Friday, February 18, 2011

கடலில் கழிவுகளை கிருஷ்ணா கவ்வுவாரா?

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழக மீனவர்களுக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார். அதாவது மீனவர்கள் இந்திய எல்லையை கடலில் கடக்காமல் கவனமாக இருக்கவேண்டுமாம். ஏய் கிரிஷ்ணாவே உமக்கு கடலில் இந்திய எல்லை என்றால் என்ன என்று தெரியுமா? யோவ், நீங்க தமிழ்நாட்டு கரையில் வந்து என்ன நிலைமை என்று பார்த்திருக்கீங்களா? ஏய் நீரு டில்லில உட்கார்ந்துகிட்டு ராஜபக்ஷேவை திருப்தி படுத்த ஏதாவது உளருகிரீரா? தமிழ்நாட்டு கடல்கரைக்கும் இலங்கை கடல்கரைக்கும் உள்ள தூரம் வெறும் பதினெட்டு மைல்கல்தான் என்பது உமக்கு தெரியுமா? அதிலும் நாட்டு படகுகள் பல பாரம்பரியமாக மீன் பிடித்து வருபவர்கள் கடலில் உள்ள முதல் ஐந்து கடல் மைல்கல்தான் செல்லமுடியும் என்பது தெரியுமா? அதற்குமேலும் சென்று நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிக்க விரும்பினாலும் உங்கள் ஆட்சியின் திட்டத்தால் விசைப்படகுகள் இறக்கிவிடப்பட்டுள்ளதால், கடலில் எங்கள் பாரம்பர்ய மீனவர்களின் நாட்டு படகுடன் போட்டி போட்டு இந்த விசை படகுகள் அடிக்கடி சண்டை போட்டு வருவது உமக்கு விளங்குமா?
அதனால் சமாதானத்தை இங்கே தமிழ்நாட்டு மீனவர்களுக்குள் செய்யும்போது, முதல் ஐந்து மைகளுக்குதான் நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிக்கவேண்டும் என்று ஒவ்வொரு கடலோர மாவட்டங்களிலும் ஒப்பந்தம் செய்து மீன் பிடித்துவருவது குளிர்சாதன அறையில் இமர்ந்திருக்கும் உமக்கு விளங்குமா? அதனாலேயே விசை படகு மீனவர்கள் அதையும் தாண்டிதான் மீன் பிடிக்க கடலில் இறங்க வேண்டும் என்பதாவது உமக்கு சொன்னார்களா? அப்படி செல்லும்போது ராம்ச்வரம் பகுதியில் பத்து மைல்கள் வரை பாறை இருப்பதை உங்களுக்கு நாகல் புரியவைக்கமுடியுமா? அதையும் தாண்டித்தான் விசை படகுகள் மீன் பிடிக்க செல்லவேண்டும் எனபது உங்கள் அமைச்சகத்திற்காவது தெரியுமா? அதற்கு பெயர் இந்திய எல்லையை தாண்டுவது என்று உங்கள் விளக்கம் கூறினால் நீங்கள் மீன் பிடி தொழில் பற்றி அறியாமையில் உள்ள மூடன் என்பதை யாரவது உங்களுக்கு சொன்னார்களா?
இதுவரை சொல்லாவிட்டாலும் இப்போதாவது சொல்கிறோம் கேட்டுக்கொள்ளுங்கள். கடலில் மீனவனுக்கு எல்லைகள் கிடையாது. இல்லாத எல்லையில் [போடமுயலும் கிரிஷ்ணாவே, உங்கள் புத்தி இப்படி மழுங்கி பொய் இருப்பது தொடருமானால் தமிழக மீனவர்களின் போராட்டம் உங்களை நோக்கி திரும்பாதா? உங்கள் ஆட்சி செய்த லட்சணம் கடலோரம் முழுவதும் கழிவுகளை கக்கும் கம்பனிகளை கட்டியிருக்கிறீர்கள். அந்த கழிவுகளை பிடிக்க கடலில் இறங்க சொல்கிறீர்களா? கிரிஷ்ணாவே நீங்கள் அந்த கடல் கழிவுகளை கவ்வுவீர்களா?

No comments:

Post a Comment