் கட்சிகாரர்களுக்கு "பொறுமையில்லையோ?". அது அவர்கள் வேலையில்ல்யோ? சரி.இப்படித்தானே மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட போது, முதலில் மேயர் தேன்மொழி தனது படையுடன் சென்று வாசலில் முழக்கமிட்டு சென்றார். அடுத்து வந்த திமுக குழு வந்து கள் எறிந்துவிட்டு சென்றது. அடுத்து வந்த அட்டாக் பாண்டி குழு உள்ளே புகுந்து அடித்து நொறுக்கி, மூன்று பேர் சாகா காரணமாக ஆகிவிட்டது. இரு கட்சியிலும் தலைமைக்கு விசுவாசம் கட்ட ஒவ்வொரு குழுவாக இப்படித்தான் வந்து தாக்குதல் நடத்திவிட்டு செல்லவேண்டுமோ?

No comments:

Post a Comment