Tuesday, January 18, 2011

டி.ஆர்.பாலு பெயரைக்கேட்டாலே டில்லி நடுங்குகிறது

புதிய ஆண்டு தொடங்கியதும், பல ஊழல்களில் மத்திய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் அரசியல் மரியாதை சர்ச்சைக்குள்ளானதும் சேர்ந்து தேவையை ஒட்டியும் அமைச்சரவையில் மாற்றங்கள் விவாதிக்கப்பட்டன. தலைமை அமைச்சர் பொறுப்பிலும், உள்துறையிலும், நிதிதுறையிலும், வெளிவிவகாரதுறையிலும், பாதுகாப்புதுறையிலும், எந்த மாற்றமும் கிடையாது என்றனர். ஆ.ராஜா, இருந்த அமைச்சர் பொறுப்பில் இன்று கபில்சிபல் அமர்ந்திருப்பதால் அந்த இலாக்கா பாற்றி விவாதம் எழவில்லை. மாறாக தி.மு.க.விற்கு இருந்த ஒரு மத்திய அமைச்சர் பொறுப்பை அதே கட்சியில் யாருக்கு கொடுப்பது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சசி தரூர் இருந்த வெளிவிவகார துறை இணை அமைச்சர் பொறுப்பில் யாரை அமரவைப்பது என்பது காங்கிரஸ் கட்சியின் தலைவலி. மகாராஷ்ட்ராவின் முதல்வர் ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய வீடுகள் ஊழலில் சிக்கி வெளியே போனபிறகு, அந்த இடத்தில் பிரதமரின் அலுவலக பொறுப்பில் இருந்த பிருதுவிராஜ் சவான் மகாராஷ்டிராவின் முதல்வர் பொறுப்பில் அமரவைக்கப்பட்ட
பிறகு, அந்த இடம் காலியானது. அதற்கும் காங்கிரசில் ஆள் பார்க்கும் படலம் ஆண்டின் புதிய படலமானது. கபில் சிபல் கையில் முக்கிய இரண்டு இலாக்காகலான ஐ.டி.யும், மனிதவள மேம்பாடுமா என்றும் கட்சிக்குள் கேட்கப்பட்டது.
வருகிற சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேச மாநிலம் காங்கிரசின் குறிப்பாக சோனியா மற்றும் ராகுலின் நேரடி கவனத்தில் இருப்பதால், அந்த மாநிலத்தை சேர்ந்த வாக்கு வங்கிகளை குறிவைக்க ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு இந்து பிரமுகர்களுக்கு மத்திய அமைச்சர் பொறுப்புகளை கொடுத்து அவர்கள் மூலம் வாக்கு வங்கிகளை திடப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. அதற்காக தங்கள் கட்சி தலைமையின் விசுவாசிகளான மத்திய துணை அமைச்சர்கள் இருவருக்கு அதாவது உத்தரபிரதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு அப்படி பொறுப்புகளை கொடுக்கவும் திட்டமிட்டார்கள். அதில் சல்மான் குர்ஷித் பெயரும், ஸ்ரீ மகேஷ் ஜெய்ஸ்வால் பெயரும் அடிபட்டது. அதேபோல ஆந்திர மாநிலத்தில் ஜகன் மோகனின் விலகலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் அதை சரிசெய்ய, தெலுங்கானாவிற்கு ஒரு அமைச்சர், கடலோர ஆந்திராவிற்கு இன்னொரு அமைச்சர் என்று பிரித்து கொடுப்பது பற்றியும் விவாதிதித்தார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து ஒரு தி.மு.க. மத்திய அமைச்சரை தேர்வு செய்ய கட்சிக்குள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், மற்றும் ஏ.கே.எஸ்.விஜயன் என்ற பெயர்கள் அடிபட்டாலும், பிரதமர் டி.ஆர்.பாலுவை விரும்பவில்லை என்பது பகிரங்கமாக தெரிந்து விட்டது. ஏற்கனவே டி.ஆர்.பாலு இருந்த கப்பல் துறை மூலம் அவர் சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் கடலில் போட்டேன் என்று கூறி முந்நூறு கோடியை முழுங்கியதை பிரதமர் அலுவலகம் மறக்கவில்லை. அதற்குமுன்பு சுற்று சூழல் அமைச்சரவை என்ற பெயரில் அடித்த காசுகளையும் கனகு பார்க்கிறார்கள். ஆகவே புதிய ஆள்களை டில்லிக்கு காட்டவேண்டிய நிலைமையில் கலைஞர் இருக்கிறார். அதனால்தான் சாதி பிரநித்தித்த்துவம் என்ற பெயரில் ஆ.ராஜாவிற்கு பதில் ஏ.எஸ்.கே. விஜயன் சரியாக இருக்கும் என்ற பார்வை கருணாநிதி கருதுவதாக தெரிகிறது.

No comments:

Post a Comment