Tuesday, March 29, 2011

மதிமுக தொண்டர் குரல் வைகோவிற்கு கேட்குமா?

வைகோ ஜெயலலிதா மீது உள்ள கோபத்தால் அதிமுகவை தோற்கடிக்க கங்கணம் கட்டுவதாக செய்திகள் வரும்போது, அதற்கு ஏற்றார்போல அவரது மனச்சாட்சி என்று அழைக்கப்படும் நாஞ்சில் சம்பத்தும் தினமலர், ஜூனியர் விகடன் என மறைமுகமாக இதே கருத்தை நேர்கானல்களாக கொடுத்துவருவதும் மதிமுக தொண்டர்கள் மத்தியில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இதே விஷயத்தை வேறு கோணத்தில் காண்கிறார்கள்.

அதிமுக ஆட்சி வந்தால் அவர்களது குறி முழுவதும் திமுகவை அழிப்பதிலேயே இருக்கும். அப்பது அதிமுக ஆட்சிக்கு எதிராக பேசுபவர் வைகோவாக மட்டுமே இருப்பார். ஆனால் திமுக ஆட்சி வந்துவிட்டால் அவர்கள் உடனடியாக மதிமுக கட்சியின் தொண்டர்களையும் தலைவர்களையும் இழுத்துப்போடும் வேலையையே பார்ப்பார்கள். அதனால் மதிமுக அழியும். ஆகவே திமுக வை ஆடஹ்ரிப்பது எந்த வகையிலும் மதிமுகவிற்கு சாதகமான ஒன்று அல்ல. இவ்வாறு அவர்கள் கருதுகிறார்கள். வைகோ காதுகளுக்கு இந்த செய்தி செல்லுமா?

No comments:

Post a Comment