இலங்கைத் தீவில் நடந்த முடிந்த அதிபர் தேர்தல், புதிய அணி
சேர்க்கைகளை உருவாக் கிய அதே நேரத்தில், புதிய பிளவுகளையும் உரு வாக்கியுள்ளது. அதிபர் ஆட்சி அல்லது நாடாளு மன்ற ஆட்சி என்ற தளத்தில் அந்த பிளவுகள் வெளிப்பட்டுள்ளன. அதிபராக முதலில் மகிந்த ராஜபக்சே போட்டியிடும் போது, அவர் சந்திரிகாவை ஓரங்கட்டினாலும், ஜனத விமுக்தி பெரமுனாவை தனது கூட்டணிக்கட்சியாக சேர்த்துக் கொண்டார். அப்போது ஜே.வி.பி.க்கு இலங்கை அரசாட்சியை ஒற்றையாட்சி என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் தான் அழுத்தமாக இருந்தது. அதை மகிந்தா ஏற்றுக் கொண்டார். அதையே அவர் தனது தேர்தல் வியூகத்திற்கும் பயன் படுத்தினார். மகிந்தாவை எதிர்த்து ஐ.தே.க. தலை வர் ரணில் விக்ரம சிங்கே அப்போது அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டார். ரணில் அதிகமாக தமிழர் வாக்குகளை எதிர்பார்த்து அந்த தேர்தலில் ஈடுபட் டார். அப்போது வன்னிப் பகுதியில் தமிழ் அர
சாங்கத்தை நடத்தி வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பு வேறு பட்டு சிந்தித்தது. புலிகள் அமைப் பிலிருந்து கிழக்கு மாகாண தளபதி கருணாவையும், கருணாவுடன் 5,000 போராளிகளையும் பிரித்து, புலிகள் அமைப்பை
உடைத்தது ரணில் விக்கிரம சிங்கே தான் என்ற கருத்து, ஈழத்தமிழர்கள் மத்தியில் ஆழமாக பதிந்திருந்தது. அதனால் தமிழ் ஈழ ஆர்வலர்களின் விருப்பம், தேர்தலில் ரணிலுக்கு சாத கமாக இல்லை. போரை நடத்திக் கொண்டிருந்த மகிந்தாவும், ஒற்றையாட்சி அரசியலைப் பேசிக் கொண்டிருந்தார். ஆகவே இரண்டு பேருக்குமே வாக் களிக்க முடியாது என்ற நிலையில், ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்தமாக அந்த அதிபர் தேர்தலைப் புறக் கணித்தார்கள். அதன் காரணமாகவே மகிந்தா வெற்றி பெற்றார். மகிந்தா வின் சர்வாதிகார ஆட்சியை பார்த்தவர்கள், தமிழர்கள் தேர்தலை புறக்கணித்தது தவறு என்றும், அந்த தவறினால் தான் மகிந்தா வெற்றி பெற்றார் என்றும், அந்த தவறை செய்தவர்கள் விடுதலைப்புலிகள் தான் என்றும் விமர்சனம் செய்து வந்தார்கள்.
இப்போது 2வது முறை யாக அதிபர் தேர்தலில் மகிந்தா நின்றார். இந்த முறை அவரை எதிர்த்து பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத் தினார்கள். மகிந்தாவை சென்ற அதிபர் தேர்தலில் ஆதரித்து வேலை செய்த ஜே.வி.பி., இந்த முறை மகிந்தாவை எதிர்த்து பொன்சேகாவை ஆதரித் தது. இப்படிப்பட்ட அணி சேர்க்கை மாற்றம் தென் னிலங்கையில் ஏற்பட்டது என்றால், வடக்கிலும், கிழக்கிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப் பினர்கள், பொன்சேகாவை ஆதரித்தார்கள். அதனாலேயே தமிழர்கள் வாழும் வடக்கிலும், கிழக்கி லும், கொழும்பிலும், மலையகத்திலும், பொன்சேகாவிற்கே வாக்குகள் விழுந்தன. இதுவும் கூட ஒரு அரசியல் அணி சேர்க்கை என்பதாகவே எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இப்போது தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் பொன்சேகாவை கைதா அல்லது கடத்தலா என்றே தெரியாத அளவுக்கு, ராணுவ காவல் துறை மூலம் மகிந்தா செயல் பட்டுள்ளார். அதுவே தென்னிலங்கையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்சேகாவிற்கு ஆதர வாக தெருவில் இறங்கி போராடியவர் கள் மீது, மகிந்தா ஆதரவாளர் கள் தாக்கியிருக் கிறார்கள். இத்தகைய போராட்டங் களும், தாக்குதல்களும் தொடரும் என்று தெரி கிறது.
தமிழர்கள் மத்தியில் உலகம் எங்கிலும் ஒரு விவாதம் நடந்து கொண்டி ருக்கிறது. ராஜபக்சே அர சாங்கத்தால், கைது செய் யப்பட்ட பொன்சேகா ஏற்கனவே தமிழருக்கு எதிரான போரில், மோசமாக நடந்து கொண்டதற்கு இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்ப தாக ஒரு கருத்து உலாவிக் கொண்டிருக்கிறது. இந்த கருத்து, அதிபர் தேர்தல் நேரத்திலேயே வெளிவந்த சிந்தனைப் போக்குதான். அதாவது ராஜபக்சேயும், பொன்சேகாவும் போட்டியிடுகின்ற ஒரு தேர்தலில், இருவரை யுமே தமிழர்கள் ஆதரிக்கக் கூடாது என்பதுதான் அந்த கருத்து. இருவரும் சேர்ந்து தான் ஒரு இன அழிப்புப் போரை, தமிழர்கள் மீது நடத்தினார்கள். அந்தப் போரை நடத்துவதற்கான அனைத்து திட்டங் களையும் உருவாக்கி, அந்நிய நாட்டு உதவிகளை யும் வாங்கிக் கொண்டு, அரசியல் முடிவுகளை செய்தது மகிந்த ராஜபக் சேயின் கும்பல் என் பதால், தமிழர்கள் வாக்கு மகிந்தாவிற்கு ஆதரவாக போடப்பட முடியாது. அதே சமயம் மகிந்தாவை எதிர்க்கிறேன் என்ற பெய ரில் நிற்கின்ற பொன்சேகா, நேரடியாக வடக்கு மாகாணத்தில் சிங்களப் படைக்கு தலைமை எடுத்து நின்று, தமிழர்களுக்கு எதிராக போர் புரிந்தார் என்பதனால் அவருக்கும் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதே அந்தக் கருத்து. மேற்கண்ட கருத்துக்கு ஏதுவாக சிவாஜிலிங்கமும், டாக்டர் விக்ரமபாகு கருணா ரத்னேயும் சேர்ந்து நின்று போட்டியிட்டார்கள். அவர்களது பிரச்சாரம் முக்கிய இரு வேட்பாளர் களான, ராஜபக்சேயையும், பொன்சேகாவையும் போர் வெறியர்களாக சித்தரித்தது.
பொன்சேகாவை பொருத்தவரை அவர் எந்த விதத்திலும், தமிழர்களுக்கு சாதகமாக போர் நேரத்தில் சிந்தித்தது இல்லை. அப்பாவி தமிழர்கள் படு கொலையானதற்கும், தமிழ் போராளிகள் மீது ரசாயன குண்டுகளைப் போட்டு, படுகொலை செய்வதற்கும், தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளானதற்கும், சிங்கள ராணுவம்தான் பொறுப்பு எனும் போது, அந்த ராணுவத்திற்கு தலைமை தாங்கிய
சரத் பொன்சேகாதான் நேரடியான பொறுப்பு என்ற அழுத்தமான கருத்தை அவர்கள் வெளிப் படுத்துகிறார்கள்.
அதே சமயம் தமிழின அழிப்புப் போர் நடை பெறும் நேரத்தில், ராணு வத் தளபதி சரத்பொன்சேகா, கூறிய வார்த்தை உலக மெங்கிலும் தமிழர்கள் மத்தியிலும், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் பிரச்சினையை கிளப்பியிருந்ததை, இப்போது நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. அதாவது இலங்கைத் தீவு, சிங்களர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும், மற்ற வர்கள் அங்கே வாழலாம்; ஆனால் உரிமை கேட்கக்கூடாது என்றும், பொன்சேகா கூறியதை இப்போது நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. அப்படி கூறிய பொன்சேகாவிற்கு, தமிழர்கள் மட்டுமே பெரும்பான்மையாக வாக்களித்திருப்பது கவனிக்கத்தக்கது. அதற்கு காரணமாக அமைந்ததும், அதிபர் தேர்தல் நேரத்தில் பொன்சேகா உதிர்த்த உறுதிமொழிகள்தான். அந்த உறுதிமொழிகளில், தமிழர் பகுதிகளை பாதுகாப்பு பகுதிகளாக அறி வித்திருப்பதை நீக்குவேன் என்றும், ராணுவத்தை அந்த பகுதிகளிலிருந்து திரும்ப பெறுவேன் என்றும், முள்வேலி முகாம்களை முழுமையாக திறந்து விடுவேன் என்றும், கைது செய்யப்பட்டவர்களை போராளிகள் உட்பட விடுதலை செய்வேன் என்றும், கடத்தப் பட்டவர்களில் மரண மடைந்தவர்கள் குடும்பத் திற்கு நட்டஈடு தருவேன் என்றும், கூறிய வாக்குறுதி கள்தான் தமிழர்களை ஈர்த்தது. போர் நேரத்தில் கண்டபடி தமிழர்களுக்கு எதிராகப் பேசிய, பொன்சேகா தேர்தல் நேரத்தில் மாற்றிப் பேசியதுதான் அதி சய நிகழ்வாக நடந்தது.
இப்போது தென்னிலங் கையில் பொன்சேகாவின் பெயரால் கொந்தளிப்பு தொடங்கியிருக்கிறது. இந்த கொந்தளிப்பிற்கு ஒரு வரலாறு உண்டு. ராஜபக்சே குடும்பத்தினர் பொருள் சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள் என்று தென்னிலங்கையில் உள்ள ஏழை சிங்கள மக்கள் எண்ணிப் பொரு முகிறார்கள். ஜனநாயக ரீதியாக செயல்பாடுகள் இல்லை என்ற தாக்கம் தென்னிலங்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அவர்களை துன்புறுத்துகிறது. ஜே.வி.பி. இப்போது கடும் கோபத்தில் இருக்கிறது. அவர்களுடைய
செல்வாக்கு பகுதிகளில், இளைஞர்களும், மக்களும் பெரிய அளவிலான மக்கள் எழுச்சிக்கு, தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜே.வி.பி.யும், ஐ.தே.க.வும் அரசு ஊழியர்களை யும், ராணுவத் தினரையும் நோக்கி கலகம் செய்யும்படி அறைகூவல் விடுகின்றனர். தவறான கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று வெளிப்படையாக கூறுகின்றனர்.
இன்னொரு ஆயுதக் கிளர்ச்சி தென்னிலங் கையில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜே.வி.பி. நடத்திய ஆயுத கிளர்ச்சி, 1971ம் ஆண்டி லும், 80களிலும் தென்னிலங் கையை நிலைகுலைய வைத்தது. அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்களும், இளம் பெண்களும் ராணுவத்தால் அநியாயமாகக் கொல் லப்பட்டனர். அத்தகைய எழுச்சி மீண்டும் எழலாம் என்ற அறிகுறிகள் தென் படுகின்றன. அதனால்தான் ரஷ்யாவிடம் சென்று 300 மில்லியன் டாலர் பெறு மான ஆயுத உதவியை ராஜபக்சே பெற்றுள்ளார். சிங்கள தேசத்தின் நாட்டுப்பற்றாளர்கள் இந்த முறை எழுவார்கள். சர்வாதிகாரத்திற்கு எதிராக உழுவார்கள். இலங்கைத் தீவிலும் ஒரு ஜனநாயக வெளிச்சம் பிறக்க உதவுவார்கள். இப்படி ஒரு எதிர்பார்ப்பு சில ஜன நாயக உணர்வாளர்கள் மத்தியில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
Friday, February 12, 2010
Thursday, February 11, 2010
தமிழில் பாட காஞ்சியில் தடையா?
சமீபத்தில் காஞ்சி மாவட்டத்தில், கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வார் கோவிலுக்குள் தமிழில் இறைவனைப் பாட தடை செய்யப்பட்டது என்ற செய்தி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் இருந்த பார்ப்பனக் குருக்கள், தமிழில் பாட விடாமல் தடுத்திருக்கிறார்கள். இதே போல சென்ற ஆண்டு, சிதம்பரம் நடராசர் கோயிலில் தீட்சிதர்கள், தமிழில் பாடிக்கொண்டு உள்ளே சென்ற ஆறுமுகசாமி என்ற சிவாச்சாரியாரைத் தடுத்து, அடித்து விரட்டியது தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு தான் சிதம்பரம் கோவிலின் தீட்சிதர்கள் பற்றிய தில்லுமுல்லுகள், ஊடகங்கள் மூலம் உலகுக்கு அரங்கேறின. அதன் பிறகுதான் அந்த கோவிலில் தமிழ் பக்தர்கள் போடுகின்ற பணத்தையெல்லாம், உண்டியலில் இருந்து அள்ளிக் கொள்பவர்கள் தீட்சிதர்கள் என்ற செய்தி வெளியே வந்தது. அதையொட்டி தமிழக அரசும் அந்த சிவன் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தது. கொண்டு வந்த கையோடு அரசே ஒரு உண்டியலையும் பெரியதாக வைத்தது. இது பொறுக்காத தீட்சிதர்கள் அங்கும், இங்கும் ஓடி கடைசியாக நீதிமன்றத்திற்கும் சென்றார்கள். சென்னை உயர்நீதிமன்றமும், தீட்சதர்களின் மண்டையில் குட்டியது. சிதம்பரம் கோயிலை சுற்றியுள்ள நிலங்கள் எல்லாம், தீட்சிதர்களால் பிளாட் போட்டு விற்கப்பட்டது என்ற செய்தி இன்னமும் அம்பலத்திற்கு வரவில்லை. அதற்கான விசாரணைக் குழுவும், அதனாலேயே அரசால் போடப்படவில்லை. இது சைவக் கோயிலில் நடந்த திருவிளையாடல் என்றால், மேற்கண்ட கூரத்தாழ்வார் கோயில் விளையாட்டு, வைணவக் கோயிலில் நடந்த சேட்டை.
சைவமோ, வைணவமோ, அத்தகைய கோயில் களை தங்கள் கைகளுக்குள் பிடித்து வைத்திருப்பது ஒரு சிறிய சமூகம். அவர்கள் இறைவனிடம் நேரடி யாகப் பேசுவார்கள் என்றும், இறைவனின் மொழி கிருந்தம் என்றும், சமஸ்கிருதத்தைத் தெரிந்தவர்கள் தான், இறைவனிடம் பேசமுடியும் என்றும், இன்னமும் நமது தமிழ் பக்தர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மொழி தமிழ்நாட்டு மக்களின் தாய்மொழி. அப்படி இருக்க தங்கள் தாய்மொழியை மட்டுமே அறிந்த பெருவாரியான தமிழ்மக்கள், கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்றாலும், நீதிமன்றத்திற்கு நீதி கேட்டு அலைந்தாலும், அங்கெல்லாம் தமிழ் பேசப்பட்டால் மட்டும்தான், அவர்களும் அந்த நிகழ்ச்சியில் புரிதலோடு பங்கு கொள்ள முடியும். இது ஏனோ நீதி தேவதைகளுக்கும், கோயில் சாமி களுக்கும் புரியவில்லை. இரண்டு இடங்களிலும் நமது தமிழ் மக்கள், வாய்பேசாத மௌனிகளாக நின்றுவிடுகிறார்கள். அவர்களுக்கும், சாமிக்கும் இடைவெளி அதிகமாகிறது. அவர்களுக்கும், நீதிதேவதைக்கும் இடையில் பெரும் சுவர் எழுப்பப்படுகிறது. இதனால் சிறிது சிறிதாக, சாமி நம்பிக்கை அற்றவர்களாகவும், நீதிமன்றத்தை நம்பாதவர்களாகவும் அந்த தாய்மொழி மட்டுமே தெரிந்த அப்பாவி மக்கள், ஆகிவிடுகிறார்கள்.
அது கூட ஒரு வகையில், இந்த இரண்டு நிறுவ னங்களையும் தங்கள் நலனுக்கு பயன்படுத்த விரும்பும் சக்திகளுக்குப் பயனுள்ளதாகப் போய் விடுகிறது. சிதம்பரம் நடராசர் கோயிலில், தங்கள் சொந்த லாபத்திற்காக தீட்சிதர்கள், தமிழில் பாட அனுமதிக்கவில்லை என்று புரிய முடிகிறது. ஆனால் காஞ்சி கூரத்தாழ்வார் கோயிலில், தமிழில் பாசுரம் பாட மறுக்கப்பட்ட அணுகுமுறை, மேலும் சில கேள்விகளை எழுப்புகிறது. நம்பிள்ளை ராமானுஜ ஆச்சாரியார் என்பவர் தலைமையில் ஆண்டாள் திருப்பாவையைப் பாடிக் கொண்டு, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீஹரி மடத்து பக்தர்கள், கூரத்தாழ்வார் கோயில் மண்டபத்திற்குள் நுழைந் திருக்கிறார்கள். அந்த வைணவக் கோயிலின் முக்கிய குருக்களாக இருக்கின்ற பார்ப்பனர்களான கண்ணன் பட்டாச்சாரியாரும், பார்த்தசாரதி பட்டாச்சாரியரும் அவர்களைத் தடுத்திருக்கிறார்கள், பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள். தமிழ் பாசுரம் பாடுவதால் ஆச்சாரம் கெட்டு விடும் என்றும் கூறியிருக்கிறார்கள். இது முதலில் தமிழ்நாட்டில், தாய் மொழி தமிழில், ஆண்டவனைப் புகழ்ந்து பாடல் பாடுவதற்கு தடை என்ற மனித உரிமை மீறலாக வருகிறது. அதையும் தாண்டி, கூரத்தாழ்வார் கோயில் என்றால் என்ன என்ற வரலாற்றிற்குள் போய் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
அருகே இருக்கும் திருப்பெரும்புதூரில் கி.பி. 1017ல் பிறந்தவர் ராமானுஜர். இந்த ராமானுஜர் வைணவ மதத்தில் ஒரு முக்கியத் தூணாகக் கருதப்படுகிறார். அவர் பார்ப்பனர் அல்லாத சாதியினரையும், முப்பிரி நூல் மாட்டிவிட்டு, பார்ப்பனராக மாற்றினார் என்பது வரலாறு. திருநாராயணபுரம் கோயிலில், ராமானுஜர் தாழ்த்தப் பட்ட மக்களை, கோயிலுக்குள் முதன்முறையாக அனுமதித்தார் என்பது புரட்சிகரமான செயலாக, அன்றைய காலத்தில் பார்க்கப்பட்டது. தாழ்த் தப்பட்டவர்களுக்கு பூணூல் அணிவித்து பார்ப்பனர்களாக ஆக்கிய ராமானுஜரின் முதல் சீடராக கூரத்தாழ்வார் இருந்தார். சைவ சமயத்து சோழ மன்னன் இது கண்டு பொறுக்க முடியாமல், ராமானு ஜரை பிடிப்பதற்காக தேடி இருக்கிறான். அப்போது திருநாராயணபுரத்திலேயே 12 ஆண்டுகளை ராமானுஜர் மறைந்திருந்து கழித்திருக்கிறார். சோழ மன்னனின் மறைவிற்குப் பிறகு, அவரது சீடர்கள் வேண்டுகோளுக்கிணங்க, பாதுகாப்பாக ஸ்ரீரங்கம் வந்திருக்கிறார். ராமானுஜரை காட்டிக்கொடுக்கச் சொல்லி, சோழ மன்னன், கூரத்தாழ்வாரை நிர்ப்பந்தித்திருக்கிறான். காட்டிக் கொடுக்க மறுத்த கூரத்தாழ்வாரின் கண்களையும், பெரிய நம்பியின் கண்களையும், மன்னர் உத்தரவுப்படி பிடுங்கி இருக்கிறார்கள் என்ற செய்தி ஊருக்கு திரும்பிய ராமானுஜருக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. கூரத்தாழ்வாரின் மகனுக்கு, ராமானுஜர் பராசரன் என்று பெயர் வைத்திருக்கிறார். அவர்தான் பின்னாளில் அறிவார்ந்த தூணாக, வைணவத்திற்கு உருவாகியிருக்கிறார். அவரை பின்னாளில் பராசரர்பட்டர் என்று அழைத்திருக்கிறார்கள். ராமானுஜர் கி.பி. 1137 வரை உயிர்வாழ்ந்து தனது 120வது வயதில் மறைந்திருக்கிறார்.
அத்தகைய கூரத்தாழ்வாரின் கோயில் என்பது, சாதி மறுப்பு கோயிலாகவும், தாய்மொழிப் பாடல்களை அனுமதிக்கும் கோயிலாகவும் இருக்க வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி, அங்கே திருப்பாவை பாடிச்சென்ற போதுதான், பட்டாச்சாரியார்களின் தடை என்ற அடாவடி நடந்திருக்கிறது. திருப்பாவை 12 வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூலாகும். வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரதிவ்யப் பிரபந்தத்தின் 473ம் பாடல் முதல் 503ம் பாடல் வரை திருப்பாவைப் பாடல் கள் என்று பெயர்.
அத்தகைய திருப்பாவைப் பாடல்களை பாடி வந்த பக்தர்கள் தான் கூரத்தாழ்வார் கோயிலில் தடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் தடை பற்றி பாதிக்கப்பட்ட நம்பிள்ளை ராமானுஜ ஆச்சாரியார், அந்த வட்டார வருவாய்த் துறை ஆய்வாளரிடமும், காவல்துறை ஆய்வாளரிடமும், கிராம நிர்வாக அலுவலர்களிடமும் போய் முறையிட்டு இருக்கிறார்கள். அவர்களும் தடை விதித்த பார்ப்பனர்களுக்கு சாதகமாகவே பேசி இருக்கிறார்கள். இந்தச் செய்தியை வாரம் இருமுறை ஏடு வெளியிட, முதல்வரை நிறுவனராகக் கொண்ட நாளேட்டில் தெளிவான கட்டுரையாக எழுதியிருக் கிறார்கள்.
ஆட்சியாளர்கள் விரும்பாவிட்டாலும், அவர்க ளது ஆதரவாளர்கள் ஊடகங்களில் பட்டியலிட்டு அம்பலப்படுத்தினாலும், சாதிய வெறிகளும், தமிழ் மொழி எதிர்ப்பு நடவடிக்கைகளும் இன்னமும் நமது வழிபாட்டுத் தலங்களில் தொடர்கின்றன. இதற்குக் காரணம் என்ன? சமூக ரீதியான வன்முறை என்பது, சட்ட, திட்டங்களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ அடங்குவதில்லை. அதை அடக்குவதற்கோ, அகற்றுவதற்கோ, மக்கள்தான் முன்முயற்சி எடுக்க வேண்டும்.
சைவமோ, வைணவமோ, அத்தகைய கோயில் களை தங்கள் கைகளுக்குள் பிடித்து வைத்திருப்பது ஒரு சிறிய சமூகம். அவர்கள் இறைவனிடம் நேரடி யாகப் பேசுவார்கள் என்றும், இறைவனின் மொழி கிருந்தம் என்றும், சமஸ்கிருதத்தைத் தெரிந்தவர்கள் தான், இறைவனிடம் பேசமுடியும் என்றும், இன்னமும் நமது தமிழ் பக்தர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மொழி தமிழ்நாட்டு மக்களின் தாய்மொழி. அப்படி இருக்க தங்கள் தாய்மொழியை மட்டுமே அறிந்த பெருவாரியான தமிழ்மக்கள், கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்றாலும், நீதிமன்றத்திற்கு நீதி கேட்டு அலைந்தாலும், அங்கெல்லாம் தமிழ் பேசப்பட்டால் மட்டும்தான், அவர்களும் அந்த நிகழ்ச்சியில் புரிதலோடு பங்கு கொள்ள முடியும். இது ஏனோ நீதி தேவதைகளுக்கும், கோயில் சாமி களுக்கும் புரியவில்லை. இரண்டு இடங்களிலும் நமது தமிழ் மக்கள், வாய்பேசாத மௌனிகளாக நின்றுவிடுகிறார்கள். அவர்களுக்கும், சாமிக்கும் இடைவெளி அதிகமாகிறது. அவர்களுக்கும், நீதிதேவதைக்கும் இடையில் பெரும் சுவர் எழுப்பப்படுகிறது. இதனால் சிறிது சிறிதாக, சாமி நம்பிக்கை அற்றவர்களாகவும், நீதிமன்றத்தை நம்பாதவர்களாகவும் அந்த தாய்மொழி மட்டுமே தெரிந்த அப்பாவி மக்கள், ஆகிவிடுகிறார்கள்.
அது கூட ஒரு வகையில், இந்த இரண்டு நிறுவ னங்களையும் தங்கள் நலனுக்கு பயன்படுத்த விரும்பும் சக்திகளுக்குப் பயனுள்ளதாகப் போய் விடுகிறது. சிதம்பரம் நடராசர் கோயிலில், தங்கள் சொந்த லாபத்திற்காக தீட்சிதர்கள், தமிழில் பாட அனுமதிக்கவில்லை என்று புரிய முடிகிறது. ஆனால் காஞ்சி கூரத்தாழ்வார் கோயிலில், தமிழில் பாசுரம் பாட மறுக்கப்பட்ட அணுகுமுறை, மேலும் சில கேள்விகளை எழுப்புகிறது. நம்பிள்ளை ராமானுஜ ஆச்சாரியார் என்பவர் தலைமையில் ஆண்டாள் திருப்பாவையைப் பாடிக் கொண்டு, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீஹரி மடத்து பக்தர்கள், கூரத்தாழ்வார் கோயில் மண்டபத்திற்குள் நுழைந் திருக்கிறார்கள். அந்த வைணவக் கோயிலின் முக்கிய குருக்களாக இருக்கின்ற பார்ப்பனர்களான கண்ணன் பட்டாச்சாரியாரும், பார்த்தசாரதி பட்டாச்சாரியரும் அவர்களைத் தடுத்திருக்கிறார்கள், பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள். தமிழ் பாசுரம் பாடுவதால் ஆச்சாரம் கெட்டு விடும் என்றும் கூறியிருக்கிறார்கள். இது முதலில் தமிழ்நாட்டில், தாய் மொழி தமிழில், ஆண்டவனைப் புகழ்ந்து பாடல் பாடுவதற்கு தடை என்ற மனித உரிமை மீறலாக வருகிறது. அதையும் தாண்டி, கூரத்தாழ்வார் கோயில் என்றால் என்ன என்ற வரலாற்றிற்குள் போய் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
அருகே இருக்கும் திருப்பெரும்புதூரில் கி.பி. 1017ல் பிறந்தவர் ராமானுஜர். இந்த ராமானுஜர் வைணவ மதத்தில் ஒரு முக்கியத் தூணாகக் கருதப்படுகிறார். அவர் பார்ப்பனர் அல்லாத சாதியினரையும், முப்பிரி நூல் மாட்டிவிட்டு, பார்ப்பனராக மாற்றினார் என்பது வரலாறு. திருநாராயணபுரம் கோயிலில், ராமானுஜர் தாழ்த்தப் பட்ட மக்களை, கோயிலுக்குள் முதன்முறையாக அனுமதித்தார் என்பது புரட்சிகரமான செயலாக, அன்றைய காலத்தில் பார்க்கப்பட்டது. தாழ்த் தப்பட்டவர்களுக்கு பூணூல் அணிவித்து பார்ப்பனர்களாக ஆக்கிய ராமானுஜரின் முதல் சீடராக கூரத்தாழ்வார் இருந்தார். சைவ சமயத்து சோழ மன்னன் இது கண்டு பொறுக்க முடியாமல், ராமானு ஜரை பிடிப்பதற்காக தேடி இருக்கிறான். அப்போது திருநாராயணபுரத்திலேயே 12 ஆண்டுகளை ராமானுஜர் மறைந்திருந்து கழித்திருக்கிறார். சோழ மன்னனின் மறைவிற்குப் பிறகு, அவரது சீடர்கள் வேண்டுகோளுக்கிணங்க, பாதுகாப்பாக ஸ்ரீரங்கம் வந்திருக்கிறார். ராமானுஜரை காட்டிக்கொடுக்கச் சொல்லி, சோழ மன்னன், கூரத்தாழ்வாரை நிர்ப்பந்தித்திருக்கிறான். காட்டிக் கொடுக்க மறுத்த கூரத்தாழ்வாரின் கண்களையும், பெரிய நம்பியின் கண்களையும், மன்னர் உத்தரவுப்படி பிடுங்கி இருக்கிறார்கள் என்ற செய்தி ஊருக்கு திரும்பிய ராமானுஜருக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. கூரத்தாழ்வாரின் மகனுக்கு, ராமானுஜர் பராசரன் என்று பெயர் வைத்திருக்கிறார். அவர்தான் பின்னாளில் அறிவார்ந்த தூணாக, வைணவத்திற்கு உருவாகியிருக்கிறார். அவரை பின்னாளில் பராசரர்பட்டர் என்று அழைத்திருக்கிறார்கள். ராமானுஜர் கி.பி. 1137 வரை உயிர்வாழ்ந்து தனது 120வது வயதில் மறைந்திருக்கிறார்.
அத்தகைய கூரத்தாழ்வாரின் கோயில் என்பது, சாதி மறுப்பு கோயிலாகவும், தாய்மொழிப் பாடல்களை அனுமதிக்கும் கோயிலாகவும் இருக்க வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி, அங்கே திருப்பாவை பாடிச்சென்ற போதுதான், பட்டாச்சாரியார்களின் தடை என்ற அடாவடி நடந்திருக்கிறது. திருப்பாவை 12 வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூலாகும். வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரதிவ்யப் பிரபந்தத்தின் 473ம் பாடல் முதல் 503ம் பாடல் வரை திருப்பாவைப் பாடல் கள் என்று பெயர்.
அத்தகைய திருப்பாவைப் பாடல்களை பாடி வந்த பக்தர்கள் தான் கூரத்தாழ்வார் கோயிலில் தடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் தடை பற்றி பாதிக்கப்பட்ட நம்பிள்ளை ராமானுஜ ஆச்சாரியார், அந்த வட்டார வருவாய்த் துறை ஆய்வாளரிடமும், காவல்துறை ஆய்வாளரிடமும், கிராம நிர்வாக அலுவலர்களிடமும் போய் முறையிட்டு இருக்கிறார்கள். அவர்களும் தடை விதித்த பார்ப்பனர்களுக்கு சாதகமாகவே பேசி இருக்கிறார்கள். இந்தச் செய்தியை வாரம் இருமுறை ஏடு வெளியிட, முதல்வரை நிறுவனராகக் கொண்ட நாளேட்டில் தெளிவான கட்டுரையாக எழுதியிருக் கிறார்கள்.
ஆட்சியாளர்கள் விரும்பாவிட்டாலும், அவர்க ளது ஆதரவாளர்கள் ஊடகங்களில் பட்டியலிட்டு அம்பலப்படுத்தினாலும், சாதிய வெறிகளும், தமிழ் மொழி எதிர்ப்பு நடவடிக்கைகளும் இன்னமும் நமது வழிபாட்டுத் தலங்களில் தொடர்கின்றன. இதற்குக் காரணம் என்ன? சமூக ரீதியான வன்முறை என்பது, சட்ட, திட்டங்களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ அடங்குவதில்லை. அதை அடக்குவதற்கோ, அகற்றுவதற்கோ, மக்கள்தான் முன்முயற்சி எடுக்க வேண்டும்.
Wednesday, February 10, 2010
நீதியரச மனோபாவம், ஒருமதச்சார்பானதா?
ந்திர உயர்நீதி மன்றம், முஸ்லிம் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கொடுத்திருக்கும் தீர்ப்பு, நாடு தழுவிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 2007ம் ஆண்டு ஆந்திர மாநில அர சாங்கம், முஸ்லிம்களுக்கு கல்வியிலும், வேலையி லும் 4% இடஒதுக்கீடு என்பதற்கான ஆணை யை அறிவித்தது. அந்த ஆணை ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்ட வகுப் புகளின் ஆணையம் கொடுத்த அறிக்கையின் மீது அறிவிக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் தலைவரான ஓய்வு பெற்ற அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணாவின் பரிந்து ரையின் பேரில் அந்த அறிக்கை கொடுக்கபட் டிருந்தது. இப்போது ஆந்திர உயர்நீதிமன்றம், அந்த ஆணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திர உயர்நீதிமன்றத்தின் 7 நீதியரசர்கள் கொண்ட பெஞ்ச்சின் முன்னால் அந்த வழக்கு வந்தது. அதில் 2 நீதியரசர்கள் இடஒதுக்
கீட்டை மறுக்காத நிலை யில், பெரும்பான்மையான 5 நீதியரசர்கள், முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங் கியுள்ளனர். தலைமை நீதியரசர் அனில் ரமேஷ் தவே தலைமையில், கோபாலரெட்டி, வி.ஈஸ்வ ரய்யா, ஜி.ரகுராம் ஆகிய நீதியரசர்கள் இந்த ரத்து ஆணையைப் பிறப்பித்துள்ளனர். அதற்கு அவர்கள் கூறியி ருக்கும் காரணங்கள் வேடிக் கையாக இருக்கின்றன.
சமூக ரீதியில் கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப் பினருக்கான இடஒதுக்கீடு என்ற பரிந்து ரையை முன்வைத்த ஆணை யத்தை, நீதியரசர்கள் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். போதுமான புள்ளி விவரங்களை, மொத்த முஸ்லிம் மக்கள் தொகை பற்றி, ஆணையம் திரட்டவில்லை என்று நீதிமன்றம் குற்றம் சாட் டியுள்ளது. பல்வேறு முஸ்லிம் குழுக்கள் இருப் பதாகவும், ஆணையம் அந்த குழுக்களின் மொத்த மக்கள் தொகை கணக்குப்பற்றி அறியா மலேயே இருந்திருக்கிறது என்றும் நீதியரசர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மொத்த முஸ்லிம் மக்கள் தொகை கணக்கு தெரியாமலேயே, ஈகுழுவில் அவர்களை சேர்த்திருப்பதாகவும், அறிவியல் ரீதியான மாதிரி எடுத்து, ஆய்வு நடத்த வில்லை என்றும், ஆய்வு எடுத்தமுறை தவறானது என்றும் இப்போது நீதியரசர்கள் குறை கூறி யுள்ளனர். மேற்கண்ட காரணங்களுக்காக மட்டுமே முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியுமா என்ற கேள்வி நமக்கு எழு கிறது. சரியான ஆய்வு முறையை ஆணையம் பின்பற்றவில்லை என்றால், முறையான ஆய்வை செய்ய வலியு றுத்தி மட்டும்தானே தீர்ப்பு வழங்கமுடியும் என்ற
சர்ச்சையும் உடன் வரு கிறது.
ஆனால் ஆந்திர உயர்நீ திமன்ற நீதியரசர்கள், வேறு ஒரு முக்கிய காரணத்தைக் கூறியுள்ளனர். 2007ம் ஆண்டு ஆணை, இடஒ துக்கீடு கொடுப்பதில், குறிப்பாக முஸ்லிம்களுக்கு என்று மதரீதியாக குறிப் பிட்டுள்ளது தவறானது என கூறியுள்ளனர். அது மதமாற்றத்தை உற்சா கப்படுத்தும் தன்மை கொண்டது என்று குற் றம் சாட்டியுள்ளனர். அத னாலேயே அது தொடர்ந்து நீடிக்கமுடியாது என்றும் கூறியுள்ளனர். இந்த இடத்தில், சமூக ரீதியில் மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய பிரிவினர்களாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது என்ற அரசாணை எப்படி மதமாற்றத்தை உற்சாகப் படுத்தும் என்ற புதிய
சர்ச்சை எழுப்பப்படாமல் இருக்க முடியாது.
ஆந்திராவில் இதற்கு முன்பே, இதே போன்ற முஸ்லிம் இடஒதுக்கீட்டு அறிவிப்பின் மீது, இதே போல உயர்நீதிமன்றம் ரத்து செய்த வரலாறு இருக்கிறது. முதலில் 2004ம் ஆண்டு ஆந்திர அரசாங்கம் ஒரு நிர்வாக ஆணையின் மூலம் 5% இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு அறிவித் திருந்தது. அது ஆந்திர மாநில சிறுபான்மை நிதிவா ரியத்தின் அறிக்கையின் மீது அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு. அப்போதும் ஆந்திர உயர்நீதிமன்றம் அந்த ஆணையை ரத்து செய்தது. அதன் பிறகு ஆந்திர அராசங்கம் ஒரு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உருவாக் கியது. அந்த ஆணையம் கொடுத்த அறிக்கை 2005ம் ஆண்டு அரசு ஆணையாக மாறியபோது, மீண்டும் உயர்நீதிமன்றம் அதை நிராகரித்தது.
இப்போது 2007ம் ஆண்டின் சட்டத்தை ரத்து செய்யும் நீதிமன்றம், சட்டத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளான, முஸ்லிம் என்பதும், மற்ற முஸ்லிம் குழுக்கள் என்பதும் சரியாக விளக்கப்படவில்லை என்ப தும் கூட நீதியரசர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அரசியல் சட்டப்பிரிவின் 14,15(1), 16(2) ஆகியவை மேற்கண்ட சட்டத்தை மீறி யுள்ளன என்று நீதியர
சர்கள் தெரிவித்துள்ளனர். ஆணையம் செய்த ஆய்வு போதாது என்று கூறுகிறது நீதிமன்றம். 2007ல் இத்தகைய முஸ்லிம் இடஒதுக் கீட்டை, சட்டமன்ற ஒப் புதலுடன், மாநில அரசு சட்டமாக்கியுள்ளது. அதன்பிறகு அரசாணை எண் 23 மற்றும் 231 ஆகிய வற்றின் மூலம் முஸ்லிம் குழுக்களுக்கான இட ஒதுக் கீடு அறிவிக்கப்பட்டது. அவை எல்லாமே இப் போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. 3வது அரசாணையாக, பணக்கார முஸ்லிம்களை நீக்கி விட்டு, இடஒதுக்கீடு தருவது என ஒரு ஆணையும் வெளியிடப்பட்டது. அதுவும் கூட இப்போது நீதிமன்றத்தால் ரத்து செய் யப்பட்டுள்ளது. இதில் மீனாக்குமாரி என்ற நீதியரசர், ஒரு பகுதி தலைமை நீதியரசருடன் உடன்பட்டாலும், தனது தீர்ப்பை தனியாக எழுதிக் கொடுத்துள்ளார். அரசாங் கம் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம், பிற்படுத்தப்பட்ட வகுப்பு களை அடையாளம் காட்ட உரிமை உண்டு என்று தனது கருத்தில் கூறியுள் ளார்.
முஸ்லிம் இடஒதுக் கீட்டு ஆணையை ரத்து செய்த நீதியரசர்கள், எந்த ஒரு நிபந்தனையையும் இதற்காக ஆணையம் முன் வைக்கவில்லை என்றும், ஆணையப் பரிந்துரையை வெளியிடுவதற்கு முன் னால், முஸ்லிம் இடஒதுக் கீட்டை மறுக்கும் எந்த ஒரு கருத்தையும் ஆணையம் அழைத்துப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதா கவும் கூட, நீதிமன்றம் குறை கூறியுள்ளது.
இதே நேரத்தில் மேற்கு வங்க அரசு திடீ ரென முஸ்லிம் மக்களுக்கு 10% இடஒதுக்
கீட்டை அறிவித்துள்ளது. அதற்கு அந்த அரசு கூறுகின்ற காரணங்கள், அரசியல் விளக்கங்களாக உள்ளன. வெளியாகி உள்ள ரெங்கநாத் மிஸ்ரா ஆணையம், முஸ் லிம்களுக்காக 10% இடஒ துக்கீடும், பிற சிறுபான்மை சமூகங்களுக்காக 5% இட
ஒதுக்கீடும், ஆக மொத்தம் 15% இடஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு அளிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரையை மத்திய அரசு எப்போது அமுலாக்கும் என்பது தெரியவில்லை என்றும், அதனால்தான் மேற்கு வங்க அரசு இப்படி தங்கள் மாநிலத்திற்கு அறிவித்திருக்கிறோம் என்று மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்
சாரியா கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் மக்கள் தொகையில் 25% பின்தங்கிய முஸ்லிம் மக்கள் என்றும் அவர் அப்போது கூறியுள்ளார். அதே சமயம் ஆண்டு வருமானமாக நாலரை லட்சம் ரூபாய் ஈட்டுபவர்களுக்கு, முஸ்லிம் இடஒதுக்கீடு கிடையாது என்றும் அவர் அறிவித்துள்ளார். கிரீமி லேயர் என்று அழைக்கப்படும், வசதியா னவர்களை தவிர்த்து விடல் என்ற விசயத்தையும், மேற்கு வங்க அரசு தங்களது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறியுள்ள மதமாற் றம் நடைபெறும் ஆபத்து, அந்த முஸ்லிம் இடஒதுக் கீட்டில் இருக்கிறது என்ற கருத்து பெரும் சர்ச்
சைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. மக்கள் தங்களது விருப்பப்படி, மதமாற்றம் செய்து கொள்வதற்கு இந்திய அரசியல் சட்டத்தின் மத உரிமை, அனுமதிக்கிறது. அப்படி இருக்கும் போது, பின்தங்கிய மக்களுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பளிக்கும் இடஒதுக்கீட்டை, மத அடையாளம் கொண்டது என்ற காரணத்தினால், மதமாற்றத்தை உற்
சாகப்படுத்தக்கூடியது என்று அழைக்கலாமா? அப் படியானால் தங்களுக்கு விருப்பமில்லா விட்டாலும், பெரும்பான்மை மத மான இந்து மதத்தில் தங் கியிருந்தால்தான் இடஒ துக்கீடு கிடைக்கும் என்ற சூழல் நிலவுகிறதா? அல் லது அப்படிப்பட் ஒரு சூழல் நிலவவேண்டும் என்றும், அது மாற்றப் பட் டுவிடக்கூடாது என்றும் குறிப்பிட்ட நீதியரசர்கள் விரும்புகிறார்களா? மாற்று மதத்திற்கு சென்றாலும், பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும் என்ற ஒரு நிலைமை உரு வானால், குறிப்பிட்ட மக்கள் பெரும்பான்மை மதமான இந்து மதத்தை விட்டு, மாறிச் சென்று விடுவார்கள் என்ற அச்சம் நீதியரசர்களுக்கு ஏன்தோன்றுகிறது? அப் படியானால் உடன்பாடு இல்லாவிட்டாலும், நமது நாட்டின் ஏழை மக்கள் இடஒதுக்கீடு பெறுவதற்காக, இந்து மதத்திலேயே இருக்க வேண்டும் என்று குறிப் பிட்ட நீதியரசர்கள் எண் ணுகிறார்களா? அப்படி எண்ணுவதானால் அல் லது அப்படிப்பட்ட மனோபாவம் இருக்கு மானால், எந்த சார்புமற்று சிந்திக்க வேண்டிய நீதியர சர்கள், ஒரு மதச்சார்பாக சிந்திக்கிறார்கள் என்று தானே பொருள்படும்? இது ஒரு மதச்சார்பு மனப்பான்மை என்று அழைக்கப்படாதா? அதாவது ஒரு மதச்சார்பு (Theocratic) என்ற மனப் பான்மை அல்லாமல் வேறென்ன? நீதியர சர்கள் இப்படிப்பட்ட மனப்பான்மையில் இருப்பதுதான் இந்திய அரசா என்றும் கூட விவா திக்கப்பட வேண்டும்.
கீட்டை மறுக்காத நிலை யில், பெரும்பான்மையான 5 நீதியரசர்கள், முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங் கியுள்ளனர். தலைமை நீதியரசர் அனில் ரமேஷ் தவே தலைமையில், கோபாலரெட்டி, வி.ஈஸ்வ ரய்யா, ஜி.ரகுராம் ஆகிய நீதியரசர்கள் இந்த ரத்து ஆணையைப் பிறப்பித்துள்ளனர். அதற்கு அவர்கள் கூறியி ருக்கும் காரணங்கள் வேடிக் கையாக இருக்கின்றன.
சமூக ரீதியில் கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப் பினருக்கான இடஒதுக்கீடு என்ற பரிந்து ரையை முன்வைத்த ஆணை யத்தை, நீதியரசர்கள் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். போதுமான புள்ளி விவரங்களை, மொத்த முஸ்லிம் மக்கள் தொகை பற்றி, ஆணையம் திரட்டவில்லை என்று நீதிமன்றம் குற்றம் சாட் டியுள்ளது. பல்வேறு முஸ்லிம் குழுக்கள் இருப் பதாகவும், ஆணையம் அந்த குழுக்களின் மொத்த மக்கள் தொகை கணக்குப்பற்றி அறியா மலேயே இருந்திருக்கிறது என்றும் நீதியரசர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மொத்த முஸ்லிம் மக்கள் தொகை கணக்கு தெரியாமலேயே, ஈகுழுவில் அவர்களை சேர்த்திருப்பதாகவும், அறிவியல் ரீதியான மாதிரி எடுத்து, ஆய்வு நடத்த வில்லை என்றும், ஆய்வு எடுத்தமுறை தவறானது என்றும் இப்போது நீதியரசர்கள் குறை கூறி யுள்ளனர். மேற்கண்ட காரணங்களுக்காக மட்டுமே முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியுமா என்ற கேள்வி நமக்கு எழு கிறது. சரியான ஆய்வு முறையை ஆணையம் பின்பற்றவில்லை என்றால், முறையான ஆய்வை செய்ய வலியு றுத்தி மட்டும்தானே தீர்ப்பு வழங்கமுடியும் என்ற
சர்ச்சையும் உடன் வரு கிறது.
ஆனால் ஆந்திர உயர்நீ திமன்ற நீதியரசர்கள், வேறு ஒரு முக்கிய காரணத்தைக் கூறியுள்ளனர். 2007ம் ஆண்டு ஆணை, இடஒ துக்கீடு கொடுப்பதில், குறிப்பாக முஸ்லிம்களுக்கு என்று மதரீதியாக குறிப் பிட்டுள்ளது தவறானது என கூறியுள்ளனர். அது மதமாற்றத்தை உற்சா கப்படுத்தும் தன்மை கொண்டது என்று குற் றம் சாட்டியுள்ளனர். அத னாலேயே அது தொடர்ந்து நீடிக்கமுடியாது என்றும் கூறியுள்ளனர். இந்த இடத்தில், சமூக ரீதியில் மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய பிரிவினர்களாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது என்ற அரசாணை எப்படி மதமாற்றத்தை உற்சாகப் படுத்தும் என்ற புதிய
சர்ச்சை எழுப்பப்படாமல் இருக்க முடியாது.
ஆந்திராவில் இதற்கு முன்பே, இதே போன்ற முஸ்லிம் இடஒதுக்கீட்டு அறிவிப்பின் மீது, இதே போல உயர்நீதிமன்றம் ரத்து செய்த வரலாறு இருக்கிறது. முதலில் 2004ம் ஆண்டு ஆந்திர அரசாங்கம் ஒரு நிர்வாக ஆணையின் மூலம் 5% இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு அறிவித் திருந்தது. அது ஆந்திர மாநில சிறுபான்மை நிதிவா ரியத்தின் அறிக்கையின் மீது அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு. அப்போதும் ஆந்திர உயர்நீதிமன்றம் அந்த ஆணையை ரத்து செய்தது. அதன் பிறகு ஆந்திர அராசங்கம் ஒரு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உருவாக் கியது. அந்த ஆணையம் கொடுத்த அறிக்கை 2005ம் ஆண்டு அரசு ஆணையாக மாறியபோது, மீண்டும் உயர்நீதிமன்றம் அதை நிராகரித்தது.
இப்போது 2007ம் ஆண்டின் சட்டத்தை ரத்து செய்யும் நீதிமன்றம், சட்டத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளான, முஸ்லிம் என்பதும், மற்ற முஸ்லிம் குழுக்கள் என்பதும் சரியாக விளக்கப்படவில்லை என்ப தும் கூட நீதியரசர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அரசியல் சட்டப்பிரிவின் 14,15(1), 16(2) ஆகியவை மேற்கண்ட சட்டத்தை மீறி யுள்ளன என்று நீதியர
சர்கள் தெரிவித்துள்ளனர். ஆணையம் செய்த ஆய்வு போதாது என்று கூறுகிறது நீதிமன்றம். 2007ல் இத்தகைய முஸ்லிம் இடஒதுக் கீட்டை, சட்டமன்ற ஒப் புதலுடன், மாநில அரசு சட்டமாக்கியுள்ளது. அதன்பிறகு அரசாணை எண் 23 மற்றும் 231 ஆகிய வற்றின் மூலம் முஸ்லிம் குழுக்களுக்கான இட ஒதுக் கீடு அறிவிக்கப்பட்டது. அவை எல்லாமே இப் போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. 3வது அரசாணையாக, பணக்கார முஸ்லிம்களை நீக்கி விட்டு, இடஒதுக்கீடு தருவது என ஒரு ஆணையும் வெளியிடப்பட்டது. அதுவும் கூட இப்போது நீதிமன்றத்தால் ரத்து செய் யப்பட்டுள்ளது. இதில் மீனாக்குமாரி என்ற நீதியரசர், ஒரு பகுதி தலைமை நீதியரசருடன் உடன்பட்டாலும், தனது தீர்ப்பை தனியாக எழுதிக் கொடுத்துள்ளார். அரசாங் கம் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம், பிற்படுத்தப்பட்ட வகுப்பு களை அடையாளம் காட்ட உரிமை உண்டு என்று தனது கருத்தில் கூறியுள் ளார்.
முஸ்லிம் இடஒதுக் கீட்டு ஆணையை ரத்து செய்த நீதியரசர்கள், எந்த ஒரு நிபந்தனையையும் இதற்காக ஆணையம் முன் வைக்கவில்லை என்றும், ஆணையப் பரிந்துரையை வெளியிடுவதற்கு முன் னால், முஸ்லிம் இடஒதுக் கீட்டை மறுக்கும் எந்த ஒரு கருத்தையும் ஆணையம் அழைத்துப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதா கவும் கூட, நீதிமன்றம் குறை கூறியுள்ளது.
இதே நேரத்தில் மேற்கு வங்க அரசு திடீ ரென முஸ்லிம் மக்களுக்கு 10% இடஒதுக்
கீட்டை அறிவித்துள்ளது. அதற்கு அந்த அரசு கூறுகின்ற காரணங்கள், அரசியல் விளக்கங்களாக உள்ளன. வெளியாகி உள்ள ரெங்கநாத் மிஸ்ரா ஆணையம், முஸ் லிம்களுக்காக 10% இடஒ துக்கீடும், பிற சிறுபான்மை சமூகங்களுக்காக 5% இட
ஒதுக்கீடும், ஆக மொத்தம் 15% இடஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு அளிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரையை மத்திய அரசு எப்போது அமுலாக்கும் என்பது தெரியவில்லை என்றும், அதனால்தான் மேற்கு வங்க அரசு இப்படி தங்கள் மாநிலத்திற்கு அறிவித்திருக்கிறோம் என்று மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்
சாரியா கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் மக்கள் தொகையில் 25% பின்தங்கிய முஸ்லிம் மக்கள் என்றும் அவர் அப்போது கூறியுள்ளார். அதே சமயம் ஆண்டு வருமானமாக நாலரை லட்சம் ரூபாய் ஈட்டுபவர்களுக்கு, முஸ்லிம் இடஒதுக்கீடு கிடையாது என்றும் அவர் அறிவித்துள்ளார். கிரீமி லேயர் என்று அழைக்கப்படும், வசதியா னவர்களை தவிர்த்து விடல் என்ற விசயத்தையும், மேற்கு வங்க அரசு தங்களது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறியுள்ள மதமாற் றம் நடைபெறும் ஆபத்து, அந்த முஸ்லிம் இடஒதுக் கீட்டில் இருக்கிறது என்ற கருத்து பெரும் சர்ச்
சைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. மக்கள் தங்களது விருப்பப்படி, மதமாற்றம் செய்து கொள்வதற்கு இந்திய அரசியல் சட்டத்தின் மத உரிமை, அனுமதிக்கிறது. அப்படி இருக்கும் போது, பின்தங்கிய மக்களுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பளிக்கும் இடஒதுக்கீட்டை, மத அடையாளம் கொண்டது என்ற காரணத்தினால், மதமாற்றத்தை உற்
சாகப்படுத்தக்கூடியது என்று அழைக்கலாமா? அப் படியானால் தங்களுக்கு விருப்பமில்லா விட்டாலும், பெரும்பான்மை மத மான இந்து மதத்தில் தங் கியிருந்தால்தான் இடஒ துக்கீடு கிடைக்கும் என்ற சூழல் நிலவுகிறதா? அல் லது அப்படிப்பட் ஒரு சூழல் நிலவவேண்டும் என்றும், அது மாற்றப் பட் டுவிடக்கூடாது என்றும் குறிப்பிட்ட நீதியரசர்கள் விரும்புகிறார்களா? மாற்று மதத்திற்கு சென்றாலும், பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும் என்ற ஒரு நிலைமை உரு வானால், குறிப்பிட்ட மக்கள் பெரும்பான்மை மதமான இந்து மதத்தை விட்டு, மாறிச் சென்று விடுவார்கள் என்ற அச்சம் நீதியரசர்களுக்கு ஏன்தோன்றுகிறது? அப் படியானால் உடன்பாடு இல்லாவிட்டாலும், நமது நாட்டின் ஏழை மக்கள் இடஒதுக்கீடு பெறுவதற்காக, இந்து மதத்திலேயே இருக்க வேண்டும் என்று குறிப் பிட்ட நீதியரசர்கள் எண் ணுகிறார்களா? அப்படி எண்ணுவதானால் அல் லது அப்படிப்பட்ட மனோபாவம் இருக்கு மானால், எந்த சார்புமற்று சிந்திக்க வேண்டிய நீதியர சர்கள், ஒரு மதச்சார்பாக சிந்திக்கிறார்கள் என்று தானே பொருள்படும்? இது ஒரு மதச்சார்பு மனப்பான்மை என்று அழைக்கப்படாதா? அதாவது ஒரு மதச்சார்பு (Theocratic) என்ற மனப் பான்மை அல்லாமல் வேறென்ன? நீதியர சர்கள் இப்படிப்பட்ட மனப்பான்மையில் இருப்பதுதான் இந்திய அரசா என்றும் கூட விவா திக்கப்பட வேண்டும்.
Tuesday, February 9, 2010
ராஜபக்சேயின் வெற்றியும், ஈழ அகதிகள் எதிர்பார்ப்பும்
நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில், வாக்க ளித்த ஈழத்தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும், பெரும்பான்மையாகவும், கணிசமாகவும் அதிபர் ராஜபக்சேக்கு எதிராக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தார்கள். ஒரு மாத காலத்திற்கு மேலாக, பல்வேறு விவாதங்களை நடத்தி, தங்களது வாக்குகளை தமிழர்களை அழித்த இன அழிப்புப் போரை திட்டமிட்டு நடத்தியதாக அதிபர் மகிந்தாவை, கணித்த காரணத்தினால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் வந்திருந்தார்கள். ராஜபக்சேயை தோற்கடிப்பதற்கு ஏதுவான வேட்பாளராக அவர்கள் சரத்பொன்சேகாவை கருதியதால், அவருக்கே தங்களது வாக்குகளை அளித்தார்கள். மேற்கூறிய இரண்டு வேட்பாளர்களுமே, தமிழினத்திற்கு எதிரான போரை நடத்தியவர்கள் என்றும், அதனால் அவர்கள் இருவருக்குமே எதிராக தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்றும், கேட்ட சிங்களதமிழர் வேட்பாளர்களைக் கூட, தமிழ் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக தங்களுடைய இலக்காக ராஜபக்சேயை தோற்கடிக்கும் நோக்கம் கொண்ட வாக்குகள், பொன்சேகாவிற்கு விழுந்தன. அதேசமயம் தென்னிலங்கையிலுள்ள சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் வாக்குகள் மகிந்தாவிற்கே விழுந்தன. இத்தகைய வாக்குப்பதிவுகளே, இரண்டு விதமான போக்குகள் மற்றும் இரண்டு விதமான சிந்தனைகள் இருப்பதை உறுதிப்படுத்தின. இலங்கைத் தீவிற்குள் வாழ்கின்ற இரண்டு தேசிய இனங்களின், வெவ்வேறு உணர்வுகள் அதன் மூலம் வெளிப்பட்டன. இதுவே இரண்டு தேசிய இனங்களும், இரண்டு தேசங்களாக பிரிந்தே, அந்த தீவிற்குள் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கான நிருபணம் என்று கூறுவோரும் உண்டு.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் மத்தியில் நிலவி வந்த அல்லது நிலவுகின்ற உணர்வுகளை கணக்கெடுத்தே, பொன்சேகாவிற்கு ஆதரவு கொடுத்தனர். அதனால் இந்த தேர்தல் ஆதரவு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியால் ஏற்பட்ட முடிவல்ல. மாறாக தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாட்டை, முன்கூட்டியே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உணர்ந்து முடிவெடுத்தனர் என்பது தான் உண்மை. ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நேர் எதிராக சென்றுவிட்டன.
இலங்கைத் தீவில் அதிபராக வருகின்றவர் யார் என்பதையொட்டி தங்களது எதிர்காலத்தை, தீர்மானித்துக் கொண்டிருப்பவர்கள், இலங்கைத் தீவிற்குள் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் மட்டுமல்ல. இலங்கைக்கு வெளியே அகதிகளாக ஓடிவந்திருக்கும், 1 லட்சத்திற்கு மேற்பட்ட இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழர்களுக்கும், இதையொட்டியே சிந்தனைகள் எழுகின்றன. அவர்கள் தங்களது எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்ற கனவிலிருந்து, எப்படி அமையப்போகிறதோ என்ற பீதிக்குள்ளாகியுள்ளனர். இத்தகையச் சூழ்நிலையிலும் கூட, தமிழகத்தில் அகதிகளாகயிருக்கும் ஈழத் தமிழர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வரும், ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க வேண்டும் என்ற ஒரு விவாதம் எழுப்பப்பட்டது. இந்தியாவிலிருக்கின்ற பல மனிதாபிமானிகள் அதை வரவேற்றனர். ஆனால் ஈழத்தமிழர்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகள் வெளிப்பட்டன. தாங்கள் அடுத்த நாட்டில் குடியுரிமைப் பெற்று, வாழ்வதற்கான மனோநிலையில்லை என்று கூறினார்கள். அதேசமயம் எதிர்காலத்தில் ஒரு நாள், தங்களது தாய் மண்ணிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணங்களை, அவர்கள் வலுவாக வைத்திருக்கிறார்கள். அதேசமயம் இங்குள்ள அகதிகள் முகாம்களில், தாங்கள் அன்றாட வேலை கிடைக்காமல் சிரமப்படுவதையும் எண்ணிப்பார்க்கிறார்கள். அவர்கள் கைகளில் இருப்பது இலங்கை பாஸ்போர்ட். ஆனால் அந்த தமிழர்கள் 27 ஆண்டுகளாக இந்தியாவிற்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது எண்ணிக்கையில், அகதிகள் முகாம்களில் வாழ்பவர்கள் தவிர, வெளியே காவல்நிலையங்களில் பதிவு செய்து கொண்டு வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள். அப்படியிருப்பவர்களுக்கு பெரும்பாலும், ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற சொந்தங்களிடமிருந்து, பணவிடைத் தாள் மூலம் செலவுக்குக் கிடைத்து விடுகிறது.
மேற்கண்ட நிலையிலுள்ள ஈழத்தமிழர்கள், நிரந்தர இந்திய குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள ஆர்வமாக இல்லாவிட்டாலும், மற்றொரு வாய்ப்பை பரிசீலிக்கிறிர்களா என்று சிலர் வினவுகிறார்கள். அது இந்தியாவிலும், இலங்கையிலும், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக வாழும் நிலையை, அத்தகையவர்கள் ஆலோசனையாக முன்வைக்கிறார்கள். அதற்கும் கூட, அந்த ஈழத்தமிழ் உணர்வாளர்கள் உடன்படவில்லை. அதற்கான காரணமாக அவர்கள் முன்வைப்பது, தங்கள் நாட்டு ஆட்சியாளர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது. தாங்கள் இந்திய குடியுரிமைப் பெற்றாலோ, இரட்டைக் குடியுரிமைப் பெற்றாலோ, இலங்கையை ஆளும் சிங்கள ஆட்சியாளர்கள், அதையே காரணமாக்கி தங்களை தீவிற்குள் வாழ்வதற்கு விரும்பாதவர்கள் என்பதாக முத்திரை குத்திவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால் மேற்குறிப்பிட்ட இரண்டு விதமான குடியுரிமைகளுமே, தங்களுக்கு சாதகமானது அல்ல என்பது அவர்களது வாதம்.
அப்படியானால் அவர்கள் விரும்புவது தான் என்ன என்ற கேள்வி எழுகிறது. தங்களுக்கு 10 ஆண்டுகளுக்கான தற்காலிக பாஸ்போர்ட் சீட்டு வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருக்கிறது. அது எந்த அளவுக்கு பயன்படும் என்று கேட்டால், தாங்கள் விரும்பிய நேரத்தில் உலகின் எந்த நாட்டிற்கும், இந்தியாவிலிருந்து சென்றுவர முடியும் என்று கூறுகிறார்கள். ஈழத்தமிழர்களில் கணிசமான குடும்பத்தவர்கள், தங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களில் குறைந்தது யாராவது ஒருவர், ஐரோப்பிய நாடுகளிலோ, அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ இருப்பதை காணமுடிகிறது. அதனால் தங்களது சுற்றத்தாருடன் ஊடாடலில் இருப்பதற்காக, இத்தகைய தற்காலிக பாஸ்போர்ட் ஒன்றை, தமிழ்நாடு அரசிடம் கேட்டு நிற்கிறார்கள்.
இங்கே வாழ்கின்ற ஈழத்தமிழ் அகதிகளை, இலங்கை அரசு இரண்டு பிரிவுகளாக பிரித்துப் பார்க்கிறது. ஒரு பிரிவினர் போர் நடக்கும் காலங்களில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்பதாக, இலங்கை அரசால் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளவர்கள். அடுத்த பிரிவினர் புலிகளுக்கெதிரான அமைப்புகளுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டு, இந்தியாவிலிருக்கின்ற உளவு நிறுவன அதிகாரிகளுக்கு உதவிகரமாக இருக்கின்ற சக்தியினர். அதனாலேயே அத்தகைய அதிகாரிகளின் உதவியையும் பெற்றுக் கொண்டிருப்பவர்கள். இந்த இரண்டாவது வகையினர், அதிபர் ராஜபக்சேயின் தேர்தல் வெற்றியால், ஈர்க்கப்பட்டு இலங்கைத் தீவிற்கு, திரும்பச் செல்ல ஆயத்தமாகவுள்ளனர். அதேசமயம் முதல் பிரிவினர் தங்களுக்குள்ள அச்சத்தை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் இந்த நிலையில் இலங்கைச் சென்றால், அல்லது இலங்கைக்கு அனுப்பப்பட்டால், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் ராஜபக்சே குடும்பத்தினரது உத்தரவின் பேரில், தாங்கள் வேட்டையாடப்படுவார்கள் என்பதாக அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இந்திய அரசின் முன் முயற்சியில், ராஜபக்சே அரசு பகிரங்கமாக ஒரு உறுதி மொழியைக் கையெழுத்திட்டு, இந்திய அரசுக்கு கொடுக்குமானால், தாங்கள் தாய் நாடு செல்வதற்கு இணங்க முடியும் என அவர்கள் எண்ணுகிறார்கள். அதாவது போர்க்காலத்தில் நடந்த நிகழ்வுகளை மனதில் கொண்டோ, பொய்யான குற்றப்பதிவுகளை காரணமாக்கியோ, தாங்கள் எக்காரணம் கொண்டும் அரசாலோ, ஒட்டு ஆயுதக் குழுக்களாலோ பழிவாங்கப்பட மாட்டடோம் என்ற உறுதியை, இலங்கை அரசிடம் பெற்றுத்தர முடியுமா என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். சமாதானத்தையும், அமைதியையும் விரும்பக்கூடிய சக்திகள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியுமா என்ற கேள்வியை நாமும் அரசுக்கு முன்வைக்கிறோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் மத்தியில் நிலவி வந்த அல்லது நிலவுகின்ற உணர்வுகளை கணக்கெடுத்தே, பொன்சேகாவிற்கு ஆதரவு கொடுத்தனர். அதனால் இந்த தேர்தல் ஆதரவு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியால் ஏற்பட்ட முடிவல்ல. மாறாக தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாட்டை, முன்கூட்டியே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உணர்ந்து முடிவெடுத்தனர் என்பது தான் உண்மை. ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நேர் எதிராக சென்றுவிட்டன.
இலங்கைத் தீவில் அதிபராக வருகின்றவர் யார் என்பதையொட்டி தங்களது எதிர்காலத்தை, தீர்மானித்துக் கொண்டிருப்பவர்கள், இலங்கைத் தீவிற்குள் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் மட்டுமல்ல. இலங்கைக்கு வெளியே அகதிகளாக ஓடிவந்திருக்கும், 1 லட்சத்திற்கு மேற்பட்ட இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழர்களுக்கும், இதையொட்டியே சிந்தனைகள் எழுகின்றன. அவர்கள் தங்களது எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்ற கனவிலிருந்து, எப்படி அமையப்போகிறதோ என்ற பீதிக்குள்ளாகியுள்ளனர். இத்தகையச் சூழ்நிலையிலும் கூட, தமிழகத்தில் அகதிகளாகயிருக்கும் ஈழத் தமிழர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வரும், ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க வேண்டும் என்ற ஒரு விவாதம் எழுப்பப்பட்டது. இந்தியாவிலிருக்கின்ற பல மனிதாபிமானிகள் அதை வரவேற்றனர். ஆனால் ஈழத்தமிழர்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகள் வெளிப்பட்டன. தாங்கள் அடுத்த நாட்டில் குடியுரிமைப் பெற்று, வாழ்வதற்கான மனோநிலையில்லை என்று கூறினார்கள். அதேசமயம் எதிர்காலத்தில் ஒரு நாள், தங்களது தாய் மண்ணிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணங்களை, அவர்கள் வலுவாக வைத்திருக்கிறார்கள். அதேசமயம் இங்குள்ள அகதிகள் முகாம்களில், தாங்கள் அன்றாட வேலை கிடைக்காமல் சிரமப்படுவதையும் எண்ணிப்பார்க்கிறார்கள். அவர்கள் கைகளில் இருப்பது இலங்கை பாஸ்போர்ட். ஆனால் அந்த தமிழர்கள் 27 ஆண்டுகளாக இந்தியாவிற்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது எண்ணிக்கையில், அகதிகள் முகாம்களில் வாழ்பவர்கள் தவிர, வெளியே காவல்நிலையங்களில் பதிவு செய்து கொண்டு வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள். அப்படியிருப்பவர்களுக்கு பெரும்பாலும், ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற சொந்தங்களிடமிருந்து, பணவிடைத் தாள் மூலம் செலவுக்குக் கிடைத்து விடுகிறது.
மேற்கண்ட நிலையிலுள்ள ஈழத்தமிழர்கள், நிரந்தர இந்திய குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள ஆர்வமாக இல்லாவிட்டாலும், மற்றொரு வாய்ப்பை பரிசீலிக்கிறிர்களா என்று சிலர் வினவுகிறார்கள். அது இந்தியாவிலும், இலங்கையிலும், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக வாழும் நிலையை, அத்தகையவர்கள் ஆலோசனையாக முன்வைக்கிறார்கள். அதற்கும் கூட, அந்த ஈழத்தமிழ் உணர்வாளர்கள் உடன்படவில்லை. அதற்கான காரணமாக அவர்கள் முன்வைப்பது, தங்கள் நாட்டு ஆட்சியாளர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது. தாங்கள் இந்திய குடியுரிமைப் பெற்றாலோ, இரட்டைக் குடியுரிமைப் பெற்றாலோ, இலங்கையை ஆளும் சிங்கள ஆட்சியாளர்கள், அதையே காரணமாக்கி தங்களை தீவிற்குள் வாழ்வதற்கு விரும்பாதவர்கள் என்பதாக முத்திரை குத்திவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால் மேற்குறிப்பிட்ட இரண்டு விதமான குடியுரிமைகளுமே, தங்களுக்கு சாதகமானது அல்ல என்பது அவர்களது வாதம்.
அப்படியானால் அவர்கள் விரும்புவது தான் என்ன என்ற கேள்வி எழுகிறது. தங்களுக்கு 10 ஆண்டுகளுக்கான தற்காலிக பாஸ்போர்ட் சீட்டு வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருக்கிறது. அது எந்த அளவுக்கு பயன்படும் என்று கேட்டால், தாங்கள் விரும்பிய நேரத்தில் உலகின் எந்த நாட்டிற்கும், இந்தியாவிலிருந்து சென்றுவர முடியும் என்று கூறுகிறார்கள். ஈழத்தமிழர்களில் கணிசமான குடும்பத்தவர்கள், தங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களில் குறைந்தது யாராவது ஒருவர், ஐரோப்பிய நாடுகளிலோ, அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ இருப்பதை காணமுடிகிறது. அதனால் தங்களது சுற்றத்தாருடன் ஊடாடலில் இருப்பதற்காக, இத்தகைய தற்காலிக பாஸ்போர்ட் ஒன்றை, தமிழ்நாடு அரசிடம் கேட்டு நிற்கிறார்கள்.
இங்கே வாழ்கின்ற ஈழத்தமிழ் அகதிகளை, இலங்கை அரசு இரண்டு பிரிவுகளாக பிரித்துப் பார்க்கிறது. ஒரு பிரிவினர் போர் நடக்கும் காலங்களில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்பதாக, இலங்கை அரசால் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளவர்கள். அடுத்த பிரிவினர் புலிகளுக்கெதிரான அமைப்புகளுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டு, இந்தியாவிலிருக்கின்ற உளவு நிறுவன அதிகாரிகளுக்கு உதவிகரமாக இருக்கின்ற சக்தியினர். அதனாலேயே அத்தகைய அதிகாரிகளின் உதவியையும் பெற்றுக் கொண்டிருப்பவர்கள். இந்த இரண்டாவது வகையினர், அதிபர் ராஜபக்சேயின் தேர்தல் வெற்றியால், ஈர்க்கப்பட்டு இலங்கைத் தீவிற்கு, திரும்பச் செல்ல ஆயத்தமாகவுள்ளனர். அதேசமயம் முதல் பிரிவினர் தங்களுக்குள்ள அச்சத்தை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் இந்த நிலையில் இலங்கைச் சென்றால், அல்லது இலங்கைக்கு அனுப்பப்பட்டால், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் ராஜபக்சே குடும்பத்தினரது உத்தரவின் பேரில், தாங்கள் வேட்டையாடப்படுவார்கள் என்பதாக அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இந்திய அரசின் முன் முயற்சியில், ராஜபக்சே அரசு பகிரங்கமாக ஒரு உறுதி மொழியைக் கையெழுத்திட்டு, இந்திய அரசுக்கு கொடுக்குமானால், தாங்கள் தாய் நாடு செல்வதற்கு இணங்க முடியும் என அவர்கள் எண்ணுகிறார்கள். அதாவது போர்க்காலத்தில் நடந்த நிகழ்வுகளை மனதில் கொண்டோ, பொய்யான குற்றப்பதிவுகளை காரணமாக்கியோ, தாங்கள் எக்காரணம் கொண்டும் அரசாலோ, ஒட்டு ஆயுதக் குழுக்களாலோ பழிவாங்கப்பட மாட்டடோம் என்ற உறுதியை, இலங்கை அரசிடம் பெற்றுத்தர முடியுமா என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். சமாதானத்தையும், அமைதியையும் விரும்பக்கூடிய சக்திகள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியுமா என்ற கேள்வியை நாமும் அரசுக்கு முன்வைக்கிறோம்.
Saturday, February 6, 2010
சீனாவை சுற்றிவளைக்கிறதா அமெரிக்கா?
மாறி வரும் உலக பொருளாதார விதிகளில், ஏகாதிபத்திய உலகமயமாக்கல் சரிவை சந்தித்ததையொட்டி, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியைச் சந்தித்தன. அதேநேரம் சீனாவும், இந்தியாவும் வருங்கால உலக பொருளாதாரத்தில், தலைமை தாங்கும் இடத்திற்கு வருவார்கள் என்ற செய்தி உலகெங்கும் பரவியது. சீனாவிற்கும், இந்தியாவிற்கும் மத்தியில் நிலவுகின்ற வேறுபாடுகளைத் தாண்டி, சமீபத்தில் உலக அரங்கில் இந்தியாவும், சீனாவும் இணைந்த முடிவுகளை எடுத்து வருகின்றன. சமீபத்திய இந்திய குடியரசுத் தலைவரது சீனப் பயணம் சீனஇந்திய உறவில் மேலும் நெருக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஆசியாவில் இருக்கின்ற இந்த 2 பெரிய நாடுகளின் முன்னேற்றம் என்பது, எந்த வகையிலும் ஆசியாக் கண்டத்தையும் சேர்த்து செல்வாக்குச் செலுத்த அல்லது ஆதிக்கம் செலுத்த விரும்பும் அமெரிக்கா உட்பட்ட உலக வல்லரசுகளுக்கு விருப்பமான செய்தியாக இருக்காது. குறிப்பாக சீனாவின் முன்னேற்றம் என்பது அமெரிக்க வல்லரசுக்கு உடன்பாடான செய்தியாக இருக்க முடியாது.
இத்தகைய சூழலில் நான்கு நாட்களுக்கு முன்னால் அதிகாரப்பூர்வ சீன செய்தி நிறுவனத்தில், அந்த நாட்டின் விமானப்படை தளபதியான டைசூ என்பவர் பகிரங்கமாகவே ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் சதி என்ற தலைப்பில் அந்த கட்டுரை வெளியிடப்பட்டது. சீனாவை பிறை வடிவிலான சுற்றி வளைத்தல் என்ற போர்த்தந்திரத்தை கையாண்டு அமெரிக்கா நெருக்குகிறது என்பதாக அவர் எழுதியிருந்தார். கடந்த மே மாதம் 2425 தேதிகளில் சீனஅமெரிக்க எதிர்கால மற்றும் பொருளாதார விவாதங்களில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடந்த நேரத்தில், இதுபோன்ற கட்டுரை வெளியாகியிருப்பது ஆச்சரியமான செய்தியாக தோற்றமளித்தது. சோவியத் யூனியனை மென்மையாக நெறிப்பதற்காக, சீனாவை கடுமையாக கையாள்வது என்ற தந்திரத்தை அமெரிக்கா எடுப்பதாக கட்டுரையாளர் எழுதியிருக்கிறார்.
சீன நாட்டில் இருக்கின்ற 28 பெரும் தொழிற்சாலைகளில், 21 தொழிற்சாலைகளை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. வர்த்தகத்தின் மூலம் சீன நாடு வளர்ந்து வருகின்ற நேரத்தில், சீனாவின் பொருளாதாரத்தை உறுதியற்றதாக செய்வதற்கு அமெரிக்காவின் இந்த கட்டுப்பாடு உதவும் என்பதாகவும் தெரிகிறது. சீனாவின் பங்குச்சந்தையிலும், வங்கிகளில் உள்ள பங்குகளிலும், சீனாவின் கனிமவளத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறது என்ற செய்தி ஆச்சரியமான ஒன்றாகயிருக்கிறது. சீனாவின் சுய உற்பத்தி என்ற முத்திரைகளை காலி செய்து விட்டு, அந்த நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு கிடைத்த லாபத்தை, மீண்டும் சீனாவிலேயே அமெரிக்கா மறு முதலீடு செய்து வருகிறது.
சீனாவிற்குள் தனது கரங்களை வலுப்படுத்தும் அதே நேரத்தில் அமெரிக்கா தனது நாட்டு நிறுவனங்களை சீனா வாங்கிவிடாமல் கவனமாக தவிர்த்து வருகிறது. அமெரிக்காவின் எந்தவொரு உயர் தொழில்நுட்ப ஆயுதங்களையும், சீனா வாங்கிவிடாமல் தடுத்தும் வருகிறது. அமெரிக்காவின் வருவாய் பத்திரங்களில் சீனா அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்பதே அமெரிக்க அரசின் விருப்பம். அதன் மூலம் அமெரிக்காவிலிருந்து புதிய தொழில்நுட்பங்களை வாங்குவதற்கோ, நவீன தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கோ, பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்திச் செய்வதற்கோ, சீனாவிடம் நிதி இருக்கக்கூடாது என்பது அமெரிக்காவின் ஒரு ராஜதந்திரமாக இருக்கிறது.
சமீபத்தில் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதிச் செய்யப்பட்ட விளையாட்டுப் பொம்மைகள் நச்சுத்தன்மைக் கொண்டவை என்று அமெரிக்கா அம்பலப்படுத்தியிருந்தது. சீனா அமெரிக்காவிற்கு விற்ற நச்சுப்பொம்மைகளுக்குப் பதிலாக, அமெரிக்கா சீனாவிற்கு நச்சுக்கடன்களை திருப்பிக் கொடுக்கிறது என்பது அமெரிக்காவில் புழக்கத்திலிருக்கும் ஒரு நகைச்சுவை. அமெரிக்காவின் தூதரக அரசியலும், சீனாவை முழுமையாக தனிமைப்படுத்துவதில் தான் குறியாகயிருக்கிறது. தென்கிழக்கு ஆசியா அமெரிக்காவின் மீது ஒவ்வொரு நாளும் அதிகமாக சார்ந்து நிற்கத் தொடங்கியிருக்கிறது என்ற செய்தியை சீன நிபுணர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.
வடகிழக்கு ஆசியாவும், வியட்நாம் இப்போது அமெரிக்க சார்பு என்ற நிலைக்குச் சென்று விட்டது. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பிறகு, அமெரிக்க செல்வாக்கை எதிர்த்து போட்டிப் போடுவதற்கான ஒரு சக்தி இந்த உலகத்தில் இருக்கவில்லை. அதனாலேயே பல்வேறு சிறிய நாடுகளும், அமெரிக்க சார்பு பொருளாதாரத்தை உள்வாங்கியே தங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளன. மக்கள் சீன குடியரசின் நண்பர்களாக உள்ள வடகொரியா, மியான்மர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை, புதிய அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமா ஏற்படுத்தியிருப்பது இந்த வட்டாரத்தில் சீனாவின் செல்வாக்கிற்கு சவால் விடுவது போன்றது என்பதாக அந்த கட்டுரையாளர் கருதுகிறார்.
வடகொரியா சமீபத்தில் தனது அணு ஆயுத திட்டத்தை வளர்த்து வருகிறது. அதனால் தென் கொரியாவுடன் புதிய மோதல் உருவாகியுள்ளது. அதையொட்டி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவிற்கு நெருக்கமாக செல்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணமாக அமெரிக்கா மறைமுகமாக செயல்படுகிறது என்று சீன நிபுணர் கருதுகிறார். அதேபோல மியான்மர் நாட்டில் அமெரிக்காவின் புதிய தலையீடு, அந்த நாட்டை சீனாவிலிருந்து விலக்கியும், இந்தியாவிற்கு நெருக்கமாக ஆக்கவும் செய்கிறது என்பது இன்னொரு சீன உணர்தலாகயிருக்கிறது. ஆப்கான் போரில் அமெரிக்காவின் அதீதமான ஈடுபாடு, பாகிஸ்தானை அமெரிக்காவிற்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. அதேபோல இந்திய பெருங்கடலில், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து போட்டு வரும் ஒப்பந்தங்களும், செயல்பாடுகளும், சீனாவின் முயற்சிகளை முறியடிக்கும் என்பதும் இன்னொரு செய்தி. சீனாவிற்குள் திபேத் பிரச்சனையை மீண்டும் கிளப்புவதிலும், அமெரிக்காவிற்கு விருப்பம் இருக்கிறது. இவையெல்லாமே சீனாவை சுற்றி வளைக்கும் அமெரிக்க தந்திரங்கள் என்கிறார் கட்டுரையாளர். இதை சீனா பற்றி ஆய்வு செய்யும் மையத்திலிருக்கும் ராஜன் எழுதுகிறார்.
இதேபோல சீன குடியரசின் முக்கிய படையான மக்கள் விடுதலை ராணுவத்தின் தளபதிகள் தங்களது ஆய்வுகளில் எழுதியுள்ளார்கள். சீன மக்கள் காங்கிரஸ் அமர்வுக்கு முன்பு, சீனக்கனவு என்று வெளியிடப்பட்ட புத்தகத்திலும் இதுபோன்ற கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இந்திய பெருங்கடலிலும், இலங்கைத் தீவிற்குள்ளும் இந்தியாவின் தலையீடுகளையும், செல்வாக்கையும் எதிர்த்து சீனா போட்டியிடுகிறது என்பது நாம் அறிந்த செய்தியாகயிருக்கிறது. அத்தகைய போட்டியில் இந்திய அரசின் கரங்கள் வலுப்படுவது அமெரிக்காவிற்கு சாதகமானது என சீனா கருதுகிறது.
இன்றைய உலகின் அதிகார சமன்பாட்டிற்கான முயற்சிகளில், செல்வாக்குப்பெற்ற சக்திகளுக்குள் மோதலும், போட்டியும் அதேசமயம் சமரசமும் இருந்துக் கொண்டேயிருக்கும். அதில் அதிகமான அளவு பலன்களை ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்களும் பெறுவது என்பதே அவரவர் வெற்றியாக அமையும். இந்த சூழலில் இந்திய அரசு தனக்கு நம்பகமான சக்தியாக, அண்டையிலிருக்கும் வளர்ந்து வரும் நாடான சீனாவை கருதுகிறதா? அல்லது வளர்ந்த நாடான அமெரிக்காவை கருதுகிறதா என்பது தான், இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். புதிய அணிசேர்க்கைகளை கணக்கிலெடுத்து, சார்பு தன்மை விடுத்து, ஆசிய கண்டத்திற்கு உள்ளேயுள்ள போட்டியில் வலுப்பெறுவது ஒரு புறமும், அதேசமயம் உலக அரங்கில் முன்னேற வளரும் நாடுகளுடன் கைகோர்ப்பது மறுபுறமும் என்ற தந்திரத்தை இந்திய அரசு தைரியமாக கையிலெடுக்க முடியுமா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
இத்தகைய சூழலில் நான்கு நாட்களுக்கு முன்னால் அதிகாரப்பூர்வ சீன செய்தி நிறுவனத்தில், அந்த நாட்டின் விமானப்படை தளபதியான டைசூ என்பவர் பகிரங்கமாகவே ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் சதி என்ற தலைப்பில் அந்த கட்டுரை வெளியிடப்பட்டது. சீனாவை பிறை வடிவிலான சுற்றி வளைத்தல் என்ற போர்த்தந்திரத்தை கையாண்டு அமெரிக்கா நெருக்குகிறது என்பதாக அவர் எழுதியிருந்தார். கடந்த மே மாதம் 2425 தேதிகளில் சீனஅமெரிக்க எதிர்கால மற்றும் பொருளாதார விவாதங்களில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடந்த நேரத்தில், இதுபோன்ற கட்டுரை வெளியாகியிருப்பது ஆச்சரியமான செய்தியாக தோற்றமளித்தது. சோவியத் யூனியனை மென்மையாக நெறிப்பதற்காக, சீனாவை கடுமையாக கையாள்வது என்ற தந்திரத்தை அமெரிக்கா எடுப்பதாக கட்டுரையாளர் எழுதியிருக்கிறார்.
சீன நாட்டில் இருக்கின்ற 28 பெரும் தொழிற்சாலைகளில், 21 தொழிற்சாலைகளை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. வர்த்தகத்தின் மூலம் சீன நாடு வளர்ந்து வருகின்ற நேரத்தில், சீனாவின் பொருளாதாரத்தை உறுதியற்றதாக செய்வதற்கு அமெரிக்காவின் இந்த கட்டுப்பாடு உதவும் என்பதாகவும் தெரிகிறது. சீனாவின் பங்குச்சந்தையிலும், வங்கிகளில் உள்ள பங்குகளிலும், சீனாவின் கனிமவளத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறது என்ற செய்தி ஆச்சரியமான ஒன்றாகயிருக்கிறது. சீனாவின் சுய உற்பத்தி என்ற முத்திரைகளை காலி செய்து விட்டு, அந்த நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு கிடைத்த லாபத்தை, மீண்டும் சீனாவிலேயே அமெரிக்கா மறு முதலீடு செய்து வருகிறது.
சீனாவிற்குள் தனது கரங்களை வலுப்படுத்தும் அதே நேரத்தில் அமெரிக்கா தனது நாட்டு நிறுவனங்களை சீனா வாங்கிவிடாமல் கவனமாக தவிர்த்து வருகிறது. அமெரிக்காவின் எந்தவொரு உயர் தொழில்நுட்ப ஆயுதங்களையும், சீனா வாங்கிவிடாமல் தடுத்தும் வருகிறது. அமெரிக்காவின் வருவாய் பத்திரங்களில் சீனா அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்பதே அமெரிக்க அரசின் விருப்பம். அதன் மூலம் அமெரிக்காவிலிருந்து புதிய தொழில்நுட்பங்களை வாங்குவதற்கோ, நவீன தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கோ, பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்திச் செய்வதற்கோ, சீனாவிடம் நிதி இருக்கக்கூடாது என்பது அமெரிக்காவின் ஒரு ராஜதந்திரமாக இருக்கிறது.
சமீபத்தில் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதிச் செய்யப்பட்ட விளையாட்டுப் பொம்மைகள் நச்சுத்தன்மைக் கொண்டவை என்று அமெரிக்கா அம்பலப்படுத்தியிருந்தது. சீனா அமெரிக்காவிற்கு விற்ற நச்சுப்பொம்மைகளுக்குப் பதிலாக, அமெரிக்கா சீனாவிற்கு நச்சுக்கடன்களை திருப்பிக் கொடுக்கிறது என்பது அமெரிக்காவில் புழக்கத்திலிருக்கும் ஒரு நகைச்சுவை. அமெரிக்காவின் தூதரக அரசியலும், சீனாவை முழுமையாக தனிமைப்படுத்துவதில் தான் குறியாகயிருக்கிறது. தென்கிழக்கு ஆசியா அமெரிக்காவின் மீது ஒவ்வொரு நாளும் அதிகமாக சார்ந்து நிற்கத் தொடங்கியிருக்கிறது என்ற செய்தியை சீன நிபுணர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.
வடகிழக்கு ஆசியாவும், வியட்நாம் இப்போது அமெரிக்க சார்பு என்ற நிலைக்குச் சென்று விட்டது. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பிறகு, அமெரிக்க செல்வாக்கை எதிர்த்து போட்டிப் போடுவதற்கான ஒரு சக்தி இந்த உலகத்தில் இருக்கவில்லை. அதனாலேயே பல்வேறு சிறிய நாடுகளும், அமெரிக்க சார்பு பொருளாதாரத்தை உள்வாங்கியே தங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளன. மக்கள் சீன குடியரசின் நண்பர்களாக உள்ள வடகொரியா, மியான்மர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை, புதிய அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமா ஏற்படுத்தியிருப்பது இந்த வட்டாரத்தில் சீனாவின் செல்வாக்கிற்கு சவால் விடுவது போன்றது என்பதாக அந்த கட்டுரையாளர் கருதுகிறார்.
வடகொரியா சமீபத்தில் தனது அணு ஆயுத திட்டத்தை வளர்த்து வருகிறது. அதனால் தென் கொரியாவுடன் புதிய மோதல் உருவாகியுள்ளது. அதையொட்டி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவிற்கு நெருக்கமாக செல்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணமாக அமெரிக்கா மறைமுகமாக செயல்படுகிறது என்று சீன நிபுணர் கருதுகிறார். அதேபோல மியான்மர் நாட்டில் அமெரிக்காவின் புதிய தலையீடு, அந்த நாட்டை சீனாவிலிருந்து விலக்கியும், இந்தியாவிற்கு நெருக்கமாக ஆக்கவும் செய்கிறது என்பது இன்னொரு சீன உணர்தலாகயிருக்கிறது. ஆப்கான் போரில் அமெரிக்காவின் அதீதமான ஈடுபாடு, பாகிஸ்தானை அமெரிக்காவிற்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. அதேபோல இந்திய பெருங்கடலில், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து போட்டு வரும் ஒப்பந்தங்களும், செயல்பாடுகளும், சீனாவின் முயற்சிகளை முறியடிக்கும் என்பதும் இன்னொரு செய்தி. சீனாவிற்குள் திபேத் பிரச்சனையை மீண்டும் கிளப்புவதிலும், அமெரிக்காவிற்கு விருப்பம் இருக்கிறது. இவையெல்லாமே சீனாவை சுற்றி வளைக்கும் அமெரிக்க தந்திரங்கள் என்கிறார் கட்டுரையாளர். இதை சீனா பற்றி ஆய்வு செய்யும் மையத்திலிருக்கும் ராஜன் எழுதுகிறார்.
இதேபோல சீன குடியரசின் முக்கிய படையான மக்கள் விடுதலை ராணுவத்தின் தளபதிகள் தங்களது ஆய்வுகளில் எழுதியுள்ளார்கள். சீன மக்கள் காங்கிரஸ் அமர்வுக்கு முன்பு, சீனக்கனவு என்று வெளியிடப்பட்ட புத்தகத்திலும் இதுபோன்ற கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இந்திய பெருங்கடலிலும், இலங்கைத் தீவிற்குள்ளும் இந்தியாவின் தலையீடுகளையும், செல்வாக்கையும் எதிர்த்து சீனா போட்டியிடுகிறது என்பது நாம் அறிந்த செய்தியாகயிருக்கிறது. அத்தகைய போட்டியில் இந்திய அரசின் கரங்கள் வலுப்படுவது அமெரிக்காவிற்கு சாதகமானது என சீனா கருதுகிறது.
இன்றைய உலகின் அதிகார சமன்பாட்டிற்கான முயற்சிகளில், செல்வாக்குப்பெற்ற சக்திகளுக்குள் மோதலும், போட்டியும் அதேசமயம் சமரசமும் இருந்துக் கொண்டேயிருக்கும். அதில் அதிகமான அளவு பலன்களை ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்களும் பெறுவது என்பதே அவரவர் வெற்றியாக அமையும். இந்த சூழலில் இந்திய அரசு தனக்கு நம்பகமான சக்தியாக, அண்டையிலிருக்கும் வளர்ந்து வரும் நாடான சீனாவை கருதுகிறதா? அல்லது வளர்ந்த நாடான அமெரிக்காவை கருதுகிறதா என்பது தான், இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். புதிய அணிசேர்க்கைகளை கணக்கிலெடுத்து, சார்பு தன்மை விடுத்து, ஆசிய கண்டத்திற்கு உள்ளேயுள்ள போட்டியில் வலுப்பெறுவது ஒரு புறமும், அதேசமயம் உலக அரங்கில் முன்னேற வளரும் நாடுகளுடன் கைகோர்ப்பது மறுபுறமும் என்ற தந்திரத்தை இந்திய அரசு தைரியமாக கையிலெடுக்க முடியுமா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
Friday, February 5, 2010
தமிழால் முடியும்!
திடீரென தமிழக உயர்கல்வி அமைச்சர் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். தமிழில் பொறி யியல் கல்லூரி தொடங்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இது மிகவும் ஆழமான, அர்த்தம் பொதிந்த ஒரு செய்தி. ஏனென்றால் தாய்மொழியில் அனைத்தையும் பயில வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருக்கிறது. தாய்மொழியை ஒரு பாடமொழியாக கட்டாயமாக ஆக்குவதற்கே, தமிழாசிரியர்கள் அரும்பாடு பட வேண்டியிருந்தது. தாய்மொழியில் கல்வி என்பது சாத்தியமாகாது எனதான் அறிவாளிகள் என அறியப்பட்டோர் பேசி வந்தனர். தாய்மொழி பயிற்று மொழி என்பது ஒரு ஜனநாயக ரீதியான கோரிக்கை என இன உணர்வாளர்கள் கூறிவந்தனர். மொழி என்பதையும், இனம் என்பதையும் பிரித்துப் பார்க்க முடியுமா? எந்த இடத்தில் மொழி இனத்திற்குள்ளும், இனம் மொழியின் மூலமும் வெளிப்படுகிறது என்பது விளக்கப்படவேண்டிய ஒரு அரிய சிந்தனை. இனம் என்று இந்த இடத்தில் குறிப்பிடுவது ஒரு தேசிய இனத்தை. ஒரு தேசிய இனம் என்பது 4 அடிப்படையான நிபந்தனைகளைக் கொண்டதாக இருக்கும். அதில் ஒரே மொழி பேசும் மக்கள் கூட்டம் என்பது தான் முதல் நிபந்தனை. அப்படியானால் ஒரு தேசிய இனத்தை அடையாளம் காண்பதற்கு, அதன் மொழி என்பதில் இருந்து விசயம் தொடங்குகிறது.
மொழி அடையாளமாக மட்டுமல்லாமல், ஒரு உற்பத்தி கருவியாகவும் செயல்படுகிறது. சோவியத் யூனியனில் புரட்சியை தலைமை தாங்கிய ஜோசப் ஸ்டாலின், மொழியை பற்றி கூறும் போது, அது ஒரு சமுதாய அமைப்பின் அடித் தளமும் அல்ல. மேல் தளமும் அல்ல. ஆனால் மொழி என்பது ஒரு உற்பத்தி கருவி என்று கூறினார். உழைப்புச் சக்தியை பயன்படுத்தி, உலகில் உற்பத்திகள் செய்யப்படுகின்றன. உற்பத்திகளின் மூலம் மட்டுமே, சமூகம் முன்னேறி செல்கிறது. உற்பத்திக்கு ஒரு முக்கியத் தேவையாக, உற்பத்திக் கருவிகள் இருக்கின்றன. மொழியும் ஒரு உற்பத்தி கருவி என்று ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் கூற்று அறிவியல் ரீதியானது. மொழியின் மூலம் மட்டும் தான், பரிமாற்றம் நடைபெறுகிறது. கருத்துப் பரிமாற்றமும், செய்திப்பரிமாற்றமும், எந்த ஒரு பரிமாற்றத்திற்கும் அடிப்படையாகத் திகழுகிறது. மொழி புராதன மக்களின் வாழ்நிலையிலிருந்து வளர்ந்து வந்த ஒரு கட்டத்தைக் குறிக்கிறது. உல கெங்கிலும் தாய்மொழி என்பது தான், ஒவ்வொரு இனத்தின் வளர்ச்சிக்குமான அடிப்படையாக இருக்கிறது. அதனால் தாய்மொழிக் கல்வி, அத்தியாவசியமான ஒரு தேவையாக, ஒரு இனத்தின் வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்துகிறது.
கிரேக்க நாட்டிலும், இத்தாலி நாட்டிலும், கிரேக்க மொழியும், இத்தாலி மொழியும் பயிற்று மொழியாக இருக்கின்றன. ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரீஷ், ஜப்பான், டச்சு, போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால், அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியமாக தாய்மொழியை பயிற்று மொழியாகக் கொண்டதே முக்கிய காரணமாக இருக்கிறது. பின்லாந்தில் கூட பின்னிஷ் மொழிதான் கல்வி மொழியாக இருக்கிறது. ஜார்ஜியாவில் ஜார்ஜிய மொழியில்தான் அனைத்தும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இந்தியாவில் மட்டும்தான் ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ, பயிற்று மொழி இருக்கிறது. அல்லது செல்வாக்கு செலுத்திக்கொண்டு இருக்கிறது. ஜப்பானில் ஜப்பானிய மொழியில் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைகழகங் களிலும், அனைத்து பாடங்களும் கற்றுக் கொடுக்கப்படுவதனால், ஜப்பானிய மக்கள் சுயமாக சிந்தித்து, முன்னேற வாய்ப்பு இருக்கிறது. நார்வேயிலும் கல்வி மொழி நார்வேஜியன் என்பதாகதான் இருக்கிறது. ருமேனியாவில் ருமேனிய மொழி கல்வி மொழியாக இருக்கிறது. துருக்கியில் துருக்கிஷ் மொழி ணயிலேயே அனைத்தும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் தான், காலனிய சிந்தனை பயிற்று மொழி விசயத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது.
சில இந்திய மாநிலங்களில், தாய்மொழி தனது இடத்தை குறைந்த பட்சமாவது பெற்றிருக்கிறது. கோவாவில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தாலும், சில இடங்களில் கொங்கனி என்ற கோவா மாநிலத்தின் தாய்மொழி பயிற்று மொழியாக, கல்விச்
சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆங்கிலம் பயிற்று மொழியாக நகர்புற கல்விச் சாலைகளில் இருந்தாலும், மராத்தி மொழி ஊரகப்பகுதிகளில் பயிற்று மொழியாக இருந்து வருகிறது. அதனால் தானோ என்னவோ, மராத்தி மொழிப்பற்று அந்த மாநில மக்கள் மத்தியில், இன்னமும் மங்காத நிலையில் தொடர்கிறது. ஆந்திரபிரதேசத்தில் ஆங்கிலம் மட்டுமின்றி, தெலுங்கு மொழியும் கல்விச்சாலைகளில் பயிற்று மொழியாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. தமிழ் இங்கே பாட மொழியாக இருக்கிறது. அப்படி என்றால் ஆங்கிலம் ஒரு பாட மொழி என்பது போல, தமிழும் ஒரு பாட மொழியாக இருந்து வருகிறது. பயிற்று மொழியாக தமிழைக் கொண்டு வரவேண்டும் என்ற அவாவிற்கு எந்தக் குறைவும் இல்லை. தமிழ் மொழியை புகழ்ந்து பேசாத வாயே இல்லை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று எப்போதும் முழங்கி வருகிறோம்.
இந்தி மொழியின் திணிப்பை எதிர்த்து, தமிழ்மொழியின் பாது காப்பிற்காக போராட்டங்களை கண்ட மாநிலம் தமிழ்நாடு. அப்போதும் கூட, இந்தி திணிப்பு வேண்டாம் என்ற உரத்த அரசியல் குரல்கள், தாய்மொழி தமிழில் அனைத்தும் வேண்டும் என்ற ஆர்வக்குரலுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. மாறாக இந்தி என்ற வாள், தமிழை தாக்குவதற்கு வருமானால், தமிழைப் பாதுகாக்க, ஆங்கிலம் என்ற கேடயம் வேண்டுமல்லவா என்பதாகத்தான் அரசியல் குரல்கள் எழுப்பப்பட்டன. அதுவே புற்றீசல் என வளர்ந்து விட்ட ஆங்கிலப் பள்ளிகளின் கட்டவிழ்த்து விடுதலுக்குக் காரணமாக அமைந்து விட்டன. மழலைப் பள்ளிகளும், குழந்தைப் பள்ளிகளும், ஆரம் பப்பள்ளிகளும், நர்சரிகள் என்று அழைக்கப்படும் கல்விச்
சாலைகளுக்குள் அடக்கமாகின்றன. மழலைப்பள்ளிகளை, தாய்த்தமிழ் பள்ளிகள் என்று மாற்றிக்கொள்ள யாரும் தயாராய் இல்லை. ஏனென்றால் கல்வி வியாபாரமாக ஆகிப் போன இன்றைய காலகட்டத்தில், நர்சரிப் பள்ளிகள் தெருவுக்குத் தெரு தோன்றி வருகின்றன. அப்படி முளைவிடக்கூடிய மூளை செதுக் கும் சாலைகளும், ஆங்கிலத்தை நோக்கியே ஈர்க்கப்படுகின்றன. தொழிலாளி வர்க்கத்தின் தோழர்களும், விவசாயக் குடிமக்களும் கூட, தங்கள் பிள்ளைகள், ஆங்கிலப்பள்ளிகளில், ஆங்கில பயிற்று மொழியை கல்வி கற்கவேண்டும் என்ற தாகத்திலேதான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு புற நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது யார் குற்றம்?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் தலைவர்களிடமிருந்து சில செய்திகளை நாம் கற்றுக் கொள்ளலாம். ஒரு முறை ஜம்மு காஷ்மீர் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர், தாய்மொழி கல்வி பற்றி பேசினார். இந்திய அரசியல் சட்டத்தில் 8வது பிரிவில், போடி என்ற மொழியை சேர்ப்பதில் மகிழ்ச்சியடைந்தார். காஷ்மீரி மொழியுடன், தோக்ரி, போடி ஆகிய மொழிகள், அர
சாங்க கல்வி நிறுவனங்களில் கற்றுக் கொடுக்கப்படும் என்ற முடிவு, குழந்தைகளுக்கு சிறந்த பயிற்று மொழியை கற்றுக் கொடுப்பதற்கு பயன்படும் என்று அவர் கூறினார்.
இப்போது உயர்கல்வி அமைச்சர் பொறியியல் படிப்பில், தமிழ் பயிற்று மொழி என்பதற்கான கல்விச்சாலை முயற்சியை அறிவிக்கிறார். காலம் கடந்த அறிவிப்பு என்றாலும், இன்னமும் தமிழ் அழியாமல் இருக்கும் போது, அறிவிக்கப்பட்ட அறிவிப்பு என அகமகிழலாம். தொழில் முறை கல்வியில், தமிழில் கற்றுக் கொடுப்பதுதான், அந்த தொழிலுக்கும் வளர்ச்சி; தமிழுக்கும் வளர்ச்சி. பயிற்று மொழி தமிழில் கற்றவர்களுக்குத்தான், அரசுப் பணிகளில் முன்னுரிமை வாய்ப்பு என்ற அறிவிப்பை, அரசாங்கம் செய்யும் போதுதான், வேலைக்காக படிப்பு என்ற சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டுள்ள, பெரும்பான்மை மக்கள் தமிழ் மொழிக் கல்வி மீது தாகம் கொள்வர்.
மொழி அடையாளமாக மட்டுமல்லாமல், ஒரு உற்பத்தி கருவியாகவும் செயல்படுகிறது. சோவியத் யூனியனில் புரட்சியை தலைமை தாங்கிய ஜோசப் ஸ்டாலின், மொழியை பற்றி கூறும் போது, அது ஒரு சமுதாய அமைப்பின் அடித் தளமும் அல்ல. மேல் தளமும் அல்ல. ஆனால் மொழி என்பது ஒரு உற்பத்தி கருவி என்று கூறினார். உழைப்புச் சக்தியை பயன்படுத்தி, உலகில் உற்பத்திகள் செய்யப்படுகின்றன. உற்பத்திகளின் மூலம் மட்டுமே, சமூகம் முன்னேறி செல்கிறது. உற்பத்திக்கு ஒரு முக்கியத் தேவையாக, உற்பத்திக் கருவிகள் இருக்கின்றன. மொழியும் ஒரு உற்பத்தி கருவி என்று ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் கூற்று அறிவியல் ரீதியானது. மொழியின் மூலம் மட்டும் தான், பரிமாற்றம் நடைபெறுகிறது. கருத்துப் பரிமாற்றமும், செய்திப்பரிமாற்றமும், எந்த ஒரு பரிமாற்றத்திற்கும் அடிப்படையாகத் திகழுகிறது. மொழி புராதன மக்களின் வாழ்நிலையிலிருந்து வளர்ந்து வந்த ஒரு கட்டத்தைக் குறிக்கிறது. உல கெங்கிலும் தாய்மொழி என்பது தான், ஒவ்வொரு இனத்தின் வளர்ச்சிக்குமான அடிப்படையாக இருக்கிறது. அதனால் தாய்மொழிக் கல்வி, அத்தியாவசியமான ஒரு தேவையாக, ஒரு இனத்தின் வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்துகிறது.
கிரேக்க நாட்டிலும், இத்தாலி நாட்டிலும், கிரேக்க மொழியும், இத்தாலி மொழியும் பயிற்று மொழியாக இருக்கின்றன. ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரீஷ், ஜப்பான், டச்சு, போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால், அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியமாக தாய்மொழியை பயிற்று மொழியாகக் கொண்டதே முக்கிய காரணமாக இருக்கிறது. பின்லாந்தில் கூட பின்னிஷ் மொழிதான் கல்வி மொழியாக இருக்கிறது. ஜார்ஜியாவில் ஜார்ஜிய மொழியில்தான் அனைத்தும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இந்தியாவில் மட்டும்தான் ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ, பயிற்று மொழி இருக்கிறது. அல்லது செல்வாக்கு செலுத்திக்கொண்டு இருக்கிறது. ஜப்பானில் ஜப்பானிய மொழியில் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைகழகங் களிலும், அனைத்து பாடங்களும் கற்றுக் கொடுக்கப்படுவதனால், ஜப்பானிய மக்கள் சுயமாக சிந்தித்து, முன்னேற வாய்ப்பு இருக்கிறது. நார்வேயிலும் கல்வி மொழி நார்வேஜியன் என்பதாகதான் இருக்கிறது. ருமேனியாவில் ருமேனிய மொழி கல்வி மொழியாக இருக்கிறது. துருக்கியில் துருக்கிஷ் மொழி ணயிலேயே அனைத்தும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் தான், காலனிய சிந்தனை பயிற்று மொழி விசயத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது.
சில இந்திய மாநிலங்களில், தாய்மொழி தனது இடத்தை குறைந்த பட்சமாவது பெற்றிருக்கிறது. கோவாவில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தாலும், சில இடங்களில் கொங்கனி என்ற கோவா மாநிலத்தின் தாய்மொழி பயிற்று மொழியாக, கல்விச்
சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆங்கிலம் பயிற்று மொழியாக நகர்புற கல்விச் சாலைகளில் இருந்தாலும், மராத்தி மொழி ஊரகப்பகுதிகளில் பயிற்று மொழியாக இருந்து வருகிறது. அதனால் தானோ என்னவோ, மராத்தி மொழிப்பற்று அந்த மாநில மக்கள் மத்தியில், இன்னமும் மங்காத நிலையில் தொடர்கிறது. ஆந்திரபிரதேசத்தில் ஆங்கிலம் மட்டுமின்றி, தெலுங்கு மொழியும் கல்விச்சாலைகளில் பயிற்று மொழியாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. தமிழ் இங்கே பாட மொழியாக இருக்கிறது. அப்படி என்றால் ஆங்கிலம் ஒரு பாட மொழி என்பது போல, தமிழும் ஒரு பாட மொழியாக இருந்து வருகிறது. பயிற்று மொழியாக தமிழைக் கொண்டு வரவேண்டும் என்ற அவாவிற்கு எந்தக் குறைவும் இல்லை. தமிழ் மொழியை புகழ்ந்து பேசாத வாயே இல்லை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று எப்போதும் முழங்கி வருகிறோம்.
இந்தி மொழியின் திணிப்பை எதிர்த்து, தமிழ்மொழியின் பாது காப்பிற்காக போராட்டங்களை கண்ட மாநிலம் தமிழ்நாடு. அப்போதும் கூட, இந்தி திணிப்பு வேண்டாம் என்ற உரத்த அரசியல் குரல்கள், தாய்மொழி தமிழில் அனைத்தும் வேண்டும் என்ற ஆர்வக்குரலுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. மாறாக இந்தி என்ற வாள், தமிழை தாக்குவதற்கு வருமானால், தமிழைப் பாதுகாக்க, ஆங்கிலம் என்ற கேடயம் வேண்டுமல்லவா என்பதாகத்தான் அரசியல் குரல்கள் எழுப்பப்பட்டன. அதுவே புற்றீசல் என வளர்ந்து விட்ட ஆங்கிலப் பள்ளிகளின் கட்டவிழ்த்து விடுதலுக்குக் காரணமாக அமைந்து விட்டன. மழலைப் பள்ளிகளும், குழந்தைப் பள்ளிகளும், ஆரம் பப்பள்ளிகளும், நர்சரிகள் என்று அழைக்கப்படும் கல்விச்
சாலைகளுக்குள் அடக்கமாகின்றன. மழலைப்பள்ளிகளை, தாய்த்தமிழ் பள்ளிகள் என்று மாற்றிக்கொள்ள யாரும் தயாராய் இல்லை. ஏனென்றால் கல்வி வியாபாரமாக ஆகிப் போன இன்றைய காலகட்டத்தில், நர்சரிப் பள்ளிகள் தெருவுக்குத் தெரு தோன்றி வருகின்றன. அப்படி முளைவிடக்கூடிய மூளை செதுக் கும் சாலைகளும், ஆங்கிலத்தை நோக்கியே ஈர்க்கப்படுகின்றன. தொழிலாளி வர்க்கத்தின் தோழர்களும், விவசாயக் குடிமக்களும் கூட, தங்கள் பிள்ளைகள், ஆங்கிலப்பள்ளிகளில், ஆங்கில பயிற்று மொழியை கல்வி கற்கவேண்டும் என்ற தாகத்திலேதான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு புற நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது யார் குற்றம்?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் தலைவர்களிடமிருந்து சில செய்திகளை நாம் கற்றுக் கொள்ளலாம். ஒரு முறை ஜம்மு காஷ்மீர் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர், தாய்மொழி கல்வி பற்றி பேசினார். இந்திய அரசியல் சட்டத்தில் 8வது பிரிவில், போடி என்ற மொழியை சேர்ப்பதில் மகிழ்ச்சியடைந்தார். காஷ்மீரி மொழியுடன், தோக்ரி, போடி ஆகிய மொழிகள், அர
சாங்க கல்வி நிறுவனங்களில் கற்றுக் கொடுக்கப்படும் என்ற முடிவு, குழந்தைகளுக்கு சிறந்த பயிற்று மொழியை கற்றுக் கொடுப்பதற்கு பயன்படும் என்று அவர் கூறினார்.
இப்போது உயர்கல்வி அமைச்சர் பொறியியல் படிப்பில், தமிழ் பயிற்று மொழி என்பதற்கான கல்விச்சாலை முயற்சியை அறிவிக்கிறார். காலம் கடந்த அறிவிப்பு என்றாலும், இன்னமும் தமிழ் அழியாமல் இருக்கும் போது, அறிவிக்கப்பட்ட அறிவிப்பு என அகமகிழலாம். தொழில் முறை கல்வியில், தமிழில் கற்றுக் கொடுப்பதுதான், அந்த தொழிலுக்கும் வளர்ச்சி; தமிழுக்கும் வளர்ச்சி. பயிற்று மொழி தமிழில் கற்றவர்களுக்குத்தான், அரசுப் பணிகளில் முன்னுரிமை வாய்ப்பு என்ற அறிவிப்பை, அரசாங்கம் செய்யும் போதுதான், வேலைக்காக படிப்பு என்ற சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டுள்ள, பெரும்பான்மை மக்கள் தமிழ் மொழிக் கல்வி மீது தாகம் கொள்வர்.
Subscribe to:
Posts (Atom)

