Monday, February 13, 2012

சிதம்பரத்திற்கு தக்க பதில் தருவோம்

பாளையம்கோட்டை மைதானத்தில் கூடன்குலமனு உலைகளை ஆதரித்து பிரதமர் அலுவலக கட்டளைக்கு இணங்க மத்திய அமைச்சர்களான வாசன் மற்றும் நாராயணசாமி ஆகியோருடன் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தி அதன்மூலம் தனது இருத்தலைஉருதி செய்து கொண்ட உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசிய முக்கிய விசயமே, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த கூடன்குலமனு உலை வரும் நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்ற கேள்விதான். இதைதான் திரும்ப, திரும்ப ஊடகங்களும் பரப்பி வருகின்றன. அதை ஒட்டி சில அணுஉலை ஆதரவு என்னத்திற்கு வந்துள்ள மக்களும் கேட்டு வருகின்றனர். ஆகையால் நம் அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்து விட்டது.

அய்யா, சிதம்பரம் அவர்களே, நேநேகள் சொன்னதுபோல 1988 இல் என்ன சய்து கொண்டிருந்தீர்கள் என்ற கேள்விக்கு நாங்கள் 1986 இலிருந்தே என்ன செய்துகொண்டிருந்தோம் என்று பதில் கூற கடமைப்பட்டுள்ளோம். அதாவது 1986 இல் இந்த அணு உலை வரப்போகிறது என்ற செய்தியை இந்திய அரசு பரப்பிய உடனேயே, கூடங்குளம் வட்டாரத்தில் இருந்த ஆண்டன் கோம்ஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதை எதிர்க்க ஆயத்தமானார். அப்போது அவர் ஐக்கிய ஜனதா தளம் என்ற ஜார்ஜ் பெர்ணன்டஸ் கட்சியில் ஆர்வமாக இருந்தார். அந்நேரம் ஜார்ஜ் பெர்ணன்டஸ் அவர்களும் அணு உலைகளை எதிர்த்து கருத்து கூறி வந்தார். அப்போது சென்னையில் இருந்த யு.என்.ஐ.செய்தி நிறுவன ரமேஷ் இந்த கூடங்குளம் அணு உலை பற்றிய ஆராய்ச்சிகளை செய்து அதை வரவிடாமல் செய்ய போராட்டங்களை கட்டமைக்க அன்டன் கோம்ஸ் அவர்களை தொடர்பு கொண்டார். 1987 ஆம் அண்டு இதற்கான பணிகளை கட்டமைக்க ஆர்வலர்கல் நெல்லை,த்க்ஹூத்துகுடி மாவட்டங்களில் திரட்டப்பட்டனர்.


அதை ஒட்டி, 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தி இரண்டாம் நாளில் இதே இடிந்தகரையில் வைத்து ஆண்டன் கோம்ஸ் ஏற்பாட்டில் ஒரு பொதுக்கூட்டம் போடப்பட்டது. அதில் சென்னையை சேர்ந்த ஊடகவியலாளர் ரமேஷ், ஞானி போன்றோர் கலந்து கொண்டு பேசினார். அதில் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற பெயரில் ஒரு போராட்ட மைப்பு ஏற்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதன்பின் 1988 ஆம் ஆண்டு நவம்பர் இருபத்தி ஒன்றாம் நாள் திமுக வின் அன்றைய மாநிலங்கலவை உறுப்பினர் வைகோ ஒரு மாபெரும் எழுச்சி உரையை கூடங்குளம் அணு உலை கொண்டுவரக் கூடாது என்று ஆற்றினார். அப்போது சாட்சியாக காட்டுவதற்கு ஒரு செர்நோபில் அணு உலையின் விபத்து சோவியத் யூனியனில் நடந்து உலகமே அதிர்ச்சி ஆகியிருந்தது. அதன்பின்தான் உங்கள் மத்திய அரசு ௧௯௮௮ ஆம் ஆண்டு நவம்பர் இருபத்தி ஆறாம் நாள் இந்த கேடுகெட்ட கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தந்த்தை கை எழுத்தாக்கியது.

சிதம்பரம் வர்களே, இந்த சுட்டி காட்டுதல்கள் போதுமா? இன்னமும் வேண்டுமா? உங்களுக்கு அந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு ஆண்டன் கோம்ஸ் தலைமையில் தமிழ்நாடு முழுவதும், மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும், மற்றும் கேரளாவிலும், மற்றுமிலங்கையிலும் எப்படி தகலாது பரப்புரையையும் போராட்டங்களையும் நடத்தியது என்ற சான்றுகளை அளிக்க எப்போதும் தயாராக இருக்கிறோம். என் என்றால் நாங்கள் அன்ற்ஹா கூட்டமைப்பில் பணியாற்றியவர்கள்.அதனால் உங்கள் ஒரே சண்டேஹ்கம் இருபத்தஹிந்து ஆண்டுகளாக சும்மா இருந்துவிட்டு இப்போது போராடுகிறீர்கள் என்பதுதான்.அடஹ்ர்கு விடை அளவுக்கு அதிகமாகவே எண்கள் அவசம் இருக்கிறது. உங்கள் வாயை மூடிவிட்டு, அந்த அனஊளையையும் மூடிவிடுங்கள்.

No comments:

Post a Comment