Tuesday, January 18, 2011

தமிழீழ அரசுக்கு அங்கீகாரம். /./ டில்லி அதிர்ச்சி

தென் சூடான் விடுதலை பெறுகிறது. அதன் விடுதலை நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தனிநாட்டிற்கான வாக்கதேப்பு முடிவடைந்தவுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென் சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம்[ எஸ்.பி.எல்.எம்.] அழைத்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அதுபற்றி கொடுத்த அறிக்கையில்," இது அரசாங்கத்திற்கான அங்கீகாரம் மட்டுமின்றி ஈழ விடுதலை போராட்டத்திற்கான அங்கீகாரமும் ஆகும் என்றார். விடுதலை பெற்ற தென் சூடான் மக்களின் மகிழ்ச்ச்சியை ஈழத்தமிழர்கள் தெளிவாக புரிந்துகொள்வதுடன் அதில் இணைந்துகொள்கிரார்கள் என்றார். இந்த உறவு புதிதல்ல. மே 2009 இல் பிலடல்பியா நகரில் நடந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வில் சூடான் மக்கள் விடுதலை இயக்க பிரதிநிதி கலந்துகொண்டார். தென் சூடானின் விடுதலை போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலை போராட்டத்திற்கும் உள்ள ஒற்றுமை பற்றியும், விடுதலை போராட்டங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும், ஈழத்தமிழ் மக்களுடனான தங்கள் திட வோற்றுமையுனர்வை குறிப்பிட்டு உரையாற்றினார்.வடக்கு சூடானிலிருந்து, தெற்கு சூடான் மக்கள் விடுதலை பெற போராட்டத்தை சூடான் மக்கள் விடுதலை இயக்கம் நடத்திவந்தது. சுதந்திர தென்சூடான் அரசை அமைக்கவுள்ளது.
ஒரு தனிநாடு உதயமாவதன் மூலம் தென் சூடான் மக்கள் நீண்டகாலமாக அனுபவித்த துன்பங்கள் தொலைந்துபோகும். அவர்களது போராட்டத்தின்போது சுமார் இருபது லட்சம் மக்கள் மடிந்திருக்கிறார்கள். பொதுமக்கள் மருத்துவ உதவியின்றியும், பட்டினியாலும், கூட்டாக படுகொலை செய்யப்பட்டும், இறந்துபோனார்கள். தென் சூடான் போலவே தமிழீழமும் விரைவில் விடுதலை பெரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. 1977 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, வட்டுக்கோட்டை தீர்மானத்திர்க்கமைய தமிழீழ தனியரசினை அமைப்போம் என்று வாக்கு கேட்ட கட்சிகள் ஈழத்தில் அறுதிபெரும்பான்மை வாக்குகளை பெற்றன. ஆயுதப்போராட்டம் ஸ்ரீ லங்காவில் ஆரம்பிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஈழத்தமிழர்கள் தங்கள் நிலைப்பாட்டினை இவ்வாறு அமைதியாகவே வெளிப்படுத்தினார்கள்.புலம் பெயர்ந்த மக்கள் அண்மையில் பல்வேறு நாடுகளிலும் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் தமது தாயகத்தில் இறைமையுள்ள தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான தமது அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். 2009 இல் நடந்த இறுதிப்போரின்போது நடைபெற்ற தமிழின படுகொலை தமிழருக்கென தனிநாடு உருவாவது மட்டுமே அவர்கள் உயிருடன் வாழ்வதை உர்திசெய்யும் ஒரே தீர்வாகும் என்பதை தெளிவாக்கி நியாயப்படுத்தியுள்ளது. அடக்குமுறை அரசுகளான சூடானின் ஆட்சியாளருக்கும், இன்றைய ஸ்ரீ லங்காவின் ஆட்சியாளருக்கும் சீனாவே சர்வதேச பாதுகாவலார்க்க செயல்பட்டுவருகிறது. சூடானின் அரசதலைவர் பஷீர் இனப்படுகொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஸ்ரீ லங்கா அரச தலைவர் ராஜபக்சே இனப்படுகொலை குற்றவாளியாக சில காலத்தில் அறிவிக்கப்படவுள்ளார். தென் சூடானிய மக்களுக்கும், அவர்களது சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழீழ மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்று உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment