Sunday, October 23, 2011

பரமக்குடி துப்பாக்கி சூடு, ஆரோக்கியமான சர்ச்சையை சென்னையில் கிளப்பியது.

"சேவ் டமில்ஸ்"சென்னையில் லயோலா கல்லூரி பி.எட.அரங்கில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அது" பரமக்குடி அரசு வன்முறையும், மௌன வன்முறையும்" பற்றியதாக இருந்தது. பலரின் மௌனம் சிலரை அதிகமாக கோபம் ஊட்டி அதுவே " தடுமாறிய" பேச்சுக்கும் இட்டுசெல்லும் என்பதுபோல, நமது வழக்கறிஞர் விஜயேந்திரன் " நஞ்சு கலந்து கொல்ல வேண்டும், மரபணு மாற்ற வேண்டும்" என்று உணர்ச்சி வசப்பட்டார். அதனால் யாருமே அதை பெரிதாக நினைக்கவில்லை. இது "விரக்தியின் உச்சம்" என இருந்துவிட்டார்களா? என்று தெரியவில்லை. ஆனாலும் கூட்ட ஏற்பாட்டாளர் செந்தில் தனது கடமை என்று பதில் சொல்ல வந்தார். விஜயேந்திரன் சந்தேகப்படுவதுபோல, தாங்கள் ஒரு "பணம் வாங்கும் தொண்டு நிறுவனம் அல்ல" என்றார். அதேசமயம் " பெண்களை இழிவுபடுத்தல்" போன்ற சர்ச்சைகளும் இருக்கிறது என்றார்.

அதற்குபிறகு, இளம்பரிதி பேசவந்தார். அவர் தெளிவாக கூட்ட "தலைப்பை" பிடித்து கொண்டார். அதில் உள்ள மௌன வன்முறையை விளக்கினார். "முக நூல்" பக்கங்களில் பல "ஆதிக்க சாதிவெறி சொற்கள்" நடனமாடுவதை எடுத்து ஆதாரம் காட்டினார். உயர்தொழில்நுட்பம் படித்த பிறகும், கேவலமான சாதிவெறி தொடர்வதை அம்பலப்படுத்தினார். தேவர் சமூக படித்த இளைஞர்களில் இப்படியுமா? என எண்ண வைத்தது. அதேபோல "ஒரு பிரபல பேச்சாளர் மற்றும் எழுத்தாளரை" பற்றி கூறியது பலருக்கு அதிர்ச்சியை தந்தது. அந்த பிரபலம் எப்படி பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றி பேச அழைத்த இடத்தில் வந்து அது பற்றி தனது "ஒன்றரை மணிநேர" உரையில் பேசாமல், மரண தண்டனை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தார் என்று ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார். பிரபலம் பற்றி தெரிந்தது இவ்வளவுதானா?

அடுத்து "முத்துராமலிங்க தேவரின் உறவுக்காரரான" தினகரன் என்ற எழுத்தாளர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளதை மேற்கோள் காட்டி, இம்மானுவேல் சேகரன் சாதி வெறியில் தான் தேவரால் தூண்டப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனபதை சுட்டி காட்டினார். அதில் தேவர்களை "ஆந்திராவில் இருந்து வந்தவர்களாக" சொல்லி இருப்பதையும், "தேவேந்திரகுல வேளாளரை" தமிழ் பழங்குடி என்று விளித்திருப்பதையும் மேற்கோள் காட்டினார்.அந்த புத்தகத்தை வெளியிட்ட பிறகு ஒரே மாதத்தில் எப்படி "தினகரனும்" கொலை செய்யப்பட்டார் என்பதையும் கூறினார். "ம.க.இ.க." பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றி ஒன்றுமே செய்யவில்லை என்று அவர் கூறியது அந்த அமைப்பினருக்கு கோபத்தை கொடுத்து, அவர்கள் கடைசியில் வீரசாமி மூலம் தாங்கள் தெரிவித்த கருத்துக்களை காட்டி பேசினர். எப்படியோ இளம்பரிதி பல விசயங்களை புதிதாகவும், சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தி விட்டார்.

அதன்பிறகு வ.கீதா பேசினார். அவரும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மீதான சாதி ஒடுக்குமுறை வரலாற்றை எடுத்து சொன்னார்.வ.கீதா கீழ தஞ்சையில் திராவிடர் கழகம் உருவாக்கிய சாதி எதிர்ப்பு தளத்தில்தான் பொதுவுடைமைவாதிகள் பயணம் செய்தார்கள் என்றார். அது ஒருபுறம் உண்மை என்றாலும், பொதுவுடைமைவாதிகளும் அன்று "சாணிப்பால், சவுக்கடி" என்பதற்கு எதிராக சீனிவாசராவ் தலைமையில் சாதி எதிர்ப்பையும் சேர்த்து போராட்டம் எடுத்தார்கள் என்று சொல்லியிருக்கலாம். அதேபோல திராவிடர் கழகமும், கீழ தஞ்சையில் " விவசாய கூலிகள்" சங்கம் நடத்தியது என்பதையும் சொல்லியிருக்கலாம். விடுதலை ராஜேந்திரன் அடுத்து பேசினார். அவர் 1883 இலிருந்தே தென் மாவட்டங்களில் நடக்கும் சாதி மோதல்கள் பற்றி கூறினார். அதில் நாடாருக்கும், தேவர்களுக்கும் நடந்த சாதி மோதல்களை கூறினார். அதில் தேவர்கள் நாடார்களை இழிவாக நடத்தியது, அடக்குமுறை செய்தது எல்லாமே விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு நடந்த முதுகளத்தூர் சாதி அடக்குமுறைகளும் பேசினார். மள்ளர் அல்லது குடும்பர் அல்லது பள்ளர் அல்லது தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களை " தலித்" என்றே அவர் குறிப்பிட்டார். சமீப வன்முறைகளும் "தலித்" மீது என்றே வாதிட்டார். அதுவே சில இளைஞர்களுக்கு "கோபத்தை" ஏற்படுத்தியது.


அங்கே நடந்தது "தேவர்-பள்ளர்" மோதல் என்றும், அதை அப்படியே விவரிக்க வேண்டும் என்றும், "தலித்" என்ற சொல் பரந்த வேறு பொருளுக்கு இட்டு சென்றுவிடும் என்றும், அதனால் அங்கே இருக்கும் முரண்பாட்டை சரியாக எடுத்து சொன்னதாக் ஆகாது என்றும் அவர்கள் கூறினர். எப்படி சொல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்ல கூடாது என்றும் பதில் வ்ந்தது. அந்த சமூகத்தில் இவர்கள் சிலர்தான் என்றும் க்ருத்து வந்தது. அது அனைத்து தேவேந்திரகுல வேளாளர்களிடமும் இருக்கிறது என்று கூறியதற்கும் எதிர்ப்பு வந்தது. குட்ம்பமாரை மற்றவர்கள் எப்படி புரிந்துகொண்டிருக்கிறர்கள் என்பதும் தலைநகரில் உள்ள அறிவுஜீவிகளிடம் எப்படி கருத்து இருக்கிறது என்பதும் அங்கே வெளிப்பட்டது. அந்த சமூகம் எப்படி தங்களை அழைத்து கொள்ள விரும்புகிறார்களோ அப்படி அவர்களை அழைக்க நமது அறிவுஜீவிகள் தயார் இல்லையா? என்று தெரியவில்லை. அதில் ஒரு மள்ளர் "தலித் என்றால் பெண்களும்" உண்டல்லவா? என்றார். அபப்டியானால் அங்கே நடந்த "தேவர்-பள்ளர்" மோதலை "மறவர் பெண்களையும் சேர்த்து உச்சரிக்கும் தலித் " என்ற் வார்த்தை மூலம் எப்படி சரியாக வெளிப்படுத்த முடியும்? என்று வினவினார். அது என்னமோ அறிவுபூர்வமாக பட்டது.


பெயரில் என்ன இருக்கிறது என்று ஒரு கேள்வி வந்தது. பெயரில் "வரலாறு, பண்பாடு, போர், போர்க்களம், வீரசாவு" இத்தனையும் இருக்கிறது என்று நாம் பதில் சொல்ல வேண்டி வந்தது. "உழவர் பெருங்குடியின் போர்ப்படைபிரிவுதான் "தேவேந்திரகுல வேளாளர்கள்" என்று நான் சொன்னதை பலரும் ரசிக்க வில்லை என்று தெரிந்தது. வரலாறுகளை புத்தகங்களில் படித்து தொகுக்கலாம்.நிகழ்வுகளை உண்மை அறியும் குழுக்கள் மூலம் சில நாள் அங்கே சென்றுவ்ந்ததால் தெரிந்து கொண்டு திருப்தி அடையலாம். ஆனால் ஒடுக்கப்பட்டமக்களது வரலாற்று நிலை பற்றியும், போர் தொடுக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தை பற்றியும், அந்த சமூகத்துடன் ஆழமாக வாழ்ந்துதானே கற்று கொள்ள முடியும்? இப்படி நமக்கு புரிவது எல்லாமே தவறு என்று அறிவுஜீவிகள் கருதலாம். அறிவுஜீவிகளின் கருத்துதான் எழுதப்படும். பேசப்படும். பதிவு செய்யப்படும். இதுதான் ஐன்றைய நிலைமை.

போர்களத்தை சந்திக்கும் உழவர் கூட்டம் தனக்கு ஆதரவாக வந்திருக்கும் சக்திகளுடனும், நகர்ப்புற அறிவுஜீவிகளுடனும், அமர்ந்து தங்கள் மதிப்பீட்டை அவர்களும் புரியும் வண்ணம் கூறுவதற்கான "உத்திகளை" இன்னமும் உருவாக்க வில்லை என்றும், எந்த மொழியில் அவர்களையும் தங்கள் உணர்வுகளை ஏற்று கொள்ள செய்யவேண்டும் என்று இன்னமும் அறிந்திருக்க வில்லை என்றும் பேசி கொண்டு வெளியே வந்தோம். ஆனாலும், ஏற்பாடு செய்திருந்த அமைப்பும், பேசிய பேச்சாளர்களும், கலந்து கொண்டோரும் மாற்று சமூகத்தை சேர்ந்த ஆதரவு சக்திகள் என்பதையும், அது வரவேற்கதக்கது எனபதையும் வந்திருந்து கோபப்பட்ட இளைஞர்கள் உணர்ந்து கொண்டனர்.எபப்டியோ அது ஒரு நல்ல ஆரோக்கியமான் சர்ச்சை என்றே புரிந்தது.

2 comments:

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!உங்கள் கட்டுரைகளில் எழுத்துப் பிழைகள் அதிகம் உள்ளன.பதிவிடுவதற்கு முன் ஒருமுறை சரி பார்க்கவும்.

Maniblog said...

நன்றி. திருத்தி இருக்கிறேன்.

Post a Comment