Monday, July 26, 2010

நடுச்சாலையில் சாமியாடிய சப்-இன்ஸ்பெக்டர்

மஞ்சள் பக்கங்கள் நிறுத்தம்
எல்லோ பேஜஸ் என்று
அழைப்பார்கள். அங்கேதான்
அந்த விசித்திர நிகழ்வு.
நடுச்சாலையில் ஒரு
துணை ஆய்வாளர்.
இரண்டு கையையும்,
மாறி, மாறி, ஆட்டி
மேலே, கீழே, பக்கவாட்டில்,
பேருந்து நிறுத்தம் அருகே
நிற்காதே மேலே ஏறு.
பாதுகாப்பு பெண் காவலரை
ஒரு விரட்டு. வாகனங்களை
மறி. நிறுத்து. பத்து நிமிடம்
நடுத்தெரு ஆட்டம்.
சாமி ஆடினார் அந்த ஆய்வாளர்.
எதற்க்காக? யார் அவரை ஆட்டிவைத்தவர்?
சர்,சர், சர், என பறக்கும் வாகனங்கள்.
காவல்துறையின் இரும்பு வண்டிகள்.
பின்னால் மின்னல் வேகத்தில்,
வேடம் போட்டதுபோல ஒரேமாதிரி
உயர்ரக வாகனங்கள். பறந்துசெல்லும்
வாகனங்களில், நடு வண்டியில்,
ஆட்டிவைப்பவர்... ஆகா எங்கோ
அடிக்கடி பார்த்ததுபோல,
எந்த காட்சி ஊடகமானாலும்,
எந்த அச்சு ஊடகமானாலும்,
கண்டே ஆகின்ற அந்த பெரியவர்.
பெரிய வெளிநாட்டு வண்டியில்
மஞ்சள் துண்டுடன் அமர்ந்து இருக்கிறார்.
அதற்காக இப்படியா நடு வீதியில்
நர்த்தனம் ஆடுவது என்று கேட்டால்,
ஒவ்வொரு நாளும் அஞ்சு முறை
இதுபோல வந்து போவார். பக்கத்தில்
அவரது வீடு இருப்பதால் என்றனர்.
இது என்ன கூத்து? அவர் வீடு இருந்தால்
அந்த சாலையில் யாரும் நடமாட கூடாதா?
சாமி ஆடி அதிகாரியை ஆட்டுவிப்பவர்
சாமி ஆட்டியா? பகுத்தறிவு, சாமி ஆடலில்
நம்பிக்கை இல்லை என்றார்களே?
இந்த நடுத்தெரு சாமி ஆடலில்
நம்பிக்கை உண்டா?

No comments:

Post a Comment