Monday, January 30, 2012

தலித் பட்டியலில் கிருத்துவர்களையும் சேர்த்த அரசு

இந்திய துணை கண்டத்தில் இருக்கும் மக்களை நமது அரசியல் சட்டம் வேடிக்கையாக பிரிக்கிறது. நீங்கள் முஸ்லிம் அல்லாவிட்டால், நீங்கள் பார்சி அல்லாவிட்டால், நீங்கள் கிருத்துவர் அல்லாவிட்டால் நீங்கள் ஒரு இந்து. இது எப்படி இருக்கு? யோவ். நான் நாத்திகன் அய்யா. என்னை போய் இந்து என்கிறாயே? இப்படி யாரும் கேட்க இடம் கொடுக்கவில்லை இந்த அரசியல் சட்டம். அந்த இந்துகளில் அவர்கள் "தீண்டத்தகாதவர்" என்று முத்ஹ்டிரை குத்தி வைத்திருக்கும் தலித்துகளை கரை சேர்க்க அபப்டி ஒரு இட ஒதுக்கீடு கொடுத்துள்ளார்களாம். சரி. உங்கள் நாட்டின் பார்ப்பனீய பண்பாடு அந்த தலித்துகளை எந்த மதத்திற்கு மாறினாலும் நடைமுறையில் ஒரே மாதிரிதானே கையாளுகிறது? கிருத்துவர்களாக மாறிவிட்ட தலித்துகளை நீங்கள் விட்டு விடுகிறீர்களா?

பஞ்சமிநீல மீட்பு போராட்டத்தில் உங்கள் துப்பாக்கிகள் ஏழுமலையை மட்டுமா பதம் பார்த்தது? ஜான் தாமசையும் சேர்த்து தானே பலி வாங்கியது? கொடியங்குளத்தில் உங்கள் கரங்கள் இந்து தேவேந்திரா வீடுகளை மட்டுமா உடைத்து? கிருத்துவ தேவேன்றாவையும் சேர்த்து நொறுக்க வில்லையா? மான்ஜோளையிலே உங்கள் காவல்துறை இந்து தலித்துகளுடன், இருத்துவர்களையும் சேர்த்து கொள்ள வில்லையா? அதனால் கிருத்துவ தலித்துகளுக்கும் தலித் பட்டியலில் இடம் கொடு. இதுதான் ஈனைத்து கிருத்துவ தேவாலயங்களும் எழுப்பும் முழக்கம்? அதற்கு இந்த மத்திய அரசு இதுவரை செவி சாய்த்ததா? மத்திய அரசின் கொள்கை முடிவை எடுக்காமல் அந்த தலித் பட்டியலில் கிருத்துவ தலித்துகளை சேர்க்க முடியுமா? அதை இந்த்ஹ்டுதுவா ஏற்றுக்கொள்ளுமா? அத்தகைய கோரிக்கைகளை நாமும் இந்த முறை கிருஸ்துமஸ் கொண்டாடிய முதல்வரிடம் சந்தித்த இரண்டு தலித் பேராயர்களும் வைக்க வில்லையே என்று வருந்தினோம்..

அதற்கு உடனடியாக பதில் கிடைத்து. சென்ற மாதமே அதாவது சென்ற ஆண்டின் டிசம்பரிலேயே ஒரு விளம்பரம் வந்தது.அதில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி, மற்றும் கிருத்துவ ஆதிதிராவிட மாணவ மாணவிகள் "ஊக்கத்தொகைக்கு" டிசம்பர் கடைசிக்குள் வின்னப்புயக்க்கவும் என்ற விளம்பரம் ஒன்று தமிழ்நாடு அரசு ஆதிதிராவிட நலத் துறையிலிருந்து கொடுக்கப்பட்டது. இப்போது தலித்துகளுக்கான "சிறப்பு சலுகைகளை" அறிவித்திருக்கும் தமிழக அரசு, சென்ற வாரம் அறிவிக்கும் போதே இதே போல "மதம் மாறிய ஆதிதிராவிடருக்கும்" என்று சேர்த்து வெளியிட்டுள்ளது. அதேபோளைன்றைய ஆளுநர் உரையிலும் அதையே குறிப்பிட்டுள்ளது. இதுதான் தலித் கிருத்துவர்களையும் தலித் பட்டியலில் சேர்த்த செயல்.

இந்துதுவா செல்வாக்கு கொண்ட இந்தியத் அரசில் மோதி பயன் இல்லை என்ற சூழலில், தமிழ்நாடு அரசு தனது அவ்ரம்பிற்குள் வருகின்ற "நிதி தரும்" இடங்களிலும், சிறப்பு திட்ட" இடங்களிலும் இப்படி ஒரு தெளிவான வரையறையை சேர்த்திருப்பது அமைதியான ஆனாலதேசமயம் மக்களுக்கு பயன்படும் வகையில் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஒரு விடையை கண்டுபிடித்ஹ்டுள்ளது என்றே படுகிறது.

No comments:

Post a Comment