Tuesday, May 24, 2011

கே.பி. யார் கையில்? ராஜபக்சே கையிலா? "ரா"கையிலா?

கே.பி. என்ற நபர் மலேசியாவில் பிடிபட்ட நேரத்திலிருந்து, உலகத் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்து விட்டவர். இப்போது அப்படிப்பட்ட ஒரு நபர் சொன்னார் என்று, சீ.என்.என்.-ஐ.பி.என். என்ற தனியார் காட்சி ஊடகம் ஒரு நேர்காணலை நேற்று வெளியிடுகிறது. அதை எடுத்து இந்திய ஏடுகள் இன்று வெளியிடுகின்றன. அதில் அங்கு சுற்றி, இங்கு சுற்றி, கடைசியாக, ஜெயலலிதாவிற்கு எதிராக "புலிகளை" நிறுத்துவது எனபதில் போய் முடிக்கிறார்கள். இப்போது இது யார் கை என்பது சொல்லாமலேயே புரியும். எந்த நேரத்தில் எந்த செய்தியைஎப்படி வேல்யிடுகிரரகள் எனபதை வைத்துதான் நாம் இந்த " காய் நகர்த்தும் கதாநாயகர்களை " புரிந்து கொள்ள முடியும்.


திடீரென கே.பி. அதாவது, " குமரன் பத்மநாப" பிரபாகரன் பற்றி ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? கே.பி. இப்போது " ராஜீவ் கொலைக்கு" ஒரு புதிய அர்த்தம் கண்டுபிடிப்பது யாருடைய " கதை வசனம்"? திமுக வின் " திராவிட கருத்தியலில்" பிரபாகரன் செல்வாக்கு செலுத்தப்பட்டார் என்ற இன்றைய கே.பி. வாதம் ஒரு பச்சையான திசை திருப்பல். ஏன் என்றால் பிரபாகரன் என்றைக்கும் 'திராவிடக் கருத்தியலை' ஏற்றதில்லை.இந்தியாவையே நம்பிவந்தார். உதாரணமாக பிரபாகரன் ஒரு 'சிறந்த ஆன்மீகவாதி'. அதுமட்டுமின்றி, 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்' வழியை பின்பற்றும் கருத்துக் கொண்டவர். அப்படிப்பட்டவர் எப்படி ' பிராமண எதிர்ப்பாளராக' கே.பி. சொல்வது போல இருந்திருக்க முடியும்?.


கே.பி. சொல்வதுபோல, பெரோஸ் காந்தி என்ற பார்சி சாதியை சேர்ந்தவரின் மகனான ராஜீவ் காந்தி எப்படி பார்ப்பனராக இருப்பார்?. அவரை பார்ப்பனர் என்பதற்காக புலிகள் கொலை செய்தார்கள் என்று கே.பி. கூறுவது, ஒரு தேசியவிடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் பாணி. இந்த கருத்தியல் எப்போதுமே இந்தியாவில் திமுக விற்கு எதிராக வழக்கமாக, குற்றம் கூறும் சக்திகள் சொல்லிவரும் குற்றச்சாட்டு. அதை எந்த விதத்திலும் 'புலிகளுக்கு' எதிராக பயன்படுத்த முடியாது. ஏன் என்றால் தொடக்கம்முதல், இறுதி வரை பிரபாகரனும், புலிகளும், எம்.ஜி.ஆரின் விசுவாசிகள். ஆதரவாளர்கள். இது கே.பி.க்கும் தெரியு. ஆனாலும், மேலிருந்து உளவுத் துறையினர் எழுதிக் கொடுப்பதை படிப்பதுதான் ஐன்றைய கே.பி.யின் நிலைமை?


பிரபாகரன் தனது வாழ்க்கையின் முக்கிய திருப்பு முனையான தனது திருமணத்தை, ஒரு கோவிலில் வைத்து நடத்தினார். அதை " அய்யர்" வைத்துதான் நடத்தினார் என்பதும், அங்கு இதே கே.பி. இருந்தார் எனதும் நாடர்ந்த கதை. அப்படி இருக்கையில் பிரபாகரனையும், புலிகளையும், "பார்ப்பன எதிர்ப்பாளர்கள்" என்று முத்திரை குத்துவது எப்படி சரி?
இவ்வாறு " கிழிந்துபோன கந்தல் துணி" போல ஒரு அறிககையை இந்த உளவு நிறுவனங்கள் தயார் செய்து கே.பி. பெயரில் வெளியிட்டால் யார் நம்ப முடியும்? அதேபோல " ஜெயலலிதா ஒரு பார்ப்பனர் என்று அவரையும் புலிகள் கொலை செய்ய முனைந்ததாக" அடுத்த கதையையும் கே.பி.யை வைத்து சொல்ல வைத்திருக்கிறார்கள்.



இதேபோல, ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது, 2005 ஆம் ஆண்டில், மத்திய அரசில் அப்போது ஆட்சியில் இருந்த இதே ஐ.மு.கூ. வின் முதல் தவணை ஆட்சியில், உள்துறை அமைச்சர்கா இருந்த சிவராஜ் பட்டீல், " தனது ஆண்டறிக்கையில் புலிகள் நடமாட்டம் தமிழ்நாட்டில் இருப்பதாக " அறிவித்தார். அதற்கு முதல்வர் "ஜெ" அப்போதே பதிலடி அறிக்கை வெளியிட்டார். அதற்குபிறகு இன்னொரு கடிதத்தை முதல்வருக்கு, உள்துறை அமைச்சர் எழுதினர். அதில் " இரண்டு புலிகளின் பெண் தற்கொலைப் படையினர்" பனப்பாக்கம் வந்து இறங்கியிருப்பதாகவும், முதல்வர் "ஜெ" கொலை செய்ய வந்திருப்பதாகவும் எழுதியிருந்தார். அதற்கும் அன்றைக்கே " புலி கிளியை கிளப்பாதீர்" என்று உள்துறையின் பொய்யுரையை அம்பலப்படுத்தி, இரண்டு அரை அமனி நேர நிகழ்ச்சிகளில், நானே பதில் கொடுத்திருந்தேன். அதுவும் அந்த நேரத்தில், முதல்வராக செல்வி.ஜெயலலிதா இருக்கும்போதே, " ஜெயா டி.வி." யில் ஒளிபரப்பப்பட்டது. இப்போது அதே சக்திகள் அதேபோல ஒரு போய் கூற்றை உண்மையாக்க தங்கள் கைகளில் கைதியாக உள்ள ஒரு கே.பி.யை பயன்படுத்துகிறார்கள்


இன்று டில்லிக்கும், அதன்மூலம் கொழும்புக்கும் பிரச்சனையே ஜெயலலிதா ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்ததுதான். ஏன் என்றால் அவர்கள் இருவரும் கருணாநிதி ஆட்சி இருக்கும்வரை கவலை இல்லாமல் இருந்தனர். பெரும் அளவில் ஜெயலலிதா அணி வந்தபின், அதுவும் முதல்வர் ஜெயலலிதா வேற்றுபெற்ற பின்பும்கூட, ஈழப்பிரச்சனையில் " தமிழர்களுக்கு " சாதகமாக " ராஜபல்செவை" அனைத்து நாட்டு விசாரணைக் கூண்டில் என்ற்றவேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருப்பது கண்டு இந்த இரண்டு நாடுகளின் தலைமையும் நடுங்கிக் கொண்டு இருகின்றன. அதனால் அவரை அதாவது "ஜெ".வை ஈழப் பிரச்சனையில் கலைத்து விட முயல்கின்றனர். அதுதான் " கே.பி." பெயரில் அவர்கள் எடுக்கும் முயற்சி. அதற்காக " கோத்தபாயே ராஜபக்செடும், பசில் ராஜபக்சேயும்", கடந்த வெள்ளிக்கிழமை இரவு டில்லி வந்து கலந்து பேசியதும், தாங்கள் கொழும்பில் இருந்த முன்னாள் இந்திய தூதர் அலோக் பிரஷாந்தின் மகன் நிதின் பிரஷாந்தின் திருமணத்திற்கு வந்ததுபோல காட்டிக்கொண்டதும், அதன்மூலம் "டில்லி ஆலோசனையின்" பேரில், எப்படியாவது "ஜெ"வை சமாதனப்படுத்த முயல வேண்டும் என திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. அதன் அடுத்த " காய் நகர்த்தல்" தான் இந்த கே.பி. நேர்காணலும், அதற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும்.

3 comments:

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.



Share

ராஜ நடராஜன் said...

இந்தக் கால கட்டத்தில் கே.பியின் அறிக்கை ஜெயலலிதா கூறிய ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே திசை திருப்பும் பொருட்டு இலங்கை அரசு,ராவின் கூட்டு ஸ்தாபதனத்தில் தயாரிக்கப் பட்ட ஒன்று.தமிழர்கள் திசை திருப்பலுக்கு பலியாகமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

பதிவு உண்மைகளை அப்படியே வெட்டவெளிச்சமாக்குகிறது.

ஆறாம்பூதம் said...

”ரா” வின் தோல்வியடைந்த மற்றொரு முயற்சி.

Post a Comment