Monday, November 7, 2016

துணைவேந்தர் கைது சொல்லும் உண்மைகள்! - கோபாலன் இரவீந்திரன்

துணைவேந்தர் கைது சொல்லும் உண்மைகள்! - கோபாலன் இரவீந்திரன்

திங்கள், 7 நவ 2016

05.11.2016 அன்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜவடேகர் அவர்கள் கோயம்புத்துர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி நிகழ்ச்சியில் இரண்டு முக்கியமான கருத்துகளை தனது உரையில் முன்வைத்தார் என்பது பத்திரிகை செய்தி. “அதிகளவில் தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்கள் தேவை. அரசு அதற்கான நடவடிக்கைளை எடுக்கும். இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தர பல்கலைக்கழகங்களாக மாற உயர்கல்வி அமைச்சகத்தின் வழி காட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்”.
மாண்புமிகு ஜவடேகர் இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தர பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும் என்று சொல்லும் முதல் நபர் அல்ல. கடந்த 10 வருடங்களாக நமது நாட்டின் ஜனாதிபதிகளாலும், பிரதம மந்திரிகளாலும், மத்திய/மாநில கல்வி அமைச்சர்களாலும், பெரு வணிக உயர்கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை அண்டி இயங்கும் இந்திய ஊடகங்களாலும் சொல்லப்பட்டு வரும் விஷயம், ‘இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தர வரிசை பட்டியலில் இல்லை. இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தர பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும்’.
இவர்கள் இதை சொல்ல நம்பியிருக்கும் உலக உயர்கல்வி தர வரிசை பட்டியல்கள், உலகத்தின் முன்னணி கல்வியாளர்கள் உருவாக்கிய பட்டியல்கள் அல்ல. பெரு வணிக ஊடகங்களும், உயர்கல்வி ஆய்விதழ்களையும், நூல்கள் மற்றும் பட்டியல்களைப் பதிப்புக்கும் வணிக நிறுவனங்களும் இணைந்து, உயர்கல்வி தளத்தை சந்தைப்படுத்த எடுத்த / எடுக்கும் முன்னெடுப்புகளின் ஊடே விளைந்தவைதான் இவை.
இன்று இந்திய ஊடகங்களும், அமைச்சர்களும் சிலாகித்து சுட்டிக்காட்டும் உலக உயர்கல்வி தர வரிசை பட்டியல்கள் Times Higher Education Rankings மற்றும் QS World University Rankings. உலக மயமாக்கல் உயர்கல்வியை எவ்வாறு சந்தைப்படுத்துகிறது என்பதற்கான உதாரணங்கள் இவை. Elsevier எனும் முன்னணி ஆய்வு பதிப்பகமும் Times Higher Education Surveyயும் அண்மையில் கைகோர்த்து கொண்டபோது சொல்லப்பட்ட விஷயம், ‘இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சி அவற்றின் உயர்கல்வி தளங்களையும் பெரும் சந்தைகளாக மாற்றும். நாம் இணைவது இவற்றை கைப்பற்றத்தான்’.
Times Higher Education Survey மற்றும் QS World University Rankings போல, 28 உலக உயர்கல்வி தர வரிசை பட்டியல்கள் உலா வரும் காலத்தில் நமது உயர்கல்வி கொள்கைளை செதுக்குபவர்களும், உயர்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று பேசும் அமைச்சர்களும், அதிகாரிகளும் பேச மறுப்பது, இந்தியப் பல்கலைக்கழகங்கள் எவ்வாறு / எந்த காலகட்டத்தில் யாரால் செயல் இழக்க செய்யப்பட்டன என்பதாகும்.
உயர்கல்வித்துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் பேச மறுப்பது தரமான, வெளிப்படையான, ஊழலற்ற பேராசிரியர் மற்றும் துணைவேந்தர்கள் நியமனங்கள் பற்றி. தன்னாட்சி பல்கலைக்கழகங்களிடம் இருந்து எவ்வாறு பறிக்கப்பட்டது என்பது பற்றி இவர்கள் என்றும் பேசியது இல்லை. மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களிடம் இடையே ஏன் அளவில்லா நிதிசார் ஏற்றதாழ்வுகள் என்ற கேள்விகளை இவர்கள் எழுப்பியது கிடையாது.
இந்தியாவில் 1930இல் நோபல் பரிசு பெற்ற முதல் அறிவியாலாளர் சர் சி.வி.இராமன். இவர் படித்தது, பட்டம் பெற்றது, உலகத்தர ஆய்வு செய்தது Times Higher Education Survey மற்றும் QS World University Rankings இல்லாத காலகட்டத்தில் இயங்கிய உலகத்தர நிலையில் இருந்த சென்னை மாநிலக் கல்லூரியிலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும். காரணம், அன்று உயர்கல்வித்துறை அமைச்சர்களும், அதிகாரிகளும், பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனங்களை சந்தைப்படுத்தவில்லை. மோசமான / போலி முன்னெடுப்புகளை அமலாக்கவில்லை. அரசியல்வாதிகளுக்கும், உயர் கல்வியாளர்களுக்கும் இடையே அவரவர் தளங்களின் எல்லைகள் பற்றிய அறிவார்ந்த, கண்ணியமான உறவுகள் இருந்தன.
இதற்கு உதாரணமாக, அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் அவர்களுக்கும் சென்னை பல்கலைக்கழகத்தில் 27 ஆண்டுகள் துணைவேந்தராக இருந்து உலகத்தர உயர்கல்வி முறைமைகளை தமிழ்நாட்டில் சாத்தியப்படுத்திய சர் லட்சுமண சுவாமிக்கும் இருந்த அறிவார்ந்த, கண்ணியமான உறவை கூறலாம். சென்னை பல்கலைக்கழகத்தில் அவர் காலத்தில் பணியாற்றிய எனது மூத்த பேராசிரியர்கள் சொல்லக் கேட்டது, இன்று நாம் கனவிலும் நினைக்க இயலாத சம்பவங்கள். முதல்வர் காமராஜர் அவர்களின் நெருங்கிய நண்பர் தனது மகனுக்கு சென்னை மாநிலக் கல்லூரியில் அரசியல்துறை பேராசிரியர் வேலைக் கேட்டு சிபாரிசுக்கு வருகிறார். முதல்வர் காமராஜர் அவரிடம் சொல்லியது: “சென்னை மாநிலக்கல்லூரி பேராசிரியர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கட்டுப்பாட்டில் வருவது. முதல்வராகிய நான் அதில் தலையிட முடியாது. எனது நெருங்கிய நண்பர் சர் லட்சுமண சுவாமி சென்னை பல்கலையில் துணைவேந்தராக இருக்கிறார். அவரது பல்கலையில் அந்தத் துறை பதவி காலியாக இருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம்”.
1962 இந்திய - சீன போர் நிவாரண நிதி சேகரிக்க சென்னை பல்கலை விடுதி மாணவர்கள், முதல்வர் காமராஜர் அவர்களை விடுதிக்கு அழைத்தார்கள். சர் லட்சுமண சுவாமி, சென்னை பல்கலையில் துணைவேந்தராக இருந்த காலத்தின் எழுதப்படாத விதி: எந்த அரசியல்வாதியும் துணைவேந்தரின் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழகத்துக்கு உள்ளே வரக்கூடாது. துணைவேந்தரின் செயலர் இதை மாணவர்களிடம் சுட்டிக்காட்டி, ‘துணைவேந்தரின் கோபத்துக்கு நீங்கள் ஆளாக நேரும். உடனே முதல்வர் காமராஜர் அவர்களின் செயலரிடம் சொல்லி அழைப்பை ரத்து செய்ய சொல்லுங்கள்’ என்றார். மாணவர்கள், முதல்வர் அலுவலகம் சென்றவுடன் முதல்வர் காமராஜர் அவர்களை பேச அழைத்தார்கள். தகவலைக் கேட்டவுடன், மாணவர்களிடம் முதல்வர் காமராஜர் சொல்லியதாவது, ‘உங்களது துணைவேந்தர் சொல்வது சரியே. அவர் சொல்லை நீங்கள் மதிக்க வேண்டும். நானும் மதிக்க வேண்டும். நாளை உங்கள் விடுதிக்கு வெளியே நிற்கிறேன். நீங்கள் இந்திய - சீன போர் நிவாரண நிதியை வழங்கலாம்’ என்றார். அவர் அவ்வாறே செய்தார்.
அதே தமிழ்நாட்டில், இன்றைய பத்திரிகை செய்தி கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஜந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பதாகும். இச்செய்தி தமிழகத்தில் துணைவேந்தர் நியமனங்கள், கடந்த 25 வருடங்களாக எத்தகைய சீரழிவை எட்டியுள்ளன என்பதை சுட்டிக்காட்டுவதாகும்.
இந்த செய்தியில் மறைந்திருக்கும் வினா: லட்சுமண சுவாமியும், மு.வா-வும், மால்கம் ஆதிசேஷய்யாவும் உலகத்தர துணைவேந்தர்களாக மட்டும் இன்றி, தாங்கள் தலைமை வகித்த பல்கலைக்கழகங்களையும் உலகத்தரத்துக்கு உயர்த்திய தமிழ்நாட்டில், இந்த பத்திரிகை செய்தியை சாத்தியப்படுத்தியது ராதாகிருஷ்ணன்கள் மட்டும்தானா? கடந்த 20 வருடங்களாக உயர்கல்வித்துறையை நிர்வாகம் செய்த அரசியல்வாதிகளுக்கு இந்த சீரழிவில் சம்பந்தம் இல்லையா? இவர் மட்டும்தான் குற்றவாளியா? மற்ற குற்றவாளிகள் இவர் போல் பத்திரிகை செய்தி ஆவார்களா?
தமிழகத்தில் எப்போது இந்தச் சீரழிவு ஆரம்பித்தது? 27 வருடங்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சர் லட்சுமண சுவாமி அவர்களைத் தேர்ந்தெடுத்தது / நியமனம் செய்தது அன்றைய அரசு அல்ல; அமைச்சர்கள் / அரசியல் இடைத்தரகர்கள் அல்ல; அன்று ‘தேடல் குழு’ கிடையாது. சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்கள்தான் அவரை மறுபடியும், மறுபடியும் தேர்ந்தெடுத்தார்கள். அவரது தகுதி மற்றும் அவர் சென்னை பல்கலைக்கழகத்தை எவ்வாறு கட்டற்ற அறிவாற்றல் தளமாக மாற்றினார் என்பதுதான் அவர்களது மதிப்பீட்டு காரணியாக இருந்தது. அவரது கடைசி நியமனக் காலத்தில், தமிழக அரசு விதிகளை மாற்றி சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் குறுக்கீடு செய்யும்போது, மேற்குறிப்பிட்ட சீரழிவு ஆரம்பித்தது.
ஆனால், 1980களின் இறுதிவரை துணைவேந்தர் நியமனங்களில் பெரிய அளவில் அரசியல் மற்றும் பணம் சார் குறுக்கீடுகள் இல்லை என்று அக்கால பேராசிரியர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்கள் கருத்தில் 1990கள் அரசியல் குறுக்கீடுகள் வேர் கொண்ட காலம். 2000கள் அரசியல் மற்றும் பணம் சார் குறுக்கீடுகள் மட்டற்ற அளவில் துணைவேந்தர் நியமனங்களில் விளையாடி தமிழகப் பல்கலைக்கழகங்களை கீழ்நிலைப் பாதையில் தள்ளிய காலம்.
தமிழகப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் சங்கங்களும், முன்னாள் துணைவேந்தர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் இச்சீர்கேடுகளை எதிர்த்து நீதிமன்றங்களை நாடுவதும், பொது வெளியில் செயல்படுவதும் பாராட்டுக்குரியது. ஆனால், இதுவரை எந்த பலனையும் அவர்களின் எதிர்வினைகள் கொடுக்கவில்லை என்பது வேதனையளிக்கும் விஷயம்.
மேற்குறிப்பிட்ட விஷயங்களுடன், நாம் இணைத்து பார்க்க வேண்டியது கடந்த 30 வருடங்களாக தமிழகத்தில் வேர் கொண்ட உயர்கல்வி தனியார் மயமாக்கல், அரசு பல்கலைக்கழகங்களை, அரசு மருத்துவமனைகள் எதிர் கொண்ட பாதையில் பயணிக்க வைக்கும் செயல். நம்மில் பலர் மனங்களில் விதைக்கப்பட்ட / விதைக்கப்படும் கருத்தியல், “தனியார் மருத்துவமனைகள் தரமானவை, சிறந்தவை. அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கானவை, தரமற்றவை” என்பதாகும். உயர்கல்வி தனியார் மயமாக்கல் அரசின் கொள்கைகளாலும், ஊடகங்களின் விளம்பர பங்களிப்பினாலும் வளர்த்தெடுக்கப்பட்டதால், இன்று பொதுமக்கள் கருத்து வளர்ச்சியில் இத்தகைய தவறான கருத்துகள் வேரூன்றியுள்ளன. அரசு பல்கலைக்கழகங்களும் இத்தகைய தவறான கருத்தியலுக்குப் பலியாகும் காலம் ஆரம்பித்து விட்டது எனலாம். “தனியார் பல்கலைக்கழகங்கள் சிறந்தவை. அரசு பல்கலைக்கழகங்கள் ஏழைகளுக்கானவை, தரமற்றவை” என்ற கருத்தியல் ஊடகங்களாலும், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விளம்பரப்படுத்தும் தர வரிசை பட்டியல் ‘சாதனைகளாலும்’ ஒவ்வொரு கல்வியாண்டின் ஆரம்பத்திலும் மாணவர்கள் / பெற்றோர்கள் மனங்களில் விதைக்கப்படுவது நாம் அறிந்தது.
தவறான துணைவேந்தர்களின் நியமனங்கள் பல்கலைக்கழகங்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பவை. பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் அல்ல. பள்ளிகள் அல்ல. பல்கலைக்கழகம் என்பது இரண்டாயிரம் வருட பாரம்பரியம் கொண்ட அருமையான கருத்தியல். இந்த கருத்தியல் பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்திலும், காஞ்சிப் பல்கலையிலும், தக்ஸிலா பல்கலையிலும் கட்டற்ற அறிவாற்றல் தளங்களை உருவாக்கியது. கட்டற்ற அறிவாற்றல் தளங்கள்தான் ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் வசிக்கும் சமூக கூட்டத்தினை அறிவார்ந்த சமூகமாக மாற்றும். அந்த நாட்டை, மற்ற நாடுகளின் பார்வையில் வல்லமை மிக்க, வளர்ச்சி பாதையில் செல்லும் நாடாக மாற்றும். பல்கலைக்கழகங்கள் கட்டற்ற அறிவாற்றல் தளங்களாக செயல்படும்போது அவை அச்சமூகங்களின் மனசாட்சியாகவும், அவற்றை நெறிப்படுத்தும் காரணிகளாகவும் மாறுகின்றன. உலகம் போற்றிய சிறந்த தத்துவ அறிஞர்கள், விஞ்ஞானிகள், சமூகவியல் அறிஞர்கள் 1960-70கள் வரை பல இந்தியப் பல்கலைக்கழகங்களில், அவை கட்டற்ற அறிவாற்றல் தளங்களாக இருந்தபோது இருந்தார்கள் என்பது வியப்பான விஷயம் அல்ல; நாம் மறந்த வரலாறு. புது டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்த மரபின் எச்சமாக பல சிக்கல்களுக்கு இடையே இயங்குவது வியப்புதான்.
தவறான / தகுதியில்லாத பல்கலைக்கழகத்தின் கருத்தியல் பற்றிய புரிதல் அற்ற நபர்கள் துணைவேந்தர்களை தேர்ந்தேடுக்கும் தேடல் குழுக்களில் இடம் பெறும்போதும் அல்லது அத்தகைய நபர்கள் துணைவேந்தர்களாக பல்கலைக்கழகங்களில் நுழையும்போதும், மேற்குறிப்பிட்ட கருத்தியல் புதைக்குழிக்குள் தள்ளப்படுகிறது. உயர்கல்வி சார் துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் இந்த கருத்தியலை வளர்த்தெடுக்காமல், பல்கலைக்கழகங்களைப் பட்டங்களை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகளாக கடந்த 50 வருடங்களாக வளர்த்தெடுத்து வந்திருப்பது கண்கூடு. இன்றைய காலகட்டத்தில் பல்கலைக்கழகங்களில் கட்டற்ற அறிவாற்றல் தளங்களை உருவாக்கும் பணி முடக்கப்பட்டு, அவை உயர்நிலை கல்லூரிகளாகவும் / கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அமைப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. இத்தகைய மாற்றத்தை துரிதப்படுத்த நியமிக்கப்படுபவர்கள்தான் தரமற்ற துணைவேந்தர்கள்.
இன்றைய தேவை: மேற்குறிப்பிட்ட கருத்தியல் சார்ந்து நமது பல்கலைக்கழகங்களை, தரமான இந்தியப் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதுதான். அவற்றை உலகத்தர பல்கலைக்கழகங்களாக மாற்ற விழைவது நகைப்புக்குரியது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
கட்டுரையாளர் குறிப்பு: கோபாலன் இரவீந்திரன், MA.,MPhil.,PhD.,
டிஜிட்டல் கலாச்சாரங்கள், திரைப்படம் கலாச்சாரங்கள் மற்றும் டையாஸ்போரிக் கலாச்சாரங்கள் துறை தலைவர் மற்றும்
சென்னை பல்கலைக்கழக ஆசிரியப் பேரவையின் பொது செயலாளர்.

மேலும்:

Friday, November 4, 2016

ஆமைகளா? மீனவனா?

ஆமைகளா? மீனவனா?

வெள்ளி, 4 நவ 2016

பொதுவாக கடலிலே வாழும் உயிரினங்களை பற்றி, நிலத்திலே வாழும் மனிதர்களுக்கு நேரடி அனுபவமும் கிடையாது. அதனால் அது பற்றிய அறிவு பற்றாக்குறையுடனேயே இருக்கும். மலைகளில் வாழும் உயிரினங்களை பற்றிக் கூட சமவெளியில் வாழும் மனிதர்களுக்கு போதுமான அறிவு இருப்பதில்லை. இது இயல்பானதே. அப்படி இருக்கையில், நிலம் சார்ந்த உலகம் என்பது வேறு, கடல் சார்ந்த உலகம் என்பது வேறு. இதுவே உண்மையில் நிலவும் நிலைமை.
இதில் பல்வேறு காரணங்களால் நிலம் சார்ந்த உலகத்திலிருந்துதான், அரசாங்கமோ, அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ, ஊடகத்தாரோ, வருகிறார்கள். அவர்களுக்கு கடல் சார்ந்த உலகம் பற்றி, யாராவது ஆராய்ச்சியாளர்கள் கூறுவதையே கேட்கின்றனர். அதிலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது எழுதப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையே தங்களுக்கான ஆதாரமாக எடுத்துக் கொண்டு முடிவுகளை செய்கின்றனர். எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும், கடலைப் பற்றியும், கடலிலே வாழும் உயிரினங்களைப் பற்றியும், கடலிலே நிலவும் நீரோட்டங்களைப் பற்றியும், வருகின்ற புயல், காற்று, மின்னல், மழை ஆகியவற்றைப் பற்றியும், நேரடியாகவும், அனுபவித்த காரணத்தினாலும், மீனவர்களுக்கு அதிகமாகத் தெரியும் எனபதை நிலம் சார்ந்த அறிவு ஜீவிகள் ஏற்றுக் கொள்வதேயில்லை. இப்படி ஒரு சிக்கலை தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றம் எதிர்கொள்ள, அதுவே இன்று 26 மீனவக் கிராமங்களின் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
செப்டம்பர் 27 நாள், தமிழக அரசு ஒரு உத்தரவு போட்டுள்ளது. அதன்படி, வருகிற ஜனவரி 1 தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை, சென்னை நேப்பியர் பலம் முதல் திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் வரையிலும், கொட்டிவாக்கம் முதல் கோவளம் வரையிலும் கடலிலே மீன்பிடிக்கும் மீனவர்கள், விசைப்படகையோ, எந்திரம் பொருத்தப்பட்ட எந்த படகையோ, 5 கடல் மைல்கள் (நாட்டிங்கல் மைல்) வரை மீன் பிடிக்கத் தடை செய்யப்படுகிறது. இது உள்ளபடியே, விசைப்படகுகளையம், கண்ணாடி இழைப்படகுகளான பைபர் படகுகளையும் தடை செய்துவிடும். அநேகமாக இப்போது அனைத்து மீனவர்களும் சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் கட்டுமரங்களுக்குப் பதில் கண்ணாடி இழைப் படகுகளைத்தான் பயன்படுத்துகின்றனர். ஆமைகளுக்கு முட்டையிடும் காலம் என்பதிலோ, இனப் பெருக்க காலம் என்பதிலோ, அதற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதிலோ, ஆமைகள் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உதவக் கூடியவை என்பதிலோ, மீனவர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆகவே ஆமைகளைப் பாதுகாப்பதில் மீனவர்களும் அக்கறையோடு இருக்கிறார்கள்.
இத்தகைய நிலையில், சுப்ரஜா என்பவர் நடத்தும் ட்ரீ பவுண்டஷன் ‘ஆமைகளைக் காப்பதில்’ அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அவர்களது முயற்சியில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்த வழக்கில், தலைமை நீதியரசர், தானாகவே அக்கறையுடன், ஒரு வழக்கறிஞரை நியமித்து, அரசிடம் ஆமைகளைப் பாதுகாக்க என்ன செய்யப் போகிறீர்கள் என வினவ, காத்திருந்ததுபோல, அரசும் மேற்கண்ட ‘தடையை’ அறிவித்துள்ளது. அதற்காக ஒடிசா அரசாங்கம் தங்களது கடலோரத்தில் ஆமையாக்களைப் பாதுகாக்க மீன்பிடித் தடையை அறிவித்துள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார்கள். ஒடிசா கடற்கரை வேறு, சென்னை கடற்கரை வேறு என்பது இந்த நிலம் சார்ந்த அறிவாளிகளுக்குத் தெரியுமா என கடல் சார்ந்த பழங்குடிகளான மீனவர்கள் கேட்கிறார்கள். ஒடிசா கடற்கரையில் ஆமைகளின் நடமாட்டம் மிக அதிகம். இங்கே சென்னை கடற்கரையில் வந்து பாருங்கள், ஆமைகள் அதிகமாக இயல்பிலேயே இல்லை என்கின்றனர் அந்த மீனவர்கள். அதுமட்டுமின்றி, நேப்பியர் பாலம் முதல் திருவான்மியூர் வரையும், கொட்டிவாக்கம் முதல் கோவளம் வரையும் மீனவர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே ‘தடை’ அறிவித்த தமிழக அரசு, ஏன் செம்மஞ்சேரி முதல் கடப்பாக்கம் வரை எந்த தடையும் யாருக்கும் விதிக்கவில்லை என்று கேட்கின்றனர். ஏன் என்றால் அந்தப் பகுதிகளில் மீனவர் குப்பங்கள் இல்லை. மாறாக பெரும் பணக்காரர்களுடைய வீடுகள், பொழுதுபோக்கு நிறுவனகளும் உள்ளன என்றும் அவற்றில் அரசு அதிகாரிகள் உள்ளே நுழைந்து தடங்கல் செய்ய விரும்பவிலை என்றும் ஊழல் குற்றச்சாட்டுகளும் கூறுகின்றனர்.
மீனவர்கள் தரப்பில், தாங்கள் இயற்கையோடு இயைந்து வாழும் பழங்குடிகள் என்றும், அன்றாடம் கடலுக்குச் சென்று இயற்கையை எதிர்த்து போராடி, இயற்கையுடனேயே உறவாடி, மீன்களை வேட்டையாடி, உலகுக்கே உணவு தருகின்ற கடல்சார்ந்த உலகை சேர்ந்தவர்கள் என்றும், ஆகவே ஆமைகளை பாதுகாக்கும் மனோபாவம், இயற்கையாகவே தங்களுக்கு நிலம் சார்ந்த உலகத்தவர்களை விட அதிகமாகவே உண்டு என்றும், விலங்குகளா? மனிதர்களா? என்ற கேள்வியில், மனிதர்களைக் காப்பதில், அவர்களது வாழ்வாதராத்தை பாதுகாப்பதில், நிலம் சார்ந்த உலகத்தார் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும் மீனவர்கள் கோருகின்றனர். நிலம் சார்ந்த உலகத்து ஆர்வலர்களோ, அறிவு ஜீவிகளோ, அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றத்தாரோ தங்களது “ஆமைகளை பாதுகாக்கும் ஆர்வத்தை, கடலிலே சென்னைக்கு கடற்கரையோரம் எப்படிச் சூழல் இருக்கிறது என்று ஆராய்ந்து, கடல் சார் பழங்குடி மீனவர்களிடம் கருத்துக்கேட்டு, பிறகு முடிவுகளை எடுப்பதுதான் சரியானது?” மாறாக யாரோ ஒடிசா மாநிலத்தில் போட்டுள்ள ஒரு தடையை எடுத்துக் கொண்டுவந்து, இங்கே அதை அப்படியே எந்திர ரீதியாகப் பொறுத்த முயல்கிறார்கள் என்று மீனவர் பிரதிநிதிகள் கூறுகிறார்கள். விசைப்படகுகள் உள்ள பிராப்பளர்களில் அடிபட்டு ஆமைகள் இறந்து விடுவதாகவும், அதற்காக விசைப்படகுகளில் உள்ள பிராப்பளர்களில் பாதுகாப்பு கவசங்கள் இருக்க வேண்டும் என்றும் தான் தாங்கள் கேட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆனால், அரசு ஏன் இதைப் பயன்படுத்தி மீன்பிடித் தடை போடுகிறது? அந்த தடை காலத்தில் தாங்கள் ஏற்கனவே மாநகராட்சி மூலம், சட்ட விரோதமாக கொண்டுவர விரும்பும், பிற மாநில மீன்களின் விற்பனைக்கு கூடங்களை அடையாறு ஆற்றுப்பகுதியில் நிறுவ, மறைமுகத் திட்டமா? என்று மீனவர்கள் சந்தேகிக்கிறார்கள்.
யார் உங்களுக்கு ஆராய்ச்சி செய்து கூறினார்கள் என்று கேட்டால், சி.எம்.எஃப்.ஆர்.ஐ. என்ற ‘கடலோர மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்’ கூறியுள்ளது என்கிறார்கள். இதே நிறுவனம் கடலுக்கு அடியில் தேங்கிக் கிடக்கும், பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிக் கூறவில்லையா? என்று மீனவர்கள் கேட்கிறார்கள். பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக கடலிலே சேர்ந்ததால்தான், ஆமைகள் அவ்வப்போது மேலே வந்து மூச்சு விட்டுச் செல்பவை, கடலுக்கு கீழே வாழ் முடியாமல், மேலே மிதக்கத் தொடக்கி விட்டன என்றும் மீனவர்கள் கூறுகிறார்கள். அதையெல்லாம் விடுத்து, மீனவர்களின் வாழ்வாதாரம் மீது கை வைக்கிறீர்கள்? என்பதே அவர்களது கேள்வி. இதே கடலோர மீன்வள ஆராய்ச்சி நிறுவனம [சி.எம்.எஃப்.ஆர்.ஐ.] தமிழக அரசு கொண்டுவந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை எதிர்த்தபோது, அரசும் அதிகாரிகளும் செவி மடுத்தார்களா? என்றும் மீனவர்கள் கேட்கிறார்கள். அப்போது, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தால் உப்புத் தண்ணீரை, நல்ல தண்ணீராக்க, உப்புக்கழிவுகளை அடர்த்தியாக மீண்டும் கடலுக்குள் கொட்டுவது அதிகமான அளவுக்கு, கடலின் சுற்றுச்சூழலைக் கெடுத்து, கடல் வாழ் உயிரினங்களின் அழிவை ஏற்படுத்தாதா? என்று ஏன் இதே நிலம் சார்ந்த ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும், நீதிமன்றத்தாரும் கேட்கவில்லை எனபதே மீனவர்களின் ஆதங்கம்.
ஆகவே, நவம்பர் 1ஆம் தேதி, மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் கடற்கரையிலே கூடிய 25 கிராமத்து மீனவர்கள், 300 பேர், இன்று (நவம்பர் 4ஆம் தேதி), திருவல்லிக்கேணி மாட்டங்குப்பம் தொடக்கி கோவளம் வரை உள்ள மீனவக் கிராமங்களில், கறுப்புக்கொடி ஏற்றி பட்டினிப் போராட்டம் நடத்தி, தமிழக அரசின் மீன் பிடி தடைக்கு எதிர்ப்பு காட்ட இருக்கிறார்கள். வருகிற நவம்பர் 7ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் வர இருக்கின்ற இந்த வழக்கின் அடுத்த விசாரணையில் தமிழக அரசு, தடையை நீக்கிக் கொள்ளாவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்துள்ளார்.

Friday, October 21, 2016

இராணுவக் குற்றங்களுக்கு விசாரணை உண்டு! தண்டனை இல்லை –


கோத்தா, மஹிந்த தரப்பு இராணுவப் புரட்சி வரை செல்லலாம்! இராணுவக் குற்றங்களுக்கு விசாரணை உண்டு! தண்டனை இல்லை – ராஜித



rajithaநல்லாட்சியை பலப்படுத்த அரசு தடுக்கும் முயற்சிகளில் கோபமடையும் கோத்தாபய மற்றும் மஹிந்த தரப்பினர் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்த இராணுவப்புரட்சி வரையில் செல்லலாம் என அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் அவருக்கு விசுவாசமான இராணுவத்தினர் இன்றும் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரித்து பாதயாதிரைகளையும் பிரச்சாரங்களை செய்துகொண்டு உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவத்தினருக்கு எதிராக நாம் செயற்படுகின்றோம், இராணுவத்தை நாம் தண்டிக்க முயற்சித்து வருகின்றோம். இராணுவத்தினரை சிறைகளில் அடைக்கப்போகின்றோம், சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்போகின்றோம் என்ற தவறான கருத்துகளை மஹிந்த ராஜபக் ஷவும் கோத்தபாய ராஜபக் ஷவும் நாட்டில் பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல் குற்றம் செய்த பௌத்த பிக்குவை சிறையில் அடைத்தால் நாம் பௌத்த மதத்தையும் சிங்கள இனத்தையும் அழிக்க முயற்சிப்பதாக மஹிந்த தரப்பு பொய்யான கதைகளை பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.
தமது அரசியல் நலனுக்காக இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதாகவும் எனினும் இராணுவம் செய்த குற்றங்களுக்கு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் அவர்களை தண்டிக்க இடமளிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Monday, October 17, 2016

தயாராகி விட்டது இலங்கையின் கடுமையான பயபகரவாத எதிர்ப்பு சட்டம். -- இலங்கை அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துவிட்டது.

தயாராகி விட்டது இலங்கையின் கடுமையான பயபகரவாத எதிர்ப்பு சட்டம்.
---------------------------------------------------------------------------------------------------------------------
   இலங்கை அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துவிட்டது.
   ---------------------------------------------------------------------------------
     ஒரு சட்ட முன்வரைவை உருவாக்கி இலங்கை அரசு அதை அவர்களுக்குள் "ரகசிய விவாதத்திற்கு" என்று சுற்றுக்கு விட்டுள்ளது. அந்த சட்ட முன்வரைவை, இந்தியாவிற்கு சமீபத்தில் வந்த இலங்கை  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் , இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேனவும் கொண்டுவந்து காட்டி தங்களது இந்திய அரசு ஆளும் நண்பர்களிடம் ஒப்புதல் வாங்கியுள்ளனர். அந்த விரைவு நகல் மிகவும் கொடூரமான பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது. இந்திய அரசு கொண்டுவந்த "தேசிய பாதுகாப்பு சட்டம், உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் என்ற மிசா, பயங்கரவாதம்  மற்றும் கைதுக்கான சட்டம் என்ற தடா,,அராஜகங்களை தடுக்கும் சட்டம் என்ற பொடா", ஆகியவற்றின் "ஒட்டுமொத்த " வடிவமாக இருக்கிறது. 

"இலங்கையின் முன்வைக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சட்ட 
----------------------------------------------------------------------------------------------------------------வடிவமும், கொள்கையும்", என்று தலைப்பிடப்பட்டு,, அது எழுதப்பட்டுளள்து.
--------------------------------------------
      1] பயங்கரவாததிலிருந்து  தேசிய பாதுகாப்பிற்கும், மக்கள் பாதுகாப்பிற்குமான சட்டம்.
      2] பயங்கரவாதத்தை தடுப்பதும்,, அது சம்பந்தப்பட்ட நடவடிக்களை தடுப்பதற்கான சட்டம்.
       3] பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்தும், அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளிலிருந்து தடுப்பதற்கான சட்டம்.
        4] இலங்கையின் நிலத்திலிருந்து,பயங்கரவாத  தாக்குதகளை  மற்ற நாடுகளின் பகுதிகள் மீது நடத்த திட்டமிடலை தடுப்பது,
         6] பயங்கரவாத செயல்களில் மற்றும் சம்பந்தப்பட்ட செயல்களில்  ஈடுபடுவோரை, அடையாளம் காணவும்,கைது செய்யவும்,காவலில் வைக்கவம்,புலனாய்வு செய்யவும்,விசாரணை நடத்தவும், தணடனை வழங்கவும்,இந்த சட்டம் வழி வகை செய்கிறது. 
        7] சம்பந்தப்பட்ட செயல்களை செய்ப்பவர்கள் , 
            முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட்டாலும்,
             இலங்கைக்கு உள்ளேயோ, கடல்நீரிலோ,ஈடுபட்டாலும்,
             இலங்கையின் வான்வெளியில் ஈடுபட்டாலும்,
              இலங்கையில் பதிவு செய்யப்பட அல்லது இலங்கைக்கு சொந்தமான     அல்லது இலங்கை பயன்படுத்தும்   விமானத்திற்குள்ளோ, கப்பலுக்குள்ளோ, 
              நடந்தாலும் இந்த சட்டம் பயன்படும்.
         இலங்கையின் தூதரகத்திலோ, தூதர்களின் இல்லத்திலோ, தூதரகத் தலைவரின் இருப்பிடத்திலோ,நடந்தாலும் இந்தச் சட்டம் பாயும்.

       இப்படி ஒரு சட்ட வரைவு  நகலை தயார் செய்திருப்பது, எழுகின்ற தமிழீழ கோரிக்கைகளின் "அரசியல் போராட்டங்களை" ஒடுக்கவே என்பதை மனித  உரிமை அமைப்புகளும், ஆர்வலர்களும், அரசியல் செயல்பாட்டாளர்களும்,ஊடகவியலாளர்களும்  கணிக்கிறார்கள். இத்தகைய ஏற்பாட்டிற்கு இந்திய நடுவண் அரசு முழு ஒத்துழைப்பாக இருக்கிறது எனபதுதான் வேதனையான செய்தி.




இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்!


இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்!

செவ்வாய், 18 அக் 2016

ஒரு சட்ட முன்வரைவை உருவாக்கி இலங்கை அரசு அதை அவர்களுக்குள் ரகசிய விவாதத்துக்கு என்று சுற்றுக்கு விட்டுள்ளது. அந்த சட்ட முன்வரைவை, இந்தியாவுக்கு சமீபத்தில் வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும், இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேனாவும் கொண்டு வந்து காட்டி, தங்களது இந்திய அரசு ஆளும் நண்பர்களிடம் ஒப்புதல் வாங்கியுள்ளனர். அந்த வரைவு நகல் மிகவும் கொடூரமான பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது. இந்திய அரசு கொண்டு வந்த, தேசிய பாதுகாப்பு சட்டம், உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் என்ற மிசா, பயங்கரவாதம் மற்றும் கைதுக்கான சட்டம் என்ற தடா, அராஜகங்களை தடுக்கும் சட்டம் என்ற பொடா ஆகியவற்றின் ‘ஒட்டுமொத்த’ வடிவமாக இருக்கிறது.
‘இலங்கையின் முன்வைக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சட்ட வடிவமும், கொள்கையும்’ என்று தலைப்பிடப்பட்டு அது எழுதப்பட்டுள்ளது.
1. பயங்கரவாதத்திலிருந்து தேசிய பாதுகாப்புக்கும் மக்கள் பாதுகாப்புக்குமான சட்டம்.
2. பயங்கரவாதத்தை தடுப்பதும் அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை தடுப்பதற்கான சட்டம்.
3. பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்தும், அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளிலிருந்தும் தடுப்பதற்கான சட்டம்.
4. இலங்கையின் நிலத்திலிருந்து, பயங்கரவாதத் தாக்குதல்களை மற்ற நாடுகளின் பகுதிகள் மீது நடத்த திட்டமிடலை தடுப்பது...
பயங்கரவாத செயல்களில் மற்றும் சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காணவும், கைது செய்யவும், காவலில் வைக்கவும், புலனாய்வு செய்யவும், விசாரணை நடத்தவும், தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வழி வகை செய்கிறது.
சம்பந்தப்பட்ட செயல்களை செய்பவர்கள், முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட்டாலும், இலங்கைக்கு உள்ளேயோ, கடல்நீரிலோ ஈடுபட்டாலும், இலங்கையின் வான்வெளியில் ஈடுபட்டாலும், இலங்கையில் பதிவு செய்யப்பட அல்லது இலங்கைக்குச் சொந்தமான அல்லது இலங்கை பயன்படுத்தும் விமானத்துக்குள்ளோ, கப்பலுக்குள்ளோ நடந்தாலும் இந்த சட்டம் பயன்படும்.
இலங்கையின் தூதரகத்திலோ, தூதர்களின் இல்லத்திலோ, தூதரகத் தலைவரின் இருப்பிடத்திலோ நடந்தாலும் இந்தச் சட்டம் பாயும்.
இப்படி ஒரு சட்ட வரைவு நகலை தயார் செய்திருப்பது, எழுகின்ற தமிழீழ கோரிக்கைகளின் ‘அரசியல் போராட்டங்களை’ ஒடுக்கவே என்பதை மனித உரிமை அமைப்புகளும், ஆர்வலர்களும், அரசியல் செயல்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும் கணிக்கிறார்கள். இத்தகைய ஏற்பாட்டுக்கு இந்திய நடுவண் அரசு முழு ஒத்துழைப்பாக இருக்கிறது என்பதுதான் வேதனையான செய்தி.

Friday, October 14, 2016

Shiva sena in Sri Lanka???? New constitution for Sri Lanka?

இலங்கை புதிய சட்டத்தில் பவுத்தம் உயர்ந்ததா? சிவசேனா அங்கும் உதயம்!

வெள்ளி, 14 அக் 2016

இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக-வுடன் கூட்டணியில் இருந்ததும் வெளியே வந்ததும், தேர்தல் அரசியல் என்றால் இந்து மத உணர்வுகளை எழுப்பி முஸ்லிம்களுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் பிரச்னைகளைக் கிளப்புவது சிவசேனா கட்சியினர்தான் என்பது ஊரறிந்த விஷயம். அப்படிப்பட்ட சிவசேனா கட்சியை, இலங்கையில் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் தமிழர் வாழும் பகுதிகளிலும் நிறுத்துவதற்கு ஒரு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது என்பது நல்லதா? கெட்டதா?
சென்னையில் பல ஆண்டுகளாக, ‘காந்தளகம்’ என்ற பதிப்பகத்தை நடத்திவரும் சச்சிதானந்தம் தான் அந்த முயற்சியை செய்கிறார். சைவ சிந்தாந்த சிந்தனையாளரும், சிறந்த தமிழ் ஈழப் பற்றாளருமான, அண்ணா என்று அனைவராலும் அழைக்கப்படும் ‘மறவன்புலவு சச்சி அண்ணன்தான்’ இத்தகைய முயற்சியை செய்கிறார். ஈழத்தமிழர்கள் பெரும்பாலும் இந்துகள் என்ற சூழலில், ‘சைவம்’ தான் அதிகமாக தமிழர்கள் மத்தியில் பின்பற்றப்படுகிறது என்ற உண்மை இருப்பதனால், இந்து மதத்தை பாதுகாக்கத்தான் இந்த அமைப்புக்கு ‘சிவசேனா’ என்று பெயரிட்டதாகக் கூறுகிறார். மத மாற்றத்தை தடுப்பதற்காகப் பாடுபடுவோம் என்கிறார். இவரது முயற்சிக்கு ஆதரவாக மட்டுநகர் எம்.பி. யோகேஸ்வரன் இருப்பதாக கூறப்படுகிறது. யோகேஸ்வரன் எப்போதுமே நெற்றியில் திருநீறு பட்டையுடன் வேட்டி அணிந்து காணப்படுவார். முஸ்லிம்களுக்கு ஈராக், ஈராக் நாடுகளிலிருந்தும், கிறிஸ்துவர்களுக்கு மேற்கத்திய நாடுகளிலிருந்தும் நிதி வருவதாகவும், இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பாஜக ஆகிய இந்து அமைப்புகள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் சச்சிதானந்தம் கூறியுள்ளார். இது ஈழத்தமிழர்களின் மதங்கள் தாண்டிய ஒற்றுமையை உடைக்காதா? என்ற கேள்வி எழுகிறது. அதேநேரம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசாங்கம், ஒரு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கும் இயக்கப்போக்கில் இருக்கிறோம் என்று கூறி வருகிறது. அந்த சட்டத்தில், இலங்கை ஒரு ‘பவுத்த நாடாக அறிவிக்கப்படுமா? அல்லது ஒரு மதச் சார்பற்ற நாடாக அறிவிக்கப்படுமா?’ என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. ‘பவுத்தத்துக்கு முதல் இடம் கொடுக்கப்படும்’ என்று பிரதமர் ரணில் கூறியுள்ளார். ஏற்கனவே தமிழர்களின் சைவ அடையாளங்களை அழித்து, சிங்களர்களின் பவுத்த அடையாளங்களை ஏற்படுத்தும் ‘ஆக்கிரமிப்பு’ வேலையை சிங்கள, பவுத்த பேரினவாத அரசும், சிங்கள ராணுவமும் தமிழர் பகுதிகளில் செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இத்தகைய சூழலில், ‘பொது பால சேனா’ என்ற புத்த பிக்குகளின் அமைப்பு, தமிழர்களுக்கு எதிராக குறிப்பாக, சைவத் தமிழர், இஸ்லாமியத் தமிழர், கிறிஸ்துவத் தமிழர் ஆகியோரின் வழிபாட்டுத் தளங்களைச் சிதைக்கும் வேலைகளை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது. ஈழத்து தமிழர்களை, இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டுக்கு ஓடுங்கள் என்று அந்த பொது பால சேனாவின் புத்த பிக்குகள் சமீபத்தில் கூறிவருகிறார்கள். கூடுதலாக, புதிதாக வருகின்ற அரசியல் சட்டம் ‘பவுத்தத்துக்கு முதலிடம்’ என்று கூறுமானால், அதுவே, ‘சிங்கள மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் என்ற கொள்கை வந்தபோதுதான், ஈழத்து தமிழர்களின் விடுதலைப் போர் தொடங்கியது’ என்ற கருத்தும் பேசப்படுகிறது. அப்படி ஒரு மோதலை புதிய ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்கின்றார்களோ? என்ற கேள்வி எழுகிறது. இத்தகைய சூழலில் இந்து தமிழர்கள், கிறிஸ்துவத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் மதமற்ற தமிழர்கள், நாத்திகத் தமிழர்கள் என அனைவரும் ஒரே அணியில் தமிழர்களாக இணைந்து நின்று சிங்கள, பவுத்த பேரினவாதத் தாக்குதலை எதிர்த்து தமிழர்களைப் பாதுகாக்க பணியாற்ற வேண்டுமா? சைவ அடையாளத்தை மட்டுமே காட்டி, இந்து மத ஒற்றுமையை ஏற்படுத்தி, தமிழர்களின் ஒற்றுமையை உடைக்க வேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இத்தகைய ஒரு வேலையைச் செய்வது, தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க விரும்பும், வெளிச்சக்திகளான இன அழிப்பு போரை நடத்திய சக்திகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதும், அத்தகைய வெளிச்ச சக்திகள் இதனை ஊக்குவிப்பார்கள் என்பதும் தெளிவாகப் புரிகிறது.

Thursday, July 7, 2016

சுவாதி படுகொலையும், படிப்பினைகளும்.

சுவாதி  படுகொலையும், படிப்பினைகளும்.
------------------------------------------------------------------
சுவாதி படுகொலையில், இரண்டு மையங்களைச் சுற்றி, விவாதங்கள் சூடேறி வருகின்றன. முதலில் கொலை நடந்த அதிர்ச்சியை ஒட்டுமொத்த சமூகமும் வெளிப்படுத்தியது. தமிழ்சமூகமே ஒரே குரலில், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில், படுகொலையைப்பார்த்துக்கொண்டு இருந்த பொதுசனத்தை திட்டித்தீர்த்தது. குற்றம் செய்தவனை ஒரு படமாவது மொபைலில் யாராவது எடுத்திருக்கக்கூடாதா? இரண்டு மணி நேரம் கொலையான பெண்ணை இப்படியா பிளாட்பாரத்தில் போட்டுவிடுவது? யாருமே காவல்துறைக்கோ, ஆம்புலன்சுக்கோ சொல்லுயிருக க்க்கூடாதா? என்றெல்லாம் எல்லோரும் கோப்ப்பட்டார்கள்.

அதன்பின் ஒரு நடிகர் தனது " சமூக வலைத்தளம்" மூலம் இதை " பார்ப்பனப்பெண் கொலை" என்பதாகவும், முஸ்லீம் இளைஞர் ஒருவரின் பெயரைச்சொல்லி பிரச்னையை " மதச்சாயம" கொடுத்து திசை திருப்பி விட்டார்.உடனே எல்லோரும் அதன் மீது விவாத்த்தை கட்டமைத்தார்கள். அப்படி திசை திருப்பியது தவறு எனக்காணும்போது, அதன் மீது விவாதம் செய்து கொண்டே போனால், அதுவும்கூட, " திசை திருப்பலுக்கு" உரமிடுவதாக் ஆகாதா?  அந்த தேரத்தில் யாரும் அதை நினைத்துப்பார்க்கவில்லை என இருக்கலாம்.அடுத்து அந்த " திசை திருப்பப்பட்ட விவாத்த்தை" வலுப்படுத்த, அடுத்த நடிகர், அதை அடுத்து ஒரு அரசியல்வாதி எனபபுறப்பட்டனர்.

   அந்த நேரத்தில் காவல்துறை, " குற்றம் சாட்டப்படட்டவர"  என ராம்குமாரை அவரது சொந்த ஊரில் கைது செய்தது. உடனே மீண்டும் அவரது " சாதி" என்ற ஒன்று விவாதமானது. பலியானவரோ, குற்றம் சாட்டப்பட்டவரோ " தனி நபர்கள்". அவர்களது சாதி எப்படி விவாதிக்கப்படலாம்? இப்படிக் கேள்வி கேட்பவர்கள் " குரல்" அழுத்தப்பட்டு, சாதி விவாதம் அதிகமாக " சமூக வலைத்தளங்களும்" அதற்கு சோறு போட்டது. எல்லா சாதியிலும், எல்லா மத்த்திலும் " நல்லது" செய்யறவனும் இருப்பான், "கெட்டது" செய்ப்வனும் இருப்பான்."தவறு செய்துவிட்டு, அதை வருந்தி திருந்துபவனும்" இருப்பான். இது வழக்குக்கு, வழக்கு வேறுபடும். அப்படி இருக்கையில் ஒரு ஆண்-பெண் விவகாரத்தில் நடந்த வன்முறையை, கொலையை, "சாதி" என்ற  சம்பந்தமில்லாத "வட்டத்திற்குள்" ஏன் இழுத்துச் செல்கிறீர்கள்? "மதம்" என்ற "வட்டத்திற்குள்" ஏன் கொண்டுசெல்ல முயல்கிறீர்கள்? இந்த கேள்வியை  ஒட்டுமொத்த சமூகமும் எழுந்து "சப்தம்போட்டு" கேட்க வேண்டும். 

       நுங்கம்பாக்கம் ரயில் நிலைய படுகொலையைப் போல ஒரு இரண்டாண்டுகளுக்கு முன்பு,சென்னையிலேயே  "பிராடவே பேருந்து நிறுத்தத்தில் " நடந்தது நினைவிருக்கும். அங்கும் இதேபோல இளம் ஆண், இளம் பெண் பிரச்னை ஆண் அந்தப் பெண்ணிடம் சண்டை போட்டுவிட்டு, அந்தப் பெண்ணின் "கழுத்தை" அறுத்திருக்கிறான். அதை அடுத்து தன்னைத்தானே  வெளியே வந்து "கத்தியால்" குத்திக்கொண்டு சாகிறான். இவையெல்லாம் எதைக் காட்டுகிறது?  குறிப்பிட்ட ஆண்கள், தாங்கள் விரும்பியதை, அதாவது விரும்பிய பெண்ணை அடையமுடியாவிட்டால், அந்தப் பெண்ணின் உயிரை எடுப்பது என்ற எண்ணத்தைத் தானே காட்டுகிறது ? அதற்கு என்ன பொருள்? குறிப்பிட்ட பெண் தனது "உடைமை" என்ற எண்ணம் தானே?  இந்த உடைமைச் சிந்தனை எங்கிருந்து வந்தது? இந்த சமூகம் "தனிச் சொத்துரிமைச் சமூகம்" என்பதால் மட்டும்தானா? ஆணுக்கு, பெண் அடிமை என்ற சிந்தனையும் சேர்ந்துதான் இந்த  உடைமை சிந்தனை, "ஆணுக்கு, பெண் உடைமை" என்று வந்திருக்கிறது? இன்றைய "உலகமயமாக்கல்" சூழலில், ஒவ்வொரு இளைஞனும் "உயர் தொழில் நுட்பத்தில்" மூழ்கி விடுகிறான். சமூகத்துடன் அவனது "தொடர்புகள்" அந்நியமாகிக் கொண்டே போகிறது. சொந்தமக்களுடன், சொந்த கிராமத்துடன், சுற்றுச் சூழலுடன் அவனது நெருக்கங்கள் விலகி, "லாபம்" "பணம்" என்ற பேராசை வளர்ந்து, முழுக்க, முழுக்க, "உயர் தொழில் நுட்பம்" சார்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். அதில் அவனது "ஆணாதிக்க, பெண்களை உடைமையாக" நினைக்கின்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இது ஒரு "பாலினப் பிரச்னை" 

     "பாலினப் பிரச்னை", எப்போதுமே "பாலியல் பிரச்னையை" தனக்கு கீழே வைத்துக் கொள்ளும். நாம் பல நேரங்களில், "பாலியல் பிரச்னை" [பற்றி அதிகம் விவாதிக்கிறோம். பாலியல் வன்முறைகள், பெண்கள் மீதான வன்முறைகள் போன்றவை தொடர்ந்து "விவாதப் பொருளாக" ஆகின்றது. ஆனால் அதற்கு அடிப்படையாக, அல்லது தலைமை தங்குவதாக இந்தப் "பாலினப் பிரச்சனை" இருக்கிறது.பெண்களை இரண்டாம் தரக்குடிகளாக பார்க்கும் பார்வை அது. பெண் பாலினத்தை அடிமையாக, அல்லது, பொருளாக, அல்லது பண்டமாக, மொத்தத்தில்,"உடைமையாகப்" பார்க்கும் "பார்வை" இருக்கிறது.  இதுதான் இத்தகைய "வன்முறைகளுக்கு" வித்திடுகிறது. 

      அடுத்து வருவது, அமைதியாக, அல்லது "மவுனமாக" பார்வையாளர்களாக ஆகிவிட்ட நமது சமூகம். அத்தகைய வன்முறை நடக்கும் போது, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மட்டுமல்ல, "பிராடவே" பேருந்து நிலையத்திலும், சனம் "மவுனமாக" பார்வையாளர்ர்களாக, "சவமாக" இருந்துள்ளனர். இந்த சனத்தை  
  என்ன சொல்ல?    "பாதகம் செய்வோரைக் கண்டால், பயம் கொள்ளல் ஆகாது" என்று பாரதியாரின் வரிகளை, கடற்கரையில், எதிர்ப்பு கொடுத்தவர்கள்," பதாகை யில்" எழுதியிருந்தனர். 

      இதையேதான் பி.யு.சி.எல். தனது சென்னை மாவட்ட குழுவின் கூட்டத்திலும், விவாதித்தது. எல்லா விதமான விவாதங்களும், "இப்படி நடந்திருக்குமா?", "அப்படி நடந்திருக்குமா?" என்ற விவாதங்கள் எல்லாமே, "சாதி, மதம்" என்ற விவாதங்கள் எல்லாமே, கடைசியில் "பாலினப்