Monday, May 9, 2011

பிடல் காஸ்ட்ரோ கூறுவதால் ஏற்றுக்கொள்வார்களா?

அமெரிக்கா தான்" பயங்கரவாதத்தை எதிர்த்த போரை" நடத்தி வருவதாக கூறிவருகிறது. அதில் ஒன்றுதான் பாகிஸ்தானுக்கு உள்ளே புகுந்து, நிராயுத பாணியாக இருந்த ஒரு பெரியவர் பின் லதனை சாய்த்து விட்டோம் என்று இறுமாப்பு கொள்கிறார்கள். அது பற்றி, கியூபா நாட்டு போராளித்தலைவர் " பிடல் காஸ்ட்ரோ" எழுதுகிறார். அவர் ஏற்கனவே அமெரிக்காவால், அதன் உளவு துறையால், அதன் சீ.ஐ.ஏ.வால் "பலமுறை" படுகொலை செய்யப்படுவதற்காக இலக்காகி ஒவ்வொரு முறையும் தப்பியவர். அமெரிக்காவிற்கு அருகே ஒரு நாட்டில் அமெரிக்காவின் முதலாளித்துவ பொருளாதாரத்தை ஏற்காத காரணத்தால், கியூபாவும், அதன் சிற்பியான பிடல் காஸ்ட்ரோவும் தொடர்ந்து அமெரிக்காவால் குறி வைக்கப் பட்டவர்கள். அவர் இந்த பின்லேடன் கொலை பற்றி எழுதுவதால் அது கவனிக்கத் தக்கது.

அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு நடந்த 9 / 11 தாக்குதல் நேரத்தில் கியூபா உடனடியாக அதில் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிக்கும், மனிதாபிமான ரீதியாக உதவி செய்தது என்கிறார். அதுமட்டுமின்றி உடனடியாக அமெரிக்கா முக்கிய விமானப் படைக்கு அந்த நாட்டில் உடனடியான பாதுகாப்பு கேள்விக்குரியானதால், கியூபா நாட்டில் அவை தரையிறங்க உதவிகள் செய்ஹ்டுள்ளோம் என்கிறார். அதுதான் தக்க சமயத்தில் பயங்கரவாதத்தை எதிர்த்து செய்யும் உதவிகள். ஆனால் இப்போது அமெரிக்கா கொலை செய்துள்ள பின் லேடன், ரசியாவிற்கும், சீனாவுற்கும் எதிராக, செயல்பட்டவர். அவருக்கு அப்படி செயல்பட அமெரிக்கா நிதி உதவி, ஆயுத உதவி, ஆயுத பயிற்சி ஆகியவற்றை அளித்தது என்றும் குறிப்பிடுகிறார்.

அப்படிப்பட்ட பின்லாடனை இன்று பாகிஸ்தான் என்ற 25 கோடி முஸ்லிம் மக்கள் கொண்ட ஒரு நாட்டில் அந்த மக்களுக்கும் அரசுக்கும் தெரியாமல், பின்லேடனின் மனைவி, மகள் முன்பே, நிராயுடாத பாணியான அவரை சுட்டு கொன்று கொலை செய்துள்ளது.என்று எழுதுகிறார்.அது மட்டுமின்றி, மனித உரிமைகளுக்கு சிறிதும் மதிப்பு கொடுக்காமல் இப்படி அவர்களது சுற்றத்தார் முன்னிலையிலேயே படுகொலை செய்த அமெரிக்காவின் செயல் எந்த வகையில் நியாயம் என்று வினவுகிறார்.

No comments:

Post a Comment