Thursday, February 2, 2012

இரண்டு அலைவரிசை உரிமம் ரத்து போதுமா?

உச்சநீதிமன்றம் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. நமது ஆ.ராஜா உள்ளே போய் ஒரு வருடம் ஆன பிறகு அனைத்து இரண்டு அலைவரிசை உரிமங்களையும் அதாவது நூற்று இருபத்து இரண்டு உரிமங்களையும் ரத்து செய்யவும், டாடா, ஸ்வான், போறோருக்கு ஐந்து கொடு அபராதமும் மற்றவர்களுக்கு ஐம்பது லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கொடுத்துள்ளது. இதில் ராஜா கால டாடா குழு வகையாறக்கள் சிக்கி கொண்டனர். தயாநிதி காலத்தில் உரிமம் வழங்கப்பட்ட ரிலையன்ஸ் குழ்மங்கள் தப்பிததுகொள்ளுமா? என்று கேட்டால் நம்மிடம் பதில் இல்லை. சரி. அந்த ரிலையன்ஸ் கும்பலுக்கு எந்த அபராதமும் கிடையாதா? என்று கேட்டாலும் நம்மிடம் பதில் இல்லை. நீதியரசர்கள் அனைத்தும் அறிந்தவர்கள், ஆகவே அவர்களை எதிர்த்து கேள்வி கேட்ககூடாது என்று வேண்டுமானால் நாம் கூறலாம்.


அடுத்து அதே நீதியரசர்கள் இன்னொரு முடிவை அறிவித்துள்ளனர். அதாவது இந்த இரண்டாம் தலைமுறை அலைவரிசை உரிமங்கள் இனி "ஏலம்" மூலம் கொடுக்க பாட வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படி ஏல முறையில் உரிமங்களை கொடுக்கும்போது, ஏற்கனவே நடந்த பாணியை மீண்டும் பின்பற்றாமல் இருக்க எந்த ஒரு தஹ்டுப்பும் கூறப்படவில்லை. ஆதாவது வெளிநாட்டு கார்பொறேட்களுக்கு உரிமம் கொடுக்க கூடாது என்று கூறப்படவில்லை. உரிமம் பெற்றவர்கள் அந்நியாய வில்லிக்கு வெளிநாட்டு கார்போறேட்களுக்கு விற்பதை "தணிக்கை" செய்யவோ, தடுக்கவோ, வடிகட்டவோ எந்த ஒரு உபாயத்தையும் இந்த நீதிமன்றம் கோரவில்லை. அதுபற்றி கூறவும் இல்லை.

அப்படியானால் அண்டை நாடுகளை சேர்ந்த "முன்னாள் மாக்கள் விடுதலை படையின் தலைவரின் தனியார் நிறுவனமோ", அந்நிய நாட்டின் உளவு நிறுவன தலைவர்களின் தனியார் நிறுவனமோ" இந்த உரிமத்தை ஏலம் எடுத்த சக்திகளிடமிருந்து பெறுவது தவிர்க்க பாட வேண்டும் என்று அவர்கள் கூறவில்லை. அதாவது இந்த அலைவரிசை ஊழலை பயன்படுத்தி எந்த அந்நிய நாடும் இந்தியாவின் ரகசியங்கள் மீது :உளவு: வேலை பார்க்க்க வாய்ப்பு கொடுக்கப்படுவதை தடுக்க கூட அந்த நீதியரசர்களின் சிந்தனை செல்ல வில்லை. எபப்டியோ சிதம்பரம் கதைக்கு இரண்டு வாரத்திற்குள் முடிவு செய்து சீ.பி.அய். நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கலாம் என்று கோரியுள்ளது. அதனால் "மானம்" பெரிது என்று நினைத்து சிதம்பரம் பதவியை ராஜினாமா செய்வார் என்று நாம் எதிர்பார்க்க வில்லை. அவர் நான்காம் நாள் நெல்லையில் நடக்க உள்ள அணு உலை ஆதரவு பொதுக்கூட்டத்திற்கு எப்படிதொண்டர்களை ஊக்குவித்து வன்முறை மூலம் ஜெயலலிதா ஆட்சிக்கு தொல்லை கொடுக்கலாம் என்று சிந்தித்து கொண்டிருப்பார்.

No comments:

Post a Comment