Tuesday, March 29, 2011

திமுக தொண்டரின் மனச்சாட்சி.

சென்னையில் தென்சென்னை தொடர்ந்து திமுக தோற்கும் இடமாக மாறிவருவது திமுக தொண்டர்கள் மத்தியல் கவலை அளித்துவருகிறது. ஏற்கனவே தென் சென்னையில் உள்ள மயிலாப்பூர் தொகுதி, அவ்வப்போது அதிமுக வசம் சென்று விடுவதில் அவர்கள் கோபத்தில் உள்ளனர். தென் சென்னையின் நாடாளுமன்ற தொகுதியும் அதிமுக வசம் சென்றுவிட்டதே என்ற கவலையும் அவர்களுக்கு உண்டு. மயிலாப்பூர் தொகுதியில் இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைவர் கொடுத்துவீட்டரே என்று அவர்கள் வ்ருந்தி வருகிறார்கள். ஏற்கனவே மயிலாப்பூர் தொகுதியில் உள்ள மாநகராட்சி உறப்பினர்களின் தொகுதிகளில், பதின்மூன்றில் ஐந்தை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்ததற்கே மனச் சங்கடத்தில் திமுக தொண்டர்கள் இருக்கிறார்கள்.

இப்போது ஆயிரம் கலாட்ட செய்து அதன்மூலம், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலு தானே கடைசியில் வேட்பாளராக நின்றது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது சொனியாஅவையே ஏமாற்றிய தங்கபாலு தந்திரம் என்றுதான் திமுக தொண்டர்கள் எண்ணுகிறார்கள். அதேசமயம் தங்கள் கட்சியான திமுகவை மீண்டும் எப்படி இந்த தொகுதியில் வலுப்படுத்துவது என்று சிந்திக்கிறார்கள். காங்கிரஸ் இந்த முறை வெற்றி பெற்றால் மயிலை தொகுதி நிரந்தரமாக காங்கிரஸ் தொகுதியாக போய்விடும் என்று அச்சப்படுகிறார்கள்.

திமுகவில் தான்தான் வேட்பாளராக அடுத்தமுறை வரவேண்டும் என்று எண்ணுபவர்களும், தான்தான் அடுத்தமுறை வேடப்பலராக ஆவோம் என்று எண்ணுபவர்களும் நிறைய இருக்கிறார்கள்.அவர்கள் எல்லோருமே தொகுதியை நிரந்தரமாக காங்கிரஸ் கையில் கொடுத்துவிட தயாராயில்லை. அதற்காகவே காங்கிரஸ் கட்சி இந்த முறை தோற்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். இது ஒரு திமுக தொண்டர் கூறிய மனச்சாட்சி வாக்குமூலம்.

No comments:

Post a Comment