Tuesday, January 18, 2011

ஜி.ஆரை குத்தவா, தனக்குதானே குத்தவா? 5000 விவசாயிகள் தற்கொலை

தமிழ்நாட்டில் விவாசாயிகளின் தற்கொலைகள் பற்றிய புள்ளிவிவரம் பொங்கல் வாழ்த்து செய்தியில் சீ.பி.எம்.செயலாளர் ஜி.ராமகிரிஷ்ணனால் கொடுக்கப்பட்டது. அதில் 5000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதுவும் 2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை உள்ள புள்ளிவிவரம் அது. அதுவும் சீ.பி.எம். கட்சி எடுத்த புள்ளி விவரம் அல்ல அது. தேசிய குற்ற பதிவு காப்பகம் கொடுத்துள்ள புள்ளிவிவரம். அதை எடுத்துகூரியிருப்பதுதான் ஜி.ஆர். ஆனால் அதுவே நமது முதல்வருக்கு அடிவயிற்றை கலக்கிவிட்டது. எதிர்க்ல்கட்சி கூட்டணியில் இருப்பதால்தான் ஜி.ஆர். இப்படி எழுதுகிறார் என்பதாகவெல்லாம் அங்கலாய்த்து இருக்கிறார். முரசொலி நாளேட்டில் சனவரி-பதினெட்டாம் நாள் இதற்கு பதில் சொல்வதாக எண்ணிக்கொண்டு, மன்னிக்க முடியாத பொய் என்று பெரிய அளவில் கட்டம் போட்டு எழுதியிருக்கிறார். பெயர் போடாமல் எழுதப்பட்ட அந்த கட்டுரைக்கு கலைஞர்தான் பொறுப்பு என்பது அனைவருக்கும் தெரியும்.
ஜி.ஆர் . மேற்கோள் காட்டுவதற்கு முன்பே தி.மு.க. தலைமைக்கு அந்த தேசிய குற்றபதிவு காப்பகம் கொடுத்த புள்ளிவிவரம் ஒரு சவாலாக மாறிவிட்டது. அதனால் தற்கொலை என்றால் காவல்துறையின் பதிவேட்டில் பதிவாகி இருத்தல் வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு தன்னால் நியமனம் செய்யப்ப்பட்ட காவல்துறையின் தலைவரான டி.ஜி.பி. லத்திகா சரணை கொண்டு ஒரு மறுப்பு அறிககையை கொடுக்க வைத்துள்ளார். அய்யோபாவம் லத்திகா சரணும் அரசியல் தெரியாத நிலையில் அந்த அரசியல் அறிககையை வெளியிட்டுள்ளார். அதை நாம் உட்பட யாருமே கவனிக்காமல் இருந்துவிட்டோம். ஆனால் அதை எடுத்து இப்போது ஜி.ஆருக்கு பதில் என்ற பெயரில் முரசொலியில் போட்டு அந்த லத்திகா சரண் அறிககையை எல்லோர் கவனத்துக்கும் கலைஞர் கொண்டுவந்துவிட்டார்.அதில் தேசிய குற்றபதிவு காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள தற்கொலைகளை பாற்றி ஆய்வு செய்துள்ளார். அதாவது ஐந்து ஆண்டுகளில் 5000 விவசாயிகள் தற்கொலை தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்று அதில் லத்திகாச்சரனும் கூறவில்லை; முதல்வரும் மறுக்கவில்லை. ஆனால் அது எதற்க்காக நடந்தது எனபதில்தான் இவர்ககளுக்கு வேறுபாடு இருப்பதாக காட்டிக்கொண்டுள்ளார்கள்.
"வறுமை காரணமாகத்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொல்கொண்டார்கள் என்று சொல்லியிருப்பது உண்மையின் அடிப்படையிலோ, புள்ளி விவரங்களின் அடிப்படையிலோ தயாரிக்கப்பட்ட விவரம் அல்ல. தெரிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை தற்கொலைக்கு என்ன காரணம் என்பதை பற்றி விசாரிக்காமலேயே தரப்பட்டுள்ளது.எனவே விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்கள் என்றும், வேளாண்மை நடவடிக்கையின் போது, ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்றும் கூறுவது முற்றிலும் தவறானது.திண்டுக்கல் மாவட்டத்தில் இடியாபட்டி என்று கிராமம் இல்லை, இடியாகொட்டை என்றுதான் கிராமம் உள்ளது." என்ற ஒரு அரசியல் கலப்புள்ள அறிககையை லத்திகா சரண் மூலம் தாங்கள் வெளியிட்டதை இப்போது முதல்வர் தம்பட்டம் அடித்துள்ளார். இது தனக்குத்தானே குத்திக்கொல்வதாக இல்லையா?

No comments:

Post a Comment