Wednesday, May 9, 2012

வணிகர் சங்கம் இந்திய வானில் களப்பணியோடு கலந்தது.



     அன்று மே ஐந்தாம் நாள். வணிகர் சங்கங்களின் பேரவை என்ற பெயரில் இருபது ஆண்டுகளாக த.வெள்ளையன் நடத்திவரும் கூட்டமைப்பு ஒரு பெரும் மாநாட்டை சென்னை தீவு திடலில் நடத்தியது. வெறுமனே வணிகர்களை கூட்டி, வீர வசனம் பெசோதும், கடைகளை அடைத்து விட்டு திருவிழா போல ஆக்குவதும் போதாது என்று வெள்ளையன் எண்ணினார் போலும். அதனால் இந்த முறை பெரும் வணிகர் கூட்டம்முன்பு, பல்வேறு துறைகளிலும்"களப்பணி" செய்யும் தோழர்களை மாநாத்ட் மேடையில் உரை நிகழ்த்த வைத்து, அதன்மூஓலம் அவர்களது அனுபவங்களை, கருத்துக்களை வணிகர்களுக்கு எடுத்து சொல்லவும், வந்திருக்கும் தோழமை இயக்கத்தினருக்கு "தோழமை" காட்டவும் அந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார்.

              அதற்காக காலையில் "கருத்தரங்கு" என்று ஒரு அமர்வு. அதில் உணவு வணிகர் சங்க தலைவர் சந்திரேசன், நகரின் ஒடுக்கப்பட்ட குடிசைவாழ் மக்களை விரட்டியடிப்பதை பற்றி பேச தமிழர் எழுச்சி இயக்க தோழர் வேலுமணி, கடல்வாழ் பழங்குடியான மீனவ மக்களை பற்றி பேச இயற்கையுடன் இணைந்த இலங்கையரால் கொள்ளப்படும் கொடோயை வெளிப்படுத்த பேராசிரியர் பாத்திமாப்பு, உடல் சுகாதாரம் பற்றி பேச மருத்துவர், உழவர் பெருங்குடி பற்றி பேச பேச்சாளர், வங்கிகள்,வருமான வரித்துறை ஊழியர் சங்கத்து பேச்சாளர்கள் என்று அனைத்து தரப்பினரையும் அழைத்து உரையாற்ற வைத்தார். அந்த கரஐத்தரன்கிற்கு துவக்கவுரை என்ற பெயரில் என்னை, அந்த "அன்னியர் எதிர்ப்பு மாநாட்டிற்கு, உரையாற்ற வைத்தார். அதில் கிடைத்த வாய்ப்பில், ஆணிய ஏகாதிபத்தியவாதிகளின் "உலக வர்த்தக அமைப்பு" செய்யம் சதிகளையும், அதை ஒட்டி, அந்நிய நேரடி மொலதனம் இந்தியாவிற்குள் நுழைந்து, சில்லறை வணிகர்களை இல்லாம செய்ய முயலும் "போர்" பற்றியும் என்னால் கூறமுடிந்தது. 

               அத்தகைய போரை எதிர்கொள்ள தமிழ்நாட்டிலிருந்து, தமிழர் நலன் காக்க போராடி வரும் வெள்ளையன், ஒரு கருத்து போரை, ஒரு மக்கள் திரளை திரட்டும் போரை "உஅகமயமாக்களுக்கு" எதிராக் நடத்திவருவதை சுட்டி காட்ட முடிந்தது. அத்தகைய ஏகாதிபத்திய எதிர்ப்பு போரை நடத்த உலகில் உள்ள முதன்மை தேசிய இனம் தமிழினம்தான் என்று என்று நிரூபித்த "தமிழீழ தேசிய  தலைவர்" மேதகு வே.பிரபாகரன் வழியில் சமரசமற்ற போரை அந்நிய ஆதிக்கவாதிகளை எதிர்த்து நடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்த முடிந்தது. அப்படியோரு போரை உலக சமூகத்தின் முன்னாள் நடத்தி காட்டி தமிழீழ மண்ணை ஆதிக்கவதிகளிடமிருந்து மேட்டு, விடுதலை நிலமாக ஆக்கி, அரசாண்ட தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன், தரைப்படை மட்டுமின்றி, கொரில்லாபடை  மட்டுமின்றி, கரும்புலி தற்கொலைப்படை மட்டுமின்றி, கடல்புலிகள் படை மட்டுமின்றி, வான்புலி படையையும் கட்டி வரலாறு படித்ததை சுட்டும்போது, எழுச்சிமிகு தமிழ் வணிகர்களை காண முடிந்தது.வட இந்திய வணிக சமூகத்தினரின் ஆதிக்கம் தமிழ்நாட்டில்பெருகி வரும் ஆபத்தையும், அதை அடையாளம் காண வேண்டிய தேவையையும் எடுத்துரைக்க முடிந்தது.


            இதோடு விடாமல், வெள்ளையன் வடக்கிருந்து வந்த "களப்பணியாளர்களையும்" மேடையேற்றி மதியத்திற்கு மேல் நாட்டையே திகைக்க செய்தார். இந்திய அளவில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்தும், குழுவினரில், கிறேன்பெடி, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், ஆகியோரையும், பேசவைத்து, எங்கள் ஐக்கியம் நாடு தழுவிய போர் முரசு என்பதையும், ஊழல் எதிர்ப்பு என்பதையும், கருப்பு பண எத்ரிப்பு என்பதையும் தனது மாநாட்டு தீர்மானங்கள் மூலம் நிரூபித்தார். ஆக்ற்றோய் என்ற நுழைவு வரியை எதிர்த்து போராடியதில் இந்த வணிகர் சங்க நாள் உருதிப்பட்டதை எடுத்து கூறினார். அவ்வாறு "வாட்" என்ற "மதிப்பு கூடுதல் வரியை" ரத்து செய்த மாநில ஆட்சியாளர்களுக்கு கை கொடுக்கும் வகையில் அமைச்சர் செல்ல பாண்டியனும், மேயர்  சைதை துரைசாமியும் மேடையில் அலங்கரித்தனர். மத்ததில் வணிகர்களை சொந்த கால்களில் நிற்க வைக்கும் அரசியலுக்கு அங்கே எழுச்சி குறளை எழுப்பி விட்டார். 

No comments:

Post a Comment