Tuesday, October 12, 2010

தமிழீழ தேசியத்தலைவர் சிக்கனம் பற்றி........[ ஒரு வரலாற்று நிகழ்வு---வன்னி கள போராளி ஒருவர் சொல்லி t


புதுவை இரத்தினத்துரை ஒருமுறை மக்கள்மத்தியில் பேசும்போது, தலைவர் தலையணை இல்லாமல்தான் படுப்பார். அதுபோல நாமும் சிக்கனத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்றார். அதற்குப்பிறகு தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன், ஒரு நாள் புதுவை ரத்தினதுரையை கூப்பிட்டார். அவரிடம் அன்று என்ன பேசினீர்கள் என்று கேட்டார். அவரும் கூறினார். இதோ நிற்கிறதே அந்த நான் பயன்படுத்தும் வெளிநாட்டு கார், என்ன விலை தெரியுமா? என்றார். புதுவையும் அது எழுபத்து ஐந்து லட்சம் இருக்கும் என்றார். அதற்கு தலைவர், சரி. அதன் விலை எண்பத்து ஐந்து லட்சம். இது தோட்டா துளைக்காத வாகனம். அதில் பயணம் செய்வது மட்டும்தான் போரை நடத்தும் ஒரு தலைவருக்கு பாதுகாப்பு. அதில் உள்ள ஒரு இருக்கையை விற்றால், ஒரு கிராமத்திற்கு முழுக்க தலையணை வாங்கலாம் தெரியுமா? என்றார். நான் வைத்திருக்கும் செயற்கைக்கோள் கைபேசி, வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்டது. நான் சாதாரண கைபேசியை பயன்படுத்தினால், தினசரி வெளிநாடுகளுக்கு நேரடியாக பேசமுடியாது தெரியுமா? என்றார். அதனால் சிக்கனம் பற்றி ஏதாவது பேசாதீர்கள். சில விசயங்கள் கட்டாயத்தேவையாக இன்றைய சூழலில் இருக்கிறது என்றார். சிக்கனம் பற்றிக்கூட கற்பனாவாதத்தையும், விளம்பரத்திற்க்காக படம் காட்டும் இன்றைய தமிழக அரசியல் தலைவர்கள் போல, தமிழீழ தேசியத்தலைவர் இல்லை என்பது இதில் தெரிகிறது.

No comments:

Post a Comment