இலங்கைத் தீவில் நடந்து முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள 4வது ஈழப்போர், சென்ற ஆண்டு மே 3ம் வாரம் முடிவுற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது. அந்தப் போரில் 40,000 தமிழ் மக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டார்கள் என்று இப்போது ஐ.நா.சபையே உறுதி செய்துள்ளது. போரை நடத்தியவர்கள் சிங்கள பேரினவாத அரசு சக்திகள் மட்டுமல்லாமல், அவர்களுக்கு உதவி செய்த 7 வெளிநாடுகளின் அரசுகளும் என்பதாகவும், பல நேரங்களில் பல சக்திகள் கூறியுள்ளன. இந்தியா, பாகிஸ் தான், சீனா ஆகிய நாட்டின் அரசுகள் தங்களுக்கு போரில் வெல்ல உதவி செய்ததாக, இலங்கை ஆட்சியாளர்கள் பகிரங்கமாகவே நாடாளுமன்றத்தில் கூறி யுள்ளனர். அதில் குறிப்பாக இந்தியாவும், சீனாவும் எதற்காக தமிழருக்கெதிரான இனவாதப் போரில், தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்ற கேள்வி, பதில் கிடைக்காமலேயே நின்று கொண்டிருக்கிறது.
மேற்கண்ட அண்டை நாடுகளின் அரசுகள், ஆயுதங்களை அளிப்பதும், ராணுவ ஆலோசனைகள் கொடுப்பதும், நேரடியாக களத்தில் இறங்குவதும், உளவுப் பணி மூலம் உதவுவதும் என அந்த இனவாதப் போரில் அங்கம் வகித் தார்கள். அதில் பாகிஸ்தான் தனது விமானிகளை அனுப்பி, அவர்கள் மூலம் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் விமானங்களை, போர்ப் பகுதியில் இயக்கினர். சீன அரசு அதிகமான அளவில் ஆயுதங்களை, இலங்கை அரசுக்கு போர் நேரத்தில் கொடுத்துள்ளது. இந்திய அரசு தனது உளவு செயற்கைக் கோள்கள் மூலமும், தான் அனுப்பிய ரேடார்கள் மூலமும், போராளிகள் பற்றிய நடமாட்டச் செய்திகளை, போர் நடத்திய பேரினவாத சக்திகளுக்கு கொடுத்து உதவியுள்ளது. இந்த அளவுக்கு நியாயமற்ற போர் என்ற உண்மை தெரிந்திருந்தும், எதற்காக பேரார்வத்துடன் அண்டை நாட்டு அர சாங்கங்கள், ஒரு இனவாதப் போரில் ஈடுபட்டார்கள்? இன அழிப்பு என்ற அளவுக்கு அந்தப் போர் இட்டுச் சென் றாலும், இந்த அண்டை நாட்டு அரசர் கள் ஏன் பின்வாங்கவில்லை? அந்த அளவுக்கு இந்த அண்டை நாட்டு அர சாங்கங்களுக்கு ஈழப்போரிலே என்ன ஈடுபாடு?
இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜிவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரே காரணத்திற்காக, இந்திய அரசு இந்த இன அழிப்புப் போரில் ஈடுபட்டது என்று சொல்வாருமுண்டு. ஆனால் வேறுசில கேள்விகள் எழுகின்றன. ராஜிவ் காந்தி பொறுப்பிலிருந்த போது, கொழும்பில் அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில், ஒரு சிங்கள சிப்பாய் அவரை துப்பாக்கியின் பின்புறத்தால் தாக்க முயற்சித்த சதி, அனைவரும் அறிந்ததே. அந்த சிங்கள ராணுவ வீரன் மீது, இந்திய அரசோ அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைமையோ, அல்லது சோனியா காந்தி குடும்பமோ எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையையும் எடுக்கவில்லையே ஏன்? அதேபோல ஒரு நிகழ்ச்சிக்காக, ஒரு நாட்டின் அரசு முழுவதும் ஈடுபட்டு, ஒரு இன அழிப்பை நடத்துவதற்கு துணியுமா? அப்படியானால் வேறு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டுமே? அது என்ன?
ஒவ்வொரு நாட்டின் அரசும், இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலில், தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை ஏதாவது ஒரு வகையில், பெருக்கிக் கொள்ள விரும்புகின்றனர். இதில் நல்ல வழி அல்லது கெட்ட வழி என்ற வேறுபாட்டிற்கே இடமில்லாமல், எல்லா அரசுகளும் நடந்து கொள்கின்றன. ஒவ்வொரு நாட்டு அரசும் தங்கள் நாட்டிற்குள் மக்கள் மத்தியில் வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும், விலைவாசி உயர்வையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக வெளி யிலிருந்து, ஏதாவது வகையில் நிதி திரட்ட வேண்டியிருக்கிறது. வளராத நாடுகள் அதை அன்னிய நாடுகளிலிருந்து கடனாகப் பெறுகின்றனர். வளர்ந்த நாடுகள் அடுத்த கட்டமாக, தங்களது சுரண்டலை நாடு தாண்டி நடத்துவதற்கு, தருணம் பார்த்து அலைகின்றனர். இதில் 2வது வகை சிந்தனை இந்திய அரசையும், சீன அரசையும் பீடித்துள் ளது. மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டு எண்ணைய் வளங்களை, கைப்பற்ற அனுமதிக்கின்ற இந்த நாடுகள், தங்கள் பங்குக்கு தங்களை விட சிறிய நாடுகளிடம் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு முயற்சி இலங்கைத் தீவில் உள்ள எண்ணெய் வளங்களின் மீது பாய்ச்சப்பட்டது.
புலிகள் இயக்கத்தை முற்றாக அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ, ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்ய வேண்டும் என்ற சிந்தனையோ இந்திய அரசுக்கு மேலோங்கியிருக்க நியாயமில்லை. மாறாக இலங்கைத் தீவில் குறிப்பாக தமிழர் வாழும் பகுதிகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கக் கூடிய எண்ணெய் வளங்களின் மீது இந்திய அரசுக்கு ஒரு கண் உண்டு.
இலங்கையில் தமிழர்களின் தாயகத்தில் உள்ள வடக்கு மாகாணமான மன்னாரிலும், கிழக்கு மாகாணமான திரிகோணமலையிலும், கடற்கரை ஓரத்தில் எண்ணெய் வளத்திற்கான வாய்ப்புகளை இந்த அரசுகள் முகர்ந்து பார்த்து விட்டன. திரிகோணமலை துறைமுகப் பகுதியில், சீனகுடா என்ற ஒரு இடம் இருக்கிறது. அங்கே எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை தேக்கி வைக்கலாம். இந்தியாவின் இந்திய ஆயில் கம்பெனி நிறுவனம், இந்த இடத்தில் தனது தலைமையகத்தை வைத்துள்ளது. அதில் தேக்கி வைக்கும் பெட்ரோலையும், டீசலையும், 200க்கு மேற்பட்ட பங்குகள் மூலம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வியாபாரம் செய்து வருகிறது. இதேபோல மன்னார் மாவட்டத்தில் எண்ணெய் வளம் அதிகம் கிடைக்கிறது. அங்கு கடற்கரையோரம் கடலுக்கு உள்ளே, 100 ஏக்கர் பகுதியை, இந்திய அரசு எண்ணெய்க் கிணறுகள் தோண்டுவதற்காக வாங்கி வைத்துள்ளது. ஓ.என்.ஜி.சி. என்ற எண்ணெய், இயற்கை வாயு கமிஷன், இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள இயற்கையான துறைமுகம், இந்தப் பிராந்தியத்தின் மிக முக்கியமான ஒன்று. உயரமான மலைப்பகுதிகளை அருகிலேயே கொண்ட இந்த உட் துறைமுகம், போர் காலங்களிலும் கப்பல்களை உள்ளே ஒளித்து வைக்க வாய்ப்பான ஓர் இடம். அதனருகே உள்ள உவர் மலையில், இலங்கை ராணுவத் தளம் உள்ளது. அதிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு, கப்பல் படை அனுப்பப்படும். யாழ்ப்பாண கப்பல் சேவையும், ராணுவத்திற்கு வேண்டிய சேவைகளும், இந்த தளத்திலிருந்து கொண்டு செல்லப்படும். ஆகவே உட்துறைமுக வீதியில், மீன்வளம் அதிகமாக கிடைத் தாலும், அதி உயர் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில், மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. துறைமுகம் அருகே யுள்ள மாவாலை என்ற இடத்தில் ஒரு சிமெண்ட் ஆலை இருக்கிறது. அதில் இப்போது சிங்கள குடியேற்றம் நடந்து வருகிறது. கடற்கரையோரத்தில் அதை அடுத்துள்ள புல்மோட்டை என்ற இடத்தில் இலுமினேட் என்ற உயர் ரக தாதுப்பொருள் மண்ணில் கிடைக்கிறது. அங்கே வெளிநாட்டுக் கப்பல்களை மண் எடுக்க அனுமதிக்கும் திட்டத்தையும் இலங்கை அரசு வைத்துள்ளது.
2003ம் ஆண்டு மே 12ம் நாள் வெளியான செய்திப்படி, இந்தியாவின் ஐ.ஓ.சி., சிலோன் பெட்ரோலியம் கார்ப் ரேஷனுக்கு சொந்தமான, திரிகோணமலை குளப்பண்ணையை குத்தகையாகப் பெறுவதற்கு ஒப்பந்தம் போட்டது. அதற்காக ஐ.ஓ.சி. ரூ.200 கோடியை கொடுத்தது. 2002 செப்டம்பர் முதல், 2003 ஆகஸ்ட் வரை 0.48 மில்லியன் டன் விநியோகத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்காக இலங்கை ஐ.ஓ.சி.க்கு 10 ஆண்டுகளுக்கு வணிகத்திற்கான வரிவிலக்கு அளிக்கப்பட்டது. அதன்பிறகு நிலவும் 35% வரியை குறைத்து 15% என்று பெறுவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதற்கான கருவிகள் கொணர, சுங்கவரி 5 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்டது. மேற்கண்ட ஒப்பந்தத்தை வெற்றிகரமாக்க இந்திய அரசு, அந்த வட்டாரத்தில் அல்லது அருகே உள்ள பகுதிகளில், எந்தவொரு ஆயுதம் தாங்கிய சட்டவிரோத குழுக்களுடைய நடமாட்டமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற தேவை எழுந்தது.
அதேசமயம் சீன அரசு மன்னார் பகுதியில் எண்ணெய் மற்றும் வாயு கிணறுகளை தோண்ட திட்டமிட்டது. இந்தியாவின் நடமாட்டத்தை சமன் படுத்த, மகிந்தா அரசு சீனாவிற்கு அந்த ஏற்பாட்டை செய்து கொடுத்தது. அந்த பகுதியை 8 பிரிவுகளாகப் பிரித்து, இந்தியாவிற்கு ஒன்றும், சீனாவிற்கு ஒன்றும், மீதி 6 பிரிவுகளை அனைத்து நாடுகளுக்கும் கொடுப்பது என 2007ம் ஆண்டு மார்ச் 6ம் நாள் இலங்கை அரசு அறிவித்தது. 2 மாதங்களுக்குள் சீனா புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன், அந்த பகுதியில் இறங்கியது. இவ்வாறாக இந்த இரு அரசுகளும் தங்களுக்கான எண்ணெய் வயல்களை கைப்பற்ற, மகிந்தாவின் இனவாதப் போருக்கு உதவ வேண்டிய கட்டாயம் எழுந்தது. தந்திரமாக இந்த இரு அரசுகளுக்கும் எண்ணெய் வளத்தை தாரை வார்த்து, அவர்களை தான் நடத்திய இனவாதப் போரில் இலங்கை அரசு ஈடுபடுத்தியது. அதன் மூலம் தனது தமிழின அழிப்புப் போரை தீவிரமாக நடத்தியது. அதேசமயம் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம், ரஷ்யாவையும் இலங்கை அரசு, எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க அழைத்தது. அதனால் தான் எண்ணெய்க்கான இந்தப் போர், ஒரு இன அழிப்பு வேலையை செய்து, சிங்களப் பேரினவாதத்திற்கு உதவி விட்டது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இந்தியப் பேரரசு, தனது மேலாதிக்க மனோபாவத்துடனும், விரிவாக்க செயல் திட்டத்துடனும், தெற்காசியா எங்கும் அதிகாரம் செய்வதற்கான தன்மைகொண்டது என்பதனால், 2000தின் பத்தாண்டுகளில் எண்ணெய் வளத்தை சுரண்டவும், இந்த இனஅழிப்பு போர் அதற்கு உதவிகரமாக இருந்து விட்டது. என்பதையும் நாம் மறக்க முடியாது. தன்நாட்டிற்கு உள்ளேயே, தேசிய இனங்களின் உரிமையை அடக்கும் ஒரு அரசிடம், நாம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்.
Monday, February 15, 2010
Sunday, February 14, 2010
காதலர் தினம் என்றால் என்ன?
இன்று உலகம் எங்கிலும் காதலர் தினம் என்பதாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் எங்கிலும் இந்த நாளை, வாலண் டினா தினம் என்பதாக அழைப்பார்கள். வாலண்டினா என்பது ஒரு கிறித்துவ ஆண் பாதிரியாரின் பெயர். இந்த நாளின் சாராம்சம் காதலைப் போற்றுவது என்பதாகும். அதை சுருக்கமாக நம்மவர்கள் காதலர் தினம் என அழைத்துக் கொள்கிறார்கள். அதைக் கேள்விப்பட்ட இளைஞர்கள், தாங்கள் சுதந்திரமாக எதையும் செய்வதற்கு அனுமதிக்கும் தினம் என்று எடுத்துக் கொள்கிறார்கள். அதனாலேயே நமது நாட்டின் பண்பாடு சீரழிந்து விடுகிறது என்ற கண்டுபிடிப்பின் அடிப்படையில், சிலர் இந்த தினத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். கையில் தாலியை வைத் துக்கொண்டு சிலர் இந்துத்துவாவாதிகள், யாராவது இளைஞர்களாக இருக்கும் ஆண்களும், பெண்களும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தாலே, அவர்களை நிர்ப்பந்தப்படுத்தி அந்த தாலியைக் கட்டச்சொல்லலாம் என்று அலைகிறார்கள். இது தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கும் என்று அறிந்ததனால், காவல்துறை அதிகாரிகள் காதலர்களை நிர்ப்பந்தப்படுத்தும் வன்முறை சக்தி களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறார்கள். மதவாத சக்திகள் நடத்தக்கூடிய ஆர்ப்பாட் டங்களும், போராட்டங்களும், மேற்கத்திய நாட்டிலிருந்து இறக்குமதியான பண்பாடு என்று இந்த தினத்தை வர்ணிக்கிறது. மேற்கத்திய நாட்டிலிருந்து இறக்குமதியான பண்பாட்டில் ஒரு அங்கமான, ஆங்கில நாட்காட்டி கூறும் தேதியைக் குறிப்பிட்டு, தங்களது போராட்டத்தை அவர்கள் அறிவித்துக்கொள்கிறார்கள். மேற்கத்திய பண்பாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட, பேண்ட், சட்டையை போட்டுக் கொண்டு, பல மதவாத சக்திகளும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட போராட் டங்களின் மூலம் அவர்கள் இந்தியாவின் நாட்டுப்பற்று உணர்வை வளர்க்க முடியும் என்றால், மகிழ்ச்சியான செய்தியாக அது இருக்கும்.
இந்து மதத்தின் கடவுளர்களாக அழைக்கப்படும் ஒவ்வொரு தெய்வமும், காதல் செய்துதான் திருமணம் செய்ததாக, நமக்கு இவர்கள் தான் புராணக்கதையை அன்று கூறினார்கள். இந்து மத கோயில் களுக்குச் சென்றால், அங்கு சிலை வடிவில் நிற்கின்ற சிற்பங்கள் எல்லாம், ஆண், பெண் என்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த சிற்பங்களும் காதல் செய்வதை நாம் கலை வடிவம் என ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதையும், பாசம் கொள்வதையும் காதல் என்ற பரந்த வார்த்தையில் புரிந்து கொள்ள, இவர்க ளாலும் முடியவில்லை.
தமிழ்நாட்டில் முற்போக்கான கருத்துக் களுக்கு, பகுத்தறிவு சிந்தனைகளுக்கு, பகலவனாக நிற்கின்ற தந்தை பெரியார் காதலை வரவேற்றுள்ளார். அவர் கூறும் போது, காதலை வரவேற்போம்! அந்தக் காதல், உணர்ச்சிகளால் மட்டுமே, உரு வாகிவிடாது, அறிவார்ந்த காதலாக வேண்டும்.
காதலை அவரவர் உள்ளத்திற்கே விட்டுவிடுவோம். ஆனால் வாழ்க்கைத் துணை விசயத்தில் காதல் போதாது. அறிவு, அன்பு, அனுபவம், பொருத்தம் ஆகிய பல காரியங்களே முக்கியமான தாகும். பழங்காலத்தில் காதலே போது மானதாக இருந்திருக்கலாம். அப் போதைய அறிவுக்கு அவ்வளவுதான் தேவையாக இருந்திருக்கும். இப்போதைய அறிவுத்திருமணம் வாழ்நாள் முழுதும் பொருந்தும் படியாக இருக்க வேண்டும். மனித வாழ்வையும் பிறவிக் குணங் களையும் மேன்மைப் படுத்துவதாக இருக்கவேண்டும்.
மேற்கண்ட கருத்துக்களை தந்தை பெரியார் நமக்கு தந்துள்ளார். அதே போல மக்கள் கவிஞர் இன்குலாப் கீழ்க் கண்டவாறு காதல் பற்றிக் கூறுகிறார்.
காதல் பற்றின் காரணமாக ஆக்கிரமிக்கத் தூண்டுவது அல்ல;
அன்பில் அடிப்படையில் அரவணைக்கத் தூண்டுவது.
குடும்பம் என்ற குறுகிய வட்டத்தில் தேங்குவது அல்ல;
சமுதாயம் என்ற பெருவெளியில் பிரகாசிப்பது.
உடல் உறவு அதற்கொரு தொடக்கம்;
மனிதநேயம் அதன் சிகரம்;
ஆதலினால் காதல் செய்வீர்,
உலகத்தீரே
என்பதாக கவிதை வரிகளில் இன்குலாப் கூறியுள்ளார். இவ்வாறு தமிழர்களுக்கு வழிகாட்டியான தந்தை பெரியாரும், தமிழ் இலக்கியங்களும் தமிழ் பண்பாட்டின் பாரம்பரியத்தை பதிவு செய்துள்ளார்கள். உடன்போதல் என்ற முறை தமிழர்களின் மரபு வழியாக இருந்ததைக் கூட, சில தமிழ் இலக்கியவாதிகள் எடுத்துக் காட்டுகிறார்கள். எது எப்படி இருந்தாலும், இன்று கடைபிடிக்கப்படும் காதலர் தினம் என்பது, கட்டுப்பாடற்ற பண்பாட்டை போதிப்பதற்காக அல்ல. அதே சமயம் மாற்றார் மீது அன்பு செலுத்துவதை அங்கீகரிக்கின்ற தினம். அதனால் தான் இந்த நாளினுடைய வரலாற்றை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
வாலாண்டினா தினம் என்று அழைக் கப்படுகின்ற இந்த காதலர் தினம், கி.பி. 496ம் ஆண்டு ஜெலாசியஸ் என்ற போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டது. அப்போது கிறித்துவ தியாகிகளை வாலண்டினா என்று அழைத்தார்கள். காதலர்கள் தங்களுக்குள் மலர்களை அளித்துக் கொண்டும், வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொண்டும் இந்த நாளை மகிழ்ச்சியாக கடைபிடித்து வந்தார்கள். இன்றைய நவீன வாலாண்டினா நாள் என்பது இதய வடிவத்தை படமாகப் போட்டு, வாத்துக்களின் படங்க ளைக் காட்டி பரப்பப்படுகிறது. 19ம் நூற்றாண்டிற்கு பிறகு கையால் எழுதப் பட்ட வாலண்டினா வாழ்த்துக்கள், காலப்போக்கில் வாழ்த்து அட்டைகளாக மாறத் தொடங்கின. அமெரிக்காவில் இன்று அதிகமான அளவில் வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படுகின்றன. இந்த நாளை விடுமுறை நாளாகவும் கடைபிடிக் கிறார்கள்.
கிறித்துவ தியாகிகளை வாலண்டினா என்று அழைத்து வந்த வரலாற்றில், ரோம் நாட்டு வாலண்டினா என்பதுதான் இந்த தினத்தின் வரலாற்றைக் குறிக்கிறது. பாதிரியார் வாலண்டினா என்ற பெயர் பல்வேறு கிறித்துவ தியாகிகளின் பட்டியல்களில் தென்படுகிறது. ஆனாலும் ரோம் நகரைச் சேர்ந்த ஒரு பாதிரியார் பெயர்தான் இந்த தினத்தையொட்டி பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிளாடியஸ் கோத்திகஸ் என்ற இரண் டாவது கிளாடியஸ் மன்னர் ஆட்சியில், மேலே குறிப்பிட்ட பாதிரியாரான புனித வாலண்டினா, மரண தண்டனை விதிக்கப் படுகிறார். கிறித்துவ தம்பதியர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததை, குற்றம் என்று அன்றைய மன்னர் ஆட்சி அறிவித்து, புனித வாலண்டினா என்ற அந்த கிறித்துவ பாதிரியாரை கைது செய்தது. சிறையில் தள்ளியது. கிறித்துவர்களுக்கு உதவி செய்ததாக அந்த நேரத்தில் ரோம் நகரில் கிளாடிய சால் அவர் குற்றம் சாட்டப்பட்டார். அந்த காலத்தில் கிறித்துவர்களுக்கு உதவி செய்வது என்பது ஒரு குற்றம் என்பதாக கருதப்பட்டது. அந்தப் பாதிரியாரை கேடயங்களால் அடித்தும், கல்லால் எறிந்தும் கொலை செய்யமுடியவில்லை. அதன் பிறகு பிளாமினியன் வாசல் என்று சொல்லப்படும் இடத்திற்கு வெளியே, காதலை உற்சாகப்படுத்திய அந்த பாதிரியார் புனித வாலண்டினாவை, தலையை வெட்டி மரணதண்டனையை நிறைவேற்றினார்கள். அப்படி மரண தண்
டனை நிறைவேற்றப்பட்ட காலத்தைப் பற்றி பல்வேறு விதமான புள்ளிவிவரங்கள் சொல்லப்படுகின்றன. அது கி.பி. 269 என்றும், 270 என்றும் அல்லது 273 என்றும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வமான ரோமன் நாட்டு தியாகிகள் பட்டியல், பிப்.14ந் தேதியை குறிப்பிடும் போது, ஒரே ஒரு புனித வாலண் டினாவைத்தான் குறிப்பிடுகிறது.
கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரபூர்வமான பட்டியலில் 7 தியாகிகள் குறிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பல்வேறு ஆண்டுகளில் தியாகிகளானவர்கள் என்பதாக அந்த பட்டியல் கூறுகிறது. ஆனாலும் இந்த நாளில் குறிப்பிடப்படும் வாலண்டினா என்ற பாதிரியாரின் செயல்தான் முக்கிய மானது. அதாவது அவர் காதலுக்காக தன்னுயிரையே அர்ப்பணித்தார் என்பது தான், இந்த நாளின் சிறப்பு.
ஆண், பெண் மத்தியிலான அன்பு என்பதை, காதலாக மலர்வதை தடுக்கின்ற சாதி என்ற புற்று நோயும், மதம் என்னும் கொடிய நோயும் புரண்டு கொண்டிருக்கின்ற நமது மண்ணில், இந்த நாளை கொண்டாடுவதன் மூலம், அன்பை உயர்த்திப் பிடிக்கும் பண்பை வளர்த்துக் கொள்வோம்.
இந்து மதத்தின் கடவுளர்களாக அழைக்கப்படும் ஒவ்வொரு தெய்வமும், காதல் செய்துதான் திருமணம் செய்ததாக, நமக்கு இவர்கள் தான் புராணக்கதையை அன்று கூறினார்கள். இந்து மத கோயில் களுக்குச் சென்றால், அங்கு சிலை வடிவில் நிற்கின்ற சிற்பங்கள் எல்லாம், ஆண், பெண் என்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த சிற்பங்களும் காதல் செய்வதை நாம் கலை வடிவம் என ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதையும், பாசம் கொள்வதையும் காதல் என்ற பரந்த வார்த்தையில் புரிந்து கொள்ள, இவர்க ளாலும் முடியவில்லை.
தமிழ்நாட்டில் முற்போக்கான கருத்துக் களுக்கு, பகுத்தறிவு சிந்தனைகளுக்கு, பகலவனாக நிற்கின்ற தந்தை பெரியார் காதலை வரவேற்றுள்ளார். அவர் கூறும் போது, காதலை வரவேற்போம்! அந்தக் காதல், உணர்ச்சிகளால் மட்டுமே, உரு வாகிவிடாது, அறிவார்ந்த காதலாக வேண்டும்.
காதலை அவரவர் உள்ளத்திற்கே விட்டுவிடுவோம். ஆனால் வாழ்க்கைத் துணை விசயத்தில் காதல் போதாது. அறிவு, அன்பு, அனுபவம், பொருத்தம் ஆகிய பல காரியங்களே முக்கியமான தாகும். பழங்காலத்தில் காதலே போது மானதாக இருந்திருக்கலாம். அப் போதைய அறிவுக்கு அவ்வளவுதான் தேவையாக இருந்திருக்கும். இப்போதைய அறிவுத்திருமணம் வாழ்நாள் முழுதும் பொருந்தும் படியாக இருக்க வேண்டும். மனித வாழ்வையும் பிறவிக் குணங் களையும் மேன்மைப் படுத்துவதாக இருக்கவேண்டும்.
மேற்கண்ட கருத்துக்களை தந்தை பெரியார் நமக்கு தந்துள்ளார். அதே போல மக்கள் கவிஞர் இன்குலாப் கீழ்க் கண்டவாறு காதல் பற்றிக் கூறுகிறார்.
காதல் பற்றின் காரணமாக ஆக்கிரமிக்கத் தூண்டுவது அல்ல;
அன்பில் அடிப்படையில் அரவணைக்கத் தூண்டுவது.
குடும்பம் என்ற குறுகிய வட்டத்தில் தேங்குவது அல்ல;
சமுதாயம் என்ற பெருவெளியில் பிரகாசிப்பது.
உடல் உறவு அதற்கொரு தொடக்கம்;
மனிதநேயம் அதன் சிகரம்;
ஆதலினால் காதல் செய்வீர்,
உலகத்தீரே
என்பதாக கவிதை வரிகளில் இன்குலாப் கூறியுள்ளார். இவ்வாறு தமிழர்களுக்கு வழிகாட்டியான தந்தை பெரியாரும், தமிழ் இலக்கியங்களும் தமிழ் பண்பாட்டின் பாரம்பரியத்தை பதிவு செய்துள்ளார்கள். உடன்போதல் என்ற முறை தமிழர்களின் மரபு வழியாக இருந்ததைக் கூட, சில தமிழ் இலக்கியவாதிகள் எடுத்துக் காட்டுகிறார்கள். எது எப்படி இருந்தாலும், இன்று கடைபிடிக்கப்படும் காதலர் தினம் என்பது, கட்டுப்பாடற்ற பண்பாட்டை போதிப்பதற்காக அல்ல. அதே சமயம் மாற்றார் மீது அன்பு செலுத்துவதை அங்கீகரிக்கின்ற தினம். அதனால் தான் இந்த நாளினுடைய வரலாற்றை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
வாலாண்டினா தினம் என்று அழைக் கப்படுகின்ற இந்த காதலர் தினம், கி.பி. 496ம் ஆண்டு ஜெலாசியஸ் என்ற போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டது. அப்போது கிறித்துவ தியாகிகளை வாலண்டினா என்று அழைத்தார்கள். காதலர்கள் தங்களுக்குள் மலர்களை அளித்துக் கொண்டும், வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொண்டும் இந்த நாளை மகிழ்ச்சியாக கடைபிடித்து வந்தார்கள். இன்றைய நவீன வாலாண்டினா நாள் என்பது இதய வடிவத்தை படமாகப் போட்டு, வாத்துக்களின் படங்க ளைக் காட்டி பரப்பப்படுகிறது. 19ம் நூற்றாண்டிற்கு பிறகு கையால் எழுதப் பட்ட வாலண்டினா வாழ்த்துக்கள், காலப்போக்கில் வாழ்த்து அட்டைகளாக மாறத் தொடங்கின. அமெரிக்காவில் இன்று அதிகமான அளவில் வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படுகின்றன. இந்த நாளை விடுமுறை நாளாகவும் கடைபிடிக் கிறார்கள்.
கிறித்துவ தியாகிகளை வாலண்டினா என்று அழைத்து வந்த வரலாற்றில், ரோம் நாட்டு வாலண்டினா என்பதுதான் இந்த தினத்தின் வரலாற்றைக் குறிக்கிறது. பாதிரியார் வாலண்டினா என்ற பெயர் பல்வேறு கிறித்துவ தியாகிகளின் பட்டியல்களில் தென்படுகிறது. ஆனாலும் ரோம் நகரைச் சேர்ந்த ஒரு பாதிரியார் பெயர்தான் இந்த தினத்தையொட்டி பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிளாடியஸ் கோத்திகஸ் என்ற இரண் டாவது கிளாடியஸ் மன்னர் ஆட்சியில், மேலே குறிப்பிட்ட பாதிரியாரான புனித வாலண்டினா, மரண தண்டனை விதிக்கப் படுகிறார். கிறித்துவ தம்பதியர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததை, குற்றம் என்று அன்றைய மன்னர் ஆட்சி அறிவித்து, புனித வாலண்டினா என்ற அந்த கிறித்துவ பாதிரியாரை கைது செய்தது. சிறையில் தள்ளியது. கிறித்துவர்களுக்கு உதவி செய்ததாக அந்த நேரத்தில் ரோம் நகரில் கிளாடிய சால் அவர் குற்றம் சாட்டப்பட்டார். அந்த காலத்தில் கிறித்துவர்களுக்கு உதவி செய்வது என்பது ஒரு குற்றம் என்பதாக கருதப்பட்டது. அந்தப் பாதிரியாரை கேடயங்களால் அடித்தும், கல்லால் எறிந்தும் கொலை செய்யமுடியவில்லை. அதன் பிறகு பிளாமினியன் வாசல் என்று சொல்லப்படும் இடத்திற்கு வெளியே, காதலை உற்சாகப்படுத்திய அந்த பாதிரியார் புனித வாலண்டினாவை, தலையை வெட்டி மரணதண்டனையை நிறைவேற்றினார்கள். அப்படி மரண தண்
டனை நிறைவேற்றப்பட்ட காலத்தைப் பற்றி பல்வேறு விதமான புள்ளிவிவரங்கள் சொல்லப்படுகின்றன. அது கி.பி. 269 என்றும், 270 என்றும் அல்லது 273 என்றும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வமான ரோமன் நாட்டு தியாகிகள் பட்டியல், பிப்.14ந் தேதியை குறிப்பிடும் போது, ஒரே ஒரு புனித வாலண் டினாவைத்தான் குறிப்பிடுகிறது.
கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரபூர்வமான பட்டியலில் 7 தியாகிகள் குறிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பல்வேறு ஆண்டுகளில் தியாகிகளானவர்கள் என்பதாக அந்த பட்டியல் கூறுகிறது. ஆனாலும் இந்த நாளில் குறிப்பிடப்படும் வாலண்டினா என்ற பாதிரியாரின் செயல்தான் முக்கிய மானது. அதாவது அவர் காதலுக்காக தன்னுயிரையே அர்ப்பணித்தார் என்பது தான், இந்த நாளின் சிறப்பு.
ஆண், பெண் மத்தியிலான அன்பு என்பதை, காதலாக மலர்வதை தடுக்கின்ற சாதி என்ற புற்று நோயும், மதம் என்னும் கொடிய நோயும் புரண்டு கொண்டிருக்கின்ற நமது மண்ணில், இந்த நாளை கொண்டாடுவதன் மூலம், அன்பை உயர்த்திப் பிடிக்கும் பண்பை வளர்த்துக் கொள்வோம்.
Saturday, February 13, 2010
ஒரு ஆயுதப் போராட்டம், அரசியல் போராட்டமாகிறது
அஸ்ஸாம் மாநிலத்தின் முழு விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கும் உல்ஃபா என்ற ஒன்றுபட்ட அஸ்ஸாம் விடுதலை முன்னணி, ஆயுதம் தாங்கி போராடி வருகிறது. அதே போல அஸ்ஸாம் மாநிலத்தில் தனி
சுயாட்சி மாவட்டமாக அங்கீகரிக்கப்பட்ட, கரீபி ஆங்லாங் என்ற ஆதிவாசி பகுதியை, விடுதலை செய்வதற்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை, அங்குள்ள போராளிகள் அமைப்பு நடத்திக் கொண் டிருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளுடனும் மத்திய அரசு பிப்ரவரி 7ம் தேதியும், பிப்ரவரி 13ம் தேதியும் பேச்சு வார்த்தை நடத்த எடுத்த முயற்சிகள், வெற்றிகரமாக நடந்து வரு கின்றன. இரண்டு நாட்கள் முன்னால் கரீபி லாங்ரீ நோத் காசர் மலைகள் விடு தலை முன்னணி என்ற அமைப்பின் தலைவரான தீபு சங்கியா திமுங், தனது துப்பாக்கிகளை அஸ்ஸாம் முதலமைச்சர் தருண் கோகாய் முன்னிலையில், கவுகாத்தியில் திபு என்ற இடத்தில் அடையாளமாக ஒப்படைத்து, தனது போராளி அமைப்பு ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து மாறிக் கொள்வதை அறிவித்தார். இந்த அமைப்புக்கு கே.எல்.என்.எல்.எஃப். என்று பெயர். இதற்கு முன்பே கருப்பு விதவை என்ற திமா ஹலம் தாவோ காவின் அமைப்பு இதே போல ஆயுதங்களுக்கு விடைகொடுத்து, அர சாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வந்தது. மொத்தத்தில் 412 போரா ளிகள் இவ்வாறாக தங்களது ஆயுதங்களை ஒப்படைத்தனர். அதில் 27 பெண் போராளிகளும் அடக்கம். அவர்கள் மொத்தம் 158 தாக்கும் துப்பாக்கிகளை அந்த விழாவில், அரசாங்கத் திடம் ஒப்படைத்தனர். அப்போது அஸ்ஸாம் முதல்வர், ஆயுதங்கள் பிரச்சனைகளை தீர்க்காது என்றும், இலக்கை அதன் மூலம் அடைய முடியாது என்றும், வழக்கமான அரசியல்வாதிகள் போல, வியாக்யானம் செய்தார்.
கரீபி பழங்குடியினரின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை கையில் எடுத்த கே.எல்.என்.எல்.எஃப். என்ற இந்த அமைப்பு, ஒன்று பட்ட மக்கள் ஜனநாயக தோழமை என்ற அமைப் பிலிருந்து வெளியே வந்த ஒரு கரீபி பழங்குடியினர் போராளி அமைப்பு. இவர்கள் தான் அஸ்ஸாம் மாநிலத்தில், வேலைக்கு வந்திறங்கிய இந்தி பேசும் மக்களைப் படுகொலை செய்தவர்கள். ஏற்கனவே 2002ம் ஆண்டு மே மாதம் யு.பி.டி.எஸ். என்று அழைக்கப்படும் ஒன்றுபட்ட மக்கள் ஜனநாயக தோழமை அமைப்பு, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தனது ஆயுதப் போராட்டப் பாதை யிலிருந்து விலகிக் கொண் டது. 2004ம் ஆண்டு மே மாதம் கே.எல்.என்.எல்.எஃப். உருவானது. இப்போது 6 ஆண்டுகள் கழித்து, இவர்களும் தங்களது ஆயுதங்களை கைவிட்டு, அரசியல் போராட்டத்திற்கு வந்துள் ளனர். இந்த அமைப்பினர் அவ்வப்போது கொடுத்து வந்த நகர்ந்து செல்லும் தாக்குதல்களால், அந்த வட்டாரத்தில் வெளிச் சக்திகளாகப் போய் இறங்கிய இந்திய ராணுவம், கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. அதே போல உல்ஃபா அமைப்பும் எத்தனை தாக்குதல்களை சந்தித்தாலும், அஸ்ஸாம் மக்கள் மத்தியில் வேரூன்றிய நிலை யிலேயே இருக்கிறது. இந்த இரு போராளி அமைப்புகளுடன் மத்திய அரசை பேச்சுவார்த்தை நடத்த நிர்ப்பந்தம் செய்த பணி, குறிப்பாக அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் தருண் கோகாயால் முன் னெடுக்கப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலத்தில் 1978ம் ஆண்டு வரை, வங்காளிகளின் ஆதிக்கம் இருந்து வந்தது. கல்விச் சாலைகளிலும், அரசாங்க பணிகளிலும், மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்காளிகளே அதிகமாக ஆக்கிரமிப்பு செய்திருந் தார்கள். அஸ்ஸாம் மாநிலத் தினுடைய மக்கள் தங்க ளுக்குரிய பணியிடங்கள் கிடைக்காமல், தத்தளித் தார்கள். அதுதான் 197879 ஆண்டுகளில், அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்தின் தலைமையில் மக்கள் நடத்திய எழுச் சிப் போராட்டமாக எழுந்தது. அதையொட்டி வங்காளிகள் விரட்டப் பட, அஸ்ஸாம் மாநிலத்த வர்கள் முழுமையாக ஈடுபடும் கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங் களும் வலுப்பெற்றன. அதுவே சில ஆண்டுகள் கழித்து ஏ.ஜி.பி. என்று அழைக்கப்படும், அஸ்ஸாம் கனபரிஷத் ஆட்சிக்கு வர உதவியது. ஆனாலும் கூட அவர் கள் ஆட்சிக்கு வந்த பிற்பாடு, மத்திய ஆளும் வர்க்கத் தின் ஒரு அங்கமாக ஆகி விட்டார்கள் என்ற குற்றச்
சாட்டிற்கு உள்ளானார் கள். அஸ்ஸாம் மாநி லத்தில் பல்வேறு விதமான பழங் குடிகள் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு மாவட்டங்களில் வசித்து வரும், கரீபி ஆங்லாங் பழங்குடியினர், போர் குணமிக்க அறுதியிடும் தன்மை கொண்ட வர்கள்.
அவர்கள் தங்களு டைய சுயாட்சி உரிமை களை பெறுவதற்கு, ஏ.எஸ்.டி.சி. என்றழைக் கப்படக் கூடிய, சுயாட்சி மாநில கோரிக்கை குழு ஒன்றை அமைத்தார்கள். அந்தக் குழுவினர் நக்சல் பாரி புரட்சியாளர்களால் வழிகாட்டப் பட்டார்கள். அந்த ஏ.எஸ்.டி.சி. சார்பாக நாடாளுமன்றத்திற்கு, காங்கிரஸ் கட்சியையும், ஏ.ஜி.பி. கட்சியையும் எதிர்த்து நின்ற வேட்பாளர் வெற்றி பெற்றார். அதே போல கரீபி ஆங்லாங் பகுதியைச் சேர்ந்த 4 சட்டமன்றத் தொகு திகளுக்கும், ஏ.எஸ்.டி.சி. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இவ்வாறு தேர்தல் முறையின் மூல மாகவும், ஜனநாயக போராட்ட இயக்கங்களின் மூலமாகவும் போராடிப் பார்த்த, கரிபீ ஆங்லாங் பழங்குடி மக்கள் தங்களது விடுதலை லட்சியங்களை அடையவில்லை என உணர்ந்தார்கள். அதன் பிறகு அங்கே உருவானது தான் யு.பி.டி.எஸ். என்ற அமைப்பு. அதுவும் தனது ஆயுதப்போராட்டப் பாதையைக் கைவிட்டப் பிறகு உருவானதுதான் கே.எல்.என். எல்.எஃப். என்ற அமைப்பு. அதுவும் கூட இப்போது தனது ஆயுதப் போராட்டப் பாதையை கைவிட்டுள் ளது.
மேற்கண்ட நிகழ்வு களிலிருந்து நமக்குப் புரிவதெல்லாம், ஆயுதப் போராட்டப் பாதையும், அரசியல் போராட்டப் பாதையும், மாறி மாறி அந்தப் பகுதியில் எடுக்கப் பட்டுள்ளது என்பததான். தமிழ்நாடு தனிநாடு என்ற கோரிக்கையை கைவிடும் போது அண்ணா கூறிய சொற்கள்தான் நினைவுக்கு வருகிறது. தனிநாடு கோரிக்கை இப்போது கைவிடப்பட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்பது தான் அன்று அண்ணா குறிப்பிட்ட செய்தி. அதே போல அஸ்ஸாம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் இயக்கங்கள் வளர்ந்தன. தேர்தல் அரசியலில் நுழைந்து விட்ட அந்த கட்சி சார்பற்ற மக்கள் இயக்கம், ஒரு அரசியல் கட்சியாக மாறியது. அதன் பிறகு மக்களது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. அதுவே அஸ்ஸாம் முழுமைக்கான விடுதலையை, ஆயுதப் போராட்டம் மூலம் பெறுவ தற்கான அமைப்பை தோற்றுவித்தது. அந்த அமைப்பும் கூட பல்வேறு நிர்ப்பந்த வேலைகளை செய்தாலும், தொடர்ந்து வெற்றி பெற முடிய வில்லை. அதற்குள் அஸ் ஸாம் மாநிலத்திற்குள் வாழுகின்ற பல்வேறு பழங்குடிகள், தங்களது சுயாட்சிக்கான போராட் டங்களை உருவாக் கினார்கள். அதுவே கரீபி ஆங்லாங் பகுதியில், ஜனநாயக இயக்கமாக வளர்ந்து, அதன் மூலம் மாவட்ட சுயாட்சியைப் பெற்றார்கள். அதன் மூலமும் கரீபி பழங்குடி மக்களுக்கான உரிமைகள் கிடைக்காததனால், புதிய அமைப்புகள் தோன்றி, ஆயுதப்போராட்டங் களை நடத்தினார்கள். இப்போது அவர்களும் தங்களது போராட்ட முறையை மாற்றிக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள் ளது.
இதில் அடிப்படையாகப் புரிய வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. அதாவது பழங்குடி மக்களும், சிறிய தேசிய இனங்களும் தங்களது சுயாட்சியையும், சுய அதிகாரத்தையும், உரிமை களையும் நிலவுகின்ற அரசாட்சி அமைப்புக்குள் பெற முடியாமல், திக்கு முக்காடிப் போகிறார்கள். அதன் மூலம் மறுக் கப்பட முடியாத தங்களது நீதியான கோரிக்கை களுக்காக, பல்வேறு போராட்ட வடிவங்களை மாற்றிக் கொண்டு, உரிமைப் போராட்டத்தை தொடர்கிறார்கள். அதில் அரசியல் போராட்டம், ஆயுதப் போராட்டமாக மாறுவதும், ஆயுதப் போராட்டம், அரசியல் போராட்டமாக மாறு வதும் இடையில் நடக்கக் கூடிய வழிமுறையே தவிர, போராட்ட இலக்கை கைவிட்டதாக பொரு ளல்ல. இதுவே நாம் இந்தியாவிலும் கற்றுக் கொண்டிருக்கும் பாடம்.
சுயாட்சி மாவட்டமாக அங்கீகரிக்கப்பட்ட, கரீபி ஆங்லாங் என்ற ஆதிவாசி பகுதியை, விடுதலை செய்வதற்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை, அங்குள்ள போராளிகள் அமைப்பு நடத்திக் கொண் டிருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளுடனும் மத்திய அரசு பிப்ரவரி 7ம் தேதியும், பிப்ரவரி 13ம் தேதியும் பேச்சு வார்த்தை நடத்த எடுத்த முயற்சிகள், வெற்றிகரமாக நடந்து வரு கின்றன. இரண்டு நாட்கள் முன்னால் கரீபி லாங்ரீ நோத் காசர் மலைகள் விடு தலை முன்னணி என்ற அமைப்பின் தலைவரான தீபு சங்கியா திமுங், தனது துப்பாக்கிகளை அஸ்ஸாம் முதலமைச்சர் தருண் கோகாய் முன்னிலையில், கவுகாத்தியில் திபு என்ற இடத்தில் அடையாளமாக ஒப்படைத்து, தனது போராளி அமைப்பு ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து மாறிக் கொள்வதை அறிவித்தார். இந்த அமைப்புக்கு கே.எல்.என்.எல்.எஃப். என்று பெயர். இதற்கு முன்பே கருப்பு விதவை என்ற திமா ஹலம் தாவோ காவின் அமைப்பு இதே போல ஆயுதங்களுக்கு விடைகொடுத்து, அர சாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வந்தது. மொத்தத்தில் 412 போரா ளிகள் இவ்வாறாக தங்களது ஆயுதங்களை ஒப்படைத்தனர். அதில் 27 பெண் போராளிகளும் அடக்கம். அவர்கள் மொத்தம் 158 தாக்கும் துப்பாக்கிகளை அந்த விழாவில், அரசாங்கத் திடம் ஒப்படைத்தனர். அப்போது அஸ்ஸாம் முதல்வர், ஆயுதங்கள் பிரச்சனைகளை தீர்க்காது என்றும், இலக்கை அதன் மூலம் அடைய முடியாது என்றும், வழக்கமான அரசியல்வாதிகள் போல, வியாக்யானம் செய்தார்.
கரீபி பழங்குடியினரின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை கையில் எடுத்த கே.எல்.என்.எல்.எஃப். என்ற இந்த அமைப்பு, ஒன்று பட்ட மக்கள் ஜனநாயக தோழமை என்ற அமைப் பிலிருந்து வெளியே வந்த ஒரு கரீபி பழங்குடியினர் போராளி அமைப்பு. இவர்கள் தான் அஸ்ஸாம் மாநிலத்தில், வேலைக்கு வந்திறங்கிய இந்தி பேசும் மக்களைப் படுகொலை செய்தவர்கள். ஏற்கனவே 2002ம் ஆண்டு மே மாதம் யு.பி.டி.எஸ். என்று அழைக்கப்படும் ஒன்றுபட்ட மக்கள் ஜனநாயக தோழமை அமைப்பு, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தனது ஆயுதப் போராட்டப் பாதை யிலிருந்து விலகிக் கொண் டது. 2004ம் ஆண்டு மே மாதம் கே.எல்.என்.எல்.எஃப். உருவானது. இப்போது 6 ஆண்டுகள் கழித்து, இவர்களும் தங்களது ஆயுதங்களை கைவிட்டு, அரசியல் போராட்டத்திற்கு வந்துள் ளனர். இந்த அமைப்பினர் அவ்வப்போது கொடுத்து வந்த நகர்ந்து செல்லும் தாக்குதல்களால், அந்த வட்டாரத்தில் வெளிச் சக்திகளாகப் போய் இறங்கிய இந்திய ராணுவம், கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. அதே போல உல்ஃபா அமைப்பும் எத்தனை தாக்குதல்களை சந்தித்தாலும், அஸ்ஸாம் மக்கள் மத்தியில் வேரூன்றிய நிலை யிலேயே இருக்கிறது. இந்த இரு போராளி அமைப்புகளுடன் மத்திய அரசை பேச்சுவார்த்தை நடத்த நிர்ப்பந்தம் செய்த பணி, குறிப்பாக அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் தருண் கோகாயால் முன் னெடுக்கப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலத்தில் 1978ம் ஆண்டு வரை, வங்காளிகளின் ஆதிக்கம் இருந்து வந்தது. கல்விச் சாலைகளிலும், அரசாங்க பணிகளிலும், மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்காளிகளே அதிகமாக ஆக்கிரமிப்பு செய்திருந் தார்கள். அஸ்ஸாம் மாநிலத் தினுடைய மக்கள் தங்க ளுக்குரிய பணியிடங்கள் கிடைக்காமல், தத்தளித் தார்கள். அதுதான் 197879 ஆண்டுகளில், அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்தின் தலைமையில் மக்கள் நடத்திய எழுச் சிப் போராட்டமாக எழுந்தது. அதையொட்டி வங்காளிகள் விரட்டப் பட, அஸ்ஸாம் மாநிலத்த வர்கள் முழுமையாக ஈடுபடும் கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங் களும் வலுப்பெற்றன. அதுவே சில ஆண்டுகள் கழித்து ஏ.ஜி.பி. என்று அழைக்கப்படும், அஸ்ஸாம் கனபரிஷத் ஆட்சிக்கு வர உதவியது. ஆனாலும் கூட அவர் கள் ஆட்சிக்கு வந்த பிற்பாடு, மத்திய ஆளும் வர்க்கத் தின் ஒரு அங்கமாக ஆகி விட்டார்கள் என்ற குற்றச்
சாட்டிற்கு உள்ளானார் கள். அஸ்ஸாம் மாநி லத்தில் பல்வேறு விதமான பழங் குடிகள் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு மாவட்டங்களில் வசித்து வரும், கரீபி ஆங்லாங் பழங்குடியினர், போர் குணமிக்க அறுதியிடும் தன்மை கொண்ட வர்கள்.
அவர்கள் தங்களு டைய சுயாட்சி உரிமை களை பெறுவதற்கு, ஏ.எஸ்.டி.சி. என்றழைக் கப்படக் கூடிய, சுயாட்சி மாநில கோரிக்கை குழு ஒன்றை அமைத்தார்கள். அந்தக் குழுவினர் நக்சல் பாரி புரட்சியாளர்களால் வழிகாட்டப் பட்டார்கள். அந்த ஏ.எஸ்.டி.சி. சார்பாக நாடாளுமன்றத்திற்கு, காங்கிரஸ் கட்சியையும், ஏ.ஜி.பி. கட்சியையும் எதிர்த்து நின்ற வேட்பாளர் வெற்றி பெற்றார். அதே போல கரீபி ஆங்லாங் பகுதியைச் சேர்ந்த 4 சட்டமன்றத் தொகு திகளுக்கும், ஏ.எஸ்.டி.சி. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இவ்வாறு தேர்தல் முறையின் மூல மாகவும், ஜனநாயக போராட்ட இயக்கங்களின் மூலமாகவும் போராடிப் பார்த்த, கரிபீ ஆங்லாங் பழங்குடி மக்கள் தங்களது விடுதலை லட்சியங்களை அடையவில்லை என உணர்ந்தார்கள். அதன் பிறகு அங்கே உருவானது தான் யு.பி.டி.எஸ். என்ற அமைப்பு. அதுவும் தனது ஆயுதப்போராட்டப் பாதையைக் கைவிட்டப் பிறகு உருவானதுதான் கே.எல்.என். எல்.எஃப். என்ற அமைப்பு. அதுவும் கூட இப்போது தனது ஆயுதப் போராட்டப் பாதையை கைவிட்டுள் ளது.
மேற்கண்ட நிகழ்வு களிலிருந்து நமக்குப் புரிவதெல்லாம், ஆயுதப் போராட்டப் பாதையும், அரசியல் போராட்டப் பாதையும், மாறி மாறி அந்தப் பகுதியில் எடுக்கப் பட்டுள்ளது என்பததான். தமிழ்நாடு தனிநாடு என்ற கோரிக்கையை கைவிடும் போது அண்ணா கூறிய சொற்கள்தான் நினைவுக்கு வருகிறது. தனிநாடு கோரிக்கை இப்போது கைவிடப்பட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்பது தான் அன்று அண்ணா குறிப்பிட்ட செய்தி. அதே போல அஸ்ஸாம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் இயக்கங்கள் வளர்ந்தன. தேர்தல் அரசியலில் நுழைந்து விட்ட அந்த கட்சி சார்பற்ற மக்கள் இயக்கம், ஒரு அரசியல் கட்சியாக மாறியது. அதன் பிறகு மக்களது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. அதுவே அஸ்ஸாம் முழுமைக்கான விடுதலையை, ஆயுதப் போராட்டம் மூலம் பெறுவ தற்கான அமைப்பை தோற்றுவித்தது. அந்த அமைப்பும் கூட பல்வேறு நிர்ப்பந்த வேலைகளை செய்தாலும், தொடர்ந்து வெற்றி பெற முடிய வில்லை. அதற்குள் அஸ் ஸாம் மாநிலத்திற்குள் வாழுகின்ற பல்வேறு பழங்குடிகள், தங்களது சுயாட்சிக்கான போராட் டங்களை உருவாக் கினார்கள். அதுவே கரீபி ஆங்லாங் பகுதியில், ஜனநாயக இயக்கமாக வளர்ந்து, அதன் மூலம் மாவட்ட சுயாட்சியைப் பெற்றார்கள். அதன் மூலமும் கரீபி பழங்குடி மக்களுக்கான உரிமைகள் கிடைக்காததனால், புதிய அமைப்புகள் தோன்றி, ஆயுதப்போராட்டங் களை நடத்தினார்கள். இப்போது அவர்களும் தங்களது போராட்ட முறையை மாற்றிக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள் ளது.
இதில் அடிப்படையாகப் புரிய வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. அதாவது பழங்குடி மக்களும், சிறிய தேசிய இனங்களும் தங்களது சுயாட்சியையும், சுய அதிகாரத்தையும், உரிமை களையும் நிலவுகின்ற அரசாட்சி அமைப்புக்குள் பெற முடியாமல், திக்கு முக்காடிப் போகிறார்கள். அதன் மூலம் மறுக் கப்பட முடியாத தங்களது நீதியான கோரிக்கை களுக்காக, பல்வேறு போராட்ட வடிவங்களை மாற்றிக் கொண்டு, உரிமைப் போராட்டத்தை தொடர்கிறார்கள். அதில் அரசியல் போராட்டம், ஆயுதப் போராட்டமாக மாறுவதும், ஆயுதப் போராட்டம், அரசியல் போராட்டமாக மாறு வதும் இடையில் நடக்கக் கூடிய வழிமுறையே தவிர, போராட்ட இலக்கை கைவிட்டதாக பொரு ளல்ல. இதுவே நாம் இந்தியாவிலும் கற்றுக் கொண்டிருக்கும் பாடம்.
Friday, February 12, 2010
தென்னிலங்கையில் ஆயுதப் போர் வெடிக்குமா?
இலங்கைத் தீவில் நடந்த முடிந்த அதிபர் தேர்தல், புதிய அணி
சேர்க்கைகளை உருவாக் கிய அதே நேரத்தில், புதிய பிளவுகளையும் உரு வாக்கியுள்ளது. அதிபர் ஆட்சி அல்லது நாடாளு மன்ற ஆட்சி என்ற தளத்தில் அந்த பிளவுகள் வெளிப்பட்டுள்ளன. அதிபராக முதலில் மகிந்த ராஜபக்சே போட்டியிடும் போது, அவர் சந்திரிகாவை ஓரங்கட்டினாலும், ஜனத விமுக்தி பெரமுனாவை தனது கூட்டணிக்கட்சியாக சேர்த்துக் கொண்டார். அப்போது ஜே.வி.பி.க்கு இலங்கை அரசாட்சியை ஒற்றையாட்சி என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் தான் அழுத்தமாக இருந்தது. அதை மகிந்தா ஏற்றுக் கொண்டார். அதையே அவர் தனது தேர்தல் வியூகத்திற்கும் பயன் படுத்தினார். மகிந்தாவை எதிர்த்து ஐ.தே.க. தலை வர் ரணில் விக்ரம சிங்கே அப்போது அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டார். ரணில் அதிகமாக தமிழர் வாக்குகளை எதிர்பார்த்து அந்த தேர்தலில் ஈடுபட் டார். அப்போது வன்னிப் பகுதியில் தமிழ் அர
சாங்கத்தை நடத்தி வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பு வேறு பட்டு சிந்தித்தது. புலிகள் அமைப் பிலிருந்து கிழக்கு மாகாண தளபதி கருணாவையும், கருணாவுடன் 5,000 போராளிகளையும் பிரித்து, புலிகள் அமைப்பை
உடைத்தது ரணில் விக்கிரம சிங்கே தான் என்ற கருத்து, ஈழத்தமிழர்கள் மத்தியில் ஆழமாக பதிந்திருந்தது. அதனால் தமிழ் ஈழ ஆர்வலர்களின் விருப்பம், தேர்தலில் ரணிலுக்கு சாத கமாக இல்லை. போரை நடத்திக் கொண்டிருந்த மகிந்தாவும், ஒற்றையாட்சி அரசியலைப் பேசிக் கொண்டிருந்தார். ஆகவே இரண்டு பேருக்குமே வாக் களிக்க முடியாது என்ற நிலையில், ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்தமாக அந்த அதிபர் தேர்தலைப் புறக் கணித்தார்கள். அதன் காரணமாகவே மகிந்தா வெற்றி பெற்றார். மகிந்தா வின் சர்வாதிகார ஆட்சியை பார்த்தவர்கள், தமிழர்கள் தேர்தலை புறக்கணித்தது தவறு என்றும், அந்த தவறினால் தான் மகிந்தா வெற்றி பெற்றார் என்றும், அந்த தவறை செய்தவர்கள் விடுதலைப்புலிகள் தான் என்றும் விமர்சனம் செய்து வந்தார்கள்.
இப்போது 2வது முறை யாக அதிபர் தேர்தலில் மகிந்தா நின்றார். இந்த முறை அவரை எதிர்த்து பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத் தினார்கள். மகிந்தாவை சென்ற அதிபர் தேர்தலில் ஆதரித்து வேலை செய்த ஜே.வி.பி., இந்த முறை மகிந்தாவை எதிர்த்து பொன்சேகாவை ஆதரித் தது. இப்படிப்பட்ட அணி சேர்க்கை மாற்றம் தென் னிலங்கையில் ஏற்பட்டது என்றால், வடக்கிலும், கிழக்கிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப் பினர்கள், பொன்சேகாவை ஆதரித்தார்கள். அதனாலேயே தமிழர்கள் வாழும் வடக்கிலும், கிழக்கி லும், கொழும்பிலும், மலையகத்திலும், பொன்சேகாவிற்கே வாக்குகள் விழுந்தன. இதுவும் கூட ஒரு அரசியல் அணி சேர்க்கை என்பதாகவே எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இப்போது தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் பொன்சேகாவை கைதா அல்லது கடத்தலா என்றே தெரியாத அளவுக்கு, ராணுவ காவல் துறை மூலம் மகிந்தா செயல் பட்டுள்ளார். அதுவே தென்னிலங்கையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்சேகாவிற்கு ஆதர வாக தெருவில் இறங்கி போராடியவர் கள் மீது, மகிந்தா ஆதரவாளர் கள் தாக்கியிருக் கிறார்கள். இத்தகைய போராட்டங் களும், தாக்குதல்களும் தொடரும் என்று தெரி கிறது.
தமிழர்கள் மத்தியில் உலகம் எங்கிலும் ஒரு விவாதம் நடந்து கொண்டி ருக்கிறது. ராஜபக்சே அர சாங்கத்தால், கைது செய் யப்பட்ட பொன்சேகா ஏற்கனவே தமிழருக்கு எதிரான போரில், மோசமாக நடந்து கொண்டதற்கு இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்ப தாக ஒரு கருத்து உலாவிக் கொண்டிருக்கிறது. இந்த கருத்து, அதிபர் தேர்தல் நேரத்திலேயே வெளிவந்த சிந்தனைப் போக்குதான். அதாவது ராஜபக்சேயும், பொன்சேகாவும் போட்டியிடுகின்ற ஒரு தேர்தலில், இருவரை யுமே தமிழர்கள் ஆதரிக்கக் கூடாது என்பதுதான் அந்த கருத்து. இருவரும் சேர்ந்து தான் ஒரு இன அழிப்புப் போரை, தமிழர்கள் மீது நடத்தினார்கள். அந்தப் போரை நடத்துவதற்கான அனைத்து திட்டங் களையும் உருவாக்கி, அந்நிய நாட்டு உதவிகளை யும் வாங்கிக் கொண்டு, அரசியல் முடிவுகளை செய்தது மகிந்த ராஜபக் சேயின் கும்பல் என் பதால், தமிழர்கள் வாக்கு மகிந்தாவிற்கு ஆதரவாக போடப்பட முடியாது. அதே சமயம் மகிந்தாவை எதிர்க்கிறேன் என்ற பெய ரில் நிற்கின்ற பொன்சேகா, நேரடியாக வடக்கு மாகாணத்தில் சிங்களப் படைக்கு தலைமை எடுத்து நின்று, தமிழர்களுக்கு எதிராக போர் புரிந்தார் என்பதனால் அவருக்கும் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதே அந்தக் கருத்து. மேற்கண்ட கருத்துக்கு ஏதுவாக சிவாஜிலிங்கமும், டாக்டர் விக்ரமபாகு கருணா ரத்னேயும் சேர்ந்து நின்று போட்டியிட்டார்கள். அவர்களது பிரச்சாரம் முக்கிய இரு வேட்பாளர் களான, ராஜபக்சேயையும், பொன்சேகாவையும் போர் வெறியர்களாக சித்தரித்தது.
பொன்சேகாவை பொருத்தவரை அவர் எந்த விதத்திலும், தமிழர்களுக்கு சாதகமாக போர் நேரத்தில் சிந்தித்தது இல்லை. அப்பாவி தமிழர்கள் படு கொலையானதற்கும், தமிழ் போராளிகள் மீது ரசாயன குண்டுகளைப் போட்டு, படுகொலை செய்வதற்கும், தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளானதற்கும், சிங்கள ராணுவம்தான் பொறுப்பு எனும் போது, அந்த ராணுவத்திற்கு தலைமை தாங்கிய
சரத் பொன்சேகாதான் நேரடியான பொறுப்பு என்ற அழுத்தமான கருத்தை அவர்கள் வெளிப் படுத்துகிறார்கள்.
அதே சமயம் தமிழின அழிப்புப் போர் நடை பெறும் நேரத்தில், ராணு வத் தளபதி சரத்பொன்சேகா, கூறிய வார்த்தை உலக மெங்கிலும் தமிழர்கள் மத்தியிலும், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் பிரச்சினையை கிளப்பியிருந்ததை, இப்போது நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. அதாவது இலங்கைத் தீவு, சிங்களர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும், மற்ற வர்கள் அங்கே வாழலாம்; ஆனால் உரிமை கேட்கக்கூடாது என்றும், பொன்சேகா கூறியதை இப்போது நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. அப்படி கூறிய பொன்சேகாவிற்கு, தமிழர்கள் மட்டுமே பெரும்பான்மையாக வாக்களித்திருப்பது கவனிக்கத்தக்கது. அதற்கு காரணமாக அமைந்ததும், அதிபர் தேர்தல் நேரத்தில் பொன்சேகா உதிர்த்த உறுதிமொழிகள்தான். அந்த உறுதிமொழிகளில், தமிழர் பகுதிகளை பாதுகாப்பு பகுதிகளாக அறி வித்திருப்பதை நீக்குவேன் என்றும், ராணுவத்தை அந்த பகுதிகளிலிருந்து திரும்ப பெறுவேன் என்றும், முள்வேலி முகாம்களை முழுமையாக திறந்து விடுவேன் என்றும், கைது செய்யப்பட்டவர்களை போராளிகள் உட்பட விடுதலை செய்வேன் என்றும், கடத்தப் பட்டவர்களில் மரண மடைந்தவர்கள் குடும்பத் திற்கு நட்டஈடு தருவேன் என்றும், கூறிய வாக்குறுதி கள்தான் தமிழர்களை ஈர்த்தது. போர் நேரத்தில் கண்டபடி தமிழர்களுக்கு எதிராகப் பேசிய, பொன்சேகா தேர்தல் நேரத்தில் மாற்றிப் பேசியதுதான் அதி சய நிகழ்வாக நடந்தது.
இப்போது தென்னிலங் கையில் பொன்சேகாவின் பெயரால் கொந்தளிப்பு தொடங்கியிருக்கிறது. இந்த கொந்தளிப்பிற்கு ஒரு வரலாறு உண்டு. ராஜபக்சே குடும்பத்தினர் பொருள் சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள் என்று தென்னிலங்கையில் உள்ள ஏழை சிங்கள மக்கள் எண்ணிப் பொரு முகிறார்கள். ஜனநாயக ரீதியாக செயல்பாடுகள் இல்லை என்ற தாக்கம் தென்னிலங்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அவர்களை துன்புறுத்துகிறது. ஜே.வி.பி. இப்போது கடும் கோபத்தில் இருக்கிறது. அவர்களுடைய
செல்வாக்கு பகுதிகளில், இளைஞர்களும், மக்களும் பெரிய அளவிலான மக்கள் எழுச்சிக்கு, தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜே.வி.பி.யும், ஐ.தே.க.வும் அரசு ஊழியர்களை யும், ராணுவத் தினரையும் நோக்கி கலகம் செய்யும்படி அறைகூவல் விடுகின்றனர். தவறான கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று வெளிப்படையாக கூறுகின்றனர்.
இன்னொரு ஆயுதக் கிளர்ச்சி தென்னிலங் கையில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜே.வி.பி. நடத்திய ஆயுத கிளர்ச்சி, 1971ம் ஆண்டி லும், 80களிலும் தென்னிலங் கையை நிலைகுலைய வைத்தது. அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்களும், இளம் பெண்களும் ராணுவத்தால் அநியாயமாகக் கொல் லப்பட்டனர். அத்தகைய எழுச்சி மீண்டும் எழலாம் என்ற அறிகுறிகள் தென் படுகின்றன. அதனால்தான் ரஷ்யாவிடம் சென்று 300 மில்லியன் டாலர் பெறு மான ஆயுத உதவியை ராஜபக்சே பெற்றுள்ளார். சிங்கள தேசத்தின் நாட்டுப்பற்றாளர்கள் இந்த முறை எழுவார்கள். சர்வாதிகாரத்திற்கு எதிராக உழுவார்கள். இலங்கைத் தீவிலும் ஒரு ஜனநாயக வெளிச்சம் பிறக்க உதவுவார்கள். இப்படி ஒரு எதிர்பார்ப்பு சில ஜன நாயக உணர்வாளர்கள் மத்தியில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
சேர்க்கைகளை உருவாக் கிய அதே நேரத்தில், புதிய பிளவுகளையும் உரு வாக்கியுள்ளது. அதிபர் ஆட்சி அல்லது நாடாளு மன்ற ஆட்சி என்ற தளத்தில் அந்த பிளவுகள் வெளிப்பட்டுள்ளன. அதிபராக முதலில் மகிந்த ராஜபக்சே போட்டியிடும் போது, அவர் சந்திரிகாவை ஓரங்கட்டினாலும், ஜனத விமுக்தி பெரமுனாவை தனது கூட்டணிக்கட்சியாக சேர்த்துக் கொண்டார். அப்போது ஜே.வி.பி.க்கு இலங்கை அரசாட்சியை ஒற்றையாட்சி என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் தான் அழுத்தமாக இருந்தது. அதை மகிந்தா ஏற்றுக் கொண்டார். அதையே அவர் தனது தேர்தல் வியூகத்திற்கும் பயன் படுத்தினார். மகிந்தாவை எதிர்த்து ஐ.தே.க. தலை வர் ரணில் விக்ரம சிங்கே அப்போது அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டார். ரணில் அதிகமாக தமிழர் வாக்குகளை எதிர்பார்த்து அந்த தேர்தலில் ஈடுபட் டார். அப்போது வன்னிப் பகுதியில் தமிழ் அர
சாங்கத்தை நடத்தி வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பு வேறு பட்டு சிந்தித்தது. புலிகள் அமைப் பிலிருந்து கிழக்கு மாகாண தளபதி கருணாவையும், கருணாவுடன் 5,000 போராளிகளையும் பிரித்து, புலிகள் அமைப்பை
உடைத்தது ரணில் விக்கிரம சிங்கே தான் என்ற கருத்து, ஈழத்தமிழர்கள் மத்தியில் ஆழமாக பதிந்திருந்தது. அதனால் தமிழ் ஈழ ஆர்வலர்களின் விருப்பம், தேர்தலில் ரணிலுக்கு சாத கமாக இல்லை. போரை நடத்திக் கொண்டிருந்த மகிந்தாவும், ஒற்றையாட்சி அரசியலைப் பேசிக் கொண்டிருந்தார். ஆகவே இரண்டு பேருக்குமே வாக் களிக்க முடியாது என்ற நிலையில், ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்தமாக அந்த அதிபர் தேர்தலைப் புறக் கணித்தார்கள். அதன் காரணமாகவே மகிந்தா வெற்றி பெற்றார். மகிந்தா வின் சர்வாதிகார ஆட்சியை பார்த்தவர்கள், தமிழர்கள் தேர்தலை புறக்கணித்தது தவறு என்றும், அந்த தவறினால் தான் மகிந்தா வெற்றி பெற்றார் என்றும், அந்த தவறை செய்தவர்கள் விடுதலைப்புலிகள் தான் என்றும் விமர்சனம் செய்து வந்தார்கள்.
இப்போது 2வது முறை யாக அதிபர் தேர்தலில் மகிந்தா நின்றார். இந்த முறை அவரை எதிர்த்து பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத் தினார்கள். மகிந்தாவை சென்ற அதிபர் தேர்தலில் ஆதரித்து வேலை செய்த ஜே.வி.பி., இந்த முறை மகிந்தாவை எதிர்த்து பொன்சேகாவை ஆதரித் தது. இப்படிப்பட்ட அணி சேர்க்கை மாற்றம் தென் னிலங்கையில் ஏற்பட்டது என்றால், வடக்கிலும், கிழக்கிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப் பினர்கள், பொன்சேகாவை ஆதரித்தார்கள். அதனாலேயே தமிழர்கள் வாழும் வடக்கிலும், கிழக்கி லும், கொழும்பிலும், மலையகத்திலும், பொன்சேகாவிற்கே வாக்குகள் விழுந்தன. இதுவும் கூட ஒரு அரசியல் அணி சேர்க்கை என்பதாகவே எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இப்போது தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் பொன்சேகாவை கைதா அல்லது கடத்தலா என்றே தெரியாத அளவுக்கு, ராணுவ காவல் துறை மூலம் மகிந்தா செயல் பட்டுள்ளார். அதுவே தென்னிலங்கையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்சேகாவிற்கு ஆதர வாக தெருவில் இறங்கி போராடியவர் கள் மீது, மகிந்தா ஆதரவாளர் கள் தாக்கியிருக் கிறார்கள். இத்தகைய போராட்டங் களும், தாக்குதல்களும் தொடரும் என்று தெரி கிறது.
தமிழர்கள் மத்தியில் உலகம் எங்கிலும் ஒரு விவாதம் நடந்து கொண்டி ருக்கிறது. ராஜபக்சே அர சாங்கத்தால், கைது செய் யப்பட்ட பொன்சேகா ஏற்கனவே தமிழருக்கு எதிரான போரில், மோசமாக நடந்து கொண்டதற்கு இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்ப தாக ஒரு கருத்து உலாவிக் கொண்டிருக்கிறது. இந்த கருத்து, அதிபர் தேர்தல் நேரத்திலேயே வெளிவந்த சிந்தனைப் போக்குதான். அதாவது ராஜபக்சேயும், பொன்சேகாவும் போட்டியிடுகின்ற ஒரு தேர்தலில், இருவரை யுமே தமிழர்கள் ஆதரிக்கக் கூடாது என்பதுதான் அந்த கருத்து. இருவரும் சேர்ந்து தான் ஒரு இன அழிப்புப் போரை, தமிழர்கள் மீது நடத்தினார்கள். அந்தப் போரை நடத்துவதற்கான அனைத்து திட்டங் களையும் உருவாக்கி, அந்நிய நாட்டு உதவிகளை யும் வாங்கிக் கொண்டு, அரசியல் முடிவுகளை செய்தது மகிந்த ராஜபக் சேயின் கும்பல் என் பதால், தமிழர்கள் வாக்கு மகிந்தாவிற்கு ஆதரவாக போடப்பட முடியாது. அதே சமயம் மகிந்தாவை எதிர்க்கிறேன் என்ற பெய ரில் நிற்கின்ற பொன்சேகா, நேரடியாக வடக்கு மாகாணத்தில் சிங்களப் படைக்கு தலைமை எடுத்து நின்று, தமிழர்களுக்கு எதிராக போர் புரிந்தார் என்பதனால் அவருக்கும் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதே அந்தக் கருத்து. மேற்கண்ட கருத்துக்கு ஏதுவாக சிவாஜிலிங்கமும், டாக்டர் விக்ரமபாகு கருணா ரத்னேயும் சேர்ந்து நின்று போட்டியிட்டார்கள். அவர்களது பிரச்சாரம் முக்கிய இரு வேட்பாளர் களான, ராஜபக்சேயையும், பொன்சேகாவையும் போர் வெறியர்களாக சித்தரித்தது.
பொன்சேகாவை பொருத்தவரை அவர் எந்த விதத்திலும், தமிழர்களுக்கு சாதகமாக போர் நேரத்தில் சிந்தித்தது இல்லை. அப்பாவி தமிழர்கள் படு கொலையானதற்கும், தமிழ் போராளிகள் மீது ரசாயன குண்டுகளைப் போட்டு, படுகொலை செய்வதற்கும், தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளானதற்கும், சிங்கள ராணுவம்தான் பொறுப்பு எனும் போது, அந்த ராணுவத்திற்கு தலைமை தாங்கிய
சரத் பொன்சேகாதான் நேரடியான பொறுப்பு என்ற அழுத்தமான கருத்தை அவர்கள் வெளிப் படுத்துகிறார்கள்.
அதே சமயம் தமிழின அழிப்புப் போர் நடை பெறும் நேரத்தில், ராணு வத் தளபதி சரத்பொன்சேகா, கூறிய வார்த்தை உலக மெங்கிலும் தமிழர்கள் மத்தியிலும், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் பிரச்சினையை கிளப்பியிருந்ததை, இப்போது நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. அதாவது இலங்கைத் தீவு, சிங்களர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும், மற்ற வர்கள் அங்கே வாழலாம்; ஆனால் உரிமை கேட்கக்கூடாது என்றும், பொன்சேகா கூறியதை இப்போது நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. அப்படி கூறிய பொன்சேகாவிற்கு, தமிழர்கள் மட்டுமே பெரும்பான்மையாக வாக்களித்திருப்பது கவனிக்கத்தக்கது. அதற்கு காரணமாக அமைந்ததும், அதிபர் தேர்தல் நேரத்தில் பொன்சேகா உதிர்த்த உறுதிமொழிகள்தான். அந்த உறுதிமொழிகளில், தமிழர் பகுதிகளை பாதுகாப்பு பகுதிகளாக அறி வித்திருப்பதை நீக்குவேன் என்றும், ராணுவத்தை அந்த பகுதிகளிலிருந்து திரும்ப பெறுவேன் என்றும், முள்வேலி முகாம்களை முழுமையாக திறந்து விடுவேன் என்றும், கைது செய்யப்பட்டவர்களை போராளிகள் உட்பட விடுதலை செய்வேன் என்றும், கடத்தப் பட்டவர்களில் மரண மடைந்தவர்கள் குடும்பத் திற்கு நட்டஈடு தருவேன் என்றும், கூறிய வாக்குறுதி கள்தான் தமிழர்களை ஈர்த்தது. போர் நேரத்தில் கண்டபடி தமிழர்களுக்கு எதிராகப் பேசிய, பொன்சேகா தேர்தல் நேரத்தில் மாற்றிப் பேசியதுதான் அதி சய நிகழ்வாக நடந்தது.
இப்போது தென்னிலங் கையில் பொன்சேகாவின் பெயரால் கொந்தளிப்பு தொடங்கியிருக்கிறது. இந்த கொந்தளிப்பிற்கு ஒரு வரலாறு உண்டு. ராஜபக்சே குடும்பத்தினர் பொருள் சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள் என்று தென்னிலங்கையில் உள்ள ஏழை சிங்கள மக்கள் எண்ணிப் பொரு முகிறார்கள். ஜனநாயக ரீதியாக செயல்பாடுகள் இல்லை என்ற தாக்கம் தென்னிலங்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அவர்களை துன்புறுத்துகிறது. ஜே.வி.பி. இப்போது கடும் கோபத்தில் இருக்கிறது. அவர்களுடைய
செல்வாக்கு பகுதிகளில், இளைஞர்களும், மக்களும் பெரிய அளவிலான மக்கள் எழுச்சிக்கு, தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜே.வி.பி.யும், ஐ.தே.க.வும் அரசு ஊழியர்களை யும், ராணுவத் தினரையும் நோக்கி கலகம் செய்யும்படி அறைகூவல் விடுகின்றனர். தவறான கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று வெளிப்படையாக கூறுகின்றனர்.
இன்னொரு ஆயுதக் கிளர்ச்சி தென்னிலங் கையில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜே.வி.பி. நடத்திய ஆயுத கிளர்ச்சி, 1971ம் ஆண்டி லும், 80களிலும் தென்னிலங் கையை நிலைகுலைய வைத்தது. அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்களும், இளம் பெண்களும் ராணுவத்தால் அநியாயமாகக் கொல் லப்பட்டனர். அத்தகைய எழுச்சி மீண்டும் எழலாம் என்ற அறிகுறிகள் தென் படுகின்றன. அதனால்தான் ரஷ்யாவிடம் சென்று 300 மில்லியன் டாலர் பெறு மான ஆயுத உதவியை ராஜபக்சே பெற்றுள்ளார். சிங்கள தேசத்தின் நாட்டுப்பற்றாளர்கள் இந்த முறை எழுவார்கள். சர்வாதிகாரத்திற்கு எதிராக உழுவார்கள். இலங்கைத் தீவிலும் ஒரு ஜனநாயக வெளிச்சம் பிறக்க உதவுவார்கள். இப்படி ஒரு எதிர்பார்ப்பு சில ஜன நாயக உணர்வாளர்கள் மத்தியில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
Thursday, February 11, 2010
தமிழில் பாட காஞ்சியில் தடையா?
சமீபத்தில் காஞ்சி மாவட்டத்தில், கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வார் கோவிலுக்குள் தமிழில் இறைவனைப் பாட தடை செய்யப்பட்டது என்ற செய்தி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் இருந்த பார்ப்பனக் குருக்கள், தமிழில் பாட விடாமல் தடுத்திருக்கிறார்கள். இதே போல சென்ற ஆண்டு, சிதம்பரம் நடராசர் கோயிலில் தீட்சிதர்கள், தமிழில் பாடிக்கொண்டு உள்ளே சென்ற ஆறுமுகசாமி என்ற சிவாச்சாரியாரைத் தடுத்து, அடித்து விரட்டியது தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு தான் சிதம்பரம் கோவிலின் தீட்சிதர்கள் பற்றிய தில்லுமுல்லுகள், ஊடகங்கள் மூலம் உலகுக்கு அரங்கேறின. அதன் பிறகுதான் அந்த கோவிலில் தமிழ் பக்தர்கள் போடுகின்ற பணத்தையெல்லாம், உண்டியலில் இருந்து அள்ளிக் கொள்பவர்கள் தீட்சிதர்கள் என்ற செய்தி வெளியே வந்தது. அதையொட்டி தமிழக அரசும் அந்த சிவன் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தது. கொண்டு வந்த கையோடு அரசே ஒரு உண்டியலையும் பெரியதாக வைத்தது. இது பொறுக்காத தீட்சிதர்கள் அங்கும், இங்கும் ஓடி கடைசியாக நீதிமன்றத்திற்கும் சென்றார்கள். சென்னை உயர்நீதிமன்றமும், தீட்சதர்களின் மண்டையில் குட்டியது. சிதம்பரம் கோயிலை சுற்றியுள்ள நிலங்கள் எல்லாம், தீட்சிதர்களால் பிளாட் போட்டு விற்கப்பட்டது என்ற செய்தி இன்னமும் அம்பலத்திற்கு வரவில்லை. அதற்கான விசாரணைக் குழுவும், அதனாலேயே அரசால் போடப்படவில்லை. இது சைவக் கோயிலில் நடந்த திருவிளையாடல் என்றால், மேற்கண்ட கூரத்தாழ்வார் கோயில் விளையாட்டு, வைணவக் கோயிலில் நடந்த சேட்டை.
சைவமோ, வைணவமோ, அத்தகைய கோயில் களை தங்கள் கைகளுக்குள் பிடித்து வைத்திருப்பது ஒரு சிறிய சமூகம். அவர்கள் இறைவனிடம் நேரடி யாகப் பேசுவார்கள் என்றும், இறைவனின் மொழி கிருந்தம் என்றும், சமஸ்கிருதத்தைத் தெரிந்தவர்கள் தான், இறைவனிடம் பேசமுடியும் என்றும், இன்னமும் நமது தமிழ் பக்தர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மொழி தமிழ்நாட்டு மக்களின் தாய்மொழி. அப்படி இருக்க தங்கள் தாய்மொழியை மட்டுமே அறிந்த பெருவாரியான தமிழ்மக்கள், கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்றாலும், நீதிமன்றத்திற்கு நீதி கேட்டு அலைந்தாலும், அங்கெல்லாம் தமிழ் பேசப்பட்டால் மட்டும்தான், அவர்களும் அந்த நிகழ்ச்சியில் புரிதலோடு பங்கு கொள்ள முடியும். இது ஏனோ நீதி தேவதைகளுக்கும், கோயில் சாமி களுக்கும் புரியவில்லை. இரண்டு இடங்களிலும் நமது தமிழ் மக்கள், வாய்பேசாத மௌனிகளாக நின்றுவிடுகிறார்கள். அவர்களுக்கும், சாமிக்கும் இடைவெளி அதிகமாகிறது. அவர்களுக்கும், நீதிதேவதைக்கும் இடையில் பெரும் சுவர் எழுப்பப்படுகிறது. இதனால் சிறிது சிறிதாக, சாமி நம்பிக்கை அற்றவர்களாகவும், நீதிமன்றத்தை நம்பாதவர்களாகவும் அந்த தாய்மொழி மட்டுமே தெரிந்த அப்பாவி மக்கள், ஆகிவிடுகிறார்கள்.
அது கூட ஒரு வகையில், இந்த இரண்டு நிறுவ னங்களையும் தங்கள் நலனுக்கு பயன்படுத்த விரும்பும் சக்திகளுக்குப் பயனுள்ளதாகப் போய் விடுகிறது. சிதம்பரம் நடராசர் கோயிலில், தங்கள் சொந்த லாபத்திற்காக தீட்சிதர்கள், தமிழில் பாட அனுமதிக்கவில்லை என்று புரிய முடிகிறது. ஆனால் காஞ்சி கூரத்தாழ்வார் கோயிலில், தமிழில் பாசுரம் பாட மறுக்கப்பட்ட அணுகுமுறை, மேலும் சில கேள்விகளை எழுப்புகிறது. நம்பிள்ளை ராமானுஜ ஆச்சாரியார் என்பவர் தலைமையில் ஆண்டாள் திருப்பாவையைப் பாடிக் கொண்டு, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீஹரி மடத்து பக்தர்கள், கூரத்தாழ்வார் கோயில் மண்டபத்திற்குள் நுழைந் திருக்கிறார்கள். அந்த வைணவக் கோயிலின் முக்கிய குருக்களாக இருக்கின்ற பார்ப்பனர்களான கண்ணன் பட்டாச்சாரியாரும், பார்த்தசாரதி பட்டாச்சாரியரும் அவர்களைத் தடுத்திருக்கிறார்கள், பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள். தமிழ் பாசுரம் பாடுவதால் ஆச்சாரம் கெட்டு விடும் என்றும் கூறியிருக்கிறார்கள். இது முதலில் தமிழ்நாட்டில், தாய் மொழி தமிழில், ஆண்டவனைப் புகழ்ந்து பாடல் பாடுவதற்கு தடை என்ற மனித உரிமை மீறலாக வருகிறது. அதையும் தாண்டி, கூரத்தாழ்வார் கோயில் என்றால் என்ன என்ற வரலாற்றிற்குள் போய் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
அருகே இருக்கும் திருப்பெரும்புதூரில் கி.பி. 1017ல் பிறந்தவர் ராமானுஜர். இந்த ராமானுஜர் வைணவ மதத்தில் ஒரு முக்கியத் தூணாகக் கருதப்படுகிறார். அவர் பார்ப்பனர் அல்லாத சாதியினரையும், முப்பிரி நூல் மாட்டிவிட்டு, பார்ப்பனராக மாற்றினார் என்பது வரலாறு. திருநாராயணபுரம் கோயிலில், ராமானுஜர் தாழ்த்தப் பட்ட மக்களை, கோயிலுக்குள் முதன்முறையாக அனுமதித்தார் என்பது புரட்சிகரமான செயலாக, அன்றைய காலத்தில் பார்க்கப்பட்டது. தாழ்த் தப்பட்டவர்களுக்கு பூணூல் அணிவித்து பார்ப்பனர்களாக ஆக்கிய ராமானுஜரின் முதல் சீடராக கூரத்தாழ்வார் இருந்தார். சைவ சமயத்து சோழ மன்னன் இது கண்டு பொறுக்க முடியாமல், ராமானு ஜரை பிடிப்பதற்காக தேடி இருக்கிறான். அப்போது திருநாராயணபுரத்திலேயே 12 ஆண்டுகளை ராமானுஜர் மறைந்திருந்து கழித்திருக்கிறார். சோழ மன்னனின் மறைவிற்குப் பிறகு, அவரது சீடர்கள் வேண்டுகோளுக்கிணங்க, பாதுகாப்பாக ஸ்ரீரங்கம் வந்திருக்கிறார். ராமானுஜரை காட்டிக்கொடுக்கச் சொல்லி, சோழ மன்னன், கூரத்தாழ்வாரை நிர்ப்பந்தித்திருக்கிறான். காட்டிக் கொடுக்க மறுத்த கூரத்தாழ்வாரின் கண்களையும், பெரிய நம்பியின் கண்களையும், மன்னர் உத்தரவுப்படி பிடுங்கி இருக்கிறார்கள் என்ற செய்தி ஊருக்கு திரும்பிய ராமானுஜருக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. கூரத்தாழ்வாரின் மகனுக்கு, ராமானுஜர் பராசரன் என்று பெயர் வைத்திருக்கிறார். அவர்தான் பின்னாளில் அறிவார்ந்த தூணாக, வைணவத்திற்கு உருவாகியிருக்கிறார். அவரை பின்னாளில் பராசரர்பட்டர் என்று அழைத்திருக்கிறார்கள். ராமானுஜர் கி.பி. 1137 வரை உயிர்வாழ்ந்து தனது 120வது வயதில் மறைந்திருக்கிறார்.
அத்தகைய கூரத்தாழ்வாரின் கோயில் என்பது, சாதி மறுப்பு கோயிலாகவும், தாய்மொழிப் பாடல்களை அனுமதிக்கும் கோயிலாகவும் இருக்க வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி, அங்கே திருப்பாவை பாடிச்சென்ற போதுதான், பட்டாச்சாரியார்களின் தடை என்ற அடாவடி நடந்திருக்கிறது. திருப்பாவை 12 வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூலாகும். வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரதிவ்யப் பிரபந்தத்தின் 473ம் பாடல் முதல் 503ம் பாடல் வரை திருப்பாவைப் பாடல் கள் என்று பெயர்.
அத்தகைய திருப்பாவைப் பாடல்களை பாடி வந்த பக்தர்கள் தான் கூரத்தாழ்வார் கோயிலில் தடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் தடை பற்றி பாதிக்கப்பட்ட நம்பிள்ளை ராமானுஜ ஆச்சாரியார், அந்த வட்டார வருவாய்த் துறை ஆய்வாளரிடமும், காவல்துறை ஆய்வாளரிடமும், கிராம நிர்வாக அலுவலர்களிடமும் போய் முறையிட்டு இருக்கிறார்கள். அவர்களும் தடை விதித்த பார்ப்பனர்களுக்கு சாதகமாகவே பேசி இருக்கிறார்கள். இந்தச் செய்தியை வாரம் இருமுறை ஏடு வெளியிட, முதல்வரை நிறுவனராகக் கொண்ட நாளேட்டில் தெளிவான கட்டுரையாக எழுதியிருக் கிறார்கள்.
ஆட்சியாளர்கள் விரும்பாவிட்டாலும், அவர்க ளது ஆதரவாளர்கள் ஊடகங்களில் பட்டியலிட்டு அம்பலப்படுத்தினாலும், சாதிய வெறிகளும், தமிழ் மொழி எதிர்ப்பு நடவடிக்கைகளும் இன்னமும் நமது வழிபாட்டுத் தலங்களில் தொடர்கின்றன. இதற்குக் காரணம் என்ன? சமூக ரீதியான வன்முறை என்பது, சட்ட, திட்டங்களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ அடங்குவதில்லை. அதை அடக்குவதற்கோ, அகற்றுவதற்கோ, மக்கள்தான் முன்முயற்சி எடுக்க வேண்டும்.
சைவமோ, வைணவமோ, அத்தகைய கோயில் களை தங்கள் கைகளுக்குள் பிடித்து வைத்திருப்பது ஒரு சிறிய சமூகம். அவர்கள் இறைவனிடம் நேரடி யாகப் பேசுவார்கள் என்றும், இறைவனின் மொழி கிருந்தம் என்றும், சமஸ்கிருதத்தைத் தெரிந்தவர்கள் தான், இறைவனிடம் பேசமுடியும் என்றும், இன்னமும் நமது தமிழ் பக்தர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மொழி தமிழ்நாட்டு மக்களின் தாய்மொழி. அப்படி இருக்க தங்கள் தாய்மொழியை மட்டுமே அறிந்த பெருவாரியான தமிழ்மக்கள், கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்றாலும், நீதிமன்றத்திற்கு நீதி கேட்டு அலைந்தாலும், அங்கெல்லாம் தமிழ் பேசப்பட்டால் மட்டும்தான், அவர்களும் அந்த நிகழ்ச்சியில் புரிதலோடு பங்கு கொள்ள முடியும். இது ஏனோ நீதி தேவதைகளுக்கும், கோயில் சாமி களுக்கும் புரியவில்லை. இரண்டு இடங்களிலும் நமது தமிழ் மக்கள், வாய்பேசாத மௌனிகளாக நின்றுவிடுகிறார்கள். அவர்களுக்கும், சாமிக்கும் இடைவெளி அதிகமாகிறது. அவர்களுக்கும், நீதிதேவதைக்கும் இடையில் பெரும் சுவர் எழுப்பப்படுகிறது. இதனால் சிறிது சிறிதாக, சாமி நம்பிக்கை அற்றவர்களாகவும், நீதிமன்றத்தை நம்பாதவர்களாகவும் அந்த தாய்மொழி மட்டுமே தெரிந்த அப்பாவி மக்கள், ஆகிவிடுகிறார்கள்.
அது கூட ஒரு வகையில், இந்த இரண்டு நிறுவ னங்களையும் தங்கள் நலனுக்கு பயன்படுத்த விரும்பும் சக்திகளுக்குப் பயனுள்ளதாகப் போய் விடுகிறது. சிதம்பரம் நடராசர் கோயிலில், தங்கள் சொந்த லாபத்திற்காக தீட்சிதர்கள், தமிழில் பாட அனுமதிக்கவில்லை என்று புரிய முடிகிறது. ஆனால் காஞ்சி கூரத்தாழ்வார் கோயிலில், தமிழில் பாசுரம் பாட மறுக்கப்பட்ட அணுகுமுறை, மேலும் சில கேள்விகளை எழுப்புகிறது. நம்பிள்ளை ராமானுஜ ஆச்சாரியார் என்பவர் தலைமையில் ஆண்டாள் திருப்பாவையைப் பாடிக் கொண்டு, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீஹரி மடத்து பக்தர்கள், கூரத்தாழ்வார் கோயில் மண்டபத்திற்குள் நுழைந் திருக்கிறார்கள். அந்த வைணவக் கோயிலின் முக்கிய குருக்களாக இருக்கின்ற பார்ப்பனர்களான கண்ணன் பட்டாச்சாரியாரும், பார்த்தசாரதி பட்டாச்சாரியரும் அவர்களைத் தடுத்திருக்கிறார்கள், பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள். தமிழ் பாசுரம் பாடுவதால் ஆச்சாரம் கெட்டு விடும் என்றும் கூறியிருக்கிறார்கள். இது முதலில் தமிழ்நாட்டில், தாய் மொழி தமிழில், ஆண்டவனைப் புகழ்ந்து பாடல் பாடுவதற்கு தடை என்ற மனித உரிமை மீறலாக வருகிறது. அதையும் தாண்டி, கூரத்தாழ்வார் கோயில் என்றால் என்ன என்ற வரலாற்றிற்குள் போய் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
அருகே இருக்கும் திருப்பெரும்புதூரில் கி.பி. 1017ல் பிறந்தவர் ராமானுஜர். இந்த ராமானுஜர் வைணவ மதத்தில் ஒரு முக்கியத் தூணாகக் கருதப்படுகிறார். அவர் பார்ப்பனர் அல்லாத சாதியினரையும், முப்பிரி நூல் மாட்டிவிட்டு, பார்ப்பனராக மாற்றினார் என்பது வரலாறு. திருநாராயணபுரம் கோயிலில், ராமானுஜர் தாழ்த்தப் பட்ட மக்களை, கோயிலுக்குள் முதன்முறையாக அனுமதித்தார் என்பது புரட்சிகரமான செயலாக, அன்றைய காலத்தில் பார்க்கப்பட்டது. தாழ்த் தப்பட்டவர்களுக்கு பூணூல் அணிவித்து பார்ப்பனர்களாக ஆக்கிய ராமானுஜரின் முதல் சீடராக கூரத்தாழ்வார் இருந்தார். சைவ சமயத்து சோழ மன்னன் இது கண்டு பொறுக்க முடியாமல், ராமானு ஜரை பிடிப்பதற்காக தேடி இருக்கிறான். அப்போது திருநாராயணபுரத்திலேயே 12 ஆண்டுகளை ராமானுஜர் மறைந்திருந்து கழித்திருக்கிறார். சோழ மன்னனின் மறைவிற்குப் பிறகு, அவரது சீடர்கள் வேண்டுகோளுக்கிணங்க, பாதுகாப்பாக ஸ்ரீரங்கம் வந்திருக்கிறார். ராமானுஜரை காட்டிக்கொடுக்கச் சொல்லி, சோழ மன்னன், கூரத்தாழ்வாரை நிர்ப்பந்தித்திருக்கிறான். காட்டிக் கொடுக்க மறுத்த கூரத்தாழ்வாரின் கண்களையும், பெரிய நம்பியின் கண்களையும், மன்னர் உத்தரவுப்படி பிடுங்கி இருக்கிறார்கள் என்ற செய்தி ஊருக்கு திரும்பிய ராமானுஜருக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. கூரத்தாழ்வாரின் மகனுக்கு, ராமானுஜர் பராசரன் என்று பெயர் வைத்திருக்கிறார். அவர்தான் பின்னாளில் அறிவார்ந்த தூணாக, வைணவத்திற்கு உருவாகியிருக்கிறார். அவரை பின்னாளில் பராசரர்பட்டர் என்று அழைத்திருக்கிறார்கள். ராமானுஜர் கி.பி. 1137 வரை உயிர்வாழ்ந்து தனது 120வது வயதில் மறைந்திருக்கிறார்.
அத்தகைய கூரத்தாழ்வாரின் கோயில் என்பது, சாதி மறுப்பு கோயிலாகவும், தாய்மொழிப் பாடல்களை அனுமதிக்கும் கோயிலாகவும் இருக்க வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி, அங்கே திருப்பாவை பாடிச்சென்ற போதுதான், பட்டாச்சாரியார்களின் தடை என்ற அடாவடி நடந்திருக்கிறது. திருப்பாவை 12 வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூலாகும். வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரதிவ்யப் பிரபந்தத்தின் 473ம் பாடல் முதல் 503ம் பாடல் வரை திருப்பாவைப் பாடல் கள் என்று பெயர்.
அத்தகைய திருப்பாவைப் பாடல்களை பாடி வந்த பக்தர்கள் தான் கூரத்தாழ்வார் கோயிலில் தடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் தடை பற்றி பாதிக்கப்பட்ட நம்பிள்ளை ராமானுஜ ஆச்சாரியார், அந்த வட்டார வருவாய்த் துறை ஆய்வாளரிடமும், காவல்துறை ஆய்வாளரிடமும், கிராம நிர்வாக அலுவலர்களிடமும் போய் முறையிட்டு இருக்கிறார்கள். அவர்களும் தடை விதித்த பார்ப்பனர்களுக்கு சாதகமாகவே பேசி இருக்கிறார்கள். இந்தச் செய்தியை வாரம் இருமுறை ஏடு வெளியிட, முதல்வரை நிறுவனராகக் கொண்ட நாளேட்டில் தெளிவான கட்டுரையாக எழுதியிருக் கிறார்கள்.
ஆட்சியாளர்கள் விரும்பாவிட்டாலும், அவர்க ளது ஆதரவாளர்கள் ஊடகங்களில் பட்டியலிட்டு அம்பலப்படுத்தினாலும், சாதிய வெறிகளும், தமிழ் மொழி எதிர்ப்பு நடவடிக்கைகளும் இன்னமும் நமது வழிபாட்டுத் தலங்களில் தொடர்கின்றன. இதற்குக் காரணம் என்ன? சமூக ரீதியான வன்முறை என்பது, சட்ட, திட்டங்களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ அடங்குவதில்லை. அதை அடக்குவதற்கோ, அகற்றுவதற்கோ, மக்கள்தான் முன்முயற்சி எடுக்க வேண்டும்.
Wednesday, February 10, 2010
நீதியரச மனோபாவம், ஒருமதச்சார்பானதா?
ந்திர உயர்நீதி மன்றம், முஸ்லிம் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கொடுத்திருக்கும் தீர்ப்பு, நாடு தழுவிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 2007ம் ஆண்டு ஆந்திர மாநில அர சாங்கம், முஸ்லிம்களுக்கு கல்வியிலும், வேலையி லும் 4% இடஒதுக்கீடு என்பதற்கான ஆணை யை அறிவித்தது. அந்த ஆணை ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்ட வகுப் புகளின் ஆணையம் கொடுத்த அறிக்கையின் மீது அறிவிக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் தலைவரான ஓய்வு பெற்ற அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணாவின் பரிந்து ரையின் பேரில் அந்த அறிக்கை கொடுக்கபட் டிருந்தது. இப்போது ஆந்திர உயர்நீதிமன்றம், அந்த ஆணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திர உயர்நீதிமன்றத்தின் 7 நீதியரசர்கள் கொண்ட பெஞ்ச்சின் முன்னால் அந்த வழக்கு வந்தது. அதில் 2 நீதியரசர்கள் இடஒதுக்
கீட்டை மறுக்காத நிலை யில், பெரும்பான்மையான 5 நீதியரசர்கள், முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங் கியுள்ளனர். தலைமை நீதியரசர் அனில் ரமேஷ் தவே தலைமையில், கோபாலரெட்டி, வி.ஈஸ்வ ரய்யா, ஜி.ரகுராம் ஆகிய நீதியரசர்கள் இந்த ரத்து ஆணையைப் பிறப்பித்துள்ளனர். அதற்கு அவர்கள் கூறியி ருக்கும் காரணங்கள் வேடிக் கையாக இருக்கின்றன.
சமூக ரீதியில் கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப் பினருக்கான இடஒதுக்கீடு என்ற பரிந்து ரையை முன்வைத்த ஆணை யத்தை, நீதியரசர்கள் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். போதுமான புள்ளி விவரங்களை, மொத்த முஸ்லிம் மக்கள் தொகை பற்றி, ஆணையம் திரட்டவில்லை என்று நீதிமன்றம் குற்றம் சாட் டியுள்ளது. பல்வேறு முஸ்லிம் குழுக்கள் இருப் பதாகவும், ஆணையம் அந்த குழுக்களின் மொத்த மக்கள் தொகை கணக்குப்பற்றி அறியா மலேயே இருந்திருக்கிறது என்றும் நீதியரசர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மொத்த முஸ்லிம் மக்கள் தொகை கணக்கு தெரியாமலேயே, ஈகுழுவில் அவர்களை சேர்த்திருப்பதாகவும், அறிவியல் ரீதியான மாதிரி எடுத்து, ஆய்வு நடத்த வில்லை என்றும், ஆய்வு எடுத்தமுறை தவறானது என்றும் இப்போது நீதியரசர்கள் குறை கூறி யுள்ளனர். மேற்கண்ட காரணங்களுக்காக மட்டுமே முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியுமா என்ற கேள்வி நமக்கு எழு கிறது. சரியான ஆய்வு முறையை ஆணையம் பின்பற்றவில்லை என்றால், முறையான ஆய்வை செய்ய வலியு றுத்தி மட்டும்தானே தீர்ப்பு வழங்கமுடியும் என்ற
சர்ச்சையும் உடன் வரு கிறது.
ஆனால் ஆந்திர உயர்நீ திமன்ற நீதியரசர்கள், வேறு ஒரு முக்கிய காரணத்தைக் கூறியுள்ளனர். 2007ம் ஆண்டு ஆணை, இடஒ துக்கீடு கொடுப்பதில், குறிப்பாக முஸ்லிம்களுக்கு என்று மதரீதியாக குறிப் பிட்டுள்ளது தவறானது என கூறியுள்ளனர். அது மதமாற்றத்தை உற்சா கப்படுத்தும் தன்மை கொண்டது என்று குற் றம் சாட்டியுள்ளனர். அத னாலேயே அது தொடர்ந்து நீடிக்கமுடியாது என்றும் கூறியுள்ளனர். இந்த இடத்தில், சமூக ரீதியில் மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய பிரிவினர்களாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது என்ற அரசாணை எப்படி மதமாற்றத்தை உற்சாகப் படுத்தும் என்ற புதிய
சர்ச்சை எழுப்பப்படாமல் இருக்க முடியாது.
ஆந்திராவில் இதற்கு முன்பே, இதே போன்ற முஸ்லிம் இடஒதுக்கீட்டு அறிவிப்பின் மீது, இதே போல உயர்நீதிமன்றம் ரத்து செய்த வரலாறு இருக்கிறது. முதலில் 2004ம் ஆண்டு ஆந்திர அரசாங்கம் ஒரு நிர்வாக ஆணையின் மூலம் 5% இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு அறிவித் திருந்தது. அது ஆந்திர மாநில சிறுபான்மை நிதிவா ரியத்தின் அறிக்கையின் மீது அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு. அப்போதும் ஆந்திர உயர்நீதிமன்றம் அந்த ஆணையை ரத்து செய்தது. அதன் பிறகு ஆந்திர அராசங்கம் ஒரு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உருவாக் கியது. அந்த ஆணையம் கொடுத்த அறிக்கை 2005ம் ஆண்டு அரசு ஆணையாக மாறியபோது, மீண்டும் உயர்நீதிமன்றம் அதை நிராகரித்தது.
இப்போது 2007ம் ஆண்டின் சட்டத்தை ரத்து செய்யும் நீதிமன்றம், சட்டத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளான, முஸ்லிம் என்பதும், மற்ற முஸ்லிம் குழுக்கள் என்பதும் சரியாக விளக்கப்படவில்லை என்ப தும் கூட நீதியரசர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அரசியல் சட்டப்பிரிவின் 14,15(1), 16(2) ஆகியவை மேற்கண்ட சட்டத்தை மீறி யுள்ளன என்று நீதியர
சர்கள் தெரிவித்துள்ளனர். ஆணையம் செய்த ஆய்வு போதாது என்று கூறுகிறது நீதிமன்றம். 2007ல் இத்தகைய முஸ்லிம் இடஒதுக் கீட்டை, சட்டமன்ற ஒப் புதலுடன், மாநில அரசு சட்டமாக்கியுள்ளது. அதன்பிறகு அரசாணை எண் 23 மற்றும் 231 ஆகிய வற்றின் மூலம் முஸ்லிம் குழுக்களுக்கான இட ஒதுக் கீடு அறிவிக்கப்பட்டது. அவை எல்லாமே இப் போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. 3வது அரசாணையாக, பணக்கார முஸ்லிம்களை நீக்கி விட்டு, இடஒதுக்கீடு தருவது என ஒரு ஆணையும் வெளியிடப்பட்டது. அதுவும் கூட இப்போது நீதிமன்றத்தால் ரத்து செய் யப்பட்டுள்ளது. இதில் மீனாக்குமாரி என்ற நீதியரசர், ஒரு பகுதி தலைமை நீதியரசருடன் உடன்பட்டாலும், தனது தீர்ப்பை தனியாக எழுதிக் கொடுத்துள்ளார். அரசாங் கம் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம், பிற்படுத்தப்பட்ட வகுப்பு களை அடையாளம் காட்ட உரிமை உண்டு என்று தனது கருத்தில் கூறியுள் ளார்.
முஸ்லிம் இடஒதுக் கீட்டு ஆணையை ரத்து செய்த நீதியரசர்கள், எந்த ஒரு நிபந்தனையையும் இதற்காக ஆணையம் முன் வைக்கவில்லை என்றும், ஆணையப் பரிந்துரையை வெளியிடுவதற்கு முன் னால், முஸ்லிம் இடஒதுக் கீட்டை மறுக்கும் எந்த ஒரு கருத்தையும் ஆணையம் அழைத்துப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதா கவும் கூட, நீதிமன்றம் குறை கூறியுள்ளது.
இதே நேரத்தில் மேற்கு வங்க அரசு திடீ ரென முஸ்லிம் மக்களுக்கு 10% இடஒதுக்
கீட்டை அறிவித்துள்ளது. அதற்கு அந்த அரசு கூறுகின்ற காரணங்கள், அரசியல் விளக்கங்களாக உள்ளன. வெளியாகி உள்ள ரெங்கநாத் மிஸ்ரா ஆணையம், முஸ் லிம்களுக்காக 10% இடஒ துக்கீடும், பிற சிறுபான்மை சமூகங்களுக்காக 5% இட
ஒதுக்கீடும், ஆக மொத்தம் 15% இடஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு அளிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரையை மத்திய அரசு எப்போது அமுலாக்கும் என்பது தெரியவில்லை என்றும், அதனால்தான் மேற்கு வங்க அரசு இப்படி தங்கள் மாநிலத்திற்கு அறிவித்திருக்கிறோம் என்று மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்
சாரியா கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் மக்கள் தொகையில் 25% பின்தங்கிய முஸ்லிம் மக்கள் என்றும் அவர் அப்போது கூறியுள்ளார். அதே சமயம் ஆண்டு வருமானமாக நாலரை லட்சம் ரூபாய் ஈட்டுபவர்களுக்கு, முஸ்லிம் இடஒதுக்கீடு கிடையாது என்றும் அவர் அறிவித்துள்ளார். கிரீமி லேயர் என்று அழைக்கப்படும், வசதியா னவர்களை தவிர்த்து விடல் என்ற விசயத்தையும், மேற்கு வங்க அரசு தங்களது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறியுள்ள மதமாற் றம் நடைபெறும் ஆபத்து, அந்த முஸ்லிம் இடஒதுக் கீட்டில் இருக்கிறது என்ற கருத்து பெரும் சர்ச்
சைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. மக்கள் தங்களது விருப்பப்படி, மதமாற்றம் செய்து கொள்வதற்கு இந்திய அரசியல் சட்டத்தின் மத உரிமை, அனுமதிக்கிறது. அப்படி இருக்கும் போது, பின்தங்கிய மக்களுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பளிக்கும் இடஒதுக்கீட்டை, மத அடையாளம் கொண்டது என்ற காரணத்தினால், மதமாற்றத்தை உற்
சாகப்படுத்தக்கூடியது என்று அழைக்கலாமா? அப் படியானால் தங்களுக்கு விருப்பமில்லா விட்டாலும், பெரும்பான்மை மத மான இந்து மதத்தில் தங் கியிருந்தால்தான் இடஒ துக்கீடு கிடைக்கும் என்ற சூழல் நிலவுகிறதா? அல் லது அப்படிப்பட் ஒரு சூழல் நிலவவேண்டும் என்றும், அது மாற்றப் பட் டுவிடக்கூடாது என்றும் குறிப்பிட்ட நீதியரசர்கள் விரும்புகிறார்களா? மாற்று மதத்திற்கு சென்றாலும், பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும் என்ற ஒரு நிலைமை உரு வானால், குறிப்பிட்ட மக்கள் பெரும்பான்மை மதமான இந்து மதத்தை விட்டு, மாறிச் சென்று விடுவார்கள் என்ற அச்சம் நீதியரசர்களுக்கு ஏன்தோன்றுகிறது? அப் படியானால் உடன்பாடு இல்லாவிட்டாலும், நமது நாட்டின் ஏழை மக்கள் இடஒதுக்கீடு பெறுவதற்காக, இந்து மதத்திலேயே இருக்க வேண்டும் என்று குறிப் பிட்ட நீதியரசர்கள் எண் ணுகிறார்களா? அப்படி எண்ணுவதானால் அல் லது அப்படிப்பட்ட மனோபாவம் இருக்கு மானால், எந்த சார்புமற்று சிந்திக்க வேண்டிய நீதியர சர்கள், ஒரு மதச்சார்பாக சிந்திக்கிறார்கள் என்று தானே பொருள்படும்? இது ஒரு மதச்சார்பு மனப்பான்மை என்று அழைக்கப்படாதா? அதாவது ஒரு மதச்சார்பு (Theocratic) என்ற மனப் பான்மை அல்லாமல் வேறென்ன? நீதியர சர்கள் இப்படிப்பட்ட மனப்பான்மையில் இருப்பதுதான் இந்திய அரசா என்றும் கூட விவா திக்கப்பட வேண்டும்.
கீட்டை மறுக்காத நிலை யில், பெரும்பான்மையான 5 நீதியரசர்கள், முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங் கியுள்ளனர். தலைமை நீதியரசர் அனில் ரமேஷ் தவே தலைமையில், கோபாலரெட்டி, வி.ஈஸ்வ ரய்யா, ஜி.ரகுராம் ஆகிய நீதியரசர்கள் இந்த ரத்து ஆணையைப் பிறப்பித்துள்ளனர். அதற்கு அவர்கள் கூறியி ருக்கும் காரணங்கள் வேடிக் கையாக இருக்கின்றன.
சமூக ரீதியில் கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப் பினருக்கான இடஒதுக்கீடு என்ற பரிந்து ரையை முன்வைத்த ஆணை யத்தை, நீதியரசர்கள் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். போதுமான புள்ளி விவரங்களை, மொத்த முஸ்லிம் மக்கள் தொகை பற்றி, ஆணையம் திரட்டவில்லை என்று நீதிமன்றம் குற்றம் சாட் டியுள்ளது. பல்வேறு முஸ்லிம் குழுக்கள் இருப் பதாகவும், ஆணையம் அந்த குழுக்களின் மொத்த மக்கள் தொகை கணக்குப்பற்றி அறியா மலேயே இருந்திருக்கிறது என்றும் நீதியரசர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மொத்த முஸ்லிம் மக்கள் தொகை கணக்கு தெரியாமலேயே, ஈகுழுவில் அவர்களை சேர்த்திருப்பதாகவும், அறிவியல் ரீதியான மாதிரி எடுத்து, ஆய்வு நடத்த வில்லை என்றும், ஆய்வு எடுத்தமுறை தவறானது என்றும் இப்போது நீதியரசர்கள் குறை கூறி யுள்ளனர். மேற்கண்ட காரணங்களுக்காக மட்டுமே முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியுமா என்ற கேள்வி நமக்கு எழு கிறது. சரியான ஆய்வு முறையை ஆணையம் பின்பற்றவில்லை என்றால், முறையான ஆய்வை செய்ய வலியு றுத்தி மட்டும்தானே தீர்ப்பு வழங்கமுடியும் என்ற
சர்ச்சையும் உடன் வரு கிறது.
ஆனால் ஆந்திர உயர்நீ திமன்ற நீதியரசர்கள், வேறு ஒரு முக்கிய காரணத்தைக் கூறியுள்ளனர். 2007ம் ஆண்டு ஆணை, இடஒ துக்கீடு கொடுப்பதில், குறிப்பாக முஸ்லிம்களுக்கு என்று மதரீதியாக குறிப் பிட்டுள்ளது தவறானது என கூறியுள்ளனர். அது மதமாற்றத்தை உற்சா கப்படுத்தும் தன்மை கொண்டது என்று குற் றம் சாட்டியுள்ளனர். அத னாலேயே அது தொடர்ந்து நீடிக்கமுடியாது என்றும் கூறியுள்ளனர். இந்த இடத்தில், சமூக ரீதியில் மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய பிரிவினர்களாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது என்ற அரசாணை எப்படி மதமாற்றத்தை உற்சாகப் படுத்தும் என்ற புதிய
சர்ச்சை எழுப்பப்படாமல் இருக்க முடியாது.
ஆந்திராவில் இதற்கு முன்பே, இதே போன்ற முஸ்லிம் இடஒதுக்கீட்டு அறிவிப்பின் மீது, இதே போல உயர்நீதிமன்றம் ரத்து செய்த வரலாறு இருக்கிறது. முதலில் 2004ம் ஆண்டு ஆந்திர அரசாங்கம் ஒரு நிர்வாக ஆணையின் மூலம் 5% இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு அறிவித் திருந்தது. அது ஆந்திர மாநில சிறுபான்மை நிதிவா ரியத்தின் அறிக்கையின் மீது அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு. அப்போதும் ஆந்திர உயர்நீதிமன்றம் அந்த ஆணையை ரத்து செய்தது. அதன் பிறகு ஆந்திர அராசங்கம் ஒரு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உருவாக் கியது. அந்த ஆணையம் கொடுத்த அறிக்கை 2005ம் ஆண்டு அரசு ஆணையாக மாறியபோது, மீண்டும் உயர்நீதிமன்றம் அதை நிராகரித்தது.
இப்போது 2007ம் ஆண்டின் சட்டத்தை ரத்து செய்யும் நீதிமன்றம், சட்டத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளான, முஸ்லிம் என்பதும், மற்ற முஸ்லிம் குழுக்கள் என்பதும் சரியாக விளக்கப்படவில்லை என்ப தும் கூட நீதியரசர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அரசியல் சட்டப்பிரிவின் 14,15(1), 16(2) ஆகியவை மேற்கண்ட சட்டத்தை மீறி யுள்ளன என்று நீதியர
சர்கள் தெரிவித்துள்ளனர். ஆணையம் செய்த ஆய்வு போதாது என்று கூறுகிறது நீதிமன்றம். 2007ல் இத்தகைய முஸ்லிம் இடஒதுக் கீட்டை, சட்டமன்ற ஒப் புதலுடன், மாநில அரசு சட்டமாக்கியுள்ளது. அதன்பிறகு அரசாணை எண் 23 மற்றும் 231 ஆகிய வற்றின் மூலம் முஸ்லிம் குழுக்களுக்கான இட ஒதுக் கீடு அறிவிக்கப்பட்டது. அவை எல்லாமே இப் போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. 3வது அரசாணையாக, பணக்கார முஸ்லிம்களை நீக்கி விட்டு, இடஒதுக்கீடு தருவது என ஒரு ஆணையும் வெளியிடப்பட்டது. அதுவும் கூட இப்போது நீதிமன்றத்தால் ரத்து செய் யப்பட்டுள்ளது. இதில் மீனாக்குமாரி என்ற நீதியரசர், ஒரு பகுதி தலைமை நீதியரசருடன் உடன்பட்டாலும், தனது தீர்ப்பை தனியாக எழுதிக் கொடுத்துள்ளார். அரசாங் கம் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம், பிற்படுத்தப்பட்ட வகுப்பு களை அடையாளம் காட்ட உரிமை உண்டு என்று தனது கருத்தில் கூறியுள் ளார்.
முஸ்லிம் இடஒதுக் கீட்டு ஆணையை ரத்து செய்த நீதியரசர்கள், எந்த ஒரு நிபந்தனையையும் இதற்காக ஆணையம் முன் வைக்கவில்லை என்றும், ஆணையப் பரிந்துரையை வெளியிடுவதற்கு முன் னால், முஸ்லிம் இடஒதுக் கீட்டை மறுக்கும் எந்த ஒரு கருத்தையும் ஆணையம் அழைத்துப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதா கவும் கூட, நீதிமன்றம் குறை கூறியுள்ளது.
இதே நேரத்தில் மேற்கு வங்க அரசு திடீ ரென முஸ்லிம் மக்களுக்கு 10% இடஒதுக்
கீட்டை அறிவித்துள்ளது. அதற்கு அந்த அரசு கூறுகின்ற காரணங்கள், அரசியல் விளக்கங்களாக உள்ளன. வெளியாகி உள்ள ரெங்கநாத் மிஸ்ரா ஆணையம், முஸ் லிம்களுக்காக 10% இடஒ துக்கீடும், பிற சிறுபான்மை சமூகங்களுக்காக 5% இட
ஒதுக்கீடும், ஆக மொத்தம் 15% இடஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு அளிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரையை மத்திய அரசு எப்போது அமுலாக்கும் என்பது தெரியவில்லை என்றும், அதனால்தான் மேற்கு வங்க அரசு இப்படி தங்கள் மாநிலத்திற்கு அறிவித்திருக்கிறோம் என்று மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்
சாரியா கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் மக்கள் தொகையில் 25% பின்தங்கிய முஸ்லிம் மக்கள் என்றும் அவர் அப்போது கூறியுள்ளார். அதே சமயம் ஆண்டு வருமானமாக நாலரை லட்சம் ரூபாய் ஈட்டுபவர்களுக்கு, முஸ்லிம் இடஒதுக்கீடு கிடையாது என்றும் அவர் அறிவித்துள்ளார். கிரீமி லேயர் என்று அழைக்கப்படும், வசதியா னவர்களை தவிர்த்து விடல் என்ற விசயத்தையும், மேற்கு வங்க அரசு தங்களது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறியுள்ள மதமாற் றம் நடைபெறும் ஆபத்து, அந்த முஸ்லிம் இடஒதுக் கீட்டில் இருக்கிறது என்ற கருத்து பெரும் சர்ச்
சைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. மக்கள் தங்களது விருப்பப்படி, மதமாற்றம் செய்து கொள்வதற்கு இந்திய அரசியல் சட்டத்தின் மத உரிமை, அனுமதிக்கிறது. அப்படி இருக்கும் போது, பின்தங்கிய மக்களுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பளிக்கும் இடஒதுக்கீட்டை, மத அடையாளம் கொண்டது என்ற காரணத்தினால், மதமாற்றத்தை உற்
சாகப்படுத்தக்கூடியது என்று அழைக்கலாமா? அப் படியானால் தங்களுக்கு விருப்பமில்லா விட்டாலும், பெரும்பான்மை மத மான இந்து மதத்தில் தங் கியிருந்தால்தான் இடஒ துக்கீடு கிடைக்கும் என்ற சூழல் நிலவுகிறதா? அல் லது அப்படிப்பட் ஒரு சூழல் நிலவவேண்டும் என்றும், அது மாற்றப் பட் டுவிடக்கூடாது என்றும் குறிப்பிட்ட நீதியரசர்கள் விரும்புகிறார்களா? மாற்று மதத்திற்கு சென்றாலும், பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும் என்ற ஒரு நிலைமை உரு வானால், குறிப்பிட்ட மக்கள் பெரும்பான்மை மதமான இந்து மதத்தை விட்டு, மாறிச் சென்று விடுவார்கள் என்ற அச்சம் நீதியரசர்களுக்கு ஏன்தோன்றுகிறது? அப் படியானால் உடன்பாடு இல்லாவிட்டாலும், நமது நாட்டின் ஏழை மக்கள் இடஒதுக்கீடு பெறுவதற்காக, இந்து மதத்திலேயே இருக்க வேண்டும் என்று குறிப் பிட்ட நீதியரசர்கள் எண் ணுகிறார்களா? அப்படி எண்ணுவதானால் அல் லது அப்படிப்பட்ட மனோபாவம் இருக்கு மானால், எந்த சார்புமற்று சிந்திக்க வேண்டிய நீதியர சர்கள், ஒரு மதச்சார்பாக சிந்திக்கிறார்கள் என்று தானே பொருள்படும்? இது ஒரு மதச்சார்பு மனப்பான்மை என்று அழைக்கப்படாதா? அதாவது ஒரு மதச்சார்பு (Theocratic) என்ற மனப் பான்மை அல்லாமல் வேறென்ன? நீதியர சர்கள் இப்படிப்பட்ட மனப்பான்மையில் இருப்பதுதான் இந்திய அரசா என்றும் கூட விவா திக்கப்பட வேண்டும்.
Tuesday, February 9, 2010
ராஜபக்சேயின் வெற்றியும், ஈழ அகதிகள் எதிர்பார்ப்பும்
நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில், வாக்க ளித்த ஈழத்தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும், பெரும்பான்மையாகவும், கணிசமாகவும் அதிபர் ராஜபக்சேக்கு எதிராக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தார்கள். ஒரு மாத காலத்திற்கு மேலாக, பல்வேறு விவாதங்களை நடத்தி, தங்களது வாக்குகளை தமிழர்களை அழித்த இன அழிப்புப் போரை திட்டமிட்டு நடத்தியதாக அதிபர் மகிந்தாவை, கணித்த காரணத்தினால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் வந்திருந்தார்கள். ராஜபக்சேயை தோற்கடிப்பதற்கு ஏதுவான வேட்பாளராக அவர்கள் சரத்பொன்சேகாவை கருதியதால், அவருக்கே தங்களது வாக்குகளை அளித்தார்கள். மேற்கூறிய இரண்டு வேட்பாளர்களுமே, தமிழினத்திற்கு எதிரான போரை நடத்தியவர்கள் என்றும், அதனால் அவர்கள் இருவருக்குமே எதிராக தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்றும், கேட்ட சிங்களதமிழர் வேட்பாளர்களைக் கூட, தமிழ் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக தங்களுடைய இலக்காக ராஜபக்சேயை தோற்கடிக்கும் நோக்கம் கொண்ட வாக்குகள், பொன்சேகாவிற்கு விழுந்தன. அதேசமயம் தென்னிலங்கையிலுள்ள சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் வாக்குகள் மகிந்தாவிற்கே விழுந்தன. இத்தகைய வாக்குப்பதிவுகளே, இரண்டு விதமான போக்குகள் மற்றும் இரண்டு விதமான சிந்தனைகள் இருப்பதை உறுதிப்படுத்தின. இலங்கைத் தீவிற்குள் வாழ்கின்ற இரண்டு தேசிய இனங்களின், வெவ்வேறு உணர்வுகள் அதன் மூலம் வெளிப்பட்டன. இதுவே இரண்டு தேசிய இனங்களும், இரண்டு தேசங்களாக பிரிந்தே, அந்த தீவிற்குள் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கான நிருபணம் என்று கூறுவோரும் உண்டு.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் மத்தியில் நிலவி வந்த அல்லது நிலவுகின்ற உணர்வுகளை கணக்கெடுத்தே, பொன்சேகாவிற்கு ஆதரவு கொடுத்தனர். அதனால் இந்த தேர்தல் ஆதரவு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியால் ஏற்பட்ட முடிவல்ல. மாறாக தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாட்டை, முன்கூட்டியே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உணர்ந்து முடிவெடுத்தனர் என்பது தான் உண்மை. ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நேர் எதிராக சென்றுவிட்டன.
இலங்கைத் தீவில் அதிபராக வருகின்றவர் யார் என்பதையொட்டி தங்களது எதிர்காலத்தை, தீர்மானித்துக் கொண்டிருப்பவர்கள், இலங்கைத் தீவிற்குள் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் மட்டுமல்ல. இலங்கைக்கு வெளியே அகதிகளாக ஓடிவந்திருக்கும், 1 லட்சத்திற்கு மேற்பட்ட இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழர்களுக்கும், இதையொட்டியே சிந்தனைகள் எழுகின்றன. அவர்கள் தங்களது எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்ற கனவிலிருந்து, எப்படி அமையப்போகிறதோ என்ற பீதிக்குள்ளாகியுள்ளனர். இத்தகையச் சூழ்நிலையிலும் கூட, தமிழகத்தில் அகதிகளாகயிருக்கும் ஈழத் தமிழர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வரும், ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க வேண்டும் என்ற ஒரு விவாதம் எழுப்பப்பட்டது. இந்தியாவிலிருக்கின்ற பல மனிதாபிமானிகள் அதை வரவேற்றனர். ஆனால் ஈழத்தமிழர்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகள் வெளிப்பட்டன. தாங்கள் அடுத்த நாட்டில் குடியுரிமைப் பெற்று, வாழ்வதற்கான மனோநிலையில்லை என்று கூறினார்கள். அதேசமயம் எதிர்காலத்தில் ஒரு நாள், தங்களது தாய் மண்ணிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணங்களை, அவர்கள் வலுவாக வைத்திருக்கிறார்கள். அதேசமயம் இங்குள்ள அகதிகள் முகாம்களில், தாங்கள் அன்றாட வேலை கிடைக்காமல் சிரமப்படுவதையும் எண்ணிப்பார்க்கிறார்கள். அவர்கள் கைகளில் இருப்பது இலங்கை பாஸ்போர்ட். ஆனால் அந்த தமிழர்கள் 27 ஆண்டுகளாக இந்தியாவிற்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது எண்ணிக்கையில், அகதிகள் முகாம்களில் வாழ்பவர்கள் தவிர, வெளியே காவல்நிலையங்களில் பதிவு செய்து கொண்டு வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள். அப்படியிருப்பவர்களுக்கு பெரும்பாலும், ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற சொந்தங்களிடமிருந்து, பணவிடைத் தாள் மூலம் செலவுக்குக் கிடைத்து விடுகிறது.
மேற்கண்ட நிலையிலுள்ள ஈழத்தமிழர்கள், நிரந்தர இந்திய குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள ஆர்வமாக இல்லாவிட்டாலும், மற்றொரு வாய்ப்பை பரிசீலிக்கிறிர்களா என்று சிலர் வினவுகிறார்கள். அது இந்தியாவிலும், இலங்கையிலும், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக வாழும் நிலையை, அத்தகையவர்கள் ஆலோசனையாக முன்வைக்கிறார்கள். அதற்கும் கூட, அந்த ஈழத்தமிழ் உணர்வாளர்கள் உடன்படவில்லை. அதற்கான காரணமாக அவர்கள் முன்வைப்பது, தங்கள் நாட்டு ஆட்சியாளர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது. தாங்கள் இந்திய குடியுரிமைப் பெற்றாலோ, இரட்டைக் குடியுரிமைப் பெற்றாலோ, இலங்கையை ஆளும் சிங்கள ஆட்சியாளர்கள், அதையே காரணமாக்கி தங்களை தீவிற்குள் வாழ்வதற்கு விரும்பாதவர்கள் என்பதாக முத்திரை குத்திவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால் மேற்குறிப்பிட்ட இரண்டு விதமான குடியுரிமைகளுமே, தங்களுக்கு சாதகமானது அல்ல என்பது அவர்களது வாதம்.
அப்படியானால் அவர்கள் விரும்புவது தான் என்ன என்ற கேள்வி எழுகிறது. தங்களுக்கு 10 ஆண்டுகளுக்கான தற்காலிக பாஸ்போர்ட் சீட்டு வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருக்கிறது. அது எந்த அளவுக்கு பயன்படும் என்று கேட்டால், தாங்கள் விரும்பிய நேரத்தில் உலகின் எந்த நாட்டிற்கும், இந்தியாவிலிருந்து சென்றுவர முடியும் என்று கூறுகிறார்கள். ஈழத்தமிழர்களில் கணிசமான குடும்பத்தவர்கள், தங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களில் குறைந்தது யாராவது ஒருவர், ஐரோப்பிய நாடுகளிலோ, அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ இருப்பதை காணமுடிகிறது. அதனால் தங்களது சுற்றத்தாருடன் ஊடாடலில் இருப்பதற்காக, இத்தகைய தற்காலிக பாஸ்போர்ட் ஒன்றை, தமிழ்நாடு அரசிடம் கேட்டு நிற்கிறார்கள்.
இங்கே வாழ்கின்ற ஈழத்தமிழ் அகதிகளை, இலங்கை அரசு இரண்டு பிரிவுகளாக பிரித்துப் பார்க்கிறது. ஒரு பிரிவினர் போர் நடக்கும் காலங்களில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்பதாக, இலங்கை அரசால் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளவர்கள். அடுத்த பிரிவினர் புலிகளுக்கெதிரான அமைப்புகளுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டு, இந்தியாவிலிருக்கின்ற உளவு நிறுவன அதிகாரிகளுக்கு உதவிகரமாக இருக்கின்ற சக்தியினர். அதனாலேயே அத்தகைய அதிகாரிகளின் உதவியையும் பெற்றுக் கொண்டிருப்பவர்கள். இந்த இரண்டாவது வகையினர், அதிபர் ராஜபக்சேயின் தேர்தல் வெற்றியால், ஈர்க்கப்பட்டு இலங்கைத் தீவிற்கு, திரும்பச் செல்ல ஆயத்தமாகவுள்ளனர். அதேசமயம் முதல் பிரிவினர் தங்களுக்குள்ள அச்சத்தை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் இந்த நிலையில் இலங்கைச் சென்றால், அல்லது இலங்கைக்கு அனுப்பப்பட்டால், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் ராஜபக்சே குடும்பத்தினரது உத்தரவின் பேரில், தாங்கள் வேட்டையாடப்படுவார்கள் என்பதாக அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இந்திய அரசின் முன் முயற்சியில், ராஜபக்சே அரசு பகிரங்கமாக ஒரு உறுதி மொழியைக் கையெழுத்திட்டு, இந்திய அரசுக்கு கொடுக்குமானால், தாங்கள் தாய் நாடு செல்வதற்கு இணங்க முடியும் என அவர்கள் எண்ணுகிறார்கள். அதாவது போர்க்காலத்தில் நடந்த நிகழ்வுகளை மனதில் கொண்டோ, பொய்யான குற்றப்பதிவுகளை காரணமாக்கியோ, தாங்கள் எக்காரணம் கொண்டும் அரசாலோ, ஒட்டு ஆயுதக் குழுக்களாலோ பழிவாங்கப்பட மாட்டடோம் என்ற உறுதியை, இலங்கை அரசிடம் பெற்றுத்தர முடியுமா என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். சமாதானத்தையும், அமைதியையும் விரும்பக்கூடிய சக்திகள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியுமா என்ற கேள்வியை நாமும் அரசுக்கு முன்வைக்கிறோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் மத்தியில் நிலவி வந்த அல்லது நிலவுகின்ற உணர்வுகளை கணக்கெடுத்தே, பொன்சேகாவிற்கு ஆதரவு கொடுத்தனர். அதனால் இந்த தேர்தல் ஆதரவு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியால் ஏற்பட்ட முடிவல்ல. மாறாக தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாட்டை, முன்கூட்டியே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உணர்ந்து முடிவெடுத்தனர் என்பது தான் உண்மை. ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நேர் எதிராக சென்றுவிட்டன.
இலங்கைத் தீவில் அதிபராக வருகின்றவர் யார் என்பதையொட்டி தங்களது எதிர்காலத்தை, தீர்மானித்துக் கொண்டிருப்பவர்கள், இலங்கைத் தீவிற்குள் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் மட்டுமல்ல. இலங்கைக்கு வெளியே அகதிகளாக ஓடிவந்திருக்கும், 1 லட்சத்திற்கு மேற்பட்ட இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழர்களுக்கும், இதையொட்டியே சிந்தனைகள் எழுகின்றன. அவர்கள் தங்களது எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்ற கனவிலிருந்து, எப்படி அமையப்போகிறதோ என்ற பீதிக்குள்ளாகியுள்ளனர். இத்தகையச் சூழ்நிலையிலும் கூட, தமிழகத்தில் அகதிகளாகயிருக்கும் ஈழத் தமிழர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வரும், ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க வேண்டும் என்ற ஒரு விவாதம் எழுப்பப்பட்டது. இந்தியாவிலிருக்கின்ற பல மனிதாபிமானிகள் அதை வரவேற்றனர். ஆனால் ஈழத்தமிழர்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகள் வெளிப்பட்டன. தாங்கள் அடுத்த நாட்டில் குடியுரிமைப் பெற்று, வாழ்வதற்கான மனோநிலையில்லை என்று கூறினார்கள். அதேசமயம் எதிர்காலத்தில் ஒரு நாள், தங்களது தாய் மண்ணிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணங்களை, அவர்கள் வலுவாக வைத்திருக்கிறார்கள். அதேசமயம் இங்குள்ள அகதிகள் முகாம்களில், தாங்கள் அன்றாட வேலை கிடைக்காமல் சிரமப்படுவதையும் எண்ணிப்பார்க்கிறார்கள். அவர்கள் கைகளில் இருப்பது இலங்கை பாஸ்போர்ட். ஆனால் அந்த தமிழர்கள் 27 ஆண்டுகளாக இந்தியாவிற்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது எண்ணிக்கையில், அகதிகள் முகாம்களில் வாழ்பவர்கள் தவிர, வெளியே காவல்நிலையங்களில் பதிவு செய்து கொண்டு வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள். அப்படியிருப்பவர்களுக்கு பெரும்பாலும், ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற சொந்தங்களிடமிருந்து, பணவிடைத் தாள் மூலம் செலவுக்குக் கிடைத்து விடுகிறது.
மேற்கண்ட நிலையிலுள்ள ஈழத்தமிழர்கள், நிரந்தர இந்திய குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள ஆர்வமாக இல்லாவிட்டாலும், மற்றொரு வாய்ப்பை பரிசீலிக்கிறிர்களா என்று சிலர் வினவுகிறார்கள். அது இந்தியாவிலும், இலங்கையிலும், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக வாழும் நிலையை, அத்தகையவர்கள் ஆலோசனையாக முன்வைக்கிறார்கள். அதற்கும் கூட, அந்த ஈழத்தமிழ் உணர்வாளர்கள் உடன்படவில்லை. அதற்கான காரணமாக அவர்கள் முன்வைப்பது, தங்கள் நாட்டு ஆட்சியாளர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது. தாங்கள் இந்திய குடியுரிமைப் பெற்றாலோ, இரட்டைக் குடியுரிமைப் பெற்றாலோ, இலங்கையை ஆளும் சிங்கள ஆட்சியாளர்கள், அதையே காரணமாக்கி தங்களை தீவிற்குள் வாழ்வதற்கு விரும்பாதவர்கள் என்பதாக முத்திரை குத்திவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால் மேற்குறிப்பிட்ட இரண்டு விதமான குடியுரிமைகளுமே, தங்களுக்கு சாதகமானது அல்ல என்பது அவர்களது வாதம்.
அப்படியானால் அவர்கள் விரும்புவது தான் என்ன என்ற கேள்வி எழுகிறது. தங்களுக்கு 10 ஆண்டுகளுக்கான தற்காலிக பாஸ்போர்ட் சீட்டு வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருக்கிறது. அது எந்த அளவுக்கு பயன்படும் என்று கேட்டால், தாங்கள் விரும்பிய நேரத்தில் உலகின் எந்த நாட்டிற்கும், இந்தியாவிலிருந்து சென்றுவர முடியும் என்று கூறுகிறார்கள். ஈழத்தமிழர்களில் கணிசமான குடும்பத்தவர்கள், தங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களில் குறைந்தது யாராவது ஒருவர், ஐரோப்பிய நாடுகளிலோ, அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ இருப்பதை காணமுடிகிறது. அதனால் தங்களது சுற்றத்தாருடன் ஊடாடலில் இருப்பதற்காக, இத்தகைய தற்காலிக பாஸ்போர்ட் ஒன்றை, தமிழ்நாடு அரசிடம் கேட்டு நிற்கிறார்கள்.
இங்கே வாழ்கின்ற ஈழத்தமிழ் அகதிகளை, இலங்கை அரசு இரண்டு பிரிவுகளாக பிரித்துப் பார்க்கிறது. ஒரு பிரிவினர் போர் நடக்கும் காலங்களில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்பதாக, இலங்கை அரசால் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளவர்கள். அடுத்த பிரிவினர் புலிகளுக்கெதிரான அமைப்புகளுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டு, இந்தியாவிலிருக்கின்ற உளவு நிறுவன அதிகாரிகளுக்கு உதவிகரமாக இருக்கின்ற சக்தியினர். அதனாலேயே அத்தகைய அதிகாரிகளின் உதவியையும் பெற்றுக் கொண்டிருப்பவர்கள். இந்த இரண்டாவது வகையினர், அதிபர் ராஜபக்சேயின் தேர்தல் வெற்றியால், ஈர்க்கப்பட்டு இலங்கைத் தீவிற்கு, திரும்பச் செல்ல ஆயத்தமாகவுள்ளனர். அதேசமயம் முதல் பிரிவினர் தங்களுக்குள்ள அச்சத்தை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் இந்த நிலையில் இலங்கைச் சென்றால், அல்லது இலங்கைக்கு அனுப்பப்பட்டால், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் ராஜபக்சே குடும்பத்தினரது உத்தரவின் பேரில், தாங்கள் வேட்டையாடப்படுவார்கள் என்பதாக அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இந்திய அரசின் முன் முயற்சியில், ராஜபக்சே அரசு பகிரங்கமாக ஒரு உறுதி மொழியைக் கையெழுத்திட்டு, இந்திய அரசுக்கு கொடுக்குமானால், தாங்கள் தாய் நாடு செல்வதற்கு இணங்க முடியும் என அவர்கள் எண்ணுகிறார்கள். அதாவது போர்க்காலத்தில் நடந்த நிகழ்வுகளை மனதில் கொண்டோ, பொய்யான குற்றப்பதிவுகளை காரணமாக்கியோ, தாங்கள் எக்காரணம் கொண்டும் அரசாலோ, ஒட்டு ஆயுதக் குழுக்களாலோ பழிவாங்கப்பட மாட்டடோம் என்ற உறுதியை, இலங்கை அரசிடம் பெற்றுத்தர முடியுமா என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். சமாதானத்தையும், அமைதியையும் விரும்பக்கூடிய சக்திகள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியுமா என்ற கேள்வியை நாமும் அரசுக்கு முன்வைக்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)
