Tuesday, November 3, 2015

ராமேஸ்வரம் கரையில்,சாலையில் எண்ணை வழிந்தோடி, அய்யய்யோ.....03-11-2015.

ராமேஸ்வரம் கரையில்,சாலையில்  எண்ணை வழிந்தோடி, அய்யய்யோ.....03-11-2015.
---------------------------------------------------------------------------------------------------------------------
      இன்று காலை 10 மணியிலிருந்து ஒரே அக்கப்போர். ராமேஸ்வரத்தில, பக்தர்கள் முதலில் குளிக்க வரும் இடம்" அக்கினி தீர்த்தம்". அங்க குளிக்க முடியல்ல. ஏன்? ஒரே எண்ணையா வழியுது. எங்கிருந்து வந்தது இவ்வளவு எண்ணை? எல்லாம் கடலுக்கு சென்று திரும்பிய படகுகள் பக்கதிலிருந்துன்னு சொன்னாங்க. அது என்ன? படகுகள் பக்கத்தில போயி பார்த்தா, அப்படி ஒரு எண்ணை குளம். ஏன்? இன்னிக்கு கரைக்கு வந்த படகுகள் எண்ணிக்கையில் குறிப்பிட்ட படகுகளிலிருந்து எண்ணை வடியுது. ஏன் அப்படி? அவை எல்லாமே "பிடிச்சிட்டு வந்த மீன்கள்ட்ட" இருந்து வடியுது.ஏன் அப்படி மீன்கள்ட்ட இருந்து எண்ணை வடியணும்?  அது என்ன மீன்? எண்ணை வடியற மீன்? அதுக்கு பேரு "பேச்சாள" மீன். ஒரு படகுல 10 டன்,20 டன் எடையுள்ள பேச்சாள மீனு வந்து இறங்கி இருக்கு.,பேச்சாள மீனுக்கு பேரே "பேச்சாள ஆயில் மீனு". அதாவது "எண்ணை மீன்". அது வழக்கமா ஜனவரி மாதம் முதல்தான் கிடைக்குமாமே? இப்பவே எப்படி இவ்வளவு வந்தது?.

       அதுதான் கதை. இப்பமே கடலுக்குள் சென்று, சிலரால இந்த பேச்சாள ஆயில் மீன "அள்ளிக்கிட்டு" வர முடிஞ்சிருக்கு. அது எப்படி முடியும்? அவங்க "ரெட்டை மடிக்காரங்க". அப்படினா "தடை செய்யப்பட வலையான ரெட்டை மடிய" பயன்படுத்தறவங்க. அந்த வலையத்தானே இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களும் எதிர்க்கறாங்க? ஆமாம்.ஆமாம். அப்படிப்பட்ட "ரெட்டைமடி வலைய "  பயன்படுத்தக் கூடாதுன்னு எல்லா அரசாங்கங்களும், ஊடகங்களும், மீன் வளத் துறையும், சொல்லி வர்றாங்களே? ஆனாலும் கூட, இவர்கள் பயன்படுதறாங்களே ? அது எப்படி?  அரசாங்கத்தையும் ஏமாத்தி, இரண்டு நாட்டிலையும் உள்ள பொதுவான மீனவர்களையும் ஏமாத்தி, சட்ட விரோதமாக, இருக்கும் மீன்களை எல்லாம் ஒரேயடியாக "அள்ளிக்கிட்டு" வரக்கூடிய இந்த ரெட்டை மடி வலையை பயன்படுத்தறவங்க யாரு? அவங்களுக்கு "துணை" நிற்பது யாரு?

     சரி. இந்த முறை எத்தனை படகுகள் இப்படி ரெட்டை மடி வலையோட கடலுக்கு போய் வந்தது? 150 படகுகள் இன்று இந்த வலைய பயன்படுத்தி, "பேச்சாள ஆயில் மீனை" பிடிச்சிட்டு வந்திருக்கு. அதனால தான் இந்த மீனால கரை முழுக்க ஒரே "எண்ணையா" வடியுது. அப்படியானா ஒரு படகுல 20 டன் மீன் பிடிச்சாங்க. 150 படகுல 300 டன் மீன் வந்து இறங்கிருசசு. அதனாலதான், ராமேஸ்வரம் கரை முழுக்க ஒரே "எண்ணையா" ஊததுது.இதை மறைமுகமா "ஆதரிப்பது" அங்க உள்ள "மீன் வளத் துறைதான்". அதன் அதிகாரிகள்தான். அவங்களுக்கு "நல்ல கமிசன்" போயிரும்.அக்கினி தீர்த்தம் குளிக்க முடியாம எண்ணை வடிவதுனால அங்க உள்ள "இந்து மக்கள் கட்சி" புகார் கொடுத்தாங்க. அதனால அதை ஒப்பேத்த, காவல்துறை துணை ஆணையர்,முத்துராமலிங்கம் சமரச பேச்சு மாலைல நடத்தறாரு. அவருக்கும் நல்ல பலன் கிடைக்குமே? 

    இது மட்டுமா? அங்க உள்ள சாலைகளில் இந்த எண்ணை வடிந்து, வாகனங்கள் போக முடியல்ல. இரு சக்கர வாகனங்கள் "சறுக்குதே"?. இந்த அளவு மோசமான நிலைக்கு யாரு பொறுப்பு? மீன்வளத் துறை அமைச்சர்தான். அவருதான் அவரு ஊர்ல, நகாப்பட்டினததுல,"ஹை ஸ்பீடு எஞ்சின" இறக்கி விட்டிருக்காரே? அதுக்கு போட்டி போட ராமேஸ்வரம் மீனவர்கள் இதை செய்ய மாட்டாங்களா? அடப்பாவிகளா ஒட்டுமொத்தமா கடலையே  "காலி" பண்றீங்களே?

Monday, October 26, 2015

இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்"

அதிர்ச்சி தரும் செய்தி. இசைப்பிரியாவின் கதை என்ற பெயரில் "பொய்களை" படமாக்கி பணம் பண்ணும் ஆளா? இசைப்பிரியாவின் சொந்த சகோதரியின் கதறல் கேட்கிறது.

போர்க்களத்தில் ஒரு பூ- "இயக்குனருக்கும் எம்தமிழ் உறவுகளுக்கும் இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்"

Bookmark and Share
திருமதி வாகீசன் தர்மினி - இங்கிலாந்து:-
போர்க்களத்தில் ஒரு பூ- "இயக்குனருக்கும் எம்தமிழ் உறவுகளுக்கும் இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்"

போர்க்களத்தில் ஒரு பூ என்னும் பெயரில்  இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக்கியுள்ளதாக்க் கூறி இசைப்பிரியாவின் வாழ்க்கையில் நடக்காத சம்பவங்களை மட்டுமே படமாக்கி வெளியிடத் துடிக்கும் இயக்குனர் கணேசன் அவர்களுக்கும் எம் தமிழ் உறவுகளுக்கும் இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்:
 
இசைப்பிரியா அல்லது இசையருவி எனும் புனைபெயரைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்து இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரண்டைந்த பொழுது இரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட திருமதி சோபனா அவர்களது புகைப்படங்களும் கானொளிகளும் ஊடகங்களினால் நாகரிகமற்ற முறையில் புனை கதைகளுடன் வெளிவருவது குறித்து எமது மனவருத்தத்தினையும் கண்டனத்தினையும் ஏற்கனவே தமிழ் ஊடகங்களில் இசைப்பிரியா குடும்பத்தினர் சார்பாக நாம் தெரியப்படுத்தியிருந்ததை நான் திரும்பவும் இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன்.
 
எனது தங்கையான இசைப்பிரியாவை நாம் எல்லோரும் அறிவோம்.அவர் தமிழர் மீதான இறுதியுத்தத்தில் இலங்கை இராணுவத்தினரால் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டார்.அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முழுநேர உறுப்பினராக இணைந்து ஊடகத்துறையில் பணியாற்றியிருந்தார்.அவராக விரும்பி போராட்டத்தில் இணைந்தவர்.அவர் இதயபலவீனமானவர் என்பதனால் குடும்பத்தினரான நாம் அவரை எம்முடன் வாழ்வதையே விரும்பியிருந்தோம். விடுதலைப் புலிகள் அமைப்பினரும் அவரை வீடு செல்லவே பணித்திருந்தனர்.ஆனால் இசைப்பிரியாவோ தான் ஏதாயினும் தமிழருக்கு செய்யவேண்டுமென அமைப்பிலேயே இருந்து பத்தாண்டு காலம் கடும் பணியாற்றியிருந்தார். திருமணம் செய்து ஒரு குழந்தையின் தாயாரும் ஆவார்.எமது குடும்பம் எக் கால கட்டத்திலும் பொருளாதார ரீதியில் பின் தங்கியிருந்ததில்லை.கடைசி யுத்த காலத்தில் கூட நாம் போதியளவு பணத்தினை எம் வசம் வைத்திருந்தோம். நாம் குழந்தைப் பிள்ளகளுடன் இருந்த படியால் பிள்ளைகளுக்கு தேவையான உணவுகளையே பெரிய பொதிகளில் சேகரித்து இடத்திற்கு இடம் காவிச் சென்றோம். இசைப்பிரியாவிற்கும் எனக்கும் மே 2009 மாத த்தில் தொடர்பு இல்லாமல் போய்விட்டிருந்தது. நான் அவரைப் பிரியும் போது எனது கையில் 36நாட்களான எனது மகள் இருந்திருந்தாள்.இறுதியான அந்த 03 வாரங்களும் இசைப்பிரியாவிற்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.ஆனால் எமது கடைசித் தங்கை மே மாதம் 16ம் திகதி வரை இசைப்பிரியாவுடன் இருந்திருந்தார். அவர் சொன்ன தகவல் "இசைப்பிரியா தனது பையில் எனது மகளுக்கு ஆக ஒரு SMA tin ஐ வைத்தே இருந்தாராம்.என்னைச் சந்திக்கும் பொழுது தருவதற்காக"
 
போர்க்களத்தில் ஒரு பூ படத்தினைப் பற்றிய செய்தியை கேட்டால் ஏதோ குடும்பக் கதையை எழுதுகிறாரே என நினைக்கிறீர்களா!!!!
 
ஆம் மேலுள்ளது இசைப்பிரியாவின் வாழ்க்கையின் உண்மைக்கதை. போர்க்களத்தில் ஒரு பூ இயக்குனர் எழுதிய புனைகதையோ வேறு.உண்மைக் கதை கொஞ்சமாவது உங்களுக்குத் தெரியவேண்டுமென்பதற்காகவே இப்படி ஆரம்பித்துள்ளேன்.
 
எனது தங்கையின் கதை தமிழகத்தில் திரையாக்கப்படுகிறதென தமிழகத்திலுள்ள நண்பர் ஒருவர் மூலமாக 2014ம் ஆண்டு ஜனவரி மாதமளவில் அறிந்தேன்.அந்த நிமிடமே அந்த இயக்குனருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். எமது குடும்பக் கதையைப் படமாக்க எமக்கு விருப்பமில்லை.எம்மிடம் அனுமதி பெறாமல் இதனை நீங்கள் ஆரம்பித்தது தவறெனச் சுட்டிக்காட்டினேன்.எமது குடும்பத்தின் கதை தங்களுக்கு தெரியச் சந்தர்ப்பமில்லை.திரைப்படத்தில் வருவது இலகுவாக மனங்களில் பதிந்துவிடும்.ஏனெனில் எனக்கு வீரபாண்டியகட்டப்பொம்மனைத் தெரியாது,அவரது வேடம் பூண்ட சிவாஜி கணேசனையும் அப்படத்தில் சொல்லப்பட்ட கதையையுமே நான் இன்று வரை அவரின் வரலாறாக நினைக்கிறேன்.எனது தங்கை இறுதி வரை அவராகவே வாழ வேண்டும் என்பது குடும்பத்தாரின் விருப்பம்.எமது அழகோவியத்தை வேறொருவர் உருவில் காண எமக்கு விருப்பமில்லை.அதைவிட அவருக்கு இறுதியாக என்ன நடந்தது என்பதற்கான எந்த ஆதாரமுமே இல்லை.ஆனால் அவரது மரணம் இறுதி யுத்தக் குற்றத்திற்கான ஶ்ரீலங்காவிற்கெதிரான ஆதாரமாகவுள்ளது.பிழையான கருத்துக்களால் அவ் ஆதாரம் சிதைக்கப்படக்கூடாது.இவற்றை இயக்குனர் கணேசன் அவர்களிடம் விளங்கப்படுத்தினேன்.
 
அதற்கு அவர், கனடாவில் உள்ள எமது சித்தி ரஞ்சினி என்பவர் இப் படம் எடுப்பதற்கு தனக்கு அனுமதி தந்தாகவும், எம்மை எல்லா இடத்திலும் தேடியதாகவும், தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் , அதனாலேயே சித்தியிடம் தான் பேசியதாகவும், சனல் 4ல் வந்த செய்திகளை வைத்தே தான் கதை அமைத்துள்ளதாகவும், இசைப்பிரியாவிற்கு நடந்த கொடுமை வெளியுலகிற்கு கொண்டு வரப்படவேண்டுமென்றே தான் இப் படத்தினை எடுப்பதாகவும் தெரிவித்தார்.சனல் 4ல் நாம் லண்டனிலிருக்கும் செய்தி எமது செவ்வியுடன் வெளியானதே அப்படியிருக்க நீங்கள் ஏன் கனடாவிலிருக்கும் சித்தியிடம் அனுமதி பெறவேண்டுமெனக் கேட்ட பொழுது அவர் எவ்வித பதிலுமளிக்கவில்லை.அந்தச் சித்தி சிறு வயதிலேயே வெளிநாடு சென்றவர்.இசைப்பிரியாவின் வரலாறு அவருக்கு தெரியாது என்பதையும் தெளிவுபடுத்தினேன்.தான் இலாப நோக்கில் படம் எடுக்கவில்லை தேசப்பற்றில் எடுப்பதாகச் சொன்னார்.
நாம் முள்ளிவாய்க்காலில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் எல்லாம் எங்கே இருந்தீர்கள் எனக் கேட்ட பொழுது ,தான் தேசப்பற்றாளன் எனவும் ,தலைவர் பிரபாகரனை தான் 1984ம் ஆண்டே சந்தித்துள்ளதாகவும், தானும் பாதிக்கப்பட்ட தமிழன் எனவும் தன்னைத் தடுக்க வேண்டாமெனவும் தான் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் இந்தப் படத்தை எடுத்தே தீருவேனெனவும் கூறினார்.என்னால் தொடர்ந்து அவருடன் வாக்குவாதம் செய்யமுடியவில்லை, அவரது பேச்சு என்னை மிகவும் கலங்கவைத்தது.தொலைபேசியினைத் துண்டித்து விட்டேன்.எனது நண்பரை என் சார்பாக அவருடன் பேச சொல்லியிருந்தேன்.அவரும் எமது நிலமையை அவரிடம் தெளிவுபடுத்தியிருந்தார்.இசைப்பிரியாவை அந்த இயக்குனர் மதித்திருந்தால் நிச்சயமாக அவ் இலக்கத்தில் எம்முடன் தொடர்புகொண்டிருப்பார்.இன்று வரை அந்த இலக்கம் இணைப்பிலேயே உள்ளது.அவருக்கு எமது உணர்வுகளின் வலி பெரிதாகத் தெரியவில்லை.அல்லது புரியவில்லை.
 
கடந்த ஆண்டு பங்குனி மாத இறுதியில் கனடாவில் ட்ரெய்லர் வெளியிடமுற்பட்ட பொழுது நலன்விரும்பிகள் உதவியுடன் தடுத்தோம்.அப்பொழுதும் எமது அம்மா அங்கிருந்த எமது உறவினரின் தொலைபேசி மூலம் கணேசன் அவர்களுடன் கதைத்திருந்தார்.இப்படத்தினை இயக்கவோ வெளியிடவோ நாம் அனுமதிக்கமாட்டோமெனத் தெளிவாக கூறியிருந்தார்.
 
அடுத்து பிரான்ஸ் வந்த பொழுது ஒன்றரைக் கோடி கொடுத்தால் படம் எடுப்பதை நிறுத்திவிடுவதாக கூறியிருந்தார்.ஒரு தேசப்பற்றாளன் தனது தேசப்பற்றை அங்கு விலை பேசியிருந்தார்.லண்டனில் இசை வெளியிட முற்பட்டார்.வெளியீட்டாளர்கள் எமது வேண்டுகோளை ஏற்று அதனைத் தடுத்துவிட்டனர்.
 
இதிலிருந்தே நாம் ஒன்றைத் தெளிவாக உணரமுடிகிறது.பல வழிகளிலும் நாம் தடுக்கிறோம் இதனை கணேசன் பல சந்தர்ப்பங்களில் நன்கு அறிந்திருந்தார்.எமது நிலையைத் தயவாக கூறியிருந்தோம்.இசைப்பிரியாவின் உண்மைக் கதை என்று படம் எடுக்க வேண்டாமெனத் தெளிவாக கூறியிருந்தோம்.இவர்கள் என்ன செய்யமுடியுமென தொடர்ந்தும் அலட்சியத்தையே கடைப்பிடிக்கிறார்.
 
ஏப்ரல் 2014ல் குமுதம் இணைய தளத்தில் நானும் அம்மாவும் எமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தோம்.தடுக்குமாறு தமிழகத்தைக் கேட்டிருந்தோம்.
 
ஆனாலும் கணேசன் இசைவெளியீட்டைச் செய்திருந்தார்.ஒரு உண்மைக் கதை படமாக்கப் படும் பொழுது அதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையோ அல்லது இது இசைப்பிரியாவின் உண்மைக் கதை தானோ என்று அறியாமல் இசைஞானியும் பாட்டெழுதி இசையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.அது அவர் இசைப்பிரியா என்னும் பெண்ணுக்கு செலுத்திய அஞ்சலி அல்லது இசைவணக்கம்.மிகவும் அருமையான பாடல்கள்.அதைக் கூட இந்த கணேசன் என்னும் கன்னட இயக்குனர் துஸ்பிரயோகம் செய்துள்ளார். வசூலுக்காகவும் கழிவிரக்கத்தைத் தூண்டுவதற்காகவும் அவர் அமைத்த புனைகதையை புனிதமாக்க உண்மையாக்க அம்மேதையின் இசையை வீண டித்துள்ளார்.
 
ஒட்டுமொத்த தமிழினமும் இப் படத்தினைத் தடுத்து நிறுத்த எமக்கு உதவ்வேண்டுமெனக் கேட்டு எமது அம்மா பேசியிருந்த ஒலிப்பதிவு ஆனது குளோபல் தமிழ் செய்திகள் எனும் இணையதளத்தில் எமது உறவினர் ஒருவரின் உதவியுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
 
இனி இப்படம் இயக்கி முடிக்கப்படாது எனும் நம்பிக்கையோடு நாம் இருக்கும் பொழுது,இப்படம் தணிக்கை குழுவால் நிராகரிக்கப்பட்ட செய்தியை அறிந்தோம்.இவ்வளவு முயன்றும் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதே என மிகவும் அதிர்ச்சியாகவிருந்தது.மிகுந்த மனவுளைச்சலுக்கள்ளானோம்.
 
அண்மையில் ஐநா மன்றுக்கு இப் படத்துடன் கணேசன் கிளம்பியிருந்தார்.படத்தினை வெளியீடு செய்யவிளைந்தார். மீண்டும் எமது போராட்டம் ஆரம்பித்துவிட்டது.அங்கு சிலருக்கு இப்படத்தினை 20நிமிடமாகச் சுருக்கிப் போட்டுக்காட்டியுள்ளார்.அதைப் பார்த்து விட்டு வந்த சில பெண்கள் எம்முடன் மறுநாளே தொடர்பு கொண்டு பேசினர்.இவ் இயக்குனருக்கு எதிராக மானநட்ட வழக்குப் போடுங்கள்.இப்படத்தினை வெளிவரவிடாதீர்கள்.உங்கள் குடும்பக் கதை, போராளிகளின் தியாகம்,ஒழுக்கம் எல்லாமே இதில் உண்மைக்குப் புறம்பாக க் காட்டப்பட்டுள்ளது என்றார்கள்.
 
போர்க் களத்தில் ஒரு பூ என்னும் திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள இசைப்பிரியாவின் குடும்ப உறுப்பினர்களான பெற்றோர்,மூத்த சகோதரியான என் குடும்பம், இளைய சகோதரி ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தில் அரசியல் புகலிடம் கோரி அகதி அந்தஸ்தில் வாழ்கிறோம்.சொந்தநாட்டில் எமது உயிருக்கு பாதுகாப்பில்லை.அப் படியிருக்க போராட்டத்தில் இணைந்திராத இசைப்பிரியாவின் மூத்த சகோதரியான என்னை இப்படத்தில் போராளியாக க் காட்டப்பட்டு ஏற்கனவே தந்தை இல்லாத என் குழந்தைகளின் தாயின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளார்.ந ந்திக் கடல் வரை உடுப்புப் பொதியில் குழந்தைக்கான பால்மாவுடன் திரிந்த இசைப்பிரியாவை பால்மாவுக்கு கடைகடையாக பிச்சை எடுப்பதாக க்காட்டியுள்ளார்
இறுதி வரை வெளிநாட்டில் வாழ்ந்த எம் தமிழ் உறவுகள் எமக்காக நிதியுதவி செய்துகொண்டேயிருந்தார்கள்.கடைசிவரை கஞ்சியாவது மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.இந்த விநியோகத்திலும் ஒழுங்கமைப்பிலும் உணவுப் பொருட்களை இடத்துக்கிடம் மாற்றுவதிலும் ஈடுபட்டு எத்தனையோ உயிர்கள் மாண்டுள்ளன.அவர்கள் தியாகங்களை இப் படம் கொச்சைப்படுத்துகிறது.நானோ இசைப்பிரியாவோ போராளியாக இணையும் போது எம் தாயார் மிகுந்த மகிழ்வோடு அதை வரவேற்பதாக க் காட்டப்படுகிறதாம்.எம் தாயின் தாய்மையும் மென்மையும் எமக்கான அர்ப்பணிப்பும் இவ் இயக்குனரின் புனைகதையில் நசுக்கப்பட்டுள்ளது.மறுவீடு செல்லும் மகளுக்காக கண்ணீர் சிந்திப் பிரிவு வலியில் தவிப்பவள் தமிழ் அன்னை.தன் பெண்,  போராளியான செய்தி கேட்டு தோள்களைக் குலுக்கிக் கொள்ள எம் அம்மா ஜான்சி ராணி அல்ல.கடந்த 17 ஆண்டுகளாக இசைப்பிரியாவிற்காக ஏக்கங்களையும் கனவுகளையும் நினைவில் மட்டுமே சுமந்து கொண்டிருப்பவள்.தான் ஆரத்தழுவ என் மகள் வேண்டும்.நான் சோறு ஊட்ட என் மகள் வேண்டும்.என தேடும் ஒரு சாதாரண தாய்.அந்தத் தாயின் உண்மைத் தன்மையும் அங்கு போலியாக்கப்பட்டுள்ளது.
 
பிறகெப்படி இப்படம் இசைப்பிரியாவின் உண்மை வரலாறு ஆகும்?
 
இசைப்பிரியா இராணுவத்தால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக இப் படத்தில் காட்டப்படுகிறதே அதற்கு கணேசனிடம் ஆதாரம் இருக்கிறதா?இதை நாம் கணேசனிடம் மட்டுமல்ல சனல் 4 உள்ளிட அனைவரையுமே கேட்டுள்ளோம்.எவராலும் எமக்கு பதிலளிக்க முடியவில்லை.அதனால் தான் நாம் கேட்கிறோம் இசைப்பிரியாவிற்காக சோடிக்கப்பட்டுள்ள வரலாறு என்றுமே உண்மை வரலாறு ஆக முடியாது.ஆகையால் இசைப்பிரியாவின் உண்மை வரலாறை எவருமே படமாக்க முடியாது.
 
இந்த விடுதலைப் போராட்டத்தில் எத்தனை ஆயிரம் போராளிகள்,பொதுமக்கள் மரணமடைந்துள்ளார்கள்.தியாகம் என்பது எல்லாராலும் இணைந்து செய்யப்பட்டது.இசைப்பிரியா,இசைப்பிரியா என எதற்கெடுத்தாலும் கோசமிட்டு எம் மன ரணத்தை திருப்பி திருப்பிக் கொத்திக் கிழிப்பதுடன் ஏனைய மாவீர ர்கள் பொதுமக்களின் தியாக கங்களைச் சிறுமைப் படுத்தாதீர்கள்.
 
இறுதியாகத் தயவாகத் தெரியப்படுத்துகிறோம் இத் திரைப் படம் வெளிவர என்றுமே அனுமதிக்க மாட்டோம்.கனடா வாழ் எம் உறவுகளே ஐரோப்பாவில் கணேசன் சந்தித்த எதிர்ப்பை விட பலமடங்கு எதிர்ப்பைக் கொடுத்து , கணேசன் அவரது தவறை உணர்ந்து திரைப்படத்தினை முற்று முழுதாக அழித்துவிடுவதற்கான ஒழுங்கை மேற்கொள்வீர்களென நம்புகிறேன். என் தங்கையின் மானம் பறிபோவதை திரைக்கதையாக்கி இயக்கி ஒருவன் கொண்டு வருவான்,அதனை நாம் பார்த்து விட்டு அனமதி வழங்க வேண்டுமா? எந்த ஊர் நியாயம் ஐயா இது? அங்கு காட்சிகளில் வருவது இசைப்பிரியா அல்ல, வேறு ஒரு பெண் அவரைப் போல் நடித்துள்ளாள்.ஆதலால் பார்க்கலாம் என்கிறாயே?! உன் மனக் குரோதம் தான் என்ன மனிதா? நீ யாரென உன் வாயாலேயே வந்துவிட்டதே.....இது வெறும் நடிப்பு என்றால் ஏன் அதை இந்தியா தடை செய்தது? வெறும் நடிப்பால் எப்படியப்பா இந்திய இலங்கை நட்புறவு பாதிக்கப்படும்? இதனை நீ இந்திய அரசிடம் கேட்டிருக்கலாமே இயக்குனர் கணேசன் அவர்களே!? நாம் சாதாரண குடும்பப் பெண்கள், எம்மால் என்ன செய்ய முடியுமென்று தானே எம்மிடம் இத்தகைய கேள்விகளை கனேடிய CMR வானொலி மூலம் கேட்டீர்கள். ஆம் நாம் சாதாரண குடும்பப் பெண்கள் தான். எம் வாழ்க்கையை நீங்கள் படமாக்க முனையாதீர்கள்.இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்.எங்களை விட்டு விடுங்கள்.
 
தமிழீழப் பெண்களின் மானம் சிங்கள இனவெறிக் காடைகளால் அழிக்கப்பட்டது இனவழிப்பு.நான் தமிழன்,பாதிக்கப்பட்ட தமிழன் என்று கூறும் இயக்குனர் கணேசன்,அவருக்கு பலமாக இருக்கும் பிற தமிழர்களால் அதே தமிழீழப் பெண்களின் மானப் பறிப்பு படமாக்கப்பட்டு திரையேற்ற அரங்கும் ஆதரவும் தேடப்படுவது என்ன அழிப்பு? பதில் தேடுங்கள் எம் தமிழ் உறவுகளே....
 
ஏனெனில் நாளை இது உங்கள் வீட்டுக் கதவையும் தட்டப் போகும் பிரச்சனை.
 
- திருமதி வாகீசன் தர்மினி.
இங்கிலாந்து.


-- 
DHARMINI.VAHISAN
அனுப்புக HomeSrilankan NewsArticles

Friday, September 11, 2015

தமிழ் எம்.பி.களுக்கு இலங்கையில் பேச தைரியம் இருக்குமா?

தமிழ் எம்.பி.களுக்கு  இலங்கையில் பேச தைரியம் இருக்குமா?
----------------------------------------------------------------------------------------------
       இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு  எம்.பி.க்களில்,குறிப்பாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தைரியமாக அல்லது நேர்மையாக அல்லது வாக்குகள் பெறுவதற்கு கொடுத்த வாக்குகளின்படி, தமிழர்கள் மீது நடத்தப்பட்ட "இன அழிப்பு போரில், நடந்த போரகுற்றங்களை விசாரிக்க, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உரூவாக்கிய "மூவர் விசாரணைக் குழு" அறிக்கையின் அடுத்த கட்டமாக  அதை அமுலாக்க " பன்னாட்டு பங்கேற்புடனான தொடர் செயல்பாட்டு       பொறியமர்வை" ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் பேசுவதும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும், சிங்கள சாதியான "உள்நாட்டு விசாரணை மட்டுமே" என்பதை எதிர்க்கவும் செய்வார்களா?

              இந்தப் பணியை செய்ய எதிர்க்கட்சி தலைவராக் பொறுப்பேற்றுள்ள இரா.சம்பந்தனோ, சுமந்திரனோ, துணை எதிர்க் கட்சி தலைவராகியுள்ள மாவே   சேனாதிராஜாவோ, செய்ய மாட்டார்கள் என்பதாக ஒரு பொதுக் கருதது இருக்கிறது. வெளியே பேசிவரும், டெலோ உறுப்பினர்களோ, பிளாட் உறுப்பினரோ, நாடாளுமன்றத்திலும் பேசுவார்கள் என்பதும் சந்தேகமில்லை. ஆனால், கிளிநொச்சி சிரிதரனோ, மற்ற தமிழரசுக் கட்சி உறுப்பினர்களோ பேசுவார்களா? மலையகத்தை சேர்ந்த இன்றைய அமைச்சர்களான மனோ கணேசனோ, ராதாகிரிஷ்நனோ  பேசுவார்களா? அழுத்தம் கொடுப்பார்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டே ஆகவேண்டும்.மனோ கணேசன் ஏற்கனவே நடந்த போரில் " காணமல் போனவர்கள் பற்றியும், வெள்ளை வாகன கடத்தல் பற்றியும் ஐ.நா.விற்கும் பன்னாட்டு சமூகத்திற்கும் விடாப்பிடியாக எடுத்து சென்றவர்" என்பதால் இப்போது "பன்னாட்டு பொறியமைவு"வேண்டும் என்று அவர் கேட்டால் மட்டுமே அது சரியான தொடர்ச்சியாக இருக்கும்.

     எப்படி அரசாங்கத்தில் உட்கார்ந்துகொண்டு அரசாங்கத்தின் ஆட்களுக்கு எதிரான முடிவை பேசமுடியுமா? என்று கேட்பீர்களானால்,அங்கெ சிங்கலதிற்குள் இப்போது என்ன நடக்கிறது? இன்று ரணில்விக்ரமசிங்கே என்ற பிரதம அமைச்சரின் இந்திய பயணத்தை ஒட்டி, பிரதமர் அங்கே சென்று, இந்தியாவுடன் வர்தக உறவுக்காக "சீபா" என்ற ஒப்பந்தந்தில் கையெழுத்து போட்டாரென்றால் அதை நாங்கள் எதிர்ப்போம் என்று, இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க பேசியுள்ளார். சிங்கள எம்.பி.களுக்கு உள்ள அந்த "தைரியம்" தமிழர்களுக்கு வருமா?

விக்னேஸ்வரனின்பதிலில் ,நீதி நெருப்பாகிறது

விக்னேஸ்வரனின்பதிலில்,மாவே,சம்பந்தன்,சுமந்திரன் தோற்க,நீதி நெருப்பாகிறது
----------------------------------------------------------------------------------------------------------------------------------
    இன்று செப்டம்பர் 11 ஆம் நாள். இலங்கை அரசிடம்  ஐ.நா.மனித உரிமை கவுன்சில், தங்களது 2014 ஆம் ஆண்டின் தீர்மானப்படி[ இந்தியா புறக்கணிதத தீர்மானம்]  இலங்கையில் நடந்த "போர்குற்ற விசாரணை"க்கு "பன்னாட்டு விசாரணை" ஒன்றை  செயல்படுத்த," மூன்று பேர் கொண்ட குழு" வை நியமித்ததை ஒட்டி, மூவர் குழு கொடுத்துள்ள "அறிக்கையை"  கையளிக்கிறது. இந்த நேரத்தில் இலங்கை வெளிவிவ்கார அமைச்சரான மங்கள சமவீரா, தன்னை சந்தித்த "மனித உரிமை அமைப்பின்" ஆர்வலர்களிடம்," ஐ.நா.போர்குற்ற விசாரணை அறிக்கையின் அடிப்படையில், இன்றைய இலங்கை அரசு, "ஒரு உள்நாட்டு பொறியமைவை ஏற்படுத்தி, அதன் மூலம் உள்நாட்டு நீதியரசர்களைக் கொண்ட நீதிமன்றத்தை அணுகி, போர்குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி தரத் தயாராக இருக்கிறது" என்று கூரியுள்ளார்..

      அதாவது, தெளிவாக, "பன்னாட்டு நீதியரசர்களையோ, பன்னாட்டு  நீதிமன்றதையோ, அணுக விடமாட்டோம். பன்னாட்டு சக்திகளை உள்நாட்டு விசாரணையில் தலையிட அனுமதியோம். ஐ.நா. வின் விசாரணை செய்த மூன்று பேர் கொண்ட குழுவை, உள்நாட்டு விசாரணையில் தலையிட விடமாட்டோம்" என்றும் தெளிவாக கூறியுள்ளார். அதாவது மஹிந்த ராஜ பக்செவின் அதே முடிவில்தான் மைத்திரிபால சிறிசேன அரசும் உள்ளது. அல்லது ரணில் விக்ரமசிங்கேயும் இருக்கிறார் எனபது தெளிவாக் புரிகிறது.இந்த செய்தியை  வடக்கு மாகான சபையின் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் "தினக்குரல்" இதழுக்கு கொடுத்த நேர்காணலில் கூறியுள்ளார். அதுபற்றி கூறும் முன்னாள் இலங்கை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் விக்னேஸ்வரன், " இலங்கையின் உள்நாட்டு விசாரணையை நடத்தும் இலங்கையர்கள்,நிச்சயமாக தங்கள் நாட்டு ராணுவத்தினர் மீது போர் குற்றங்களை  நிரூபிக்க போவதில்லை." என்று கூறுகிறார்.

                     மேலும் விக்னேஸ்வரன், "ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சில ஏக்கர்  நிலங்களை விடுவிப்பார்கள். சில கைதிகளை விடுவிப்பார்கள். காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதாக கூறுவார்கள்.சிறிய அளவில் ராணுவத்தை குறைப்பார்கள்.இவையெல்லாம் அவர்கள் செய்யவேண்டிய கடமைகள. ஆனால் ஆபத்தான போர்குற்றங்கள் என்னவாயிற்று? என்றுமே எந்த இலங்கை நீதியரசரும், ராணுவத்திடம் குற்றம் காண மாட்டார்." என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

     இப்படியாக அங்குள்ள சூழல் இருக்கும்போது, ஊடகவியலார கேட்ட  கேள்வி,"உங்கள் மீது  தமிழரசுக் கட்சி தலைமை நடவடிக்கை  எடுக்கபோகிறார்களே?" என்று கேட்டதற்கு, " தான் பன்னாட்டு விசாரணையை நடத்தி பாதிக்கபட்டோருக்கு உண்மையையும், நீதியையும் வாங்கி தருவேன்  என்ற வாக்குறுதியின் மூலம் வடக்கு மாகாண சபைக்கு மக்களால தேர்வு    செய்யப்பட்டவன்.நான் கடந்த 23 மாதங்களாக  இந்த மக்களுடன் வாழ்ந்து, அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவற்ற குறைந்த பட்ச வாய்ப்புகளுடன் போராடி வருகிறேன். இந்த நேரத்தில் தமிழரசுக் கட்சியினர் எடுக்கும் நடவடிக்கை பற்றி நான் கூற என்ன இருக்கிறது? அவர்கள் தாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயல் வேண்டும் " என்றார்.

         தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவே சேனாதிராஜா, இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், சுமந்திரன் உடன் சேர்ந்து, இலங்கை அரசின் இந்த "தமிழர் விரோத போக்கை" ஆதரித்து, செயல்படுகிறார்கள். அவர்கள் மீதும் தமிழ் மக்கள் கடும் கோபத்துடன் இருக்கிறார்கள். மக்கள் போராட்டம் வெடிக்கும் சாத்தியங்களே உள்ளன. அமெரிக்காவும், இலங்கை அரசின் நிலைகளுக்கு துணை போய வருவது தெரிகிறது. பன்னாட்டு விசாரணை இன்னமும் முடிவடையவில்லை என்பதையும், முதல் கட்ட விசாரணையை பன்னாட்டு குழு இலங்கை நாட்டிற்குள் சென்று நடத்த மகிந்தா அரசாங்கம் அனுமதிக்கவில்லை . ஆகவே அது இரண்டாம் தரப்பு சக்திகளிடம் செய்திகளைத்  திரட்டித்தான் அறிக்கை தயார் செய்துள்ளனர்..ஆகவே மீண்டும் இப்போது, புதிய ஆட்சியாளர்கள் புதிய சிந்தனையுடன் வந்திருக்கிறார்கள் என்பது உண்மையானால், பன்னாட்டு விசாரணை குழுவை இப்போதாவது இல்ங்கை தீவிற்குள் அனுமதித்து, விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். விசாரணையில், பன்னாட்டு நீதியரசர்களை அனுமதிக்க வேண்டும். விசாரணையில், பன்னாட்டு வழக்கறிஞர்கள் இலங்கை வந்துகூட, நீதிமன்றத்தில் வாதம் செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போதுதான் "உண்மையான போர்குற்றம் ஒரு இன அழிப்பே என்பதும், அதை செய்த சிங்களம் ஆளும் கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் அமர்ந்திருப்பதும்" உலகுக்கு தெரியவரும்.

    இபபோது இன்று { 11-09-2015]காலை முதல் மலை வரை இலங்கையில் "தமிழரசுக் கட்சியின்" தலைமைக் குழு கூடி விக்னேஸ்வரன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி விவாதித்து வருகிறார்கள். விக்னேஸ்வரன் தேர்தல் நேரத்தில், "யாருக்கும் பரப்புரை செய்யமாட்டேன்" என்று கூறினார். சொல்லில் மட்டுமின்றி, செயலிலும் காட்டுபவர்களை தேர்வு செய்யுங்கள் என்றார் அதை கஜேந்திரகுமார் தனக்கு சாதகம் என்று பரப்புரை செய்தார். "வாக்குகளை சிதறாமல் போடுங்கள்" என்று விக்னேஸ்வரன் கூறியதை இதே தமிழரசுக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூலம், அது தங்களைத் தான் குறிக்கிறது என்று கூறி பரப்புரை செய்தனர்.இரு தமிழர் கட்சிகளுமே விக்னேஸ்வரனின் நேர்காணலை "இணையம்" மூலம் தங்களது பரப்புரைக்கு பயன்படுத்தினார்கள்.  ஆனால் இப்போது தங்களுக்கு எதிராக சென்றார் என்று கூறி நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்கள்.

      வருகிற செப்டம்பர் 30 ஆம் நாள் கூடும் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இந்த போர்குற்ற அறிக்கை வைக்கப்பட இருக்கிறது. அப்போது  இலங்கையும், அமெரிக்காவும், இந்திய அரசும், ஒரே நிலை எடுக்கலாம். அது "தமிழர்களுக்கு எதிரானது" என்பதை எப்படி கொண்டு செல்ல போகிறோம்?. நமக்கு இருக்கும் வலுவான ஆதாரம் இந்த முறை ஈழம் ம்வுனம் காகக வில்லை. எழுந்து விட்டது. வடக்கு மாகாண சபையின் இந்த ஆண்டு பிபிரவரி 10 ஆம் நாள் தீர்மாணப்படி, 'நடந்துமுடிந்த போர் ஒரு இன  அழிப்பு போரே' என்ற தீர்மானம் இருக்கிறது.  பத்து நாட்கள் முன்னால் விக்னேஸ்வரன் வடக்கு மாகான சபையில் போட்ட தீர்மானம் மூலம், "பன்னாட்டு பொறியமைவு மூலம் ம்ட்டுமே விசாரணையை தொடரமுடியும்" என்பது நிரூபணமாகிறது. உலகின் மனித உரிமை சக்திகள் அல்லது நாடுகள் நேர்மையாக சிந்திக்குமானால், "தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளான் வடக்கு மாகான சபையின் தீர்மானங்களை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும். அரசியல் போராட்டத்திற்கு வடக்கும், கிழக்கும் இலங்கையில் தயாராகி விட்டன. நாம் அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும். 

Thursday, September 10, 2015

"ஜெ", நிர்மலா சிதாரமானுக்கு பதில்

உலகமுதலீட்டாளர் சந்திப்பில்,"ஜெ",  நிர்மலா சிதாரமானுக்கு பதில் சொன்னாரா?
--------------------------------------------------------------------------------------------------------------------------
   முதல் நாள் சந்திப்பில், முதல்வர் ஜெயலலிதா தனது தொடக்க உரையில்,நடுவண் அமைச்சர்  நிர்மலா கூறிய செய்தியான " மகாராஷ்டிரா, டில்லிக்கு பிறகு மூன்றாவதாக அந்நிய நேரடி மூலதனம் பெற்றதில், தமிழ்நாடு இருக்கிறது" என்ற பேச்சிற்கு, பதிலுரையாக," உண்மையில் அந்நிய மூலதனம் தமிழ்நாட்டிற்கு இதைவிட அதிகம் வருகிறது. இந்தியாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றின் தலைமையகங்கள்,இருக்கும் மாநிலங்களை,தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட அளவிலான அந்நிய மூலதனத்துடன் ஒப்பிடுகிறார்கள்." என்று தனது உரையின் இரண்டாவது பாராவிலேயே கூறியுள்ளார்கள். அதாவது  நாம் குறிப்பிட்டு காட்டுவது போல,"வைப்ரன்ட் குஜராத்தை" தமிழ்நாட்டின் மூலதன இறக்குமதியுடன் ஒப்பிடாமல், இந்தியாவிலேயே "யார் அதிக வெளிநாட்டு மூலதனத்தை" ஈர்ததுள்ளார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

     அதாவது மூன்றாவது இடத்தில தமிழ்நாடு என்ற மதிப்பீடே தவறு என்பதையும், மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையும், டில்லியின் தலைநகர் டில்லியும், வெளிநாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களை கொண்டுள்ளது என்பதே அவர்களின் இடங்களில், பல்வேறு வகைகளில் வெளிநாட்டு மூலதனங்கள் வருவது அதிசயமல்ல. ஆனால் தமிழ்நாடு அதையே "தன்னிச்சையாக " சாதித்துள்ளது என்பதை முன்வைக்கிறார். அதன்மூலம் "இந்தியாவை  வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல" யாரால் முடியும் என்பதை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய சூழலில் கூறிய, "குஜராத்தின் மோடியா? தமிழ்நாட்டின் லேடியா?' என்ற சொல்லாடலை கூறாமல் கூறுகிறார்.,

               அதன்மூலம் நமக்கு புரியவேண்டிய செய்தியே, " அ.இ.அ.தி.மு.க விற்கும் பா.ஜ.க.விற்கும், இடையே வருகிற 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில், நேரடி போட்டி இருக்கும் என்பதுதான்..இதில் பா.ஜ.க.விற்கு வேண்டுமானால் "தான் தி.மு.க.வை விட " அதிகமான இடங்களை வெல்லவேண்டும் என்றும், வெல்ல முடியும் எனவும் எண்ணம் இருக்கலாம். அதாவது "தான்தான் அ.இ.அ.தி.மு.க.விற்கு போட்டியாளராக இருக்கவேண்டும்" என்று பா.ஜ.க. எண்ணுகிறது. அதற்கான பெரிய கூட்டணிக்கு முயற்சித்து வருகிறது. ஆனால் அவர்கள் அதிகம் சார்ந்து இருப்பது, "சங்க பரிவாரத்தின்" ஊரகப் பணிகளைத்தான். அதாவது தமிழ்நாட்டில் உள்ள சாதிகளை ஒவ்வொன்றாக  தங்கள் பக்கம் இழுப்பதற்கான பணிகளை" பா.ஜ.க.கணக்கு போட்டு செய்து வருவது அனைவருக்கும் தெரியும்.ஆனால் அ.இ.அ.தி.மு.க.வோ, தனக்கு எதிரியாக தி.மு.க.தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. அதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே.

     ஆகையால் நடுவண் அரசுக்கும், மாநில ஆட்சியாளர்களுக்கும் உள்ள உறவை, "ஒற்றையாட்சிக்கும், கூட்டமைப்புக்கும்" இடையே உள்ள முரண்பாடான உறவுதான் என்பதை பலரும் புரிந்துகொள்ளவில்லை. தவிரவும், இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, நடுவண் அரசுக்கு எதிராக,"கூட்டமைப்பு அரசியலை" இன்றைய அ.இ.அ.தி.மு.க. தலைமையான செல்வி.ஜெயலலிதா எடுத்துக் கூறிய அளவுக்கு யாரும் செய்யவில்லை.2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பே, "கூட்டுறவுடன் கூடிய கூட்டமைப்பு" என்ற சொல்லாடலை அறிமுகப்படுத்தி, உச்சரித்து வருவது, செல்வி.ஜெயலலிதா மட்டும்தான் என்பதையும் காணத் தவறுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தில், தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா மட்டும்தான், ஒவ்வொரு நடுவண் அரசின் செயல்களுக்கும், பதில் கொடுத்து,மாநில உரிமைகளை முன் நிறுத்தி வருகிறார்.

        ஆகவே அ.இ.அ.தி.மு.கவுடன், பா.ஜ.க.வை முடிச்சு போட்டு பேசி வருவது, "தற்காலிகமாக முஸ்லிம், கிருத்துவ வாக்குகளை"  அ.இ.அ.தி.மு.க.விற்கு எதிராக மாற்றவும், தி.மு.க.விற்கு சாதகமாக திருப்பவும்  உதவலாமே தவிர , தேர்தல் நேரத்தில் அதுவும் தோற்றுப்போகும். அத்தகைய "பரப்புதல்" அறிவாலயத்திற்கு வேண்டுமானால் இனிப்பாக இருக்கும். உண்மையில் அதற்கான நியாயங்களே இல்லை.

Tuesday, September 8, 2015

உலக முதலீட்டாளர் சந்திப்பு- எதிர்க்கட்சிகளுக்கு விளங்கவில்லையா?


       திமுக வின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் இந்த உலக முதலீட்டாளர் சந்திப்பு பற்றி ஒரு குண்டை எடுத்து போட்டுள்ளார். அதிமுக ஆட்சியாளர்கள் "சிறிய தொழிலதிபர்களை மிரட்டி, 100 கோடி முதலீடு செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். எனக்கு தகவல் உள்ளது" என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்பது அடுத்த விஷயம். ஆனால் இதில் ஒரு உண்மை வெளிவந்துள்ளது. அதாவது "உலக அளவிலான பெரிய முதலீட்டாளர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டிற்கு மூலதனமிட வருகிறார்கள்"என்றும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் "அந்நிய மூலதனம்" வந்திறங்கினால் ஏன்னாகும்? என்றும் சில சர்ச்சைகள் உள்ளன. வருகின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என்பது " ஊடகச் செய்தியாக " ஆகிவிட்டது.  அதுவும் எந்த எந்த நாடுகளிலிருந்து வருகிறார்கள் என்பதும் செய்தியாகி விட்டது. அதனால் அதை " விவாதிப்பது" நமது நோக்கமல்ல. 


        ஆனால், வருகின்ற மூலதனம், இங்கும் "கார்போறேட்களின்" செல்வாக்கை கூட்ட வருகிறதா? இங்குள்ள "உள்கட்டுமானங்களையும் பயன்படுத்தி,தேங்கி கிடக்கும் தொழில்களை எழுப்பி நிறுத்த வருகிறதா?" அதற்கான "பதில்" தளபதி ஸ்டாலினுக்கு  தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவர் யாரும் பேசாத " சிறிய தொழிலதிபர்களை" பற்றி பேசியிருக்கிறார். அந்த சிறிய தொழிலதிபர்களின் "நிலை" என்ன? தமிழ்நாட்டிலுள்ள "சிறு,குறு, தொழிலதிபர்கள்" தங்களது தொழில்கள் சமீபகாலமாக "தேங்கி" இருப்பதாக உணர்கிறார்கள் அல்லவா? அவர்களையும் இந்த "உலக முதலீட்டாள்ர்கள் சந்திப்பில்" இறக்கி விடுகிறது தமிழக அரசு என்ற ஒரு செய்தியை தளபதி ஸ்டாலின் கூறுகிறார் என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அப்படிச் செய்தால் அது மிகவும் நல்ல செய்திதானே? என்று அதுபற்றி ஆய்வு செய்தோம். ஸ்டாலின் ஏன் திடீரென அந்த "சிறிய தொழிலதிபர்கள்" பற்றி பேசுகிறார்? அவர் திடீரென பேசவில்லை. கடந்த மே மாதம் தளபதி ஸ்டாலின் கோவை சென்று, அத்தகைய "சிறு,குறு தொழிலதிபர்களின் சந்திப்பு" ஒன்றை கூட்டினார். அதில் அரசியல் எதுவும் பேசாமல், அவர்களது "கடினங்களையும், பிரச்சனைகளையும்" பற்றி கேட்டறிந்தார். அவர் ஏற்கனவே " ஊரக வளர்ச்சிக்கான உள்ளாட்சித் துறையில்" அமைச்சராக இருந்தவர். அந்த தொடர்புகள் மூலம் அவருக்கு சில செய்திகள் கிடைத்துள்ளன. அவை என்ன என்ற ஆர்வத்தில் நாமும் விசாரித்தோம்.

       "எம்.எஸ்.எம்.ஈ".என்ற " மத்தியதர,சிறிய, மிகச்சிறிய,தொழில் முனைவோர்"[ Medium,Small,Micro Enterpneors} இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்களிப்பை செலுத்துகிறார்கள் என்ற உண்மை இப்போதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு தெரிந்துள்ளது. சுதந்திரம் கிடைத்து 50 ஆண்டுகள் கழித்து, அடல்பிகாரி வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கும்போதுதான் முதல் முறையாக "சிறிய தொழில்களுக்கான ஒரு தனி அமைச்சரவை"எஸ்.எஸ்.ஐ என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு அப்போது, வசுந்தரராவ் சிந்தியா அமைச்சராக இருந்தார். அதுபோல மாநிலங்களின் அரசுகளும் "பெரிய தொழில்களுக்கு ஒரு அமைச்சகம், சிறிய தொழில்களுக்கு ஒரு தனி அமைச்சகம்" என்று ஏற்படுத்திக் கொண்டார்கள். சிறிய தொழிலகங்களை நடத்துவோர்கள் "இரண்டு ரகங்களாக" பிரிகின்றனர். ஒரு வகையினர்  "பெரிய தொழிலகங்களுக்கு தேவையான சிறிய உறுப்புகளை உற்பத்தி செய்து கொடுப்பது" என்ற "சார்பு தன்மை" கொண்டவர்கள். இன்னொரு வகையினர், "தாங்களாகவே, ஒரு பொருளை முழுமையாக உற்பத்தி செய்வதும், அதை சந்தையாக்கும்போது, பெருமுதலாளிகளின் சரக்குகளை சந்தைப் போட்டியில் சந்திப்பதும்" என்ற நடைமுறையை கொண்டவர்கள். இவர்கள் அதாவது இந்த இரண்டாவது வகையினர் இன்று "பெரு முதலாளிகளையே சந்தையில் சவாலுக்கு இழுக்கும் நிலையில்" உள்ளனர். இப்படிப்பட்ட சிறு,குறு முதலாளிகள் இப்போது என்ன நிலையில் உள்ளனர்? 

       ஊரக மற்றும் சிறு தொழில்கள் என்ற ஒரு அமைச்சகம் தமிழ்நாட்டிலும் உள்ளது.இப்போது மோகன் அதன் அமைச்சர். முன்பு பொங்கலூர் பழனிசாமி அதன் அமைச்சர்.எஸ்.எஸ்.ஐ. என்ற அந்த நாடு தழுவிய  நிலையில் அழைக்கப்படும் இத்தகைய தொழிற்சாலைகள், குறிப்பாக, ராஜ்காட், லூதியானா, கோயம்பத்தூர் ஆகிய இடங்களில் அதிகமாக் இருக்கின்றன. இன்னமும் கூறப்போனால், பல லட்சம் சிறு தொழிலகங்கள் இந்த இடங்களில் இருககின்றன.தமிழ்நாட்டில் இருக்கும் இத்தகைய சிறிய ஆலைகள்,தற்காலிகமாக "மூலதனக் குறைவினாலும், ஊக்குவிக்க வாய்ப்புகள் இல்லாமையாலும்" உணர்வு இழந்து வருகின்றனர். அவர்களின் " மன ஊக்கம் தளர்ந்துள்ளது" இந்த நிலையை கவனித்த தமிழ்நாடு அரசும், இத்தகைய சிறிய தொழிலகங்கள் நாட்டின் பொருளாதாரத்தின் "முதுகெலும்புகள்" என்பதை உணர்ந்து, அவர்களை ஊக்குவிக்க இந்த சந்திப்பில் ஒரு ஏற்பாடு செய்துள்ளனர். 

     அது என்ன? தமிழ்நாட்டில் சிறிய தொழில்களை ஊக்குவிக்க ஏற்கனவே, இயங்கும் "டி.ஐ.சி." என்ற "மாவட்ட தொழிலக மையம்" மூலம் சில பணிகளை செய்துள்ளனர். குறிப்பாக,7 பிராந்தியங்களாக தமிழ்நாட்டை பிரித்து, திருநெல்வேலி, மதுரை, திருச்சி,சேலம், சென்னை, கோவை,திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள "டி.ஐ.சி." மூலமும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமும், " மத்தியதர,சிறு,மிகச்சிறு,தொழில் முனைவோர்" அனைவரையும் கூட்டி, அவர்களது, " ஆலோசனைகளை, குறிப்பாக அவர்களது சொந்த முன்வைப்புகளை" கேட்டு வாங்கி இருக்கிறார்கள். அத்தகைய சிறு தொழில் முனைவோரது,"தேக்கங்களை" உடைக்க உதவுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் தமிழக அரசின் பங்கு என்பது வெறும்," சந்திப்புகளையும்,ஏற்பாடுகளையும், ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்ள, அந்த மூலதன்மிடுவோரையும், அனுபவத்தையும், திறமையையும், கொண்டுள்ள சிறு தொழில் முனைவோரையும் சேர்த்து வைப்பது மட்டுமே". தங்கள் கைகளில் மூலதனம் இல்லாத நிலையில், இந்த சிறு தொழில் அதிபர்கள், வெளியிலிருந்து வரும் பெரும் மூலதனமிடுவோருடன் இணைந்து அத்தகைய ஆலைகளை உருவாக்க " வேண்டும். வெளியிலிருந்து வருகின்ற முதலீட்டாளர்கள், உள்நாட்டு பங்காளிகளை இணைத்துக் கொள்ளாமல், அத்தகைய ஆலைகளை உருவாக்க முடியாது என்பதால் அத்தகைய ஏற்பாட்டை தமிழ்நாடு ஆரசு செய்துள்ளது. உதாரணமாக , கோவையில் கூடிய  அத்தகைய கலந்தாலோசனை கூட்டத்தில், ரூ.3000 கோடிக்கு "முன்வைப்புகளை" சிறு தொழிலதிபர்கள்,கொடுத்தள்ளனர். அவற்றுக்கு உடனடியாக " புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்" போடப்பட்டுள்ளன. இத்தகைய செய்திகளைத்தான் தளபதி ஸ்டாலின் "வற்புறுத்தி சிறு தொழிலதிபர்களிடம் ரூ 100 கோடியை போட வைத்துள்ளனர்" என்பதாக ஒரு "தவறான செய்தியை" தெரிவித்துள்ளார். 

        பெரும் தொழிலதிபர்களின் பெரும் மூலதனங்களையும், அதேசமயம் குறைந்த மூலதனமிட வரும் வெளிநாட்டு மூலதனத்துடன், மூலதனம் இல்லாத அல்லது மூலதனத்தை போட விரும்பாத சிறு தொழிலதிபர்களுடன் இணைந்த ஏற்பாடுகளை செய்துகொள்ள தமிழக அரசு இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளது என்பது, மாவட்டங்களிலிருந்து வருகின்ற இனிய செய்தியாக இருக்கின்றது.

Tuesday, August 18, 2015

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பார்வை?

எது எப்படியோ.புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பார்வை?
---------------------------------------------------------------------------------------
      புலம் பெயர்ந்த தமிழர்கள், தாங்கள் சிறந்த "விமர்சகர்கள்" என்று எண்ணிக்கொண்டு,ஈழத்திற்குள் நுழையாமல், ஈழத்தில் உள்ள மக்களது உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல், அரசியல் நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் அறியாமல், "இணையம் மூலம்" அரசியல் "அறிவு" பெரும் பெரிய "ஆப்பாட்டக்காரர்களாக" இருப்பதால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது மக்களுக்கு "விமர்சனம்" இருக்கிறது என்பதை மட்டுமே தெரிந்துகொண்டு, இலங்கையில் வாழும் மக்கள் தங்களது "வாழ்க்கைக்கு தகுந்தாற்போல" எதை தேர்வு செய்வார்கள் என்றும் அறியாமல், அங்குள்ள அரசியலைப் புரியும் "திறன்" இல்லாமல், "மேட்டுக் குடி வாழ்நிலையில்" வெளிநாடுகளில் இருந்துகொண்டு, "கடும் விமர்சனங்களை" தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது எடுத்து "எறிந்தார்கள்">

       அவர்களது "இணையம்" மூலமான கருத்துகளை தமிழ் மக்கள் "கண்டு கொள்ளவில்லை". த.தே.கூ.பை "செமையாக" திட்டித் தீர்த்த "கஜேந்திரகுமார்" குழுவை, புலம் பெயர்ந்து ஐரோப்பாவில் வாழ்பவர்களும், இந்தியாவில் வாழ்பவர்களும், எத்தனை "கானோளிகளில்" பாடல்களையும், இசையையும், இணைத்து "பாடுபட்டு" உழைத்தார்கள். ஆனால் ஈழ மக்கள் அவர்களது அனைத்து முய்ரசிகளையும், கண்டுகொள்ளவில்லை. கஜேந்திரகுமார் குழுவை, ஒரு "கட்சியாக" அங்கீகரிக்கவில்லை. இப்போதாவது "அறிவுஜீவிகள்" திருத்திக் கொள்வார்களா? யதார்த்தத்தை புரிந்துகொண்டு "தமிழ் மக்களுக்கு" பாடுபடுங்கள். இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு தமிழர்களது நிலைமையையும், "இணையம் புகழ்" ஆப்பாட்டக்காரர் களிடமிருந்து கற்றுக் கொள்ளாதீர்கள்.