Monday, November 16, 2015

அந்த சாலை ஒப்பந்தக்காரரை விடாதீங்க?

அந்த சாலை ஒப்பந்தக்காரரை  விடாதீங்க?
------------------------------------------------------------------
        நாங்கள் 13-11-2015 வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து கோவை கிளம்பி, சாலை வழி "வாகனத்தில்" பயணமானோம். கோவை சென்று "மக்கள் சிவில் உரிமைக் கழக" மாநிலக் குழு கூட்டம் முடித்துவிட்டு, நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்திலும் பேசிவிட்டு, மேட்டுப்பாளையம் பயணித்தோம். மேட்டுப்பாளையத்தில், நண்பர் ரவிச்சந்திரன் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு, அவினாசி வழியே சேலம் புறவழிச் சாலை வழியாக வாணியம்பாடிக்கு முன்பே உள்ள வேலூர் மாவட்டத்தை சேர்ந்த "நாற்றாம்பல்லிக்கு" வந்தடைந்தோம். இரவு தங்களுக்கு பிறகு, காலையில், இளம் ஊடகவியலாளர் ஜெகதீஷின் சகோதரி திருமணத்தில் கலந்து கொண்டு  பிறகு 15-11-2015 ஞாயிறு அன்று,காலை சென்னையை நோக்கி பயணித்தோம். ஒட்டுமொத்தமாக நாங்கள் இந்த பயணத்தில், 1200 கிலோமீட்டர் கடந்து வந்துல்ல்ளோம். அதில் எங்களுக்கு "சாலை பற்றிய சர்ச்சை" ஒரே இடத்தில்தான் வந்தது.

       அதுதான் "ராணிப்பேட்டை முதல் ஸ்ரீபெரும்புதூர்" வரையுள்ள சாலை. அந்த சாலை "பகுதி,பக்தியைக் உடைந்து" கிடக்கிறது.ஏன் அப்படி? நாங்கள் செல்லும்போது வழியெல்லாம் "கனமழை" பெய்யத்தான் செய்தது.மற்ற இடங்களில் உள்ள சாலைகள் இப்படி உடையாமல் இருக்கும்போது, இங்கே மட்டும் ஏன் சாலை இப்படி "துண்டு,துண்டாக" உடைந்து கிடக்க வேண்டும்? அப்படியானால் இங்கே ஒப்பந்தம் எடுத்த, "ஒப்பந்தக்காரர்" சரியான அளவில், "கல்லையோ, மண்ணையோ, சிமெண்டையோ",கலந்து சாலையை போடவிழலி என்றுதானே பொருள்? அதற்கு யார் காரணம்? அங்குள்ள நெடுஞ்சாலை அதிகாரிகளா? அங்குள்ள வட்டார அமைச்சர்களா? இந்த கேள்வி எழுகிறது.

        ஏற்கனவே இந்த குறிப்பிட்ட "பகுதி சாலை" பற்றி பல முறை, பலரும், புகார் கொடுத்ததும், எழுதிய புகாரை அனுப்பியும்,எந்த பலனும் இல்லை என்கிறார்கள். ஒருமுறை ஒரு நீதியரசர், இந்த சாலையின் "பழுது" பற்றி நீதிமன்றத்தில் கடுமையாக கூறியும் கூட, எந்த நடவடிக்கையும் இல்லை. இது நடுவணரசுக்கு வேலையா? மாநில அரசின் வேலையா? என்று சர்ச்சை வந்ததாகவும் கூறுகிறார்கள். இந்த சாலையை போட்ட "ஒப்பந்தக்காரரை" பகிரங்கமாக அறிவித்து, அவரை" கருப்பு பட்டியலில்" இட்டு, வீலமபரப்படுதி, அதன்மூலம் பொதுமக்கள் முஇன்னிலையில் "பகிரங்க தண்டனை" வழங்கினால் மட்டுமே சாலை உருப்படும். இரு சக்கரவாகனங்கள் ஐந்தே உடைந்த சாலையில் "விபத்துகளில்" மரணத்தை தழுவுவர் என்பது நிச்சயம்., ,

No comments:

Post a Comment