Tuesday, August 2, 2011

மானம் கப்பலேறி போகுதே.

இந்திய அரசுக்கு மானம் இல்லை. இலங்கை எம்.பி.களை வரவேற்று அவர்களை "தமிழ்நாட்டு எம்.பி.கள் எதிர்த்து முழக்கம் இட்டால், அதற்காக அந்த "சிங்கள பவுத்த பேராண்மை வாதிகளான போர்குற்றம் புரிந்த இரத்தக்கைகளுக்கு" கை கொடுத்து அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் ஒரு "மக்கள் அவைத்தலைவரை" கொண்டிருக்கும் நாடு. தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறப்பினர்கள் ஒருசேர எதிர்ப்பு கொடுத்தான் கூட, அது தமிழ்நாட்டு மக்களின் அதாவது எழரைகோடி மக்களின் உணர்வு என்று தெரிந்தும்கூட, மக்களவையை நடத்தும் "மீராகுமார்" புரிந்துகொள்ளவில்லைஎன்றால், இத நாட்டை இந்த நாடாளுமனறத்தை இனியும் எதற்காக "தமிழர்கள்" மதிக்க வேண்டும்?

இலங்கை எம்.பி.களின் குழுவிற்கு தலைமை தாங்கி வந்திருப்பவர் அங்குள்ள நாடாளுமன்ற லேரவைத் தலைவர். அதாவது அரசத் தலைவர் "மகிந்தாவின்" சகோதரர். அவரிடம் மீராகுமார் மன்னிப்பு கேட்கிறார் என்றால், ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றதற்காக, "ராஜபக்சே கும்பலும், டில்லி ஆட்சியாளர்களும்" எத்தனை முறை "தமிழர்களிடம்" மன்னிப்பு கேட்கவேண்டும்? ஜகஜீவன்ராமின் மகள் என்பதற்காகவும், ஒரு தலித் பெண் என்பதற்காகவும் இதுவரை மரியாதை தந்துவந்தோம் மீராகுமாருக்கு என்று நாம் கூறவேண்டி இருக்கிறது. தமிழகமே எழுந்து "டில்லியே ராஜபக்சேவிற்கு உதவியதற்காக தமிழர்களிடம் மன்னிப்பு கேள்" என்ற குரலை உயர்த்தவேண்டிய கட்டம் வந்துள்ளது. இதைத்தான் இன்று காலை வின் காட்சி ஊடகத்தின் நிகழ்ச்சியான" செய்திகளும், நிஜங்களும்" எடுத்து சொன்னது.

1 comment:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

Post a Comment