Friday, May 6, 2011

அமெரிக்கா என்ன உலக போலிஸ்காரனா?

ஒசாமா பிளடேனை பாகிஸ்தானில் கண்டுபிடித்தால், அதுவும் முக்கிய இடத்தில் இருப்பது தெரிந்துவிட்டால், அதற்காக "பயங்கரவாதத்தை எதிர்க்கும்" போர் என்ற பெயரில் அங்கே திடீரென புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி, அதன்மூலம் "நிராயுதபாணியாக இருந்த" பின்லேடனை சுட்டு கொன்று, அதை தடுத்ததற்காக அவரது மகனான" குற்றம் சட்டப்படாடஹ்வரை"யும் ச்ட்டுகொன்று, மனைவியை காலில் சுட்டு, உடனே ஓடிவிடுவது எந்த விதியில், எந்த மனித உரிமை சட்டத்தில் ஏற்கப்படக்கூடியது? "பயங்கரவாதி" என்று அமெரிக்க சொன்னது எனபது தவிர அவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?

ஏப்ரல் இருப்பதொன்பதாம் நாளே அமெரிக்க அதிபர் ஒபாமா எப்படி பின்லாடனை " கொல்வதற்கான" உத்தரவில் கையெழுத்து போட முடியும்? கூலப்பட்ட பிறகு உடலை எப்படி கடலில் தூக்கி எறிய முடியும்? இவையெல்லாம் எந்த உலக மனித உரிமை விதிகளில் வருகிறது? ஒரு போரில் கூட அதற்கே உரித்தான பல விதிகளும், சட்ட, திட்டங்களும் பின்பற்றப்பட வேண்டுமே? இங்கே அமெரிக்கா அடுத்த நாட்டு நிலத்திற்குள் நுழைந்து, இநத்தகைய அடாவடி செயலை செய்யலாம் என்றால், மாற்றார்களும் செய்வார்களே? உலகில் அராஜகத்தனத்தை கட்டவிழ்த்திவிட இதைவிட சிறந்த உதாரணம் ஒன்று உண்டா? இப்படி கேள்விகளை மனித உரிமை ஆர்வலர்களும், அமைப்புகளும் கேட்க மாட்டார்களா?

2 comments:

Post a Comment