Wednesday, February 29, 2012

கலைஞர் மீது கோபப்படும் தமிழர்களுக்கு.....

கடைசியாக "பூனை பையை விட்டு வெளியே வந்துவிட்டது".இதுதானே கலைஞர் அவர்களது கூடங்குளம் பற்றிய அறிக்கைக்கு பிறகு தமிழர்களது கருத்து? கூடங்குளத்தில் அணு உலை வரவேண்டும் என்று கலைஞர் கூறியதையும், ஜெயலலிதா என் மொவுனமாக இருக்கிறார் என்று கலைஞர் கேட்டத்தையும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ."பின்புல்கமாக" இருக்கிறாரா? என்று ஜெயா பற்றி கலைஞர் கேட்டதையும், கேள்விப்பட்ட தமிழர்கள் அனைவரும் கோபப்படுகிறார்கள். இதுவரை கருத்து சொல்லாத திமுக இப்போதாவது கருத்து கூறியிருக்கிறதே? என்று மகிழ்ச்சி அடையுங்கள். கலைஞருக்கு அணு உலை பற்றி தெரியாதா? அதன் தீமை புரியாதா? ஏற்கனவே இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு அவரது ஆட்சி காலத்தில் கூடங்குளம் சென்று அணு உலைக்கான அடிக்கல்லை நட்ட முயன்றாரே? அப்போது அதை எதிர்த்து ஆண்டன் கோம்ஸ் தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டதால் அதை கை விட்டாரே? அதை மறந்துவிட்டாரா? அப்படியொன்றும் இல்லை. அவருக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் இன்று மின்சாரம் தடை செய்யப்படுவது அதிகரித்துள்ள நிலையில் தமிழக மக்களில் பெரும்பாலோர் எந்த மின்சாரம் பற்றிய அறிவும் இல்லாமல், எந்த ஒரு மின் உற்பத்தி முறைகளை பற்றிய அறிவும் இல்லாமல், கூடங்குளம் அணு உலை உற்பத்தியை ஆரம்பித்தால் போதும், உடனேயே எல்லோருக்கும் ம்ன்சாரம் கிடைத்து விடும் என்ற பொய் பரப்பலை நம்பி அணு உளையாவ்து வரட்டும், மின்சாரம் வேண்டும் என்று எண்ணுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அடுத்தவர் ஆட்சி மீது "தவறாகா " ஒரு அதிருப்தி கிளம்பினாலும் பரவாயில்லை என்ற "புத்தியை" வைத்து கொண்டு காய் நகர்த்துகிறார்

ஆனால் 1987 இல் நடந்தது என்ன என்பதை நாம் மக்கள் முன்பு சொல்லியாக வேண்டும். அப்போது கூடங்குளம் அணு உலைக்கு எதிரான கருத்துகள் சென்னையில் மையங்கொண்ட நேரம். டாக்டர் சி.என்.தெய்வநாயகம் அந்த அணு உலையை எதிர்த்து அதனால் உருவாகும் "புற்று நோய்களை" விளக்கி "காணொளி" மூலம் எங்களை எல்லாம் உருவாக்கி வந்த காலம். யு.என்.ஐ. செய்தி நிறுவன ஜி.ரமேஷ் ஜார்ஜ் பெர்ணன்டஸ் மூலம் அணு உலை எதிர்ப்பையும் கற்றுக் கொண்டு, எங்களை திரட்டி வந்த நேரம். அப்போது ஜூனியர் விகடனில் ஜி.ரமேஷ் "நாகார்ஜுன்" என்ற பெயரில், ஏ.எஸ். பன்னீர்செல்வம் அணு உலகை ஆபத்தை பற்றி தொடர் எழுதிய காலம். அப்போது திமுக வின் முரசொலி ஏடு, ஒரு வார ஏடு கொண்டு வந்தது. அதற்கு பெயர் "புதையல்" . அந்த ஏட்டிற்கு ஞானி ஆசிரியராக இருந்தார். அந்த எட்டில் அணு உலைகளின் ஆபத்தை பற்றி பக்கம், பக்கமாக எழுதினார். அப்போது முரசொலி மாறனிடம் அணு உலயுகளின் ஆபத்து பற்றி ஞானி பெசினார்ட். மூன்று மணி நேரம் பேசியதாக இப்போதும் நினைவாக கூறுகிறார். அதை முரசொலி மாறன் ஏற்றுக் கொண்டு, திமுக செயற்குழுவில் அணு உலயுகளின் ஆபத்து பற்றி விளக்கினார். அதையொட்டி திமுய்க விற்கும் அணு உலைகளை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதையொட்டியே கலைஞர் வழிகாட்டலில் வைகோ நாடாளுமன்றத்தில் அணு உலயுகளின் ஆபத்தை பற்றி உரையாற்றினார். அதன்பிறகு திமுக தனது செயற்குழு தீர்மானத்தில் அடுத்த ஆண்டே "பாதுகாப்பான அணு உலைகள் வேண்டும்" என்று மாற்றி எழுதியது. இந்த சந்தர்ப்பவாத மாற்றம் ஏன் என்று ஞானி முரசொலி மாறனிடம் கேட்டுள்ளார்.அடஹ்ர்கு மாறன் வெளிப்படையாக உங்களுக்கு தெரியாதா ஞானி? மத்திய பாதுகாப்பு அமைச்சரவையிலிருந்து நெருக்கடி கொடுத்து விட்டார்கள் என்று பதில் சொல்லியிருக்கிறார். இந்த தகவலை ஞானியே சென்ற வாரம் நடந்த வழகக்ரிஞர்களின் அணு உலை எதிர்ப்பு கூட்டத்தில் கூறினார். . இதுதான் திமுக.

இப்போது புரிகிறதா? கலைஞர் யார் என்று புரிய நமக்கு இத்தனை தூரம் சென்று நிரூபிக்க வேண்டுமா? இப்போது சிதம்பரம் கலைஞரை தொடர்பு கொண்டு நீங்கள் அணு உலை எதிர்ப்பு நிலை எடுக்காதீர்கள் என்றும், ஜெயாவிற்கு நெருக்கடி கொடுங்கள் என்றும் கூறியதிலிருந்து தான் திமுக களத்தில் இப்போது குதித்து காங்கிரஸ் மத்திய அரசுக்கு எதிராக வரும் புயலை நிறுத்தி வைத்து காங்கிரஸ் அரசை காப்பாற்ற பேசுகிறது. அதில் மக்களின் பின்தங்கிய உணர்வுகளை பயன்படுத்த திமுக எண்ணுகிறது. இது மீனவ மக்களை மட்டுமல்ல, எல்லா தமிழர்களையும் திமுக விற்கு எதிராக மீண்டுமொருமுறை திருப்பிவிடும் என்று கலைஞர் எண்ணி பார்த்தாரா?

No comments:

Post a Comment