Friday, May 6, 2011

ராம்ஜெத்மாலினி மறைமுகமாக தயாளுவை தாக்குகிறாரா?

என்னோவோ சீ.பி.ஐ. நீதிமன்றத்தில், ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து வாதாட ஆசைப்[பட்ட அந்த முதுபெரும் வழக்கறிஞரை, கலைஞ்மர் தல்யீட்டில் கனிமொழிக்காக வாதாட வைத்துவிட்டனர். ராம்ஜெத்மாலினி ஏற்கனவே சென்னையில் ஒருவர் மீது உள்ள வழக்கில் வாதாடி பிணை வாங்கி கொடுத்தவர். அந்த பிரபல வழக்கு, சென்னையில் பிரபல தாதாவாக உலாவிய அயோத்தியாகுப்பம் வீரமணியின் வழக்கு. இருபது ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நாள் பேச ஒரு லட்சம் வாங்கி, தமிழ்நாட்டின் பிரபல தாதாவை காப்பாற்றியவர் ராம்ஜெத்மாலினி. அதனால் அவரது வாதம் நியாயம் மட்டுமே என்று நம்மால் எடுத்துக்கொள்வது கடினம். அவர் வாத திறமை உள்ளவர் என்று வேண்டுமானால் எடுத்து கொள்ளலாம். இப்போது கனிமொழிகாகவும் அதையே திறம்பட செய்துள்ளார்.

கனிமொழி, பணம் பெற்ற கலைஞர் காட்சி ஊடகத்தில், ஒரு போர்டு உறப்பினர்கூட இல்லை, போர்டு கூட்டங்களிலும் கலந்து கொண்டது இல்லை. எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து பட்டதும் இல்லை. அந்த ஊடகத்தின் பெரும்பான்மை பங்குதாரராகவும் இல்லை. அதனால் அவர் அந்த நிறுவனத்தில் வேகமாக செயல்பட்டார் என்ற சீ.இ.ஐ.யின் குற்றச்சாட்டில் எந்த நியாயமும் இல்லை. இத்தகைய ராம்ஜெத்மளினியின் வாதங்கள் சரிதான். அதேசமயம் அவை கலைஞர் காட்சி ஊடக நிறுவனத்தில், தயாளு அம்மையார் ஒரு போர்டு உறுப்பினர் எனபதையும், அவர் அங்குள்ள கூட்டங்களில் கலந்துகொண்டவர் என்பதற்கு கையெழுத்து போட்டுள்ளார் எனபதையும், தயாளு பெயரில் பெரும் பங்கு அந்த நிறுவனத்தில் இருக்கிறது என்பதும் மறைமுகமாக ராம்ஜெத்மாலினி சொல்வதுபோல இல்லையா

No comments:

Post a Comment