சமீபத்தில் ஒவ்வொரு நாட்டின் ஆயுத வியாபாரிகள் பற்றிய செய்திகளும் பகிரங்கமாக வந்து கொண்டிருக்கின்றன. சிறிய ஆயுதங்கள் என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கிகள், பிஸ்டல்கள் முதல் தானியங்கி ஆயுதங்களான ஏ.கே47 மற்றும் சிறிய இயந்திர துப்பாக்கிகள், நடுத்தர இயந்திர துப்பாக்கிகள், ஏவுகணை ஆயுதங்களான சாம்7, ராக்கெட் புரொப்பல்லர் போன்ற எல்லாவகை ஆயுதங்களும், அவற்றிற்கான தோட்டாக்களும், சிறிய வகை பீரங்கிகள் அவற்றிற்கான ஷெல்கள், கிரனேடுகள் மற்றும் கையெறி குண்டுகள் என பல்வேறு வகைப்பட்ட ஆயுதங்களும் இன்றைய உலகச்சந்தை யிலே காசிருந்தால் வாங்கலாம் என்ற நிலைமை இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் இங்கிலாந் திலிருந்து 2 நாட்களுக்கு முன்னால் வந்த செய்தி ஆச்சரியத்தைத் தருகிறது. இலங்கை நாட்டிற்கு ஆயுதங்களை இங்கிலாந்து நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்து கொண்டிருந்த 9 நிறுவனங்களின் உரிமங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இலங்கைக்கு போர் நிறுத்தம் அமலில் இருந்த காலத்தில், இங்கிலாந்திலிருந்து ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வந்த நிறுவனங்களின் செயல்களுக்காக, ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் என்ற மக்களவை வருத்தம் தெரிவித்துள்ளது. ஹவுஸ் ஆஃப் காமன்ஸின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அதன் உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக் குழு அளித்துள்ள அறிக்கையை இரண்டு நாள் முன்பு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வெளி யிட்டார்கள். அதில் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த குழு முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில், இங்கி லாந்தின் வெளிவிவகார காமன்வெல்த் அலுவலகத்திற்கான அமைச்சர், நீண்ட காலமாக இலங்கைச் சூழ்நிலை பற்றி இங்கிலாந்து அரசாங்கம் அக்கறை செலுத்தி வருகிறது என்றார். அதேநேரம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறது என்றார். இங்கிலாந்து அரசாங்கம் மறுஆய்வு செய்ததின் அடிப்படையில் தான் 2009ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் 9 நிறுவனங்களுக்கான உரிமம் பறிக்கப்பட்டது என்று அமைச்சர் விளக்கியிருந்தார். இலங்கையில் இருக்கும் மோதல் சூழ்நிலை பற்றி, ஆயுத எதிர்ப்பு துறையின் துணைத் தலைவரான டேவிட் ஹால், கடந்த காலத்தில் நடந்த ஆதாரங்களை கணக்கிலெடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என உறுதி அளித்தார். அதிலும் குறிப்பாக நிலையற்ற நாடுகள் பற்றிய மதிப்பீட்டிற்கு காலம் எடுத்துக் கொண்டு கவனிப்பது என்றும், அமைதி ஏற்படுத்துவதற்கான வாய்ப்பைத் தேட வேண்டும் என்றும் கூறினார்.
உலகம் முழுவதும் இன்று ஆயுதப் பண்பாடு அதிகமாகப் பரவி வருகின்ற வேளையில், அதை ஆட்சியில் அமர்ந்தி ருக்கின்ற அமைப்பாக்கப்பட்ட அரசுகள் எப்படி பயன்படுத்துகின்றன என்பதும், சுதந்திரமான கட்டுப்பாடற்ற உற்பத்தி முறை மற்றும் சுதந்திரமான வணிகம் என்ற பெயரில் லாபநோக்கத்தை மட் டுமே குறிவைத்து செயல்படும் சில பன் னாட்டு மூலதன வியாபாரிகள் இதற்கு காரண கர்த்தாக்களாக இருக்கிறார்கள் என் பது அடிப்படையான ஒரு உண்மை. சமீ பத்திய நாட்களில் நடந்த ஆயுத வியா பா ரிகளின் விற்பனைகளை கணக்கில் எடுத் தாலும் நமக்கு வியப்பாக இருக்கும்.
நேட்டோ படைவரிசையில் ஒரு பகுதி யான துருக்கி நாட்டின் கப்பல்படை 8 ஹெலிகாப்டர்களை நிறுத்தக் கூடிய தளம் கொண்ட ஒரு கப்பலை வாங்குவ தற்கான முயற்சியில் இறங்கியது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்று அழைக்கப்படும் ஒரு பின்மெக்கானிக்கா கம்பெனி, கூடுதலாக இங்கிலாந்து ராணு வத்திற்கு 10 லின்ஸ் எம்.கே.9 வகை ஹெலிகாப்டர்களை விற்பதற்கு 4 கோடி டாலர் ஒப்பந்தத்தை செய்துள்ளது. கத்தார் நாட்டின் தோஹா துறைமுகத்தில், 2வது தோஹா அனைத்து நாட்டு கடல்வழி பாதுகாப்பு கண்காட்சிக்கு குறைந்தபட்சம் 15 போர்க் கப்பல்களை, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்து தருவிக்கிறது. அவற்றில் பெரிய கப்பலாக அமெரிக்க கப்பல்படையின் 208 எம் நீளமுள்ள மேசா வெர்டே இருக்கும். அதற்கு சமமாக இங்கிலாந்து நாட்டின் கப்பல் படையின் ஆர்.எப்.ஏ. என்ற லைமேபே என்ற 190எம் நீளம் கொண்ட போர்க்கப்பல் இருக்கும். அந்த கண்காட்சியில் துருக்கியின் 139 எம் கொண்ட டி.சி.ஜி. ஜெம்லக், 133 எம் உள்ள அமெரிக்க கப்பல் படையின் எச்.எம்.எஸ். செயிண்ட் அலபான்ஸ், 125 எம் கொண்ட பிரான்ஸ் போர்க்கப்பல், 118 எம் கொண்ட ஆஸ்திரேலியா போர்க்கப்பல் ஆகியவற்றுடன் 126 எம் கொண்ட ஐஎன்எஸ் பிட்வா என்ற இந்திய போர்க் கப்பலும் இடம்பெறுகிறது. இதன் மூலம் உலக ஆயுதமயமாக்கல் என்ற அழிவுப் பாதையிலே, மேற்கத்திய நாடுகளின் ஆயுதந்தாங்கிய அணிவகுப்புப் பட்டியலில், இந்திய அரசும் இணைந்துக் கொண்டுள்ளது என்பது பட்டவர்த் தன மாகியுள்ளது.
தோஹா துறைமுகத்தின் ஆயுதந் தாங்கிய போர்க்கப்பல்களின் வரிசையில் பட்டியல் இடப்படும் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு பொருளாதாரத்தில், வளர்ந்த நாடுகளாக வரிசைப்படுத்தப்பட்டவை. ஆனால் இந்தியா மட்டும் வளரும் நாடாகவோ, வளராத நாடாகவோ, ஏழை நாடாகவோ விவரிக்கப்படும் ஒரு நாடு. பெருவாரியான தங்கள் நாட்டு மக்கள் தொகையை, வறுமையின் எல்லைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களாகவோ அல்லது அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கக்கூடியவர்களாகவோ வைத்திருக்கின்ற ஒரு நாடு, இவ்வாறு உலக நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு, ஆயுதபாணியாக்கப்பட்ட பட்டியலில் சேர்ந்திருப்பது பெருமைக்குரியதா?
மேற்கண்ட கேள்வியை அமைதி விரும்புவோரும், போர் எதிர்ப்பாளர் களும், ஆயுதக் கலாச்சாரத்தை மறுப்ப வர்களும், அணு ஆயுத உற்பத்தியையும், சோதனையையும், பயன்படுத்தலையும் எதிர்த்துக் குரல் கொடுப்பவரும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கிலாந்தில் இருக்கின்ற ஆயுத வியாபார நிறுவனங்கள், இங்கிலாந்து ஆயு தப் படைகளுடன், தொழிற்
சாலையில் தொடங்கி போர்க்களம் வரை இணைந்தே செயல்படுகிறார்கள். உதார ணமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இறக்கி விடப்பட்டுள்ள இங்கிலாந்து ராணுவத்துடன் இணைந்து, இங்கிலாந்து ஆயுத தொழிற்சாலைகளைச் சேர்ந்த 4,000 பேர் இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது பன்னாட்டு மூலதன ஆயுத உற்பத்தியாளர்களான, லாபம் ஈட்டும் தனியார் நோக்கங் களுக்கு ஏற்றாற்போல், ஒரு நாட்டின் வெளி விவகாரக் கொள்கை தீர்மானிக்கப்படும் என்பதை நிரூபித்து நிற்கிறது. ஆயுத உற்பத்தி செய்யும் ஒரு தனியார் நிறுவனம், தன்னுடைய உற்பத்தி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று தான் விரும்ப முடியும். அதற்காக தொடர்ந்து போர்கள் நடந்து கொண்டேயிருக்க வேண்டும். இப்படிப்பட்ட போர்களை நடத்துகின்ற அல்லது திட்டமிடுகின்ற அரசுகளுடன் போர்க்களத்தில் இறங்கி தனியார் நிறுவன ஊழியர்கள் செயல்பட அனுமதிப்பது என்பதே, அவர்களது லாபவெறிக்கு துணைப் போவது என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
இப்போது ரஷ்ய நாடும் தென்அமெரிக் காவில், வெனிசுலா மட்டுமல்லாமல் வியட்நாம் உட்பட நாடுகளுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது. அதேபோல ரஷ்ய ஆயுதங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், குறிப்பாக வடஆப்பிரிக்க நாடுகளுக்கும் விற்கப் படுகின்றன. இந்தியாவிற்கு 2007ம் ஆண்டு 800 கோடி டாலருக்கும், 2008ம் ஆண்டு ரஷ்யா 835 கோடி டாலருக்கும் ஆயுத விற்பனை செய்துள்ளது.
இப்போது நிர்ப்பந்தமான நிலையை எடுத்திருக்கும் இங்கிலாந்து அரசு 2008 ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து 2009 மார்ச் 31ம் தேதி வரை இலங்கை அரசக்கு ஆயுத ஏற்றுமதி செய்ய 31 உரிமங்களை வழங்கியுள்ளது. அவை அனைத்துமே இலங்கை அரசால் விடு தலைப்புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்றைக்கு அரசியல் அதிகார சமன்பாட்டில் வந்தி ருக்கும் மாற்றங்களையொட்டியும், பொது மக்களின் எதிர்ப்பையும், ஈழத் தமிழர்களின் விழிப்புணர்வால் இங்கி லாந்து நாட்டிற்குள் உருவாகியுள்ள அரசியல் பிரதிநிதித்துவத்தையும் கணக்கில் கொண்டு, சில மாற்றங்கள் ஏற்பட் டிருக்கலாம். ஆனால் அடிப்படையில் இத்தகைய நாட்டு அரசுகள் தனியார் ஆயுத வியாபாரிகளை ஊக்குவித்து, பிற்போக்கு அரசுகளுக்கு வியாபாரம் செய்து, உரிமைக்குப் போராடும் மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன. ஆகவே ஆயுத விற்பனை செய்யும் சாவு வியாபாரிகளுக்கு எதிரான, உலகம் தழுவிய ஜனநாயக குரலை எழுப்புவது ஒரு அவசியத் தேவையாகிறது.
Thursday, April 1, 2010
Wednesday, March 31, 2010
எதிர்கட்சியில்லா தேர்தல் ஜனநாயகம் எங்கே இழுத்துச் செல்லும்?
மியான்மர் நாடு தேர்தல் பாதைக்கு திரும்பப் போகிறதாம். அதையொட்டி வருகின்ற தேர்தலில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் போட்டியிடக் கூடாது என்று ஒரு சட் டம் வந்துள்ளதாம். அதனால் எதிர்கட்சி தலைவியாக அறியப்பட்ட ஆங் சான் சூ கி தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலைமை எழுந்தது. அதையொட்டி அவரது கட்சியான தேசிய ஜனநாயக லீக் இந்த தேர்லைப் புறக்கணித்துள்ளது. அதன் மூலம் மியான்மர் என்ற பர்மாவில் நடக்கயிருக்கும் தேர்தல் அல்லது அரசியல் பாதை தவறானது என்ற செய்தியை உலக சமூகத்திற்கும், பர்மாவின் மக்களுக்கும் அதேசமயம் அங்கே ஆளுகின்ற ராணுவ ஆட்சியாளர்களுக்கும் அறிவிப்பதாக அது இருக்கிறது. அதேசமயம் இத்தகைய புறக்கணிப்பு தேசிய ஜனநாயக லீக் கட்சியை தனிமைப்படுத்தி விடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஜனநாயகத்திற்கு ஆதரவான கட்சி என்று அறியப்படும் அந்த கட்சியை இதை வைத்தே கேள்வி கேட்கும் நிலையும் வரும். அதேசமயம் ராணுவ ஆட்சியாளர்களை யாருமே எதிர் கொள்ள முடியாது என்ற உணர்வும் எழலாம். அனைத்து நாட்டு சமூகத்திற்கு சூ கியும், தேசிய ஜனநாயக லீக்கும் மியான்மரில் ஜனநாயகத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கையிலும், அவர்கள் தான் மக்களின் தேர்வு என்ற புரிதலிலும் இருந்தார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்பது அந்த அனைத்து நாட்டு சமூகத்திற்கு ஒரு பெரும் அதிர்ச்சியானச் செய்தி தான்.
எதிர்கட்சியின் புறக்கணிப்பு தந்திரத்தின் மூலம், மீண்டும் ராணுவ தளபதிகளை ஆட்சியில் அமர்த்தக் கூடிய ஒரு செயல் நிறைவேறி விடும். நூற்றுக்கணக்கான தேசிய ஜனநாயக லீக் ஊழியர்களை சிறையில் அடைத்து, பல ஆண்டுகளாக அவர்களது கட்சி அலுவலகத்தை மூடி வைத்து, இந்த மாதம் அவற்றை மீண்டும் திறக்க அனுமதித்துள்ள ராணுவ தளபதிகள் மீண்டும் அதிகாரத்தில் தொடர்வதற்கு ஏதுவாகப் போய்விட்டது என்ற கருத்தும் அங்கே இருக்கிறது.
இந்தியாவின் எல்லையோரத்தில் இருக்கும் பர்மா என்ற இந்த மியான்மர் நாட்டில் 1990ம் ஆண்டிற்குப் பிறகு இப்போது 2010ல் தான் தேர்தல் அறிவிக் கப்படுகிறது. 90ம் ஆண்டில் பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சூ கி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 59% வாக்குகளை அவர் பெற்றிருந்தார். மியான்மர் நாடாளுமன்றத்திற்கான 492 தொகுதிகளில், 394ல் சூ கியின் கட்சி வெற்றி பெற்றிருந்தது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே, ராணுவ தளபதிகளால் சூ கி வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் அவர் வீட்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்தார். 1990ம் ஆண் டிலேயே ராப்டோ பரிசு, சகரோ பரிசு ஆகியவற்றை கருத்துரிமைக்காக அவர் பெற்றிருந்தார். 91ம் ஆண்டில் நோபல் சமாதானப் பரிசைப் பெற்றார். 92ம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் அனைத்து நாட்டு புரிதலுக்கான ஜவ ஹர்லால் நேரு விருது பெற்றார். இப்போது 64 வயதடைந்துள்ள ஆங் சான் சூ கி, உலக மக்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் பெற்றிருந்தும் கூட, மீண்டும் ஜனநாயக ரீதியாக வெல்ல முடியாத நிலைமை.
1945ம் ஆண்டு ஜுன் 19ம் நாள் ரங்கூனில் பிறந்த சூ கியின் தந்தை நவீன பர்மாவின் ராணுவ நிறுவனராகவும், தளபதியாகவும் இருந்தார். 1947ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் பர்மாவின் விடுதலைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற்றவர் அவர். அதே ஆண்டில் எதிர்ப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். சூ கி தனது பட்டப் படிப் புக்குப் பிறகு நியூயார்க் நகரில் வாழ்ந்து வந்தார். ஐ.நா.சபையின் பணிகளில் மூன்றாண்டு பணியாற்றினார். 1972ல் டாக்டர் மைக்கேல் அரிஸ் என்பவரை மண முடித்தார். அவருக்கு அலெக்சாண்டர் அரிஸ், கிம் என்ற மகன்கள் பிறந்தனர். 1988ல் பர்மாவுக்கு திரும்பினார். 1999ல் தனது 53வது வயதில் அவரது கணவர் அரிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறைந்தார். 1989ல் இருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்து சூ கியை தனது இறுதி நாட்களில் 5 முறை மட் டுமே அவரது கணவரால் சந்திக்க முடிந்தது. இங்கிலாந்தில் இருக்கும் தனது குழந்தைகளுடனும் தொடர்பறுந்த நிலை யில் சூ கி வீட்டுச் சிறையில் இருந்தார்.
1988ம் ஆண்டிலேயே ராணுவ தளபதி நீவின் ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்திற்கான மக்களின் போராட்டம் வெடித்தது. அப்போது சூ கி 5 லட்சம் மக்களுக்கு மத்தியில் ஜனநாயகத்திற்காக உரைநிகழ்த்தியுள்ளார். அதன்பிறகு புதிய ராணுவத் தலைமை ஆட்சியை கைப்பற்றியது. அதையொட்டியே சூ கியை பொதுச்செயலாளராக கொண்டு ஜனநாயகத்திற்கான தேசிய லீக் உரு வானது. நாட்டை விட்டு வெளியேறுவதாக இருந்தால், வீட்டுக் காவலில் இருந்து விடுதலைச் செய்கிறோம் என்பது தான், கடந்த 20 ஆண்டுகளாக சூ கி முன்னால் வைக்கப்பட்ட கட்டளையாக இருந்தது.
மியான்மரில் ராணுவ ஆட்சியை மாற்று வதற்கான முயற்சியை மேற்கொள்ளாத இந்திய அரசும், சீன அரசும் சமீபத்திய ஐ.நா.வின் முயற்சிகளையும், அமெரிக்காவின் தலையீடுகளையும் எதிர்க்க முடியவில்லை. மியான்மரின் முன்மாதிரி என்பது, பொதுவாகவே உலக அரங்கில் தேர்தல் ஜனநாயகம் என்ற முன்னேறிய ஒரு வழிமுறை அமுலாகின்ற ஒவ்வொரு நாட்டிலும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது. சமீபத்தில் அதிபர் தேர்தலை முடித்து விட்டு, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்ற இலங்கைத் தீவில் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ள ஒரு குழுவினர், இதேபோலத் தான் நடந்துக் கொள்கிறார்கள். எப்படி எதிர்கட்சிகளை லாவகமாக இல்லாமல் செய்து, எதிர்ப்பாளர்களை சிறைக்குள் தள்ளி தொடர்ந்து ஆளக் கூடிய ஒரு நிலைமையை ஏற்படுத்தலாம் என்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். இதனால் ஆட்சி முறைகளிலேயே, நாடா ளுமன்ற பாதை தான் சிறந்தது என்பதும், அதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்தை ஏற்படுத்துவது என்பதும் கேலிக்குரியதாக ஆகிக் கொண் டிருக்கிறது என்ற புதிய செய்தியை ஜனநாயக உணர்வாளர்கள் கண்டிப்பாக கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கத்திய நாடுகளான ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இஸ்ரேல், ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் ஆதரவு பெற்றிருந்தும் கூட, உலக அரங்கில் ஜனநாயகத்திற்கான மியான்மர் இயக்கத்திற்கு ஆதரவு இருந்தும் கூட, ஆங் சான் சூ கியால் தனது நாட்டில் ஜனநாயகத்தை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியவில்லை. மியான்மர் நாட்டில் 14 மாநிலங்கள் இருக்கின்றன. அவை மாவட்டங்களாகவும், நகரங்களாகவும், கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவைப் போன்ற ஒரு கட்டமைப்பு தான் அங்கே இருந்துக் கொண்டிருக்கிறது. மியான்மர் மீது பொருளாதார தடையை விதித்திருந்த அமெரிக்கா சமீபத்தில், ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் உத்தர வாதத்தில் அதை திரும்பப் பெற்றது. அப்படி மீட்டெடுக்கப்படும் ஜனநாயகம் தான் இந்த தேர்தலை இப்படி நடத்துகிறது. அனைத்துலக சமூகங்களும் ஜனநாயக ரீதியான தேர்தல் நடத்தப்பட்டது என்று காட்டப்பட்டாலும், உள்நாட்டில் எதிர்கட்சி செயல்படுவதற்கே அனுமதிக் கப்படவில்லை என்ற அளவில் தான் அந்த தேர்தலும் நடைபெறுகிறது. மியான்மர் நாட்டிற்கு வெளிநாட்டு மூல தனம் என்பது மேற்கத்திய வளர்ந்த நாடுகளில் இருந்து வருவதில்லை. சீனா, சிங்கப்பூர், தென்கொரியா, இந்தியா, தாய்லாந்த் ஆகிய நாடுகளில் இருந்து தான் மூலதனம் இறக்குமதியாகிறது. நாட்டின் 60% விளைச்சல் நிலத்தில் நெல் உற்பத்தியை செய்கிறார்கள். அப் படிப்பட்ட ஒரு நாட்டில் ஜனநாயக ரீதியான தேர்தல் முறையை சதிசெய்து உடைப்பது என்பது அங்கே பகிரங்கமாக நடந்துள்ளது. இதேநிலைமை தான் இலங்கைத் தீவில் நடத்தப்படுகின்ற தேர்தல்களிலும் எதிரொலிக்கிறது. இந்தியாவில் நடத்தப்படும் தேர்தல் முறைகளில், எதிர்கட்சிகளை உடைப்பது, இல்லாமல் செய்வது ஆகிய தந்திரங்களை செயல்படுத்திக்காட்டாத ஆளும் கட்சி களை காண்பது அரிதாக இருக்கிறது. அதனால் இந்தக் காலகட்டம் ஜனநாயக தேர்தல் முறைகளை, உடைப்பதற்கான காலகட்டமா? மரத்தின் நுனிக்கிளையில் இருந்தே, அடிக்கிளையை வெட்டுகின்ற காலகட்டமா? எதிர்கட்சிகளை இல்லாமல் செய்வது ஆளும் கட்சிக்கு தற்காலிக வெற்றியை அளிக்கலாம். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயக முறைக்கு நிரந்தரத் தோல்வியை அளிக்காதா? இந்தியாவில் இருக்கும் ஜனநாயக சக்தி கள், இத்தகைய கேள்விகளுக்கு விடை தேடினால் நல்லது.
எதிர்கட்சியின் புறக்கணிப்பு தந்திரத்தின் மூலம், மீண்டும் ராணுவ தளபதிகளை ஆட்சியில் அமர்த்தக் கூடிய ஒரு செயல் நிறைவேறி விடும். நூற்றுக்கணக்கான தேசிய ஜனநாயக லீக் ஊழியர்களை சிறையில் அடைத்து, பல ஆண்டுகளாக அவர்களது கட்சி அலுவலகத்தை மூடி வைத்து, இந்த மாதம் அவற்றை மீண்டும் திறக்க அனுமதித்துள்ள ராணுவ தளபதிகள் மீண்டும் அதிகாரத்தில் தொடர்வதற்கு ஏதுவாகப் போய்விட்டது என்ற கருத்தும் அங்கே இருக்கிறது.
இந்தியாவின் எல்லையோரத்தில் இருக்கும் பர்மா என்ற இந்த மியான்மர் நாட்டில் 1990ம் ஆண்டிற்குப் பிறகு இப்போது 2010ல் தான் தேர்தல் அறிவிக் கப்படுகிறது. 90ம் ஆண்டில் பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சூ கி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 59% வாக்குகளை அவர் பெற்றிருந்தார். மியான்மர் நாடாளுமன்றத்திற்கான 492 தொகுதிகளில், 394ல் சூ கியின் கட்சி வெற்றி பெற்றிருந்தது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே, ராணுவ தளபதிகளால் சூ கி வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் அவர் வீட்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்தார். 1990ம் ஆண் டிலேயே ராப்டோ பரிசு, சகரோ பரிசு ஆகியவற்றை கருத்துரிமைக்காக அவர் பெற்றிருந்தார். 91ம் ஆண்டில் நோபல் சமாதானப் பரிசைப் பெற்றார். 92ம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் அனைத்து நாட்டு புரிதலுக்கான ஜவ ஹர்லால் நேரு விருது பெற்றார். இப்போது 64 வயதடைந்துள்ள ஆங் சான் சூ கி, உலக மக்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் பெற்றிருந்தும் கூட, மீண்டும் ஜனநாயக ரீதியாக வெல்ல முடியாத நிலைமை.
1945ம் ஆண்டு ஜுன் 19ம் நாள் ரங்கூனில் பிறந்த சூ கியின் தந்தை நவீன பர்மாவின் ராணுவ நிறுவனராகவும், தளபதியாகவும் இருந்தார். 1947ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் பர்மாவின் விடுதலைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற்றவர் அவர். அதே ஆண்டில் எதிர்ப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். சூ கி தனது பட்டப் படிப் புக்குப் பிறகு நியூயார்க் நகரில் வாழ்ந்து வந்தார். ஐ.நா.சபையின் பணிகளில் மூன்றாண்டு பணியாற்றினார். 1972ல் டாக்டர் மைக்கேல் அரிஸ் என்பவரை மண முடித்தார். அவருக்கு அலெக்சாண்டர் அரிஸ், கிம் என்ற மகன்கள் பிறந்தனர். 1988ல் பர்மாவுக்கு திரும்பினார். 1999ல் தனது 53வது வயதில் அவரது கணவர் அரிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறைந்தார். 1989ல் இருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்து சூ கியை தனது இறுதி நாட்களில் 5 முறை மட் டுமே அவரது கணவரால் சந்திக்க முடிந்தது. இங்கிலாந்தில் இருக்கும் தனது குழந்தைகளுடனும் தொடர்பறுந்த நிலை யில் சூ கி வீட்டுச் சிறையில் இருந்தார்.
1988ம் ஆண்டிலேயே ராணுவ தளபதி நீவின் ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்திற்கான மக்களின் போராட்டம் வெடித்தது. அப்போது சூ கி 5 லட்சம் மக்களுக்கு மத்தியில் ஜனநாயகத்திற்காக உரைநிகழ்த்தியுள்ளார். அதன்பிறகு புதிய ராணுவத் தலைமை ஆட்சியை கைப்பற்றியது. அதையொட்டியே சூ கியை பொதுச்செயலாளராக கொண்டு ஜனநாயகத்திற்கான தேசிய லீக் உரு வானது. நாட்டை விட்டு வெளியேறுவதாக இருந்தால், வீட்டுக் காவலில் இருந்து விடுதலைச் செய்கிறோம் என்பது தான், கடந்த 20 ஆண்டுகளாக சூ கி முன்னால் வைக்கப்பட்ட கட்டளையாக இருந்தது.
மியான்மரில் ராணுவ ஆட்சியை மாற்று வதற்கான முயற்சியை மேற்கொள்ளாத இந்திய அரசும், சீன அரசும் சமீபத்திய ஐ.நா.வின் முயற்சிகளையும், அமெரிக்காவின் தலையீடுகளையும் எதிர்க்க முடியவில்லை. மியான்மரின் முன்மாதிரி என்பது, பொதுவாகவே உலக அரங்கில் தேர்தல் ஜனநாயகம் என்ற முன்னேறிய ஒரு வழிமுறை அமுலாகின்ற ஒவ்வொரு நாட்டிலும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது. சமீபத்தில் அதிபர் தேர்தலை முடித்து விட்டு, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்ற இலங்கைத் தீவில் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ள ஒரு குழுவினர், இதேபோலத் தான் நடந்துக் கொள்கிறார்கள். எப்படி எதிர்கட்சிகளை லாவகமாக இல்லாமல் செய்து, எதிர்ப்பாளர்களை சிறைக்குள் தள்ளி தொடர்ந்து ஆளக் கூடிய ஒரு நிலைமையை ஏற்படுத்தலாம் என்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். இதனால் ஆட்சி முறைகளிலேயே, நாடா ளுமன்ற பாதை தான் சிறந்தது என்பதும், அதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்தை ஏற்படுத்துவது என்பதும் கேலிக்குரியதாக ஆகிக் கொண் டிருக்கிறது என்ற புதிய செய்தியை ஜனநாயக உணர்வாளர்கள் கண்டிப்பாக கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கத்திய நாடுகளான ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இஸ்ரேல், ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் ஆதரவு பெற்றிருந்தும் கூட, உலக அரங்கில் ஜனநாயகத்திற்கான மியான்மர் இயக்கத்திற்கு ஆதரவு இருந்தும் கூட, ஆங் சான் சூ கியால் தனது நாட்டில் ஜனநாயகத்தை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியவில்லை. மியான்மர் நாட்டில் 14 மாநிலங்கள் இருக்கின்றன. அவை மாவட்டங்களாகவும், நகரங்களாகவும், கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவைப் போன்ற ஒரு கட்டமைப்பு தான் அங்கே இருந்துக் கொண்டிருக்கிறது. மியான்மர் மீது பொருளாதார தடையை விதித்திருந்த அமெரிக்கா சமீபத்தில், ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் உத்தர வாதத்தில் அதை திரும்பப் பெற்றது. அப்படி மீட்டெடுக்கப்படும் ஜனநாயகம் தான் இந்த தேர்தலை இப்படி நடத்துகிறது. அனைத்துலக சமூகங்களும் ஜனநாயக ரீதியான தேர்தல் நடத்தப்பட்டது என்று காட்டப்பட்டாலும், உள்நாட்டில் எதிர்கட்சி செயல்படுவதற்கே அனுமதிக் கப்படவில்லை என்ற அளவில் தான் அந்த தேர்தலும் நடைபெறுகிறது. மியான்மர் நாட்டிற்கு வெளிநாட்டு மூல தனம் என்பது மேற்கத்திய வளர்ந்த நாடுகளில் இருந்து வருவதில்லை. சீனா, சிங்கப்பூர், தென்கொரியா, இந்தியா, தாய்லாந்த் ஆகிய நாடுகளில் இருந்து தான் மூலதனம் இறக்குமதியாகிறது. நாட்டின் 60% விளைச்சல் நிலத்தில் நெல் உற்பத்தியை செய்கிறார்கள். அப் படிப்பட்ட ஒரு நாட்டில் ஜனநாயக ரீதியான தேர்தல் முறையை சதிசெய்து உடைப்பது என்பது அங்கே பகிரங்கமாக நடந்துள்ளது. இதேநிலைமை தான் இலங்கைத் தீவில் நடத்தப்படுகின்ற தேர்தல்களிலும் எதிரொலிக்கிறது. இந்தியாவில் நடத்தப்படும் தேர்தல் முறைகளில், எதிர்கட்சிகளை உடைப்பது, இல்லாமல் செய்வது ஆகிய தந்திரங்களை செயல்படுத்திக்காட்டாத ஆளும் கட்சி களை காண்பது அரிதாக இருக்கிறது. அதனால் இந்தக் காலகட்டம் ஜனநாயக தேர்தல் முறைகளை, உடைப்பதற்கான காலகட்டமா? மரத்தின் நுனிக்கிளையில் இருந்தே, அடிக்கிளையை வெட்டுகின்ற காலகட்டமா? எதிர்கட்சிகளை இல்லாமல் செய்வது ஆளும் கட்சிக்கு தற்காலிக வெற்றியை அளிக்கலாம். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயக முறைக்கு நிரந்தரத் தோல்வியை அளிக்காதா? இந்தியாவில் இருக்கும் ஜனநாயக சக்தி கள், இத்தகைய கேள்விகளுக்கு விடை தேடினால் நல்லது.
Tuesday, March 30, 2010
அல்கொய்தா தேனீக்கூட்டை கலைக்கிறாரா ஒபாமா?
நேற்று ரஷ்யாவின் மத்திய மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையங்களில் 2 மனித வெடிகுண்டுகள் வெடித்தன. இரண்டும் பெண் மனிதவெடிகுண்டுகள். முதல் பெண் போராளி தன்னை வெடித்துக் கொண்டு 45 நிமிடங்கள் கழித்து, அடுத்த பெண் போராளி இன்னொரு மெட்ரோ நிலையத்தில் தன்னை வெடித்துக் கொண்டுள்ளார். 50க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இது
செசன்யா தனிநாடு பிரிவினைக் கோரும் போராளிகளால் நிகழ்த்தப்பட்டது என்று முதலில் சந்தேகம் கொண்டார்கள். அதற்குள் செசன்யா விடுதலைப் போராளிகள், நடந்த சம்பவத்திற்கு உரிமைக் கோரி விட்டார்கள். தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டு, அதன் மூலம் தங்கள் நாட்டின் விடுதலைக்கு போராடும் இந்தப் போராளிகள், யாருடைய ஆதரவில், யாருடைய உதவியில் போராடுகிறார்கள் என்ற கேள்வி மேலை நாட்டு வட்டாரங்களில் கேட்கப்படுகிறது. 2004ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த தற்கொலை பயங்கரவாதம் என்ற நிகழ்வு ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வருகிறது. கடந்த காலங்களில் செசன்யா விடுதலை போராளிகளுக்கு, அல்கொய்தா பயிற்சிக் கொடுத்துள்ளார்கள் என்று தெரிகிறது. ஆப்கான் தாலிபன் போராளிகளும் செசன்யா விடுதலை இயக்கத்திற்கு உதவியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள தாலிபன்கள் வேறு என்றும், ஆப்கானிலுள்ள தாலிபன்கள் வேறு என்றும், அமெரிக்கா பிரித்து விளக்குகிறது. அதில் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள தாலிபன்களை, அல்கொய்தாவுடன் கூட்டுச் சேர்ந்துச் செயல்படுவதாக அவர் கள் அறிவிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் தான் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஆப்கான்
சென்றுள்ளார். தாலிபன்களுடைய எந்த வகையிலும் ராணுவ ரீதியாக செயல்பட விடமாட்டோம் என்பது ஒபாமாவின் சூளுரை. அல்கொய்தாவை தோற்கடித்தே காட்டுவோம் என்பது அவரது வைராக்கியம். பாகிஸ்தான் அரசினுடைய உதவியுடன், பாகிஸ்தான் மண்ணில் இருந்து ஆப்கான் நாட்டிற்குள் தாக்குதலை தொடர்ந்து எடுத்துச் செல் வது அவரது வியூகம். தான் அதிபராக இருக்கும் போதே 2012ம் ஆண்டுக்குள் அல்கொய்தாவையும், தாலிபன்களையும் தோற்கடித்து விட வேண்டும் என்ற நோக்கில் அவரது ஆப்கான் வருகை அமைந்துள்ளது.
ஆப்கான் நாட்டில் இருக்கின்ற அமெரிக்க ராணுவத்தையும், நேட்டோ படைகளையும் உற்சாகப்படுத்தி தங்களது இலக்கை அடைய ஒபாமா துடிக்கிறார். அதற்காக ஆப்கானிலுள்ள பக்ரம் பகுதியில் நிற்கும் அமெரிக்க ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடியிருக்கிறார். அதேபோல அமெரிக்காவால் தேர்தல் குளறுபடிகள் மூலம், ஆப்கானில் பொம்மையாக நிறுவப் பட்டுள்ள அதிபர் ஹமித் ஹார்சாயை காபூலில் சந்தித்திருக்கிறார். ஆப்கான் பிரச் சனையில் குழம்பிய நீரில் மீன் பிடிக்க இந்திய அரசுக்கும் ஆசைதான். ஆனால் வலியச்சென்று ஆதரவுக் கொடுக்கும் இந்திய அரசை அமெரிக்கா அதே மட்டத் தில் அங்கீகரிக்கத் தயாராயில்லை. தாலிபன்களில் வென்றெடுக்கப்பட முடிந்தவர்களுக்கு, நிதியுதவி செய்ய பல லட்சம் கோடி அமெரிக்க பணத்தை இறக்கி விட தயாராயிருக்கும் அமெரிக்க அரசு, அதற்கான சட்ட முன்வடிவையும் அமெரிக்க செனட் டில் நிறைவேற்றியுள்ளது. அதன் மூலம் பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் கைநிறைய பணம் கொடுத்து, அவர்கள் உதவியுடன் தாலிபன்களை துரத்துவதற்கு அல்லது தோற்கடிப்பதற்கு அல்லது பிளவுப்படுத்தி வெல்வதற்கு தனது முழு முயற்சியை, அமெரிக்கா செலவழிக்கிறது. அதனால் இந்தியாவின் அண்டை நாடான ஆப் கானில் தனது போர் தந்திரங்களை செயல்படுத்த, இந்தியாவின் இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானை மட்டுமே அமெரிக்கா சார்ந்திருக்க விரும்புகிறது.
அமெரிக்க அரசுக்கு அல்கொய்தாவின் இருத்தலேக் கூட, அச்சுறுத்தலை ஏற்படுத் துகிறது. அதனால் தான் ஆப்கானிலுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களிடம் பேசிய ஒபாமா 9/11 தாக்குதலை அவர்களுக்கு நினை வுப்படுத்தினார். அதை செய்தவர் கள் என்று அல்கொய்தாவை அடையாளப் படுத்தினார். அல்கொய்தாவுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக ஆப்கான் மலைகளும், காடுகளும் இருப்பதை சுட்டிக் காட்டினார். அத்தகைய பாதுகாப்பான இடம் ஒன்றை அல்கொய்தாவிற்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தினார். அமெரிக்காவை பாதுகாப்பாக வைத்திருக் கத் தான், அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானில் இறங்கியிருக்கிறார்கள் என்பதாக அந்த வீரர்களுக்கே எடுத்துச் சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.
சமீபத்தில் லண்டனில் நடந்த ஆப்கான் பற்றிய மாநாட்டில், அமெரிக்கா ஆப்கானில் பலவீனப்பட்டுக் கொண் டிருப்பதாக வெளிப்பட்ட கருத்துக்கள் கெடுவாய்ப்பானவை என்று தனது ராணுவ வீரர்களுக்கு விளக்கினார். அமெரிக்காவும், நேட்டோ படைகளும் கூடுதலாக 30,000 ராணுவ வீரர்களை, ஆப்கானுக்குள் இறக்கி விட முடிவு செய்திருப்பதும், தங்கள் பணியை முடித்து விட்டு தங்கள் ராணுவங்கள் ஆப்கானை விட்டு வெளியேறும் என்றும் அமெரிக்கா அறிவித்திருந்தது. அந்த பணிமுடிப்பு செயலுக்காகத் தான், இப்போது தாக்குதலை துரிதப்படுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது. ஆப்கான் அதிபர் கார்சாய்யுடன் புதிய புரிதலின்மை ஏற்பட்டுள்ளதை நீக்க ஒருபுறம் ஒபாமா முயன்றிருக்கிறார். தங்கள் நாட்டு பாதுகாப்பையும், ஆப்கா னிஸ்தான்பாகிஸ்தான் பிராந்திய பாது காப்பையும் இணைத்து பார்க்க வேண்டும் என்பது அமெரிக்காவின் குறிக்கோள். அதாவது அமெரிக்காவின் பாதுகாப்பே, இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் எதிர்ப்பு சக்திகள் நடமாட்டத்தை இல்லாமல் செய்வதில் இருக்கிறது என்ற வேகத்துடன் அவரது செயல்பாடு பளிச்சிடுகிறது. தாங்கள் அல்கொய்தா மற்றும் தாலிபன் தலைமைக்கெதிராக கடும் தாக்குதல்களை நடத்துவதாகவும், அதில் அவர்கள் தலைமை நிலை குலைந்திருப்பதாகவும் ஒபாமா கூறியுள்ளார். அவர்களது நடமாட்டமும், பயிற்சி எடுத்தலும்,
சதி செய்தலும், தாக்குதலும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் விளக்குகிறார். ஆனால் நடைமுறையில் இதே புரிதலை அல்கொய்தாவினர் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. அனைத்து நாட்டு விதிகளின் படி, தங்கள் சுய பாதுகாப்புக்காக, தாக்கு தல் நடத்த தங்களுக்கு உரிமை இருக்கிறது என்பது அமெரிக்காவின் வாதம்.
அதேசமயம் பாகிஸ்தான் அரசோ, அமெரிக்க தூதரக ஆதரவுடன், ஆப்கானில் இந்தியாவின் நடமாட்டத்தையே இல்லா மல் செய்வதற்கு உள்ள முயற்சிகளை எடுத்து வருகிறது. ஒபாமாவின் ஆப்கான் பயணத்தின் மூலம், லஷ்கர் இ தொய்பாவையும் எதிர்த்து இயங்க வேண்டிய அவசியத்தை அவர் உணர் வாரா என்பதை மட்டும் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் விவாதிக்க விரும்புகிறார்கள். ஆனால் ஆண்டுபலவாக ஆப்கான் மலைகளிலும், காடுகளிலும் இருந்து ஆதிவாசிகளுடன் இரண்டறக் கலந்து, ஆப்கான் ஆதிவாசிகள் மத்தியில் இருந்தே எழுகின்ற தாலிபனுக்கு உயிர் கொடுத்து, வளர்த்திருக்கின்ற அதன் மூலம் தானும் வளர்ந்திருக்கின்ற அல் கொய்தாவை, அமெரிக்கா முன்வைத்திருக் கும் போர்த் தந்திரங்களால் அழிக்க முடியுமா? அல்கொய்தாவை தாக்கும் போது, அந்த போராளிகள் சிதறி பல் வேறு இடங்களிலும், மாறிச் சென்று விரி வடைந்து விடமாட்டார்களா?
செசன்யா விடுதலை போராளிகளுக்கு அல்கொய்தாவின் தொடர்ந்த ஆயுதப் பயிற்சி, வெடிகுண்டு பயிற்சி ஆகியவை ஏற்கனவே 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலை யத்தில் நடந்த குண்டுவெடிப்பின் மூலம் அம்பலமானது. அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் நடந்த தற்கொலைப்படை தாக்குதல், நவம்பர் மாதம் நடந்த ரயில் தாக்குதல் ஆகியவை அதை மறுஉறுதி செய்தன. சென்ற ஆண்டு சீனாவில் நடந்த உய்கூர் எழுச்சியிலும், அல்கொய்தாவின் கரங்கள் வெளியே தெரிந்தன. உஸ்பெக்கின் ஆயுத எழுச்சிக்குப் பின்னாலும் அல்கொய்தா இருக்கிறது. மத்திய ஆசிய குடியரசுகளில் அவை பிரபலமாக இருக்கின்றன. வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் அல்கொய்தாவால் பயிற்சிக் கொடுக்கப்பட்டு, உஸ்பெக்ஸ், செசன்யா, உய்கூர் ஆகிய போராளிக் குழுக்களை ஊக்குவித்து ரஷ்யா, சீனா, உஸ்பெகிஸ்தான், கசக்ஸ்தான், தஜிகிஸ் தான் ஆகிய வட்டாரங்களில் இன்று சிதறியும், விரிந்தும், நீண்டும் இருக்கின்ற எதிரொலிகள் இவர்களால் நிறுத்தப்பட முடியுமா? தேனீகூட்டை தாக்கி அது சிதறி, பல இடங்களில் பரவுவதற்கு தான், ஒபாமாவின் தந்திரம் பயன்படுமா என்ற கேள்வி எழுகிறது.
செசன்யா தனிநாடு பிரிவினைக் கோரும் போராளிகளால் நிகழ்த்தப்பட்டது என்று முதலில் சந்தேகம் கொண்டார்கள். அதற்குள் செசன்யா விடுதலைப் போராளிகள், நடந்த சம்பவத்திற்கு உரிமைக் கோரி விட்டார்கள். தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டு, அதன் மூலம் தங்கள் நாட்டின் விடுதலைக்கு போராடும் இந்தப் போராளிகள், யாருடைய ஆதரவில், யாருடைய உதவியில் போராடுகிறார்கள் என்ற கேள்வி மேலை நாட்டு வட்டாரங்களில் கேட்கப்படுகிறது. 2004ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த தற்கொலை பயங்கரவாதம் என்ற நிகழ்வு ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வருகிறது. கடந்த காலங்களில் செசன்யா விடுதலை போராளிகளுக்கு, அல்கொய்தா பயிற்சிக் கொடுத்துள்ளார்கள் என்று தெரிகிறது. ஆப்கான் தாலிபன் போராளிகளும் செசன்யா விடுதலை இயக்கத்திற்கு உதவியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள தாலிபன்கள் வேறு என்றும், ஆப்கானிலுள்ள தாலிபன்கள் வேறு என்றும், அமெரிக்கா பிரித்து விளக்குகிறது. அதில் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள தாலிபன்களை, அல்கொய்தாவுடன் கூட்டுச் சேர்ந்துச் செயல்படுவதாக அவர் கள் அறிவிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் தான் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஆப்கான்
சென்றுள்ளார். தாலிபன்களுடைய எந்த வகையிலும் ராணுவ ரீதியாக செயல்பட விடமாட்டோம் என்பது ஒபாமாவின் சூளுரை. அல்கொய்தாவை தோற்கடித்தே காட்டுவோம் என்பது அவரது வைராக்கியம். பாகிஸ்தான் அரசினுடைய உதவியுடன், பாகிஸ்தான் மண்ணில் இருந்து ஆப்கான் நாட்டிற்குள் தாக்குதலை தொடர்ந்து எடுத்துச் செல் வது அவரது வியூகம். தான் அதிபராக இருக்கும் போதே 2012ம் ஆண்டுக்குள் அல்கொய்தாவையும், தாலிபன்களையும் தோற்கடித்து விட வேண்டும் என்ற நோக்கில் அவரது ஆப்கான் வருகை அமைந்துள்ளது.
ஆப்கான் நாட்டில் இருக்கின்ற அமெரிக்க ராணுவத்தையும், நேட்டோ படைகளையும் உற்சாகப்படுத்தி தங்களது இலக்கை அடைய ஒபாமா துடிக்கிறார். அதற்காக ஆப்கானிலுள்ள பக்ரம் பகுதியில் நிற்கும் அமெரிக்க ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடியிருக்கிறார். அதேபோல அமெரிக்காவால் தேர்தல் குளறுபடிகள் மூலம், ஆப்கானில் பொம்மையாக நிறுவப் பட்டுள்ள அதிபர் ஹமித் ஹார்சாயை காபூலில் சந்தித்திருக்கிறார். ஆப்கான் பிரச் சனையில் குழம்பிய நீரில் மீன் பிடிக்க இந்திய அரசுக்கும் ஆசைதான். ஆனால் வலியச்சென்று ஆதரவுக் கொடுக்கும் இந்திய அரசை அமெரிக்கா அதே மட்டத் தில் அங்கீகரிக்கத் தயாராயில்லை. தாலிபன்களில் வென்றெடுக்கப்பட முடிந்தவர்களுக்கு, நிதியுதவி செய்ய பல லட்சம் கோடி அமெரிக்க பணத்தை இறக்கி விட தயாராயிருக்கும் அமெரிக்க அரசு, அதற்கான சட்ட முன்வடிவையும் அமெரிக்க செனட் டில் நிறைவேற்றியுள்ளது. அதன் மூலம் பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் கைநிறைய பணம் கொடுத்து, அவர்கள் உதவியுடன் தாலிபன்களை துரத்துவதற்கு அல்லது தோற்கடிப்பதற்கு அல்லது பிளவுப்படுத்தி வெல்வதற்கு தனது முழு முயற்சியை, அமெரிக்கா செலவழிக்கிறது. அதனால் இந்தியாவின் அண்டை நாடான ஆப் கானில் தனது போர் தந்திரங்களை செயல்படுத்த, இந்தியாவின் இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானை மட்டுமே அமெரிக்கா சார்ந்திருக்க விரும்புகிறது.
அமெரிக்க அரசுக்கு அல்கொய்தாவின் இருத்தலேக் கூட, அச்சுறுத்தலை ஏற்படுத் துகிறது. அதனால் தான் ஆப்கானிலுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களிடம் பேசிய ஒபாமா 9/11 தாக்குதலை அவர்களுக்கு நினை வுப்படுத்தினார். அதை செய்தவர் கள் என்று அல்கொய்தாவை அடையாளப் படுத்தினார். அல்கொய்தாவுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக ஆப்கான் மலைகளும், காடுகளும் இருப்பதை சுட்டிக் காட்டினார். அத்தகைய பாதுகாப்பான இடம் ஒன்றை அல்கொய்தாவிற்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தினார். அமெரிக்காவை பாதுகாப்பாக வைத்திருக் கத் தான், அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானில் இறங்கியிருக்கிறார்கள் என்பதாக அந்த வீரர்களுக்கே எடுத்துச் சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.
சமீபத்தில் லண்டனில் நடந்த ஆப்கான் பற்றிய மாநாட்டில், அமெரிக்கா ஆப்கானில் பலவீனப்பட்டுக் கொண் டிருப்பதாக வெளிப்பட்ட கருத்துக்கள் கெடுவாய்ப்பானவை என்று தனது ராணுவ வீரர்களுக்கு விளக்கினார். அமெரிக்காவும், நேட்டோ படைகளும் கூடுதலாக 30,000 ராணுவ வீரர்களை, ஆப்கானுக்குள் இறக்கி விட முடிவு செய்திருப்பதும், தங்கள் பணியை முடித்து விட்டு தங்கள் ராணுவங்கள் ஆப்கானை விட்டு வெளியேறும் என்றும் அமெரிக்கா அறிவித்திருந்தது. அந்த பணிமுடிப்பு செயலுக்காகத் தான், இப்போது தாக்குதலை துரிதப்படுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது. ஆப்கான் அதிபர் கார்சாய்யுடன் புதிய புரிதலின்மை ஏற்பட்டுள்ளதை நீக்க ஒருபுறம் ஒபாமா முயன்றிருக்கிறார். தங்கள் நாட்டு பாதுகாப்பையும், ஆப்கா னிஸ்தான்பாகிஸ்தான் பிராந்திய பாது காப்பையும் இணைத்து பார்க்க வேண்டும் என்பது அமெரிக்காவின் குறிக்கோள். அதாவது அமெரிக்காவின் பாதுகாப்பே, இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் எதிர்ப்பு சக்திகள் நடமாட்டத்தை இல்லாமல் செய்வதில் இருக்கிறது என்ற வேகத்துடன் அவரது செயல்பாடு பளிச்சிடுகிறது. தாங்கள் அல்கொய்தா மற்றும் தாலிபன் தலைமைக்கெதிராக கடும் தாக்குதல்களை நடத்துவதாகவும், அதில் அவர்கள் தலைமை நிலை குலைந்திருப்பதாகவும் ஒபாமா கூறியுள்ளார். அவர்களது நடமாட்டமும், பயிற்சி எடுத்தலும்,
சதி செய்தலும், தாக்குதலும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் விளக்குகிறார். ஆனால் நடைமுறையில் இதே புரிதலை அல்கொய்தாவினர் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. அனைத்து நாட்டு விதிகளின் படி, தங்கள் சுய பாதுகாப்புக்காக, தாக்கு தல் நடத்த தங்களுக்கு உரிமை இருக்கிறது என்பது அமெரிக்காவின் வாதம்.
அதேசமயம் பாகிஸ்தான் அரசோ, அமெரிக்க தூதரக ஆதரவுடன், ஆப்கானில் இந்தியாவின் நடமாட்டத்தையே இல்லா மல் செய்வதற்கு உள்ள முயற்சிகளை எடுத்து வருகிறது. ஒபாமாவின் ஆப்கான் பயணத்தின் மூலம், லஷ்கர் இ தொய்பாவையும் எதிர்த்து இயங்க வேண்டிய அவசியத்தை அவர் உணர் வாரா என்பதை மட்டும் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் விவாதிக்க விரும்புகிறார்கள். ஆனால் ஆண்டுபலவாக ஆப்கான் மலைகளிலும், காடுகளிலும் இருந்து ஆதிவாசிகளுடன் இரண்டறக் கலந்து, ஆப்கான் ஆதிவாசிகள் மத்தியில் இருந்தே எழுகின்ற தாலிபனுக்கு உயிர் கொடுத்து, வளர்த்திருக்கின்ற அதன் மூலம் தானும் வளர்ந்திருக்கின்ற அல் கொய்தாவை, அமெரிக்கா முன்வைத்திருக் கும் போர்த் தந்திரங்களால் அழிக்க முடியுமா? அல்கொய்தாவை தாக்கும் போது, அந்த போராளிகள் சிதறி பல் வேறு இடங்களிலும், மாறிச் சென்று விரி வடைந்து விடமாட்டார்களா?
செசன்யா விடுதலை போராளிகளுக்கு அல்கொய்தாவின் தொடர்ந்த ஆயுதப் பயிற்சி, வெடிகுண்டு பயிற்சி ஆகியவை ஏற்கனவே 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலை யத்தில் நடந்த குண்டுவெடிப்பின் மூலம் அம்பலமானது. அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் நடந்த தற்கொலைப்படை தாக்குதல், நவம்பர் மாதம் நடந்த ரயில் தாக்குதல் ஆகியவை அதை மறுஉறுதி செய்தன. சென்ற ஆண்டு சீனாவில் நடந்த உய்கூர் எழுச்சியிலும், அல்கொய்தாவின் கரங்கள் வெளியே தெரிந்தன. உஸ்பெக்கின் ஆயுத எழுச்சிக்குப் பின்னாலும் அல்கொய்தா இருக்கிறது. மத்திய ஆசிய குடியரசுகளில் அவை பிரபலமாக இருக்கின்றன. வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் அல்கொய்தாவால் பயிற்சிக் கொடுக்கப்பட்டு, உஸ்பெக்ஸ், செசன்யா, உய்கூர் ஆகிய போராளிக் குழுக்களை ஊக்குவித்து ரஷ்யா, சீனா, உஸ்பெகிஸ்தான், கசக்ஸ்தான், தஜிகிஸ் தான் ஆகிய வட்டாரங்களில் இன்று சிதறியும், விரிந்தும், நீண்டும் இருக்கின்ற எதிரொலிகள் இவர்களால் நிறுத்தப்பட முடியுமா? தேனீகூட்டை தாக்கி அது சிதறி, பல இடங்களில் பரவுவதற்கு தான், ஒபாமாவின் தந்திரம் பயன்படுமா என்ற கேள்வி எழுகிறது.
Monday, March 29, 2010
இலங்கை நாடாளுமன்ற தேர்தலும், முடிக்கப்படாத முக்கியப் பிரச்சனைகளும்
வருகிற ஏப்ரல் 8ம் நாள் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப் படயிருக்கிறது. அதிகமானசொல் லாடல்கள் ஆக்கிரமித்துள்ள தேர்தலாகத் தான் இந்த முறையும் அது இருக்கிறது. கடந்த தேர்தல்கள் எல்லாமே இதுபோன்ற தன்மையில் தான் நடைபெற்றன. இந்தியாவில் ஒவ் வொரு பொதுத் தேர்தலிலும் எப்படி வாக்குகள் பெறுவதற்காக வாக்குறுதிகள் கொடுக் கப்படுமோ, அதுபோல சற்றும் குறையாத நிலையில் தான் இலங்கைத் தேர்தல்களும் நடக்கின்றன. ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் என் பது 60 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரு பிரச்சனை. அதை தீர்ப்பதற்கான அணுகு முறைகளை ஒவ் வொரு முறையும், ஒவ்வொரு வடி வில் ஆளும் வர்க்கக் கட்சிகளைச் சேர்ந்த வர்கள் வாக்குறுதிக் கொடுப்பார்கள். அது வும் பழகிப்போன செய்தியாகப் போய் விட்டது.
சந்திரிகா குமாரதுங்கா போர் எதிர்ப்பு பேசி ஆட்சிக்கு வந்தார். பதவிக்கு வந்த பிறகு தமிழர்கள் மீது போரை ஏவிவிட்டு, இனவாத தன்மையைக் காட் டினார். அதேபோல மகிந்த ராஜபக்சே ஆட்சிக்கு வரும்போது, சிங்கள தேசிய இனவெறியைத் தூண்டிவிட்டு தேர்தல் பரப்புரைச் செய்தார். ஆட்சிக்கு வந்த வுடன் போரை நடத்தி, இலங்கையின் பொருளாதாரத்தையும், மக்கள் வாழ் நிலையையும் ஒழித்து விட்டார். பொன் சேகா அதிபர் தேர்தலில் மகிந்தாவுக்கு எதிராக போட்டியிட்டக் காரணத்தினால், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள் ளாக்கப்பட இருக்கிறார். அதன் மூலம் போர் வெற்றியை மகிந்தா கையெடுக்கலாம் என்றாலும், தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. கூடுதலாக சிங்கள பவுத்த பிக்கு மாணவர்களை, காவல் துறையில் வைத்து மகிந்தா அரசாங்கம் அடித்து வைக்கிறது. அப்படி இருந்த போதும், சிங்கள மக்கள் மத்தியில் பெரிய அளவில் வெறுப்பு, ஆட்சியாளர் மீது உருவானதா என்று தெரியவில்லை. பொன்சேகாவின் கைதும், புத்த பிக்கு மாணவர்களை அடித்து துவைப்பதும் மகிந்தாவின் பெருமைகளை கேள்விக் கேட்கின்றன. அதாவது தமிழர்களை எதிர்த்து போரிட்டு வெல்வது தான் தனது லட்சியம் என்ற சிங்கள இனவாத தன்மையை இனி மேலும் ராஜபக்சே கூறி ஏமாற்ற முடியாது. விடுதலைப் புலிகளை போரில் வெற்றி பெற்று, பயங்கரவாதத்தை தோற்கடித்து விட்டோம் என்று வீராப்புக் கூறிக் கொண்டு, பயங்கரவாத எதிர்ப்பு மட்டுமே தன்னுடைய கொள்கை என்று இனியும் மகிந்தா பீற்றிக் கொள்ள முடியுமா? சிங்களர்கள் மீதும் தாக்குதல்களை குறிவைத்துச் செய்யக் கூடிய மகிந்தாவின் ஆட்சி, ஒரு குறிப்பிட்ட கும்பல் தனது அதிகார வெறிக்காக நடத்தப்படும் ஆட்சி தான் என்பது அம்பலமாகி நிற்கிறது.
மகிந்தாவின் இத்தகைய செயல்பாடுகள் அனைத்து நாட்டு சமூகத்தை, அவர் பக்கம் ஈர்க்கவில்லை. மேற்கத்திய நாடுகளும், ஐ.நா.வும் மீண்டும், மீண்டும் கூறி வரும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி இந்திய அரசும், சீன அரசும் கூட இப்போது எதிர்ப்புத் தெரிவிப்பது இல்லை என்று செய்தி வெளிவருகிறது. நேற்று வரை மகிந்தா ஆட்சிக்கு ஆதரவாக, ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் பேசி வந்த இந்திய அரசும், சீன அரசும் இப்போது மௌனம் சாதிப்பதே ஆச்சரி யமான செய்தி தான்.
மனிதஉரிமைகள், கருத்துரிமை, சுதந்திர மான ஊடக உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை செயல்படுத்துவதற்கு எந்தவொரு முயற்சியும் எடுக்காத ஒரு அரசாங்கம், தனது அரசியல் தந்திரமாக அவசரகால அரசியலை பயன்படுத்தி வருகிறது என்பதாக இந்திய ராணுவத்தில் உளவு தலைமையாக இருந்த கர்னல் ஹரிஹரன் கூறியுள்ளார். அடிப்படையில் தமிழர்களின் இனப்பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு எந்தவொரு மனோபலமும் இல்லாத ஒரு சிங்கள அரசாங்கம், தங் களுக்குள்ளேயே பிரச்சனைகளை உரு வாக்கிக் கொள்வதும், அதிலேயே மூழ்கி விடுவதும் தான் இன்றைய நிலை.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 196 பேர் நேரடி உறுப்பினர்களாக தேர்ந் தெடுக்கப்படுவார்கள். இதில் மகிந்தா தலைமையிலான ஐக்கிய மக்கள் விடு தலை கூட்டணி பெரும்பான்மையை கைப்பற்றுவதற்கான அனைத்து தந்திரங்களையும் மகிந்தா செய்துள்ளார் என்கிறார்கள். விகிதாச்சார முறைப்படி தேசிய பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, போட்டியிடும் கட்சிகள் வாங்கியுள்ள வாக்குகள் விழுக்காடுகளை வைத்து தேர்ந்தெடுக்கப்படும் 29 உறுப்பினர்களையும் சேர்த்து, முழுமை யான எண்ணிக்கையை நாடாளு மன்றத்திற்கு உருவாக்குவார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய சவால் களைச் சந்திக்கிறது. இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோரது தலைமையை எதிர்த்து, வெளியே
சென்று புதிய அமைப்புகளை உருவாக் கிக் கொண்டவர்கள் கடுமையான விமர்சனங்களை பரப்பி வருகிறார்கள். அவர்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் குறிப்பிட்டு சொல் லப்பட வேண்டியவர்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜி லிங்கம், கஜேந்திரன் போன்றோர் செய்கின்ற பரப்புரைகள், மகிந்தாவை எதிர்த்தோ, டக்ளஸ் தேவானந்தத்தை எதிர்த்தோ இருப்பதை விட சம்பந் தத்தையும், சுரேஷையும் எதிர்த்து அதிக மாக இருக்கின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் வடக்கிலும், கிழக்கிலும் அதிகமான ஈர்ப்பை வைத்திருந்தார்கள். அதனால் தான் அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டுக் கொண்ட தற்கிணங்க, தமிழ் மக்கள் பொன்சேகா விற்கு அதிகமான வாக்குகளை அளித் தார்கள் என்பதை மகிந்தா அரசாங்கம் கவனித்துக் கொண்டேயிருந்தது. அதை யொட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கின்ற செல்வாக்கை, எப்படியாவது உடைக்க வேண்டும் என்பது மகிந்தா கூட்டணியின் திட்டமாக இருக்கிறது. இயல்பாகவே வெளியேறிச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்வு பூர்வமான விமர்சனங்களை செய்து வந்தாலும், அவர்களது வாக்குப் பிரிப்பு மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல வீனப்படுத்தப்படும். பலவீனப்படுத் தப்படும் இடங்களில், டக்ளஸ் கட்சியும், பிள்ளையான் கட்சியும் அதிக வாக்குகளை பெற முடியும். இவ்வாறு தான் ராஜபக்சே திட்டமிடுகிறார். இத்தகைய திட்டத்தை தமிழ் மக்கள் எந்த அளவுக்கு புரிந்துக் கொண்டு செயல்படுத்த முடியும் என்ற கேள்வியும் விவாதமாக இருக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழம் என்ற கொள்கையை கைவிட்டு விட் டது என்பது ஒரு விமர்சனம். ஓஸ்லா மாநாட்டில் புலிகள் முன்வைத்த கருத்துக் கோப்பை ஏற்கவில்லை என்றும், இன் னொரு விமர்சனம். ஆனால் சம்பந்தரோ, சுரேஷோ கூறும்போது, தாங்கள்
சுயநிர்ணய உரிமைக்கான எந்தவொரு லட்சியத்தையும் விட்டு விடவில்லை என்கிறார்கள். எப்படியோ தமிழர் அமைப்புகளுக்குள் பிளவு ஏற்பட்டால், சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு இன்றைய தேர்தலை சந்திப்பதற்கு அதுவே எளிதாக ஆகிவிடும் என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது. அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது என்ற கொள்கைக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்களையும் கலந்துக் கொள்ள வேண்டும் என்று மட்ட கிளப் மாகாணத்தின் ஐ.தே.கா. வேட்பாளர் பஷீர் சுகதாவுத் கூறியுள்ளார். முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும், சிறுபான்மையினர் உரிமையை பறித்து அரசியல் சட்டம் உருவாகி விடுமோ என அஞ்சுவதாகவும் அவர் கூறி யுள்ளார். முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் அம்பாறை மாவட்டத்தில் அவர்களுக்கு அதிக நிலங்கள் சொந்தமாக இல்லை என்பதால் அரசு சிங்கள காலணியமயமாக ஆக்கிவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. போருக்குப் பிறகு முஸ் லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் மத்தியில் நல்லிணக்கம் கூடி வருகிறது என்றும் கூறுகிறார்கள். இருவரும் இருபெரும் சிறுபான்மை சமூகங்கள் என்பதாக அவர்கள் கருதுகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு, கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் அமைப்புகளுடன் இந்தத் தேர்தலில் தோழமையை வைத்துக் கொண்டுள்ளது.
மேற்கண்ட செய்திகள் சிங்கள ஆட்சியாளர்களின், பிளவுப்படுத்தி வெல்லும் சதியை முறியடிக்குமா என்ற கேள்வியுடன், இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இன்றைய இலங்கையின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட, நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கின்ற குறைவான இடத்தில், தமி ழர்கள் எப்படி விவேகமாக காய் நகர்த்தப் போகிறார்கள் என்ற கவலை நமக்கு எழுகிறது.
சந்திரிகா குமாரதுங்கா போர் எதிர்ப்பு பேசி ஆட்சிக்கு வந்தார். பதவிக்கு வந்த பிறகு தமிழர்கள் மீது போரை ஏவிவிட்டு, இனவாத தன்மையைக் காட் டினார். அதேபோல மகிந்த ராஜபக்சே ஆட்சிக்கு வரும்போது, சிங்கள தேசிய இனவெறியைத் தூண்டிவிட்டு தேர்தல் பரப்புரைச் செய்தார். ஆட்சிக்கு வந்த வுடன் போரை நடத்தி, இலங்கையின் பொருளாதாரத்தையும், மக்கள் வாழ் நிலையையும் ஒழித்து விட்டார். பொன் சேகா அதிபர் தேர்தலில் மகிந்தாவுக்கு எதிராக போட்டியிட்டக் காரணத்தினால், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள் ளாக்கப்பட இருக்கிறார். அதன் மூலம் போர் வெற்றியை மகிந்தா கையெடுக்கலாம் என்றாலும், தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. கூடுதலாக சிங்கள பவுத்த பிக்கு மாணவர்களை, காவல் துறையில் வைத்து மகிந்தா அரசாங்கம் அடித்து வைக்கிறது. அப்படி இருந்த போதும், சிங்கள மக்கள் மத்தியில் பெரிய அளவில் வெறுப்பு, ஆட்சியாளர் மீது உருவானதா என்று தெரியவில்லை. பொன்சேகாவின் கைதும், புத்த பிக்கு மாணவர்களை அடித்து துவைப்பதும் மகிந்தாவின் பெருமைகளை கேள்விக் கேட்கின்றன. அதாவது தமிழர்களை எதிர்த்து போரிட்டு வெல்வது தான் தனது லட்சியம் என்ற சிங்கள இனவாத தன்மையை இனி மேலும் ராஜபக்சே கூறி ஏமாற்ற முடியாது. விடுதலைப் புலிகளை போரில் வெற்றி பெற்று, பயங்கரவாதத்தை தோற்கடித்து விட்டோம் என்று வீராப்புக் கூறிக் கொண்டு, பயங்கரவாத எதிர்ப்பு மட்டுமே தன்னுடைய கொள்கை என்று இனியும் மகிந்தா பீற்றிக் கொள்ள முடியுமா? சிங்களர்கள் மீதும் தாக்குதல்களை குறிவைத்துச் செய்யக் கூடிய மகிந்தாவின் ஆட்சி, ஒரு குறிப்பிட்ட கும்பல் தனது அதிகார வெறிக்காக நடத்தப்படும் ஆட்சி தான் என்பது அம்பலமாகி நிற்கிறது.
மகிந்தாவின் இத்தகைய செயல்பாடுகள் அனைத்து நாட்டு சமூகத்தை, அவர் பக்கம் ஈர்க்கவில்லை. மேற்கத்திய நாடுகளும், ஐ.நா.வும் மீண்டும், மீண்டும் கூறி வரும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி இந்திய அரசும், சீன அரசும் கூட இப்போது எதிர்ப்புத் தெரிவிப்பது இல்லை என்று செய்தி வெளிவருகிறது. நேற்று வரை மகிந்தா ஆட்சிக்கு ஆதரவாக, ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் பேசி வந்த இந்திய அரசும், சீன அரசும் இப்போது மௌனம் சாதிப்பதே ஆச்சரி யமான செய்தி தான்.
மனிதஉரிமைகள், கருத்துரிமை, சுதந்திர மான ஊடக உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை செயல்படுத்துவதற்கு எந்தவொரு முயற்சியும் எடுக்காத ஒரு அரசாங்கம், தனது அரசியல் தந்திரமாக அவசரகால அரசியலை பயன்படுத்தி வருகிறது என்பதாக இந்திய ராணுவத்தில் உளவு தலைமையாக இருந்த கர்னல் ஹரிஹரன் கூறியுள்ளார். அடிப்படையில் தமிழர்களின் இனப்பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு எந்தவொரு மனோபலமும் இல்லாத ஒரு சிங்கள அரசாங்கம், தங் களுக்குள்ளேயே பிரச்சனைகளை உரு வாக்கிக் கொள்வதும், அதிலேயே மூழ்கி விடுவதும் தான் இன்றைய நிலை.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 196 பேர் நேரடி உறுப்பினர்களாக தேர்ந் தெடுக்கப்படுவார்கள். இதில் மகிந்தா தலைமையிலான ஐக்கிய மக்கள் விடு தலை கூட்டணி பெரும்பான்மையை கைப்பற்றுவதற்கான அனைத்து தந்திரங்களையும் மகிந்தா செய்துள்ளார் என்கிறார்கள். விகிதாச்சார முறைப்படி தேசிய பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, போட்டியிடும் கட்சிகள் வாங்கியுள்ள வாக்குகள் விழுக்காடுகளை வைத்து தேர்ந்தெடுக்கப்படும் 29 உறுப்பினர்களையும் சேர்த்து, முழுமை யான எண்ணிக்கையை நாடாளு மன்றத்திற்கு உருவாக்குவார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய சவால் களைச் சந்திக்கிறது. இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோரது தலைமையை எதிர்த்து, வெளியே
சென்று புதிய அமைப்புகளை உருவாக் கிக் கொண்டவர்கள் கடுமையான விமர்சனங்களை பரப்பி வருகிறார்கள். அவர்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் குறிப்பிட்டு சொல் லப்பட வேண்டியவர்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜி லிங்கம், கஜேந்திரன் போன்றோர் செய்கின்ற பரப்புரைகள், மகிந்தாவை எதிர்த்தோ, டக்ளஸ் தேவானந்தத்தை எதிர்த்தோ இருப்பதை விட சம்பந் தத்தையும், சுரேஷையும் எதிர்த்து அதிக மாக இருக்கின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் வடக்கிலும், கிழக்கிலும் அதிகமான ஈர்ப்பை வைத்திருந்தார்கள். அதனால் தான் அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டுக் கொண்ட தற்கிணங்க, தமிழ் மக்கள் பொன்சேகா விற்கு அதிகமான வாக்குகளை அளித் தார்கள் என்பதை மகிந்தா அரசாங்கம் கவனித்துக் கொண்டேயிருந்தது. அதை யொட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கின்ற செல்வாக்கை, எப்படியாவது உடைக்க வேண்டும் என்பது மகிந்தா கூட்டணியின் திட்டமாக இருக்கிறது. இயல்பாகவே வெளியேறிச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்வு பூர்வமான விமர்சனங்களை செய்து வந்தாலும், அவர்களது வாக்குப் பிரிப்பு மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல வீனப்படுத்தப்படும். பலவீனப்படுத் தப்படும் இடங்களில், டக்ளஸ் கட்சியும், பிள்ளையான் கட்சியும் அதிக வாக்குகளை பெற முடியும். இவ்வாறு தான் ராஜபக்சே திட்டமிடுகிறார். இத்தகைய திட்டத்தை தமிழ் மக்கள் எந்த அளவுக்கு புரிந்துக் கொண்டு செயல்படுத்த முடியும் என்ற கேள்வியும் விவாதமாக இருக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழம் என்ற கொள்கையை கைவிட்டு விட் டது என்பது ஒரு விமர்சனம். ஓஸ்லா மாநாட்டில் புலிகள் முன்வைத்த கருத்துக் கோப்பை ஏற்கவில்லை என்றும், இன் னொரு விமர்சனம். ஆனால் சம்பந்தரோ, சுரேஷோ கூறும்போது, தாங்கள்
சுயநிர்ணய உரிமைக்கான எந்தவொரு லட்சியத்தையும் விட்டு விடவில்லை என்கிறார்கள். எப்படியோ தமிழர் அமைப்புகளுக்குள் பிளவு ஏற்பட்டால், சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு இன்றைய தேர்தலை சந்திப்பதற்கு அதுவே எளிதாக ஆகிவிடும் என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது. அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது என்ற கொள்கைக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்களையும் கலந்துக் கொள்ள வேண்டும் என்று மட்ட கிளப் மாகாணத்தின் ஐ.தே.கா. வேட்பாளர் பஷீர் சுகதாவுத் கூறியுள்ளார். முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும், சிறுபான்மையினர் உரிமையை பறித்து அரசியல் சட்டம் உருவாகி விடுமோ என அஞ்சுவதாகவும் அவர் கூறி யுள்ளார். முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் அம்பாறை மாவட்டத்தில் அவர்களுக்கு அதிக நிலங்கள் சொந்தமாக இல்லை என்பதால் அரசு சிங்கள காலணியமயமாக ஆக்கிவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. போருக்குப் பிறகு முஸ் லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் மத்தியில் நல்லிணக்கம் கூடி வருகிறது என்றும் கூறுகிறார்கள். இருவரும் இருபெரும் சிறுபான்மை சமூகங்கள் என்பதாக அவர்கள் கருதுகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு, கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் அமைப்புகளுடன் இந்தத் தேர்தலில் தோழமையை வைத்துக் கொண்டுள்ளது.
மேற்கண்ட செய்திகள் சிங்கள ஆட்சியாளர்களின், பிளவுப்படுத்தி வெல்லும் சதியை முறியடிக்குமா என்ற கேள்வியுடன், இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இன்றைய இலங்கையின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட, நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கின்ற குறைவான இடத்தில், தமி ழர்கள் எப்படி விவேகமாக காய் நகர்த்தப் போகிறார்கள் என்ற கவலை நமக்கு எழுகிறது.
Sunday, March 28, 2010
படுகொலைகளுக்காக ஒரு முதல்வர் விசாரிக்கப்படலாமா?
குஜராத் மாநிலத்தின் முதலமைச்
சர் நரேந்திர மோடி நேற்று சிறப்பு புல னாய்வு குழு முன் தோன்றி பல்வேறு கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டார் என்று செய்தி வெளியாயின. இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் தோற்றுவித்தது. 2002ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த படுகொலைகளுக்காக 8 ஆண்டுகள் கழித்து அந்த மாநிலத்தின் முதல்வர் விசாரிக்கப்படுகிறார். நேற்று மதியம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட மோடியின் வயது 59. அவர் விசாரிக் கப்படுவதற்கு காரணமாக இருந்த படு கொலைகள் எண்ணிக்கை 70. மக்கள் மீதான படுகொலைகளுக்காக, அதாவது குற்றயியல் வழக்குகளுக்காக ஒரு முதல மைச்சர் முக்கியமாக விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறார் என்றால், அதுவும் அவரும், அவரது நிர்வாகமும், அவரது தலைமையிலான மாநில அரசாங்கமும் படுகொலைகளுக்கு உதவி செய்து, ஒத்துழைத்தனர் என்ற குற்றச்சாட்டில்
விசாரிக்கப்படுகிறார் என்றால், அது நரேந்திர மோடியாக மட்டும் தான் இருக் கிறார் என்று தெரிகிறது. குறிப்பாக குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகம தாபாத்தில் இருக்கும் ஒரு பகுதியில் நடந்த படுகொலைகளைப் பற்றிய விசா ரணையே அது.
2002ம் ஆண்டில் குல்பர்கா சமூகத்தில் நடந்த பெரும் கலவரத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரே மற்றும் 69 பேர் கொல்லப்பட்டார்கள். அந்த முன் னாள் எம்.பி.யின் மனைவியான ஷகியா ஜாப்ரே கொடுத்த புகாரின் பேரில், 8 ஆண்டுகள் இழுத்தடித்து இப்போது குற்றம் சாட்டப்பட்டவர் மோடி முதல் முறையாக விசாரிக்கப்படுகிறார். புகாரில் குறிப்பிட்டுள்ள படி, தனது அதிகாரிகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதிர்கள் என்று மோடி உத்தரவிட்டார் என்பது முக்கியக் குற்றச்சாட்டு. முதல்வர் நாற் காலியில் அமர்ந்திருக்கும் போதே படுகொலைகளுக்காக விசாரிக்கப்படும் முதல் முதல்வர் நரேந்திர மோடி தான் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. ஏற்கனவே மார்ச் 21ம் நாள் விசா ரணைக்கு மறுத்த மோடி, நேற்று விசா ரணையை சந்தித்திருக்கிறார். அவருடன் 62 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதில் மோடி அரசின் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், மூத்த அரசு அதிகாரிகள் அடக்கம். இது ஒரு அர சாங்கத்திற்கு கிடைத்த அவமரியாதை என்கிறார் மோடி. பா.ஜ.க.விற்கு மானம் இருக்குமானால், மோடியை முதல்வர் பொறுப்பிலிருந்து இறக்கி விட்டு விசா ரணைக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்கிறது காங்கிரஸ். பிரபல மதச்சார் பற்றவாதி, மதவெறி எதிர்ப்பு ஆங்கில ஏட்டை நடத்தும் டீஸ்டா செட்டல் வாட் இதை ஒரு முக்கியமான முன்னேற்றம் என்று குறிப்பிடுகிறார்.
படுகொலைகளில் மோடியின் நேர டியான பங்கெடுப்புப் பற்றி, ஒரு ஆங்கில ஏடு புலனாய்வு செய்தது. அதை அவர்கள் 2007ம் ஆண்டு அக்டோபர் 25,27 தேதிகளில் வெளியிட்டார்கள். அவர்கள் பதிவு செய்திருந்த நாடாக் களை தேசிய மனிதஉரிமை ஆணை யத்தின் உத்தரவுப்படி சி.பி.ஐ. அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொண்டது. குஜராத் உயர்நீதிமன்றமும், இந்தியாவின் உச்சநீதிமன்றமும் அந்த சாட்சியங்களை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள் ளலாம் என்று உத்தரவிட்டது. அதில் உள்ள ஆதாரங்களை பொதுநலன் கருதி, பாதிக்கப்பட்டோருக்காக பணியாற்றும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட புலனாய்வு அம்பலப் படுத்தலில் வெளியாகியுள்ள ஆதாரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. பாபு பஜ்ரங்கி பட்டேல் என்பவர், படுகொலையில் நேரடியாக மோடிக்கு முதன்மைப் பாத் திரம் இருந்தது என்று பேசியிருக்கிறார். மோடியின் கட்டளைகளால், காவல்துறை இயந்திரம் செயல்படாமல் ஆக்கப்பட்டது என்றும் ஒப்புக்கொண்டிருக்கிறார். நீதித் துறை குழப்பி விடப்பட்டது என்பதாக கூறுகிறார். நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த படுகொலைகள், கர்னக்கொடூரமான நிகழ்வுகளால் நிரப்பட்டிருந்தது. அதில் கவுசர் பானு என்ற கர்ப்பமாகியிருந்த முஸ்லிம் பெண் மணியின் வயிறு கிழிக்கப்பட்டு, குழந்தை யின் கரு வெட்டப்பட்டதை பாபு பஜ்ரங்கி ஒப்புதல் வாக்குமூலமாக அந்த இதழின் காணொளி நாடாவில் கூறியிருந்தார். அதை நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் பயன்படுத்தக் கூடாது என்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்ற கேள்வி ஒருபுறம் நிற்கிறது.
அடுத்த சாட்சியாக அரவிந்த் பாண் டியா என்ற அரசு வழக்கறிஞர் தனது வாக்குமூலத்தைத் தருகிறார். அதில் குஜராத் மாநிலத்தின் முழுமையான குற்றயியல் நீதித்துறை கட்டமைப்பும், மோடியால் நேரடியாக உடைக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
எம்.எஸ்.பல்கலைக்கழகத்தின் கணக்காயரான திமாந்த் பட் என்பவர், மோடியின் நேரடி பங்கு பற்றி இன்னொரு ஆதாரத்தைக் கூறியுள்ளார். 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி இரவு, கோத்ரா விபத்தையொட்டி நடத்தப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் கூட்டத்தில் மோடி கலந்துக் கொண்டது பற்றி விளக்கியுள்ளார்.
கோத்ராவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட் கூறும்போது, வி.எச்.பி.யின் பந்தில் 3 நாள் எடுத்துக் கொண்டு, அதற்குள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்யும் படி மோடி உத்தரவிட்டதை அம்பலப்படுத்துகிறார்.
அதேபோல அகமதாபாத் நகர வி.எச்.பி. தலைவரான ராஜேந்திர வியாஸ், கோத்ராவில் எரிக்கப்பட்ட எஸ்6 பெட்டி இருந்த சபர்மதி விரைவு வண்டிக்கு, கரசேவகர்களுக்கு பொறுப்பெடுத்திருந்தது தான் தான் என்றும், அந்த வண்டியில் ஏறிய கர சேவகர்கள் எவ்வளவு மோசமாக நடந்துக் கொண்டார்கள் என்றும் பகிரங்கமாக அந்த காணொளியில் போட்டு உடைக்கிறார்.
நரோடா பாட்டியா பகுதியைச்
சேர்ந்த சுரேஷ் ரிச்சர்டு சாரா என்பவர், படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஒருவர். 2002ம் ஆண்டில் பிப்ரவரி 28ம் நாள், படுகொலைகளையும், பாலியல் வன்புணர்ச்சிகளையும் செய்த கொடுமதியாளர்களை மோடி நேரில் பாட்டியாவில் மாலையில் சந்தித்து, மாலை அணிவித்து நல்ல பணியை முடித்தீர்கள் என பாராட்டினார் என்று சுரேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வி.எச்.பி.சேர்ந்த ரமேஷ் தாவே, கோத்ரா நிகழ்வுக்கு முன்பே அதாவது பிப்ரவரி 27க்கு முன்பே வெடிகுண்டுகளும், திரிசூலங்களும் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது என்று அந்த பதிவில் கூறியுள்ளார். வி.எச்.பி. ஜில்லா சஞ்ஜோயக் சபர்கந்தாவான தாவால் பட்டேல், கோத்ரா ரயில் எரிப்புக்கு முன்பே விநியோகிக்கப்பட்ட ஆயுதங்கள் பற்றி விளக்கியுள்ளார். குஜராத் வி.எச்.பி. விபக் பிராமுக்கான அணில் பட்டேல், ஆயுத விநியோகம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன்பே நடந்ததாக உறுதி கூறியுள்ளார்.
வி.எச்.பி. யின் தலைமை மெக்சா னாவான திலிப் திரிவேடி, இன்னொரு புறம் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் இந்த ஊடகத்தின் கேமரா முன்னால் சில உண்மைகளை பகிரங்கமாக உடைத்துள்ளார். அதில் குஜராத் மாநிலம் முழுவதும் நடந்த 1,800 கலவரம் சம்மந்தப்பட்ட வழக்குகளை இல்லாமல் செய்தவர் தான் தான் என பெருமையடித்துக் கொண்டார். அதேபோல 1,700 கலவர வழக்குகளை பொய்யான சாட்சிகளை உருவாக்கி தீர்த்து வைத்ததாகவும், அதில் 12 வழக்குகளில் மட்டுமே தண்டனை வாங்கிக் கொடுத்ததாகவும், ஆதார பூர்வமாக கூறியுள்ளார்.
மேற்கண்ட சில உண்மைகளே குஜராத்தில் 2002ம் ஆண்டில் நடந்த கொடுமைகளை எடுத்து வைக்க போதுமானவையாக இருக்கின்றன. இப்போது நரேந்திர மோடி என்ற ஒரு முதலமைச்சர், தனது மாநிலத்திலேயே முன்கூட்டி தயாரிக்கப்பட்ட ஒரு ஆயுதந்தாங்கிய மதவெறித் தாக்குதலை நடத்துவதற்காக, செயற்கையாக ஒரு சூழலை ஏற்படுத்தியதும், திட்டமிட்டு அதையே பயன்படுத்தி மாநிலமெங்கும் மதவெறிக் கலவரத்தையும், படு கொலைகளையும் செய்து,3,000 முஸ்லிம்களை வரை பலிவாங்கியதையும், ஆயிரக்கணக்கான கோடி பெருமான சொத்துக்களை அழித்ததையும் நம்மால் உணரமுடிகிறது. ஆனால் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நரேந்திர மோடி தான் என்பதை நாம் மறக்க முடியாது. இது இந்தியாவின் நாடாளுமன்ற பாதையை கேள்விக் குறியாக்குமா?
சர் நரேந்திர மோடி நேற்று சிறப்பு புல னாய்வு குழு முன் தோன்றி பல்வேறு கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டார் என்று செய்தி வெளியாயின. இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் தோற்றுவித்தது. 2002ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த படுகொலைகளுக்காக 8 ஆண்டுகள் கழித்து அந்த மாநிலத்தின் முதல்வர் விசாரிக்கப்படுகிறார். நேற்று மதியம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட மோடியின் வயது 59. அவர் விசாரிக் கப்படுவதற்கு காரணமாக இருந்த படு கொலைகள் எண்ணிக்கை 70. மக்கள் மீதான படுகொலைகளுக்காக, அதாவது குற்றயியல் வழக்குகளுக்காக ஒரு முதல மைச்சர் முக்கியமாக விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறார் என்றால், அதுவும் அவரும், அவரது நிர்வாகமும், அவரது தலைமையிலான மாநில அரசாங்கமும் படுகொலைகளுக்கு உதவி செய்து, ஒத்துழைத்தனர் என்ற குற்றச்சாட்டில்
விசாரிக்கப்படுகிறார் என்றால், அது நரேந்திர மோடியாக மட்டும் தான் இருக் கிறார் என்று தெரிகிறது. குறிப்பாக குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகம தாபாத்தில் இருக்கும் ஒரு பகுதியில் நடந்த படுகொலைகளைப் பற்றிய விசா ரணையே அது.
2002ம் ஆண்டில் குல்பர்கா சமூகத்தில் நடந்த பெரும் கலவரத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரே மற்றும் 69 பேர் கொல்லப்பட்டார்கள். அந்த முன் னாள் எம்.பி.யின் மனைவியான ஷகியா ஜாப்ரே கொடுத்த புகாரின் பேரில், 8 ஆண்டுகள் இழுத்தடித்து இப்போது குற்றம் சாட்டப்பட்டவர் மோடி முதல் முறையாக விசாரிக்கப்படுகிறார். புகாரில் குறிப்பிட்டுள்ள படி, தனது அதிகாரிகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதிர்கள் என்று மோடி உத்தரவிட்டார் என்பது முக்கியக் குற்றச்சாட்டு. முதல்வர் நாற் காலியில் அமர்ந்திருக்கும் போதே படுகொலைகளுக்காக விசாரிக்கப்படும் முதல் முதல்வர் நரேந்திர மோடி தான் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. ஏற்கனவே மார்ச் 21ம் நாள் விசா ரணைக்கு மறுத்த மோடி, நேற்று விசா ரணையை சந்தித்திருக்கிறார். அவருடன் 62 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதில் மோடி அரசின் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், மூத்த அரசு அதிகாரிகள் அடக்கம். இது ஒரு அர சாங்கத்திற்கு கிடைத்த அவமரியாதை என்கிறார் மோடி. பா.ஜ.க.விற்கு மானம் இருக்குமானால், மோடியை முதல்வர் பொறுப்பிலிருந்து இறக்கி விட்டு விசா ரணைக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்கிறது காங்கிரஸ். பிரபல மதச்சார் பற்றவாதி, மதவெறி எதிர்ப்பு ஆங்கில ஏட்டை நடத்தும் டீஸ்டா செட்டல் வாட் இதை ஒரு முக்கியமான முன்னேற்றம் என்று குறிப்பிடுகிறார்.
படுகொலைகளில் மோடியின் நேர டியான பங்கெடுப்புப் பற்றி, ஒரு ஆங்கில ஏடு புலனாய்வு செய்தது. அதை அவர்கள் 2007ம் ஆண்டு அக்டோபர் 25,27 தேதிகளில் வெளியிட்டார்கள். அவர்கள் பதிவு செய்திருந்த நாடாக் களை தேசிய மனிதஉரிமை ஆணை யத்தின் உத்தரவுப்படி சி.பி.ஐ. அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொண்டது. குஜராத் உயர்நீதிமன்றமும், இந்தியாவின் உச்சநீதிமன்றமும் அந்த சாட்சியங்களை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள் ளலாம் என்று உத்தரவிட்டது. அதில் உள்ள ஆதாரங்களை பொதுநலன் கருதி, பாதிக்கப்பட்டோருக்காக பணியாற்றும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட புலனாய்வு அம்பலப் படுத்தலில் வெளியாகியுள்ள ஆதாரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. பாபு பஜ்ரங்கி பட்டேல் என்பவர், படுகொலையில் நேரடியாக மோடிக்கு முதன்மைப் பாத் திரம் இருந்தது என்று பேசியிருக்கிறார். மோடியின் கட்டளைகளால், காவல்துறை இயந்திரம் செயல்படாமல் ஆக்கப்பட்டது என்றும் ஒப்புக்கொண்டிருக்கிறார். நீதித் துறை குழப்பி விடப்பட்டது என்பதாக கூறுகிறார். நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த படுகொலைகள், கர்னக்கொடூரமான நிகழ்வுகளால் நிரப்பட்டிருந்தது. அதில் கவுசர் பானு என்ற கர்ப்பமாகியிருந்த முஸ்லிம் பெண் மணியின் வயிறு கிழிக்கப்பட்டு, குழந்தை யின் கரு வெட்டப்பட்டதை பாபு பஜ்ரங்கி ஒப்புதல் வாக்குமூலமாக அந்த இதழின் காணொளி நாடாவில் கூறியிருந்தார். அதை நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் பயன்படுத்தக் கூடாது என்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்ற கேள்வி ஒருபுறம் நிற்கிறது.
அடுத்த சாட்சியாக அரவிந்த் பாண் டியா என்ற அரசு வழக்கறிஞர் தனது வாக்குமூலத்தைத் தருகிறார். அதில் குஜராத் மாநிலத்தின் முழுமையான குற்றயியல் நீதித்துறை கட்டமைப்பும், மோடியால் நேரடியாக உடைக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
எம்.எஸ்.பல்கலைக்கழகத்தின் கணக்காயரான திமாந்த் பட் என்பவர், மோடியின் நேரடி பங்கு பற்றி இன்னொரு ஆதாரத்தைக் கூறியுள்ளார். 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி இரவு, கோத்ரா விபத்தையொட்டி நடத்தப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் கூட்டத்தில் மோடி கலந்துக் கொண்டது பற்றி விளக்கியுள்ளார்.
கோத்ராவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட் கூறும்போது, வி.எச்.பி.யின் பந்தில் 3 நாள் எடுத்துக் கொண்டு, அதற்குள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்யும் படி மோடி உத்தரவிட்டதை அம்பலப்படுத்துகிறார்.
அதேபோல அகமதாபாத் நகர வி.எச்.பி. தலைவரான ராஜேந்திர வியாஸ், கோத்ராவில் எரிக்கப்பட்ட எஸ்6 பெட்டி இருந்த சபர்மதி விரைவு வண்டிக்கு, கரசேவகர்களுக்கு பொறுப்பெடுத்திருந்தது தான் தான் என்றும், அந்த வண்டியில் ஏறிய கர சேவகர்கள் எவ்வளவு மோசமாக நடந்துக் கொண்டார்கள் என்றும் பகிரங்கமாக அந்த காணொளியில் போட்டு உடைக்கிறார்.
நரோடா பாட்டியா பகுதியைச்
சேர்ந்த சுரேஷ் ரிச்சர்டு சாரா என்பவர், படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஒருவர். 2002ம் ஆண்டில் பிப்ரவரி 28ம் நாள், படுகொலைகளையும், பாலியல் வன்புணர்ச்சிகளையும் செய்த கொடுமதியாளர்களை மோடி நேரில் பாட்டியாவில் மாலையில் சந்தித்து, மாலை அணிவித்து நல்ல பணியை முடித்தீர்கள் என பாராட்டினார் என்று சுரேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வி.எச்.பி.சேர்ந்த ரமேஷ் தாவே, கோத்ரா நிகழ்வுக்கு முன்பே அதாவது பிப்ரவரி 27க்கு முன்பே வெடிகுண்டுகளும், திரிசூலங்களும் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது என்று அந்த பதிவில் கூறியுள்ளார். வி.எச்.பி. ஜில்லா சஞ்ஜோயக் சபர்கந்தாவான தாவால் பட்டேல், கோத்ரா ரயில் எரிப்புக்கு முன்பே விநியோகிக்கப்பட்ட ஆயுதங்கள் பற்றி விளக்கியுள்ளார். குஜராத் வி.எச்.பி. விபக் பிராமுக்கான அணில் பட்டேல், ஆயுத விநியோகம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன்பே நடந்ததாக உறுதி கூறியுள்ளார்.
வி.எச்.பி. யின் தலைமை மெக்சா னாவான திலிப் திரிவேடி, இன்னொரு புறம் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் இந்த ஊடகத்தின் கேமரா முன்னால் சில உண்மைகளை பகிரங்கமாக உடைத்துள்ளார். அதில் குஜராத் மாநிலம் முழுவதும் நடந்த 1,800 கலவரம் சம்மந்தப்பட்ட வழக்குகளை இல்லாமல் செய்தவர் தான் தான் என பெருமையடித்துக் கொண்டார். அதேபோல 1,700 கலவர வழக்குகளை பொய்யான சாட்சிகளை உருவாக்கி தீர்த்து வைத்ததாகவும், அதில் 12 வழக்குகளில் மட்டுமே தண்டனை வாங்கிக் கொடுத்ததாகவும், ஆதார பூர்வமாக கூறியுள்ளார்.
மேற்கண்ட சில உண்மைகளே குஜராத்தில் 2002ம் ஆண்டில் நடந்த கொடுமைகளை எடுத்து வைக்க போதுமானவையாக இருக்கின்றன. இப்போது நரேந்திர மோடி என்ற ஒரு முதலமைச்சர், தனது மாநிலத்திலேயே முன்கூட்டி தயாரிக்கப்பட்ட ஒரு ஆயுதந்தாங்கிய மதவெறித் தாக்குதலை நடத்துவதற்காக, செயற்கையாக ஒரு சூழலை ஏற்படுத்தியதும், திட்டமிட்டு அதையே பயன்படுத்தி மாநிலமெங்கும் மதவெறிக் கலவரத்தையும், படு கொலைகளையும் செய்து,3,000 முஸ்லிம்களை வரை பலிவாங்கியதையும், ஆயிரக்கணக்கான கோடி பெருமான சொத்துக்களை அழித்ததையும் நம்மால் உணரமுடிகிறது. ஆனால் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நரேந்திர மோடி தான் என்பதை நாம் மறக்க முடியாது. இது இந்தியாவின் நாடாளுமன்ற பாதையை கேள்விக் குறியாக்குமா?
Saturday, March 27, 2010
மோதல் சாவுகள் மனிதஉரிமை மீறல்களா?
கடந்த சில காலமாக மனிதஉரிமைகள் பற்றிய விவாதம், உலகெங்கிலும் முக்கிய மான ஒரு விவாதமாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு அரசாங்கமும் மனிதஉரிமை பிரச்சனைகளுக்காக தனியான கவனம் செலுத்தி வருவதை, உலகத்திற்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் அரசாங்கங்களின் மீது மனிதஉரிமை மீறல்கள் செய்வதாக எழுகின்ற குற்றச்சாட்டுகளும் அதிகமாக வந்துக் கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் சில பிரச்சனைகள் மீது ஒரு நாட்டின் அரசாங்கம், இன்னொரு நாட்டின் அரசாங்கத்தின் மீது மனிதஉரிமை மீறல் செய்ததாக குற்றம் சாட்டுவது என்பதும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதில் அரசாங்கங்கள் ஒன்றுக்கொன்று, தங்கள் நாட்டில் உள்ள கலகக்காரர்களுக்கு ஆயுத உதவி செய்ததாக இன்னொரு அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எந்த அர சாங்கமும் இப்படிப்பட்ட குற்றச்சாட் டுகளில் இருந்து தப்பித்து நிற்பதாகத் தெரியவில்லை. அரசாங்கங்கள் தங்கள் தலைமையில் வைத்திருக்கும் ராணுவமும், துணை ராணுவமும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாமல் இருப்பதும் இல்லை. அதிலும் முக்கியமாக ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் காவல்துறை செய்கின்ற மனிதஉரிமை மீறல்கள் அதிகமாக பட்டியல் போடப்படுகின்றன. ஏனென்றால் நிராயுதப் பாணியாக இருக்கின்ற பொதுமக்கள் மத்தியில் அன்றாடம் தங்களது சட்ட ஒழுங்கு பாது காப்புப் பணியை ஆற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் காவல்துறை யினர். அப்படிப்பட்ட பொறுப்பில் உள்ள மனிதர்கள் பிழைகள் செய்யும்போது, அத்தகைய தவறுகள் கடுமையாக விமர்சிக்கப்படுவது இயல்பு தான். அதிலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி குடிமக்களாக இருக்கும்போது, அத்தகைய குற்றங்கள் புரிபவர்கள் காவல்துறையாக இருந்தாலும், பொதுவாக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகிறார்கள்.
மேற்கத்திய நாடுகளில் இப்படிப் பட்ட மனிதஉரிமை மீறல்கள் பெரும் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப் படுகிறது. தனிமனித உரிமைகள் அங்கு மனித உரிமைகளாக உயர்த்திப்பிடிக்கப் படுகிறது. கீழ்த்திசை நாடுகளில் அதாவது வளரும் நாடுகளில் குறிப்பாக ஏழை நாடுகளில் இத்தகைய மனித உரிமை மீறல்கள், பொதுமக்கள் மீது பாயும்போது அதுவும் ஆயுதந்தாங்கிய அரசாங்கத்தின் காவலர்கள் செயல்களால் பாயும் போது, அழுகுரல் மட்டுமே ஏழைகளின் அடைக்கலமாகயிருக்கிறது.
ஊடகங்களிலும், இன்றைக்கு பெரிய அளவுக்கு ஈர்க்கப்படும் செய்திகள் குறிப்பாக கடத்தல், பாலியல் வன்முறை, காணாமல் போதல், சித்ரவதை, நீதிவிசா ரணையற்ற கொலைகள் ஆகியவையாக இருக்கின்றன. அவையெல்லாம் இந்தி யாவில் இருக்கும் காவல்துறை அதி காரிகளாலும், பாதுகாப்புப் படையாலும் செய்யப்படும் போது அவை பரபரப்பு செய்திகளாக மாறுகின்றன. கடந்த ஒரு மாதக் காலத்திற்குள் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் டைம்ஸ், டைம் ஆகிய பிரபல இதழ்களில் இந்தியாவில் நடக்கும் மோதல் சாவுகள் பற்றி தீவிரமான விவாதம் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1,000 பேர் வரை இந்தியாவில் மோதல் சாவுகளில் காவல் துறையால் கொல்லப்படுகிறார்கள் என்பது அந்த அமெரிக்க ஏடுகளில் குறிப்பு. பயங்கரவாதிகள் தொடங்கி சாதாரண சிறு திருடர்கள் வரை இந்தப் பட்டியலில் கொல்லப்படுகிறார்கள் என்று அந்த ஏடுகள் கூறுகின்றன. அத்தகைய மனித உரிமை மீறல்களை இந்திய காவல்துறையும், ராணுவமும் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன. அதில் குறைந்த பட்சம் சில வழக்குகளாவது போலி மோதல் சாவுகள் அல்லது போலி துப்பாக்கிச் சண்டை என்பதாக அவர்கள் வருணித்துள்ளார்கள். இந்தியாவில் இருக்கின்ற குறைந்தபட்ச தடவியல் புலனாய்வை வைத்து, இரண்டு புறமும் சோதித்து ஒரு தீர்மானகரமான முடிவுக்கு கொண்டுவரப்பட முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தி யாவின் ஊடகங்கள் காவல்துறை கொடுக் கும் அனைத்து அறிக்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்கின்றன என்று அந்த அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. அதுமட்டுமின்றி பயங்கரவாதத்தையும், குற்றங்களையும் கண்டு அச்சப்படக் கூடிய நடுத்தர வர்க்க பார்வையாளர்களில் பலர், இது போன்ற போலி மோதல்
சாவுகளை செய்த காவல்துறையின் நியாயப்படுத்தும் அறிக்கைகளைக் கண்டு அகமகிழ்கிறார்கள் என்பதாகவும் அந்த ஏடுகள் அங்கலாய்த்துள்ளன. அதேநேரத்தில் இந்திய திரைத்துறையும் போலி மோதல் சாவுகளை நடத்துகின்ற, காவல்துறை அதிகாரிகளை சிறப்பு மோதல் சாவு அதிகாரிகள் என்று முடிசூட்டுவதாக எழுதப்பட்டிருப்பது, இங்கும் பொருத்தமாகத் தான் இருக்கிறது. தமிழ் திரைப்படம் ஒன்றில் இதுபோன்ற போலி மோதல் சாவுகளை ஏற்படுத்தும் காவல்துறை அதிகாரியை, ஓகோ என புகழ்ந்து கதாநாயகனாக சித்தரித்தார்கள். அந்தப் பாத்திரத்தில் நடித்ததற்காகவே அந்த கதாநாயகனை அழைத்து ஒரு பெரிய காவல்துறை அதிகாரி, பாராட்டு தெரிவித்தார். இப்படியாக சூழல், மனித உரிமை மீறல்களை செய்வதை உற்சாகப்படுத்துகிறது. காவல்துறை
சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று நம்பக்கூடிய நமது மக்கள் மத்தியில், நீதி விசாரணை இல்லாத மரண தண்டனை வழங்க காவல் அதிகாரிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியை கேட்பதற்கான மனச்சாட்சி எழவில்லை.
தாங்கள் மோதல் சாவுகளில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணையின்றி நடுரோட்டில் சுட்டுக் கொன்றதை நியா யப்படுத்துவதற்காக, அந்த காவல்துறை அதிகாரிகள், தாங்கள் தற்காப்புக்காகத் தான் சுட்டோம் என்று கூறிவருகிறார்கள். ஆனாலும் அத்தகைய மோதல் சாவு கள் ஒரு மாஜிஸ்டிரேட்டால் விசாரிக் கப்பட வேண்டும். மரணம் சம்பவித்த உடனேயே போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட வேண்டும். அந்த போஸ்ட்மார்ட்டம் வீடியோ படமாக எடுக்கப்பட வேண்டும். பின்னால் ஒரு நாள் நீதிமன்ற விசாரணைக்கு உதவும் பொருட்டு இத்தனை ஏற்பாடுகளையும் காவல்துறையே செய்ய வேண்டும். மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டல்களைக் கூட, பலநேரம் பின்பற்றாமல் காவல்துறையே அந்த வழக்கின் மீது விசா ரணையை நடத்தி முடித்து வருகிறார்கள். அதற்கு மேலதிகாரிகளின் ஆசீர்வாதமும் கிடைத்து விடுகிறது.
டெல்லி அருகே நொய்டாவில் 2 பேர் இப்படிக் கொல்லப்பட்டதை அமெரிக்க ஏடான டைம் வெளியிட, சத் திஷ்கர் மாநிலம் சிங்கரம் பகுதியில் 19 ஆதிவாசி கிராமத்தவர்கள் கொல்லப் பட்டதை, அமெரிக்க ஏடான டைம்ஸ் வெளியிட்டது. இவற்றை அங் கொன்றும், இங்கொன்றும் நடக்கும் நிகழ்வுகள் என இந்திய அதிகாரிகள் வருணித்தார்கள். 1980களிலும், 1990 களிலும் அன்றாடம் இந்தியாவில் மோதல் சாவுகள் என்பது நிகழ்ந்ததாக அந்த ஏடுகள் வெளிப்படுத்தின. அதன் எண்ணிக்கையை கூறும்போது, கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு புள்ளி விவரப்படி 21,000 மோதல் சாவுகள் அந்த பத்தாண்டுகளில் நடந்துள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டு காவல்துறையும் இத் தகைய எண்ணிக்கையை உயர்த்துவதில் குறைவானர்கள் அல்ல என்று நிரூபித்துக் கொண்டிருப்பவர்கள். தமிழ்நாட்டில் அதற்கென்றே காவல்துறை அதிகாரிகள் ஒரு பாணியை பின்பற்றுகிறார்கள். அந்த ஒரே பாணி கொல்லப்பட்டவர் கையில் ஒரு வீச்சரிவாளையும், ஒரு வெடிகுண்டையும் கொடுத்து விடுகிறது. காவல்துறை பக்கத்தில் 2 அதிகாரிகளை காயக்கட்டுடன், மருத்துவமனையில் சேர்த்து விடுகிறது. இந்த நடைமுறை நேற்றும் கூட நடந்துள்ளது.
தேசிய மனிதஉரிமை ஆணையம், காவல் துறை நடத்தும் ஒவ்வொரு மோதல் சாவுகளையும் கிரிமினல் புல னாய்வு துறை மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை சுட்டுக் கொன்ற அதிகாரி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டல் கொடுத்துள்ளது. தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் வழிகாட்டல்களை நாம் ஏற்றுக்கொள்ளப்போகிறோமா? அல்லது சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவது என்ற பெயரில் துப்பாக்கி வைத்திருப்பவர் எந்த உயிரையும் பறிக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்போகிறோமா? இன் றைக்கு விட்டு விட்டால், நாளை வரலாறு இதை பதிவு செய்து பழி கூறாதா? மனிதஉயிர்களை மதிப்பது மனித உரிமைகளின் அடிப்படை தேவை என்பதை எப்போது உணரப் போகிறோம்?
மேற்கத்திய நாடுகளில் இப்படிப் பட்ட மனிதஉரிமை மீறல்கள் பெரும் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப் படுகிறது. தனிமனித உரிமைகள் அங்கு மனித உரிமைகளாக உயர்த்திப்பிடிக்கப் படுகிறது. கீழ்த்திசை நாடுகளில் அதாவது வளரும் நாடுகளில் குறிப்பாக ஏழை நாடுகளில் இத்தகைய மனித உரிமை மீறல்கள், பொதுமக்கள் மீது பாயும்போது அதுவும் ஆயுதந்தாங்கிய அரசாங்கத்தின் காவலர்கள் செயல்களால் பாயும் போது, அழுகுரல் மட்டுமே ஏழைகளின் அடைக்கலமாகயிருக்கிறது.
ஊடகங்களிலும், இன்றைக்கு பெரிய அளவுக்கு ஈர்க்கப்படும் செய்திகள் குறிப்பாக கடத்தல், பாலியல் வன்முறை, காணாமல் போதல், சித்ரவதை, நீதிவிசா ரணையற்ற கொலைகள் ஆகியவையாக இருக்கின்றன. அவையெல்லாம் இந்தி யாவில் இருக்கும் காவல்துறை அதி காரிகளாலும், பாதுகாப்புப் படையாலும் செய்யப்படும் போது அவை பரபரப்பு செய்திகளாக மாறுகின்றன. கடந்த ஒரு மாதக் காலத்திற்குள் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் டைம்ஸ், டைம் ஆகிய பிரபல இதழ்களில் இந்தியாவில் நடக்கும் மோதல் சாவுகள் பற்றி தீவிரமான விவாதம் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1,000 பேர் வரை இந்தியாவில் மோதல் சாவுகளில் காவல் துறையால் கொல்லப்படுகிறார்கள் என்பது அந்த அமெரிக்க ஏடுகளில் குறிப்பு. பயங்கரவாதிகள் தொடங்கி சாதாரண சிறு திருடர்கள் வரை இந்தப் பட்டியலில் கொல்லப்படுகிறார்கள் என்று அந்த ஏடுகள் கூறுகின்றன. அத்தகைய மனித உரிமை மீறல்களை இந்திய காவல்துறையும், ராணுவமும் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன. அதில் குறைந்த பட்சம் சில வழக்குகளாவது போலி மோதல் சாவுகள் அல்லது போலி துப்பாக்கிச் சண்டை என்பதாக அவர்கள் வருணித்துள்ளார்கள். இந்தியாவில் இருக்கின்ற குறைந்தபட்ச தடவியல் புலனாய்வை வைத்து, இரண்டு புறமும் சோதித்து ஒரு தீர்மானகரமான முடிவுக்கு கொண்டுவரப்பட முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தி யாவின் ஊடகங்கள் காவல்துறை கொடுக் கும் அனைத்து அறிக்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்கின்றன என்று அந்த அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. அதுமட்டுமின்றி பயங்கரவாதத்தையும், குற்றங்களையும் கண்டு அச்சப்படக் கூடிய நடுத்தர வர்க்க பார்வையாளர்களில் பலர், இது போன்ற போலி மோதல்
சாவுகளை செய்த காவல்துறையின் நியாயப்படுத்தும் அறிக்கைகளைக் கண்டு அகமகிழ்கிறார்கள் என்பதாகவும் அந்த ஏடுகள் அங்கலாய்த்துள்ளன. அதேநேரத்தில் இந்திய திரைத்துறையும் போலி மோதல் சாவுகளை நடத்துகின்ற, காவல்துறை அதிகாரிகளை சிறப்பு மோதல் சாவு அதிகாரிகள் என்று முடிசூட்டுவதாக எழுதப்பட்டிருப்பது, இங்கும் பொருத்தமாகத் தான் இருக்கிறது. தமிழ் திரைப்படம் ஒன்றில் இதுபோன்ற போலி மோதல் சாவுகளை ஏற்படுத்தும் காவல்துறை அதிகாரியை, ஓகோ என புகழ்ந்து கதாநாயகனாக சித்தரித்தார்கள். அந்தப் பாத்திரத்தில் நடித்ததற்காகவே அந்த கதாநாயகனை அழைத்து ஒரு பெரிய காவல்துறை அதிகாரி, பாராட்டு தெரிவித்தார். இப்படியாக சூழல், மனித உரிமை மீறல்களை செய்வதை உற்சாகப்படுத்துகிறது. காவல்துறை
சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று நம்பக்கூடிய நமது மக்கள் மத்தியில், நீதி விசாரணை இல்லாத மரண தண்டனை வழங்க காவல் அதிகாரிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியை கேட்பதற்கான மனச்சாட்சி எழவில்லை.
தாங்கள் மோதல் சாவுகளில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணையின்றி நடுரோட்டில் சுட்டுக் கொன்றதை நியா யப்படுத்துவதற்காக, அந்த காவல்துறை அதிகாரிகள், தாங்கள் தற்காப்புக்காகத் தான் சுட்டோம் என்று கூறிவருகிறார்கள். ஆனாலும் அத்தகைய மோதல் சாவு கள் ஒரு மாஜிஸ்டிரேட்டால் விசாரிக் கப்பட வேண்டும். மரணம் சம்பவித்த உடனேயே போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட வேண்டும். அந்த போஸ்ட்மார்ட்டம் வீடியோ படமாக எடுக்கப்பட வேண்டும். பின்னால் ஒரு நாள் நீதிமன்ற விசாரணைக்கு உதவும் பொருட்டு இத்தனை ஏற்பாடுகளையும் காவல்துறையே செய்ய வேண்டும். மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டல்களைக் கூட, பலநேரம் பின்பற்றாமல் காவல்துறையே அந்த வழக்கின் மீது விசா ரணையை நடத்தி முடித்து வருகிறார்கள். அதற்கு மேலதிகாரிகளின் ஆசீர்வாதமும் கிடைத்து விடுகிறது.
டெல்லி அருகே நொய்டாவில் 2 பேர் இப்படிக் கொல்லப்பட்டதை அமெரிக்க ஏடான டைம் வெளியிட, சத் திஷ்கர் மாநிலம் சிங்கரம் பகுதியில் 19 ஆதிவாசி கிராமத்தவர்கள் கொல்லப் பட்டதை, அமெரிக்க ஏடான டைம்ஸ் வெளியிட்டது. இவற்றை அங் கொன்றும், இங்கொன்றும் நடக்கும் நிகழ்வுகள் என இந்திய அதிகாரிகள் வருணித்தார்கள். 1980களிலும், 1990 களிலும் அன்றாடம் இந்தியாவில் மோதல் சாவுகள் என்பது நிகழ்ந்ததாக அந்த ஏடுகள் வெளிப்படுத்தின. அதன் எண்ணிக்கையை கூறும்போது, கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு புள்ளி விவரப்படி 21,000 மோதல் சாவுகள் அந்த பத்தாண்டுகளில் நடந்துள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டு காவல்துறையும் இத் தகைய எண்ணிக்கையை உயர்த்துவதில் குறைவானர்கள் அல்ல என்று நிரூபித்துக் கொண்டிருப்பவர்கள். தமிழ்நாட்டில் அதற்கென்றே காவல்துறை அதிகாரிகள் ஒரு பாணியை பின்பற்றுகிறார்கள். அந்த ஒரே பாணி கொல்லப்பட்டவர் கையில் ஒரு வீச்சரிவாளையும், ஒரு வெடிகுண்டையும் கொடுத்து விடுகிறது. காவல்துறை பக்கத்தில் 2 அதிகாரிகளை காயக்கட்டுடன், மருத்துவமனையில் சேர்த்து விடுகிறது. இந்த நடைமுறை நேற்றும் கூட நடந்துள்ளது.
தேசிய மனிதஉரிமை ஆணையம், காவல் துறை நடத்தும் ஒவ்வொரு மோதல் சாவுகளையும் கிரிமினல் புல னாய்வு துறை மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை சுட்டுக் கொன்ற அதிகாரி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டல் கொடுத்துள்ளது. தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் வழிகாட்டல்களை நாம் ஏற்றுக்கொள்ளப்போகிறோமா? அல்லது சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவது என்ற பெயரில் துப்பாக்கி வைத்திருப்பவர் எந்த உயிரையும் பறிக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்போகிறோமா? இன் றைக்கு விட்டு விட்டால், நாளை வரலாறு இதை பதிவு செய்து பழி கூறாதா? மனிதஉயிர்களை மதிப்பது மனித உரிமைகளின் அடிப்படை தேவை என்பதை எப்போது உணரப் போகிறோம்?
Friday, March 26, 2010
பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா உண்மையில் விரும்புகிறதா?
இந்தியாவில் நடந்த மும்பை பயங் கரவாத தாக்குதல், உலக அரங்கில் பிரபலமான ஒரு தாக்குதல். ஏனென்றால் ஆங்கிலப் படங்களில் தொடர் காட்சிகளாக வருவதுபோல, பயங்கரவாதிகள் தாஜ் ஓட்டலில் மற்றும் மும்பையின் ரயில் நிலையத்தில் நடத்திய தாக்குதல்களை, உலகமே காட்சி ஊடகங்களில் கண்டுக் கொண்டிருந்தது. இந்தத் தாக்குதலில் பிடிபட்ட அஜ்மல் கசாப் யார் என்பது பற்றி இன்று வரை குழப்பமான செய்திகளைத் தான் இந்திய மக்கள் கேட்டு வருகிறார்கள். நேபாளத்தில் பிடிபட்டு மும்பையில் கிடைத்தது போல காட்டப்பட்டார் என்று ஒரு செய்தி வந்தது. துப்பாக்கியுடன் கசாப் தாஜ் ஓட்டலுக்குள்ளே இருந்ததை ஊடகங்களில் பார்த்தவர்களும் உண்டு. பிடிபட்ட பின் கசாப், அமெரிக்க உள்நாட்டு புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ.யால், மும்பையில்
விசாரணைக்குள்ளாக்கப்படுகிறார். நீதி மன்றத்தில் பல விஷயங்களை கசாப் ஒப்புக்கொள்கிறார். ஒரு கட்டத்திற்குப் பிறகு அனைத்தையும்
கசாப் மறுக்கிறார். கசாப்பிற்காக வாதம் செய்ய வந்த வழக்கறிஞர் பிரச்சனைக் குள்ளாக்கப்படுகிறார். கடைசியாக அமெரிக்காவில் மும்பைத் தாக்குதலுக்காக டேவிட் ஹெட்லியும், ராணாவும் பிடிபடுகிறார்கள். ஹெட்லி இந்தியாவிற்கு பலமுறை வந்துப் போனவர் என்று அரசுகள் அறிவித்தன. தன்னை விசாரிக்க வந்த அதிகாரிகளில் ஹெட்லியும் இருந்தார் என்று கசாப் கூறினார். இப்போது ஹெட்லியை அமெரிக்கா சென்று விசா ரிக்க, இந்திய அதிகாரிகளுக்கு உரிமை உண்டா? இல்லையா? என்ற விவாதம் நடக்கிறது.
அதிலும் அமெரிக்க நீதித்துறை தலைவர் எரிக் ஹோல்டர், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் தொலைபேசியில் பேசியதாக செய்தி வெளியானது. அதில் ஹோல்டர் அமெரிக்காவிற்கு சென்று, இந்திய புல னாய்வுத் துறை அதிகாரிகள் ஹெட்லியை விசாரிக்கலாம் என்று கூறியதாக சிதம்பரம் சொன்னார். அதையொட்டி புதிதாக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து புலனாய்வுத் துறைகளையும் ஒருங்கிணைத்த அமைப்பான, தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளிடம், அமெரிக்கா செல்வதற்கும் ஹெட்லியை நீதிவிசாரணைக்கு உட்படுத்துவதற்கும் தேவையான ஆவணங்களை தயார் செய்யும்படி சிதம்பரம் உத்தரவிட்டார்.
அதேநேரத்தில் அமெரிக்க தூதர் திமோதி ரோய்மர், இந்திய விசாரணைக்கு அனுமதிக்க இன்னமும் முடிவுசெய் யவில்லை என்று கூறினார். ஏன் இந்த முரண்பாடு என்று ஊடகங்களும், அரசியல்வாதிகளும் உள்துறை அமைச் சர் மீது பாய்ந்தார்கள். லண்டனுக்கு பறந்து சென்றிருந்த அமைச்சர் சிதம்பரம் அங்கிருந்தே அதற்கு பதில் கூறினார். அமெரிக்கர்களின் அறிவிப்புகளில் முரண்பாடுகள் இல்லை என்றார். எதற்காக அமெரிக்கர்கள் அடித்த பல்டியை, சிதம்பரம் சமாளிக்க வேண்டும் என்று ஊடகங்கள் கேட்டன. அதேசமயம் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, அமெரிக்கா ஹெட்லி விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். பிறகு உள்துறை அமைச்சகமும் அனுமதிக்காக ஒரு கடிதம் அனுப்புகிறோம் என்று கூறி யுள்ளனர்.
இந்த நேரத்தில் ஒரு கேள்வி வலுவாக எழுந்துள்ளது. இந்திய காவல்துறையின் பிடியில் இருக்கும் அஜ்மல் கசாபை, இந்திய நாட்டில் நடந்த ஒரு தாக்குதல் பற்றி விசாரணைச் செய்வதற்கு, சம்மந்தமேயில்லாத அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ.க்கு இந்திய அரசு அனுமதிக் கொடுத்தது. எதற்காக அப்படிப்பட்ட அனுமதியை கொடுக்க வேண்டும்? ஆனால் அதேசமயம் இந்திய நாட்டிற்குள் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர் என்று அறியப்பட்ட டேவிட் ஹெட்லி, அமெரிக்க காவல் துறையின் பிடியில் இருக்கும் போது, இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் அங்கே
சென்று விசாரிப்பதற்கு இத்தனைத் தூரம் தயக்கங்களையும், தடங்கல்களையும் ஏற்படுத்துவதுள எதனால்? மேற்கண்ட கேள்விகளைக் கேட்காமல் இருந்தோம் என்றால், பயங்கரவாதத்தை எதிர்ப்பது என்ற நோக்கத்திலேயே பிழை இருக்கிறது என்று அர்த்தம்.
ஏனென்றால் அமெரிக்காவின் நியூ யார்க் நகரிலும், பெண்டகன் ராணுவத் தளத்திலும் பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது, அமெரிக்கா அரசு உலக முழுவதிலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என அறைகூவி அழைத்தது. அந்த அறைகூவலை சிரமேற்ற இந்திய அரசு, தன்னையும் அத்தகைய உலகு தழுவிய பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்தில் இணைத்துக் கொண்டது. இப்போது ஒரு குறிப்பிட்ட பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட் டப்படும் பயங்கரவாதிகளை விசாரித்து உண்மைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியில், அமெரிக்காவும், இந்தியாவும் மாறுபட்ட நிலைகளை எடுப்பதற்கான காரணம் என்ன?
அமெரிக்கா உண்மையிலேயே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் நம்பிக்கைக் கொண்டுள்ளதா? அல்லது அதைப் பயன்படுத்தி தனது ஆயுத வியாபாரத்தை, உலகெங்கிலும் நடத்துவதற்கு ஏற்ற சூழலை, நிரந்த ரமாக உருவாக்க எண்ணுகிறதா? பயங்கர வாதிகள் தொடர்ந்து உலகில் இருந்தால் தான், பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்து இந்தப் பிராந்தியத்தில் நடந்து வந்தால் தான், அமெரிக்காவின் சாவு வியாபாரிகள் என அழைக்கப்படும் ஆயுத உற்பத்தியாளர்களுக்கு தொடர்ந்து வியாபாரமாகும் என்று அமெரிக்கா கருதுகிறதா? அதனாலேயே பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அடிப்படையான விவரங்களை பாதிக்கப்பட்ட நாடுகள் கூட, தெரிந்துக் கொள்ள கூடாது என்று கருதுகிறதா? இத்தனைக் கேள்விகள் எழுகின்ற நேரத்தில் 2005ம் ஆண்டு மத்ரித் பிரகடனம் என்பது நினைவுக்கு வருகிறது.
2005ம் ஆண்டு மார்ச் 8 முதல் 11 வரை மத்ரித் நகரில் நடத்தப்பட்ட ஜன நாயகம், பயங்கரவாதம், பாதுகாப்பு ஆகியவற்றிற்கான அனைத்து நாட்டு உச்சி மாநாடு நடத்தப்பட்டது. அதில் ஐ.நா.சபையின் அன்றைய செயலாளர் நாயகம் கோபி அன்னன் கலந்துக் கொண்டார். உயர்மட்ட கூட்டத்தில் மிரட்டல், சவால்கள், மாற்றம் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. உயர்மட்ட குழுவின் ஆலோசனைகள் மீதான நடவடிக்கைகள் என்பதை மத்ரித் நிகழ்ச்சி நிரல் என்பதாக அறிவித்தார்கள். அதில் எந்தவொரு மன்னிப்போ, நியாயப்படுத்தலோ காட்டாமல், முழுமையான தீமை என்பதாக பயங்கரவாதம் பார்க்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்தை எதிர்க்கும் போது, எதிர் பயங்கரவாதம் என்பதே அதற்கான வழியை உருவாக்கி விடக் கூடாது என்று அரசுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பது அனைத்து நாட்டு சமூகத்தின் பொறுப்பு என கூறப்பட்டது. மேற்கண்ட எல்லா அறிவிப்புகளுமே, இன்றைய அமெரிக்காவின் அணுகு முறையில் மீறப்பட்டுள்ளது. ஹெட்லி அமெரிக்க அரசிடம் ஒப்புக் கொண் டதற்காக, அவனது தண்டனை குறைக் கப்படும் என்கிறது அமெரிக்கா. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளாக வடஅமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் கருதப்படுகிறதே தவிர, 1956க்குப் பின்னால் தொடர் தாக்குதல் களைச் சந்திக்கும் இந்தியா அவ்வாறு பட்டியலிடப்படவில்லை.
மத்ரித் பிரகடனத்தில் கூறப்பட்ட, பயங்கரவாதம் என்பது அனைத்து மானுடத்திற்கும் எதிரான ஒரு குற்றம் என்ற கருத்துக் கோப்பை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்கா செயல்படுவதாக தெரியவில்லை. அந்த பிரகடனத்தை அறி வித்த ஐ.நா.வின் பொதுச் செயலாளர், அரசால் ஏற்படுத்தப்படும் பயங்கரவாதம், பாதிக்கப்படும் அரசுக்கு எதிரான ஒரு மறைமுக ஆக்கிரமிப்பு என்று கூறினார். இங்கே மும்பைத் தாக்குதலை ஒரு மறைமுக ஆக்கிரமிப்பாக நடத்திய அரசப் பயங்கரவாதம், பாகிஸ்தானுடையதா அல்லது அமெரிக்காவினுடையதா என்ற கேள்வி தானாகவே எழுகிறது. எப்படியிருந்தாலும் இன்று அமெரிக்கா அரசை ஒவ்வொரு விஷயத்திலும் சார்ந் திருக்கும் இந்திய அரசு, இந்த உண் மையை விவாதிக்க தயாராயிருக்குமா என் பதே நமது கேள்வி.
விசாரணைக்குள்ளாக்கப்படுகிறார். நீதி மன்றத்தில் பல விஷயங்களை கசாப் ஒப்புக்கொள்கிறார். ஒரு கட்டத்திற்குப் பிறகு அனைத்தையும்
கசாப் மறுக்கிறார். கசாப்பிற்காக வாதம் செய்ய வந்த வழக்கறிஞர் பிரச்சனைக் குள்ளாக்கப்படுகிறார். கடைசியாக அமெரிக்காவில் மும்பைத் தாக்குதலுக்காக டேவிட் ஹெட்லியும், ராணாவும் பிடிபடுகிறார்கள். ஹெட்லி இந்தியாவிற்கு பலமுறை வந்துப் போனவர் என்று அரசுகள் அறிவித்தன. தன்னை விசாரிக்க வந்த அதிகாரிகளில் ஹெட்லியும் இருந்தார் என்று கசாப் கூறினார். இப்போது ஹெட்லியை அமெரிக்கா சென்று விசா ரிக்க, இந்திய அதிகாரிகளுக்கு உரிமை உண்டா? இல்லையா? என்ற விவாதம் நடக்கிறது.
அதிலும் அமெரிக்க நீதித்துறை தலைவர் எரிக் ஹோல்டர், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் தொலைபேசியில் பேசியதாக செய்தி வெளியானது. அதில் ஹோல்டர் அமெரிக்காவிற்கு சென்று, இந்திய புல னாய்வுத் துறை அதிகாரிகள் ஹெட்லியை விசாரிக்கலாம் என்று கூறியதாக சிதம்பரம் சொன்னார். அதையொட்டி புதிதாக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து புலனாய்வுத் துறைகளையும் ஒருங்கிணைத்த அமைப்பான, தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளிடம், அமெரிக்கா செல்வதற்கும் ஹெட்லியை நீதிவிசாரணைக்கு உட்படுத்துவதற்கும் தேவையான ஆவணங்களை தயார் செய்யும்படி சிதம்பரம் உத்தரவிட்டார்.
அதேநேரத்தில் அமெரிக்க தூதர் திமோதி ரோய்மர், இந்திய விசாரணைக்கு அனுமதிக்க இன்னமும் முடிவுசெய் யவில்லை என்று கூறினார். ஏன் இந்த முரண்பாடு என்று ஊடகங்களும், அரசியல்வாதிகளும் உள்துறை அமைச் சர் மீது பாய்ந்தார்கள். லண்டனுக்கு பறந்து சென்றிருந்த அமைச்சர் சிதம்பரம் அங்கிருந்தே அதற்கு பதில் கூறினார். அமெரிக்கர்களின் அறிவிப்புகளில் முரண்பாடுகள் இல்லை என்றார். எதற்காக அமெரிக்கர்கள் அடித்த பல்டியை, சிதம்பரம் சமாளிக்க வேண்டும் என்று ஊடகங்கள் கேட்டன. அதேசமயம் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, அமெரிக்கா ஹெட்லி விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். பிறகு உள்துறை அமைச்சகமும் அனுமதிக்காக ஒரு கடிதம் அனுப்புகிறோம் என்று கூறி யுள்ளனர்.
இந்த நேரத்தில் ஒரு கேள்வி வலுவாக எழுந்துள்ளது. இந்திய காவல்துறையின் பிடியில் இருக்கும் அஜ்மல் கசாபை, இந்திய நாட்டில் நடந்த ஒரு தாக்குதல் பற்றி விசாரணைச் செய்வதற்கு, சம்மந்தமேயில்லாத அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ.க்கு இந்திய அரசு அனுமதிக் கொடுத்தது. எதற்காக அப்படிப்பட்ட அனுமதியை கொடுக்க வேண்டும்? ஆனால் அதேசமயம் இந்திய நாட்டிற்குள் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர் என்று அறியப்பட்ட டேவிட் ஹெட்லி, அமெரிக்க காவல் துறையின் பிடியில் இருக்கும் போது, இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் அங்கே
சென்று விசாரிப்பதற்கு இத்தனைத் தூரம் தயக்கங்களையும், தடங்கல்களையும் ஏற்படுத்துவதுள எதனால்? மேற்கண்ட கேள்விகளைக் கேட்காமல் இருந்தோம் என்றால், பயங்கரவாதத்தை எதிர்ப்பது என்ற நோக்கத்திலேயே பிழை இருக்கிறது என்று அர்த்தம்.
ஏனென்றால் அமெரிக்காவின் நியூ யார்க் நகரிலும், பெண்டகன் ராணுவத் தளத்திலும் பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது, அமெரிக்கா அரசு உலக முழுவதிலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என அறைகூவி அழைத்தது. அந்த அறைகூவலை சிரமேற்ற இந்திய அரசு, தன்னையும் அத்தகைய உலகு தழுவிய பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்தில் இணைத்துக் கொண்டது. இப்போது ஒரு குறிப்பிட்ட பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட் டப்படும் பயங்கரவாதிகளை விசாரித்து உண்மைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியில், அமெரிக்காவும், இந்தியாவும் மாறுபட்ட நிலைகளை எடுப்பதற்கான காரணம் என்ன?
அமெரிக்கா உண்மையிலேயே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் நம்பிக்கைக் கொண்டுள்ளதா? அல்லது அதைப் பயன்படுத்தி தனது ஆயுத வியாபாரத்தை, உலகெங்கிலும் நடத்துவதற்கு ஏற்ற சூழலை, நிரந்த ரமாக உருவாக்க எண்ணுகிறதா? பயங்கர வாதிகள் தொடர்ந்து உலகில் இருந்தால் தான், பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்து இந்தப் பிராந்தியத்தில் நடந்து வந்தால் தான், அமெரிக்காவின் சாவு வியாபாரிகள் என அழைக்கப்படும் ஆயுத உற்பத்தியாளர்களுக்கு தொடர்ந்து வியாபாரமாகும் என்று அமெரிக்கா கருதுகிறதா? அதனாலேயே பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அடிப்படையான விவரங்களை பாதிக்கப்பட்ட நாடுகள் கூட, தெரிந்துக் கொள்ள கூடாது என்று கருதுகிறதா? இத்தனைக் கேள்விகள் எழுகின்ற நேரத்தில் 2005ம் ஆண்டு மத்ரித் பிரகடனம் என்பது நினைவுக்கு வருகிறது.
2005ம் ஆண்டு மார்ச் 8 முதல் 11 வரை மத்ரித் நகரில் நடத்தப்பட்ட ஜன நாயகம், பயங்கரவாதம், பாதுகாப்பு ஆகியவற்றிற்கான அனைத்து நாட்டு உச்சி மாநாடு நடத்தப்பட்டது. அதில் ஐ.நா.சபையின் அன்றைய செயலாளர் நாயகம் கோபி அன்னன் கலந்துக் கொண்டார். உயர்மட்ட கூட்டத்தில் மிரட்டல், சவால்கள், மாற்றம் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. உயர்மட்ட குழுவின் ஆலோசனைகள் மீதான நடவடிக்கைகள் என்பதை மத்ரித் நிகழ்ச்சி நிரல் என்பதாக அறிவித்தார்கள். அதில் எந்தவொரு மன்னிப்போ, நியாயப்படுத்தலோ காட்டாமல், முழுமையான தீமை என்பதாக பயங்கரவாதம் பார்க்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்தை எதிர்க்கும் போது, எதிர் பயங்கரவாதம் என்பதே அதற்கான வழியை உருவாக்கி விடக் கூடாது என்று அரசுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பது அனைத்து நாட்டு சமூகத்தின் பொறுப்பு என கூறப்பட்டது. மேற்கண்ட எல்லா அறிவிப்புகளுமே, இன்றைய அமெரிக்காவின் அணுகு முறையில் மீறப்பட்டுள்ளது. ஹெட்லி அமெரிக்க அரசிடம் ஒப்புக் கொண் டதற்காக, அவனது தண்டனை குறைக் கப்படும் என்கிறது அமெரிக்கா. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளாக வடஅமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் கருதப்படுகிறதே தவிர, 1956க்குப் பின்னால் தொடர் தாக்குதல் களைச் சந்திக்கும் இந்தியா அவ்வாறு பட்டியலிடப்படவில்லை.
மத்ரித் பிரகடனத்தில் கூறப்பட்ட, பயங்கரவாதம் என்பது அனைத்து மானுடத்திற்கும் எதிரான ஒரு குற்றம் என்ற கருத்துக் கோப்பை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்கா செயல்படுவதாக தெரியவில்லை. அந்த பிரகடனத்தை அறி வித்த ஐ.நா.வின் பொதுச் செயலாளர், அரசால் ஏற்படுத்தப்படும் பயங்கரவாதம், பாதிக்கப்படும் அரசுக்கு எதிரான ஒரு மறைமுக ஆக்கிரமிப்பு என்று கூறினார். இங்கே மும்பைத் தாக்குதலை ஒரு மறைமுக ஆக்கிரமிப்பாக நடத்திய அரசப் பயங்கரவாதம், பாகிஸ்தானுடையதா அல்லது அமெரிக்காவினுடையதா என்ற கேள்வி தானாகவே எழுகிறது. எப்படியிருந்தாலும் இன்று அமெரிக்கா அரசை ஒவ்வொரு விஷயத்திலும் சார்ந் திருக்கும் இந்திய அரசு, இந்த உண் மையை விவாதிக்க தயாராயிருக்குமா என் பதே நமது கேள்வி.
Subscribe to:
Posts (Atom)
