Thursday, April 12, 2012

அம்பேத்கரை இழிவு படுத்தி.............

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் அம்பேத்கரை, நத்தை மீது போகிறார் என இழிவு படுத்தி, அவரை காஷ்மீரின் பண்டித பார்ப்பான் நேரு, விரைவாக போகசொல்லி "சாட்டை" கொண்டு அடிப்பதாக ஒரு கேலிச்சித்திரத்தை, மேட்டுக்குடி மத்திய மனிதவள மேம்பாடுதுறை அமைச்சர் கபில் சிபல், தனது "என்.சீ.ஆர்.டி" தயாரித்த "பதினோராம் வகுப்பு" பாடப்புத்தகத்தில், "இந்திய அரிசயல் சட்டம் பணியில்" என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தில், வெளியிட்டு, கேளிசித்திரக்காரறது கருத்து என்று கூறி, அதில் "அரசியல் சாசன சபை" அரசியல் சட்டத்தை தயாரிக்க மூன்று ஆணுட்கள் எடுத்து கொண்டது என்று கேலி செய்து வெளியிட்டுள்ளனர்.

இது 1989 ஆம் ஆண்டின் எஸ்.சீ./எஸ்.டி.மீதான வன்கொடுமை தடுப்பு சட்டப்படி, குற்றமாகும். ஆதாவது ஒரு எஸ்.சீ. இனத்தை சேர்ந்தவரை, ஒரு எஸ்.சீ. இனம் சேராதவர் கேலி செய்தால் அந்த சட்டம் பாயும். அதன்படி, மத்திய அமைச்சர் கபில் சிபல், என்.சீ.ஆர்..டி. தலைவர், கேளிசித்தியா ஓவியர், அதை வெளியிட்டவர் ஆகியோர் தனடைக்கப்படவேண்டும். அந்த வழக்கை பாட மனித உரிமை ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment