Sunday, July 14, 2013

வன்னியர் பெண்களும் தருமபுரி போராட்டத்தில்....

வன்னியர் பெண்களும் தருமபுரி போராட்டத்தில்....
    நேற்றைய  "நியு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் " ஏடு  ஐந்தாவது பக்க செய்தி இது. நாம் மீண்டும், மீண்டும் கூறி வருகிறோம். இளவரசன்-திவ்யா "காதலும்", அதில் திவ்யா தந்தை, திவ்யாவின் கணவர் இளவரசன் ஆகியொரீன் "சாதலும்" "சாதி" பிரச்சனை மட்டுமல்ல. அடியாழத்தில், அது "இளைய தலைமுறையினருக்கு எதிரான போர்" என்பது புரியும். அதுவும் இளம் பெண்களுக்கு எதிரான குறிப்பான போர். அதிலும் "வன்னிய பெண்களுக்கு" எதிரான போர். "நாடக காதல்", "ஜீன்ஸ் காதல்", "கூலிங்க்ளாஸ் காதல்" ஆகியவை ஒரு குறிப்பிட்ட கட்சியை எதிர்த்து என்று கூறப்பட்டாலும், தலித் சமூகத்தை எதிர்த்து என்று புரியப்பட்டாலும், அது " வன்னியப் பெண்களை" இழிவு படுத்தும் "சொல் அம்புகள்" இல்லையா? அதை தொடுத்தவர்களை எதிர்த்து போரில், நிர்கவேண்டியவர்கள் வன்னியப் பெண்கள் இல்லையா?  அதுதான் தொடக்கி உள்ளது. அந்த செய்தியில் சில வன்னியப் பெண்களை நேர்காணல் செய்து எழுதி உள்ளார்கள் 

No comments:

Post a Comment