Friday, September 9, 2011

அண்ணா ஹசாரே "மாயையை " உடைத்த "அருணா ராய்"

அண்ணா ஹசாரே "மாயையை " உடைத்த "அருணா ராய்"
நேற்று "அருணா ராய்" சென்னை வந்தார். முதலில் காலையில் " தேசிய தொழிலாளர் கவுன்சில்" சார்பாக நடந்த "ஊழலை எதிர்த்து போராட" என்ற தலைப்பில் , "ரூத் மனோரமாவும்", சாமியும் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசினார். அதில் முக்கியமாக "ஊழல் என்பது பொருளாதார் ஊழல் மட்டும்தானா?" என்ற கேள்வியை முன்வைத்தார். " அதிகாரத்தை தவறாக பயன்படுத்தலும்" ஊழல்தானே என்று சிந்திக்க வைத்தார். குஜராத்தில் "அதிகாரத்தை பயன்படுத்தி மோடி முஸ்லிம்களை கொலை செய்ததும்" ஊழல்தானே என்றார். "தலித் மற்றும் பழங்குடியினரை அதிகாரத்தின் மூலம் இழிவுபடுத்துவதும்" ஊழல்தானே என்றார். "இட ஒதுக்கீட்டை" அதிகாரம் மூலம் "அப்புறப்படுதினாலும்" ஊழல்தானே என்றார். அரசாங்கம் முன்வைத்த "லோக்பால்" வரை நகலும் "சரியில்லை" என்றார். அதனால்தான் மக்களது எதிர்ப்பு அரசுக்கு எதிராக வந்தது என்றார்.

" சட்டமாவதற்கு முன்பு மக்கள் கருத்தறிவது" என்பது இந்த "ஊழல் தடுப்''பு" சட்டம் ப்வ்விசயத்தில் நடந்துள்ளது "'நல்லது" என்றார். அதைதான் தாங்கள் "தகவல் பெரும் உரிமை சட்டத்திற்காக" செய்தோம் என்றார். அருணா ராய் 1968 இலிருந்து 1974 வரை, ஐ.ஏ.எஸ். ஆக பணியாற்றியவர். அதன்பின் வேலையை தூக்கி எறிந்துவிட்டு, ராஜஸ்தானில் உள்ள " எம்/கே.எஸ்.எஸ்." என்ற " தொழிலாளர்-விவசாயிகள்-போராடும் அமைப்பில்" முழுமையாக பணி செய்தவர். அப்போதுதான் " என்.சீ.பி.ஆர்.ஐ." என்ற "தேசிய தகவல் பெறும் மக்கள் உரிமை பிரச்சாரம்" எனும் அமைப்பில் உருவாக்கி இயக்கினார். அதில் இரணூற்று ஐம்பது௦ உறுப்பினர்கள் இருகிறார்கள். "தகவல் பெரும் உரிமை சட்டம்" கொண்டுவர மூலகாரணமாக இருந்த இவரை, சோனியா காந்தி தனது "தேர்தல் பரப்புரைக்கு" பா.ஜ.க. வை தோற்கடிக்க "மதசார்பற்ற" தன்மை என்ற 'வண்ணத்தை " தக்கவைக்க பயன்படுத்தினார். அதனாலேயே சோனியா தலைமையிலான ' தேசிய ஆலோசனை கவுன்சிலில்" அருணா ராய் முக்கிய இடம் வகித்துள்ளார்.

இப்போது "அரசாங்கம் வைத்துள்ள லோக்பாலுக்கு", அண்ணா ஹசாரே வைக்கும் "ஜன்லோக்பால்" வரை நகல் பெரும் "'இடரை" ஏற்படுத்தியுள்ளது. அந்த நேரம் பார்த்து " தே. த.பெ.ம.உ.பி." முன்வைக்கும் "ஊழல் தடுப்பு வரை நகல்" ஒரு " அப்பாடா" நிலைமையை ஆள்வோருக்கு ஏற்படுத்தி உள்ளது. இதில் '' நீதித்துறையை சுதந்திரமாக செயலபட விடமாட்டீர்களா? என்று இவர் கேட்கிறார். அண்ணா ஹசாரே கும்பலின் "இந்துத்துவா" சாயத்திற்கு "சரியான பதிலடி" கொடுக்கிறார். "நாடாளுமனறத்தை" எப்படி ஓரம்கட்டி, "மக்கள்" என்ற பெயரில் 'மேட்டுக்குடியை மட்டும் "பேஸ் புக்" " ட்விட்டர்" மூலம் திரட்டி, இந்தியாவின் "ஜனநாயக" நெறிமுறைகளை உடைக்கலாம் என்று இவர் கேட்கிறார். "அரசாங்க" அதிகாரிகள் மட்டும்தான் ஊழல் புரிகிறார்களா? என்ற வினாவை எழுப்புகிறார். "'குடிமக்கள்" என்று அன்னா ஹசாரே குழுவினர் கூறுவது, "அடிப்படை மக்களை" சேர்க்கவில்லை'ய' என்று வின்வுகிறார்.

அன்னா ஹசாரே குழுவில்' உள்'ள்' ஐந்துபேர் " மக்கள் பிரதிநிதிகளா?" என்ற கேள்வியை எழுப்புகிறார். நாடாளுமன்ற "நிலைக் குழுவிற்கு" அனைத்து "வரை நகல்களும்" சென்றுள்ளது நல்லது என்கிறார். நிலைக் குழு அதிக "அதிகாரம்" கொண்டது என்கிறார். நிலைக் குழுவில் எல்லா கட்சிகளின் "பிரதிநிதிகளும்" வந்துவிடுவார்கள் என்றார். நாடாளும்னறம் "தவிர்த்து சட்டம் இயற்ற முடியுமா? எனக் கேட்டார். அன்னா ஹசாரே "பாணியை" அனுமதித்து "மேட்டு குடிகளை" தெருவில் திரட்டி, "கொள்கைகளை" தீர்மானிக்க "அனுமதித்தால்" நாளை " மத சார்புள்ள நாடு" என்றும், இட ஒதுக்கீடு வேண்டாம் என்று'ம அந்த மேட்டு குடி கும்பலை" தெருவில் திரட்டியே "'உருவாக்கி விடுவார்கள் என்றார். 'உதித்ராஜ்" என்ற தலித் தலிவர் ஒரு " பஹுஜன் லோக்பால்"'' வரை நகலை வைத்துள்ளார் என்றார்.தலித்,சிறுபான்மை,பெண்கள் ஆதிவாசி"ஆகியோராது "பிரதிநிதிகள் இல்லாத " தயாரிப்பு' குழுவை எப்படி ஏற்பது என்றார். இவரது "வாதங்கள் " பா.ஜ.க.வின் " சாயம்"தான் அண்ணா ஹசாரேவிடம் இருக்கிறது என்பதாக " அம்பலப்படுத்தியது".


எல்லா வரை நகல்களையும் "நிலைக்குழு" ஆய்வு செய்து "'மக்களது கலந்தாலோசனையுடன் " ஒரு சரியான''ஊழல் தடுப்பு வரை நகலை" உருவாக்க வேண்டும் என்றார்அருணாராய்.இது"'தொலைநோக்கில்"இந்திய மக்களுக்கு பயன்படுவதாக "தோற்றம் " அளித்தாலும், உடனடியாக அன்னா ஹசாரேவால் வளர்ந்துவரும் பா.ஜ.க. மாயையை" மட்டுப்படுத்த உதவும். இதுதானே "சோனியா" விரும்புவதும். ஆனாலும் "அடிப்படை மக்களை" ஓரந்தள்ளி "அண்ணா ஹசாரே வாழ்க" என்று முழக்கமிட்ட "அறிவுஜீவிகளுக்கு" ஒரு நல்ல சூடு. சென்னையில் இதுவரை நடந்த " ஐ.ஏ.சீ." என்ற : ஊழல் எதிர்ப்பு இந்தியர்கள்" அமைப்பு "தமிழர்களை" இணைப்பதில் "கவனம்" செலுத்துவதை விட, "மார்வாடிகளை" அரவணைப்பதிலேயே "''கவனம்" செலுத்தியது என்ற உண்மையை நாம் மறக்க முடியாது.அதனால்தான் அவர்கள் சென்னையில் "இந்தியில்" முழக்கம் போட்டு "தனிமைப்பட்டார்கள்".." அன்னா ஹசாரே வாழ்க" என்று முழக்கமிட்டு " ஊழல் எதிர்ப்பை" பின்னமே தள்ளினார்கள் எண்பதை நாம் நினைவுபடுத்தி பார்க்க முடிகிறது.

அதிகமாக ' "பேசுபவர்களை" , செயலிலே ஈடுபட''அருணா ராய்" கேட்டுக் கொண்டார். சிறிய செயலில் கூட ஈடுபடாத "அறிவுஜீவிகள்" பலரும் "அண்ணா ஹசாரே"' பின்னால் திரண்டதை நாம் எண்ணிப் பார்க்க முடிந்தது. அதிர்ச்சி செய்தியாக அருணா ராய் " ஒரு தமிழச்சி" என்பதையும் வெளிப்படுத்தினார். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து பிறகு, வடக்கே போய்விட்டதால், "தமிழை"'' சரளமாக பேச மறந்து விட்டவர் என்று தெரிந்தது

No comments:

Post a Comment