Thursday, May 5, 2011

கனிமொழி கைது ஒரு தயாநிதி சதியா?

குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்து இந்த சதி அரங்கேறப் போகிறது. நாளை மே ஆறாம்நாள், டில்லியில் சீ.பி.ஐ. நீதிமன்றத்தில், ஏற்கனவே குற்றப் பட்டிஹ்திரிகையில் சேர்க்கப்பட்ட கனிமொழியும், கலைஞர் காட்சி ஊடக மேலாண்மை இயக்குனர் சரத் குமார் ரெட்டியும், கைது செய்யப்படுவார்கள் என்பதும், அவர்களுக்காக வாதாட நியமிக்கப்படும் ராம்ஜெத்மாலினி எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு பிணை கிடைக்காது என்பதும், மன்னர் குடும்ப தலைவரான தலைவர் கலைஞருக்கு தெரிந்த செய்தியாக இருக்கிறது.

கனிமொழியின் மனச்சாட்சியிடம் பேசினால், தான் நேரடியாக எந்த பரிமாற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதையே அது சொல்கிறது. மூத்தாள் குற்றம் செய்தால் கேட்காது உலகம், ஆனால் இரண்டாம் மனைவி வீட்டு பிள்ளைகள் என்றால் இலகாரம்தான் என்பது தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இருந்து, நகரங்கள் வரை உலாவும் ஒருவித நிலப்பிரபுத்துவ பண்பாடு. அதனால்தான் மூத்தாள் வீட்டு பங்கு அறுபது விழுக்காடுஎன்றாலும், மூத்த்டால்தான் பண பரிமாற்ற நேரத்தில் இயக்குனராக இருந்தவர் என்பதும், இன்றும் கலைஞர் காட்சி ஊடக இயக்குனராக இருக்கிறார் என்பதும் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டாலும், மொத்தால் பிள்ளைகள் ஒருவர் துணை முதல்வர் என்றும், இன்னொருவர் மத்திய அமைச்சர் என்றும் இருப்பதால் அதை காரணம் காட்டி, சம்பந்தப்பட்ட சீ.பி.ஐ.அதிகார்களை ஒருவரால் தற்போதைக்கு இயக்க முடிகிறது என்று சொல்கிறது குடும்ப கணக்கு.

கனிமொழிக்கு நேரடியாக தொடர்பு இல்லையென்றாலும், ராசாத்திக்கு இருக்கிறதல்லவா என்று அந்த டில்லி வட்டாரங்கள் பதில் கேள்வியையும் கேட்கிறார்கள். ஆனால் பங்கு என்பது எல்லோருக்கும் அதாவது அண்ணன், தம்பி எல்லோருக்கும் போயுள்ளதே என்கிறது மறு தரப்பு. எது எப்படியோ இது குடும்பத்திற்குள்ளே இருந்து கொண்டே குழி பறிக்கும் செயல்தானே என்று அந்த தயாநிதி பற்றி அவர்கள் பேசுகிறர்கள். அப்படியானால் டில்லி திஹார் சிறையில் பங்களுக்கு தனி பிரிவு இருக்கிறதா என்றால் அதுவும் இருக்கிறது என்கிறார்கள். அன்கேவ் கனி இருந்தால், அதே இடம் மூத்தாளுகும் கிடைக்க வேண்டுமே என்று நியாயம் பேசுவோர் கேட்கிறார்கள்.

சரி.இது இரண்டவத்சு வெளியிடப்பட்ட குற்றப்பத்திரிகை அதாவது துணை குற்றப் பத்திரிக்கை எண்: ஒன்று என்றால், அடுத்து துணை குற்றப் பத்திரிக்கை எண்: இரண்டு எனபதில் என்ன வரும் என்று கேட்டோம். அதில் பணம் எடுத்துய் சென்றது வரும். சரி. அப்படியானால் ராஜா மூலம் வந்த கமிசன் பணம் வெளிநாடுகளுக்கு சென்றது பதிவு செய்ய்ப்படும். அதுவும் ஏற்கனவே குற்றப் பத்திரிகையில் உள்ளவர்களை பற்றியே மீண்டும் வரும். அத்தோடு சரியா? என்றால் இல்லை. 2001 ஆம் ஆண்டிலிருந்து .ச்பெக்டறம் விற்பனையில் முதலில் வருபவருக்கு, முதலில் கொடுத்தது என்ற அடிப்படையில் வேண்டிய நிறுவனங்களுக்கு கொடுத்து, அதற்கு பதில் கமிசன் வாங்கி கொண்டதும் வரும் என்றனர். அது என்ன? என்றால், அப்போது அமைச்சராக இருந்த அருண் ஷௌரியும், அடுத்து அமைச்சர்கா இருந்த தயாநிதியும் வருவார்கள் என்றனர். அதில் தயாநிதியின் சன் காட்சி ஊடக டீ.டி.எச்.க்கு, 765 கோடி பணம் கைமாறியது என்ற ஒரு குற்றச்சாட்டும் சேர்க்கப்படும் என்கிறர்கள்.

முதலில் தனது போட்டியாளரான கனிமொழியை ஒழித்து விடலாம் என்றும், பிறகு தனக்கு வருவதற்குள் குழப்பி விடலாம் என்றும் தயா நினைக்கலாம். ஆனால் அவரால் பாதிக்கப்பட்ட டாடா நிர்வாகம் எப்படி சும்மா இருக்கும்? அதுவும் இதே நியாயங்களின் அடிப்படையில் பழி வாங்காதா?

2 comments:

Anonymous said...

ஸ்...அப்பா. கண்ணைக்கட்டுதே. அய்யா ஒன்னு போயி IPL பாருங்க இல்ல மீண்டும் தலை மறைவு ஆயிடுங்க.பதிவுலகம் பொழைச்சிப்போவட்டும்.

யுவகிருஷ்ணா said...

எப்படி சார் இவ்வளவு மொன்னையா எழுதறீங்க?

கனிமொழி கைது ஆகணும்னு நீங்க ஆசைப்படறீங்க. அதைத்தவிர்த்து இந்த கட்டுரையில் வேறு ஏதாவது புது தகவல் இருக்கா? :-(

Post a Comment