Wednesday, February 1, 2012

ராஜபக்சே பல்டி.கோதபாயே கெஞ்சல்

இன்று காலை சென்னையிலிருந்து வெளிவரும் ராஜபக்சே ஆதரவு ஆங்கில ஏடு, இதுவரை ராஜபகசெவிற்கும்,இந்திய வெளிவிவகார துறைக்கும் ஆதரவான செய்திகளைமட்டுமே அதாவது தமிழர் விரோத செய்திகளை மாத்திரமே வெளியிட்டுவந்தத ஏடு, ஒரு "மாற்று" செய்தியை வெளியிட்டுள்ளது. அதுதான் தி ஹிந்து ஆங்கில நாளேடு.சிலநாட்கள் முன்னாள் எஸ்.எம். கிருஷ்ணா என்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சென்று வந்தார். அவரது பயணம் பற்றி எல்லா ஏடுகளும் ஒரே செய்தியை வெளியிட்டன. அதுவும் எஸ்.எம்.கிருஷ்ணா கொடுத்த செய்தி.அதில் ராஜபக்சே தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கொடுக்க தயாராக இருக்கிறார் என்று வெளியிட்டன. அதை ராஜபஜ்செவே கிருஷ்ணாவிடம் கூறியதாக கிருஷ்ணா ஊடகங்களுக்கு தெரிவித்த செய்தி அது.

அந்த செய்திய வழக்கம் போல அந்த ஆங்கில ஏடான தி ஹிந்து நாளேடும் பெரும் மகிழ்ச்சியுடன் வெளியிட்டிருந்தது. அதில் பதின் மூன்றாவது சட்ட திருத்தத்தை நிறைவேற்ற தயார் என்று ராஜபக்சே கூறியதாக கிருஷ்ணா கூறியிருந்தார். அதுகண்டு இந்திய ஊடகங்கள் கும்மாளம் போட்டன. இங்குள்ள தமிழீழ அதரவு தராத சக்திகளும் எப்படியோ தமிழர் பிரச்சனை தனி தமிழீழம் கொடுக்காமல் முடிவடைய போகின்றது என்று கொக்கரித்தனர். நாம் அமட்டும் அது ஒரு போய் என்று கூறி பார்த்தோம். ஆனாலும் காங்கிரஸ் காரர்களுக்கு அது தென் போல இனித்தது. அது தென் தடவிய தோட்டா என்பதை நாம் கூறி பார்த்ததோம். அதன்பின் மறுநாளே தமிழக மீனவர்களை அடித்துபிடிப்பதை எடுத்து சொன்னோம். ஆனாலும் மீனவர்கள் மறுபடி விடுதலை ஆனதை காட்டி அவர்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.

இப்போது எல்லாமே அமபலத்திற்கு வந்துவிட்டது. நேற்று ராஜபக்சே சுய ரூபத்தை காட்டி விட்டார். இன்று காலை அதே தி ஹிந்து நாளேடு, ராஜபக்சே பல்டி என்று செய்தியை தலைப்பிட்டு போட்டுள்ளது. இப்படி ராஜபக்சேவை அந்த ஏடு அமபலப்படுத்தியது சமீபத்தில் நன்கு ஆண்டுகளாக நடக்க வில்லை. என் இந்த தடுமாற்றம்? அந்த செய்தியில் ராஜபக்சே பதின் மூன்றாம் சட்ட திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என்கிறார். நாடாளுமன்ற நிலைக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியதை போட்டுவிட்டார்கள். அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தந்து முன்வைப்பை யார், யார் வைக்க போகிறார்கள் என்று கூறவில்லை என்று ராஜபக்சே அதில் கூறியுள்ளார். அதே ராதாகிருஷ்ணன் இதை எழுதியுள்ளார். அப்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன அதிகார பகிர்வை முன்வைக்கிறார்களோ, தாய் நாடாளுமன்ற நிலை குழு முடிவு செய்யும் என்கிறார் இப்போது ராஜபக்சே.


இலங்கை நாடாளுமன்றத்தில் எத்தனையோ கருத்துகள் இந்த விவகாரத்தில் உள்ளன என்றும், அதனால் நாடளுமன்ற நிலை குழு முடிவு செய்யும் என் இப்ப்போது தெரிவிக்கிறார்.இது பற்றி அந்த ஏட்டின் நிருபர் ராஜபக்சேவிடம் கேள்வி கேட்கிறார். அப்படியானால் நீங்கள் பதின் மூன்றாவது சட்ட திருத்தத்தை அமுல்படுத்தி, அதைவிட அதிகமாக அதிகார பகிர்வு கொடுக்க போகிறீர்கள் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியது பொய்யா? என்று ராஜபக்சேவிடம் கேட்கிறார்கள். அதற்கு நானா எப்போதும் அதற்காக இருக்கிறேன், ஆனால் இலங்கை நாடாளுமன்றத்தில் பல கருத்துகள் இருக்கின்றன என்று கூறி நாடாளுமன்ற நிலை குழு முடிவு செய்யும் என்கிறார் அவர். அதை எழுதும்போது, 1987 இல் ராஜிவ்காந்தி- ஜெயவர்தனே ஒப்பந்தம் அடிப்படையில் இந்த பதின் மூன்றாம் சட்ட திருத்தும் இருக்கிறது என்று எழுதுகிறார்கள். அதில் "வடக்கு-கிழக்கு" இணைப்பு பற்றி எழுதப்பட்டுள்ளது என்று இப்போது அந்த ஏடு குறிப்பிடுகிறது.அந்த சொல்தான் இன்றைய ராஜபக்செபல்டிக்கு பிறகு இந்திய அரசின் கருத்து என்பதாக நாம் கொள்ளலாம்.

அதாவது நாம் ஏற்கனவே கூறியது போல இந்த மாதம் பிப்ரவரி கடைசியில் அய்.நா. ஆடுகப்பு கூட்டத்தில் ராஜபக்சேவின் போர்குற்றம் பற்றிய விசாரணை வரும்போது, இந்திய எந்த பக்கம் நிற்கும் என்ற கேள்வியை வைத்து, கிருஷ்ணாவின் நிர்பந்தத்திற்கு ராஜபக்சே பணிந்து இவ்வாறு பதின்மூன்றாம் சட்ட திருத்தத்தை விட கூடுதலான் அதிகாரம் தமிழருக்கு என்று "கதை" கூறினாரா? எனத்தான் நாம் நினைத்தோம்.இப்போது அதுகூட இல்லை என்று ஆகிவிட்டது. இதனால் கோபம்வந்த இந்திய அரசு பழைய ஒப்பந்தம் பற்றி ஊடகம் மூலம் பேசுகிறது. அதுமட்டுமின்றி, வேறொரு செய்தியும் வெளியாகி உள்ளது. ராஜபக்சே அய்.நா.முன்னால் "இறுதி யுத்தம் பற்றிய அறிககையை" வைக்க முடியாது என்று கொர்ரியுள்ளார் என்பதும் வெளியாகி உள்ளது. இதுவும் சேர்த்து இந்திய தஹ்ரப்பை கோபம் கொள்ள வைக்கும். இந்த கோபம்தான் அந்த ஏட்டின் மூலம் சிங்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


சிங்களம் புரிந்து கொண்டு செயல்பட் தொடங்கி விட்டது. இப்போது இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயே ராஜபக்சே ஒரு குழுவுடன் டில்லி நோக்கி பறந்து வந்துள்ளார். அதாவது கோபம் கொண்ட இந்திய அரசை கேஞ்சியாவ்து சமாதனப்படுத்த விரைந்து வந்துள்ளார். டில்லி இப்போது என்ன செய்ய போகிறது?

No comments:

Post a Comment