Tuesday, January 10, 2012

உழவர் எழுச்சியை ஏற்படுத்திய பசுபதியின் மரணம்

பசுபதி பாண்டியன் திண்டுக்கல் அருகே அவரது வீட்டில் அடையாலம்கட்டாத எதிரிகளால் நேற்று இரவு ஏழரை மணிக்கு படுகொலை செய்யப்பட்டார். தேவன்றகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் என்ற பெயருடன் அவர் செயல்பட்டு வந்தார். ஒன்பதாம் நாள் தேனியில் முல்லை பெரியார் பிரச்சனைகாக ஒரு பட்டிநிபோராட்டத்தை நடத்தி விட்டு வந்திருந்தார். அவருக்கும் மூலக்கடை பண்ணையார் குடும்பத்திற்கும் உள்ள மோதல் பற்றி எடுகள் வெளியிட்டுள்ளன. அவரது நடவடிக்கைகளினால் பண்ணையார் பக்கத்தில் பலர் மரணம் அடைந்ததையும், அவரது செயளால மேலும் பலர் கொலை செய்யப்பட்டதையும் கவனமாக கூறும் காவல்துறை, பசுபதி பக்கத்தில் "பண்ணையார் குடும்பத்தால்" கொல்லப்பட்டவர்கள் "பதிமூன்றுபேர்" என்பதை கூறுவதில்லை. ஏன் என்றாலவர்கள் "தாழ்த்தப்பட்டவர்கள்".

தேவேந்திரகுல வேளாளர்கள் தமிழ்நாட்டு உழவர் பெருங்குடி மக்களின் போர்குணமிக்க முன்னணி படை. அந்த படையின் ஒரு முன்னோடி கொல்லப்பட்டதனால், டென்றா எழுச்சி திர்ஹேன் மாவட்டங்களில் இப்போது சாலையெங்கும் திரண்டு நிற்கிறது. பசுபதியின் உடலை ஏந்திய வாகனம் பெருமூர்வலமாக தூத்துக்குடி நோக்கி கொண்டு செல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறது. சாலையெங்கும் திரண்ட தேவேந்திர கூட்டம் ஆண்களும்,பெண்களும் தங்கள் தலைவனை காண கிராமங்களில் இருந்து வெளியே வந்து நிற்கின்றனர். திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, அருப்புகோட்டை, எட்டையபுரம், எப்போதும் வென்றான், தூத்துக்குடி என்று அந்த மாபெரும் உழவர் எழுச்சி பேரணி சென்று கொண்டு இருக்கிறது. மதுரை விமான நிலையத்தில் காத்திருந்து டாக்டர் கிருஷ்ணசாமி, மலர் வலயம் வைத்து ஊர்வலத்தில் கலக்க, எட்டயபுரத்தில் பசுபதிக்கு மரியாதை செலுத்தி இணைய ஜான் பாண்டியன் தயாராய் நிற்க இந்த உழவர் பெரும் எழுச்சியை தேவேந்திரா சமூகம் இனி மறக்க முடியுமா? .

இனியாவது உழவு தமிழன் தனது போர்குணத்தை காட்ட தனக்குள்ளேயே எத்ரியை தேடாமல் பண்ணை திமிங்கிலங்களின் கைகளில் கலாவடப்பட்டிருக்கும் நிலங்களை எல்லாம் தனாதாக்கி நாட்டு மக்களுக்கு "உழுது, பயிருட்டு, சோறு போடும் பெரும் கூட்டமாக உருவாகுமா? என்ற ஏக்கம் நமக்கு.

No comments:

Post a Comment