Friday, May 6, 2011

ஜன லோக்பால் சட்டம் வந்தாலும், அமுலாக முடியுமா?

லோக்பால் மசோதா ஊழலை ஒழிக்க வருகிறது. சரி. நல்லதுதான். இல்லை. வரவில்லை. 42 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு வராமல் அதை தடுத்துவிட்டார்கள். ஒ. அப்படியா.ஜனலோக்பால் சட்டமானாலும் அமுலாகுமா இப்போது அன்னா ஹசாரே எழுப்பிய நெருப்பில் அது புற்றுயிர் பெறும். நல்லதுதானே. அதற்கு ஆடஹரவாக மக்கள் நாடெங்கும் எழுச்சி பெற்றுள்ளனர் என்று ஊடகங்கள் மூலம் தெரிகிறது. அதுவும் நல்ல அறிகுறிதான். நாட்டிற்கு இப்போது பெரிய இடங்களில் நடக்கும் ஊழலையும் தடுக்க ஒரு சட்டம் வேண்டும் அல்லவா? ஆமாம், ஆமாம். கட்டாயமாக. அதை அன்னா ஹசாரே கொண்டுவருகிறார என கொள்ளலாமா? அவர் எப்படி ஆள் என்று தெரியவில்லையே? அவர் யாரை இருந்தாலும், எப்படிப் பட்டவராய் இருந்தாலும் கொண்டுவரும் ஜனலோக்பால் சட்டம் நல்லதுதானே? உண்மைதான்.

மக்கள் எழுச்சி மூலம், குடிமக்கள் சார்பாக பாதி பேர் மசோதா தயாரிப்பு குழுவில் இருக்கவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு கடைசியாக ஏற்றுக்கொண்டு விட்டதே? ஆமாம், ஆமாம். அதில் இருக்கும் அப்பா சாந்தி பூஷன், மற்றும் மகன் பிரஷாந்த் பூஷன் பற்றி என்னவெல்லாமோ புகார்கள் வந்ததே? அவிஎல்லாம் இந்த அமரசிங் கிளப்பி விட்ட கதை என்கிறார்களே? இல்லாவிட்டாலும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் எந்த அவ்ழக்கிற்கும் பல லட்சம் ஒவ்வொரு அமர்வுக்கும் வாங்குபவர்கள்தானே? ஆனால் இந்த நாட்டின் மேட்டுகுடிகளுக்கு கூட, சமீபத்திய நாட்டின் அவமானம் ஊழல் குற்றங்களில்தான் என்ற கோபம் இருக்கிறதே? அதனால் அவர்களும் இதுபோன்ற மசோதா தாயரிக்க மனதார வருவார்கள்தானே? இருக்கும், இருக்கும்.

அப்படி ஒரு சட்டம் வந்துவிட்டால் இந்த மாபெரும் ஊழல்கள் நடக்காமல் இருந்துவிடுமா? அதுதானே தெரியவில்லை. சரி. நடந்துள்ள ஊழல்களின் பட்டியலிலிருந்து அதன் பண்பு என்ன என்று பார்ப்போம். அதாவது ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதில் ஒரு கோடியே எழுபத்தாறு லட்சம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தும் ஊழல். அதில் லாபம் பெற்றவர்கள் யார்? அரசியல்வாதிகளும், அதிகாரிகளும். அவர்கள்தான் இப்போது கமிசன் வாங்கியதற்காக,சிறை கம்பி எண்ணிக்கொண்டு இருக்காங்களே? முழு லாபத்தை பெற்றவர்கள் யார்? அது கார்போரேட்கள். அதாவது உலக பெரும் முதலாளிகள். அந்த முதலாளிகள் இங்கே நுழைய என்ன செய்தார்கள்? நீரா ராடியா போன்ற தனகளது வணிக தரகர்களை இறக்கி விட்டார்கள். அந்த நீரா ராடியா போன்றோர் அது பற்றி என்ன சொல்கிறர்கள்? அது வணிக தர்மம் என்கிறார்கள். அப்படியானால் அது யாருடைய வணிக தர்மம்?

உலக பன்னாட்டு மூலதன நிருவங்கலான கார்போரேட்கள் ஒரு அவ்ங்கத்தை செய்ய, தங்களது போது தொடர்பு அதிகாரி மூலம், எந்தெந்த ஆட்களுக்கு எவ்வளவு தொகைகள் கொடுக்க வேண்டும் என்று திட்டமிடுகிரரகள். அப்படி திட்டமிடுவதும், அதற்கேற்ப கொடுப்பதும் அவர்களது தொழில் தர்மம் என்கிறார்கள். அவ்வாற்று அடித்து கூறும் கார்போறேட்களை உலகம் முழுவதும் இறக்கிவிட்டிருப்பதுதானே உலகமயமாக்கல் கொள்கை. அந்த கொள்கை இருக்கும் வரை, அந்த கொள்கையை இந்திய அரசு கடைப்பிடிக்கும் வரை, இந்த கார்பொரேட் வணிகம் கோடி கட்டி பறக்கும். அதற்கு ஏற்றார்போல முடிவு செய்யும் இடத்தில் உள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளுக்கும், கமிசன்கள் போய்சேரும்.

அப்படியானால் இந்த ஜனலோக்பால் சட்டம் வந்தாலும் இத்தகைய ஊழலை ஒழிக்க முடியாதா? இந்த சட்டம் தீவிரமாக அமுலானால் என்னதான் செய்யமுடியும்? ஊழல் செய்த ஒரு அரசியல்வாதியை உள்ளே தள்ள முடியும். ஒரு அதிகாரியை உள்ளே தள்ளமுடியும். அப்புறம்? இன்னொரு அரசியல்வாதி அதே ஊழலை அதிக கமிசனுக்கு செய்வார். இன்னொரு அதிகாரி அதே ஊழலை அதிக கமிசனுக்கு செய்வார். அபப்டியானால் ஊழல் தொடர்வதை இந்த சட்டம் ஒன்றும் செய்ய முடியாதா? ஊழலை தங்களது தொழில் தர்மம் என்று கருதும் கார்போரேட்கள் இருக்கும்வரை ஊழல் தொடர்வதை வேடிக்கை பார்க்கத்தான் முடியும்.

அதற்கு வேறு வ்ழியே கிடையாதா? இந்த கார்போரேட்கள் வருவதற்கு முன்பு, இந்தியா எப்படி இருந்தது? இந்த அளவுக்கு ஊழல் இல்லாமல் இருந்தது. அப்போது பெரும் உதலாளிகள் இந்தியாவில் இல்லாமலா இருந்தார்கள்? இருந்தார்கள். ஆனால் வாய் அடக்கி கொண்டு இருக்கும் நிலை இருந்தது. அதற்கு என்ன சட்டம் உதவியது? "ஏகபோக வணிக கட்டுப்பாடு சட்டம்" [ monopoly Trade Restriction Act ] அதாவது எம்.ஆர்.டி.பி. என்ற சட்டம் இருந்தது. அந்த சட்டம் இப்போது எங்கே போனது? நரசிம்ம ராவ் ஆட்சியில் அமெரிக்க பொருளாதார கொள்கையான காட், டன்கள், மற்றும் உலகமயமாக்கலுக்கான, தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஆகியவை வந்த போது, மெல்ல, மெல்ல இந்திய அரசு அந்த எம்.ஆர்.டி.பி. சட்டத்தை இல்லாமல் செய்துவிட்டது.

அப்படி ஒரு கடும் சட்டம் வந்தால் நல்லதா? அதுபோல ஒரு " கார்பொரேட் வணிக கட்டுப்பாடு சட்டம்" கொண்டுவராமல், இந்த பெரும் மகா ஊழல்களை தடுக்க எந்த சாத்தியமும் இல்லை. அப்படி சட்டம் வந்தால்தான் ஊழலை செய்த கார்போறேட்களுக்கு அபராதாம் போட்டு, அவர்களை வணிகம் செய்யவிடாமல் தடை கொடுக்கலாம். இந்த உண்மை ஆனா ஹசறேக்கு தெரியாதா? அவர் அரசியல் பொருளாதாரம் பற்றிய அறிவு பெற்றவர் அல்ல. அதுமட்டுமின்றி அவர் கார்போஎட்களுக்கு எதிரான கொள்கை கொடவர்கா தெரியவில்லை. சரி. இந்த விவரம் சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன் வகையறாக்களுக்கு விளங்காதா? அவர்கள் தனகளது தொழிலில், தினசரி கார்போறேட்களை சார்ந்து இருப்பவர்கள். அப்படியானால் மறுபடி இந்த விவரத்தை பொதுமக்கள் தான் எடுக்க வேண்டுமா?

No comments:

Post a Comment