Wednesday, February 16, 2011

தயாநிதி காலம் விசாரணைக்கு வந்து விட்டது.

இந்திய ஊடகங்களிலும், தமிழக ஊடகன்கல்லும் தடுக்கப்பட்ட அந்த செய்தியை இன்று சென்னையிலிருந்து வெளிவரும் டைம்ஸ் ஆப் இந்தியாவும், நக்கீரனும் வெளிப்படுத்திவிட்டன. கபில் சிபிலால் நிரோப்பட்ட முன்னாள் நீதிடரசர் சிவராஜ் பட்டீல் விசாரணை குழு முன்வைத்துள்ள அறிக்கையின் படி, தயாநிதி சகோக்கள் அவர்களது சன் டி.டி.எச். சிறகாக வாங்கிய 675 கோடி ரூபாய் மூலதனம் எங்கிருந்து, எப்படி வந்தது என்பது அம்பலமாகியுள்ளது. அதாவது 2004 முதல் 2007 வரை தொலை தொடர்பு அமைச்சராக இருந்த அந்த இளைய சகோ. டிஷ் நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டிய அலைகற்றைவரைசையை கடுமையாக தாமதம் செய்து அவர்களுடன் பேரம் பேசி, அந்த ஏர்செல்லின் அங்கமான டிஷ் நிறுவனத்தை தங்களுக்கு வேண்டிய மாக்சி நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடவைத்து அதன்மூலம் சண் டி.டி.எச். சிறகு அந்த பெரும் தொகையை மூலதனமாக வாங்கியுள்ளனர். இப்போது அது வணிக தர்மம் என்றும் கூறுகின்றனர். இதை சிவராஜ் பட்டீல் தனது அறிக்கையில் கண்டுபிடித்து குறிப்பிட்டிருப்பதுதான் முக்கிய செய்தி.
இதை ஒட்டி கார்பொரேட் போர் கடுமையாகி உள்ளது. ரிலைன்ஸ் நிறுவனம் தங்கள் மீது குற்றம் வருகிறது என்று தெரிந்தவுடன், டாடா தான் முக்கிய குற்றவால் என்றும் அவர்களது ஒப்பந்தத்தால் தான் இரண்டு லட்சம் கோடி நட்டம் அரசுக்கு என்றும் தெரிவிக்க டாடா அதை எதிர்க்க இப்படி ஒரு பெரு முதலாளில்குழுமங்களின் போர் தொடங்கியுள்ளது. இதற்கிடையே இன்றைய டெக்கான் கிரோனிகள் ஏடு சமீபத்தில் வெளியாகி உள்ள இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவன தேவாஸ் மல்டி மீடியா வுடனான ஒப்பந்தத்தை கசியவிட்டது முதல்வர் கருனநிதீன் குடும்ப உர்ப்பினரான ஒரு ஐ.எஸ்.ஆர்.ஒ.வின் மூத்த அதிகாரி என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. ஆ.ராஜாவை சிக்கவைத்த ஆனியார்ஸ் கட்சியை கவிழ்க்க பிரதமர் அலுவலகம் செய்த மாபெரும் ஊழலை அம்பலப்படித்தி திசை திருப்பிவிட கருணாநிதி குடும்ப முயற்சி என்கிறது அந்த ஏடு.
எப்படியோ ராஜ ராஜ சோழனின் வாரிசு என்று தன்னை அறிவித்துக்கொண்ட ஒரு கேரள மாவலி அரசனின் வழிவந்தவராக தன்னை கருதிக்கொள்ளும் ஒரு முதல்வர் இப்போது இந்திய நாட்டையே சுற்றிவிடுவதர்க்கான பல ஊழாகளை செய்து அதமூலம் பிரபலம் அடைந்திருப்பது தமிழர்களாகிய நாம் பெருமை படக்கூடியதன்றோ?

No comments:

Post a Comment