Saturday, November 10, 2012

தமிழர் விழாவா தீபாவளி?

தமிழர் விழாவா தீபாவளி?
    
     நரகனை கொன்ற நாள் 
     நல்விழா நாளா?
     நரகன் யார்? 
     நல்லனா? தீயனா?
     அசுரன் என்றவனை 
     அழைக்கின்றாரே?
      இராக்கதன் என்றும் 
      இயம்புகின்றாரே?
      அசுரன் என்றால் 
      தமிழன் என்றல்லோ பொருள்?

      பழக்கம் தனில் 
     ஒழுக்கம் இல்லையேல் 
     கழுத்து போயினும் 
     கைக்கொளல் வேண்டாம்.
     அதனால் தீபாவளியை 
     தீவாளி என விடேல்.
     --------------------- இதை எழுதியவர் புரட்சி கவிஞர் பாரதி தாசன். இப்போப்தாவது எங்களை திட்டாமல்  சிறிது செவி மடுப்பீர்களா?  நானும்  1988 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், பகிரங்க வாழ்க்கைக்கு வருகிறோமே, இதுபோன்ற நல்ல கருத்துக்களை பரப்பலாமே என்று  இரபத்தி நாலு ஆண்டுகளாக இந்த கவிதையை ஒப்பித்து வருகிறேன்  காட்சி ஊடகங்களில், இனையதளத்தில்  நக்கீரன் உட்பட அச்சு ஊடகங்களில் இந்த இரபத்தி நான்கு  ஆண்டுகளாக சளைக்காமல் இந்த பாரதிதாசனின் கவிதையை ஒப்பித்து வருகிறேன். " தமிழன் காசை கரி ஆக்குகிறான். சிலர் "கரியை காசு ஆக்குகிறார்கள்" என்றும் கூறிவருகிறேன். ஆனால் நம்மால் சாதிக்க முடியாததை  "இணைய தளம்" சத்தித்து வருகிறது. உயர தொழில் நுட்பத்தால், இன்று தமிழ் இளைஞர்கள் "ஆபத்து இல்லாத  வெடிகளையும், புஸ வானங்களையும், கணினியில் பார்த்து மகிழத் தொடக்கி விட்டனர்." எப்படியோ வீட்டு பக்கத்தில் "வெடி சத்தம்" கொஞ்சம் குறைந்து வருகிறது.

Thursday, November 8, 2012

ஸ்டாலினை மறித்த தமிழ்ப் பெண்கள்?


     லண்டன்  சென்றார் ஸ்டாலின். ஜெனிவா சென்று ஐ.நா பொறுப்பாளரை சந்தித்து "தனத்தை" தந்த மடலை கொடுத்துவிட்டு, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் "நவீன் பிள்ளையையும்" சந்தித்து பேசிவிட்டு, லண்டன் ஸ்டாலின். அடேயப்பா, எவ்வளவு  கடின வேலைகள்? உடன் சென்ற டி .ஆர்பாலு அந்த பிரமுகர்களிடம் விவரமாக பேசியதையும் காட்சி ஊடகங்களில் கண்டோம். அதன் பிறகு லண்டன் சென்றார் ஸ்டாலின். உடன் சென்ற டி கே.எஸ்.இளங்கோவன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஆகியோர் என்ன செய்தார்களோ, யாருக்கும் தெரியாது, ஸ்டாலின் சென்றார், ஸ்டாலின் பெச்டினார், ஸ்டாலின் மனு கொடுத்தார், ஸ்டாலின் நேர்காணல் கொடுத்தார், ஸ்டாலின் ஸ்கார்ப் போட்டிருந்தார், ஸ்டாலின் கோட்டு ,சூட்டு போட்டிருந்தார். ஸ்டாலின் லண்டன் சென்றார். லண்டனில் "பிரிட்டிஷ் தமிழ் பேரவை" ஏற்பாடு செய்த மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஸ்டாலினுக்கு அந்த பேரவை காரர்களை ஏற்கனவே தெரி யுமா? ஸ்டாலின் தங்கச்சிக்கு அவர்களை தெரியும் ஸ்டாலின் தங்கை கனிமொழிக்கு தான் அந்த aழைப்பு, கழகத்திற்கான அழைப்பு வந்தது. தலைவர் அதை டி .ஆர்.பாலு, டிகே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை அழைத்து கொடுக்கப்போகும் செய்தியை அறிந்த ஸ்டாலின் தலைவரிடம் முந்திக் கொண்டார். தானே போவதாக அறிவித்தார்.

                       லண்டன் மாநாட்டில் ஸ்டாலின் பேசினார். ஈழச் சூழல் ப[ஆற்றி பேசினார். ஒன்றரை லட்சம் பேர் கொலை செய்யப்பட்டதை  பேசினார்.  தொண்ணூறு ஆயிரம் பேர் தமிழ் பெண்கள் விதவைகளாக இருப்பதை பேசினார். போர் குற்றங்கள் பற்றி பேசினார். இவையெல்லாம் ஸ்டாலினுக்கு ஏற்கனவே தெரியுமா? தெரிய வேண்டிய அவசியமில்லை. இப்போது பேசினார். பேசிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினார். மூன்று தமிழ் பெண்கள் மறித்துக் கொண்டார்கள். நீக்க பேசியது எல்லாம் சரி. இவையெல்லாம் நாங்கள் போர் nஅடைக்கும்போதே கூறினோமே? நீங்கள்தானே ஆட்சியில் இருந்தீவ்ர்கள்? அப்போது உங்கள் தனத்தை முதல்வராக இருந்தாரே? நீங்கள் துணை முதல்வராக இருந்தீர்களே? அப்போது பேசி இருந்தால் பலன் கிடைத்திருக்குமே? போர் குற்றங்கள் நின்று போயிருக்குமே? அப்போது பேசாமல் இப்போது பேசி என்ன பயன்? இவ்வாறு  கேட்டார்கள்.பதில் சொல்ல முடியாமல் "எப்போ பேசறது? எப்ப பேசறது? " என்று திணறினார் ஸ்டாலின். டி .ஆர்.பாலுவும், கே.எஸ்.ராதாகிருஷ்ணனும், அந்த பெண்களுக்கு சமாதானம் கூறி அனுப்பி விட்டனர். அருகே இருந்த திருமாவளவன் ஒன்றும்  குறுக்கிட்டு பேசவில்லையே? என்று ஸ்டாலினுக்கு வருத்தமாம். அருகே கோ.க.மணியும் தான் இருந்தார். அவர்களுக்கு  அந்த பெண்கள் கேட்பது நியாயம்தான்  என்று தெரியுமே?  

புரட்சியை அழிக்கிறதே "சாதி"

புரட்சியை அழிக்கிறதே "சாதி"
     தென் மாவட்டங்களில் வழமையே இப்படி சாதி சண்டையை மூட்டி விடுவதுதான். ஆனால் வாடா மாவட்டங்களில் உள்ள சாதிகள் தங்களுக்குள் முரண்பட்டு இருந்தாலும் அவை டேஹ்ருவில் இறங்கி சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறி வந்தார்கள் ஆனால் அதை இன்று பொய்யாக்கி விட்டது "தர்மபுரி" மாவட்டம்  தருமபுரி மாவட்டத்தில் உள்ள "நாயகன்கொட்டை" பிரபலமான் ஊர். எதற்கு?' நக்சல்பாரி கொள்கைகளில்   
முழு ஆதரவு கொடுத்து வந்த ஊர். அங்குதான் நக்சல்பாரி புரட்சியாளர் களான தோழர் அப்புவின் சிலையும், தோழர் பாலனின் சிலையும்  வைக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு நகசல்பாரி கருத்துக்களை உள்வாங்கிய ஒரு இடம் அது. அங்கெ சாதிகளை தாண்டி தோழர்கள் வலம் வந்தனர் நாயக்கன்கொட்டை கிராம வன்னியர்கள் அருகே உள்ள தலித் கிராமங்களில் வாழும் மக்களுடன் "தோழமையாக" பழகி வாழ்ந்ததால், அந்த தலித் கிராமங்களான "நத்தம், அண்ணா நகர்" ஆகியவை நகசல்பாரி கருத்துகளுக்கு, தோழர்களுக்கு முழு ஆதரவு கொடுற்ற்ஹ்து வந்த வரலாறு உண்டு. இப்போது அங்கே நேற்று "சாதி மோதலா?" என்பதே இப்போது கேள்வி.

                                  நாயக்கன்கொட்டையை சேர்ந்த நாகராஜ் என்ற வன்னியர் தோழருக்கு ஒரு மகள். மகள் படித்து நர்சாக ஆனபின்பு, "சாதி தாண்டிய மானுடப்பார்வையை" பெறக்கூடாதா? அந்த பெண் ஒரு தலித் இளைஞரை "காதலித்து திருமணம் " செய்துகொண்டார் இதை "வன்னிய சாதிவெறி" ஒப்புக் கொள்ளவில்லை அந்த பெண்ணை நிர்ப்பந்தம் செய்தது. பெண் தைரியமாக "சாதி மறுக்கும் மனுஷியாக" தன்னை அறிவித்து கொண்டார் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதை உறுதியாக அறிவித்தார். பொறுக்குமா சாதி வெறிக்கு? சாதி தாண்டி "காதலித்தால்" சாதி தாண்டி மனம் ஒற்றி மணம் முடித்தால்  "சாதியை" வைத்து எப்படி அரசியல் செய்வது என்று சிந்தித்தார்களா? ஆயிரம் பேருக்கு மேல் திரண்டு "நத்தம், அண்ணா நகர்" என்ற தலித் கிராமங்களுக்கு "தீ" வைத்தனர். வநீயராக இறாமல் "தோழராக" எப்படி நாகராஜன் இருக்கலாம் என்று அவரை மிரட்டினர். நாகராஜன் "நேற்று தற்கொலை" செய்துகொண்டார். சாதி வெறியர்கள் தெருவில் இறங்கினர் காவல்துறை நுழைந்தது. இன்று நாகராஜனின் "மச்சினி"யும் தற்கொலை செய்து கொண்டார் என்று செயுதிகள் வருகின்றன மீண்டும் சாதி வெறியர்கள் "ஆட்டம் போட" முயல்கின்றனர். அப்படியானால் சாதி தாண்டிய மண்ணையும், இந்த சாதி வெறியர்கள் நெற்றி கொண்டு விட்டார்களே? 

ஜாலியை கொலை செய்த சாதி

ஜாலியை கொலை செய்த சாதி 
    தேவர் ஜெயந்தி இந்த முறை வந்தபோது பல வன்முறைகள் நடந்த்தது முதலில் முதுகளுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர்களும் வேன் வாகனத்தில் . சென்றவர்களும் "கற்களால்" தாக்கப்பட்டதும் அதில் மூவர் மரணம் அடைந்ததும் நம்மை "பதற" வைத்து. அதற்க்கு முன்பே மறுத்து பாண்டியர் பிறந்த நாளில் திருப்புவனம் அருகே 'நிராயுதபாணியான" துணை ஆய்வாளரை, ஆயுதம் தாங்கிய "கத்தி" இளைஞர்கள் கொலை செய்தது கண்டு நாடே அதிர்ச்சி அடைந்தது. அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் "திருச்ஹ்கிழி" வட்டாரத்தில் அந்த மாவட்டம் முழுக்க அதிகமாக இருக்கும் "சாதி" அந்த இடத்தில் மட்டும் சிறிய அளவே இருப்பதால் "இருவர்" கொலை செய்யப்பட்டது "பழிக்கு பழி" வாங்கும் " காட்டுமிராண்டி" தனத்தை காட்டியது. அதற்கும் "பழிக்கு பழி" வாங்க மதுரை அருகே சிந்தாமணி வட்டாரம் வந்த "சுமோ" வாகனத்தில் இருந்த "இருபது" பேர மீது "பெட்ரோல் குண்டு" எரிந்ததை பார்த்து "தாங்கமுடியாத" துயரம் நம்மை பற்றிக் கொண்டது. 

                    ஆனால் அந்த சுமோ வில் வந்த இளைஞர்களை இரவில் மருத்துவமனையில் 'சிகிச்சை" கொடுக்க முடியாத அளவில் "குடி" செல்வாக்கு செலுத்தியது  என தெரிய வரும்போது, "அய்யகோ" இது என்ன வேதனை என்று எண்ணத் தொடங்கினோம் ஆனால் அதில் பதிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும் "இருபது" வயதிற்குள் என்று தெரியும்போது "இளைய சமுதாயத்தை" பார்த்து அதிர்ச்சி வந்தது. அடுத்து "மறவர்" இளைஞர்களுடன் அந்த இருபது பேர் கும்பலில், இஅரண்டு பிள்ளைமார், ஒரு கோனார், ஒரு தேவேந்தரர் இளைஞர்களும் பாதிக்கப்பட்டனர் என்று தெரியம் பொது, "அவர்கள் தேவர் ஜெயந்திக்கு"  "சாதி" உணர்வுடன் செல்லவில்லை என்பதும், இன்றைய இ;ளைஞர்கள் "ஜாலி" உணர்வுடன் சென்றிருக்கிறார்கள் என்பதும் "ஆதாரபூர்வமாக" வெளிப்பட்டுவிட்டது. அப்படியானால் ஜாலி உணர்வுடன் சென்றவர்களை "சாதி" உணர்வுடன் தாக்கி கொலை செய்திருக்கிறார்களே? என்று வேதனைப்பட வேண்டி வருகிறது. இன்றைய இளைஞர்கள் சாதியை தாண்டி "ஜாலி"யை கையில் எடுத்தாலும் பழைய தலைவர்கள் "மதுக்கடை" மூடப்பட்ட நாளிலும் மது கொடுத்து கூட்டம் சேர்த்து, தனது "ஆள்பலம்" காட்ட செத்தான் விளைவு இதுவா? என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்காக சுமோவில் "தொங்கி" கொண்டு செல்வோரை "பெட்ரோல் குண்டு" எரியும் போக்கு "காட்டுமிராண்டி" தானம்தானே? 

Monday, November 5, 2012

"கூடங்குளம் அணு உலை சட்ட விரோதமாக"

அன்புடையீர்,
    இன்று "தி ஹிந்து" ஆங்கில நாளேட்டில் 15 ஆம் பக்கத்தில், ஒரு ஆணித்தரமான கட்டுரை வெளிவந்துள்ளது. இந்த கட்டுரை "கூடங்குளம் அணு உலை சட்ட விரோதமாக" அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை விரவாக கூறுகிறது. கட்டுரையை எழுதியவர்கள் "வழக்கறிஞர் நாகசைலா,மற்றும் பி.யு.சி.எல். அமைப்பின் ஆகில இந்திய பொது செயலாளரான வி.சுரேஷ் " ஆகியோர். பி.யு.சி.எல். தமிழ்நாடு கிளை வழமையாக கூறிவரும் குற்றச்சாட்டான "கூடங்குளம் அணு உலை வெறும் விதி மீறலில் கட்டப்படவில்லை, மாறாக "சட்டமீறலில் " கட்டப்பட்டுள்ளது"என்பதற்கான  ஆதாரங்களை இந்த கட்டுரை முன்வைக்கிறது. "கடலோர ஒழுங்குபடுத்தல் மண்டலம்" அறிவிப்பாணை, " சுற்று சூழல் தாக்கம் பற்றிய மதிப்பீடு" அறிவிப்பனை ஆகியவற்றை எப்படி "அணு சக்தி துறை" தொடங்கியுள்ள "இந்திய அணு சக்தி கார்பொரேசன் லிமிடட் " என்ற "வணிக" தேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்  மீறியுள்ளது என்பதை இந்த கட்டுரை தெளிவாக சுட்டி காட்டுகிறது. ஆனால் சிலர் கூறுவது போல "என்.பி.சி.எல்." என்ற "அணு சக்தி கார்பொரேசன் லிமிடட் " ஏதோ சாதாரணமாக  அணுசக்தி துறையின்  கிளைதான்"   என்பது "தவறு" எனபதையும்  இந்த கட்டுரையின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். என்.பி.சி.எல். என்ற நிறுவனம் "வணிக தேவைகளுக்காக" நிறுவப்பட்டுள்ளதால், எல்லா "அரசு அறிவிப்பனைகையும்"  அரசாங்க தேவை என்ற அடிப்படையில் "நிராகரித்து செல்ல முடியாது" என்பதையும் இந்த கட்டுரை வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.   

Wednesday, October 17, 2012

இளையராஜா கனடா நாட்டிற்கு செல்லக் கூடாதா?


     புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தில்யிளிருந்து ஒரு குரல் ஓரத்து கேட்கிறது. அதையே இங்கும் இயக்குனர் செல்வமணி கூறியுள்ளதாக நண்பர்கள் தெரிவித்தனர்.. இளையராஜாவை  மையமாக கொண்டு ஒரு இசை நிகழ்ச்சியை  கனடா நாட்டில் வருகிற நவம்பர் மாதம் அதாவது அடுத்த மாதமே நடத்த இருக்கிறார்கள். அதனால் என்ன?  அதற்கான விளம்பரத்தை விஜய் தொலைக் காட்சியில் போட்டு வருகிறார்கள். இயல்புதானே? ஒரு இசை நிகழ்ச்சியை நமது இளையராஜா வெளிநாடு சென்று நடத்தும்போது, அதுவும்  அதை  மிகப் பிரும்மாண்டமாக ஏற்பாட்டாளர்கள் நடத்தும்போது, அதற்கான விளம்பரத்தை போடத்தானே இங்குள்ள ஊடகங்கள் இருக்கின்றன? ஆகவே போடுகிறார்கள். இப்படி "சாதரணாமாக" பார்க்கும் பலர் நம்மிடையே உள்ளனர்.

                                 ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களோ, அதே நிகழ்வை வேறு மாதிரி பார்க்கிறார்களே? வருகிற "நவம்பர் மாதம்" எப்போதும்போல, உணர்வு பெற்ற தமிழர்களால் "மாவீரர் மாதமாக"  கடைப் பிடிக்கப் படுகிறது. ஆகவே உணர்வு பெற்ற தமிழர்கள் இந்த நவம்பர் மாதத்தை "துக்க மாதமாகவும்",  தமிழின விடுதலைக்காக தங்களை "தியாகம்" செய்துகொண்ட மாவீரர்களின் "நினைவுகளை" நெஞ்சில் ஏந்தி உறுதி எடுக்கும் மாதமாகவும் காண்கிறார்கள். உணர்வு பெற்ற தமிழர்கள்தான், "பத்து கோடி" தமிழ் மக்களின் உலக முன்னோடிகள். அந்த முன்னோடிகளை  "புறம் தள்ளியோ", "விலக்கியோ",உலகத் தமிழினத்தை காண முடியாது. நாம் உண்மையிலேயே  "சிங்கள" வெறி பிடித்த ஆட்சியாளர்களால்  "இன அழிப்பு போரில்" படுகொலை செய்யப்பட திர்ஹமிழர்கள் சார்பாக "நினைவுகளை" கொண்டிருக்கிறோம் என்றால், இந்த "மாவீரர் மாதத்தை" நினைவு படுத்தியே பார்க்க வேண்டும். உண்மையில் நாம் "தமிழினப் பகைவரை" உலக சமூகம் கூறுவதுபோல, அனைத்து நாட்டு விசாரணைக்கு  உட்படுத்தி "உலகம் தண்டிக்க வேண்டும்" என்று கருதுவோமானால், நாமும்  "ஈழத் தமிழர்களுடன்" இணைந்து "மாவீரர் நாள்" வருகின்ற  மாதமான நவம்பர் மாதத்தை "மாவீரர் மாதமாக" கடைப்பிடிக்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் "கடைப்பிடிக்கும்" தமிழின உணர்வாளர்களை "மதிக்க வேண்டும்". அப்படி மதித்தொமணல் அவர்கள் மத்தியில் இதுபோன்ற உணர்வாளர்களின் உணர்வுகளுக்கு, சிறிதும் "குந்தகம்" வராமல் முடிந்த ளவு நடன்ற்க்கொள்ள வேண்டும். 


                அப்படி என்ன அந்த ஈழத் தமிழர்கள் "கோருகிறார்கள்?".நாங்களும் இளையராஜாவின் ரசிகர்கள்தான் என்று அந்த ஈழத் தமிழர்கள் கூறுகிறார்கள். நனகளும் எண்கள் கனடாவிற்கு வரும் இளையராஜாவை மாபெரும் வரவேற்ப்பு கொடுத்து வரவேற்க விரும்புகிறோம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். நனகளும் இளையராஜாவின் இசையை எண்கள் கனடாவில் கேட்டு மகிழ விரும்புகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் "துக்க மாதமாக" கடைப்பிடிக்கும்  "நவம்பர் மாதத்தில்" அந்த இசை நிகழ்வு நடக்காமல் வேறு மாதத்தில் நடந்தால் நல்லது அல்லவா? என்று கேட்கிரறாக்கள். ஆண்டின் பன்னிரண்டு மாதங்களில், நவம்பர் தவிர்த்த "பதினோரு" மாதங்களில் எந்த மாதத்திலாவது இளையராஜா கனடா வந்து "இசை நிகழ்ச்சி" நடத்தட்டுமே? என்று அவர்கள் வினவுகிறார்கள். உன்னிடம் கேட்டார்களா? என்று நேநேகள் கேட்டால் "ஆம். என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்" நேருதான் நானா பதில் சொல்ல வேண்டும். நான் " கனடா தமிழ் வானொலியில்" அரசியல் களம் என்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போது, என்னிடம் நேயர்கள்  இப்படி கேட்டுக் கொண்டார்கள். "தயவு செய்து" இளையராஜா அவர்களிடம் எங்களது "உணர்வுகளை" எடுத்து சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். இதில் என்ன "தவறு" இருக்கிறது. 

                         நவம்பர் மாதத்தில், கனடாவில் இளையராஜாவின் இடசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், இத்ஜ்தகைய  "உணர்வுகளை" கணக்கில் எடுக்காமல் ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது கண்டுகொள்ளாமல் ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது ஏற்பாடு செய்தவர்களுக்கு பின்னிருந்து, அவர்களுக்கே தெரியாமல் "சிங்கள போர் வெறியர்களின்",கைகளோ, அல்லது "நிதியோ" விளையாடி இருக்கலாம். அல்லது அப்படி இல்லாமல் இருக்கலாம். எல்லாமே தற்செயலாக கூட இருக்கலாம். ஆனால் அது அங்குள்ள "உணர்வாளர்களை" பாதிக்கிறது என்பதுதான் "முக்கியம்". அதுமட்டுமல்ல. எப்போதுமே பொதுமக்களில் "பெரும்பாலோர்" முன்னோடி உணர்வு அற்றவர்களாகத்தான் இருப்பார்கள். அதாவது இந்த மாவீரர் தினம், மாவீரர் மாதம் ஆகியவற்றை கண்டு கொள்ளாதவர்களாக இருப்பார்கள். அவர்களும்கூட உள்ளத்தால் " தமிழின உணர்வாளர்கள்தான் ".ஆனால் அதற்க்கு முதன்மை கொடுக்காதவர்கள். அவர்களிடம் இதுபோன்ற செய்தியை எடுத்து சென்றோமானால், அவர்களும் நமது "கோரிக்கைக்கு" செவி மடுப்பார்கள். முன்னோடிகள் உணரும் எந்த செய்தியையும், மற்ற தமிழர்கள், சிறிது காலம் "தாழ்த்தி" உணர்வாளர்கள். ஆகவே இது ஒட்டுமொத்த தமிழர்களின் "கோரிக்கை" என்பதாக இளையராஜா போன்ற " உணர்வுகளின் வெளிப்பாட்டர்கள்" காண வேண்டும். நமது குரலை யாரவது இளையராஜாவிடம் கூறி இணங்க வைப்பார்களா? . 
     புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தில்யிளிருந்து ஒரு குரல் ஓரத்து கேட்கிறது. அதையே இங்கும் இயக்குனர் செல்வமணி கூறியுள்ளதாக நண்பர்கள் தெரிவித்தனர்.. இளையராஜாவை  மையமாக கொண்டு ஒரு இசை நிகழ்ச்சியை  கனடா நாட்டில் வருகிற நவம்பர் மாதம் அதாவது அடுத்த மாதமே நடத்த இருக்கிறார்கள். அதனால் என்ன?  அதற்கான விளம்பரத்தை விஜய் தொலைக் காட்சியில் போட்டு வருகிறார்கள். இயல்புதானே? ஒரு இசை நிகழ்ச்சியை நமது இளையராஜா வெளிநாடு சென்று நடத்தும்போது, அதுவும்  அதை  மிகப் பிரும்மாண்டமாக ஏற்பாட்டாளர்கள் நடத்தும்போது, அதற்கான விளம்பரத்தை போடத்தானே இங்குள்ள ஊடகங்கள் இருக்கின்றன? ஆகவே போடுகிறார்கள். இப்படி "சாதரணாமாக" பார்க்கும் பலர் நம்மிடையே உள்ளனர்.

                                 ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களோ, அதே நிகழ்வை வேறு மாதிரி பார்க்கிறார்களே? வருகிற "நவம்பர் மாதம்" எப்போதும்போல, உணர்வு பெற்ற தமிழர்களால் "மாவீரர் மாதமாக"  கடைப் பிடிக்கப் படுகிறது. ஆகவே உணர்வு பெற்ற தமிழர்கள் இந்த நவம்பர் மாதத்தை "துக்க மாதமாகவும்",  தமிழின விடுதலைக்காக தங்களை "தியாகம்" செய்துகொண்ட மாவீரர்களின் "நினைவுகளை" நெஞ்சில் ஏந்தி உறுதி எடுக்கும் மாதமாகவும் காண்கிறார்கள். உணர்வு பெற்ற தமிழர்கள்தான், "பத்து கோடி" தமிழ் மக்களின் உலக முன்னோடிகள். அந்த முன்னோடிகளை  "புறம் தள்ளியோ", "விலக்கியோ",உலகத் தமிழினத்தை காண முடியாது. நாம் உண்மையிலேயே  "சிங்கள" வெறி பிடித்த ஆட்சியாளர்களால்  "இன அழிப்பு போரில்" படுகொலை செய்யப்பட திர்ஹமிழர்கள் சார்பாக "நினைவுகளை" கொண்டிருக்கிறோம் என்றால், இந்த "மாவீரர் மாதத்தை" நினைவு படுத்தியே பார்க்க வேண்டும். உண்மையில் நாம் "தமிழினப் பகைவரை" உலக சமூகம் கூறுவதுபோல, அனைத்து நாட்டு விசாரணைக்கு  உட்படுத்தி "உலகம் தண்டிக்க வேண்டும்" என்று கருதுவோமானால், நாமும்  "ஈழத் தமிழர்களுடன்" இணைந்து "மாவீரர் நாள்" வருகின்ற  மாதமான நவம்பர் மாதத்தை "மாவீரர் மாதமாக" கடைப்பிடிக்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் "கடைப்பிடிக்கும்" தமிழின உணர்வாளர்களை "மதிக்க வேண்டும்". அப்படி மதித்தொமணல் அவர்கள் மத்தியில் இதுபோன்ற உணர்வாளர்களின் உணர்வுகளுக்கு, சிறிதும் "குந்தகம்" வராமல் முடிந்த ளவு நடன்ற்க்கொள்ள வேண்டும். 


                அப்படி என்ன அந்த ஈழத் தமிழர்கள் "கோருகிறார்கள்?".நாங்களும் இளையராஜாவின் ரசிகர்கள்தான் என்று அந்த ஈழத் தமிழர்கள் கூறுகிறார்கள். நனகளும் எண்கள் கனடாவிற்கு வரும் இளையராஜாவை மாபெரும் வரவேற்ப்பு கொடுத்து வரவேற்க விரும்புகிறோம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். நனகளும் இளையராஜாவின் இசையை எண்கள் கனடாவில் கேட்டு மகிழ விரும்புகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் "துக்க மாதமாக" கடைப்பிடிக்கும்  "நவம்பர் மாதத்தில்" அந்த இசை நிகழ்வு நடக்காமல் வேறு மாதத்தில் நடந்தால் நல்லது அல்லவா? என்று கேட்கிரறாக்கள். ஆண்டின் பன்னிரண்டு மாதங்களில், நவம்பர் தவிர்த்த "பதினோரு" மாதங்களில் எந்த மாதத்திலாவது இளையராஜா கனடா வந்து "இசை நிகழ்ச்சி" நடத்தட்டுமே? என்று அவர்கள் வினவுகிறார்கள். உன்னிடம் கேட்டார்களா? என்று நேநேகள் கேட்டால் "ஆம். என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்" நேருதான் நானா பதில் சொல்ல வேண்டும். நான் " கனடா தமிழ் வானொலியில்" அரசியல் களம் என்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போது, என்னிடம் நேயர்கள்  இப்படி கேட்டுக் கொண்டார்கள். "தயவு செய்து" இளையராஜா அவர்களிடம் எங்களது "உணர்வுகளை" எடுத்து சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். இதில் என்ன "தவறு" இருக்கிறது. 

                         நவம்பர் மாதத்தில், கனடாவில் இளையராஜாவின் இடசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், இத்ஜ்தகைய  "உணர்வுகளை" கணக்கில் எடுக்காமல் ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது கண்டுகொள்ளாமல் ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது ஏற்பாடு செய்தவர்களுக்கு பின்னிருந்து, அவர்களுக்கே தெரியாமல் "சிங்கள போர் வெறியர்களின்",கைகளோ, அல்லது "நிதியோ" விளையாடி இருக்கலாம். அல்லது அப்படி இல்லாமல் இருக்கலாம். எல்லாமே தற்செயலாக கூட இருக்கலாம். ஆனால் அது அங்குள்ள "உணர்வாளர்களை" பாதிக்கிறது என்பதுதான் "முக்கியம்". அதுமட்டுமல்ல. எப்போதுமே பொதுமக்களில் "பெரும்பாலோர்" முன்னோடி உணர்வு அற்றவர்களாகத்தான் இருப்பார்கள். அதாவது இந்த மாவீரர் தினம், மாவீரர் மாதம் ஆகியவற்றை கண்டு கொள்ளாதவர்களாக இருப்பார்கள். அவர்களும்கூட உள்ளத்தால் " தமிழின உணர்வாளர்கள்தான் ".ஆனால் அதற்க்கு முதன்மை கொடுக்காதவர்கள். அவர்களிடம் இதுபோன்ற செய்தியை எடுத்து சென்றோமானால், அவர்களும் நமது "கோரிக்கைக்கு" செவி மடுப்பார்கள். முன்னோடிகள் உணரும் எந்த செய்தியையும், மற்ற தமிழர்கள், சிறிது காலம் "தாழ்த்தி" உணர்வாளர்கள். ஆகவே இது ஒட்டுமொத்த தமிழர்களின் "கோரிக்கை" என்பதாக இளையராஜா போன்ற " உணர்வுகளின் வெளிப்பாட்டர்கள்" காண வேண்டும். நமது குரலை யாரவது இளையராஜாவிடம் கூறி இணங்க வைப்பார்களா? . 

Monday, October 15, 2012


To
  The Chairperson,
   NHRC, New Delhi.

Respected Sir,
 Sub: Discrimination on caste in the Oriyur Church.

          In Tamilnadu, in Sivakangai district, on 07-10-2012, morning by 10 am, when the Pooja was suppossed to start on the Silver jubilee celeberation of that church, Dalits from the neighbouring villages, who belongs to thr church, raised qns about the dismissal of one Anthony Raj of Odaikaal village who belongs to Devendirakula velalar of the Dalit sect, from being elected to the Priesthood after the study completes for the Priesthood. One such incident happenned in the  same church seven years back. So the Dalits feel that their persons because of being dalits are not allowed to become a Priest in that church. A clas took place on that day and the upper caste Udayar community who dominate in that church filed complaints against the dalts. The discrimination on the basis of Caste within the church is an ongoing affair and on this case we request the Commission to intervene in the matter and render justice to the dalits.-----T.S.S.MANI, District Secretary, PUCL, Chennai, Tamilnadu.
------Complaint  Registered with NHRC. Reg.no. 2804/ 22 / 0 / 2012