Monday, January 30, 2012

உள்துறை என்பது உள்குத்து அமைச்சகமா?

உள்துறை என்பது ஆளும் மத்திய அரசியல் கட்சிகளால மாநில கட்சிகளை எதிர்த்து, சட்ட-ஒழுங்கு பிரச்சனை தொடங்கி, எல்லா விவகாரங்களிலும் "தகராறு" செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு துறை என்பதே இந்திய அரசின் செயல்பாட்டில் நாம் காணும் உண்மை. அதிலும் சிதம்பரம் என்பவர் அந்த துறைக்கு அமைச்சராக வந்தபின் அதுபோன்ற வேளைகளில் மிகவும் விவேகமாக காய் நகர்த்துபவர் எனபதும் நாட்டிற்கு தெரிந்த உண்மை. அதுவும் இந்தியாவிலேயே தமிழக முதல்வர் மட்டும்தான் டில்லிக்கே சென்று அந்த சிர்தம்பரத்தின் முக மூடியை கிழித்து விட்டார் எனபதும், அதனால் அந்த சிதம்பரம் "பழி" வாங்கும் சிந்தனையில் மட்டுமே இருக்கிறார் என்பது கூட ஊருக்கு தெரிந்த செய்திதான்.

இப்போது அணு உலை எதிர்ப்பு தமிழுகத்தில் கூடுதலாக புறப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் அதை செயல்படுத்த போதிய விவரம் இல்ல நிலையில் தமிழகத்தில் அது இருபத்தைந்து ஆண்டு வரலாற்றுடன் செயல்படுகிறது. கூடங்குளம் பேசப்படும்போது, கல்பாக்கம் அணு உலை ஆதரவு சக்திகளுக்கு ஒரு சான்றாக கட்டப்படுவதால், கல்பாக்கத்திலும் கிளம்பும் அணு உலை எதிர்ப்பு போராட்டம் மத்திய உள்துறையால் தாங்கி கொள்ள முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. ஆகவே அந்த அமைச்சர் தனது ஆதரவாளரான லதா பிரேமகுமார் என்ற எஸ்.சீ. எஸ்.டி. ஆணையத்தின் அகில இந்திய தலைவர் மூலம் அடுத்த அம்பை எய்துள்ளார். அதாவது கல்பாக்கம் அணு மின் நிலையம் நிர்வாகம் அந்த இடத்தில் உள்ள காவல்துறையை தன்வசம் ஆதரவாக வைத்திருந்தது. அதனால் கல்பாக்கம் பகுதி அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு சாதாரன் பட்டிநிபோரட்டதிற்கு கூட அனுமதி தராமல் மறுத்து வந்தது. போராட்டகாரர்கள் நீதிமன்றம் சென்று உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் மூலமே அனுமதி பெற்று இன்று சனவரி முப்பத்தி ஒன்றாம் நாள் பட்டினி போராட்டம் வைத்திருந்தனர்.


திடீரென்று நேற்று ஒரு சவரிமுத்து தன்னை எஸ்.சீ.எஸ்.டி. கூட்டமைப்பபின் தலைவர் என்று கூறிக்கொண்டு உய்ரநீதிமன்ரத்தில் ஒரு புகாரை போட்டார். அதாவது அவர் ஒரு வாரம் முன்பே காவல்துறை அதிகாரிக்கு ஒரு மனு கொடுத்து அணு உலை எத்ரிப்புபட்டினி போருக்கு அனுமதி வழங்க கூடாதென கேட்டுக் கொண்டதாகவும் அதை மதிக்காமல் காவல்துறை அனுமதி கொடுத்ததாகவும் புகார் எழுப்பினார். அதை கவனித்த இரண்டாம் நிலை நீதியராசர் எலிபீ தர்மாராவ், கிருபாகரனுடன் சேர்ந்து அந்த பட்டினி ஒருக்கு "தடை" கொடுத்து விட்டார். இது ஏற்கனவே தலைமை நீதியரசர் கொடுத்த அனுமதிக்கு எதிரானது. இவாறு நீதிமன்றத்தை ஏமாற்றி சிதம்பரம் வகையறாக்கள் சனநாயக உரிமைகளை கூட தடை செய்கின்றனர்.

அதேபோல வன்முறையற்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்ப்பு போராட்டத்தை நடத்தும் போராட்டக்காரர்கள் இன்று காலை நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர். அப்போது சிதம்பரம் தூண்டி விட்ட காங்கிரஸ்காரர்களும், இந்தியாவை அவர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்கும் பாஜக வினரும், இந்துமுன்னணியும் சேர்ந்த்து கொண்டு .இந்த வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மத்திய அமைச்சரின் எதிர்காலத்திற்கு நான்கு மாதம் கெடு வைக்கப்பட்டால் அந்த அமைச்சர் தனது உள்துறையை, உள்குத்து துறையாக நடத்தி வருவது இதன்மூலம் கண்கூடு.

No comments:

Post a Comment