Wednesday, April 20, 2011

கோடீஸ்வர குடும்பத்திற்கு எதிராக.......

எதுக்கய்யா இந்த மாதிரி எல்லோரும் சேர்ந்து இரட்டை இளைக்கும், அதன் தோழமை கட்சிகளுக்கும் ஒட்டுமொத்தமாக வாக்களித்தீர்கள் என்று சாமான்ய தமிழனை கேட்டால், அது ஒன்னும் அந்த ம்மா மீதுள்ள பற்றினால் அல்ல என்கிறான் தமிழன். அப்பா எதற்கு ன்று வினவினோம். அது ஒண்ணுமில்ல. அந்த கோடீஸ்வர குடும்பம் செய்யும் அலும்பு தாங்களா என்கிறான். அது எண்ண அலும்பு? என்றோம். ஒன்றா? இரண்டா? எடுத்து சொல்ல என்கிறான்.

ஒரு முதலமைச்சர் போனமுறை கலைஞர் ஆளும்போது இருந்தார். ஓஹோ. 1996 முதல் 2001 வரை உள்ள ஆட்சியை சொல்றீங்களா? ஆமாம். அப்பவே தமிழ் மக்கள் அந்த ஆட்சியின் சாதனைகளை வைத்து வாக்கு போடல்ல. ஆட்சியை மாத்திட்டாங்க. அந்த முறை கலைஞர் உணமையிலேயே ஊழலை பல தட்டுகளிலும் குறைத்து சாதனை செய்தார். இந்த முறை ஆட்சியில் அவர் ஒருவர் மாட்டுமா முதல்வராக இருந்தார்? பத்து பேர் முதல்வராக இருந்தனர். காவல்துறையில் யார், யாரை எங்கே போடவேண்டு என்று முடிவு பண்ற இடத்தில் அந்த துறையை கவனித்த கலைஞர் இல்லையே?

துணை முதல்வர் தளபதி அனேகமாக உளவு துறையை கையாண்டார் என்றால், அதில் உள்ள ஜாபர் சேட் மூலம் பெரிய காய் நகர்த்தல்களைத்தானே கலைஞர் செய்து வந்தார்? என்றார்கள். சரி. மதுரை மண்டல காவல் அதிகாரிகளை மாற்றுவதில் தளபதி தலையிட்டாரா என்றால், அதுதான் இல்லை. அடுஹு அண்ணன் பகுதி.என்று தளபதியே பின்வாங்கவில்லையா? என்கிறார்கள். சரி. தன்னால் முடிந்த அளவு ராசாத்தி அமமையாரும் காய் நகர்த்தலை செய்தாரே என்கிறார்கள். அதனால்தானே ஜாங்கிட் ஆட்சி சென்னை மற்றும் புற நகர்களில் நடந்தது என்கிறார்கள். ஓஹோ. அதனால்தான் ஜாபரையும், ஜாங்கிட்டையும் தேர்தல் ஆணையம் மாற்றிவிட்டதோ என்று கேட்கதொன்றியது. எல்லாம் திமுக காரர்களே பேசுவதுதான்.

சரி. ஒரு தொழிலை சுதந்திரமாக விட்டார்களா? திரை தொழிலில் நுழைந்து அதையும் ஆக்கிரமித்தார்கள். ஏற்கனவே சின்னத்திரை அவர்களது குடும்பம் கையில்தான். அதை வைத்து விளம்பரம்செய்துதங்கள் படங்களை ஓடச்செய்யட்டும் .அதற்காக திரை அரங்குகளை கையில் எடுத்துக்கொண்டு, அதில் தங்கள் படங்கள் தவிர மற்றவர் படங்களை திரையிட மறைமுக தடை விதிப்பது கோபத்தை கொடுக்காதா? என்கின்றனர். அதோடு நிறுத்தாமல் குறிப்பிட்ட கலைஞர்களுக்கு தடங்கல்கள் செய்வது என்ன நியாயம்? என்று கேட்கிறார்கள்.

சரி. அடுத்த திட்டம் அந்த தனியார் பேருந்துகளை கை வைப்பதாமே? என்று கேட்டார்கள். அது என்ன? என்றோம். கலாநிதி, தயாநிதி சகோதரர்கள் எண்ணூறு பேருந்துகளை பயங்கர உயர் தொழில் நுட்பத்துடன் ஏற்பாடு செய்து தயார் செய்து வைத்துள்ளதாகவும், அவற்றை இப்போது இரவில் பல ஊர்களுக்கும் செல்லும் ஆம்னி பேருந்துகளின் தடங்களில் இறக்க இருப்பதாகவும் வந்த தகவல் அடுத்த அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படி தமிழ்நாட்டையே ஒரு கோடீஸ்வர குடும்பம் வாங்கி, தன்கள் கைகளில் வைத்து கொள்வதை, தமிழ் மக்கள் ஏற்கத்தாயாரக இல்லை என்று முடிக்கிறார்கள்.

அப்பா போட்ட வாக்குகள் அம்மா வரணும், என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதுதான் என்கிறீர்களா? என்றால் ஆமாம் என்கிறார்கள்.அதனால்தான் மத்திய உளவு துறையினர் சமீப கணக்கு, அதிமுக 126 என்றும், அவர்கள் கூட்டணி 186 என்றும் கணக்குசொல்கிறார்களா?

Tuesday, April 19, 2011

பூந்தமல்லி சிறையில் பட்டினி போர்.

போர் குற்றங்கள் செய்த ராஜபக்சே அரசை, மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாக ஐ.நா. நிபுணர் குழு ஒரு அறிககையை வைத்தவுடன் அதை எதிர்த்து மகிந்தா அரசு கொந்தளித்தது. ஐ.நா. காட்டியுள்ள போர் குற்றங்களுக்காக ராஜபக்சே அரசை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகமெங்கும் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் அந்நியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் அதே கோரிக்கைக்காக பட்டினி போர் தொடங்கி உள்ளனர்.

பூந்தமல்லி சிறப்பு முகாம் பெயரில் உள்ள சிறைக்கூடத்தில், இன்று காலை ஒன்பது மணிக்கு தொடங்கி பட்டினி போரை, அமலன் அப்பாதுரை[33 ], கங்காதரன் நடராஜா [ 42 ], ஜெயமோகன் விரைஜா [ 30 ], சந்திரகுமார் மாரி [38 ] ஆகியோர் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு உலக தமிழர்கள் அனைவரும் ஆதரவு தந்து,ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசையும் நிர்ப்பந்திக்க வேண்டும்.

மீனவர் கொலைக்கு பட்டினி போராட்டம் பதிலா?

நான்கு மீனவர்களை சிங்கள கடல் படை கொடியவர்கள் கொலை செய்தார்கள் என்றால் இந்தியா இலங்கையை மட்டைபந்து போட்டியில் வேற்றதனால்தான் என்ற உண்மையை உலகம் அறியும் முன்பு அறிந்தவர்கள் நமது இந்திய-தமிழக அரசுகள். ஏப்ரல் இரண்டாம் நாள் கடலுக்கு சென்ற TN / 10 / MFB / 262 என்ற எண்ணுள்ள விசைப்படகில் சென்ற விக்டஸ் [36 ], ஜான்பால், அந்தோணிராஜ், மாரிமுத்து ஆகிய மீனவர்கள் கடுமையாக சிங்கள படையால் அடித்து, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, அவர்களது உடலங்கள் ஒவ்வொன்றாக கிடைக்கின்ற நிலையில் கடலில் வீசப்பட்டுள்ளது. ஒவ்வொரு உடலமும் கிச்டைக்கும் போது அவற்றில் இருந்த காயங்கள் எப்படி உடலெங்கும் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான ஆதராமாக இருந்தது.

கடைசியாக கிடைத்த உடலில் தலயும் வெட்டப்பட்டு, கையும் வேட்டப்பட்டதிளிருந்து திட்டமிட்டு சிங்களர் செய்த அட்டூழியம் என்பது பச்சையாக புரிகிறது. இந்த கொலைகள் நம்பி தங்கியிருந்த தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களம் சித கொலைகள்தான் என்பதும் டேஹ்ளிவாகிறது. நான்காம் நாள் நடந்த மட்டைபந்து விளையாட்டில் இந்தியா, இலங்கையை வென்றதால் ஆத்திரப்பட்ட சிங்களர்கள் செய்த அட்டூழியம் என்று தெரியவருகிறது. அப்படி அவர்கள் செய்த நாள் ஏப்ரல் நான்காம் நாள் இரவில். அதாவது நான்கு மீனவர் படுகொலையும் ஏப்ரல் நான்காம் நாள் நள்ளிரவில் நடந்துள்ளது. உடனடியாக ஐந்தாம் நாள் அதிகாலையிலேயே டில்லிக்கு செய்திகள் வந்துவிட்டன. டில்லி அதிகார மையம் ,சென்னை அதிகார மையத்தை தொடர்ப்பு கொண்டுள்ளது. இரண்டு அதிகார மையங்களுக்குள் விவாதம் நடந்துள்ளது. ஆலோசனைகள் பரிமாறப்பட்டுள்ளன.

வருகிற பதின்மூன்றாம் நாள் தேர்தல் நாள் என்பதால் இந்த படுகொலைகளை தற்போதைக்கு மறைத்து விடுவது என்று அதிகார மையங்கள் முடிவு செய்துள்ளன. இதுபோன்ற மறைப்பது, திசை திருப்புவது போன்ற செயல்களில் திறமை கொண்ட ஜாபர் சேட் இடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அதன் பிறகே நான்கு இறந்து போன மீனவர்களுக்கும் ஆளுக்கு, தலா ஐந்து லட்சம் தமிழக அரசு தானம் செய்துள்ளது. அதுகூட வழக்கமாக இறந்தவர்களுக்கு ஏழு ஆண்டு முடிந்த பின்புதான் நிதி வழங்குவது வழக்கம். இப்போது மட்டும் ஏன் எட்டே நாட்களுக்குள் வழங்கவ்ண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலை கணக்கில் கொண்டு என்று சொன்னாலும், கடைசி பிணம் கிடைக்காத நிலையில் எப்படி அர்சுக்குமட்டும், காணாமல்போன மீனவர்கள் சிங்கள அரசின் கைகளால் கொல்லப்பட்டது தேரோயும்? என்ற கேள்விக்கு விடையில்லை.

அப்படியானால் ஐந்து மீனவர்களும். கொலை செய்யப்பட்டார்கள் என்ற செய்தி ஐந்தாம் நாள் காலையிலேயே மத்திய-மாநில அரசுகளுக்கு தெரிந்து விட்டது என்பது புரிகிறது. அதற்கு எண்ண செய்யலாம் என்ற் விவாதத்தில் இரண்டு நாட்களை கலைஞர் ஓடவிட்டார். அதன் பிறகே இப்போதைக்கு தேர்தல் நேரத்தில், மரணம் அடைந்தவர் வீடுகளுக்கு பணம் கொடுப்பது என்று முடிவாகிறது. மீனவர் படுகொலைகளை முன்கூட்டியே தெரிந்திருந்தும் மக்களிடம் உண்மையை சொல்லாமல் இருந்த கலைஞரும் குற்றவாளிதானே என்று மீனவர்கள் கேட்கிறார்கள்.

கொலை குற்றத்தை ராஜபக்சே மீதும், அதை மூடி மறைத்த குற்றத்தை கலைஞர் மேலும், சோனியா மேலும் போடவேண்டும் என்று இன்று மீனவர் தலைவர்களான, ரூபேஷ், தயாளன், கபடி-மாறன் ஆகியோருடன் பத்து மீனவர்கள் அகில இந்திய வானொலி நிலையம் முன்பு பட்டினி போராட்டம் இருந்தார்கள். அவர்களை ஆரசின் காவல்துறை கைது செய்தது.

Monday, April 18, 2011

மீனவர்களை கொன்ற சிங்கள கடல்படை..?

அப்ரப் இரண்டாம் நாள் வழமையாக கடலுக்கு செல்லும் அரநூற்றுக்கு மேற்பட்ட படகுகள் ராமேஸ்வரம் கரையிலிருந்து புறப்பட்டு மீன் பிடிக்க கடலுக்கு சென்றன. அதை வழமையாக சிங்கள கடல்படையினர் பிடிப்பது போல இப்போதுனம் பிடித்தனர். இப்போது அவர்களிடம் நல்ல முறையில் உரையாடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று பிடிபட்ட மீனவர்கள் கைபேசியில் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் பேசியிருக்கிறார்கள். அடுத்தநாள் மூன்றாம் நாள் அன்று இந்திய-இலங்கை மட்டைபந்து விளையாட்டு சூடு பிடிக்கிறது. அப்போதுவரை இலங்கை வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் சிங்க படையினர் இருக்கிறார்கள்.

இலங்கை தோற்றால் உங்களுக்கு இருக்கு என்று அந்த நான்கு இந்திய மீனவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். பிடிபட்ட நால்வரும் மட்டை பந்து ஆட்ட உலக கோப்பை விளையாட்டில் இந்தியா வெற்றி பெற கூடாது என்று இறைவனிடம் வேண்டிகொள்கின்றனர். விளையாட்டில் யார் வெற்றி பெற்றால் எண்ண, தங்களது உயிர் போய்விட கூடாது என்பதில், இந்திய மீனவர்கள் உறுதியாக இருந்தனர். அதேபோல எப்போதெல்லாம் இந்தியா-இலங்கை மட்டை பந்து நடக்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டு கரையோரம் இருக்கின்ற கடலாளிகள் ஆண்டவரை வேண்டிக்கொள்கின்றனர். அதில் இந்தியா விளையாட்டில் வெற்றி பெற கூடாது என்று வேண்டுதல் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த முறை கடலுக்கு சென்று இலங்கையிடம் மாட்டிக்கொண்ட மீனவர்கள் நாலு பெறும், நன்றாக நீச்சல் அடிக்க தெரிந்தவர்கள்.அப்படஈருக்கும் போது எப்படி அவர்கள் ஒவ்வொருவராக கடலில் மூழ்கி மரணம் அடைய முடியும்? என்ற் கேள்வி எழுந்துள்ளது. முதல் சடலம் விட்சனுடையது அது நெடுந்தீவு அருகே இலங்கையின் வடக்கு பகுதியில் வருகிறது. அந்த உடலில் விரல் நகங்களால் நிறைய கீறல்கள் விழுந்துள்ளன. உடலெங்கும் விடுபட்ட தடங்கள் பதிந்துள்ளன. ஒவ்வொரு மீனவர் உடலங்களும் அடிபட்ட தழும்புகளுடன் மட்டுமே கிடைக்கிறது.கடைச்யாக கிடைத்துள்ள சடலத்தில் தலை இல்லை என்பது பகிரங்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதை எதிர்க்க இன்னமும் தமிழர்களுக்கு உணர்ச்சி வரவில்லை என்ற சூழலில், ஒருவர் அதையே தனது அரசியலுக்கு பயன்படுத்துகிறார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு இதை ஒரு பிரபலமான முறையில் பேர் வாங்க செயது விட்டார். அவர் மக்களை கூட்டி இலங்கை தூதரகத்தை முற்றுகை இட்டுள்ளார். ஆகையினால் தமிழர்களே சிங்களவன் தமழ் மீனவனின் கையை, காலை, தலையை வெட்டி கடலில் போடுகிறான். தமிழன் உணர்ச்சியற்று இருக்கிறான். இதுதான் தமிழ்நாடு உலகுக்கு சொல்லும் செய்தியா? தேர்தல் பரப்புரைக்காக சென்னைக்கு சோனியா வந்தபோது, அந்த தீவுத்திடல் மேடையிலேயே, கலைஞர் சோனியாவிடம் மீனவர்கள் உரிம்மைக்காக கூட அல்ல, அவர்களது உயிருக்காக போராடுகிறார்கள் என்று சொல்ல, உடனே சோனியா, " இனி ஒரு துப்பாக்கி சூடு கூட நடக்காது" என்று உறுதி கூறினார், அவர்கள் எண்ண, " இனி சுடாதே. வெட்டி கொன்றுவிடு" என்று மறைமுகமாக கூறிவிட்டார்களா? அப்படியானால் சோனியாவும், கருணாநிதியும் இந்த நாலு மீனவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் அல்லவா?

Sunday, April 17, 2011

உளவு துறை செய்தியால் அடிப்போனாரா கலைஞர்?

வாக்கு பதிவு முடிந்துவிட்டது. ஒரு மாதம் கஹித்துதான் வாக்கு எண்ணிக்கை நடக்க போகிறது. அதற்குள் அவசரப்பட்ட முதல்வர் உளவு துறை மூலம் சரியான முறையில் விழுந்த வாக்குகளை எண்ண பணித்தாராம். தொகுதி, தொகுதியாக வெற்றிபெற இருப்பவர்களை பட்டியலிட சொன்னாராம். அவர்களும் கணக்கெடுத்து கலைஞர் மனம் கோணாத அளவில் அவரிடம் கணக்கு சொல்லவேண்டுமே என்பதற்காக ," அய்யா, தங்கள் கூட்டணிக்கு தொண்ணூறு தொகுதி வரை வெற்றி பெற வாய்ப்பி உள்ளது அய்யா" என்றார்களாம். அதற்கே ஆடிப்போய் விட்டாராம் திமுக தலைவர். பெரிய கட்சிகளை தவிர தனி சுயேச்சை சின்னங்களில் நின்ற வேட்பாளர்களில் வெற்றி பெறுபவர்களிடம் பேசலாமில்லையா என்று தலைவர் வினவினாராம்.இதை தங்களுக்குள் அசை போடும் காவல் அதிகாரிகள் தாங்கள் முதலில் அவரிடம் சொன்ன எண்ணிக்கையே மிகைப்படுத்தல் என்ற உண்மையை யாரிடமும் சொல்லவில்லை.

அதேபோல சிதம்பரம் அய்யா தனது உள்துறை மூலம் தமிழ்நாட்டு நிலைமையை கேட்டாராம். அவருக்கும் அவர்கள் இதேபோல, அதிமுக கூட்டணி 130 முதல் 140 வரை வரும் என்று கூறினார்களாம். அதுவும் குறைத்து கூறிய கணக்குதான் என சிதம்பரம் அய்யாவுக்கு தெரியுமா என்று நமக்கு தெரியாது. இந்த மாநில, மத்திய உளவு துறைகள் சொன்ன கணக்கிலேயே இப்படி திணறும் அய்யாமார்கள் முழு தீர்ப்பு வந்தவுடன் எண்ண செய்ய போகிறார்கள்?

Saturday, April 16, 2011

ஐ.நா.வின் இலங்கை போர்குற்ற அறிக்கையில் புலிகளை குறை சொல்வது நியாயமா?

ஐ.நா.மகிந்தா அரசின் மனித உரிமை மீறல்களை, தனது நிபுணர் குழு அறிக்கை மூலம் கடுமையாக கண்டித்துள்ளது. அதில் அனைத்து நாட்டு மனித உரிமை தரங்களுக்கு கட்டுப்படாத இலங்கை என்பதை தெளிவாகவே சுட்டி காட்டுகிறார்கள். போது மக்களை போர் நேரத்தில் பாதுகாக்காத, அவர்கள் மீது குண்டுமழை பொழிந்த , போது மருத்துவமனைகளை தாக்கிய, மருந்துகளை மக்களுக்கு போகவிடாமல் தடுத்த, அனைத்து நாட்டு செஞ்சிலுவை சங்கம், ஐ.நா.வின் உதவி அமைப்புகள் ஆகியவற்றை செயல்பட விடாத, ஊடக சுதந்திரத்தை அனுமதிக்காத இலங்கை அரசின் கொடூரங்களை வரிசையாக அதில் பட்டியலிட்டுள்ளது. அதனால்தான் கோத்தபாயேவால் அந்த அறிககையை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதேசமயம் இருபுறம் உள்ள படைகளையும் குற்றம் சொன்னால்தான் தங்கள் அறிக்கை இருக்கும் சிக்கலான சூழலில் எடுபடும் என்று அந்த நிபுணர்கள் எண்ணினார்களோ என்னவோ. அவர்கள் புலிகள் பக்கத்திலும் மீறல்கள் நடந்ததாக சிலவற்றை பட்டியலிடுகிறார்கள்.

அதில் தமிழ் மக்களை பதுங்கு குழிகள் தோண்ட நிர்ப்பந்தப் படுத்தியது, சிறுவர் உட்பட அனிவரையும் ஆயுதபாணியாக்கியது போன்ற குற்றச்சாட்டுக்கள் போர் நேரத்தில் நடக்கின்ற சாதாரண நிகழ்வுகள் என்ற புரிதல் அந்த நிபுணர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களை கேடயமாக புலிகள் பாவித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு நாம் பதில் சொல்லித்தான் ஆகவேணும். அங்கே அந்த அறிக்கையின்படியே அரசியல் தீர்வை உருவாக்க எந்த முயர்ச்சியும் செய்யாத இலங்கை அரசு, வன்னியில் போரை நடத்தி, அப்பாவி மக்கள் மீது விமான குண்டு வீச்சை நடத்தியது என்கிறார்கள்.தேசிய இனங்களுக்குள் இப்படி ஒரு போர் நடக்கும் சூழலில், கிழக்கிலிருந்து தனது படையை புலிகள் திரும்ப அழைத்த போதிலிருந்து அவர்கள் ஒரு தற்காப்பு போரைத்தான் நாத்தி வந்தார்கள். அப்போது மன்னார் மாவட்டத்தில் பேசாலை தேவாலய தாக்குதல் உட்பட, அப்பாவி பொதுமக்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதலால் மிரண்டுபோன தமிழ்மக்கள் கொத்து,கொத்தாக ஓடிபோய், தமிழர் படையுடன் உள்ள விடுதலை பகுதிக்குத்தான் செல்வார்கள். ஏன் என்றால் அது ஒரு இன ரீதியான போர். அதனால்தான் னைவரும் பாதுகாப்பு தேசி கிளிநொச்சி சென்றார்கள்.

மேகண்ட உண்மையை நாம்தான் உலகிற்கு எடுத்து சொல்லவேண்டும். அதனால் விடுதலை புலிகள் மக்களை கேடயமாக பாவிக்கவில்லை. மக்கள்தான் விடுதலை புளிகளிடம் அடைக்கலம் தேடினார்கள். அதாவது மக்கள்தான் புலிகளை தங்களுக்கான கேடயமாக பாவித்தார்கள்.நான் ஒவ்வொரு நாள் போர் நிகழ்வையும் காட்சி ஊடகம் மூலம் விவரித்து வந்தவன். அந்த 2008 அக்டோபர் முதல் 2009 மே வரை ஒவ்வொரு நாளும் என் நினைவுகளில் பதிந்து இப்போது நினைவுக்கு வருகின்றன.அதனால் அந்த இரண்டு லட்சம் உள்நாட்டு இடம் பெயர்ந்த தமிழர்களையும் சிங்கள ராணுவம் துரத்தியதால் அவர்கள் கிளிநொச்சிக்கு வந்ததும், பிறகு துரத்தியதால் மூன்றரை லட்சம் தமிழர்களும் முல்லைத்தீவுக்கு வந்ததும் பசுமரத்தாணி போல நினைவில் பதிந்துள்ளன. ஆகவே போரில் பின்னடைவு என்பதற்காக புலிகளை குறை சொல்ல நாம் அனுமதிக்க முடியாது.

Friday, April 15, 2011

பணம் கொடுத்தும், திருப்பி அடிக்கிறானே?

அய்யா. திமுக பணம் கொடுத்தது உய்னமைதான். அதை திமுககாரர்களே ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் வாதம் இப்போது வேறு. அதாவது தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு வெளிவந்த கருத்து கணிப்பில் எல்லாம் எங்கள் திமுக தோற்கும் என்று வந்தது உண்மைதான். ஆனால் நாங்கள் அதற்குபிறகு அனேகமாக எல்லா இடங்களிலும் பணம் கொடுத்துள்ளோமே? பணம் வாங்கியவர்கள் எப்படி எங்களுக்கு போடாமல் இருப்பார்கள்? இதுதான் இப்போது திமுகவின் வாதம்.

இன்னும் ஒருமாதம் இருக்கிறது வாக்கு எண்ணிக்கை நடக்க. அதற்குள் திமுக தோற்கும் என்ற நிலையை அவர்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்த தயாரில்லை. அல்லது அப்படி ஒப்புக்கொள்ள தயாரில்லை. அதற்காக சில தர்க்க வாதங்களை கிளப்பி விடுகிறார்கள். அதில் இதுவும் ஒன்று. திமுக செய்த நல்வாழ்வு திட்டங்களுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என்கிறார்கள். அது என்ன நல்வாழ்வு திட்டம் என்று கேட்டால், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்கிறார்கள். அதுமட்டுமல்ல கலைஞட் காப்பீட்டு கழகம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல வண்ண தொலைக் காட்சி என்கிறார்கள். எழுபாதயிரம் ரூபாய்க்கு வீடு கட்டி கொடுத்து, குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றியமை என்கிறார்கள். இவைகள் எல்லாமே உண்மைதான். இவற்றிற்கு ஒரு பிரிவினர் அதாவது அதனால் லாபம் பெற்றோர் அதாவது வறுமையின் எல்லைகூட்டிற்கு கீழே உள்ளவர்களில் ஒரு பிரிவினர் வாக்கு போட்டிருக்க கூடும் என்பது உண்மைதான்.

ஆனால் அதுமட்டுமே இன்று தேர்தலை தீர்மாநித்திருக்குமா? நாங்கள் கொடுத்த பணத்திற்கு நன்றி காட்டமாட்டார்களா? என்று வினவுகிறார்கள். அதனால்தான் வாக்கு பதிவு இதுவரை இல்லாத அளவில் வரலாற்று காணாத அளவில் 77 விழுக்காட்டை தாண்டுகிறது என்கிறார்கள். புதிதாக வாக்காளர்களாக சேர்ந்துள்ள என்பது லட்சம் இளைஞர்கள் எங்கே போட்டிருப்பார்கள்? என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. உங்கள் தலைமை கொடுத்த பணம் முழுவதும் மக்களுக்கு பொய் சேர்ந்தததா? எவ்ன்றால் அவர்களிடமிருந்து பதில் இல்லை.

திமுக தொண்டர்கள் திமுக தலைமைக்கு முன்பு போல விசவாசமாக இருக்கிறார்களா? என்றால் பதில் இல்லை. அதனால் கொடுத்தனுப்பிய பணமும் முழுமையாக மக்களிடம் போயசெரவில்லை என்றால் அதற்கும் பதில் இல்லை. இலவசம் மற்றும் பணம் பற்றி மட்டுமே தேர்தலை சிந்திக்கிறார்கள். வழமையான அரசு எதிர்ப்பு உணர்வு பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. ஏறிவரும் விலைவாசி பாத்தித்த்டிருக்குமா என்றால் தெரிவதில்லை. எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள குறைகளை அதாவது அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளை பற்றி மட்டுமே சிந்த்த்டித்து வரும் ஹிமுக தொண்டரால் இன்றும் புரியப்போவது இல்லை.

பணம் கொடுத்தவர்களால பணம் வாங்கியவர்களின் வாக்குகளை பிசிறில்லாமல் உதய சூரியனுக்கு போடவைக்க முடியுமா என்றால் திமுக தொண்டர்கள் முழிக்கிறார்கள். சென்னையில் தொண்ணூறாம் வட்டத்தில் நாட்டும் பகுதி செயலாளர் காமராஜ் ஹான்கள் கொடுத்த பணம் பெற்றவர்கள் சரியாக போடுகிரரகளா? என்று சோதிக்க வாக்கு அளிக்கும் இடத்திலேயே ஆள் போட்டிருந்தார். அவர்கள் கூட 9000 வாக்குகளில் 6000 வாக்குகள் தான் பெறமுடிந்தது என்கிறார்கள். பென்னாகரம் இடைதேர்தலில் பணம் வாங்கியவர்களில் பாதி பேர்தான் வாக்களித்தார்கள் என்பது திமுக கணக்கு. அப்படியானால் இந்த போது தேர்தலில் எத்தனை பணம் வாங்கியவர்கள் வாக்களித்தார்கள் என்பது ஒரு சிறிய கணக்கு. அந்த கணக்கையும் எடுத்து பார்த்து நாம் சிந்திக்க வேண்டும்.