Tuesday, December 21, 2010

ராஜா ஓட, சீ.பி.ஐ. துரத்த....

பைசால் என்ற இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு அதிகார முன்னாள் தலைவர் சீ.பி.ஐ.யால் சம்மன் வழங்கப்பட்டு, டில்லி சீ.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணையை எதிர்கொண்டார். அதேபோல நிரா ராடிஆவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் விசாரணையை எதிர்கொண்டார். ஆ.ராஜாவிற்கு சீ.பி.ஐ. டிசம்பர் இருபதாம் நாள் வந்து விசாரணைக்கு ஆஜராக கூறி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் ராஜா டில்லி செல்லவில்லை. அதேசமோம் ராஜா அன்று காலை அப்போலோ மருத்துவமனியில் சேர்ந்ததாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் அப்போலோவிளிருந்து அரை மணி நேரத்தில் வெள்யே வந்துவிட்டார். சீ.பி.ஐயிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் வரமுடியவில்லை என்று எழுத்து மூலமாக தெரிவித்து, இன்னொரு நாள் கொடுக்குமாறு கேட்டிருந்தார். அதாவது ஒரு வாரம் நேரம் கேட்டதாக தெரிகிறது. அதற்கும் சீ.பி.ஐ. சம்மதித்துவிட்டது. என்று சீ.பி.ஐ. நாள் கொடுக்கிறார்களோ அன்று தான் போய் விசாரணையை எதிர்கொள்வேன் என்று அவர் கூறியிருக்கிறார். அதன்பிறகே அவர் மீதான நடவடிக்கையை சீ.பி.ஐ. முடிவு செய்யமுடியும். பதிலளி முன்அனுப்பு

No comments:

Post a Comment