Wednesday, February 16, 2011

கனிமொழியும், கருணாநிதியும் இரட்டை மடிக்கு ஆதரவா?

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை தி.மு.க.முற்றுகை இட முயர்ச்சிஎடுத்து கனிமொழி உட்பட கைதாமே? இது எதற்காக? யாழ்ப்பாணம் அருகே இந்தியாவிலிருந்து சென்ற குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து சென்ற அதிலும் குறிப்பாக நாகப்பட்டினத்திலிருந்து சென்ற பதினெட்டு படகுகளை சேர்ந்த நூற்று ஆறு மீனவர்களை பிடித்துள்ளார்கள் என்பதே அந்த செய்தி. இவர்களை கைது செய்தது அல்லது இடைமறித்தது யார்? தி.மு.க.தலைமை சொல்கிறது, அது இலங்கை கடற்படை என்று. சரி அப்படி இருந்தால் அந்த தி.மு.க. தலைமை ஏன் இதுவரை நடந்த தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை இலங்கை கடற்படை வெட்டவெளிச்சமாக செய்தபோது சும்மா இருந்துவிட்டு இப்போது மட்டும் இலங்கை தூதரகமுற்றுகை என்று கிளம்பி உள்ளது? ஏன் ஜெயகுமார் என்ற புஷ்பவனம் மீனவர் இலங்கை கடற்படையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டபோது காட்டாத எதிர்ப்பை இப்போது திடீரென காட்டுகிறது? எதற்காக பாண்டியன் என்ற மீனவர் இளநகை கடற்படையால் சமீபத்தில் கொல்லப்பட்டபோது கட்டத எதிர்ப்பை தி.மு.க. தலைமை காட்டுகிறது?
தேர்தல் நேரம். தி.மு.க. தலைமை உண்மையாகவே தான் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதை பதிவு செய்யவேண்டும் என்றால் சரியானதுதான். சமீபத்திய ஜெயகுமார், பாண்டியன் கொலைகளுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு வந்துள்ளதால் தானும் அதனுடன் கலந்துகொண்டு மீனவர்களுக்காக குரல் கொடுத்தால் அதுவும் கூட ஒரு அரசியல் கட்சியை பொறுத்தவரை, அதுவும் தி.மு.க. போன்ற மாநில அரசியலை முன் நிறுத்தி பணியாற்றும் அரசியல் கட்சியை பொருத்தவரை சரியானதுதான். அதனால்தான் மீன்வள அமைச்சர் கே.பி.பி.சாமியின் ஏற்பாட்டில் அவரது கைகளிலேயே உள்ள அன்பழகனார் என்ற மீனவர் தலைவரது அமைப்பையும் பயன்படுத்தி இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். காநிராஸ் கட்சிக்கும் தி.மு.க.விற்கும் சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையில் ஆ.ராஜாவை கிடிக்கி பிடி போடும் சீ.பி.ஐ.யால் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவே இந்தார்ப்பாட்டம் என்பது மட்டும்தான் உண்மையா? அப்படியானால் உண்மையில் நடந்ததுதான் என்ன?
மீனவர்களுக்கு மட்டுமே புரிந்த அல்லது தெரிந்த மீன்பிடி தொழில் பற்றி நிலம் சார்ந்த மக்களுக்கு தெரியாது. அதாவது இரட்டை மடி வலை, சுருக்கு வலை ஆகியவை ஒட்டுமொத்த மீனவர்களும் மீன் பிடிக்க முடியாமல் தடுக்கின்ற அல்லது அவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் முழு கடலையும் அரித்து எடுக்கின்ற ஒரு தடை செய்யப்ப்பட்ட வலைகளாகும். அந்த வலைகளை சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் உலா மீனவர்கள் மட்டும் மற்ற மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ராமேஸ்வரத்திலும், நாகப்பட்டினத்திலும் பயன்படுத்துகிறார்கள். அதில் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கிடைகிறது. அதனால் மற்ற மீனவர்களுக்கு மீன்களே இல்லாமல் ஆகஈவிடுகிறது.இந்த தடை செயாப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை மீன் வள துறையின் ஊழல் அதிகாரிகளும், ஒழல் அரசியல்வாதிகளும் ஆதரிக்கிறார்கள். கையூட்டு வாங்கி கொள்கிறார்கள். இது விசைப்படகு மீனவர் சங்கங்களால் தொடர்ந்து எதிர்க்க படுகிறது.
இதே தடை செய்யப்ப்பட்ட வலைகளை பயன்படுத்தி மன்னார், யாழ்ப்பாணம் வரை சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்கும் போதெல்லாம் சில ஆண்டுகளாகவே அங்குள்ள தமிழ் மீனவர்கள் எதிர்ப்பை கொடுத்துள்ளார்கள். அதுதவிர யாழ்ப்பாணம், மன்னார் தமிழ் மீனவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் போல டிராலர்களை பயன்படுத்துவது இல்லை. அவைகள் இன்னமும் நாட்டு படகு முறைகளையே பயன்படுத்துகிறார்கள். இப்போது அங்கே பிடிபட்டவர்கள் இரட்டை மடி வலைகளையும், ஒற்றை மடி வலைகளையும் பயன்படுத்தி டிராலர்கள் மூலம் மீன் பிடிக்க சென்றவர்கள். அங்கே வந்து மீன் பிடிப்பதை அங்குள்ள தமிழ் மீனவர்கள் எதிர்க்கவில்லை. டிராலர்களை பயன்படுத்துவது அவர்களுக்கு இடையூறுதான் எராலும் அதைக்கூட அவரால் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் பல முறை எச்சரிக்கை விடுத்தும் இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவது அவர்களது வாழ்வுரிமையை பறிப்பதாக உள்ளது.அதுமட்டுமின்றி இவர்கள் யாழ்ப்பாண கரையோரம் சென்று மீன் பிடித்துள்ளனர். அது அவர்களது அன்றாட மீன் பிடித்தலுக்கே எதிரானது.
ஆகவே இந்த நாகப்பட்டினம் மீனவர்களை பிடித்தது யாழ்ப்பாண தமிழ் மீனவர்கள்தான், அதன்பிறகு இவர்களுக்கேபிரியாணி உட்பட நல்ல உணவு அழத்து பிறைதான் அவர்களை படித்துறை என்ற காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இந்த சில குறிப்பிட்ட தவறு செய்யும் மீனவர்களை ஆதரித்து இவர்களிடம் லஞ்சப்பணம் வாங்கி கொண்டு ஒத்துழைப்பவர்கள் தமிழ்நாட்டு மீன்வள துறையின் அதிகாரிகளும், எம்.எல்.ஏ., எம்.பி. போன்றோரும், அமைச்சர் கே.பி.பி.சாமியும் என்பது தெரியவந்துள்ளது.இப்போது தி.மு.க. நடத்திய போராட்டம் தடை செயப்பட்ட வலைகளை பயன்படுத்ஹுவோருக்கு ஆதரவாகவும், ஊழல் அமைச்சர்களுக்கும், ஊழல் அதிகாரிகளுக்கும் ஆதரவாகவும் இருகிறதே தவிர, இன்மையில் அப்பாவி மீனவர்கள் கடலில் இலங்கை கடற்படையால் சுடப்படுவதற்கு ஆதரவாக இருக்கவில்லை. அப்படி அவர்கள் ஆதரவாக குரல் கொடுக்க எண்ணினால் இதுவரை கொல்லப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் 538 முதல் தகவல் அறிக்கைகளையும், அடிக்கப்பட்ட, வலைகள் அறுக்கப்பட்ட, படகுகள் யுடைக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் இருபதேட்டேட்டாண்டு வழக்குகளையும் சேர்த்து உயர்நீதி மன்றத்தில் போட்டு, இலங்கை கடற்படை தளபதிகள் மீது கைது வாரண்டை பிறப்பிக்க செய்யட்டும்.

7 comments:

ஞாஞளஙலாழன் said...

>எதற்காக பாண்டியன் என்ற மீனவர் இளநகை >கடற்படையால் சமீபத்தில் கொல்லப்பட்டபோது >கட்டத எதிர்ப்பை தி.மு.க. தலைமை காட்டுகிறது?

நல்ல கேள்வி. பதில் எல்லாருக்கும் தெரிந்ததே.

சிவம் அமுதசிவம் said...
This comment has been removed by the author.
சிவம் அமுதசிவம் said...

இப்போது தமிழக மீனவர்களைப்பிடித்தது யாழ்ப்பாண மீனவர்கள் என்றால், இதுவரை ஏன் பிடிக்கவில்லை? சுட்டார்கள். இது யாழ்ப்பாணத்தில் இப்போ ஆக்கிரமித்திருக்கும் கேபி , டக்ளஸ் கும்பல்களை வைத்து, மகிந்தா, கருணாநிதி, மன்மோகன் ஆடும் கூட்டுமுயற்சி நாடகம்தான் இது.தமிழா விழிப்போடு இரு!

FEBRUARY 16, 2011 9:29 AM

பாரம்பரிய மீனவன் said...

இழுவலையை(டிராலர்) இந்திய மீனவர்களுக்கு எழுபதுகளின் தொடக்கத்தில் அறிமுகம் செய்தது அப்போதைய காங்கிரஸ் அரசுதான். தமிழ்நாட்டு மீனர்வகளுக்கு தந்தவர் காமராஜர். எனவே இதில் குற்றவாளிகள் அன்றும் இன்றும் காங்கிரசாரே. இழுவலை மீனவர்கள் கடந்த 40 வருடங்களாக இழுவலை தொழில் செய்து பழகிவிட்டார்கள். அவர்களுடைய வலை மற்றும் படகின் விலை கிட்டத்தட்ட 50 லட்சம். எனவே இழுவலை தொழிலில் இருந்து பாரம்பரிய மீன்பிடித்தல் முறைக்கு திரும்புவது என்பது ஒன்றிரண்டு வருடங்களில் முடியாத காரியம். அது படிபடியாகத்தான் நடக்கும். மிக முக்கியமான விஷயம் இழுவலை(டிராலர்) என்பது இந்தியாவில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையல்ல என்பதும், இந்தியா முழுவதும் இழுவலை(டிராலர்) முறையில் மீன்பிடித்தல் நடைபெறுகிறது என்பதும், இரட்டைமடி,சுருக்குவலை இவைகள்தான் தடை செய்யப்பட்ட வலைகள் என்பதும் உங்களுக்கு தெரிந்த விஷயம்தான். இப்போது கைது செய்யப்பட்ட படகுகளில் இரண்டு படகுகள் மட்டுமே இரட்டைமடி படகுகள். மற்றவை சாதாரண இழுவலை படகுகளே. நீங்கள் சொல்ல வருவதுபோல் நமது மீனவர்கள் பாரம்பரிய தொழிலுக்கு மாறினாலும், நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட GAAT ஒப்பந்தத்தின் மூலம் நமது கடலில் அன்னிய நாட்டு கப்பல் முதலாளிகள் இழுவலை இழுத்து மீன்களை அள்ளிக்கொண்டு போகிறார்களே அதை தடுக்க என்ன வழி?
இழுவலை தொழிலுக்கும் மீனவர் படுகொலைகளுக்கும் சம்மந்தமில்லை என்பது உங்களுக்கு தெரிந்த விஷயம்தான். ஆனால் இந்த இழுவலை எதிர்ப்பு பிரச்சாரம் மூலம் இலங்கை அரசு, தான் செய்த 500 தமிழக மீனவர்களின் படுகொலையை நியாயப் படுத்தப் பார்க்கிறது. இந்த இலங்கை, இந்தியா கூட்டு களவாணித்தனத்தில் நாமும் பலியாக வேண்டாம்.

vijayan said...

70 -களில் அறிமுகமான இழுவலையை 67 -இல் தோற்ற காங்கிரெஸ் எப்படி மீனவர்களுக்கு கொடுத்திருக்கமுடியும்.லாஜிக் இடிக்கிறதே.

பாரம்பரிய மீனவன் said...

அறுபதுகளின் இறுதியிலிருந்து எழுபதுகளின் தொடக்கம் வரை இந்தியா முழுவதும் இழுவலை தொழிலை அரசுகள் பரப்பின. எனினும் இதன் தொடக்க புள்ளி காங்கிரஸ் என்பதை மறுக்க முடியாது.

பாரம்பரிய மீனவன் said...

அரசுகள் அன்னிய செலவாணி அதிகம் ஈட்டுவதற்காக கொண்டுவந்த (இழுவலை போன்ற) திட்டங்களை சுட்டிக்காட்டி இழுவலை தொழில் செய்யும் மீனவர்களை ஊழல் வாதிகள் என்றும் கருணாநிதி சொல்வதுபோல் பேராசைக்காரர்கள் என்றும் சொல்வதை ஏற்று கொள்ள முடியாது.
மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதால்தனே சிங்களப் படை சுடுகிறது என்று தமிழ்நாட்டிலுள்ள சில பெருந்தன்மை பு _ங்கிகள் சொல்வதுண்டு. நீங்கள் தமிழக கடலோரங்களை எல்லாம் ஆலை கழிவுகளாலும், அணுசக்தி கழிவுகளாலும், அனல் சக்தி கழிவுகளாலும், கடலை நாசப்படுத்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களாலும் மீன் குஞ்சுகள் கூட பொரிக்க முடியாத அளவில் தமிழக கடலை நாசப்படுத்தி, தமிழக மீனவனை நிர்மூலமாக்கி சின்னாபின்னபடுத்திவிட்ட பின்பு, தமிழக மீனவனை பார்த்து குற்றம் குற்றம் சாட்ட தகுதி, அதிகாரம் இங்கே தமிழ்நாட்டில் எவனுக்குமில்லை. இது போதாது என்று இப்போது திருப்பூர் சாய ஆலை கழிவுகளை குழாய் அமைத்து கடலூரில் கடலில் கலக்க போகிறார்களாம்

Post a Comment