நான்கு மீனவர்களை சிங்கள கடல் படை கொடியவர்கள் கொலை செய்தார்கள் என்றால் இந்தியா இலங்கையை மட்டைபந்து போட்டியில் வேற்றதனால்தான் என்ற உண்மையை உலகம் அறியும் முன்பு அறிந்தவர்கள் நமது இந்திய-தமிழக அரசுகள். ஏப்ரல் இரண்டாம் நாள் கடலுக்கு சென்ற TN / 10 / MFB / 262 என்ற எண்ணுள்ள விசைப்படகில் சென்ற விக்டஸ் [36 ], ஜான்பால், அந்தோணிராஜ், மாரிமுத்து ஆகிய மீனவர்கள் கடுமையாக சிங்கள படையால் அடித்து, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, அவர்களது உடலங்கள் ஒவ்வொன்றாக கிடைக்கின்ற நிலையில் கடலில் வீசப்பட்டுள்ளது. ஒவ்வொரு உடலமும் கிச்டைக்கும் போது அவற்றில் இருந்த காயங்கள் எப்படி உடலெங்கும் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான ஆதராமாக இருந்தது.
கடைசியாக கிடைத்த உடலில் தலயும் வெட்டப்பட்டு, கையும் வேட்டப்பட்டதிளிருந்து திட்டமிட்டு சிங்களர் செய்த அட்டூழியம் என்பது பச்சையாக புரிகிறது. இந்த கொலைகள் நம்பி தங்கியிருந்த தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களம் சித கொலைகள்தான் என்பதும் டேஹ்ளிவாகிறது. நான்காம் நாள் நடந்த மட்டைபந்து விளையாட்டில் இந்தியா, இலங்கையை வென்றதால் ஆத்திரப்பட்ட சிங்களர்கள் செய்த அட்டூழியம் என்று தெரியவருகிறது. அப்படி அவர்கள் செய்த நாள் ஏப்ரல் நான்காம் நாள் இரவில். அதாவது நான்கு மீனவர் படுகொலையும் ஏப்ரல் நான்காம் நாள் நள்ளிரவில் நடந்துள்ளது. உடனடியாக ஐந்தாம் நாள் அதிகாலையிலேயே டில்லிக்கு செய்திகள் வந்துவிட்டன. டில்லி அதிகார மையம் ,சென்னை அதிகார மையத்தை தொடர்ப்பு கொண்டுள்ளது. இரண்டு அதிகார மையங்களுக்குள் விவாதம் நடந்துள்ளது. ஆலோசனைகள் பரிமாறப்பட்டுள்ளன.
வருகிற பதின்மூன்றாம் நாள் தேர்தல் நாள் என்பதால் இந்த படுகொலைகளை தற்போதைக்கு மறைத்து விடுவது என்று அதிகார மையங்கள் முடிவு செய்துள்ளன. இதுபோன்ற மறைப்பது, திசை திருப்புவது போன்ற செயல்களில் திறமை கொண்ட ஜாபர் சேட் இடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அதன் பிறகே நான்கு இறந்து போன மீனவர்களுக்கும் ஆளுக்கு, தலா ஐந்து லட்சம் தமிழக அரசு தானம் செய்துள்ளது. அதுகூட வழக்கமாக இறந்தவர்களுக்கு ஏழு ஆண்டு முடிந்த பின்புதான் நிதி வழங்குவது வழக்கம். இப்போது மட்டும் ஏன் எட்டே நாட்களுக்குள் வழங்கவ்ண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலை கணக்கில் கொண்டு என்று சொன்னாலும், கடைசி பிணம் கிடைக்காத நிலையில் எப்படி அர்சுக்குமட்டும், காணாமல்போன மீனவர்கள் சிங்கள அரசின் கைகளால் கொல்லப்பட்டது தேரோயும்? என்ற கேள்விக்கு விடையில்லை.
அப்படியானால் ஐந்து மீனவர்களும். கொலை செய்யப்பட்டார்கள் என்ற செய்தி ஐந்தாம் நாள் காலையிலேயே மத்திய-மாநில அரசுகளுக்கு தெரிந்து விட்டது என்பது புரிகிறது. அதற்கு எண்ண செய்யலாம் என்ற் விவாதத்தில் இரண்டு நாட்களை கலைஞர் ஓடவிட்டார். அதன் பிறகே இப்போதைக்கு தேர்தல் நேரத்தில், மரணம் அடைந்தவர் வீடுகளுக்கு பணம் கொடுப்பது என்று முடிவாகிறது. மீனவர் படுகொலைகளை முன்கூட்டியே தெரிந்திருந்தும் மக்களிடம் உண்மையை சொல்லாமல் இருந்த கலைஞரும் குற்றவாளிதானே என்று மீனவர்கள் கேட்கிறார்கள்.
கொலை குற்றத்தை ராஜபக்சே மீதும், அதை மூடி மறைத்த குற்றத்தை கலைஞர் மேலும், சோனியா மேலும் போடவேண்டும் என்று இன்று மீனவர் தலைவர்களான, ரூபேஷ், தயாளன், கபடி-மாறன் ஆகியோருடன் பத்து மீனவர்கள் அகில இந்திய வானொலி நிலையம் முன்பு பட்டினி போராட்டம் இருந்தார்கள். அவர்களை ஆரசின் காவல்துறை கைது செய்தது.
Tuesday, April 19, 2011
Monday, April 18, 2011
மீனவர்களை கொன்ற சிங்கள கடல்படை..?
அப்ரப் இரண்டாம் நாள் வழமையாக கடலுக்கு செல்லும் அரநூற்றுக்கு மேற்பட்ட படகுகள் ராமேஸ்வரம் கரையிலிருந்து புறப்பட்டு மீன் பிடிக்க கடலுக்கு சென்றன. அதை வழமையாக சிங்கள கடல்படையினர் பிடிப்பது போல இப்போதுனம் பிடித்தனர். இப்போது அவர்களிடம் நல்ல முறையில் உரையாடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று பிடிபட்ட மீனவர்கள் கைபேசியில் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் பேசியிருக்கிறார்கள். அடுத்தநாள் மூன்றாம் நாள் அன்று இந்திய-இலங்கை மட்டைபந்து விளையாட்டு சூடு பிடிக்கிறது. அப்போதுவரை இலங்கை வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் சிங்க படையினர் இருக்கிறார்கள்.
இலங்கை தோற்றால் உங்களுக்கு இருக்கு என்று அந்த நான்கு இந்திய மீனவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். பிடிபட்ட நால்வரும் மட்டை பந்து ஆட்ட உலக கோப்பை விளையாட்டில் இந்தியா வெற்றி பெற கூடாது என்று இறைவனிடம் வேண்டிகொள்கின்றனர். விளையாட்டில் யார் வெற்றி பெற்றால் எண்ண, தங்களது உயிர் போய்விட கூடாது என்பதில், இந்திய மீனவர்கள் உறுதியாக இருந்தனர். அதேபோல எப்போதெல்லாம் இந்தியா-இலங்கை மட்டை பந்து நடக்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டு கரையோரம் இருக்கின்ற கடலாளிகள் ஆண்டவரை வேண்டிக்கொள்கின்றனர். அதில் இந்தியா விளையாட்டில் வெற்றி பெற கூடாது என்று வேண்டுதல் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த முறை கடலுக்கு சென்று இலங்கையிடம் மாட்டிக்கொண்ட மீனவர்கள் நாலு பெறும், நன்றாக நீச்சல் அடிக்க தெரிந்தவர்கள்.அப்படஈருக்கும் போது எப்படி அவர்கள் ஒவ்வொருவராக கடலில் மூழ்கி மரணம் அடைய முடியும்? என்ற் கேள்வி எழுந்துள்ளது. முதல் சடலம் விட்சனுடையது அது நெடுந்தீவு அருகே இலங்கையின் வடக்கு பகுதியில் வருகிறது. அந்த உடலில் விரல் நகங்களால் நிறைய கீறல்கள் விழுந்துள்ளன. உடலெங்கும் விடுபட்ட தடங்கள் பதிந்துள்ளன. ஒவ்வொரு மீனவர் உடலங்களும் அடிபட்ட தழும்புகளுடன் மட்டுமே கிடைக்கிறது.கடைச்யாக கிடைத்துள்ள சடலத்தில் தலை இல்லை என்பது பகிரங்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதை எதிர்க்க இன்னமும் தமிழர்களுக்கு உணர்ச்சி வரவில்லை என்ற சூழலில், ஒருவர் அதையே தனது அரசியலுக்கு பயன்படுத்துகிறார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு இதை ஒரு பிரபலமான முறையில் பேர் வாங்க செயது விட்டார். அவர் மக்களை கூட்டி இலங்கை தூதரகத்தை முற்றுகை இட்டுள்ளார். ஆகையினால் தமிழர்களே சிங்களவன் தமழ் மீனவனின் கையை, காலை, தலையை வெட்டி கடலில் போடுகிறான். தமிழன் உணர்ச்சியற்று இருக்கிறான். இதுதான் தமிழ்நாடு உலகுக்கு சொல்லும் செய்தியா? தேர்தல் பரப்புரைக்காக சென்னைக்கு சோனியா வந்தபோது, அந்த தீவுத்திடல் மேடையிலேயே, கலைஞர் சோனியாவிடம் மீனவர்கள் உரிம்மைக்காக கூட அல்ல, அவர்களது உயிருக்காக போராடுகிறார்கள் என்று சொல்ல, உடனே சோனியா, " இனி ஒரு துப்பாக்கி சூடு கூட நடக்காது" என்று உறுதி கூறினார், அவர்கள் எண்ண, " இனி சுடாதே. வெட்டி கொன்றுவிடு" என்று மறைமுகமாக கூறிவிட்டார்களா? அப்படியானால் சோனியாவும், கருணாநிதியும் இந்த நாலு மீனவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் அல்லவா?
இலங்கை தோற்றால் உங்களுக்கு இருக்கு என்று அந்த நான்கு இந்திய மீனவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். பிடிபட்ட நால்வரும் மட்டை பந்து ஆட்ட உலக கோப்பை விளையாட்டில் இந்தியா வெற்றி பெற கூடாது என்று இறைவனிடம் வேண்டிகொள்கின்றனர். விளையாட்டில் யார் வெற்றி பெற்றால் எண்ண, தங்களது உயிர் போய்விட கூடாது என்பதில், இந்திய மீனவர்கள் உறுதியாக இருந்தனர். அதேபோல எப்போதெல்லாம் இந்தியா-இலங்கை மட்டை பந்து நடக்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டு கரையோரம் இருக்கின்ற கடலாளிகள் ஆண்டவரை வேண்டிக்கொள்கின்றனர். அதில் இந்தியா விளையாட்டில் வெற்றி பெற கூடாது என்று வேண்டுதல் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த முறை கடலுக்கு சென்று இலங்கையிடம் மாட்டிக்கொண்ட மீனவர்கள் நாலு பெறும், நன்றாக நீச்சல் அடிக்க தெரிந்தவர்கள்.அப்படஈருக்கும் போது எப்படி அவர்கள் ஒவ்வொருவராக கடலில் மூழ்கி மரணம் அடைய முடியும்? என்ற் கேள்வி எழுந்துள்ளது. முதல் சடலம் விட்சனுடையது அது நெடுந்தீவு அருகே இலங்கையின் வடக்கு பகுதியில் வருகிறது. அந்த உடலில் விரல் நகங்களால் நிறைய கீறல்கள் விழுந்துள்ளன. உடலெங்கும் விடுபட்ட தடங்கள் பதிந்துள்ளன. ஒவ்வொரு மீனவர் உடலங்களும் அடிபட்ட தழும்புகளுடன் மட்டுமே கிடைக்கிறது.கடைச்யாக கிடைத்துள்ள சடலத்தில் தலை இல்லை என்பது பகிரங்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதை எதிர்க்க இன்னமும் தமிழர்களுக்கு உணர்ச்சி வரவில்லை என்ற சூழலில், ஒருவர் அதையே தனது அரசியலுக்கு பயன்படுத்துகிறார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு இதை ஒரு பிரபலமான முறையில் பேர் வாங்க செயது விட்டார். அவர் மக்களை கூட்டி இலங்கை தூதரகத்தை முற்றுகை இட்டுள்ளார். ஆகையினால் தமிழர்களே சிங்களவன் தமழ் மீனவனின் கையை, காலை, தலையை வெட்டி கடலில் போடுகிறான். தமிழன் உணர்ச்சியற்று இருக்கிறான். இதுதான் தமிழ்நாடு உலகுக்கு சொல்லும் செய்தியா? தேர்தல் பரப்புரைக்காக சென்னைக்கு சோனியா வந்தபோது, அந்த தீவுத்திடல் மேடையிலேயே, கலைஞர் சோனியாவிடம் மீனவர்கள் உரிம்மைக்காக கூட அல்ல, அவர்களது உயிருக்காக போராடுகிறார்கள் என்று சொல்ல, உடனே சோனியா, " இனி ஒரு துப்பாக்கி சூடு கூட நடக்காது" என்று உறுதி கூறினார், அவர்கள் எண்ண, " இனி சுடாதே. வெட்டி கொன்றுவிடு" என்று மறைமுகமாக கூறிவிட்டார்களா? அப்படியானால் சோனியாவும், கருணாநிதியும் இந்த நாலு மீனவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் அல்லவா?
Sunday, April 17, 2011
உளவு துறை செய்தியால் அடிப்போனாரா கலைஞர்?
வாக்கு பதிவு முடிந்துவிட்டது. ஒரு மாதம் கஹித்துதான் வாக்கு எண்ணிக்கை நடக்க போகிறது. அதற்குள் அவசரப்பட்ட முதல்வர் உளவு துறை மூலம் சரியான முறையில் விழுந்த வாக்குகளை எண்ண பணித்தாராம். தொகுதி, தொகுதியாக வெற்றிபெற இருப்பவர்களை பட்டியலிட சொன்னாராம். அவர்களும் கணக்கெடுத்து கலைஞர் மனம் கோணாத அளவில் அவரிடம் கணக்கு சொல்லவேண்டுமே என்பதற்காக ," அய்யா, தங்கள் கூட்டணிக்கு தொண்ணூறு தொகுதி வரை வெற்றி பெற வாய்ப்பி உள்ளது அய்யா" என்றார்களாம். அதற்கே ஆடிப்போய் விட்டாராம் திமுக தலைவர். பெரிய கட்சிகளை தவிர தனி சுயேச்சை சின்னங்களில் நின்ற வேட்பாளர்களில் வெற்றி பெறுபவர்களிடம் பேசலாமில்லையா என்று தலைவர் வினவினாராம்.இதை தங்களுக்குள் அசை போடும் காவல் அதிகாரிகள் தாங்கள் முதலில் அவரிடம் சொன்ன எண்ணிக்கையே மிகைப்படுத்தல் என்ற உண்மையை யாரிடமும் சொல்லவில்லை.
அதேபோல சிதம்பரம் அய்யா தனது உள்துறை மூலம் தமிழ்நாட்டு நிலைமையை கேட்டாராம். அவருக்கும் அவர்கள் இதேபோல, அதிமுக கூட்டணி 130 முதல் 140 வரை வரும் என்று கூறினார்களாம். அதுவும் குறைத்து கூறிய கணக்குதான் என சிதம்பரம் அய்யாவுக்கு தெரியுமா என்று நமக்கு தெரியாது. இந்த மாநில, மத்திய உளவு துறைகள் சொன்ன கணக்கிலேயே இப்படி திணறும் அய்யாமார்கள் முழு தீர்ப்பு வந்தவுடன் எண்ண செய்ய போகிறார்கள்?
அதேபோல சிதம்பரம் அய்யா தனது உள்துறை மூலம் தமிழ்நாட்டு நிலைமையை கேட்டாராம். அவருக்கும் அவர்கள் இதேபோல, அதிமுக கூட்டணி 130 முதல் 140 வரை வரும் என்று கூறினார்களாம். அதுவும் குறைத்து கூறிய கணக்குதான் என சிதம்பரம் அய்யாவுக்கு தெரியுமா என்று நமக்கு தெரியாது. இந்த மாநில, மத்திய உளவு துறைகள் சொன்ன கணக்கிலேயே இப்படி திணறும் அய்யாமார்கள் முழு தீர்ப்பு வந்தவுடன் எண்ண செய்ய போகிறார்கள்?
Saturday, April 16, 2011
ஐ.நா.வின் இலங்கை போர்குற்ற அறிக்கையில் புலிகளை குறை சொல்வது நியாயமா?
ஐ.நா.மகிந்தா அரசின் மனித உரிமை மீறல்களை, தனது நிபுணர் குழு அறிக்கை மூலம் கடுமையாக கண்டித்துள்ளது. அதில் அனைத்து நாட்டு மனித உரிமை தரங்களுக்கு கட்டுப்படாத இலங்கை என்பதை தெளிவாகவே சுட்டி காட்டுகிறார்கள். போது மக்களை போர் நேரத்தில் பாதுகாக்காத, அவர்கள் மீது குண்டுமழை பொழிந்த , போது மருத்துவமனைகளை தாக்கிய, மருந்துகளை மக்களுக்கு போகவிடாமல் தடுத்த, அனைத்து நாட்டு செஞ்சிலுவை சங்கம், ஐ.நா.வின் உதவி அமைப்புகள் ஆகியவற்றை செயல்பட விடாத, ஊடக சுதந்திரத்தை அனுமதிக்காத இலங்கை அரசின் கொடூரங்களை வரிசையாக அதில் பட்டியலிட்டுள்ளது. அதனால்தான் கோத்தபாயேவால் அந்த அறிககையை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதேசமயம் இருபுறம் உள்ள படைகளையும் குற்றம் சொன்னால்தான் தங்கள் அறிக்கை இருக்கும் சிக்கலான சூழலில் எடுபடும் என்று அந்த நிபுணர்கள் எண்ணினார்களோ என்னவோ. அவர்கள் புலிகள் பக்கத்திலும் மீறல்கள் நடந்ததாக சிலவற்றை பட்டியலிடுகிறார்கள்.
அதில் தமிழ் மக்களை பதுங்கு குழிகள் தோண்ட நிர்ப்பந்தப் படுத்தியது, சிறுவர் உட்பட அனிவரையும் ஆயுதபாணியாக்கியது போன்ற குற்றச்சாட்டுக்கள் போர் நேரத்தில் நடக்கின்ற சாதாரண நிகழ்வுகள் என்ற புரிதல் அந்த நிபுணர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களை கேடயமாக புலிகள் பாவித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு நாம் பதில் சொல்லித்தான் ஆகவேணும். அங்கே அந்த அறிக்கையின்படியே அரசியல் தீர்வை உருவாக்க எந்த முயர்ச்சியும் செய்யாத இலங்கை அரசு, வன்னியில் போரை நடத்தி, அப்பாவி மக்கள் மீது விமான குண்டு வீச்சை நடத்தியது என்கிறார்கள்.தேசிய இனங்களுக்குள் இப்படி ஒரு போர் நடக்கும் சூழலில், கிழக்கிலிருந்து தனது படையை புலிகள் திரும்ப அழைத்த போதிலிருந்து அவர்கள் ஒரு தற்காப்பு போரைத்தான் நாத்தி வந்தார்கள். அப்போது மன்னார் மாவட்டத்தில் பேசாலை தேவாலய தாக்குதல் உட்பட, அப்பாவி பொதுமக்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதலால் மிரண்டுபோன தமிழ்மக்கள் கொத்து,கொத்தாக ஓடிபோய், தமிழர் படையுடன் உள்ள விடுதலை பகுதிக்குத்தான் செல்வார்கள். ஏன் என்றால் அது ஒரு இன ரீதியான போர். அதனால்தான் னைவரும் பாதுகாப்பு தேசி கிளிநொச்சி சென்றார்கள்.
மேகண்ட உண்மையை நாம்தான் உலகிற்கு எடுத்து சொல்லவேண்டும். அதனால் விடுதலை புலிகள் மக்களை கேடயமாக பாவிக்கவில்லை. மக்கள்தான் விடுதலை புளிகளிடம் அடைக்கலம் தேடினார்கள். அதாவது மக்கள்தான் புலிகளை தங்களுக்கான கேடயமாக பாவித்தார்கள்.நான் ஒவ்வொரு நாள் போர் நிகழ்வையும் காட்சி ஊடகம் மூலம் விவரித்து வந்தவன். அந்த 2008 அக்டோபர் முதல் 2009 மே வரை ஒவ்வொரு நாளும் என் நினைவுகளில் பதிந்து இப்போது நினைவுக்கு வருகின்றன.அதனால் அந்த இரண்டு லட்சம் உள்நாட்டு இடம் பெயர்ந்த தமிழர்களையும் சிங்கள ராணுவம் துரத்தியதால் அவர்கள் கிளிநொச்சிக்கு வந்ததும், பிறகு துரத்தியதால் மூன்றரை லட்சம் தமிழர்களும் முல்லைத்தீவுக்கு வந்ததும் பசுமரத்தாணி போல நினைவில் பதிந்துள்ளன. ஆகவே போரில் பின்னடைவு என்பதற்காக புலிகளை குறை சொல்ல நாம் அனுமதிக்க முடியாது.
அதில் தமிழ் மக்களை பதுங்கு குழிகள் தோண்ட நிர்ப்பந்தப் படுத்தியது, சிறுவர் உட்பட அனிவரையும் ஆயுதபாணியாக்கியது போன்ற குற்றச்சாட்டுக்கள் போர் நேரத்தில் நடக்கின்ற சாதாரண நிகழ்வுகள் என்ற புரிதல் அந்த நிபுணர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களை கேடயமாக புலிகள் பாவித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு நாம் பதில் சொல்லித்தான் ஆகவேணும். அங்கே அந்த அறிக்கையின்படியே அரசியல் தீர்வை உருவாக்க எந்த முயர்ச்சியும் செய்யாத இலங்கை அரசு, வன்னியில் போரை நடத்தி, அப்பாவி மக்கள் மீது விமான குண்டு வீச்சை நடத்தியது என்கிறார்கள்.தேசிய இனங்களுக்குள் இப்படி ஒரு போர் நடக்கும் சூழலில், கிழக்கிலிருந்து தனது படையை புலிகள் திரும்ப அழைத்த போதிலிருந்து அவர்கள் ஒரு தற்காப்பு போரைத்தான் நாத்தி வந்தார்கள். அப்போது மன்னார் மாவட்டத்தில் பேசாலை தேவாலய தாக்குதல் உட்பட, அப்பாவி பொதுமக்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதலால் மிரண்டுபோன தமிழ்மக்கள் கொத்து,கொத்தாக ஓடிபோய், தமிழர் படையுடன் உள்ள விடுதலை பகுதிக்குத்தான் செல்வார்கள். ஏன் என்றால் அது ஒரு இன ரீதியான போர். அதனால்தான் னைவரும் பாதுகாப்பு தேசி கிளிநொச்சி சென்றார்கள்.
மேகண்ட உண்மையை நாம்தான் உலகிற்கு எடுத்து சொல்லவேண்டும். அதனால் விடுதலை புலிகள் மக்களை கேடயமாக பாவிக்கவில்லை. மக்கள்தான் விடுதலை புளிகளிடம் அடைக்கலம் தேடினார்கள். அதாவது மக்கள்தான் புலிகளை தங்களுக்கான கேடயமாக பாவித்தார்கள்.நான் ஒவ்வொரு நாள் போர் நிகழ்வையும் காட்சி ஊடகம் மூலம் விவரித்து வந்தவன். அந்த 2008 அக்டோபர் முதல் 2009 மே வரை ஒவ்வொரு நாளும் என் நினைவுகளில் பதிந்து இப்போது நினைவுக்கு வருகின்றன.அதனால் அந்த இரண்டு லட்சம் உள்நாட்டு இடம் பெயர்ந்த தமிழர்களையும் சிங்கள ராணுவம் துரத்தியதால் அவர்கள் கிளிநொச்சிக்கு வந்ததும், பிறகு துரத்தியதால் மூன்றரை லட்சம் தமிழர்களும் முல்லைத்தீவுக்கு வந்ததும் பசுமரத்தாணி போல நினைவில் பதிந்துள்ளன. ஆகவே போரில் பின்னடைவு என்பதற்காக புலிகளை குறை சொல்ல நாம் அனுமதிக்க முடியாது.
Friday, April 15, 2011
பணம் கொடுத்தும், திருப்பி அடிக்கிறானே?
அய்யா. திமுக பணம் கொடுத்தது உய்னமைதான். அதை திமுககாரர்களே ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் வாதம் இப்போது வேறு. அதாவது தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு வெளிவந்த கருத்து கணிப்பில் எல்லாம் எங்கள் திமுக தோற்கும் என்று வந்தது உண்மைதான். ஆனால் நாங்கள் அதற்குபிறகு அனேகமாக எல்லா இடங்களிலும் பணம் கொடுத்துள்ளோமே? பணம் வாங்கியவர்கள் எப்படி எங்களுக்கு போடாமல் இருப்பார்கள்? இதுதான் இப்போது திமுகவின் வாதம்.
இன்னும் ஒருமாதம் இருக்கிறது வாக்கு எண்ணிக்கை நடக்க. அதற்குள் திமுக தோற்கும் என்ற நிலையை அவர்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்த தயாரில்லை. அல்லது அப்படி ஒப்புக்கொள்ள தயாரில்லை. அதற்காக சில தர்க்க வாதங்களை கிளப்பி விடுகிறார்கள். அதில் இதுவும் ஒன்று. திமுக செய்த நல்வாழ்வு திட்டங்களுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என்கிறார்கள். அது என்ன நல்வாழ்வு திட்டம் என்று கேட்டால், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்கிறார்கள். அதுமட்டுமல்ல கலைஞட் காப்பீட்டு கழகம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல வண்ண தொலைக் காட்சி என்கிறார்கள். எழுபாதயிரம் ரூபாய்க்கு வீடு கட்டி கொடுத்து, குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றியமை என்கிறார்கள். இவைகள் எல்லாமே உண்மைதான். இவற்றிற்கு ஒரு பிரிவினர் அதாவது அதனால் லாபம் பெற்றோர் அதாவது வறுமையின் எல்லைகூட்டிற்கு கீழே உள்ளவர்களில் ஒரு பிரிவினர் வாக்கு போட்டிருக்க கூடும் என்பது உண்மைதான்.
ஆனால் அதுமட்டுமே இன்று தேர்தலை தீர்மாநித்திருக்குமா? நாங்கள் கொடுத்த பணத்திற்கு நன்றி காட்டமாட்டார்களா? என்று வினவுகிறார்கள். அதனால்தான் வாக்கு பதிவு இதுவரை இல்லாத அளவில் வரலாற்று காணாத அளவில் 77 விழுக்காட்டை தாண்டுகிறது என்கிறார்கள். புதிதாக வாக்காளர்களாக சேர்ந்துள்ள என்பது லட்சம் இளைஞர்கள் எங்கே போட்டிருப்பார்கள்? என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. உங்கள் தலைமை கொடுத்த பணம் முழுவதும் மக்களுக்கு பொய் சேர்ந்தததா? எவ்ன்றால் அவர்களிடமிருந்து பதில் இல்லை.
திமுக தொண்டர்கள் திமுக தலைமைக்கு முன்பு போல விசவாசமாக இருக்கிறார்களா? என்றால் பதில் இல்லை. அதனால் கொடுத்தனுப்பிய பணமும் முழுமையாக மக்களிடம் போயசெரவில்லை என்றால் அதற்கும் பதில் இல்லை. இலவசம் மற்றும் பணம் பற்றி மட்டுமே தேர்தலை சிந்திக்கிறார்கள். வழமையான அரசு எதிர்ப்பு உணர்வு பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. ஏறிவரும் விலைவாசி பாத்தித்த்டிருக்குமா என்றால் தெரிவதில்லை. எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள குறைகளை அதாவது அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளை பற்றி மட்டுமே சிந்த்த்டித்து வரும் ஹிமுக தொண்டரால் இன்றும் புரியப்போவது இல்லை.
பணம் கொடுத்தவர்களால பணம் வாங்கியவர்களின் வாக்குகளை பிசிறில்லாமல் உதய சூரியனுக்கு போடவைக்க முடியுமா என்றால் திமுக தொண்டர்கள் முழிக்கிறார்கள். சென்னையில் தொண்ணூறாம் வட்டத்தில் நாட்டும் பகுதி செயலாளர் காமராஜ் ஹான்கள் கொடுத்த பணம் பெற்றவர்கள் சரியாக போடுகிரரகளா? என்று சோதிக்க வாக்கு அளிக்கும் இடத்திலேயே ஆள் போட்டிருந்தார். அவர்கள் கூட 9000 வாக்குகளில் 6000 வாக்குகள் தான் பெறமுடிந்தது என்கிறார்கள். பென்னாகரம் இடைதேர்தலில் பணம் வாங்கியவர்களில் பாதி பேர்தான் வாக்களித்தார்கள் என்பது திமுக கணக்கு. அப்படியானால் இந்த போது தேர்தலில் எத்தனை பணம் வாங்கியவர்கள் வாக்களித்தார்கள் என்பது ஒரு சிறிய கணக்கு. அந்த கணக்கையும் எடுத்து பார்த்து நாம் சிந்திக்க வேண்டும்.
இன்னும் ஒருமாதம் இருக்கிறது வாக்கு எண்ணிக்கை நடக்க. அதற்குள் திமுக தோற்கும் என்ற நிலையை அவர்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்த தயாரில்லை. அல்லது அப்படி ஒப்புக்கொள்ள தயாரில்லை. அதற்காக சில தர்க்க வாதங்களை கிளப்பி விடுகிறார்கள். அதில் இதுவும் ஒன்று. திமுக செய்த நல்வாழ்வு திட்டங்களுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என்கிறார்கள். அது என்ன நல்வாழ்வு திட்டம் என்று கேட்டால், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்கிறார்கள். அதுமட்டுமல்ல கலைஞட் காப்பீட்டு கழகம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல வண்ண தொலைக் காட்சி என்கிறார்கள். எழுபாதயிரம் ரூபாய்க்கு வீடு கட்டி கொடுத்து, குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றியமை என்கிறார்கள். இவைகள் எல்லாமே உண்மைதான். இவற்றிற்கு ஒரு பிரிவினர் அதாவது அதனால் லாபம் பெற்றோர் அதாவது வறுமையின் எல்லைகூட்டிற்கு கீழே உள்ளவர்களில் ஒரு பிரிவினர் வாக்கு போட்டிருக்க கூடும் என்பது உண்மைதான்.
ஆனால் அதுமட்டுமே இன்று தேர்தலை தீர்மாநித்திருக்குமா? நாங்கள் கொடுத்த பணத்திற்கு நன்றி காட்டமாட்டார்களா? என்று வினவுகிறார்கள். அதனால்தான் வாக்கு பதிவு இதுவரை இல்லாத அளவில் வரலாற்று காணாத அளவில் 77 விழுக்காட்டை தாண்டுகிறது என்கிறார்கள். புதிதாக வாக்காளர்களாக சேர்ந்துள்ள என்பது லட்சம் இளைஞர்கள் எங்கே போட்டிருப்பார்கள்? என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. உங்கள் தலைமை கொடுத்த பணம் முழுவதும் மக்களுக்கு பொய் சேர்ந்தததா? எவ்ன்றால் அவர்களிடமிருந்து பதில் இல்லை.
திமுக தொண்டர்கள் திமுக தலைமைக்கு முன்பு போல விசவாசமாக இருக்கிறார்களா? என்றால் பதில் இல்லை. அதனால் கொடுத்தனுப்பிய பணமும் முழுமையாக மக்களிடம் போயசெரவில்லை என்றால் அதற்கும் பதில் இல்லை. இலவசம் மற்றும் பணம் பற்றி மட்டுமே தேர்தலை சிந்திக்கிறார்கள். வழமையான அரசு எதிர்ப்பு உணர்வு பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. ஏறிவரும் விலைவாசி பாத்தித்த்டிருக்குமா என்றால் தெரிவதில்லை. எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள குறைகளை அதாவது அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளை பற்றி மட்டுமே சிந்த்த்டித்து வரும் ஹிமுக தொண்டரால் இன்றும் புரியப்போவது இல்லை.
பணம் கொடுத்தவர்களால பணம் வாங்கியவர்களின் வாக்குகளை பிசிறில்லாமல் உதய சூரியனுக்கு போடவைக்க முடியுமா என்றால் திமுக தொண்டர்கள் முழிக்கிறார்கள். சென்னையில் தொண்ணூறாம் வட்டத்தில் நாட்டும் பகுதி செயலாளர் காமராஜ் ஹான்கள் கொடுத்த பணம் பெற்றவர்கள் சரியாக போடுகிரரகளா? என்று சோதிக்க வாக்கு அளிக்கும் இடத்திலேயே ஆள் போட்டிருந்தார். அவர்கள் கூட 9000 வாக்குகளில் 6000 வாக்குகள் தான் பெறமுடிந்தது என்கிறார்கள். பென்னாகரம் இடைதேர்தலில் பணம் வாங்கியவர்களில் பாதி பேர்தான் வாக்களித்தார்கள் என்பது திமுக கணக்கு. அப்படியானால் இந்த போது தேர்தலில் எத்தனை பணம் வாங்கியவர்கள் வாக்களித்தார்கள் என்பது ஒரு சிறிய கணக்கு. அந்த கணக்கையும் எடுத்து பார்த்து நாம் சிந்திக்க வேண்டும்.
Thursday, April 14, 2011
ரஜினிகாந்த் ஏன் குழம்புகிறார்?
ஏப்ரல் பதிமூன்றில் வாக்களித்த திரையுலகினர் அனைவருமே வெளியே வந்து ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக மறைமுக வார்த்தைகளில் சொன்னார்கள். அதில் நடிகர் சூரியாவும், விஜய்யும் அடக்கம்.ஆனால் ரஜினி மட்டும் மாட்டிக்கொண்டார். ஏற்கனவே ரஜினியை மு.க.ஸ்டாலின் சென்று பார்த்தார். பிறகு அவரை எதிர்த்து நிற்கும் சைதை.துரைசாமியும் போபி பார்த்தார். அதனால் ரஜினி யாருக்கு ஆதரவு என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ரஜினிக்கு தமிழ்நாட்டில் அதிகமாக வாக்குகள் இருப்பதாக ஒரு மாயை நிலவி வருகிறது. ரஜினி குரல் கொடுக்கப்போகிறார் என்று இரு தரப்பும் கூறி வந்தனர்.
கலைஞருக்கு ஏற்பாடு செய்யப்ப்பட்ட ஒரு திரை உலக விழாவில் நடிகர் அஜித் திமுகவின் அடாவடி தனத்தை எதிர்த்து பேசிவிட்டார். கலைஞர் முன்னிலையில் அந்த பேச்சை ரஜினி எழுந்து நின்று கைதட்டி வரவேற்று விட்டார். அதன் பிறகுதான் திரை உலகினர் கலாநிதி-தயாநிதி குடும்பத்திடம் படும் பாடு வெளியே தெரிய தொடங்கியது. பிறகு விஜய் அவர்களிடம் பட்ட பாடு எஸ்.எ.சந்திரசேகர் மூலம் வெளியே வந்தது.இத்தகைய நிலையில் திரை கலைஞர்கள் எல்லோருமே எதிர்ப்பு உணர்வில் இருக்கிறார்கள் என்ற கருத்து மிகை அல்ல. நேரடியாக காங்கிரசை எத்ரிகிறேன் என்று கூறிவிட்டு, திமுகவையும் எத்ரித்து சீமான் ஊர், ஊராக பேச எவண்டி வந்தது. அப்போது நான் மட்டுமல்ல, திரை உக்லகமே இந்த ஆளும் குடும்பத்திற்கு எதிராகத்தான் உள்ளது என்றும், அவர்கள் அனைவரும் பின்னாலிருந்து தன்னை உற்ச்சாகப்படுத்தி வருவதாகவும் அவர் கூறிவிட்டார்.
இப்போது ரஜினி வாகளித்டு விட்டு வெளியே வந்தார். ஊடகத்தாரிடம் பேசினார். விலைவாசி உயர்வு மக்களை வாக்களிக்கவைத்துவிட்டது என்றார். யார்க்கு என்று கூறவில்லை. அது தேவையுமில்லை. ஊழலை எத்ரிக்கும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு என்றார். அதில் பொய் கலந்து கொள்ள விரும்பினேன் என்றார்.உடல் சரியில்லாததால் செல்லவில்லை என்றார். எதையோ அதன்மூலம் சொல்லவந்தார்.தமிழ்நாட்டில் உள்ள ஊழல் என்ற கேள்விக்கு அது வேண்டாம் என்று கூறிவிட்டார். கருத்தை வெளிப்படையாக சொல்ல தயக்கம் என்பதை வெளிப்படுத்தினார். விவாசாயிகள் நலனுக்கான அரசு வரவேண்டும் என்றார். அதன்பிறகு அவரது வாக்கு போட்ட படம் ஊடகங்களில் வெளிவந்தது. அதில் இரட்டை இலைக்கு போட்டதுபோல படம் இருந்தது.மதியமே காட்சி ஊடகங்கள் ரஜினியின் நேர்காணலை வெளியிட்டன. அதுவே இரண்டு விழுக்காடு வாக்குகளை திமுகவிற்கு எதிராக திருப்பி விட்டதாக கூறுவோரும் உண்டு.
அதற்கு விளக்கம் சொல்ல நிர்பந்தம் வந்தது. மாலையில் ,கலிஞர் எழுதிய,"பொன்னர் சங்கர்" படம் முன் திரையிடல் நடந்தது. ரஜினி அழைக்கப்பட்டார். முதல்வரின் அழைப்பு என்பது புரிந்த்து. அங்கு சென்ற ரஜினி முதல்வரின் உதவியாளர்களிடம் பேசினார். ஊடகங்கள் திரும்ப திரும்ப வாக்களிப்பதை படம் பிடிக்க வேண்டி கையை மின்னணு இயந்திரத்தில் வைக்க சொன்னார்கள் என்றும், அது தவறாக இரட்டை இலையில் உள்ள வளர்மதி பெயர் முன் சென்ற போது படம் எடுத்து விட்டனர் என்றும் ஊடகங்கள் மீது பழியை போட்டு தப்பித்தார். இந்த அளவு பொய் சொல்லித்தான் தம்ழ்நாட்டு ஆள்வோரிடம் ரஜினியே தப்பிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.?.
கலைஞருக்கு ஏற்பாடு செய்யப்ப்பட்ட ஒரு திரை உலக விழாவில் நடிகர் அஜித் திமுகவின் அடாவடி தனத்தை எதிர்த்து பேசிவிட்டார். கலைஞர் முன்னிலையில் அந்த பேச்சை ரஜினி எழுந்து நின்று கைதட்டி வரவேற்று விட்டார். அதன் பிறகுதான் திரை உலகினர் கலாநிதி-தயாநிதி குடும்பத்திடம் படும் பாடு வெளியே தெரிய தொடங்கியது. பிறகு விஜய் அவர்களிடம் பட்ட பாடு எஸ்.எ.சந்திரசேகர் மூலம் வெளியே வந்தது.இத்தகைய நிலையில் திரை கலைஞர்கள் எல்லோருமே எதிர்ப்பு உணர்வில் இருக்கிறார்கள் என்ற கருத்து மிகை அல்ல. நேரடியாக காங்கிரசை எத்ரிகிறேன் என்று கூறிவிட்டு, திமுகவையும் எத்ரித்து சீமான் ஊர், ஊராக பேச எவண்டி வந்தது. அப்போது நான் மட்டுமல்ல, திரை உக்லகமே இந்த ஆளும் குடும்பத்திற்கு எதிராகத்தான் உள்ளது என்றும், அவர்கள் அனைவரும் பின்னாலிருந்து தன்னை உற்ச்சாகப்படுத்தி வருவதாகவும் அவர் கூறிவிட்டார்.
இப்போது ரஜினி வாகளித்டு விட்டு வெளியே வந்தார். ஊடகத்தாரிடம் பேசினார். விலைவாசி உயர்வு மக்களை வாக்களிக்கவைத்துவிட்டது என்றார். யார்க்கு என்று கூறவில்லை. அது தேவையுமில்லை. ஊழலை எத்ரிக்கும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு என்றார். அதில் பொய் கலந்து கொள்ள விரும்பினேன் என்றார்.உடல் சரியில்லாததால் செல்லவில்லை என்றார். எதையோ அதன்மூலம் சொல்லவந்தார்.தமிழ்நாட்டில் உள்ள ஊழல் என்ற கேள்விக்கு அது வேண்டாம் என்று கூறிவிட்டார். கருத்தை வெளிப்படையாக சொல்ல தயக்கம் என்பதை வெளிப்படுத்தினார். விவாசாயிகள் நலனுக்கான அரசு வரவேண்டும் என்றார். அதன்பிறகு அவரது வாக்கு போட்ட படம் ஊடகங்களில் வெளிவந்தது. அதில் இரட்டை இலைக்கு போட்டதுபோல படம் இருந்தது.மதியமே காட்சி ஊடகங்கள் ரஜினியின் நேர்காணலை வெளியிட்டன. அதுவே இரண்டு விழுக்காடு வாக்குகளை திமுகவிற்கு எதிராக திருப்பி விட்டதாக கூறுவோரும் உண்டு.
அதற்கு விளக்கம் சொல்ல நிர்பந்தம் வந்தது. மாலையில் ,கலிஞர் எழுதிய,"பொன்னர் சங்கர்" படம் முன் திரையிடல் நடந்தது. ரஜினி அழைக்கப்பட்டார். முதல்வரின் அழைப்பு என்பது புரிந்த்து. அங்கு சென்ற ரஜினி முதல்வரின் உதவியாளர்களிடம் பேசினார். ஊடகங்கள் திரும்ப திரும்ப வாக்களிப்பதை படம் பிடிக்க வேண்டி கையை மின்னணு இயந்திரத்தில் வைக்க சொன்னார்கள் என்றும், அது தவறாக இரட்டை இலையில் உள்ள வளர்மதி பெயர் முன் சென்ற போது படம் எடுத்து விட்டனர் என்றும் ஊடகங்கள் மீது பழியை போட்டு தப்பித்தார். இந்த அளவு பொய் சொல்லித்தான் தம்ழ்நாட்டு ஆள்வோரிடம் ரஜினியே தப்பிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.?.
தங்கபாலு முகமா? முகமூடியா?
ஜெயந்தி தங்கபாலு, அதாவது தங்கபாலுவின் மனைவி தன்னிடம் தயாள சீட்டு இருந்தாலும் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி,வாக்கு சாவடி முன்பே ஊடகங்களிடம் கடுமையாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஏன் அவரது பெயர் விடுபட்டது? எப்படி விடுபட்டது? தங்கபாலு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருப்பவர். அவரது மனைவி சாதாரண குடும்ப பெண் என்பதல்ல. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையிலிருந்து முடிவு செய்யப்ப்பட்ட வேட்பாளர் பட்டியலில், சென்னையில் மயிலாப்பூர் என்ற பிரபல தொகுதிக்காக கட்சி மேலிடத்தால் நியமிக்கப்பட்டவர். அந்த தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியில் பலர் வேட்பாளராக முயற்சித்தனர். முன்னாள் சட்ட மன்ற உறப்பினர் எஸ்.வி.சேகர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் வாசன் கோஷ்டியில் சேர்ந்து ம்ய்லாவ்ரே வேட்பாளராக முயற்சித்தார். சிதம்பரம் கோஷ்டியில் சேர்ந்த கராத்தே தியாகராஜன் தனக்கு தான் மயிலாப்பூர் தொகுதி வந்து சேரும் என்று சிதம்பரத்தை நம்பி எதிர்பார்த்திருந்தார். அதற்கான வேலைகளையும் செய்ய தொடங்கிவிட்டார். ஆர்.வெங்கட்ராமன் என்ற முன்னாள் குடியரசு தலைவரின் பேத்தி தங்களது பாரம்பர்ய இடமான மயிலாப்பூர் தொகுதியை ராகுல் மூலம் கேட்டாராம். கொட்டிவாக்கம் ரவி என்பவர் தான் மீனவர் என்பதால் இந்த தொகுதியில் அதிகமாக உள்ள மீனவர்கலஹு பிரதிநிதியாக தனக்கு தொகுதியை ஒதுக்கவேண்டும் என்று ராகுலிடம் கேட்டிருந்தாராம்.
மேற்கண்ட அனைவருக்கும் பட்டை நாமம் போட்டுவிட்டு தனக்கு வேண்டிய குலாம் நபி ஆசாத் மூலம் தனது மனைவிக்கு இந்த தொகுதியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு வாங்கினாராம். அதுவும் கூட தங்கபளுவிற்கு வாங்க முடியாது காங்கிரஸ் கட்சியின் புரிதல்படி மாநில தலைவர் மாநிலம் எங்கும் இறங்கி தேர்தல் பணி செய்யவேண்டும் என்றும் அதனால் தங்கபாலுவின் மனைவிக்கு தொகுதியை ஒதுக்கி கொடுங்கள் என்ற வரத்து வேண்டுகோள் ஆசாத் மூலமாக அகில இந்திய தலைமையிடம் எடுபட்டது என்றும் கூறினார்கள்.
அவ்வாறு ஜெயந்தி தங்கபாலு காங்கிரஸ் வேட்பாளராக ம்ய்லபோருக்கு அறிவிக்கப்பட்டவுடன், அதுவரை தன்னை வேட்பாளராக அர்விப்பார்கள் என்று எதிர்பார்த்த கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களிடம் குமுற, அவர்கள் நான்கு நாட்களுக்கு தங்கபாலுவின் வீடு, காங்கிரஸ் கட்சியின்
தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவன் ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூடி ஆர்ப்பாட்டமும், தங்கபாலு கொடும்பை எரிப்பும் செய்தனர். அத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரான மங்கள்ராஜ் அறிவிக்கப்பட்ட காங்கிரசின் அதிகாரபூர்வமான வேட்பாளர் ஜெயந்தி தங்கபளுவிர்காக பணியாற்ற தொடங்கினார். இவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோஷ்டியை சேர்ந்தவர்.ஆனாலும் தங்கபாலு கோஷ்டியின் வேட்பாளருக்காக இறங்கினார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் வந்தது. ஜெயந்தி தங்கபாலு தனது வேட்புமனுவுடன் வட்டாட்சியர் அலுவலகம் வர, கராத்தே ஆட்கள் வெளியே கலவரம் செய்ய, மங்கள்ராஜ் கட்சி விசுவாசத்துடன் ஜெயந்திக்கான வேட்புமனுவிற்கு, சாட்சி கையெழுத்திட வந்து சேர்ந்தார். அப்போது ஜெயந்தி கொடுத்த வேட்புமனு பிரதிகள் வழமையாக கொடுக்க வேண்டிய நான்கு தாள்களாக இல்லாமல், இரண்டு தாள்கள்தான் இருந்தன என்று இப்போதும் மங்கள்ராஜ் கூறுகிறார்.அப்போது ஜெயந்தி கையெழுத்து போடாத ஒரு தாளில்கூட மங்கள்ராஜ் ஐத்து சொல்லி கையெழுத்து போடவைத்துளார். வழமையாக மாற்று வேட்பாளராக மாவட்ட தலைவர் மனு செய்வார் என்ற பழக்கப்படி மங்கள்ராஜ், தங்கபாளுவிடம் வினவ, அவர் நானே போட்டுவிடுகிரேனே மாற்று வேட்பாளராக என்று கூறியதை பெரிதாக அன்று எண்ணாமல் மங்கள்ராஜ் சரி என்று கூறிவிட்டார்.
ஆனால் பிறகு நடந்த கதை மன்கராஜை சிந்திக்க வைத்து விட்டது.ஜெயந்தி தங்கபாலு முன்வைத்த வேட்புமனு தாள்களில், முன்வைக்க வேண்டிய நான்கு தாள்களில் இரண்டை மட்டுமே முன்வைத்தார். அதனால் மார்ச் இருபத்தேழாம் நாள் இரவில் வட்டாட்சியர் அழைப்பு ஜெயந்தியிடம் ஒரு கைஎழ்குத்துடன் எதையோ அறிவ்த்தது என்கிறார் மங்கள்ராஜ். அதுதான் அடுத்த நாள் ஜெயந்தியின் வேட்புமனு செல்லுபடி ஆகவில்லை என்றும் மாற்று வேட்பாளரான தங்கபாலுவின் வேட்புமனு ஏற்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது. அப்போதே இது ஒரு சதி என்றும் ஒரு குற்றவாளியான தங்கபாலுவிற்கு வேலை செய்ய முடியாது என்றும் மாவட்ட தலிவர் மங்கள்ராஜ் முடிவு செய்துள்ளார். அதை காரணமாக வைத்து இப்போது தேர்தலுக்கு மறுநாள், மாநில தலிவர் தங்கபாலு, சிதம்பரம் கோஷ்டியான கராத்தே தியாகராஜனையும், வாசன் கோஷ்டியான எஸ்.வி.சேகரையும், ஈ.வி.கே.எஸ்.இலன்கோவம் கோஷ்டியான மங்கள்ராஜ் அவர்களையும் கட்சியிலிருந்து மாநில தலிவர் தங்கபாலு விலக்கிவிட்டார்.
இப்போது மங்கள்ராஜ் கூறும்த்கவல்கள் அதிர்ச்சியாக இருகின்றன. 25 ---10 --2010 இல் வெளியிடப்பட்ட கடைசி வாக்காளர் பட்டியலில் தங்கபாலுவின் பெயரும், தங்கபாலு மனைவி ஜெயந்தி பெயரும் இல்லை என்கிறார் மங்கள்ராஜ். அதற்கு பிறகு தங்கபாலு பெயர் எப்படி சேர்க்கப்பட்டது என்று தெரியவில்லை என்கிறார்.இப்போது ஜெயந்தி பெயர் மட்டும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பதும், தங்கபாலு பெயர் ஒருக்கிறது என்பதும் தங்கபாலுவிற்கு தெரியாமல் நடக்காது என்கிறார் அவர். அதன்மூலம் ஜெயந்திக்கு எதிராக, அதாவது தனது மனைவிக்கு எத்ரிராக தங்கபாலு செய்த சதி இதில் தெரிகிறது என்கயார் அவர். அது மட்டுமல்ல. தங்கபாலுவின் மகன், மகள் ஆகிய இருவர் பெயரும் இரண்டு இடங்களில், இரண்டு வேவீறு முகவரிகளில் இருக்கிறது என்றும் அவர் ஆதாரம் தருகிறார்.
தங்கபாலு மகள் இந்திரா பெயர் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியில் இருக்கிறது. ஒன்று பாகம் எண் 107 இல், வரிசை எண் 413 இல் இருக்கிறது. அதே முகவரியான 32 /12 கஸ்தூரிபாய் நகரில்,இரண்டாவது முக்கிய சாலையில், அந்த எண்ணையே 32 / A -12 என்ற முகவரியில் தங்கபாலுவின் மகனான கார்த்திக் பெயர் வரிசை எண் 447 இல் இருக்கிறது. அதேபோல இந்திரா பெயர் இன்னொரு முகவரியான கஸ்தூரிபாய் நகர் ஆறாவது முக்கிய சாலையில் 108 வது பாகத்தில், வரிசை எண் 604 இல் 12 / 16 என்ற வீட்டு என்னில் இருக்கிறது. அதே எண்ணில் 24 /120 என்ற முகவரியில் வரிசை எண் 644 இல் தங்கபாலுவின் மகன் கார்த்திக் பெயர் இருக்கிறது. அதாவது தங்கபாலுவின் மகனும், மகளும் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இறக்கிறார்கள். இதுவே பெரிய குற்றம். ஆனால் அவரது மனைவி பெயரை மட்டும் வாக்காளர் பாட்டிலில் இருந்து தங்கபாலு நீக்க வைத்துள்ளார். ஒருபுறம் அன்னை சோனியாவிற்கும் துரோகம், இன்னொரு புறம் தேர்தல் ஆணையத்திற்கும் துரோகம், அனைத்தியு விட தனது மனைவிக்கே துரோகம் செய்ஹ்டுள்ளார் எங்கள் மாநில தலைவர் என்று மங்கள்ராஜ் கொந்தளிக்கிறார்.
மேற்கண்ட அனைவருக்கும் பட்டை நாமம் போட்டுவிட்டு தனக்கு வேண்டிய குலாம் நபி ஆசாத் மூலம் தனது மனைவிக்கு இந்த தொகுதியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு வாங்கினாராம். அதுவும் கூட தங்கபளுவிற்கு வாங்க முடியாது காங்கிரஸ் கட்சியின் புரிதல்படி மாநில தலைவர் மாநிலம் எங்கும் இறங்கி தேர்தல் பணி செய்யவேண்டும் என்றும் அதனால் தங்கபாலுவின் மனைவிக்கு தொகுதியை ஒதுக்கி கொடுங்கள் என்ற வரத்து வேண்டுகோள் ஆசாத் மூலமாக அகில இந்திய தலைமையிடம் எடுபட்டது என்றும் கூறினார்கள்.
அவ்வாறு ஜெயந்தி தங்கபாலு காங்கிரஸ் வேட்பாளராக ம்ய்லபோருக்கு அறிவிக்கப்பட்டவுடன், அதுவரை தன்னை வேட்பாளராக அர்விப்பார்கள் என்று எதிர்பார்த்த கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களிடம் குமுற, அவர்கள் நான்கு நாட்களுக்கு தங்கபாலுவின் வீடு, காங்கிரஸ் கட்சியின்
தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவன் ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூடி ஆர்ப்பாட்டமும், தங்கபாலு கொடும்பை எரிப்பும் செய்தனர். அத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரான மங்கள்ராஜ் அறிவிக்கப்பட்ட காங்கிரசின் அதிகாரபூர்வமான வேட்பாளர் ஜெயந்தி தங்கபளுவிர்காக பணியாற்ற தொடங்கினார். இவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோஷ்டியை சேர்ந்தவர்.ஆனாலும் தங்கபாலு கோஷ்டியின் வேட்பாளருக்காக இறங்கினார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் வந்தது. ஜெயந்தி தங்கபாலு தனது வேட்புமனுவுடன் வட்டாட்சியர் அலுவலகம் வர, கராத்தே ஆட்கள் வெளியே கலவரம் செய்ய, மங்கள்ராஜ் கட்சி விசுவாசத்துடன் ஜெயந்திக்கான வேட்புமனுவிற்கு, சாட்சி கையெழுத்திட வந்து சேர்ந்தார். அப்போது ஜெயந்தி கொடுத்த வேட்புமனு பிரதிகள் வழமையாக கொடுக்க வேண்டிய நான்கு தாள்களாக இல்லாமல், இரண்டு தாள்கள்தான் இருந்தன என்று இப்போதும் மங்கள்ராஜ் கூறுகிறார்.அப்போது ஜெயந்தி கையெழுத்து போடாத ஒரு தாளில்கூட மங்கள்ராஜ் ஐத்து சொல்லி கையெழுத்து போடவைத்துளார். வழமையாக மாற்று வேட்பாளராக மாவட்ட தலைவர் மனு செய்வார் என்ற பழக்கப்படி மங்கள்ராஜ், தங்கபாளுவிடம் வினவ, அவர் நானே போட்டுவிடுகிரேனே மாற்று வேட்பாளராக என்று கூறியதை பெரிதாக அன்று எண்ணாமல் மங்கள்ராஜ் சரி என்று கூறிவிட்டார்.
ஆனால் பிறகு நடந்த கதை மன்கராஜை சிந்திக்க வைத்து விட்டது.ஜெயந்தி தங்கபாலு முன்வைத்த வேட்புமனு தாள்களில், முன்வைக்க வேண்டிய நான்கு தாள்களில் இரண்டை மட்டுமே முன்வைத்தார். அதனால் மார்ச் இருபத்தேழாம் நாள் இரவில் வட்டாட்சியர் அழைப்பு ஜெயந்தியிடம் ஒரு கைஎழ்குத்துடன் எதையோ அறிவ்த்தது என்கிறார் மங்கள்ராஜ். அதுதான் அடுத்த நாள் ஜெயந்தியின் வேட்புமனு செல்லுபடி ஆகவில்லை என்றும் மாற்று வேட்பாளரான தங்கபாலுவின் வேட்புமனு ஏற்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது. அப்போதே இது ஒரு சதி என்றும் ஒரு குற்றவாளியான தங்கபாலுவிற்கு வேலை செய்ய முடியாது என்றும் மாவட்ட தலிவர் மங்கள்ராஜ் முடிவு செய்துள்ளார். அதை காரணமாக வைத்து இப்போது தேர்தலுக்கு மறுநாள், மாநில தலிவர் தங்கபாலு, சிதம்பரம் கோஷ்டியான கராத்தே தியாகராஜனையும், வாசன் கோஷ்டியான எஸ்.வி.சேகரையும், ஈ.வி.கே.எஸ்.இலன்கோவம் கோஷ்டியான மங்கள்ராஜ் அவர்களையும் கட்சியிலிருந்து மாநில தலிவர் தங்கபாலு விலக்கிவிட்டார்.
இப்போது மங்கள்ராஜ் கூறும்த்கவல்கள் அதிர்ச்சியாக இருகின்றன. 25 ---10 --2010 இல் வெளியிடப்பட்ட கடைசி வாக்காளர் பட்டியலில் தங்கபாலுவின் பெயரும், தங்கபாலு மனைவி ஜெயந்தி பெயரும் இல்லை என்கிறார் மங்கள்ராஜ். அதற்கு பிறகு தங்கபாலு பெயர் எப்படி சேர்க்கப்பட்டது என்று தெரியவில்லை என்கிறார்.இப்போது ஜெயந்தி பெயர் மட்டும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பதும், தங்கபாலு பெயர் ஒருக்கிறது என்பதும் தங்கபாலுவிற்கு தெரியாமல் நடக்காது என்கிறார் அவர். அதன்மூலம் ஜெயந்திக்கு எதிராக, அதாவது தனது மனைவிக்கு எத்ரிராக தங்கபாலு செய்த சதி இதில் தெரிகிறது என்கயார் அவர். அது மட்டுமல்ல. தங்கபாலுவின் மகன், மகள் ஆகிய இருவர் பெயரும் இரண்டு இடங்களில், இரண்டு வேவீறு முகவரிகளில் இருக்கிறது என்றும் அவர் ஆதாரம் தருகிறார்.
தங்கபாலு மகள் இந்திரா பெயர் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியில் இருக்கிறது. ஒன்று பாகம் எண் 107 இல், வரிசை எண் 413 இல் இருக்கிறது. அதே முகவரியான 32 /12 கஸ்தூரிபாய் நகரில்,இரண்டாவது முக்கிய சாலையில், அந்த எண்ணையே 32 / A -12 என்ற முகவரியில் தங்கபாலுவின் மகனான கார்த்திக் பெயர் வரிசை எண் 447 இல் இருக்கிறது. அதேபோல இந்திரா பெயர் இன்னொரு முகவரியான கஸ்தூரிபாய் நகர் ஆறாவது முக்கிய சாலையில் 108 வது பாகத்தில், வரிசை எண் 604 இல் 12 / 16 என்ற வீட்டு என்னில் இருக்கிறது. அதே எண்ணில் 24 /120 என்ற முகவரியில் வரிசை எண் 644 இல் தங்கபாலுவின் மகன் கார்த்திக் பெயர் இருக்கிறது. அதாவது தங்கபாலுவின் மகனும், மகளும் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இறக்கிறார்கள். இதுவே பெரிய குற்றம். ஆனால் அவரது மனைவி பெயரை மட்டும் வாக்காளர் பாட்டிலில் இருந்து தங்கபாலு நீக்க வைத்துள்ளார். ஒருபுறம் அன்னை சோனியாவிற்கும் துரோகம், இன்னொரு புறம் தேர்தல் ஆணையத்திற்கும் துரோகம், அனைத்தியு விட தனது மனைவிக்கே துரோகம் செய்ஹ்டுள்ளார் எங்கள் மாநில தலைவர் என்று மங்கள்ராஜ் கொந்தளிக்கிறார்.
Subscribe to:
Posts (Atom)
