Tuesday, January 17, 2012

சோ பேச்சும், நடராசன் பேச்சும் பெரும் நகைச்சுவைகள்?

சோ தனது துக்ளக் இதழின் அண்டு விழாவில் வழக்கம்போல பா.ஜ.க. துதி பாடலும், தனது திறமை என்று அவரும், அவரது ஆதரவாளர்களும் நம்பும் ஒரு "மாயையும்" சொல்லி தீர்த்தார்.இந்த முறை அவரது அவசரம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜகவை அமர வைத்து விட வேண்டும் என்பதே. அதற்கு இந்திய ளவில் பாஜக எந்தளவு தயார் என்று நாம் கேட்டுவிட கூடாது. அவருக்கும் அது தெரியும். காங்கிரஸ் எத்ரிப்பு இந்திய மக்களிடம் பெரும் அளவில் இருக்கும்போது, பாஜக ஆதரவாக துவே இல்லை எனபது கண்கூடு. இது தமிழக முதல்வருக்கும் தெரியும். வருகிற தேர்தல்களில் இது சிலமாநிலங்களில் நிரூபிக்க ப்பட வாய்ப்பு இருக்கிறது.

இப்படி சூழலில் போயஸ் தோட்டத்தில் நடந்த ஒரு மாற்றத்தினால் தங்களுக்கு வாய்ப்பு கிட்டுமா என்று சோ வகையாறக்கள் எதிர்பார்ப்பதுமிருக்கிறது. வெளியேகூட அப்படித்தான் பலரும் பேசுகிறார்கள். ஆனால் அந்த சோ ராமசாமியின் கருத்துகளுக்கு எதிரான, தீர்மானங்களைத்தான் அதிமுக தலைமை சட்டமன்றத்திலும், தங்கள் கட்சியின் பொது குழுவிலும், நிறைவேற்றியிருக்கிரார்கள்.இற்ற்ஹை நாம் ராஜபக்சே போர்குற்றம் பற்றிய விசாரணை கோரிக்கையிலும், மூன்று தமிழர் தொக்கு தணடனையை குறைக்க கூறும் முயற்சியிலும், முல்லைபெரியார் விசயத்தில் தமிழக உரிமையில் நிற்பதிலும், கூடங்குளம் அணு உலையின் அச்சத்தை மக்கள் மத்தியில் போக்காமல் அமுல்படுத்தாதே என்ற தீர்மனாத்திலும் நன்றாக காணலாம்.

அதனால் சோ விற்கு செல்வாக்கு இருக்கிறது என்பது ஒரு பொய்மை கூற்று என்பது தெளிவாகும். அத்தகைய சூழலில்தான் அத்வானியையும், மோடியையும் கூட்டி வந்து அந்த பெரிய மனிதர்களை தமிழக முதல்வர் '' பெயரளவுக்காவது" சந்திப்பார் என்று எண்ணி அதன்மூலம் ஒரு பாஜக கூட்டணி மாயையை ஏற்படுத்த சோராமசாமி முயன்றார். ஆனால் அது பலிக்க வில்லை. முதல்வர் நேர்டம் ஒதுக்கியதாக பரப்பப்பட்டாலும், அது நடக்க வில்லை. அப்போதும் இந்த இந்துத்துவா கும்பல் விடவில்லை. பாஜக அதிமுக வுடன் கூட்டணிக்கு தயாராக இருக்கிறது என்று வந்திருந்த பெரும் தலவர்களை வைத்து பேச செய்துவிட்டார் சோ. அதற்கும் தமிழக முதல்வர் தயாராக இல்லை என்று கூறாமல் "மவுனம்" காத்து விட்டார் ஜெயலலிதா என்று டைம்ஸ் ஆப் இந்தியா எழுதி விட்டது.

அடுத்த கட்டமாக சோ அடுத்த தந்திரம் செய்தார். செல்வி.ஜெயலலிதா தங்கல்கட்சி பொது குழுவில் அறிவித்தபடி, நாடாளுமன்ற டேஹ்ர்தலில் அதிமுக முக்கிய பங்கை செலுத்தும் என்பதை பயன்படுத்த முயன்றார். அதுதான் பாஜக வேட்டிரி பெற்று பிரதமர் நாற்காலியை பிடிக்கா விட்டாலும், பஜகாவிற்கு வெளியே இருக்கும் ஒரே தகுதி உள்ள பிரதமர் செல்வி.ஜெயலலிதா தான் என்று சொபேசி அந்த பாஜக தலிவர்களிடமும் அங்கீகாரம் வாங்கி விட்டார். இதில் மோடியை முன்னால் கொடுவர சோ எடுத்தமுயற்சிகல்தான் இவை என்பதும், அத்வாநியையே வைத்து அவரது வாயாலேயே மோடியை அன்கீகற்றிக்க வைக்கும் சோ மற்றும் குருமூர்த்தியின் தந்திரம் பலித்துவிட்டது. ஆனாலும் அவர்களது இன்னொரு முயற்சியான ஜெயலலிதாவை ஒப்புக்கொள்ள வைப்பது என்பது நிறைவேற வில்லை. காரணம் தமிழ்நாட்டில் பாஜகாவின் வாக்குகள் ஜெயலலிதாவிடம் ஏற்கனவே வந்துவிட்டன. பாஜக அல்லாத கூட்டணியில்தான் இருபது லட்சம் முஸ்லிம் வாக்குகளையும், இடதுசாரிகள் வாக்குகளையும் வாங்க முடியும் எனபதும் ஜெயலலிதாவிற்கு தெரியும்.

அடுத்த பேச்சு நடராசன் உடையது.இவர் சசிகலா வகையறக்களை தோட்டத்திலிருந்து வெளியேற்றிய பிறகு, தஹ்னது முதல் பொது உரையில் தனது உண்மையான விசுவாசத்தை காட்டிவிட்டார். அதில் ஜெயின் சாதியினர் ஆலோசனையின் பேரில் தாங்கள் வெளியேற்ற பட்டதாக கூறுகிறார். அவருக்கு பார்ப்பனர் அல்லாத அதிகாரிகளின் பங்கு முக்கியமாக இருந்தது என்பது டேஹ்ரிந்தாலும், கருணாநிதியின் அரசியல் தந்திரத்தை அவிழ்ழ்துவிட எண்ணுகிறார். அதாவது ஒரு களத்தில் வெற்றி பெற்று இன்று தோல்வி காணும் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் அரசியல் என்ற தந்திரம்தான் தனது மறு வாழ்விற்கு உதவும் என்று கலைஞர் எண்ணுகிறார். அதோயே நடராஜனும் பயன்படுத்துகயார். அதற்கு கலைஞர் ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தை விட்டு வெளியே வந்தால் தான் பின்னால் செல்வேன் என்று கூறுவதன் மூலம் ஒரு எதிர்பார்ப்பை கூறுகிறார்.

அதாவது அழகிரி மூலம் இரண்டு முறை பேசி, மம்தாவிடமும், சரத் பவரிடமும், கலைஞரும் பேசி, அதன்மூலம் திமுக தலைமை அந்த இரு கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு மத்திய ஆட்சிக்கு கெடு வைக்க இருக்கிறது என்ற செய்தியை தெரிந்து கொண்டு நடராசன் அப்படி கூறியுள்ளார். அதேசமயம் அதிமுக தலைமை பற்றி சோ ராமசாமி, நடராசன் இருவர் கோரியதையும் பொய்யாக்கி வருகிறது ஜெயலலிதா தலைமை. ஒரு பெண் தலைமைக்கு யாராவது ஆலோசகர் தேவை என்ற தவறான புரிதலை அல்லது தவறான "ஆணாதிக்க, பார்ப்பனீய" பார்வையை பொய்யாக்கி வருகிறார் செல்வி.ஜெயலலிதா.

Saturday, January 14, 2012

பாராட்டுக்கள் எல்லாம் மாலதிக்கே

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு எப்படி நகர்மயமாதல் மற்றும் உலகமயமாதலின் விளைவாக அவமான்ப்படுத்தப்படுவதும், ஒழிக்கப்படுவதும் நடைபெறுகிறது என்று கட்டுரை எழுதினோம். "பாரம்பரிய விளையாட்டுகளை கார்பொரேட் விரும்புவதில்லை" என்ற கட்டுரையை "தமிழ்நியுஸ் " நாளேடு வெளியிட்டு, சிறப்பு செய்தது. அதை பலரும் பாராட்டினார்கள். அந்த கட்டுரையின் கடைசி பகுதியில் வெளியான குறிப்பாக, எங்கள் தமிழர்களின் வீர விளையாட்டுகளை தடை செய்யக்கோரும் கார்போறேட்களும், அவர்களது பண்பாட்டை உயர்த்தி பிடிக்கும் நகர்ப்புற நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளும், தங்களது பொழுதுபோக்கு விளையாட்டான "நாலு வாகன போட்டிகளையும், இரு சக்கர வாகன போட்டிகளையும்" முதலில் மனித உயிரை குடிக்க வரும் விளையாட்டுகள் என்று "தடை" செய்ய முன்வர்வார்களா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்.

அந்த பகுதியை பலரும் பாராட்டினார்கள். அந்த "பாராட்டுக்கள்" எல்லாம் போய் சேர வேண்டிய இடம் இப்போது டில்லியில் அமர்ந்திருக்கும் பெண் கவிஞர் மாலதி மைத்திரி இடம்தான். ஏன் என்றால் அன்று சும்மா இருந்த என்னிடம் டில்லியிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்க்கின்ற அறிவுஜீவிகள் பற்றி பேசினார். அப்படி பேசும்போது இவர்கள் :"கார் ரேஸ், பைக் ரேஸ்" ஆகியவற்றை தடை செய்வார்களா? என்று கேட்டார். அந்த கருத்தைதான் நான் அந்த கட்டுரையில் எழுதி இருந்தேன். அதனால் அனைத்து பாராட்டுக்களும் போய் சேர வேண்டிய இடம் கவிஞர் மாலதி மைதிரி யிடம்தான்..

Friday, January 13, 2012

எஸ்.எம்.கிருஷ்ணா இப்போது அவசரமாக இலங்கை செல்வதன் மர்மம் என்ன?

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, இந்திய அரசை தொடர்ந்து ஏமாற்றி வருவது நாடறிந்த செய்தி..இந்திய அரசிடம் தமிழர் பகுதிகளில் ஐம்பதாயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க அனுமதி அளிப்பதாக ஒப்பந்தம் செய்துகொண்ட ராஜபக்சே அரசு, அதற்கான ஏற்பாடுகளை செய்யவிடாமல் தடைகளை ஏற்படுத்தி வந்தது,.தமிழ் மக்களை படுகொலை செய்த போர் குற்றங்களை இழைத்தவர் என்று தமிழ்நாடு அரசால் சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்சே, அதற்கு உதவியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய நடுவண் அரசுடன் சேர்ந்து கொண்டு செயல்பட்டதாக உலக தமிழ் இனம் ஏற்கனவே கடும் கோபத்தில் இருக்கிறது. அததகைய கோபமான எதிர்ப்புகளை நீர்த்துபோக செய்யவும், இந்தியா அமைதிக்கு ஆதரவான நாடு என்பதுபோல காட்டிக்கொள்ளவும் எண்ணிய டில்லி அரசு, இலங்கையின் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு தர ஏற்பாடு செய்யும் நல்லதொரு நாடு என்று உலக சமூகம் மத்தியில் காட்டுவதற்கு இஹ்த்தகைய "வீடு கட்டிக் கொடுக்கும்" திட்டத்தை இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு செய்ய ஒப்புக்கொண்டது. அதை கூட காலம் தள்ளி நிறைவேற்ற விடாமல் தவிர்த்து வந்த ராஜபக்சே அரசு, சமீபத்தில் அததகைய இந்திய திட்டத்திற்கு ஒரு அனுமதியை கொடுத்துள்ளது.


அதைத்தான் இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் பெருமையாக அறிவித்தார். அதன் பிறகு, உலக சமூகத்தின் நிர்பந்தத்தினால், இலங்கை அரசு ஒரு "நல்லிணக்க ஆணையத்தை" ஏற்படுத்தி, அதன்மூலம் கூறப்படும் ம்னித உரிமை மீறல்கள் நடந்தது பற்றி ஆய்வு செய்தது.நாலாவது வன்னிப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களை போர்குற்றங்கள் என்றும், தமிழின அழிப்பு என்றும் நாம் உலகம் முழுவதும் கூறி வரும் நேரத்தில் அதை சாதரணமாக மனிதஉரிமை மீறல்கள் என்றும், அது பற்றி ஆய்வு செய்யும் பொறுப்பு, இலங்கை அரசிடமே கொடுக்கப்படவேண்டும் என்றும் சில உலக நாடுகள் கூறியதை பயன்படுததி அவர்கள் இப்படி ஒரு நல்லிணக்க ஆய்வு செய்தனர். அதை அறிக்கையாக இலங்கை அரசு வெளிப்படுத்ஹ்டியது. அதில் சில கீழ்மட்ட அதிகாரிகளை சில மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு என்று முடிவு செய்து அறிவித்தது. அந்த அறிக்கை "திருப்தி" தருவதாக இல்லை என்ற கருத்ஹை இந்திய அரசு கூறியது. அதை ஒட்டி, இலங்கையில் உள்ள "தமிழ்தேசிய கூட்டமைப்பும்" இந்திய நிலைப்பாட்டை ஆதரித்தது. இத்தகைய சூழலில்தான் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா இலங்கை செல்கிறார்.

இலங்கை தீவில் ஏற்கனவே சீனா தனது ஆதிக்கத்தை அங்குள்ள சந்தையில் செலுத்தி வருவது கண்டு, அமெரிக்காவும், இந்தியாவும் வருத்தம் கொண்டன.அப்படி சாந்திக்காக இலங்கையை அனுகிவருவதில், இந்திய-சீன மோதல் போக்குகள் அல்லது போட்டி போக்குகள் இலங்கை தீவில் எதிரொலித்து வந்தன.கூடுதலாக அம்பாத்தோட்டை துறைமுகத்தை சீனா தனது ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் என்ற பயம் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இருந்து வருகிறது.அதனாலேயே அமெரிக்கா தனது ராணுவ தந்திர திட்டத்திற்கு இந்திய அரசை சார்ந்து, இந்தியாவின் தென் பகுதியான தமிழ்நாடு உட்பட்ட பகுதிகளில் தங்களது அஆதிக்க சதி திட்டத்தை அமுலாக சில முயற்ச்சிகளை செய்துவருகிறார்கள்.அதில் ஒன்றுதான் "கூடங்குளம் அணு உலை" திட்டமும். அதாவது மின்சாரம் தயாரிக்க என்ற பெயரில், அணுகுண்டு தாயாரிக்க தென் மாநிலத்தில் ஒரு இடத்தை டேஹ்ர்வு செய்து இந்திய அரசு செயல்பட இது அவர்களுக்கு உதவுகிறது.அதேபோல தேனீ மாவட்டத்தில் உள்ள மலர்களை குடைந்து அதில் "நியுற்றினோ" ஆராய்ச்சி என்ற பெயரில் ஏவுகணைகளை ஏவ எதுவாக சில வேலைகளை செய்ய இந்திய அரசு திட்டமிடுகிறது. இவ்வாறு தமிழ்நாட்டை ராணுவ கேந்திரமாக ஆக்குவதற்கு தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழக அரசுக்கும் தெரியாமலேயே இந்திய அரசு திட்டமிடுவதை உணர முடிகிறது.


இத்தகைய சூழலில் கிருஷ்ணா இலங்கை செல்கிறார். அப்போது ராஜபக்சேவுடன் சீன ராணுவ தந்திரத்திற்கு எதிராக அமெரிக்கா-இந்திய ராணுவ தந்திரத்தை வலியுறுத்தி பேசுவார் என்றும் எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி, இப்போது உலக அரங்கில் இலங்கை அரசு வசமாக மாட்டிக்கொண்டுள்ளது. அதாவது ஐக்கிய நாட்டு சபையின் கூட்டம் ஒன்று பிபரவரி மாதம் வர இருக்கிறது. அதாவது அய்.நா.வின் பாதுகாப்பு சபையின் பத்தொன்பதாவது கூட்டம் ஒன்று பிப்ரவரி மாதம் கடைசியில் கூட உள்ளது. அதில் ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி மேற்கத்திய நாடுகள் பிரச்சனையை கிளப்ப உள்ளனர். அந்த கூட்டத்தில் இந்திய அரசு ஒரு முக்கியமான பங்கை வகிக்கும் என்று எத்ரிபார்க்க படுகிறது. அதில் இந்திய அரசு அனுமதித்தால் இலங்கை மீது போர்குற்ற விசாரணை உலக அளவில் நடத்தப்படும். இந்திய அரசு அந்த கூட்டத்தில் இலங்கைக்கு சார்பாக நிலை எடுக்க முடிவு செய்தால் ராஜபக்சே அரசு தப்பித்து கொள்ளும். அதாவது இந்திய அரசுக்கு இலங்கை அரசி நிர்ப்பந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு இதில் கிடைத்துள்ளது. அதனால் தான நினைத்ததை இலங்கை அரசின் மீது திணித்து விடலாமா என்று இந்திய அரசு நினைக்கிறது.

இதை ஒட்டியே சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் ஒரு புத்தகத்தை இலங்கை தமிழர்கள் பற்றி எழுதுவதும, அதை காங்கிரஸ் தலைவர்களே வெளியிடுவதும், நடக்கிறது. அதில் ராஜீவ் ஏற்படுத்திய ஒப்பந்தப்படி வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு, மற்றும் மாகாணங்களுக்கு அதிக சுயாட்சி என்பது பற்றி பேசப்படுகிறது. அவற்றை ராஜபக்சே ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அதை இந்திய அரசு வலியுறுத்துவதும், பதின்மூன்றாம் சட்ட திருத்தத்தை வலியுறுத்தி இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதும் இந்திய அரசின் தந்திரமாக உள்ளது. இதன்மூலம் தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு நன்மை செய்வது போல காட்டலாம் என்பது ஒருபுறம். இன்னொருபுறம் உலக அரங்கில் இப்போது வலுப்பெற்று வரும் "தனி தமிழீழம்" என்ற முழக்கத்தையும் குழி தோண்டி புதைக்கலாம் என்று இந்திய அரசு சிந்திக்கும் என்பது சொல்லி தெரியவேண்டிய ஒன்றல்ல.


இந்த நேரத்தில் எதற்காக இலங்கை இந்திய சொல்வதை கேட்க வேண்டும்? உலக அரங்கில் இலங்கைக்கு சாதகமான சூழல் இப்போது நாளுக்கு, நாள் குறைந்து வருகிறது. அமெரிக்காவிலும், ஐர்ப்பிய நாடுகளிலும், அவர்கள் வெளியிடும் ச்டாம்புகளில் பிரபாகரன் படமும், ஈழ தேச வரைபடமும், வீரசாவு அடைந்த தமிழர்களின் படமும் வெளியிடப்படுகிறது என்பது இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. இவை எல்லாமே புலம் பெறந்த தமிழர்களின் பங்களிப்பாக நடந்து வருகிறது. ஆகவே இந்திய அரசின் உதவி என்பது இன்றைய ராஜபக்சே அரசுக்கு அவசியம் தேவை என்ற ஒரு சூழலில்தான் கிருஷ்ணாவின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்ற கருத்து வருகிறது.

Thursday, January 12, 2012

பாரம்பரிய அடையாளங்களை கார்பொரேட் விரும்புவதில்லை.

இப்போது அவர்களது குறி "ஜல்லிக்கட்டு விளையாட்டு" மீது. அவர்கள் கூற்று, "எப்படி விலங்குகளை வதைப்பீர்கள்?". ஆகா. எங்கள் விலங்குகள் மீது இவர்களுக்கு எவ்வளவு அக்கறை? இவர்கள் யார்? நகர்ப்புறங்களில், அறிவுஜீவிகளாகவும், படித்தவர்களாகவும், மனித உரிமையை நுனி நாக்கில் பேசுபவர்களாகவும், அனேகமாக சிவந்த வன்னத்திலுள்ளவர்கலகா இருக்கிறார்கள். விலங்குகளை வதைக்ககூடாதல்லவா? என்று வினவுகிறார்கள். உண்மைதான் விதைக்க கூடாது என்று நாமும் சொல்லிவிட்டால் பிறகு நம்மிடம் நிறைய பேசுகிறார்கள்.அப்போது இவர்களை பற்றி அதிகம் புரிய முடிகிறது. இவர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள். அங்கே உள்ளவர்களுக்கு "பாரம்பரிய விளையாட்டுகள்" பற்றி என்ன தெரியும் என்பது நமக்கு தெரியாது.

காளையை அடக்க மனிதர்கள் பொங்கல் நேரம் பாய்ந்து வருவது "வீர விளையாட்டு" என்று நாம் புரிந்து வைத்துள்ளோம். அந்த "காளைகளை" விலங்கினத்தில் " அரிதான" ஒன்றாக சேர்த்து விட்டார் ஜெயராம் ரமேஷ் என்றுவேறு கூறுகிறார்கள்.யார் அந்த ரமேஷ்? பெங்களூரு பார்பனரான அவருக்கு நமூர் பாரம்பரிய விளாயாட்டு பற்றியோ, நம்மூரில் காளைகளை எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது பற்றியோ தெரியுமா? ஒரு காளையை பலர் சேர்ந்து அடக்கலாமா? என்று இவர்கள் கேட்கிறார்கள். ஒருவர்தான் தொடர்ந்து அந்த ஆட்டத்தில் கலையுடன் சண்டை போட்டு அடக்க முடியும்.பலரும் அதை பிடிக்க முயற்சி செய்வார்கள்.அதற்காகவே அந்த கலையை வளர்ப்பவர்கள் அதை தங்கள் வீட்டு குழந்தையை விட அருமையாக வளர்ப்பார்கள்.அதனால்தான் அலங்காநல்லூர் போன்ற சிலகிராமங்களிழ்மட்டுமே அந்த ஆட்டம் நடைபெறுகிறது. மாட்டு போன்களில் கலையை அடக்குவது எங்கள் "தமிழர் பழம் பண்பாட்டில்" இருக்கிறது. இத்தனை விளக்கம் சொன்னாலும் அவர்கள் ஒப்புக்கொள்ள தயாரில்லை.

காளைகளுக்கு "சாராயம்" கொடுக்ககூடாது. ஊசி போட கூடாது. அதை வதைக்க கூடாது. இதையேதானே பாரம்போரிய கலைகளை, விளையாட்டுகளை போற்றுபவர்களும் கூறி வருகிறோம். உங்கள் " ஓட்டப்பந்தயம்" செல்பவர்களும், மற்ற விளையாட்டு வீரர்களும், "போதை மருந்து" பயன்படுத்தும் போது எப்படி உங்களின் விதிகள் அவர்களை தடை செய்கிறதோ அதே போல எங்கள் பாரம்பரிய விளையாட்டிலும் "விதி மீறல்" செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களது "உலகமயமாக்கலின்" விளைவே. உங்கள் வணிகமயமாக்கலின் வித்துக்களே. அதனாலத்தில் உள்ள "ஒழுக்கமற்ற" போக்குகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு. கிராமப்புற மக்களின் பாரம்பரிய விளையாட்டு என்ன செய்யும்? நீங்கள் " உழவு தொழிலுக்கும்" நாங்கள் காளைகளை பயன்படுத்தும்போது என்ன சொல்லபோகிறீர்கள்? வண்டிமாடு இழுக்கனான்கள் காளைகளை பயன்படுத்தும்போது நீங்கள் எப்படி அதை பார்கிறீர்கள்? இப்படி கேட்டால் அது வேறு. இது வேறு. இது தவிர்க்க கூடியது. அது தவிர்க்க முடியாதது. இப்படி கூறுகிறார்கள்.


விளையாட்டு ஆட கலைகளை பயன்படுத்துவது உங்களுக்கு பொறுக்கமுடியவில்லை என்றால் அது ஏன்? ஒன்று நீங்கள் நகர்ப்புற நடுத்தர வர்க்க, அல்லது முற்பட்ட சாதி மனிதராக இருந்து கொண்டு, இந்த ஆட்டத்தை கிராமப்புற "பிற்பட்ட" சமூகத்தின் ஆட்டம் என்று பார்கிறீர்கள். இப்படி கேட்கலாம். இந்த ஆட்டம் அடிப்படையில் தலித் சமூக மக்களையும் சேர்த்துக்கொண்டு ஆட வேண்டிய ஆட்டம். ஆனால் தமிழ்நாட்டில் எல்லாமே கடந்த முப்பது ஆண்டுகளாக "பிற்பட்டோர்" ஆளுகை என்று போய் விட்டதால், இந்த ஆட்டத்திலும் தலித் சகோதரர்களை ஈடுபடுத்த தயங்கும் பிற்பட்டோரை காண்கிறோம். அதற்கு ஏன் முற்பட்டோரின் பழக்கங்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும்? மாறாக "நாங்களும் தமிழர்கள்தான்". என்றும், "எங்களையும் காளைகளை அடக்க" விடுங்கள் என்றும்,தலித் மக்கள் சண்டை போட வேண்டும். வீரத்தை நிரூபிக்கும் தலித் சகோதரனை பிற்பட்டோர் சமூகம் ஏற்றுக்கொண்டு போற்ற வேண்டும். அதுதானே பெரியார் வழியில் உள்ள தமிழர் பண்பாடு?

சரி. உங்கள் வாதத்திற்கே வருவோம். மனிதர்களை நாம் முதன்மையாக நேசிக்கிறோம் என்று கூறும் இந்த மனிதர்கள் "மனித வதைகளையும்"எதிர்க்க வேண்டும் அல்லவா? அதனால் "நாலு சக்கரவாகன ஓட்டம்", "இரு சக்கர வாகன " ஓட்டம் ஆகியவற்றை "தடை" செய்து விட்டு பிறகு இந்த ஜல்லிக்கட்டு பக்கம் வாருங்கள் என்று கூறலாமா? அந்த நாலு சக்கரவாகன ஓட்டத்திலும்" இரு சக்கரவாகன ஓட்டத்திலும்" மனித உயிர்கள் அதிக ஆபத்தை சந்திக்கின்றன என்பதால் அவற்றை தடை செய்ய முதலில் ஏற்பாடு செய்யுங்கள். அது உங்கள் கார்போரேட்களின், பெரு முதலாளிகளின், நடுத்தர வர்க்கத்தின், "வீர விளையாட்டு" என்றால் இந்த " மஞ்சு விரட்டு" என்ற விளையாட்டுதான் எங்கள் தமிழர்களின் பாரம்பரிய வீர் விளையாட்டு.

Tuesday, January 10, 2012

உழவர் எழுச்சியை ஏற்படுத்திய பசுபதியின் மரணம்

பசுபதி பாண்டியன் திண்டுக்கல் அருகே அவரது வீட்டில் அடையாலம்கட்டாத எதிரிகளால் நேற்று இரவு ஏழரை மணிக்கு படுகொலை செய்யப்பட்டார். தேவன்றகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் என்ற பெயருடன் அவர் செயல்பட்டு வந்தார். ஒன்பதாம் நாள் தேனியில் முல்லை பெரியார் பிரச்சனைகாக ஒரு பட்டிநிபோராட்டத்தை நடத்தி விட்டு வந்திருந்தார். அவருக்கும் மூலக்கடை பண்ணையார் குடும்பத்திற்கும் உள்ள மோதல் பற்றி எடுகள் வெளியிட்டுள்ளன. அவரது நடவடிக்கைகளினால் பண்ணையார் பக்கத்தில் பலர் மரணம் அடைந்ததையும், அவரது செயளால மேலும் பலர் கொலை செய்யப்பட்டதையும் கவனமாக கூறும் காவல்துறை, பசுபதி பக்கத்தில் "பண்ணையார் குடும்பத்தால்" கொல்லப்பட்டவர்கள் "பதிமூன்றுபேர்" என்பதை கூறுவதில்லை. ஏன் என்றாலவர்கள் "தாழ்த்தப்பட்டவர்கள்".

தேவேந்திரகுல வேளாளர்கள் தமிழ்நாட்டு உழவர் பெருங்குடி மக்களின் போர்குணமிக்க முன்னணி படை. அந்த படையின் ஒரு முன்னோடி கொல்லப்பட்டதனால், டென்றா எழுச்சி திர்ஹேன் மாவட்டங்களில் இப்போது சாலையெங்கும் திரண்டு நிற்கிறது. பசுபதியின் உடலை ஏந்திய வாகனம் பெருமூர்வலமாக தூத்துக்குடி நோக்கி கொண்டு செல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறது. சாலையெங்கும் திரண்ட தேவேந்திர கூட்டம் ஆண்களும்,பெண்களும் தங்கள் தலைவனை காண கிராமங்களில் இருந்து வெளியே வந்து நிற்கின்றனர். திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, அருப்புகோட்டை, எட்டையபுரம், எப்போதும் வென்றான், தூத்துக்குடி என்று அந்த மாபெரும் உழவர் எழுச்சி பேரணி சென்று கொண்டு இருக்கிறது. மதுரை விமான நிலையத்தில் காத்திருந்து டாக்டர் கிருஷ்ணசாமி, மலர் வலயம் வைத்து ஊர்வலத்தில் கலக்க, எட்டயபுரத்தில் பசுபதிக்கு மரியாதை செலுத்தி இணைய ஜான் பாண்டியன் தயாராய் நிற்க இந்த உழவர் பெரும் எழுச்சியை தேவேந்திரா சமூகம் இனி மறக்க முடியுமா? .

இனியாவது உழவு தமிழன் தனது போர்குணத்தை காட்ட தனக்குள்ளேயே எத்ரியை தேடாமல் பண்ணை திமிங்கிலங்களின் கைகளில் கலாவடப்பட்டிருக்கும் நிலங்களை எல்லாம் தனாதாக்கி நாட்டு மக்களுக்கு "உழுது, பயிருட்டு, சோறு போடும் பெரும் கூட்டமாக உருவாகுமா? என்ற ஏக்கம் நமக்கு.

நக்கீரன் வெற்றி பெற்றதா? இல்லையா?

நக்கீரன் சனிக்கிழமை இதழிலேயே அடுத்த இதழ் "பத்தாம் நாள் செவ்வாய் கிழமை" வெளிவரும் என்று பிரச்சனைக்குரிய கட்டுரை வெளியான பக்கத்திலேயே போட்டிருந்தார்கள். அதாவது பொங்கலை முன்னிட்டு, முன்கூட்டியே என்பது அதன் பொருள்..அதற்காக அவர்கள் அடுத்த இதழை தயார் செய்வதில் ஏற்கனவே கவனம் செலுத்தி வந்தனர். ஞாயிற்று கிழமையும் அந்த இதழை முடிப்பதில் வேகம் காட்டி முடித்து விட்டனர். சனிக்கிழமை தாக்குதலால் அடுத்தட இதழ் "தயாரிப்பு ஒரு சவாலாக" நக்கீரன் இதழுக்கு ஆகிவிட்டது. இந்த லாவுக்கு காவல்துறைக்கு அந்த இதழின் விரைவான செயல்பாட்டு சூழல் பற்றி தெரிய வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் தங்களுக்கு வந்த புகார்களின் அடிப்படியில், நக்கீரன் கொடுத்த புகாரையும், கணக்கில் எடுப்பதிலும், எண்ண செய்யவேண்டும் என்று அந்த புகார்கள் பற்றி முடிவு எடுப்பதிலுமே கவனமாக இருந்தனர்.

அதற்குள் நக்கீரன் குடும்பத்தினர் தங்களது அடுத்த் இதழ் தயாரிப்பில் வேகம் காட்டி , அதை அடித்து, பயிண்டு பண்ணி, பார்சல் கட்டி எல்லா ஊர்களுக்கும் அனுப்புவதில் கவனம் செலுத்தி அதிலும் வெற்றி அடைந்து விட்டனர். அதேபோல செவ்வாய் கிழமை காலையில் கடைகளில் போடுவதிலும் வெற்றி பெற்று விட்டனர். அந்த வெற்றி சென்னையில் எல்லா இடங்களிலும் கிடைக்கவில்லைதான்.அதாவது சென்னையில் உள்ள கடைகளில் அதிமுகவினர் முந்திய இதழை பிடுங்கி எரிக்கும்போதே வட சென்னை போன்ற இடங்களில் உள்ள கடைகளில் இனி நக்கீரன் விற்க கூடாது என்று மிரட்டியது இந்த இரண்டு நாட்களுக்குள் வேலை செய்யத்தானே செய்யும்? அதனால்தான் சென்னையில் போதுமான அளவில் கிடைக்க வில்லை. ஆனாலும் நாம் செவ்வாய் காலையில் கொடுத்த தொந்திரவின் பேரில், வின் தொலைக்காட்சி ஊழியர்கள் போய் கடைகளில் சண்டை போட்டு வாங்கி வந்து விட்டனர்.

அதனால்தான் நேற்று "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில் எங்களால் நக்கீரனின் "நேற்றைய செவ்வாய் கிழமை இதழ்" பற்றி பேச முடிந்தது. அந்த இதழை பார்த்த போது, அதில் முழுமையாக எப்படி அதிமுக வினர் அராஜகத்தில் ஈடுபட்டனர் என்ற புகை படங்களும், விளக்கங்களும், மட்டுமே இருந்தன. ஏற்கனவே சென்ற இதழான "சிக்கலில்" மாட்டிய இதழில் எப்படி "அதிமுக செயற்குழு, பொதுகுழுவில் பொன்னையன் பேசியதை" ஜெயலலிதா பாராட்டினார் என்று ஒரு தவறான செய்தியை வெளியிட்டிருந்தார்களோ,அதேபோல நடிகர் விஜயின் அம்மா போஎஸ் தோட்டத்தில் இருப்பதாக ஒரு தவறான செய்தியை வெளியிட்டு இருந்தார்கள். இதுபோன்ற தவறான செய்திகளை தருவதற்கு ஏற்ற மனிதர்கள் அந்த இதழுக்கு நெருக்கமாக இருப்பதும் தெரிந்தது. அதிமுக வின் செயற்குழு, பொதுக்குழுவின் படங்களை பார்த்து விட்டு, மேடையில் அமர்ந்திருக்கும் பொன்னையனும், வளர்மதியும் பேசி இருப்பார்கள் என்று எண்ணி "மேசை எழுத்தில்" அது அப்படி எழுதப்பட்டுள்ளது தெரியவருகிறது. பொன்னையன் மேடையில் உட்காரவைக்கப்பட்டிருந்தார் என்றாலும் பேசவில்லை என்று அதிமுக வட்டாரம் கூறுகிறது. வளர்மதி தீர்மானங்களை மட்டுமே வாசித்தார் என்றும் பேசவில்லை என்றும் கூறுகிறது.


அதாவது அந்த சிக்கலான் இதழில், உள்ள சிக்கல்னா கட்டுரையில், ஜானகி அணியின் பொன்னையனும் , வளர்மதியும், பழைய சேவல் அணியான ஜெயலலிதா அணியை சேர்ந்தவர்களை விட விசுவாசமாக இருப்பதாக "ஜெ" கூறியதாக இட்டு கட்டப்பட்ட கட்டுரை வெளிவந்துள்ளது. இதுபோன்ற தவறுகள் "அறை,குறையாக" சிலர் தங்களுக்கு தெரிந்த விவரங்களை பரப்பி, அதிக ரகசியம் தெரிந்தவர்களாக காட்டிக் கொள்வார்கள். அதை சோதித்து பார்க்க வேண்டியது ஏடுகளின் பணி.அத்தகைய தெரிந்தவர்கலேன்று நம்பப்படுபவர்கள் எம்.நடராசனும், திருச்சி வேலுசாமியும் என்பது அனைவருக்கும் தெரிகிறது.

அதாவது செவ்வாய் கிழமை வெளிவந்த இதழில், திருச்சி வேலுசாமி நேர்காணலும், நடராசன் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன. படங்களுடன் அந்த செய்தி வேலுசாமி-நடராசன் பெயர்களுடன் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி, நக்கீரனுக்கு மிகவும் வேண்டிய மூத்த ஊடகவியலாளர் எ.எஸ்.பன்னீர்செல்வம் தனது கருத்தை புதிய தலைமுரைடி.வி.யில் கூறும்போது, ஒரு ஆட்சி தனது செயல்களை பகிரங்கமாக வைக்காதபோது, ஒரு ஊடகம் அதை யூகம் செய்துதான் எழுத முடியும் என்றும், அதற்கு அந்த ஆட்சிக்கு நெருக்கமாக்கைருந்தவர்களிடம்கேட்டுதான் எழுத முடியும் என்றும் கூறி "பூனையை, பையை விட்டு வெளியே " எடுத்து போட்டு விட்டார். இப்படித்தான் அந்த தோட்டத்திலிருந்து வெளியேற்றப் பட்டவர்களின் மீது "சந்தேகம்" எழுந்துள்ளது. எப்படியோ வெளியே ஓடிவந்தவர்களுக்கும், தேர்தலில் தோற்ற முன்னாள் முஹல்வரின் கட்சிகாரர்களுக்கும் மட்டுமே இதனால் பலன். நக்கீரனுக்கு பலனா? பலவீனமா?

நக்கீரனை கைவிட்ட திமுக?

நக்கீரனை கைவிட்ட திமுக?
நக்கீரன் "ஜெ"வை தாக்கி எழுதினால் அதற்கு ஆதரவாக திமுக தலைமை வரவேண்டும் அல்லவா? அதுதானே தமிழ்நாட்டு அரசியல்? இந்த முறையும் நக்கீரன் அலுவலகத்தை அதிமுக வினர் களை முதல் மாலைவரை தாக்கும்போது, திமுக தலைவர் மதியத்திலேயே ஒரு கண்டன அறிககையை கொடுத்தார் அல்லவா? ஆனால் கலிஞர் அறிக்கையே பல கேள்விகளை எழுப்பிவிட்டன. இந்த பழம் பெறும் அரசியல்வாதி ஏன் தனது மகன் மாத்திரை தினகரனை ஆள் வைத்து எரிக்கும்போது, சும்மா இருந்தார்? அப்போது ஏன் இவர் தனது மகனிடம் இதே அறிவுரையை, அதாவது " வழக்கு" போடலாம், தாக்குதல் கூடாது என்று கூறவில்லை? என்றும் கேள்விகளை பொதுமக்கள் கேட்டார்கள். ''ஊடகத்தை தாக்குவது ஜனநாயக நாட்டில் தவறான செயல் " என்று அப்போது ஏன் இவர் கூறவில்லை? என்றும் கேள்விகள் எழுந்தன.

கலைஞர் வழக்கமாக தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர்கள் பற்றி ஒன்றை கூறுவார். ''சரக்கும் முறுக்கு, செட்டியாரும் முறுக்கு " என்பார். இந்த இடத்தில் நக்கீரன் என்ற சரக்கு முறுக்காக இருந்தாலும், அதை பற்றி கருத்தை விற்பனை செய்ய வந்த செட்டியார் கலைஞராக இருந்ததால், அது "திருப்பி" அடிக்கிறதோ? ஹைதர் அலி ஒன்றை கூறினார். அதாவது பா.ஜ.க. கட்சியின் அலுவலகத்தை திமுக முற்றுகையிட்டு, தாக்கும்போது, திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகனும், பரிதி இளம்வழுதியும் முன்னே நின்று தலைமை தான்கினார்களே? அது சரியா? என்று நம்மிடம் கேட்டார். யார் செய்தாலும் தவறுதானே? மாட்டு மாமிசம் சாப்பிடுபவர்கள் உலகமெங்கும் பல கொடி இருக்கிறார்கள்: அவர்களை இழிவாக சித்தரிகிரார்களா? என்றும் வினவுயனார். அதேபோல முஸ்லிம், தலித் தோழர்கள் சிலரும் இதையே கேட்டனர். ஜெயலலிதாவை இழிவு படுத்துவதாக எண்ணிக்கொண்டு, அவர்கள் உணவு பழக்கத்தை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதே வரகளது வாதம்.

ஆனால் கலைஞர் எப்படி அறிக்கை விட்டார் தெரியுமா? நக்கீரனிடமிருந்து ஒரு வேண்டுகோள் வந்த பிற்பாடு, வலியுறுத்தல் வந்த பின்பே, வெளியிட்ட செய்தியை பற்றி கோபப்பட்டு விட்டு, பிறகே அவர் அறிக்கை தந்தார் என்கிறது ஒரு செய்தி. சரி. அதன்பிறகு, நக்கீரன் அலுவலகத்தார் "தளபதி ஸ்டாலினை" அணுகி அவர் வந்து உடைக்கப்பட்ட அலுவலகத்ஜ்தை பார்வையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அடஹ்ர்கு அவர் "மறுமொழியே" சொல்லவில்லை என்றும் ஒரு செய்தி வந்துள்ளது. அப்படியானால் நக்கீரனை திமுக கை விட்டு விட்டதா?