Monday, January 30, 2012

விஞ்ஞானிகள் குப்பைக்கு சமமா?

நாம் அறிவியலாளர்களை மதிக்கிறோம். அவர்களை மரியாதை செய்கிறோம். அறிவியலாளர்கள் சொகுசு வாழ்கை வாழ்வதை "தேவை" என்று கருதுகிறோம். அவர்கள் குளிர் சாதன அறைகளில் இருப்பதையோ, குளிர் சாதன வீடுகளில் வசிப்பதையோ, குளிர் சாதன வாகனங்களில் செல்வதையோ, நாம் பெருமையாக கருதுகிறோம்.அது இந்த நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உதவி புரியும் என்று மனதார நம்புகிறோம். அவர்களது உலகம் தனி உலகம் என்பதை கூட நம்புகிறோம். ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள் ஏதோ ஒரு வகையில் சாதாரண மக்களால் சாதிக்க முடியாததை சாதிக்கும்திரமைசாளிகள் என்று நாம் க்ருதுகிறோம்.அவர்கள் சோதனை சாலைகளில் நாம் சாதரணமாக சாதிக்க முடியாததை சாதித்து "நிரூபித்தவர்கள்" என்பதால் போற்றுகிறோம். அதில்தான் நமது அறிவியல் விருப்பம் ஈடேறுகிறது.

அப்படிப்பட்ட அறிவியலாளர்களில் அதாவது விஞ்ஞானிகளில் ஒருவகைதான் விண்வெளி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளும். ஆகவே அவர்களையும் நாம் கேள்விக்கே இடம் இல்லாமல் ஆடஹ்ரிக்கிறோம்.போற்றுகிறோம்.அவர்களுக்கு தனி சிறப்பு தகுதி இருப்பதனால், அவர்களை சிறப்பாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம். ஆனால் அவர்கள் நாம் கொடுக்கும் சிறப்பு தகுதிகளை "களவு" செய்வதற்கு பயன்படுத்தினால் என்ன செய்ய? இப்படித்தான் விண்வெளி ஆராய்ச்சி அறிவியலாளர் மாதவன் நாயர் வகையறாக்களின் செயலும் பார்க்கப்படுகிறது. அதனால்தான் அரசு அவர்களுக்கு இனி அரசு பதிவகள் தரவேண்டாம் என்றது.


ஆனால் இந்த அரசின் முடிவு, இந்திய தலைமை அமைச்சரின் அறிவியல் ஆலோசனை குழு தலைவராக இருக்கும் பெரிய அறிவியலாளர் சீ.என்.ஆர். ராவ் அகார்களுக்கு தவறாக படுகிறதே? அவர் இந்த முடிவை "ஜன்னல் வ்ழியே எறியப்படும் குப்பையை" போல எரிந்து விட்டார்களே என்று கூறியுள்ளார். பயோர்கு எப்படி எறிவார்கள்? நேநேகலரசின் நம்பிக்கையை உங்கள்மீது அரசு வைத்திருந்த நம்பிக்கையை உடைத்துவிட்டீர்களே? நீங்கள் இந்திய நாட்டு ரகசியங்களை "காசாக" முனைத்து விட்டீர்களே? நீங்கள் நாட்டு மக்களுக்கே தெரியாத ரகசிய விசயங்களை அந்நிய நாட்டிற்கு விற்க துணிந்து விட்டீர்களே? நீங்கள் நாட்டுக்கு துரோகம் இழைக்க துணிந்த பின் உங்களை என்ன செய்வார்கள்?

சீ.என்.ஆர் ராவை தொடர்ந்து அணு சக்தி விஞ்ஞானி பிரசாத் இதேபோலேரிந்து விழுந்துள்ளார். அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர்.சினிவாசன் இதுபற்றி வாய் திறக்க முடியாது என்கிறார்.அதாவது அணுசக்தி விஞ்ஞானிகளும் இதேபோல அரசு கொடுத்துள்ள அனைத்து வசதிகள்தவிர, நாட்டு மக்களுக்கு தெரியாமல், நாட்டின் நாடாளுமன்றத்திற்கும் தெரியாமல் மத்திய மாயச்சரவைக்கும் தெரியாமல், பிரதமரின் கீழ் மட்டுமே அனைத்து திட்டங்களை தீட்டுவதும்,அனைத்து கணக்குகளையும் ரகசியமாக வைத்திருப்பதும் செய்பவர்கள். அதனால்தான் அந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களை கேள்வி கேட்கும் பொது, அணு சக்தி விஞ்ஞானிகளுக்கு கோபம் வருகிறது. இதை எப்படி "நாட்டுப் பற்றுடன்" பார்ப்பது?

No comments:

Post a Comment